Saturday, March 29, 2008

மார்ச் 30 2008, ஞாயிறு நற்செய்தி மறையுரை

மார்ச் 30 2008, ஞாயிறு நற்செய்தி மறையுரை



யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார். 22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார். 24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. 25 மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார். 26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார். 28 தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார். 29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ' என்றார். 30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. 31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.

thanks to Www.arulvakku.com


ஈஸ்டர் வெற்றியோடு அனுபவித்து வாழ்வது என்பதற்கு என்ன அர்த்தம்.? நாமெல்லாம் ஈஸ்டர் மக்கள். ஏனெனில் யேசு மரனத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பது தெரிந்து நாம் கொண்டாடுகிறோம். இருந்தாலும், நாம் எப்பொழுதும் "அல்லேலுயா" என்று சொல்லி கொண்டிருப்பதில்லை. நாம் இந்த வெற்றியை கொண்டாடுவதில் எந்த எண்ணமும் இல்லாமால், நிணைப்புமில்லாமல், திருப்பலியிலும், வெளியேயும், நாம் சந்தோசமடைவதில்லை, அந்த சந்தோசம் மற்ற சகோதரர்கள் மணமாற உதவியாக இருக்கும்.

பெரிய வெள்ளியின் சிலுவைகளை தொடர்ந்து தூக்கி செல்வதில் நாம் முடித்து கொள்ள முடிவதில்லை.
இன்றைய நற்செய்தியில், ஈஸ்டர் வெற்றியை எப்படி அனுபவிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது: விவரிக்க முடியாத சந்தோசத்துடனும், புகழுடனும் கொண்டாட படவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் எப்படி?

சந்தோசமடைவதற்கு தேவையான மண நிலை, சிலுவை போல் உள்ள துன்பங்கள் முடிவதிலிருந்து ஆரம்பிப்பது இல்லை. அல்லாமல், கிறிஸ்து, நமக்காக இறந்து நம்மையெல்லாம் இரட்சித்தார், அதன் மூலம் கடவுளின் அபரிதமான அன்பும், அமைதியும், நமக்கு கிடைக்கும் என்று நிணைத்து நமது சந்தோசம் ஆரம்பமாகும். சாகாவரம் பெற்ற இந்த அன்பளிப்பு நமக்கு கிடைத்த இந்த இன்பத்தினால் நாம் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் யேசு அதனை நமக்காக தயாராய் வைத்திருக்கிறார். நாம் மரனமடையும்போது, நாம் இந்த அன்பளிப்பை பெறுவோம். இந்த அன்பளிப்பு நாம் கடவுளை ஏற்று கொண்டதால், கடவுள் நமக்காக காத்து வைத்திருக்கிறார். நமது விசுவாசம் இந்த அன்பளிப்பை பெற்று கொடுக்கிறது.

நம்பிக்கையின் முழு அர்த்தம் என்னவென்றால், பின்னால் நடக்கபோவது உறுதி என்று தெரிந்து, அதனை நாம் கொண்டாடுவதில் தான் உள்ளது.

பெரும்பாலான கத்தோலிக்கர்கள், மீட்பும், மோடசமமும் கிடைக்காது என்று பயம் கொள்கின்றனர். ஏனெனில் அவர்கள் அவர்களையே நம்புவதில்லை. இன்றிலிருந்து இறக்கும் காலம் வரையில், யேசுவிடமிருந்து விலகிவிடுவோமோ என்று பயப்படுகிறார்கள். நீயும் அப்படி பயப்படுகிராயா? : உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்? உங்கள் துன்ப நேரங்களில், கடவுளை ஒதுக்கி தள்ளுகிறீர்களா அலலது அவரிடம் ஓடி செல்கிறீர்களா?
நாம் கடவுள் மேல் கோபம் கொண்டால் கூட, நாம் அவரோடு அருகில் தான் இருக்கிறோம். நாம் அவர் மேல் வைத்த நம்பிக்கையால், நாம் எதிர்பார்ப்பதை கடவுளிடமிருந்து வராமல் இருக்கும் போது, நாம் அவர் மேல் கோபப்படுகிறோம். அவர் மேல் விசுவாசம் இல்லாமல், கோபம் கொள்வதில்லை. நமது சோதனையில் தான், நமது விசுவாசம் சுத்தப்படுத்தபடுகிறது. ஈஸ்டர் மக்களாகிய நாம், நமக்கு வரும் துன்பங்கள் எல்லாம் தற்காலிகமானது தான். நித்திய இன்பத்தை ஒரு நாள் பெறுவோம். அதனைதான் நாம் இப்போது தான் கொண்டாடுகிறோம்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, March 21, 2008

23 மார்ச் 2008 ஈஸ்டர் திருவிழா நற்செய்தி , மறையுரை

23 மார்ச் 2008
ஈஸ்டர் திருவிழா
நற்செய்தி , மறையுரை


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். 2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார். 3 இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். 4 இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். 5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. 6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், 7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. 8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார். 9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

thanks to www.arulvakku.com

உனக்கு யேசு எப்படி உதவி செய்தார் என்று பிரகடனம் செய்ய தயாராய் இருக்கிறாயா? அல்லது எப்படி உன் வாழ்வின் இறந்த துக்கங்கள்,வெற்றியாக உயிர் பெற்றன என்பதில் ஐயம் இருப்பதால், யேசுவின் உதவியை பிரகடனம் செய்ய தயங்குகிறாயா? எப்படி உன் வாழ்வின் நடந்த ஆபத்துகள், துன்பங்கள், இன்பமாக மாறியது? மிக சிறந்த ஆசிர்வாதமாக மாறியது என்பதை உலகிற்கு சொல்ல தயங்குகிராயா?

இந்த மாதிரியான மண நிலையில் தான், ஈஸ்டர் அன்று எல்லா சீடர்களுக்கும் இருந்தது. ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் புனித பேதுரு "யேசுவை சிலுவையில் கொன்றார்கள், ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உய்ரோடு எழுப்பி, காட்சி அளிக்க செய்தார்" என்று கூருகிறார்.
சீடர்களுக்கு இப்போது தான அவர்கள் அழைப்பின் அர்த்தத்தை புரிந்து கொண்டார்கள். யேசு தான மீட்பர், என்று சாட்சி பகர அவர்கள் அழைக்கப்பட்டனர். அந்த வேலையை நற்செய்தி சேவையை முழுதுமாக செய்ய ஆரம்பித்தனர்.

"சாட்சி பகர்தல்" என்பது, நமது சொந்த அனுபவத்திலிருந்து, யேசு நமக்கு கொடுத்த மீட்பை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்தல் ஆகும். புனித பேதுரு "யாரெல்லாம், யேசுவை நம்பினார்களோ, அவர்கள் யேசுவிடம் , அவர்கள் பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவர்" என்று அதிகாரப்புர்வமாக சொல்கிறார். ஏனெனில், பீட்டருக்கு தான் முதன் முதலாய் தெரியும், கடவுளின் மன்னிப்பை எப்படி பெறுவது என்று.

நமது துன்பங்கள், நம்மை எப்படி புதிய வாழ்விற்கு அழைத்து சென்றது என்பதை நாம் மற்றவர்களோடு பேசி பகிர்ந்து கொண்டால் தான், நமக்கு அந்த மீட்பு முழுமையாக புரிய ஆரம்பிக்கும். தெளிவில்லாத நமது உள்ளத்தில் உள்ள விசயங்கள், நமது நெருங்கிய நண்பர்கள், கோவில் நண்பர்களோடு பேச ஆரம்பிக்கும்போதுதான, கொஞ்சம், கொஞ்சம்மாக புரிய ஆரம்பிக்கும். மகதலே மேரியும், அப்படித்தான, அவர்களுடைய குழப்பத்திலிருந்து, மீள்வதற்குள், பேதுருவிடம், அருளப்பரிடம் ஓடி, அவர்களிடம், கல்லறையில் யேசு இல்லை என்பதை பகிரிந்து கொண்டார்கல். அவர்கள் மற்ற சீடர்களிடம் கூறினர். அப்போது தான், அவர்கள் அனைவரும் ஒற்றுமையாய் சேந்து சமூக கூட்டமாக ஒன்றானார்கள். அப்போதுதான், பரிசுத்த ஆவியின் உதவியுடன் யேசு அவர்களிடையே தோன்றி, உண்மையை அவர்களுக்கு கூறினார். சீடர்கள் அனைவரும், அந்த உண்மையை உலகம் முழுவதும் எடுத்துரைத்து மணம் மாற்றினர். யார் கேட்டார்களோ, அதை ஏற்று கொண்டார்களோ, அவர்கள் மணம் திரும்பி, யேசுவோடு ஒன்றினைந்தனர்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, March 14, 2008

மார்ச் 16, 2008 ஞாயிறு நற்செய்தி குருத்து ஞாயிறு

மார்ச் 16, 2008 ஞாயிறு நற்செய்தி:
மறையுரை
குருத்து ஞாயிறு


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 26

14 பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, 15 ' இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? ' என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். 16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். 17 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள். 18 இயேசு அவர்களிடம், ' நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ' எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன் ' எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள் ' என்றார். 19 இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். 20 மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். 21 அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், ' உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். 22 அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ' ஆண்டவரே, அது நானோ? ' என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். 23 அதற்கு அவர், ' என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். 24 மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும் ' என்றார். 25 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் ' ரபி, நானோ? ' என அவரிடம் கேட்க இயேசு, ' நீயே சொல்லிவிட்டாய் ' என்றார். 26 அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, ' இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல் ' என்றார். 27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ' இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; 28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். 29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். 30 அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள். 31 அதன்பின்பு இயேசு அவர்களிடம், ' இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் ' ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது. 32 நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன் ' என்றார். 33 அதற்குப் பேதுரு அவரிடம், ' எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன் ' என்றார். 34 இயேசு அவரிடம், ' இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' என்றார். 35 பேதுரு அவரிடம், ' நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன் ' என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள். 36 பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், ' நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள் ' என்று அவர்களிடம் கூறி, 37 பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். 38 அவர், ' எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள் ' என்று அவர்களிடம் கூறினார். 39 பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, ' என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் ' என்று கூறி இறைவனிடம் வேண்டினார். 40 அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ' ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? 41 உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ' என்றார். 42 மீண்டும் சென்று, ' என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும் ' என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். 43 அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. 44 அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். 45 பிறகு சீடர்களிடம் வந்து, ' இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். 46 எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான் ' என்று கூறினார். 47 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது. 48 அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், ' நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் ' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். 49 அவன் நேராக இயேசுவிடம் சென்று, ' ரபி வாழ்க ' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். 50 இயேசு அவனிடம், ' தோழா, எதற்காக வந்தாய்? ' என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர். 51 உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். 52 அப்பொழுது இயேசு அவரிடம், ' உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர். 53 நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. 54 அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்? ' என்றார். 55 அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ' கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; 56 இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன ' என்றார்.அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள். 57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். 58 பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார். 59 தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். 60 பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். 61 அவர்கள், ' இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான் ' என்று கூறினார்கள். 62 அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், ' இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா? ' என்று கேட்டார். 63 ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், ' நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன் ' என்றார். 64 அதற்கு இயேசு, ' நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். 65 உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, ' இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. 66 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இவன் சாக வேண்டியவன் ' எனப் பதிலளித்தார்கள்.


thanks to www.arulvakku.com

"ஆழ்ந்த அன்பு" என்ற வார்த்தைக்கு அதிக ஆற்றலுடன் உள்ள விளைவுகள் கூடியது. யேசுவை அடிக்கும் போதும், சிலுவையில் அறைந்த போதும், அவர் அடைந்த வேதனையையும், அவர் நம் மேல் கொண்ட ஆழ்ந்த அன்பினையும், அக்கறையையும் இந்த வார்த்தை மூலம் நாம் குறிப்பிடுகிறோம்.

ஆனால் இந்த உலகமோ, ஆழ்ந்த அன்பினை, காதல் உணர்விற்கும், காம ஆசைக்கும், கவர்ச்சிக்கும் குறிப்பீடாக எடுத்து கொள்கிறது.

நாமும் அதிக ஊக்கத்திற்காகவும், உற்சாகப்படுத்துவதற்காகவும், ஏதாவது ஒரு விசயத்திற்காக சந்தோசப்படும்போதும், நமக்கு நாமே அக்கறை கொள்கிற போது, "ஆழ்ந்த அன்பு" , "பற்றுதல்", "தீவிர ஆர்வம்" என்ற வார்த்தைகள் உபயோக்கிறோம். அதே வார்த்தகள் மூலம் யேசுவின், அவரின் சிலுவை வேதனையை கஷ்டத்தை தாங்கிகொண்டார் என்பதனை சொல்கிறோம்.

யேசு நம் எல்லார் மேலும், எவ்வளவு கருணையுடன் இருந்தார் என்பதை, அவரது இறைசேவையிலும், பெரிய வெள்ளியிலும், அவர் அடைந்த வேதனையையும், கஷ்டத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். இதுவே நமக்கு, "மற்றவர்கள் மேல் இரக்கம் கொள்தல்" என்ற பாடமாகிறது. மற்றவர்கள் துன்பத்தில் நாமும் அவர்களோடு சேர்ந்து, அந்த துன்பத்தில் நடந்து, அவர்களோடு நாமும் அந்த வேதனையை அடைவோம். இதுதான் உண்மையான, மிகவும் புனிதமான "ஆழ்ந்த அன்பு" க்கான அடையாளமாகும்.

இன்றைய நற்செய்தியை கவனமாக படித்து பார்த்தால், யேசு நம் மேல் எவ்வளவு ஆழ்ந்த அன்பு வைத்திருந்தார் என்பது தெரியும்.

உனக்குள்ளேயே, எத்தனை பேர் அதிக ஆர்வத்தோடு யேசு ஏற்றுகொண்டார்கள், எத்தனை பேர் நிராகரித்தார்கள் என்று எண்ணிபார்.

நீ எத்தனை முறை அவரை நிராகரித்தாலும், அவரை வேதனைபடுத்தியிருந்தாலும், உன் மேல் எவ்வள்வு அன்பு இருந்திருந்தால், இத்தனை பெரிய சிலுவை வேதனையை உனக்காக ஏற்று கொண்டிருப்பார் என்பதை எண்ணிபார்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:

www.gnm.org

Friday, March 7, 2008

மார்ச் 9 2008 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மார்ச் 9 2008 ஞாயிறு நற்செய்தி மறையுரை

தவக்கால 5 வது ஞாயிறு


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 11

1 பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வு+ரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர். 2 இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். 3 இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, ' ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான் ' என்று தெரிவித்தார்கள். 4 அவர் இதைக் கேட்டு, ' இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார் ' என்றார். 5 மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். 6 இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். 7 பின்னர் தம் சீடரிடம், ' மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள் ' என்று கூறினார். 8 அவருடைய சீடர்கள் அவரிடம், ' ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா? ' என்று கேட்டார்கள். 9 இயேசு மறுமொழியாக, ' பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது. 10 ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லை ' என்றார். 11 இவ்வாறு கூறியபின், ' நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் ' என்றார். 12 அவருடைய சீடர் அவரிடம், ' ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார் ' என்றனர். 13 இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். 14 அப்போது இயேசு அவர்களிடம், ' இலாசர் இறந்து விட்டான் ' என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு, 15 ' நான் அங்கு இல்லாமல் போனது பற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள் ' என்றார். 16 திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், ' நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் ' என்றார். 17 இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது. 18 பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. 19 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். 20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். 21 மார்த்தா இயேசவை நோக்கி, ' ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். 22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் ' என்றார். 23 இயேசு அவரிடம், ' உன் சகோதரன் உயிர்த்தெழுவான் ' என்றார். 24 மார்த்தா அவரிடம், ' இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும் ' என்றார். 25 இயேசு அவரிடம், ' உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். 26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா? ' என்று கேட்டார். 27 மார்த்தா அவரிடம், ' ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன் ' என்றார். 28 இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், ' போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார் ' என்று காதோடு காதாய்ச் சொன்னார். 29 இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார். 30 இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார். 31 வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள். 32 இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, ' ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் ' என்றார். 33 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, 34 ' அவனை எங்கே வைத்தீர்கள்? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' ஆண்டவரே, வந்து பாரும் ' என்றார்கள். 35 அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். 36 அதைக் கண்ட யூதர்கள், ' பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு! ' என்று பேசிக் கொண்டார்கள். 37 ஆனால் அவர்களுள் சிலர், ' பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா? ' என்று கேட்டனர். 38 இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. 39 ' கல்லை அகற்றி விடுங்கள் ' என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், ' ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே! ' என்றார். 40 இயேசு அவரிடம், ' நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா? ' என்று கேட்டார். 41 அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, ' தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். 42 நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன் ' என்று கூறினார். 43 இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், ' இலாசரே, வெளியே வா ' என்று கூப்பிட்டார். 44 இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. ' கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள் ' என்று இயேசு அவர்களிடம் கூறினார். 45 மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.
(www.arulvakku.com)

மறையுரை

தவக்காலம் என்பது வெறும் தியாகங்களுக்கும், வேதணைகளுக்குமான காலமில்லை. இது புது வாழ்விற்கான வழியாகும். பெரிய வெள்ளி ஒன்றும், சாத்தானுக்கும், வலிகளுக்கும், சாவிற்கும் உள்ள நாளாகாது. அதை ஒரு கதவாக உபயொகித்து, யேசு நம்மை புதிய வாழ்விற்கு அழைக்கிறார்.

துன்பமடைதல் என்பது தவக்கால பயனத்தின் ஒர் அங்கமாகும். (அதனை ஒரு வருடத்தின் எந்த காலங்களிலும் அனுபவிக்கலாம்). மேலும், விரதமிருப்பதும், எளியோருக்கு உதவுவதும், சுய கட்டுபாடு மற்றும் பல தியாகங்களும் தவக்காலத்தில் செய்ய வேண்டியது என்று ஒத்துகொள்ளலாம். ஆனால் இவையெல்லாம், புதிய வாழ்வின் பய்னத்திற்கான கருவிகளாகும்.


நாம் அனுமதித்தால், கடவுள் நமது வேதனைகளை உபயோகித்து, அதனை ஒரு கருவியாக்கி, நம்மில் இரக்கத்தையும், கருணையும், இடைவிடாது முயற்சி செய்தலிலும், சேவை செய்வதிலும், வளர செய்கிறார். நமது தியாகங்கள் மூலம் நாம் நமது கட்டுபாடு, ஒழுங்கு முறையுடன் வாழ கற்றுகொள்கிறோம். இதன் மூலம் நாம் நம்மை தூய்மையாக்கி, புனித வாழ்வில் சிறந்து வாழ விழைகிறோம். ஆனால்,இந்த ப்யணம் ஒன்றும் முடிவல்ல, போகுமிடம் இன்னும் இருக்கிறது..

தவக்காலம் என்பது, மீண்டும் உயிர்த்தெழுதல், புதிய வாழ்வை அடைவது ஆகும். புதுபிக்கப்பட்ட விசுவாசம், பழைய பாவங்களிலிருந்து மீண்ட புதிய வாழ்வு, சமாதானமான உறவுகள், முன்னை விட அதிகமாக கடவுளின் ஆவியில் வாழ்வது.

உஙகளுக்கு பெரிய வெள்ளி முக்கியமான நாளா? அல்லது கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளா? மிகவும் பயமடைய செய்கிற கல்வாரி நாள் மிக முக்கியமானது தான், அந்த பெரிய வெள்ளி ஈஸ்டர் திரு நாளுக்கு தேவையான நாள் தான். ஆனால், நாம் இப்பொது உயிர்த்தெழுந்த, சிலுவையிலிருந்து வெற்றி பெற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கத்தோலிக்கர்கள் அனைவரும் ஈஸ்டர் மக்கள் ஆவர். அப்படியென்றால், யேசுவை நமது வாழ்வில் கடவுளாக ஏற்றுகொண்டால், நமக்கு எதுவும் தவறான நிகழ்ச்சி, விபத்து எதுவும் நடந்து விடாது.

யேசுவே, அவரே மீட்பின் வெற்றி நாயகன் என்று நிருபித்துள்ளார். மேலும் நமது வாழ்வின் வெற்றி நாயகன் என்று வாழ்வின் பிறப்பிலும், இறப்பிலும் வெண்று நமக்கு காட்டியுள்ளார். இப்போது மீண்டும் அதனை நிருபிக்க விரும்புகிறார்- உன் மூலம், மேலும், உன்னை சுற்றி பார்ப்பவர்களுக்கும்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
www.gnm.org