Friday, January 25, 2008

27 ஜனவரி 2008, நற்செய்தி - மறையுரை:

27 ஜனவரி 2008, நற்செய்தி - மறையுரை:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 4

12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். 13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். 14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது: 15 ' செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! 16 காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது. ' 17 அதுமுதல் இயேசு, ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' எனப் பறைசாற்றத் தொடங்கினார். 18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர். 19 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார். 20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். 21 அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். 22 உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள். 23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.


(thanks to www.aruvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், முதல் வாசகத்தில் இசையாஸ் கூறியதை, நற்செய்தியில் முழுமையடைந்ததை கேட்கிறோம். உனக்கு தெரிந்த நண்பர்கள், இன்றும் தனது இருளான வாழ்க்கையில் இருந்து கொண்டு, திருந்துவதற்கான எவ்வித முயற்சியுமில்லாமல், உனக்கு மிகவும் துயரம் கொடுத்தவர்கள், யேச்வினால், அவர்கள் ஒளியின் வெளிச்சம் பார்ப்பர். அது அவர்களை குணப்படுத்தும்.

உனது வேண்டுதலாலும், ஜெபத்தினாலும், விசுவாசமிக்க அன்பினாலும், யேசு அவர்களுக்கு வெளிபடுத்தபடுகிறார். அவர்கள் உண்மைக்கு எதிராக செயல்பட்டு, யேசுவிடமிருந்து மறைய முயற்சித்தாலும் யேசுவின் மகத்தான மிகப்பெரிய ஒளி வெள்ளத்தை யாராலும் அனைக்க முடியாது. மிக விரைவாகவோ, அல்லது வரும் காலங்களில், அந்த ஒளி வெள்ளம், ஏராளானமாக சந்தோசத்தையும், அபரிதமான மகிழ்ச்சியையும் உங்களுக்கும், யாரெல்லாம் மீட்கபட்டார்களோ, அவர்களுக்கும் கொடுக்கும்.

"மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். 50 ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்." இவ்வாறு லூக்காஸ் நற்செய்தியில் யேசு தனது எண்ண உணர்வுகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். நீயும், அவ்வாறு உணர்கிறாய் என்பதை யேசுவும் அறிவார். ஆனால் அவரது வேதணை மிகவும் ஆழமானது. அதனால், உனக்கு தெரிவதை விட, உனது கற்பணையை விட, யேசு அதிகமாகவே செய்கிறார் என்ற நம்பிக்கையுடன் இரு. நீ எந்த விசயத்தில் வெற்றியடையா வேண்டும் என்று ஜெபித்தாயோ, அதற்காக நிறைய யேசு செய்து கொண்டிருக்கிறார், என்ற உறுதியுடன் இரு. இந்த வெற்றியை 2000 வருடங்களுக்கு முன்பே யேசு பெற்றார். மேலும் இப்பொழுது, எல்லாவிததிலும், அவரால், செய்ய முடிந்த, முடியாத காரியங்களையும் செய்து, உனது வேண்டுதலை நிறைவேற்றுவார்.

பாவத்தில் விழுந்தவர்களின் பிடிவாதமான எதிர்ப்பால் வரும் விளைவுகளை தெய்வ அருளால் உணர்த்த வேண்டும் என ஜெபியுங்கள், அதன் மூலம் அவர்கள் இறைவனிடத்தில் வருவார்கள். யார் மூலமாவது, அல்லது ஏதாவது ஒரு தூதுவ கருவியின் மூலம் கடவுளின் ஒளிக்கு அவர்களை கொண்டு வர வேண்டும் என இறைவனிடம் ப்ரார்த்தனை செய்யுங்கள். அவர்களுடைய தெய்வீக எதிர்ப்பிற்கு, நாம் நினைக்கும் வழியைவிட, கடவுளின் வழியிலேயே, அவர்கள் எதிர்ப்பை நிர்மூலமாக்கவேண்டும் என வேண்டுங்கள். அவர்களுடைய மணமாற்றத்திற்கு பிறகு, இறைவனின் ஒளியை மற்றவர்களுக்கு மிகுந்த சக்தியுடன் பரப்பவேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்ய்ங்கள். மேலும் இந்த மணமாற்றம்,ஆழமானதாகவும், நிச்சயமானதாகவும், நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும் என்று ஜெபியுங்கள்.

கடவுளின் மனதை மாற்ற நாம் ஜெபம் செய்ய வில்லை என்பதை மணதில் நிணைத்து கொள்ளவும். அவர் ஏற்கனவே இருளில் இருக்கும் அன்பர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர எல்லா வழிகளிலும் முயன்று கொண்டிருக்கிறார். நாம் அவர்களை கடவுளின் கரத்தில் எடுத்து வைக்கிறோம். ஏனெனில், அவர்களே அதனை கடவுளிடம் கேட்பதில்லை.



© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, January 18, 2008

20 ஜனவரி ஞாயிறு 2008 , - மறையுரை:

20 ஜனவரி ஞாயிறு 2008 - மறையுரை:

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 1

29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். 30 எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். 31 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் ' என்றார். 32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ' தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். 33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார். 34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். '

(thanks to www.arulvakku.com)
ஒவ்வொரு திருப்பலியிலும், "இவரே கடவுளின் செம்மறி, இந்த உலகின் பாவங்களை போக்குபவர்" என்று குருவானவர் கூறுவதை கேட்கிறோம். இதனை ஸ்நாபக அருளப்பர்தான் முதன் முதலில் கூறினார். இதற்கு பதிலுரையாக நாம் "இறைவா நீ என்னுள்ளத்தில் வர நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆன்மா குண்மடையும்" என்று கூறுகிறோம்.


இந்த குண்மடைதலால், நமது பாவங்களிலிருந்து நாம் விடுதலை அடைகிறோம். நமது ஞானஸ்நானத்தினாலும், திருப்பலியின் ஆரம்பத்தில், நாம் செய்யும் பாவ மன்னிப்பு சடங்கினாலும், நமது பாவங்களிலிருந்து முழுதுமாக நாம் விடுதலை அடைகிறோம். இந்த ஆண்ம குணமடைதலால், நாம் யேசுவை முழுதுமாக தெய்வீகத்துடனும், முழு உடலோடும் நாம் பெறுகிறோம். பிறகு, ஸ்நாபக அருளப்பரை போல, நாமும் இந்த உலகிற்கு யேசுவின் சாட்சியாய், "நான் யேசுவை பார்த்தேன், அவர் தான் கடவுளின் மகன்" என்று கூறி கோவிலை விட்டு செல்லலாம். ஆனால், இது மாதிரியான மனப்பான்மையோடுதான் நாம் ஒவ்வொருதிருப்பலியையும் விட்டு வருகிறோமோ?

இப்படி நடக்கவில்லையென்றால், நாம் திருப்பலியில் ஒழுங்காக கவனம் செலுத்தவில்லையென்று அர்த்தம். திருப்பலியின் ஒவ்வொரு பகுதியிலும், யேசு இருக்கிறார். பாவ மன்னிப்பில், நாம் நமது பாவங்களை முழுதுமாக ஏற்று, அதற்காக மன்னிப்பு கேட்கும் போது அங்கு யேசு இருக்கிறார். ஒவ்வொரு வாசகத்தில், நற்செய்தியிலும், ஒவ்வொரு வார்த்தைகளிலும் ப்ரெட்டை போல நமது ஆன்மாவுக்கு ஊட்டமளிக்கிறது. நமது ஆண்மீக வளர்ச்சிக்கு உதவுகிறது. பிரசங்கம் நன்றாக இல்லை என்றாலும், அல்லது திருப்பலியில் பிரசங்கம் இல்லைஎன்றாலும் , பரிசுத்த ஆவி, நமக்கு தனியாக பிரசங்கம் / மறையுரை கொடுக்கிறார். மேலும் ஒவ்வொரு ஜெபத்திலும் யேசு நம்மோடு இருக்கிறார்.

திருப்பலியின் ஒவ்வொரு அங்கமும், நம்மை மணமாற்றி, உண்மையான யேசுவின் ப்ரசன்னட்த்திற்கு சாட்சியாக நம்மை தயார்படுத்தி , கோவிலிலிருந்து நம்மை இந்த உலகிற்கு அனுப்புகிறது. ஸ்நாபக அருளப்பரை போல "நான் அவரை அறியேன்" என்று நாம் கூறலாம். இல்லையென்றால், "நான் நண்மையும், திராட்சை ரசத்தையும் தான் பார்த்தேன்" என்று கூறலாம். அல்லது "நான் பாவி, நான் செய்த இழப்பை அறியேன்" அல்லது, "நான் பாதிக்கபட்டவன், எனது காயங்களை எப்படி குணப்படுத்துவது என்று தெரியவில்லை " என்று கூறலாம்.

நாமும் யோவான் கூறியது போல, ' தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். 33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார். 34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்' என நாமும் சான்று கூறலாம். "பரிசுத்த ஆவிதான் எனக்கு உதவி பெறும் இடத்தை காட்டினார், அதன் மூலம், எனது காயங்கள் குண்மடந்தன" என்று சான்று பகருங்கள்.


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, January 12, 2008

ஜனவரி 13, 2008 நற்செய்தி - மறையுரை

ஜனவரி 13, 2008 நற்செய்தி - மறையுரை:

எசாயா

அதிகாரம் 42

1 இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். 2 அவர் கூக்குரலிடமாட்டார்: தம்குரலை உயர்த்தமாட்டார்: தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். 3 நெரிந்த நாணலை முறியார்: மங்கி எரியும் திரியை அணையார்: உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார். 4 உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்: அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர். 5 இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். 6 அவர் கூக்குரலிடமாட்டார்: தம்குரலை உயர்த்தமாட்டார்: தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். 7 நெரிந்த நாணலை முறியார்: மங்கி எரியும் திரியை அணையார்: உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார். 8 உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்: அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 3

13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். 14 யோவான், ' நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்? ' என்று கூறித் தடுத்தார். 15 இயேசு, ' இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை ' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார். 16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். 17 அப்பொழுது, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.


இன்றைய ஞாயிறு, நாம் "ஞானஸ்நாணம்" மற்றும் "திருமுழுக்கு " திருவிழாவை கொண்டாடுகிறோம். இதன் பிறகு தான் யேசு அவருடைய சமுக தொன்டையும், நற்செய்தி அறிவித்தலையும் தொடங்கினார். நாம் ஞானஸ்நாணம் பெற்றபோது, இதே அனுபவத்தை அடைந்தோம். நமது முதல் அருட்சாதனம், நம்மை கிறிஸ்துவின் வாழ்வில் மூழ்க செய்கிறது. அதற்கு அடுத்த இரண்டு அருட்சாதனமும் ( புது நண்மை, உறுதிபூசுதல்) , நமது புனித வாழ்வையும், மேலும் அதனுடன் வாழ நமக்கு அதிகாரத்தையும் தருகின்றன. "இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்" இதையே தான், கடவுள் இசையாஸ் இறைவாக்கினர் மூலம் நமக்கு கூறுகிறார்.

கடவுளுக்கு பிடிக்கும் செயலை, உன் மூலம் செய்ய பரிசுத்த ஆவி உன்னை தூண்டிவிடுகிறார். அது என்ன செயல்?. பரிசுத்த ஆவி உன் மூலம் கடவுளரசிற்கு எப்படி சேவை செய்கிறார்? நீ பரிசுத்த ஆவிக்கு உன் மூலம் கிறிஸ்துவின் சேவை செய்ய எல்லா சுதந்திரமும் கொடுக்கிறாயா?

இதற்காக தான் உனக்கு திருமுழுக்கு கொடுக்கபட்டது, ஆனல், உனக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களும், நீ எதிர்கொண்ட கஷ்டங்களும், உன்னை குறிப்பான சில சேவைகளில் மட்டும் ஈர்க்க செய்கிறது. இதனால் தான், பல நாள் நோய்வாய்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் மருத்துவர்களாகவோ அல்லது நர்ஸ்களாகவோ சேவை செய்கிறார்கள். மேலும் பிறரால் ஏமாற்றபட்டவர்கள், துஷ்ப்ரயோகம் செய்யபட்டவர்கள், இது மாதிரி பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் சேவை செய்கிறார்கள். மேலும் முதலாளிகளால் ஏமாற்றபட்டவர்கள் , அவர்களே தொழில் தொடங்கி பல ஊழியர்களுக்கு நல்ல முதலாளிகளாக இருக்கிறார்கள். இவையெல்லாமே கிறிஸ்துவாய் இவர்கள் செய்கிறார்கள்.

நீ எதையெல்லாம் செய்ய வேண்டும் என விரும்புகிறாயோ, அதையெல்லம் கிறிஸ்துவின் விருப்பமாய், நீ திருமுழுக்கின் போது உனக்கு கிடைத்தது. நீ கொஞ்சம் அந்த விருப்ப்த்தில் அக்கறை செலுத்தினால், புது நண்மை அருட்சாதனத்தில் அது புதுபிக்கப்படுகிறது. ஏனெனில் நற்கருணையில் வாழும் கிறிஸ்துவால், உன்னை அவரது சேவையில் மீண்டும் சேர்க்கிறார். இந்த ஆசிர்வாதத்தை, கிறிஸ்துவின் சேவையை கோவிலிலுருந்து நீ எடுத்து சென்றால், யேசு ஒரு காலத்தில் செய்தது போல், உன்னால் இந்த உலகை மாற்ற முடியும்.

மேலும் நீ என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறாயோ, கடவுள் உன்னை என்ன செய்ய வேண்டும் என விரும்பினாரோ, அதை செய்ய முடியாமல் போகும்போது, செயல்குலைந்து போகும்போது, நீ அதற்கு தயார்படுத்தபட்டிருக்கிறாய். எந்த தடையுமில்லை. நீ தந்தையால் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறாய். அவர் நெஞ்சம் உன்னால் பூரிப்படைகிறது.


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, January 5, 2008

ஞாயிறு ஜனவரி 6 2008, நற்செய்தி - மறையுரை:

ஞாயிறு ஜனவரி 6 2008, நற்செய்தி - மறையுரை:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 1

1 தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: 2 ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். 3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். 4 இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். 5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். 6 ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். 7 சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. 8 ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. 9 உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. 10 எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. 11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள். 12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். 13 செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். 14 அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. 15 எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. 16 யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. 17 ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு. 18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ' யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் ' என்றார். 22 ' இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 23 இம்மானுவேல் என்றால் ' கடவுள் நம்முடன் இருக்கிறார் ' என்பது பொருள். 24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.


http://arulvakku.com thanks


இன்றைய ஞாயிறில், மூன்று ஞானிகளும், குழந்தை யேசுவை வணங்கி ஆராதித்ததை கொண்டாடுகிறோம். இந்த ஞானிகள் யூதர்கள் இல்லை. அவர்கள் யூதர்களின் அரசனை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் தான் இன்றைய கொண்டாட்டம் இருக்கிறது. யேசுவின் முக்கியத்துவத்தை, அதனை முழுமையாக புரிந்து கொள்ளாமலேயே, அவரை நம்பினவர்கள் இந்த ஞானிகள். இவர்களே நமக்கும், இந்த உலகத்திற்கும் யேசுவை நம்புவதற்கு நல்ல எடுத்துகாட்டு.


அவர்கள் யேசு எவ்வாறு அரசராக போகிறார்? எப்படி இந்த உலகை மாற்ற போகிறார் என்பதை அறியாமலேயே யேசுவை வணங்கினார்கள். உண்மையை அறியும் ஞானிகளாக, அவர்கள் பல வேத நூல்களை படித்து, ஆராய்ந்து தெரிந்து, அவர்கள் பழக்க வழக்கங்களையும் தாண்டி அவர்கள் பல விசயங்களில் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும் கடவுளின் ஆவியின் கட்டளையின் படி நடந்து கொண்டனர். அது அவர்கள் வாழ்வை மாற்றியது.

கடவுளின் ஆவிதான் ஒருவரை விசுவாசம் செய்ய வைக்கிறது. ஏனெனில் விசுவாசம் பரிசுத்த ஆவியின் அன்பளிப்பு ஆகும். (கொரிந்தியர் அதிகாரம் 12). இன்றைய விழாவின் அர்த்தமே "கண்டறிதல்" ஆகும். இந்த வெளிப்பாடு தான் நம் வாழ்வை மாற்றுகிறது.இந்த விழாவே இறைவன் நமக்கு அன்பளிப்பாக கொடுத்தது. ஏனெனில் அது நமக்கு தேவை.

ஞானிகள் குழந்தை யேசுவின் அருகில் இருந்த போது, எப்படிபட்ட உணர்வுடன் இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். எப்படி இந்த குழந்தை இவ்வளவு ஏழ்மையான குடும்பத்த்தில் பிறந்து, யாருக்கும் தெரியாத குடும்பம், எப்படி அரசராக முடியும், என்றெல்லாம் அவர்கள் புரிந்து கொள்ளாமலேயே, அவர்கள் வாழ்னாள் முழுதும் அந்த குழந்தை யேசுவை நிணைத்து கொண்டு இருந்தார்கள். மேலும், இஸ்ரேயல் நாட்டிலிருந்து வரும் செய்திகள கேட்டு கொண்டிருந்தார்கள். யேசுவின் சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் கேட்டறிந்தார்கள். யேசுவின் சீடர்கள் அதனை எல்லோருக்கும் எடுத்து சொல்லிவருவதையும் அறிந்தார்கள். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவை பின்பற்றி கிறிஸ்தவர்களாக மாறியதையும், அவர்கள் பொருட்கள் அனைத்தும், வரலாற்று சின்னமாக உள்ளது. அவைகள் அனைத்து வணக்கத்துடன், கிறிஸ்துவின் காலத்திலிருந்து போற்றி பாதுகாக்கபடுகிறது.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm