Saturday, June 30, 2007

ஞாயிறு நற்செய்தி july 1 லூக்கா நற்செய்தி

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 9

51 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, 52 தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். 53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. 54 அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள். 55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். 56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள். 57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ' நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ' என்றார். 58 இயேசு அவரிடம், ' நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ' என்றார். 59 இயேசு மற்றொருவரை நோக்கி, ' என்னைப் பின்பற்றிவாரும் ' என்றார். அவர், ' முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் ' என்றார். 60 இயேசு அவரைப் பார்த்து, ' இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் ' என்றார். 61 வேறொருவரும், ' ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் ' என்றார். 62 இயேசு அவரை நோக்கி, ' கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல ' என்றார்.

(http://www.arulvakku.com)
மறையுரை:

இன்றைய ஞாயிறு நற்செய்தி, ஊர் மக்களால், நிராகரிக்கபட்டவுடன், எவ்வாறு, சீடர்கள் செயற்பட்டார்கள் என்பதை காட்டுகிறது. யேசு அவர்களை முன்னே சென்று அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய சொன்னார். சீடர்கள், சமாரியர்களின் கிராமத்திற்கு சென்ற போது, அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. சமாரியர்களுக்கோ, யூதர்களுடனான எதிர்ப்புணர்வில், அவர்களை ஏற்றுகொள்ளவில்லை. உலகின் மீட்பரோடூ சேர்ந்து இருக்கும் ஒரு வாய்ப்பை இழந்து விட்டனர்.

உனக்கு மிகவும் நெருங்கியவர்களிடம் யேசுவை கொண்டு செல்லும்போது, அவர்கள் நிராகரித்தால், நீ எப்படி நிணைப்பாய்? திருச்சபையின் போதனையை யாராவது ஒருவர் ஏற்றுகொள்ள மறுத்தால் நீ என்ன நிணைக்கிறாய்?.

யாரும் உங்களை ஏற்றுகொள்ளவில்லை என்றால், உங்கள் செருப்பில் உள்ள தூசியை தட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு விலகி செல்லுங்கள் என்று யேசு சீடர்களிடம் முன்னமே கூறியிருந்தார். அவர்களிடம் உண்மையை எவ்விதத்திலும் மறைக்ககூடாது என எச்சரிக்கை செய்து இருந்தார். இப்போது என்ன போதனை செய்தாரோ, அதனையே வழி நடந்து காட்டினார். அவர் அந்த கிராமத்தினரை எதுவும் நிர்ப்பந்திக்க வில்லை. அவர்களுக்கு உண்மையை உரக்க சொல்லியிருக்கலாம், ஆனால் எதுவும் சொல்லாமல் அவர்களிடமிருந்து விலகி சென்றார்.
நாம் யேசுவை பின் பற்ற வேண்டும் என்றால், நிறைய விசயங்களை விட்டு கொடுக்கவேண்டும். மேலும், பலர் நிராகரிப்பையும் ஏற்றுகொண்டு, அதனை எதிர்த்து எதையும் செய்யாமல் யேசுவை பின் செல்ல வேண்டும். நற்செய்தியின் கடைசியில், அவரை பின் செல்ல வேண்டும் என்றால், முன்னோக்கியே செல்ல வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், நாம் எப்போதுமே, பல விசயங்களில் அதை விட்டு விலகியே செல்கிறோம், நிராகரிப்பிலிருந்து, அன்பிற்கு எதிரான செயல்களில், மனகசப்பில் இருந்து, மூடிய இதயத்தை உடையவர்களிடமிருந்து, நாம் விலகியே செல்கிறோம். யேசுவோடு நாம் முன்னே செல்ல, பரிசுத்த ஆவிதான், நாம் இதயத்தில் யேசுவை வாங்க, நம்மை தயார்படுத்துகிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். நாம் ஒருவரை யேசுவோடு சேர்க்க முயற்செ செய்து, அது தோல்வியானால், நாம் உண்மையிலே தோல்வியடையவில்லை. நாம் விதையை விதைத்து வைத்திருக்கிறோம். யேசு மற்றவர்களை வைத்து அறுவடைசெய்கிறார். பரிசுத்த ஆவி விடுபட்ட வேலைகளை செய்யட்டும். அப்போது நீங்கள் அடுத்த வயல்களுக்கு செல்லலாம்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
யார் உங்களை மனமாறமாட்டேன் என்று கூறி உங்களை பயமுறுத்துகிரார்கள். அன்புடன் அவர்களிடமிருந்து விலகி ஓர் இடைவேளை எடுத்துக்கொள்ள, நீ என்ன செய்ய வேண்டும். (இது உண்மையான் அ விலகல் கிடையாது.
http://www.gnm.org

Friday, June 22, 2007

June 24th 2007 மறையுரை

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 1

57 எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். 58 ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். 59 எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். 60 ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, ' வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும் ' என்றார். 61 அவர்கள் அவரிடம், ' உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே ' என்று சொல்லி, 62 ' குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன? ' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். 63 அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ' இக்குழந்தையின் பெயர் யோவான் ' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். 64 அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். 65 சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. 66 கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, ' இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ? ' என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.



லூக்கா 1:57௬6, 80

மறையுரை: ஜூன் 24

உங்களுக்கு தெரியுமா? ஸ்நாபக அருளப்பரை போல தான் நீங்களும் இருக்கிறீர்கள். இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் ஸ்நாபக அருளப்பருக்கு என, அவர் பிறப்பதற்கு முன்பே, தனிபட்ட சிறப்பான திட்டம் வைத்திருந்தார். கடவுள் அதேபோல் உனக்கும் தனிப்பட்ட சிறப்பான திட்டத்தை, நீ கருவில் உருவானபோதே, உன் பிறப்பின் நோக்கத்தை கொடுத்துள்ளார். நீ மனித உரு ஆவதற்கு முன்பே, உனக்கு ஒரு திட்டம் , பிறப்பின் நோக்கம் கொடுத்துள்ளார்.

கடவுள் உனக்கு, கூர்மையான வாளை கொடுத்துள்ளார். அது என்னவென்றால், உண்மையை எடுத்துரைக்கும் ஆற்றல், சக்தியுமாகும். உனது ஞானஸ்நானத்தில், கடவுள் உனக்கு இந்த அன்பளிப்பை பரிசுத்த ஆவியின் மூலம் கொடுக்கிறார்.

கடவுள், உன்னை அவரது கரங்களில் அனைத்து உன்னை மூடி காக்கிறார். உனது வாழ்வு எவ்வளவு கடினமானது என்றாலும், நீ கடவுளிடமிருந்து எத்தனை முறை பிரிந்து சென்று இருந்தாலும், நீ அவருடைய சொத்து. சாத்தானின் பிடியிலிருந்து, அதன் கொடுங்கைகளிலிருந்து உன்னை மீட்கிறார்.

கடவுளுக்காக சேவை செய்யும்போது, உங்கள் முயற்சியில் தோல்வியுற்று, களைப்படைந்திருந்தாலும், கடவுளின் சேவையில், உங்கள் முயற்சி உபயோகமில்லாமல் ஆனது என்று நீங்கள் சோர்வுற்றாலும், அதற்குண்டான பரிசு கடவுளிடமிருக்கிறது. அவர் உனக்கு அந்த பரிசை தருவார்.

நீ எவ்வளவு அசிங்கமாக இருக்கிறாய் என்று நினைத்தாலும், நீ எவ்வளவு குள்ளமாக இருந்தாலும், அல்லது மிக உயரமாக இருந்தாலும், அல்லது நோய்வாய் பட்டிருந்தாலும், அல்லது உங்கள் பிறப்பில் குறையிருந்தாலும், நீ கடவுளின் பார்வையில் வளம் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். இன்றைய வாசக பதிலுரையில், இது கொடுக்கபட்டுள்ளது."நீ மிகவும் அழகாக படைக்கப்பட்டிருக்கிறாய். நீ கருவுருவானபோது, உனது வாழ்வு, பெருமதிப்புள்ளது மற்றும் முக்கியமானது."

நீங்கள் எப்படியெல்லாம் கடவுளுக்கு சேவை செய்யலாம் என்று நீங்கள் செய்யும் கற்பனை மிகவும் சிறியது. கடவுள் உங்களுக்காக மிக பெரிய திட்டம் வைத்திருக்கிறார். மிகவும் முக்கியமான, உங்களுக்கு உள்ள அன்பளிப்பை எப்படியெல்லாம் உபயோகபடுத்தலாம், மேலும் உங்கள் திறமைகளை, அனுபவங்ளை, பயிற்சிகள் எவ்வளவு பெற்றிருந்தாலும், கடவுள், அந்த திறமைகளை, உன் மூலம் இன்னும் மேலும் மெருகூட்டுவார்.

நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, நீங்களும், கடவுளின் குழந்தைதான்.பரிசுத்த ஆவியில் மேலும் வலிமையோடும், உறுதியோடும் வளர்வீர்கள். நீங்கள் இறைவனின் சேவையில், கஷ்டபட்டிருக்கலாம், நிறைய பயிற்சி செய்திருக்கலாம். வேதனைபட்டிருக்கலாம், தாகத்துடன் இருந்திருக்கலாம், பசித்து இருந்திருக்கலாம். இவையெல்லம், மிகவும் மதிப்பு உள்ளவை, மேலும் உபயோகமானது, நீ யேசுவுக்கும், கடவுளரசிற்கும் சேவை செய்யும்போது உனக்கு உதவியாக இருக்கும்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
இசையாஸ் 49:1- 6 வாசகத்தை உங்கள் மனசுக்குள்ளே வாசியுங்கள். ஒவ்வொரு வரியாக வாசித்து, உங்கள் வாழ்க்கையில், அதனுடைய பிரதிபலிப்பை தியானியுங்கள். எது உங்களை ஆச்சரியப்படுத்துகிறது. ஏனெனில், நீங்களே உங்களை குறைத்து மதிப்பிட்டு, கடவுளரசிற்கு உபயோகமில்லாதவர் என்று நினைத்து கொள்கீறீர்களா? இன்று என்ன செய்ய போகிறீர்கள்.

Friday, June 15, 2007

June 17th

June 17th (www.arulvaakku.com)
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 7

36 பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். 37 அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். 38 இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். 39 அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ' இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். 40 இயேசு அவரைப் பார்த்து, ' சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும் ' என்றார். அதற்கு அவர், ' போதகரே, சொல்லும் ' என்றார். 41 அப்பொழுது அவர், ' கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். 42 கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்? ' என்று கேட்டார். 43 சீமோன் மறுமொழியாக, ' அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன் ' என்றார். இயேசு அவரிடம், ' நீர் சொன்னது சரியே ' என்றார். 44 பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், ' இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். 45 நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். 46 நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். 47 ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர் ' என்றார். 48 பின்பு அப்பெண்ணைப் பார்த்து, ' உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார். 49 ' பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்? ' என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். 50 இயேசு அப்பெண்ணை நோக்கி, ' உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க ' என்றார்.


அதிகாரம் 8
அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். 2 பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் 3 ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்

மறையுரை:

பாவங்கள் எப்படி மன்னிக்கபடுகிறது என்று நீ யோசுத்ததுண்டா? யேசு நம் பாவங்களை சிலுவைக்கு எடுத்து சென்றார். அந்த பாவங்கள் அவரோடு சேர்ந்து இறந்து விட்டது. இன்றைய இரண்டாவது வாசகத்தில் குறிப்பிடபடுவது போல, சட்டங்கள் பாவங்களை மன்னிப்பது இல்லை. நாம் அதனால் தீர்ப்பிடபடுவது இல்லை. ஆனால் நாம் ஏசுவின் மீது வைக்கும் விசுவாசத்தினால், நமது பாவங்கள் மன்னிக்கப்டுகிறது.

யேசு இதனை இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார். பாவியான பெண், அவருடைய காலை தனது கண்ணீரால் துடைத்தாள். அவளுடைய மிகுதியான அன்பினால், அவளுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. பாவங்களின் வலிமையிலிருந்து அன்பு தான் நம்மை பிரித்து செல்கிறது. நம்மில் யாராவது, அவர்கள் அன்பு செய்யப்பட வேண்டும் என்று நிணைக்கலாம், அவர்களுக்கு தெரியாமல் பாவம் செய்யலாம், ஆனால் அது மாதிரி நேரங்களில், நம் நடைமுறை அவர்களை வேதனைபடுத்துவது மாதிரி நடந்து கொள்ளலாம். ஆனால் நன்கு சிந்தித்து அவர்களுக்கு வேதனை தர வேண்டும் என்று செய்த பாவமல்ல.

நாம் நமது கண்களை யேசுவின் மீது இல்லாமல், வேறு பக்கம் பார்ப்பதால் தான், நாம் பாவம் செய்கிறோம். நாம் நம்முடைய முற்காலத்திலும், இக்காலத்திலும் நமக்கு ஏற்பட்ட, நம்மில் உள்ள தூண்டுதலால் தான், நாம் பாவம் செய்கிறோம். அன்பில்லாமல் நடந்து கொள்கிறோம். ஆனால், அதனை கொஞ்சம் நிறுத்தி, இறைவனிடம் வேண்டி, யேசுவோடு மீண்டும் சேர்ந்து, நாம் சுய கட்டுபாடுடன் இருந்தால், அன்பினால் ஆட்பட்டு நாம் வாழலாம். நாம் அன்புதான் நமக்கு முதல் சாய்ஸ் என்று உறுதியோடு வாழ்ந்தால், அதன் மேலும் தொடர்ந்து இறைவனிடம் வேண்டிகொண்டிருந்தால், நமக்கு உள்ள சோதனைகள், நம்மை விட்டு அகலும். மற்றவர்களுக்கு நாம் அக்கறை செலுத்தினால், நமக்கு உள்ள சோதனைகள், பாவம் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் நம்மை விட்டு செல்லும்.

நாம் உண்மையாக அன்பு செய்தால், உண்மையான அக்கறை செலுத்தினால், அதன் பிறகு நம் பாவங்களால் மற்றவர்களை வேதனைபடுத்திவிட்டொம் என்று நாமே புரிந்து கொள்வோம்.
அன்பினால், நாம் பாவங்களால் செய்த சேதங்களை நிவர்த்தி செய்கிறோம். மேலும் மற்றவர்களின் மேல் உள்ள அன்பினால், நமது பாவங்களுக்காக நாம் வருத்தபடுகிறோம். அதன் மூலம், நாம் குணப்படுத்தபடுகிறோம். நமது பாவங்கள் மன்னிக்கபடுகின்றன. மற்றும், வரும் காலத்தில், தவறான பாதையில் செல்லமாட்டோம். யேசு அன்பு செய்வது போல, நாமும் மற்றவர்களை அன்பு செய்தால், நமது விசுவாசம், நம்மை மீட்கும். இன்றைய நற்செய்தியில் யேசு சொல்வது போல் "இப்போது நீ அமைதியாக செல்"

சுய பரிசோதனைக்கான் கேள்வி:

மிக சமீபத்தில், தவறான நோக்கத்தில் அல்லது அன்பு மறுத்து உனக்கு நடந்த விசயங்களை நினைத்து பார். நீ எப்படி நடந்து கொண்டாய். மிகவும் மோசமாய்? அதனுடைய உள் காரணம் என்ன? எடுத்துகாட்டாக: யாராவது உன்னை வேதனைபடுத்தினால், அவர்கள மன்னித்துவிடு. பயப்படுகிறாயா? கடவுளை நம்பு, தேவையானால், குருவானவரிடம் பேசி உனது பாவங்களூக்காக அதன் மூலத்தை கண்டுபிடியுங்கல். அதிலிருந்து கிடைக்கும் உண்மை உங்கள் அன்பை யேசுவின் அன்பு போல் ஆக்கும்.

(http://www.gnm.org)

Saturday, June 9, 2007

மறையுரை: ஜூன் 10

June 10, 2007
Solemnity of the Most Holy Body and Blood of Christ

Sunday's Readings:
Gen 14:18-20
Ps 110:1-4
1 Cor 11:23-26
Luke 9:11b-17


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 9

11 அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். 12 பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர். 13 இயேசு அவர்களிடம், ' நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். அவர்கள், ' எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும் ' என்றார்கள். 14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, ' இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள் ' என்றார். 15 அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள். 16 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். 17 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

(http://www.arulvaakku.com)

மறையுரை: ஜூன் 10

அன்பு என்பது ஐந்து அப்பங்களும், இரண்டு மீண்களை போன்றது, ஏனெனில் அதனை கொடுக்கும்போதுதான், பல மடங்காக பெருகும். இந்த செய்தியை தான், கலிலேய கடற்கரையின் வட மூலையில் உள்ள புனித கோவிலில் எழுதி வைத்துள்ளனர். அந்த இடத்தில் தான் யேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பல மடங்காக்கி, அங்கு வந்த கூட்டத்திற்கு எல்லாம் உணவளித்தார். இந்த புனித கோவிலில் கி.மு. 480 ஆம் ஆண்டிலிருந்து, பீடத்தில் மொசைக் கல்லால் ஆன அப்பதுண்டுகளும், மீன்களும் வைக்கப்பட்டுள்ளது. இது எங்கே யேசு அந்த அப்பங்களை ஆசிர்வத்த்து பல மடங்காக பெருகச் செய்தாரோ அந்த இடத்திற்கு அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மொசைக்கில் ஐந்திற்கு பதிலாக, 4 அப்பத்துண்டுகள் மட்டும் தான் பொறிக்கப்பட்டுள்ளது. ஏன்?

அந்த ஐந்தாவது அப்பம்தான் புனித நற்கருனை, அதிலிருந்து தான் யேசு ஒவ்வொரு திருப்பலியிலும் நம்மிடத்தில் வருகிறார்.

புனித நற்கருணை யேசுவின் உண்மையான ப்ரசன்னத்தைவிட பெரிதானதாகும். இது கிறிஸ்துவின் உடலாகும். இது அனைத்து திருச்சபையின் சமூகமாகும். நற்கருணை, பல மடங்காக பெருகிகாட்டும் அற்புதமாகும். கடவுளிடமிருந்து, நமக்கு இல்லாதவற்றை , யேசுவின் உடலாக பரிசுத்த ஆவியின் மூலமாக நமக்கு வருகிறது. நாம் திருப்பலியில் பங்கு கொள்ளும்போது, நாம் யேசுவிடம் நம்மிடம் பற்றாகுறையாக உள்ளவற்றை கேட்டு அதனை பல மடங்காக பெருக்கி நம்மிடம் நிரப்பவேண்டும் என்று வேண்டிகொள்ளுங்கள். யேசு, நமக்கு தேவையானதை அதற்குண்டான நேரத்தில் நமக்கு தருவார் என்று நம்பவேண்டும். அது சிறிது சிறிதாக கொடுத்தாலும் அதனை கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்று விசுவாசம் கொள்வோமாக.

உங்களுடைய வாழ்வில் திருப்தியான் அன்பை பெற்று இருக்கிறீர்களா? என்றால், இல்லையென்று தான் பதில் வரும். கடவுளை தவிர வேறு ஒருவரால் உங்களுக்கு தேவையான் அன்பை கொடுக்கமுடியாது. நம் உறவினர், நண்பர்கள் நம்மிடம் எவ்வளவு நெருங்கி வாழ்ந்தாலும், நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும், அவர்களால், கடவுள் நமக்கு தரும் அன்பை கொடுக்க முடியாது. நற்கருணைதான், நமக்கு இந்த பூமியில் கடவுளின் முழு அன்போடு நேரடியாக இனைப்பது. அந்த முழுமையான அன்பை நாம் உணராததற்கு , நாம் அந்த நற்கருணையின் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ளவில்லை. நற்கருணை என்பது மற்றவர்களுக்காக செய்த தியாகத்தின் அன்பு ஆகும். நீ தேவையான அன்பை பெறவில்லையெனில், அதனை கொடு, அது பல மடங்காக பெருகி மற்றவர்களுக்கு நற்கருணையாக இருங்கள்.


சுய பரிசோதனைக்கான கேள்வி:

கடவுளின் அன்பு உங்களுடைய வெற்றிடத்தில் உள்ள இடைவெளியில் நிரப்புகிறதா? உன்னுடைய தேவைகளை நற்கருணையிடம் எடுத்து செல். நமக்கு தேவையானதை விட, அடுத்தவர்களுக்கு கொடுக்க உதவிட பரிசுத்த ஆவியிடம் கேளுங்கள். கிறிஸ்துவிடம் அதனை பல மடங்காக பெருக்க செய்ய வேண்டுங்கள். அதன் மூலம் உங்களுக்கு தேவையானதை பெறுவீர்கள்.

(http://www.gnm.org)

Saturday, June 2, 2007

மறையுரை: ஞாயிறு ஜுன் 3

மறையுரை:
ஞாயிறு ஜுன் 3

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 16

12 ' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. 13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். 14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். 15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.

http://www.arulvakku.com/

உங்களுக்கு என்ன தெரியவில்லை? யேசுவிடம் நீங்கள் என்ன கேட்டு இன்னும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. திருச்சபையின் பரிந்துரைகளிலிருந்து உங்களால் ஏற்றுகொள்ள முடியாத விசயம் அல்லது புரியாத விசயம் என்ன? இன்றைய நற்செய்தியில் "நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது" என்று கூறுகிறார்.

ஏன் நாம் இன்னும் அதற்கு தயாராகவில்லை? ஏனெனில், பரிசுத்த ஆவியிடம் நம்மை தயார்படுத்த அனுமதிக்க வேண்டும். கடவுள் நம்மில் மாற்றம் ஏற்படுத்த அனுமதிக்கவேண்டும். அந்த மாறுதல் முயற்சிக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.உண்மை என்றும் சுமை தருவது, கடினமானது, அதனால் நாம் ஒதுக்கிவிடுகிறோம்.

யேசு சொன்னது எல்லாமே பரிசுத்த ஆவியின் மூலமாக கடவுளிடம் இருந்து வந்தது. கடவுள் அதே ஆவியை நமக்கும் தருகிறார். அதே ஞானம், அதே உண்மை தருகிறார். ஆனால் பரிசுத்த ஆவியிடம் நம்மை ஒப்படைத்து நம்மை புனிதப்படுத்தாவிட்டால் அந்த அன்பளிப்பு உபயோகமில்லை.

இந்த திரித்துவ கடவுள் மூவருள், கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம் ஆன்ம பாவங்களை கழுவுகிறார். பாவசங்கீர்த்தனத்தில் யேசு கிறிஸ்து குருவானவரின் பிரசன்னத்தில் இருந்து கொண்டு, திருச்சபையின் உடலாக இருக்கிறார். மன்னிப்பு என்பது பரிசுத்த ஆவியின் செயல் ஆகும். இது குற்ற உணர்வை நீக்குவது மேலான ஓர் செயலாகும். இது பாவப்பட்ட வாழ்க்கையை மாற்றி அதே பாவங்களை மீண்டும் செய்யாமல் இருக்க செய்கிறது. பாவசங்கீர்த்தனத்தில் நாம் செய்யும், பரிகார ஜெபமானது நம்மை நேராக திரித்துவ கடவுளிடம் சேர்ந்து நம் மாற்றத்திற்கு வித்திடுகிறது.

இந்த மாற்றத்திற்கும், போதனைகளை ஏற்று கொள்வதற்கும் நமக்கு தாழ்மை வேண்டும். நம்முடைய வாழ்கையில் பதில் கிடைக்காத கேள்விகளுக்கெல்லாம், நாம் கடவுளின் திருவுளத்தை தெரிந்து அதனை யேசுவோடு இணைந்து, பரிசுத்த ஆவியின் ப்ரசன்னத்தில் நாம் அதனை செய்தோமானால், நமக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் நம்முள்ளே கிடைக்கும்.

சுய பரிசோதனைக்கான கேள்வி

யேசுவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எழுதுங்கள். இதனை புரிந்து கொள்வதற்கு எது ப்ரச்னையாக இருக்கிறது. இந்த கேள்வி பட்டியலை வைத்துகொண்டு பரிசுத்த ஆவியிடம் கேளுங்கள். யேசுவிடம் அதனை போதிக்கும்படி வேண்டுங்கள்.


--------------------------------------------------------------------------------

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm