Saturday, December 27, 2008

டிசம்பர் 28, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

டிசம்பர் 28, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருகுடும்ப விழா (யேசு, மரியாள், சூசையப்பர்)
Sirach 3:2-6, 12-14 or Gen 15:1-6; 21:1-3
Ps 128:1-5 or Ps 105:1-6, 8-9
Col 3:12-21 or Heb 11:8, 11-12, 17-19
Luke 2:22-40


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 2
22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.23 ஏனெனில், ' ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.25 அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.26 ' ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை ' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,29 ' ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.30 ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை ' என்றார்.33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, ' இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார்.36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
(thanks to www.arulvakku.com)


போப் இரண்டாம் ஜான்பால், ஆயர்களுக்கு எழுதிய திரு நூலில் ("Rosarium Virginis Mariae) , (20 வது பத்தியில்), இன்றைய நற்செய்தியை குறிப்பிட்டு இவ்வாறு எழுதுகிறார். "ஜெபமாலையின் 5வது சந்தோச தேவ ரகசியங்கள் "யேசு கோவிலில் காணமல் போய் கண்டுபிடிக்கப்பட்டார்" மூலம், சந்தோசமும், அங்கு நடந்த நிகழ்வுகளும் கலந்தே இருந்தன. அங்கே, யேசு தெய்வ உருவாக, தெய்வ ஞானத்துடனும், பல கேள்விகளுக்கு பதிலும் எடுத்துரைத்து, அவரே பல கேள்விகளையும் கேட்டார். அவரே ஒரு ஆசிரியராக அனைவருக்கும் தோன்றினார். யேசுதான் கடவுளின் மகன் என்ற தேவ ரகசியத்தை இங்கே வெளிப்படுத்துவது, கடவுளின் நற்செய்தி மூலமாக வெளிப்படுத்தபடுகிறது. அந்த நற்செய்தியில், எல்லா நெருங்கிய உறவுகளும், கடவுளரசின் தேவைகளுக்காக சவால் விடப்படுகின்றன. மரியாளும், சூசையப்பரும் பயத்துடனும், கவலையுடனும் இருந்தனர். யேசுவின் வார்த்தைகளை "புரிந்து கொள்ளவில்லை" " என்ரு போப் கூறுகிறார்.

நாமும் தான், அடிக்கடி யேசுவின் வார்த்தைகளை புரிந்து கொள்வதில் தோற்றுவிடுகிறோம். அவருடைய வாசகங்கள் நம்மை மிகபும் கடினமான வாழ்க்கையை ஏற்றுகொள்ள வேண்டும் என நமக்கு சவால் விடுகிறது. அந்த வாழ்வு என்னவெனில், நமது எதிரிகளுக்கே நல்லது செய்வது, நமது இன்னொரு கன்னத்தையும் அவர்களுக்கு கான்பிப்பது போல. உண்மைக்காக நாம் உறுதியுடன் வாழ்வது, மேலும் நிலையாக கடவுளின் கோட்படுகளுடன் அவற்றிர்காக நல்ல முறையில் வாழ்வது.

நமக்கு சரிப்பட்டு வராத, மனதிற்கு ஒப்பாத காரியங்களினால் தான் கிறிஸ்துவை போல வாழ வேண்டும் என்றால், நமது உலக வாழ்விற்காக நாமே நம்மை சமாதானம் செய்து கொண்டு, விலகியே நிற்கிறோம். ஆனால், கடவுளரசின், உண்மையான தேவைகளை புரிந்து கொண்டால், அதனுடைய பயன்களை அறிந்து, கடவுளரசிற்கு கீழ்படிவோம்.

சரியாக புரிந்து கொள்ளவில்லையென்றாலும், நாம் யேசுவின் வார்த்தைகளை அப்படியே நம்பி , அவை யாவுமே, சரியானதென்றும், உண்மையானதென்றும் விசுவாசம் கொள்ளவேண்டும். அன்னை மரியாளும், சூசையப்பரும் அவர்கள் மனதில் ஆழமாக யோசித்தது போன்று, அவர்கள் சரியாக புரிந்து கொள்ளாவிட்டாலும், யேசு நம்மிடம் என்ன கேட்ட்கிறாரோ அதை செய்தது போல நாமும் செய்ய வேண்டும்.


இவ்வாறு விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் வாழ்ந்தால், கிறிஸ்துவிற்காக முழுதுமாய் வாழும் வாழ்வினால் உண்டாகும் பயனை, சந்தோசத்தை நம்மல் உணர முடியும்.

இன்றைய திருகுடும்ப திருவிழாவில், மரியாளும், சூசையப்பரும் நமக்கு யேசுவை புரிந்து கொள்ளவும், அவரின் வார்த்தைகளை கேட்கவும் உதவ வேண்டும் என நாம் வேண்டிகொள்வோம். நமக்கு சோதனைகளும், ப்ரச்னைகளும் ஏற்படும்போது, அவரின் பார்வையிலிறிந்து விலகி நிற்கும்போது, மரியாளும், சூசையப்பரும் நமக்கு உதவ வேண்டும் என்று ஜெபம் செய்வோம். யேசு எப்போதுமே நம்மிடையே இருக்கின்றார் என்பதை தெரிந்து கொள்ள நாம் கற்க வேன்டும். யேசுதான் நமக்கு உதவி வருகிறார், வழி காட்டுகிறார், கருனையுடன் அன்பு கூர்கிறார், நமது சவால்களின் போது நமக்கு உதவி வருகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, December 19, 2008

21, டிசம்பர், 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

21, டிசம்பர், 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
திருவருகை கால 4வது ஞாயிறு

2 Sam 7:1-5, 8b-12, 14a, 16
Ps 89:2-5, 27, 29
Rom 16:25-27
Luke 1:26-38

அதிகாரம் 1
26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்.'அருள் நிறைந்தவரே வாழ்க!' என்று வுல்காத்தா என்னும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் உள்ளது. ------ 'பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்' என்னும் சொற்றொடரும் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது. 29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.30 வானதூதர் அவரைப் பார்த்து, ' மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது ' என்றார்.34 அதற்கு மரியா வானதூதரிடம், ' இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே! ' என்றார்.35 வானதூதர் அவரிடம், ' தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை ' என்றார்.38 பின்னர் மரியா, ' நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் ' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், கன்னி மரியாள் யேசுவை கர்ப்பத்தில் ஏற்று கொள்வதற்கு முன்பே, அவரை கிறிஸ்துவின் ஒளி எப்படி பாதித்தது என்று குறிப்பிடுகிறது.

முப்பது வருடங்களுக்கு பிறகு, யேசு இந்த உலகின் இருளுக்குள், வீசும் ஒளியாக உருவானார். இருந்தாலும், யேசு தான் கடவுள்; அவர் எப்போதுமே இருக்கிறார். அவர் உருவாக்கப்பட்டவர் அல்ல. கடவுளின் ஒளியாவார். அவரது ஒளி, கன்னி மரியாளுக்கு கருவாய் உருவானதிலிருந்தே, ஒரு விளைவை உண்டாக்கி கொண்டிருந்தது.

கடவுளின் மகன் மனித உருவாக இந்த உலகிற்கு வருவதற்கு, அவரது ஆவி மரியாளின் முழு உடலையும் ஆவியால குளிப்பாட்டியது. கடவுளின் தூய பிரகாச ஒளி, அன்னை மரியாளை குளிப்பாட்டியது. அதனால் தான், அன்னை மரியாள், எந்த ஒரு ஆனுடனும் தொடர்பில்லாமலே, அவர்கள் பார்க்காமலேயே, கன்னி மரியாள், மெசியாவை தன் வயிற்றுக்குள் கர்ப்பமாக தாங்கினாள். இந்த ஒளியின் மூலம், கடவுள் தான் இதற்காக நம்மிடம் கேட்டார், கடவுள் தான் இதை செய்கிறார் என்று நம்பினாள்.

கன்னி மரியாளுக்கு அதுவே போதுமானது.

கிறிஸ்துவின் ஒளியை முழுவதுமாக இந்த உலகிற்கு கொன்டு செல்ல, கடவுள் நம்மையெல்லாம் அழைக்கிறார். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? தெய்வீக கடவுளின் அழைப்பை எந்த அளவிற்கு நீங்கள் கடமைபட்டு செய்கிறீர்கள்? கடவுள் நம்மிடம் எந்த செயல்லை செய்ய சொல்கிறாரோ? அந்த செயலுக்கு தேவையான ஆற்றலை, கடவுள் நமக்கு தருகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடவுளுக்கு அவர் என்ன செய்கிறார் என்பதை அறிவார், எப்போது உங்களை அவரின் கடவுளர்சிற்காக செய்ய அழைக்கிறார் என்பது அவருக்கு தெரியும். அவர் எப்போதுமே நம்ப தகுந்தவர் மேலும், அவரை சார்ந்து இருக்கலாம். எந்த ஒரு பயமும் தேவையில்லை.


கடவுள் செய்யும் ஒவ்வொரு செயலுமே நல்ல செயல்களே ஆகும். நம்மை ஈடுபடுத்தும், கடவுளின் திட்டம், சிலுவையை சுமப்பதாக இருந்தாலும், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் நல்லவையாகவே இருக்கும். நாம் கிறிஸ்துவை பின் சென்றால், மிகவும் சீக்கிரமாகவோ, அல்லது கொஞ்சம் தாமதமாகவோ, நாம் யேசுவோடு சிலுவையில் தொங்குவோம். ஏனெனில், அதுவே மிகவும் மேலான முடிவாகும். அதுவே நல்ல முறையில் செயல்படுத்த கூடிய, வெற்றியை தேடிதருகிற செயலாகும். அதன் மூலம், பலரின் வாழ்வை மாற்றியமைக்க முடியும்.

இதையெல்லாம் நினைவில் வைத்து கொண்டு, கடவுள் அவரது அரசிற்காக, நம்மை அழைக்கும் போது, நமது பதில் "ஆம்" என்று தானே இருக்கும்?
ஆனால், அது சரியாக நடப்பதில்லை? கண்டிப்பாக, நாம் அவரோடு சேர்ந்து ஈடுபட ஆவலாயிருக்கிறோம், அவரின் ஆணைக்கு நாம் "ஆம்" என்கிறோம். நாம் அவர் என்ன செய்ய சொல்கிறார் என்று தெரியாவிட்டாலும், கடவுள் இதனை செய்பவர் என்று இருக்கிறோம்.

அடிக்கடி, கடவுள் நம் மூலம் செய்ய நினைக்கும் திட்டத்தை, அவரால் நம் மூலம் செய்ய முடியாது என்று நினைக்கிறோம். ஏனெனில், நாம் வலிமையில்லாதவர்கள் என்றும், பாவம் செய்பவர்கள் , முறையான தகுதி உள்ளவர் இல்லை என்றும் நமக்கு தெரியும். உங்கள் எண்ணங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாதேர்கள். கடவுளை நம்புங்கள்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Wednesday, December 10, 2008

14, டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி

14, டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி
திருவருகை கால 3வது ஞாயிறு
Isaiah 61:1-2a, 10-11
Luke 1:46-50, 53-54 (with Isaiah 61:10b)
1 Thessalonians 5:16-24
John 1:6-8, 19-28


யோவான் (அருளப்பர்) நற்செய்தி
'இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை' என்பதை 'இருள் அதனைப் புரிந்து கொள்ளவில்லை' எனவும் மொழிபெயர்க்கலாம். 6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான்.7 அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.8 அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, ' நீர் யார்? ' என்று கேட்டபோது அவர், ' நான் மெசியா அல்ல ' என்று அறிவித்தார்.20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.21 அப்போது, ' அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? ' என்று அவர்கள் கேட்க, அவர், ' நானல்ல ' என்றார். ' நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? ' என்று கேட்டபோதும், அவர், ' இல்லை ' என்று மறுமொழி கூறினார்.22 அவர்கள் அவரிடம், ' நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டார்கள்.23 அதற்கு அவர், ' ″ ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது ″ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே ' என்றார்.24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்25 அவரிடம், ' நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்? ' என்று கேட்டார்கள்.26 யோவான் அவர்களிடம், ' நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;27 அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை ' என்றார்.28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, யோவான், "ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்" என்று கூறுகிறது. யேசு தான் அந்த ஒளி, அவருடைய ஆவி, நமக்கு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது. அதன் மூலம், நாம் பாவங்களிலிருந்து விடுபட்டு, பரலோகத்திற்கு யேசுவை பின் செல்ல வழி வகுக்கும். ஆனால், யோவானால் கொடுக்கப்பட்ட சான்று தான் என்ன? அவர் ஒளியை குறித்து எவ்வாறு சான்று பகர்ந்தார்?.

யோவானின் சான்று: "அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.9 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.10 ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.11 அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்' என்னும் சொற்றொடரை 'அவர் தமக்குரிய இடத்திற்கு வந்தார்' எனவும் மொழிபெயர்க்கலாம். 12 அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.13 அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்"

யேசுவை பார்க்க முடியாத ஒரு கனத்தை நினைத்து பாருங்கள். உங்கள் கண்களை அவர் பக்கம் திரும்ப வைத்தது எது? யாருடைய குரல், யேசுவின் பக்கம் திரும்ப வைத்தது? முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல, மற்றவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய நேரம் இது, நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதயம் நொறுங்குண்டவர்களுக்கு ஆறுதலாயும், குணப்படுத்த வேண்டும். பாவங்களில் வீழ்ந்தவர்களுக்கு, விடுதலை பெற்று தரவேண்டும். மிகவும் நெருங்கிய நட்புடன் கடவுளிடம், எப்படி அவர் ஆசிர்வாதத்தை பெறுவது என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

யோவானை போல, நாமும் சான்று பகர வேண்டும். அவருக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு போல நாமும் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த உலகின் சத்தத்தை விட, நாம் மிகவும் சத்தமாக இந்த உலகில் குரல் கொடுக்க வேண்டும். நிறைய பேர் குழப்பங்களும், நம்பிக்கையின்மையாலும், வலியினாலும், மனசஞ்சலத்தாலும், அவர்கள் ஆன்மா இறையரசை விட்டு விலகி நிற்கிறது. நாம் அவர்கள் தேவையை அப்படியே ஒதுக்கி விடலமா? அவர்களுக்கு உண்மையை தெரிவிக்காமல் அமைதியாக இருந்து விடுவது அன்புக்குரிய செயலாகுமா? அப்படி இருக்க கூடாது. ஒரு நால், யேசுவிடம் நாம் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். நமது ஞான்ஸ்நானத்தின் மூலம், நாம் அவருக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற அழைப்பை ஏன் நிராகரித்தோம் என்று அவருக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். அந்த அழைப்ப ஏற்றிருந்தால், சிலருக்கு யேசுவை கண்டு உணர, உதவியாக இருந்திருக்கும்.

உன்னிடத்தில் எது மாதிரியான குரல் இருக்கிறது? ஏனெனில், நமக்கு கிறிஸ்து இருக்கிறார். நம்முடைய சொந்த வாழ்வு தான் நம் குரல் ஆகும். நாம் எப்படி சோதனையை கையாளுகிறோம் , எப்படி யேசுவின் மேல் நமது விசுவாசத்தை காட்டுகிறோம் என்பதே நமது குரலாக, யாரெல்லாம், சிக்கலில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு கேட்க கூடிய குரலாக இருக்கும். நம்மில் அதிக அமைதியும், அதிக அன்பையும் நாம் கொடுத்தோமானால், நமது அழுகை மிகவும் சத்தமாக இருக்கும்.



நமது குரல் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாவிட்டாலும், நாம் இந்த ஒளியில், எப்படி வாழ்கிறோமோ அதுவே ஒளியின் உண்மையை பேசுவதாகும். நாம் எப்படி உண்மையாய் வாழ்கிறோம், அதுவே மிகவும் சத்தமான உண்மையின் குரலாக இருக்கும்.


நாம் கொடுக்கும் செய்தியின் மூலம், அவர்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பது அவர்களுடைய விருப்பம். ஆனால், நாம் பேச வேண்டியதை பேச வேன்டும். இதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கபடுகிறது.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, December 5, 2008

7 டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

7 டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால இரண்டாவது ஞாயிறு
Isaiah 40:1-5, 9-11
Ps 85:9-14
2 Peter 3:8-14
Mark 1:1-8
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 1
1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: 2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, கடவுளுக்காக தயாரகுங்கள் என்று கூறுகிறது. கடவுள் நமக்கு என்ன கொடுப்பதாக இருந்தாலும், நமக்காக என்ன செய்வதாக இருந்தாலும், நம்மிடம் என்ன கேட்பதாக இருந்தாலும், - நாம் நேரான வழியில் நடந்து, பரிசுத்த பாதையில் நடக்க வேண்டும், மற்றும், பாவச் செயல்களை தவிர்த்து விட வேண்டும்.

பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. உங்களது வாழ்க்கையில் எது இல்லாமல் இருக்கிறது! எந்த பாவங்கள், உங்களுடைய வாழ்க்கயை வறுமையாக்கியது, மாறாக உங்கள் பாவங்கள் இல்லாமல் இருந்தால், அது உங்களுக்கு நல்ல கனியை கொடுத்திருக்கும்?


மோட்சத்திற்கு செல்லும் பாதையில் எந்த பகுதியில் உங்களுக்கு மிகவும் கடினமாயிருக்கிறது? உங்களில் தடையாக இருக்கும் உங்கள் பாவங்களை உங்கள் கண் முன் கொண்டுவாருஙள். அல்லது உங்கள் பாதையில் உள்ள தடைகளை ஞாபகபடுத்திகொள்ளுங்கள்.

ஆண்டவருக்காக வழியை ஆயத்தபடுத்துங்கள். உங்கள் பாவங்களால் உண்டான, வீணான நிலத்தில், கடவுளுக்காக, விரைவு சாலையை உண்டாக்குஙல். பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தில் கலந்து கொண்டு, உங்கள் இருதயத்தில் உள்ள பாதையை அகலமாக்குங்கள், அதனால், யேசு அங்கு வர மிகவும் எளிதாயிருக்கும். அந்த அகல பாதையில், யேசு மிக விரைவாகவும், மகிமயோடும் வருவார்.

எல்லா மனிதர்களுமே புல்லை போல வலிமையற்றவர்கள் ஆவர். நம் புகழ், வளம் எல்லாமெ ஒரு பூவை போல வாடி விடும். கடவுளுடைய வார்த்தைகள் மட்டும் தான், எக்காலமும் நிமிர்ந்து நிற்கும்.


உனக்கு இருக்கும் தொந்தரவுகளையும், போராட்டங்களையும் உங்கள் மனதின் முன் நிறுத்துங்கள். இங்கே தான், நீங்கள் பாவத்திற்குள் காயப்படுகிறீர்கள். பரிசுத்த ஆவியின் உதவியுடன், இந்த கஷ்டங்களெல்லாம், நித்திய வாழ்விற்கு வாய்ப்பாக பயன்படுத்துங்கள். அந்த கஷ்டங்களெல்லாம், அவ்வளவு மோசமானவையா? நிரந்தரமாக இருக்க கூடியதா? கடவுள் அந்த கஷ்டங்களிடமிருந்து (சிலுவையிலிருந்து) உங்களை தூக்கி நிறுத்துவார்.

உங்கள் வாழ்க்கையில் நன்றாக போய்கொண்டிருக்கும், நல்ல விசயங்களை உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள். உங்களுடைய எந்த செயல்கள், நன்றாகவும், நல்ல பொருட்களை ஈட்டுவதாகவும், உள்ளன? அவைகளையும், நித்திய வாழ்விற்கான நல்ல வாய்ப்பாக எடுத்து கொள்ளுங்கள். அவைகள் எல்லாம், புல்களை போல சில காலம் தான் வளமாக இருக்கும? அல்லது, இன்னும் 100 வருடங்களுக்கு, நல்ல விளைவுகளை பெற்று தருமா?


அந்த நல்ல செயல்களின், பல மடங்காக பெருகி, இன்னும் 1000 வருடங்களில் அதன் வளம் என்னவாக இருக்கும்?

கடவுள் உங்களுக்கு நல்ல திறமைகளையும், அதனை உபயோகபடுத்தி, அவரின் இறையரசை பரப்ப உங்களை அழைக்கிறார். நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களா? அப்படியெனில், இப்போது, பாவ சங்கீர்த்தன அருட்சாதனத்தில் பங்கு கொண்டு, உங்களை கடவுளின் வருகைக்காக தயார் படுத்தி கொள்ளுங்கள். அவர் உங்கள் மூலம், நித்திய வாழ்விற்கான வழியை இந்த பூமிக்கு கொடுக்க விரும்புகிறார்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm