Saturday, June 28, 2008

ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜுன் 29, 2008

Acts 12:1-11
Ps 34:2-9
2 Tim 4:6-8, 17-18
Matt 16:13-19

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 16

13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார். 14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள். 15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார். 16 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ' என்றார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி வாசகங்களில், ஒரு 'நல்லாயனுக்கு' அல்லது 'மேய்ப்பனுக்கு' உள்ள பரிசுத்த தகுதிகளை குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. இந்த தகுதிகள் எல்லாம், ஆற்றல்கள் அனைத்தும், கிறிஸ்துவ தலைமைத்துவத்திற்கு தேவையானவை. இந்த தலைமைத்துவம் குருக்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்கள், ஆசிரியர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் பலர்.

பேதுரு யேசுவை அங்கீகரித்து, அவரை மெசியா என்று அழைத்த பிறகு, அவரை யேசு அர்ச்சித்து, இந்த திருச்சபையின் தலைமை குருத்துவராக நியமித்தார். அவர் வெளிப்படுத்திய மெசியா என்ற அங்கீகாரத்தை மற்றவர்களும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆனையிட்டார். இன்றைய உலகில், நமது பங்கு விசயங்களில், விழாக்களில், தலைமை பொறுப்பை ஏற்று ஈடுபடும்போது, நமக்கும் இந்த மெசியாவை உலக்குக்கு சொல்ல பொறுப்பு இருக்கிறது. யேசு எப்படி என்று நாம் அக்கறையுடன் எடுத்து காட்ட வேண்டும். பங்கு கூட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக இருப்பதும், பாடல் குழுவினருக்கு தலைமை ஏற்று நடத்துவதும், வேதாகம பாடங்கள் நடத்துவதும், மறை மாவட்ட பொறுப்புகளில் இருப்பதும், இந்த நற்செயலுக்குன்டான வாகனங்களாகும். அது நம்மை யேசுவின் மீட்பு செயலுக்கு உகந்தவராக்கும்.

நாம், முதல் வாசகத்தில் பார்ப்பது போல, பவுல், அவருடைய மேய்ப்பு பனியில், யேசுவை போல, அவரும் அதிகம் துன்புற்றார். நாமும் உண்மையாக கடவுளரசை இந்த உலகிற்கு எடுத்து செல்ல ஈடுபட்டால், நாமும் பல துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும். யேசுவின் பரிசுத்த ஆவியில், நாம் ஆற்றலையும், வழிகாட்டுதலையும் பெற்று, நமது வெற்றிக்கு தூணாயிருக்கும். யேசு நம் முன்னே செல்கிறார், பரிசுத்த ஆவி நாம் யாரிடம் கடவுளரசை எடுத்து செல்கிறோமோ, அவர்களது இதயத்தை தயார் படுத்துகிறது.
சாத்தானின் கூண்டுக்குள் செல்லும் ஒருவனை காப்பாற்றாமல், அபாயங்களில் இருக்கும் ஒருவரை காப்பாற்றாதவர்கள் , யேசுவை உன்மையாக பின் செல்லாதவர்கள் ஆவர். ஏனெனில் இது தான், கிறிஸ்துவின் முழு வேலையாக இருந்து கொண்டு இருக்கிறது.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, June 20, 2008

ஜூன் 22, 2008 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூன் 22, 2008 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 12வது ஞாயிறு


Jer 20:10-13
Ps 69:8-10, 14, 17, 33-35
Rom 5:12-15
Mt 10:26-33

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 10

26 ' எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. 27 நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள். 28 ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். 29 காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. 30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. 31 சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள். 32 ' மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். 33 மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்

(thanks to www.arulvakku.com)


நீ இருளில் இருந்த நேரத்தை அல்லது பாவத்தில் விழுந்த நேரத்தை நினைத்து பார். அல்லது கடவுள் உன்னை நிராகரித்ததை அல்லது உனது வேண்டுதல்கள் கிடைக்காத போது, உன்னுடைய பரிசுத்த அன்பளிப்புகள் மூடப்பட்ட நேரங்களை நினைத்து பார். அந்த நேரங்களில் யேசு உன்னிடம் என்ன சொல்கிறார்? உன் காதோரோம் ரகசியமாக என்ன சொல்கிறார். இன்றைய நற்செய்தியில் யேசு இவ்வாறு சொல்கிறார்:" நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். "


பரிசுத்த ஆவியின் மூலமாக, யேசு உங்களை நற்செய்தி உலகெங்கும் கூற உங்களை அழைக்கிறார், உங்களுக்கு ஆசிர்வாதத்தையும், அதிகாரத்தையும் உங்களுக்கு கொடுக்கிறார். உங்கள் மூலமாக இருளில் இருக்கும் மற்றவர்களும் நற்செய்தியை கேட்கவேண்டும் என கடவுள் விரும்புகிறார். நற்செய்தியை மிகவும் தைரியத்துடனும், சத்தமாகவும், முழங்குங்கள், அப்பொழுது தான், அதை கேட்க விரும்புவர்கள், அவர்கள் செய்யும் செயல்களை விட்டு விட்டு உங்கள் மூலம் நற்செய்தியை கேட்க ஆரம்பிப்பர். உங்களது வாழ்வில், யேசு எவ்வாறு உதவினார் என்பதை உலகிற்கு எடுத்து சொல்ல பயப்படாதீர்கள். யேசு எப்படி உங்கள் பாவ வாழ்விலிருந்து மீட்டு, நல் வழிக்கு கொண்டு சென்றார் என்பதை எடுத்து கூறுங்கள்.

நீங்கள் இவ்வள்வு துனிவுடன், யேசுவின் நற்செய்தியை கூறுகிறபொழுது, பலர் உங்களை பரிகாசம் செய்வர். ஜெரமியாவை முதல் வாசகத்தில் செய்வது போல. ஆனால், கடவுள் நம்மோடு இருக்கிறார். "எல்லாம் வல்ல இறைவனாக" எனவே நாம் தைரியத்துடன் இருக்க வேண்டும். மேலும், உங்களை பரிகாசம் செய்தவர்கள், தடுமாறு விழ்வார்கள். யேசு "யாருக்கும் அஞ்ச வேண்டாம்" என்று கூறுகிறார். கடவுள் உங்களை பார்த்து கொள்வார்.

யேசுவை மக்கள் முன்னிலையில் ஏற்றுகொண்டவர்களை, அவரும் ஏற்றுகொள்கிறார். நமது விசுவாசத்திற்காக கேலி செய்யப்பட்டாலோ, பரிகாசம் செய்தாலோ, கடவுள் உங்களை அரவனைத்து ஆறுதல் செய்வார். அவர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார் என்பது முக்கியமே தவிர மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. யேசு சொல்வதை கேளுங்கள். உங்கள் இதயத்தில், அவர் இரகசியமாய் சொல்வதை கேளுங்கள். அவர் உங்களில் உள்ள நல்லதை தான், நல்ல குணத்தைதான் உங்கள் மதிப்பிடாக வைத்திருக்கிறார்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, June 13, 2008

ஜூன் 15 2008 நற்செய்தி, மறையுரை

ஜூன் 15 2008
ஆண்டின் 11 வது ஞாயிறு
நற்செய்தி, மறையுரை

இன்றைய நற்செய்தியில், யேசு மக்களின் தேவையை அறிந்து எவ்வாறு அவர்கள் மீது பரிவு கொண்டார் என்பதை காட்டுகிறது. அவருடைய இருதயம் அவர்களுக்காக வலித்தது. ஏனெனில், அவர்கள் அனைவரும் ஒதுக்கப்பட்டோர், ப்ரச்னைக்குள்ளானவர்கள் என்று அவர் அறிந்திருந்தார். அவர் அதற்கு என்ன செய்தார்? அவர்களுக்கு மேய்ப்பனாக இருப்பதற்கு பதிலாக, அவர் சீடர்களை நோக்கி எல்லாருக்கும் மேய்ப்பனாக இருங்கள் என்று கட்டளையிடுகிறார்.

இன்றைய உலகில், பலர் ப்ரச்னைக்குள்ளாகும்போதும், ஒதுக்கபடும்போது, துன்பத்திற்கு உள்ளாகும் போதும் , நாம் என்ன நினைக்கிறோம், அவர்களுக்கு சரியான காப்பாளர் இல்லை, அல்லது உதவிக்கு ஆள் இல்லை. பல கோவில்களில், குருவானவர் இல்லாமல் இருக்கிற போது, மற்றும், பங்கு சேவைகளுக்கு தேவையான ஆட்கள் இல்லாத போதும், நாம் யேசு கூறுவது, அதிக மேய்ப்பாளர்களை அனுப்புங்க்ள என்று யேசுவை நோக்கி கேட்கிறோம். யேசு நமது தோள் மேல் தட்டி, "நீயே அந்த வேலையை செய்" என்கிறார்.

நாம் குருகுலத்திற்கு அதிக பேர் வரவேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறோம். மிகவும் குறைவானவர்களே செமினரி பள்ளிக்கு செல்கிறார்கள். யேசு "இதற்காக ஜெபம் செய்து கொண்டே இருக்காதீர்கள், நீங்களும் பல வேலைகள் செய்ய வேண்டியுள்ளது, எழுந்து சென்று உங்கள் வேலையை ஆரம்பியுங்கள் " என்று கூறுகிறார்.

நிறைய பேர் கடவுள் அவர்கள் வேண்டுதலை கேட்கவில்லை, அவர்கள் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கவில்லை என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள். யேசு அவர்கள் விண்ணப்பத்திற்கு நம் மூலமாக பதிலளிக்கிறார். நம்மில் ஒரு சிலர் தான் யேசுவுக்கு நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து, அவரின் செயலுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். அநியாயங்களுக்கும், மற்ற தீய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்க தேவையான கிறிஸ்தவர்கள் நம்மிடையே இல்லை. அதனால், பலர் துன்பங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடவுள் இதனை பற்றி கவலை கொள்ளாதவ் தோற்றமளிக்கிறார்.

யேசு அந்த முழு நாட்டிற்கும் சேவை செய்பவராக இருந்தார். சீடர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர். அவர் மூன்று வருடம் மிக அதிகமாகவே அறுவடை செய்தார். குரு மேய்ப்பாளருக்கென்றே சில கடமைகள் இருக்கும், அவர் அதனை செய்யும்போது, அதனை தவர மற்ற சேவைகள்/செயல்கள் அனைத்து நம்மால் செய்ய முடியும்,. குருவானவர் உதவியுடன், நாம் அந்த செயல்கள் செய்யலாம். இதன் மூலம், எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு செய்தால், இந்த திருச்சபை முழுமையானதாகவும், பரிசுத்தமானதாகவும் இருக்கும், மேலும், இன்னும் சிறப்பாக மணமாற்றத்தை செய்ய முடியும்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, June 6, 2008

ஜூன் 8, 2008 நற்செய்தி , மறையுரை:

ஜூன் 8, 2008 நற்செய்தி , மறையுரை:
ஆண்டின் 10 வது ஞாயிறு


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 9

9 இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ' என்னைப் பின்பற்றி வா ' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். 10 பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். 11 இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், ' உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்? ' என்று கேட்டனர். 12 இயேசு இதைக் கேட்டவுடன், ' நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 13 ' பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் ' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் ' என்றார்.

(www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், நாம் யேசுவை போல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் குறிப்பிட்டு உள்ளது. யாரெல்லாம் இந்த சமுகத்தில் ஒதுக்கபடுகிறார்களோ, அவர்களை நாம் எப்படி நெருங்கி, அவர்கள் கூடவே இருந்து அவர்களுக்கு உதவியாக இருக்க முடியும். உங்கள் பங்கில், யாரெல்லாம் ஒதுக்கபட்டவர்கள், அல்லது கண்டுகொள்ளபடாதவர்கள்? யாரெல்லாம், எந்த ஒரு பங்கு நிகழ்ச்சிகளிலும், கலந்து கொள்ளாதவர்கள், அவர்கள் அழைக்கபடவில்லையா? உங்கள் வேலையிடத்தில், உங்களை அவர்களுக்காக வேண்டிகொள்ள சொல்வார்கள், ஆனால் அவர்கள் கோவிலுக்கு செல்வதில்லை. அவர்கள் அதற்கு தகுதி ஆனவர்கள் இல்லை என தள்ளப்பட்டவர்களா? யாரெல்லாம், உங்கள் பங்கில், எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கபடுவதில்லை? ஏனெனில், அவர்கள் வித்தியாசமானவர்கள், அதிக பாவம் செய்பவர்களாய் இருக்கிறார்களா? அல்லது வேரு காரணமா?

இவர்கள் எல்லாம் நம்மை சுற்றி இருக்கும் மத்தேயுகள். யேசு கூப்பிட்டவுடன், மத்தேயு அவர் பின் சென்றார். யாரும் அவரை அழைக்காமல் இருந்தால், யேசுவின் சீடராய அவர் ஆகியிருக்க முடியுமா? முடியாது. ஏனெனில், வரி வசூலிப்பாவர் எவராக இருந்தாலும், அவரை கழுவு நீருக்கு சமமாக யூத சமூகத்தில் பாவிப்பார்கள்.

அதிகமான நேரங்களில், நமக்கு தெரிந்தவர்கள், அவர்கள் திருப்பலிக்கு வராதவர்கள், அல்லது பங்கு நிகழ்ச்சிகளுக்கு வராதவர்கள், எல்லாம், அவர்கள் இந்த குழுவிற்கு உகந்தவர்கள் அல்ல என்று நினைப்பவர்கள், மேலும், அவர்களை யாரும் அழைக்கவில்லை. மேலும், நாம் பல தடவை அவர்களுக்கு அழைப்பு விடுத்தும், அவர்களை எல்லோரும் ஏற்று கொள்வார்கள் என்று நம்ப வைத்தாலும், நமது பல முயற்சிகளிலும், அவர்கள் ஏற்று கொள்ள வில்லையெனில், அவர்கள் லாயக்கில்லாதவர்கள் என்று நாம் தவறாக தீர்ப்பிட கூடாது.

மணமாற்றுதல் என்பது, நாம் அவர்களோடு சேர்ந்து நடந்து, மிகவும் கருணையுடன் நல்ல நட்பை உண்டாக்கி கொண்டால் தான் அது பயனுள்ளதாக கூடும். இதனால், நாம் அவர்களோடு அடிக்கடி சேர்ந்து பல ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும் என்றில்லை. ஆனால், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மத்தேயும் யேசுவின் பன்ன்ரண்டு சீடர்களுல் ஒருவராகி, ஆரம்ப கால திருச்சபை வளர மிகவும் உறுதுணையாக இருந்தார். நமது அழைப்புகள், நாம் கனவில் கூட நிணைக்க முடியாத விழைவுகள் ஏற்படுத்து என்பதை நினைவில் கொள்.!

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm