Saturday, December 29, 2007

30 ஜனவரி 2007 நற்செய்தி - மறையுரை:

30 ஜனவரி 2007 நற்செய்தி - மறையுரை:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 2

13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் ' என்றார். 14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். 15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ' எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 20 ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் ' என்றார். 21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். 22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். 23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ' ″ நசரேயன் ″ என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.

thanks www.aruvakku.com



இன்றைய ஞாயிறு திருக்குடும்ப ஞாயிறு. அதோடு சேர்ந்து நாமும் நம் குடும்ப விழாவாகவும் கொண்டாடுகிறோம். இன்றைய வாசகங்களும், நற்செய்தியும், நாம் எப்படி திருக்குடும்பமாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனை கொடுக்கிறது.

முதல் வாசகம் பெற்றோர்களை மரியாதையுடனும், போற்றுதலுடனும் பார்த்துகொள்ள வேண்டும் என்று சிறுவர்களுக்கு (குழந்தைகளுக்கும் மற்றும் பெரியவர்களூக்கும்) சொல்கிறது. . பெரியவர்களிடமும், பெற்றோர்களிடமும் அனுசரனையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அவர்கள் பெரிய்வர்களானது, தெளிவில்லாமலும், பலவீனமாயும் இருக்கும்போது அவர்களிடம் கரிசனையோடு இருக்கவேண்டும், அவர்கள் உங்களை அன்பு செய்யாமல் இருந்தால் கூட அவர்களிடம் கோபிக்காமல், அனுசரனையுடன் நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு எல்ல நேரங்களிலும் கீழ் படிய வேண்டும் என்று சொல்லவில்லை. இந்த வாசங்களில் என்கும் "கீழ்படி" என்று கூறவில்லை.

நாம் கடவுள் ஒருவருக்கு மட்டும் தான் கீழ்படிய வேண்டும். நமது பெற்றோர்கள் கடவுள் என்ன செய்ய சொல்கிறாரோ அதைதான் நமக்கு கட்டளை இடுகின்றனர். மேலும் கடவுள் நம் பெற்றோருக்கு கீழ்படிய சொல்கின்றார். ஆனால், பெற்றோர்கள் கடவுளுக்கு கீழ்படியவில்லை என்றால், அவர்களை நாம் பின் சென்று, பாவத்தில் விழ வேண்டியதில்லை. அவர்கள் கடவுள் படைத்த மனிதனாய், நாம் மரியாதையும் போற்றுதலும் செய்யவேண்டும், ஆனால் அவர்கள் பாவங்களை நாம் மதிப்பதோ, அல்லது பின் செல்வதோ வேண்டியதில்லை.

இரண்டாவது வாசகம்: "உண்மையான அன்புடனும், சரியான பந்தத்துடனும்" கட்டுண்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும், கிறிஸ்துவின் அமைதியின் கட்டுக்குள் இருக்கவேண்டும் என்று சொல்கிறது. எப்படி இருப்பது? , புனித ப்ரான்சிஸ் இவ்வாறு கூறுகிறார். "அவசரபடாதீர்கள்; ஒவ்வொரு விசயங்களையும் அமைதியாக செய்யுங்கள். உங்களது உள் அமைதியை எதற்காகவும் விட்டு விட வேண்டாம். உங்கள் முழு உலகமே ப்ரசனை கொடுத்தாலும் உள் அமைதியோடு இருங்கள்"

வசனம் 18, மனைவிகளும், கணவர்களூக்கு கீழ்படிய வேண்டும் என்று கூறவில்லை. "கீழ்படிதல்" என்ற வார்த்தையை எடுத்து விட்டு, "மரியாதை" என்ற வார்த்தையை போட்டுகொள்ளுங்கள். கடவுள் கனவரை குடும்பத்தின் காவலனாக நியமித்துள்ளார். (அதனால் தான் மேரிக்கு பதிலாக சூசையப்பருக்கு கனவில் கட்டளை வந்தது என்று நற்செய்தி கூறுகிறது). தெய்வீக காவலாகவும் கனவன் இருக்க வேண்டும். (இது கடவுளை பற்றி குடும்பத்துக்கு எடுத்து சொல்லி அனைவரையும் மோட்சத்திற்கு அழைத்து செல்ல்வேண்டும்). கடவுளின் படைப்பான கனவனுக்கு மனைவி மரியாதை செலுத்தவம், அவளையே கனவனின் காவலில் தன்னை ஈடுபடுத்திகொள்கிறாள். அது தான் கடவுளின் பாதுகாவலாகும்.

மேலும் கணவன் மனைவியை அன்பு செய்ய கடமைபட்டிருக்கிறார். ஏன் மனைவியை கனவனை அன்பு செய்ய வேன்டும் என்று கூறவில்லை? ஏனெனில், இயற்கையாகவே பெண் ஆனவள், கணிவாக அனைவரையும் பார்த்து கொள்பவள். ஆனால், ஆன், காவலாளியாக படைக்கபட்டவன், அவனிடம் போர்க்குணம் தன் இருக்கும், அதனால் தான் கடவுள் அவனிடம் மனைவியிடம் அன்பு செய் என்ரு கூறுகிறார். புனிதத்துடன் இருக்க, கணவன் போர்குணத்தையும் , தனக்கு காவலாய் இருக்கம் எண்னத்தயும் விட்டு, மற்றவர்களுக்காக யேசு செய்த தியாகம் போல தானும் தியாகம் செய்ய வேண்டும்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, December 21, 2007

டிசம்பர் 23 2007 , மறையுரை நற்செய்தி:

டிசம்பர் 23 2007 , மறையுரை நற்செய்தி:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 1

18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ' யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் ' என்றார். 22 ' இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 23 இம்மானுவேல் என்றால் ' கடவுள் நம்முடன் இருக்கிறார் ' என்பது பொருள். 24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.



thanks to www.arulvakku.com


அன்பு தான் இன்றைய ஞாயிறின் முக்கிய கருத்து ஆகும். அன்பின் முழு அர்த்தத்தை இன்றைய முதல் வாசகத்தில் வரும் பெயரிலும், நற்செய்தியில், இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியதாக குறிப்பிடுவதிலும் பார்க்கிறோம்: இம்மானுவேல், அதன் பொருள் "கடவுள் நம்முடன் இருக்கிறார்". அன்பை அடைவதற்கான பொருள் கடவுள் நம்மோடு இருப்பது. அன்பை கொடுப்பது என்பது நம்மிடம் உள்ள கடவுளை மற்றவர்களுக்கு கொடுப்பது.

மற்றவர்களை அன்பு செய்ய உன்னிடம் ஏதுமில்லை என என்றாவது நீ நினைத்தது உண்டா? இதுமாதிர் என்றும் நடப்பதில்லை. அன்பான கடவுள் நம்மிடையே இருப்பதால், நாம் நினைப்பதை விட இன்னும் அதிகமாக அன்பை கொடுக்கலாம். சில நேரங்களில், நாம் செலுத்து அன்பின் அளவிற்கு, நமக்கு அன்பு கிடைக்காமல் போகலாம், அதனால் நாம் உறசாகம் இழந்துவிடுவோம். இன்னமும் கூட, நம்மை வேதனையுற செய்பவர்களை நாம் இழிவுபடுத்துவ்வொம். இதனால் நாம் அந்த மனிதருக்கு அன்பு செலுத்த இயலாமல் போகலாம்.
இது மாதிரியான தருணங்களில் தான் நாம் கடவுளின் மிக பெரிய அன்பையும், நமது பகைவர்களிடம் அன்பு செய்யும் ஆற்றலையும் கேட்க வேண்டும். இந்த வேண்டுதலுக்கு எப்போதுமே ஆண்டவரின் அருள் கிடைக்கும். இப்படித்தான், நாம் கடவுளின் தூதுவராக இருந்து, அவரின் அன்பை பரப்பவேஎண்டும். அன்பு செய்ய கடினப்படுபவர்களிடம், நாம் கடவுளின் அன்பை கொடுத்தால், நம்மிடம் உள்ள கடவுளை அவர்களுக்கு அறிமுகபடுத்துகிறோம்.

நாம் எதிர்பார்க்கும் அன்பு நமக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் இருக்கும் போது, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் ஞாபக படுத்திகொள்ள வேண்டும். நாம் இம்மானுவேலை கூப்பிடவேண்டும். ஏற்கனவே முழுமையாகவும், எவ்வித நிபந்தனையுமின்றி கடவுள் நம்மிடையே இருக்கிறார். நாம் எதிர்பார்ப்பதை விட மிகவும் குறைவாக நமக்கு அன்பு கிடைப்பதால், நாம் சோர்ந்து போகிறோம். அந்த நேரங்களில், யேசுவை நோக்கி நம் பார்வை செல்லட்டும். யேசு நம்மிடம் அன்பின் இடைவெளையை நிரப்புவார். இம்மானுவேல். இந்த பெயரைதான் வருடம் முழுதும், நாம் உபயோகிக்க வேண்டும். கிறிஸ்து பிறப்பிற்கான உங்கள் தயாரிப்பை முடிக்கும் தருவாயில் உள்ள நீங்கள், இம்மானுவேலை நோக்கி உங்கள் பார்வைகள் இருக்கட்டும். இம்மானுவேலுக்கு பாட்டு பாடுங்கள், இம்மானுவேலிடம் ஜெபம் செய்யுங்கள். உஙகளுக்கு இந்த பெயர்தான், கடவுளின் தனிப்பட்ட அன்பளிப்பாகும்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, December 14, 2007

டிசம்பர் 16 2007, ஞாயிறு , நற்செய்தி மறையுரை:

டிசம்பர் 16 2007, ஞாயிறு , நற்செய்தி மறையுரை:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 11

2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். 3 அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார். 4 அதற்கு இயேசு மறுமொழியாக, ' நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். 5 பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. 6 என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர் ' என்றார். 7 அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: ' நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையா? 8 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர். 9 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 10 ' இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. 11 மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

thanks to (www.arulvakku.com)


சந்தோசம் தான் இன்றைய ஞாயிறின் முக்கிய கருத்து ஆகும். இன்றைய முதல் வாசகத்தில் கூறுவது போல " திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்: அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்" இது தான் நமது சந்தோசத்திற்கு காரனம் ஆகும். நமது பாவங்களுக்காகவும், அதனுடைய அழிவிலிருந்து நம்மை காக்க மிகபெரிய வெகுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. யேசு அவருடைய மிக பெரிய தியாகத்தாலும், சிலுவையில் அதற்கான வெகுமதியை நமக்காக அளித்தார். இதற்காக தான் யேசு இந்த பூமியில் நம்மில் ஒருவராக பிறந்தார். நமக்கு நித்திய வாழ்வில் ஏற்படவிருந்த மிக பெரிய இழப்பை ஈடு செய்யவும் அதிலிருந்து நம்மை மீட்கவும் யேசு இவ்வுலகில் பிறந்தார். நித்திய வாழ்வில், கடவுளின் அன்பையும், அவரையும் இழக்காமலிருக்க யேசு நமக்காக இந்த தியாகம் செய்தார். நித்திய வாழ்வில் நமக்கு ஏற்படும் இழப்பை ஒப்பிட்டு பார்க்கையில், இன்றைய உலகில் நமக்கு உள்ள ப்ரச்னைகள் எல்லாம் மிகவும் சிறியவை ஆகும்.


யேசுவின் மூலம், நமக்கு கிடைத்த வெற்றியில், எந்த ஒரு பாவமும், நமக்கு எதிராக இல்லை என்பதை உணர்ந்து அறிந்தவுடன், நாம் சந்தோசம் அடைகிறோம். கடவுள் நமக்கு செய்யும் ஒவ்வொரு செயலுமே, நமக்கு பயனுள்ளதாகவே இருக்கிறது. அவர் சாத்தானை நமக்காக தோற்கடித்தார்.

மிகவும் மோசமான நேரங்களில் கூட நாம் யேசுவிடம் நமது வாழ்வை ஒப்படைத்து, அவர் வழியில் சென்றால், அது மிக பெரிய ஆசிர்வாதம் ஆகும். கிறிஸ்துவிலும், அவரை போல வாழ்வதிலும், நமது துன்பங்கள், மற்றவர்களுக்காக நாம் செய்யும் சேவைகள், அவர்களுக்க ஆசிர்வாதம் ஆகும். இதனால், இதன்மூலம், நமது சந்தோசம் பல மடங்கு பெரிதாகும்.

அதனால், கிறிஸ்துவில் நமக்கு கடைசி வரை இன்பம்/சந்தோசம் கிடைக்கிறது. நாம் இந்த சந்தோசத்தினால், மகிழ்ச்சி அடைவோம். வருத்தங்கள், துக்கம் எல்லாம் பறந்து போகும். கருணையும், இரக்கமும், விசுவாசமும் உள்ள கடவுளை நினைத்து நாம் சந்தோசம் அடையும் போது, நமது துன்பங்கள் எல்லாம் ஓடோடி போகும்.

இரண்டாவது வாசகம் குறிப்பிடுவது போல, கடவுள் நமது சோதனைகள வெற்றி கொள்ளும் வரை நாம் காத்திருக்க வேண்டும். சந்தோச மனநிலையுடன் இருக்க, நாம் நமது விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும். கடவுளின் அன்பின் மேலும், அவர் நம் மேல் உள்ள அக்கறையில், துளியும் சந்தேகமில்லாமல் இருக்க வேன்டும். மேலும் நாம் குற்றம் சொல்லக்கூடாது. குறை கூற கூடாது. ஏனெனில் குறை சொல்வது என்பது, நாம் க்டவுளை நம்பவில்லை என்று அர்த்தம். நாம் கடவுளை விட பெரியவன் என்ற எண்ணம் வரும், எப்படி நமது ப்ரச்னைகளை நாம் தீர்க்கமுடியும் என்ற எண்ணம் வரும்.

கடவுள், நம்மை உண்மையாக பார்த்துகொள்கிறார், நமது நன்மைகளூக்காக உழைக்கிறார் என்கிற நல்ல செய்தியை கேட்கும்ப்போது, நாம் மகிழ்ச்சியடைகிறோம். அந்த மகிழ்ச்சியில் இருத்து நமக்கு சந்தோசம் கிடைக்கிறது. யேசு நற்செய்தியில் கூறுவது போல "என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்",அதனால், நாமெல்லாம் இறைவனின் ஆசிர்வாதத்தை அடைகிறோம்.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, December 7, 2007

மறையுரை டிசம்பர் 9 2007

மறையுரை டிசம்பர் 9 2007


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 3

1 அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து, 2 ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' என்று பறைசாற்றி வந்தார். 3 இவரைக் குறித்தே, ' பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். 4 இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். 5 எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். 6 அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள். 7 பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, ' விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? 8 நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். 9 ″ ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை ″ என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். 10 ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும். 11 நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். 12 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் ' என்றார்.

www.arulvakku.com





மறையுரை

அமைதிதான், இன்றைய ஞாயிறின் முக்கிய கருத்து ஆகும். முதல் வாசகம், மெசியா யேசு கிறிஸ்து, டேவிட் அரசர் வழிமுறையில் வந்தவர் என்பதை விவரிக்கிறது. மேலும், எப்படி அமைதி பெறுவது என்பதை விளக்குகிறது. எப்படி சோதனைகளிலும், வேதனைகளிலும் அமைதியோடு இருப்பது என்று கூறுகிறது. "ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்" இது மிகவும் இயற்கையான செயலாகும். நீங்கள் எப்போதாவது பரிசுத்த ஆவி உங்கள் மேல் தங்கியிருக்கிறார் என்று எண்ணியதுண்டா?

நாம் கடவுளோடு சேர்ந்து அவரில் இணைத்து கொண்டால் தான் நாம் உண்மையான அமைதியை அனுபவிப்போம். அது எப்படி என்றால், கடவுளின் வழியை, அவருடைய திட்டங்களை கடைபிடிக்கும் போது எவ்வித போராட்டமும், தோல்வியுமின்றி இருக்க வேண்டும். நாம் மற்றவர்களோடு நடத்து போராட்டத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாலோ, நமது பண ப்ரச்னைகளிலிருந்து மீண்டு வருவதாலோ, உடல் நோயிலிருந்து சுகமடைவதாலோ அமைதி போவதில்லை. அமைதி இவைகளையெல்லாம் சார்ந்திருப்பதில்லை. நாம் அமைதிக்காக, மிகவும் கடினமாக உழைத்து, சோதனைகளிலிருந்து, போராட்டங்களிலிருந்து, வெற்றி பெற்றாலும், அமைதி நம்மில் கிடைப்பதில்லை.

பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு கிடைக்கும்,ஞானமும், புரிந்துணர்வின் மூலம் நமக்கு அமைதி கிடைக்கிறது. கடவுள் நமக்கு என்ன தெரிய வேண்டும் என நினைக்கிராறோ, அவருடைய முழு அதிகாரத்தை ஏற்றுகொண்டு, அவரிடம் கீழ்படிந்து,வாழ்தல் வேன்டும். இந்த உண்மைகளை ஏற்றுகொண்டு வாழ்வதால், அமைதி வருகிறது.

இன்றைய நற்செய்தியில், ஞானஸ்நானம் கொடுக்கும் யோவான், "2 ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' " மேலும், கடவுள் வருவதற்கான பாதையை செம்மைபடுத்துங்கள் " என்று கூறுகிறார். கடவுளின் ஆவியையும், அமைதியையும் பெறுவதற்கும், திருப்பலியில், யேசுவோடு சேர்வதற்கு, நாம் நம்மையே தயார்படுத்த வேண்டும். எல்லா வழிகளிலும், அவர் நம்மை எப்படி ஏற்றுகொள்வாரோ அவ்வாறு நாம் அவரிடம் தஞ்சம் அடைய வேண்டும். எப்பட்? நமது பாவங்களை கண்டறிந்து, மணம் திரும்பி, நமது கோணலான பாதையை நேராக்க வேண்டும். நாம் யேசுவை பார்ப்பதற்கு தடையாக இருக்கும் தடைகளை தூக்கி எறிய வேண்டும். நமது தீய எண்ணங்களையும், தவறான ஆர்வத்திற்கு தடை கொடுங்கள். அப்போது தான் நாம் அமைதியை தேடி செல்ல முடியும்.

எதுவெல்லாம், கடவுளின் அமைதியையும் நம்மையும் பிரிக்கிறதோ, அதனையெல்லாம், தூக்கி எறிய வேண்டும். திருப்பலியின் மூலமும், பாவ சங்கீர்த்தனத்தின் மூலமாகவோ நாம் அந்த பாவங்களை தூக்கி எறிய வேண்டும். சின்ன பாவமோ கூட இருந்தாலும் நாம் பாவ சங்கீர்த்தனம் செய்து கடவுளோடு சேரவேண்டும்.


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm