Saturday, May 30, 2009

மே, 31 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே, 31 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பெந்தகோஸ்தே ஞாயிறு (பரிசுத்த ஆவி)

Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3-7, 12-13 or Gal 5:16-25
John 20:19-23 or John 15:26-27; 16:12-15

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 15
26 தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்.27 நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 16
12 ' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.

(thanks to www.arulvakku.com)

கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவியாக நமக்கு தாராளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம், நாம் பரிசுத்தமாக இருந்து, கிறிஸ்து தொடங்கி வைத்த இறைசேவையை நாம் தொடரலாம். நாம் யேசுவை போல இருக்க முடியாது, ஆனால், அவருடைய ஆவி நம்மில் ஆக்கபூர்வமாக இருந்தால், நாம் கிறிஸ்துவின் பரிசுத்தத்தை கொண்டிருக்கிறோம். அவருடைய விசுவாசம், அவரின் இயற்கையின் அளவை தாண்டிய அன்பு, அமைதி, நம்பிக்கை மற்றும், சக்தி வாய்ந்த ஆற்றல், மற்றும் பல் நாம் யேசுவில் பார்க்கும் அனைத்தும் நாம் கொண்டிருக்கிறோம்.
உங்கள் ஞான்ஸ்நானத்தில் பரிசுத்த ஆவியை பெற்று கொண்டீர்கள். உறுதிபூசுதலில், பரிசுத்த ஆவி நம்மில் இருக்கிறார் என்பதனையும், ஆவியுனுடைய ஆற்றல் நம்மில் பெருகவும் செய்கிறது. பெந்தகோஸ்தோவிலிருந்து, கடவுள் அவருடைய இறையசிற்காக சேவை செய்யும் அனைவரையும், பரிசுத்த ஆவியின் மூலம் மாற்றி, அவருடைய இறையரசை இங்கே நிலை கொள்ள செய்கிறார். தாராளமாக கடவுள் நமக்கு ஆவியானவரை கொடுத்து, அவர் நம்மிடம் என்ன செய்ய சொல்கிறாரோ அதில் வெற்றியடைய நமக்கு உதவியாக இருக்கிறார். ஆனால் எந்த வழிமுறையில், எந்த அளவிற்கு கடவுளின் பரிசுத்தத்தையும், ஆற்றலையும் நம்மிடமிருந்து வெளிப்படுத்துகிறோம் என்பது நம்மை பொருத்து இருக்கிறது.

பரிசுத்த ஆவிக்கான ஜெபத்தில் என்னோடு இனைந்து கொள்ளுங்கள்:

அன்பு யேசுவே, உங்களின் பரிசுத்த ஆவியின் முழுமையை எங்களில் கொண்டுவாரும். உமது பரிசுத்த ஆற்றலில் வாழ எமக்கு உதவியருளும். உங்களின் உண்மையை நன்கு புரிந்து கொள்ள எங்கள் என்னத்தை திறக்க உதவும். எங்கள் இதயத்தை திறந்து,உங்களை நாங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் முன்பே பரிசுத்த ஆவியை நாங்கள் ஏற்றுகொள்ள உதவும்.
இறையரசை, மற்ற எல்லாவிசயங்களை விட, அதிகமாக அறிந்து கொள்ள உதவும். கடவுளரசில் சேராத விசயங்கள் என்னோடு ஒட்டிகொண்டுள்ளன என்ன என்பதை அறிந்து கொள்ள உதவியருளும். மேலும் அதனை துடைத்தொழிக்க எனக்கு மன உறுதியையும், சக்தியையும் கொடு. எனக்கு நீ மட்டுமே வேன்டும்.

பரிசுத்த ஆவியே, எனது பாவ நிலையை ஏற்று, அதனால் ஏற்பட்ட இழப்பிற்காக, உண்மையாக வருத்தப்படவும், அதனிலிருந்து மீண்டு வர எனக்கு உதவியருளும். எனது பாவமன்னிப்பிற்காக நான் வருந்தும்போது ஆறுதலாயிருந்தருளும், மேலும், எனது புதிய வாழ்வில், மகிழ்வோடு உன்னில் வளர உனது ஆவியை கொடுத்தருளும். இந்த குணப்படுத்தும் இரக்கத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள எனக்கு உதவும்.

யேசு இவ்வாறு கட்டளையிட்டார், "உலகம் முழுதும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்", எனது அன்பளிப்பையும், திறமையையும் உபயோகித்து, இவ்வுலகில் இறையரசிற்காக, முயற்சி மேற்கொள்ளுங்கள். நான் எனக்குள்ளே ஓர் எதிர்பார்ப்பு வைத்துள்ளேன், நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று எனக்குள்ளே ஒரு வரையரை உண்டு. இப்போது எனது எதிர்பார்ப்புகள், என்னுடைய இயலாமை, எனது விருப்பங்கள், என்னுடைய நோக்கங்கள் அனைத்தையும், உம்மிடம் ஒப்படைக்கிறேன் . உமக்கு உபயோகமாக இருக்க விரும்புகிறேன். நீ எங்கே என்னை அழைத்து செல்கிறாயோ அங்கே நான் செல்ல ஆசைபடுகிறேன். பரிசுத்த ஆவியே, கிறிஸ்துவின் பரிசுத்த , வெற்றியின் அன்பை இந்த உலகில் பரப்ப, என்னை தயார் பன்னியருளும்.
வா!, என்னை புதுப்பித்தருளும், பரிசுத்த ஆவியே, ஆமென்!

© 2009 by Terry A. Modica

Friday, May 22, 2009

மே 24, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 24, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா காலத்தின் 7வது ஞாயிறு

Acts 1:15-17, 20-26
Ps 103:1-2, 11-12, 19-20
1 John 4:11-16
John 17:11b-19

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 17
11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.12 நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.13 ' இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன்.14 உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது.15 அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.16 நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.17 உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.19 அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன். '
(thanks to www.arulvakku.com)

விசுவாசத்தில் ஒன்றாய் இருக்கும் சகோதர சகோதரிகளிடம் நாம் இணைந்து ஒன்றாய் இருக்க வைப்பது எது? அது என்ன என்றால், நமது ஒரே கடவுளை, யேசு கிறிஸ்துவை நாம் எல்லாம் அவர் பின்னால் அணி வகுத்து செல்கிறோம்.

நமக்குள்ளே பல வேறுபாடுகள் இருக்கலாம், இருந்தும், நம்மிடையே ஒற்றுமை உள்ளது. கடவுளுக்கு சேவை செய்யும் நமது பங்கில், பல குழுக்களில், நம்மிடையே பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், இருந்தும் நம்மிடையே ஒற்றுமை உள்ளது. ப்ராட்டஸ்டன்ட் (கத்தோலிக்கர் அல்லாத திருச்சபை) நம்பிக்கைகளை நாம் ஏற்றுகொள்ளாமல் போகலாம், ஆனால், நம்மிடையே ஒற்றுமை உள்ளது. நமக்குள்ளே கிறிஸ்துவின் ஒற்றுமை உள்ளது.
இன்றைய நற்செய்தியில், யேசு நமது ஒற்றுமைக்காக, இறைவனிடம் வேண்டுகிறார். நாம் அவரது வேண்டுதலுக்கு ஏற்றோர் போல நடந்து கொள்கிறோமா? அல்லது அதற்கு எதிராக நடந்து கொள்கிறோமா?
கடவுளிடம் ஒன்றாய் இருப்பது, நம்மிடையே உள்ள வேற்றுமைகளை களைந்து அதற்கு பிறகு ஒன்றாய் இருக்க வேண்டும் அர்த்தமில்லை. கிறிஸ்துவை நாமெல்லாம் வழிபடுகிறோம் என்ற ஒரே காரணத்தினால் நாமெல்லாம் ஒரு இடத்தில் இருக்கிறோம் என்பதை ஏற்று கொள்ள வேண்டும். பல வேறான வழிகளில் நாம் கிறிஸ்துவை வழிபட்டாலும், நாமெல்லாம் ஒன்றாய் இருக்கிறோம். ஒன்றாய் இருக்க வேன்டும் என்ற நமது எண்ணமே, நம்மிடையே உள்ள ஓர் அங்கீகாரமாகும். நாமெல்லாம், ஒரே உடலின் பல பாகங்கள் என்பதை ஏற்றுகொள்வதே, ஒருவொருக்கு ஒருவரின் உதவி தேவை என்பதை அறிந்து எல்லோரும் ஒன்றாய் அவரவர் கடமைகள் செய்ய உதவும்.

இறைவன் யேசுவில், நாமெல்லாம் ஒன்றாய் இருப்பது, இந்த உலகத்தில் உள்ள மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறோம் என்ற அர்த்தமாகும். நமது ஒற்றுமை, கடவுளரசிடமிருந்து வந்தது. இந்த உலகின் இருட்டிலிருந்தோ, சாத்தானிடமோ இருந்து வந்தது இல்லை. மேலும் இந்த ஒற்றுமை, நாம் நம்முடைய பாவங்களை களைந்தும், நமது ஒன்றான உடலின் (அனைவரின்) பாவங்களை தூக்கி எறிந்தால், இந்த ஒற்றுமை மேலும் பலப்படும்.


யேசு கடவுளிடம் இவ்வாறு சொல்கிறார் " உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது."

யேசுவை அன்பு செய்கிற, அவரை பின் செல்பவர்கள், அவருக்கு சேவை செய்கிறவர்கள், அவர்கள் எந்த பின் புலத்தை உடைய்வர்களாக இருந்தாலும், எந்த இனத்தவர் ஆனாலும், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். பரிசுத்த குடும்பம். சிலுவையின் ஒரே சைடில் தான் நாமெல்லாம் வாழ்கிறோம். அதுதான் நித்திய வாழ்வின் விடுவிப்பு ஆகும்.
எனினும், நாமே நாம் பாவம் செய்ய அனுமதித்தால், இந்த உலகம் என்ன நினைக்கிறதோ, அதே மாதிரி நினைத்தும், தவறான என்னங்களாலும்,மற்ற கிறிஸ்தவர்களை நோக்கி நிந்தனை செய்வதும், நாமே, நமது கிறிஸ்தவர்களுக்குள், பிளவை உண்டாக்குகிறோம். இந்த வேறுபாடு, கடவுளரசிடமிருந்தும் நாம் நம்மில் பிரிவை உண்டாக்குகிறோம். யேசு வேன்டிக்கொண்ட ஒற்றுமையை நாம் உடைக்கிறோம்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, May 15, 2009

மே 17, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 17, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா கால 6வது ஞாயிறு
Acts 10:25-26, 34-35, 44-48
Ps 98:1-4
1 John 4:7-10
John 15:9-17
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 15
9 என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.10 நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.11 என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.12 ' நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.13 தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.14 நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.17 நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.
(thanks to www.arulvakku.com)

பணியாளனாய் இருப்பதே உண்மையான கிறிஸ்துவனின் அடையாளமாகும். கடைசி இரவு உணவின் போது, யேசு இதனை வலியுறுத்தி கூறினார்.யேசு சீடர்களின் பாதம் கழுவியபோது, பணிவிடை பெறுவதற்கல்ல, பணிவிடை செய்யவே மனுமகன் இந்த உலகத்திற்கு வந்தேன் என்று கூறினார். அவர் நாம் அனைவரையும் வின்னரசின் "பணியாளர்கள்" என்று அடிக்கடி மேற்கோள் காட்டி குறிப்பிடுகிறார். ஆனால் இன்றைய நற்செய்தியில், அவர் நம்மோடு நட்பாக நண்பனாக இருக்க ஆசைபடுகிறார். நாம் அவரின் அடிமைகளாக அல்ல. அவரே மாற்று கருத்தை சொல்கிறாரா?

அப்படி ஒன்றும் இல்லை! நண்பர்கள் நமக்கு பணிவிடை செய்தால், அவர்களுக்கு நம் மேல் அக்கறை உள்ளது. அடிமைகள் நமக்கு பணிசெய்வது, அவர்களின் கடமை, இல்லையென்றால், அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்.

"நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்" என்று யேசு கூறுகிறார். இதனை நண்பனாக நாம் ஏற்று கொள்கிறோமோ அல்லது அடிமையாகவா?
அடிமைகள் கடவுளின் கட்டளைகளை ஏற்று நடந்து கொள்ளாவிட்டால், என்ன ஆகுமோ என பயப்படுகின்றனர். அவர்கள் எல்லோரும் தம்மை காத்து கொள்ள நினைப்பவர்கள். நண்பர்களோ, கடவுளின் கட்டளை என்ன என்று ஆர்வத்தோடு அதனை அறிய முற்படுவார்கள். ஏனெனில், அந்த கட்டளைகளை , கடவுள் மேல் கொண்ட அன்பினால் எடுத்து கொள்வார்கள், அவருக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பாக எடுத்து கொள்வார்கள். நண்பர்கள் எல்லாம் மற்றவர்களுக்காக அக்கறை படுபவர்கள்.
' நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" என்று யேசு கூறுகிறார். இதுவே எல்லா கட்டளையும் விட மேலான கட்டளையாகும். நண்பர்களுக்கு ஒரு கட்டளையாக எடுத்து கொள்ளவும். "நான் உங்களை எந்தளவிற்கு அன்பு செய்கிறேன் என்று உங்களுக்கு தெரியாது, கடவுள் என்னோடு பகிர்ந்து கொள்வது எல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்", என்று யேசு கூறுகிறார். அவர் நண்பர்கள் அனைவரும் யேசு என்ன பகிர்ந்து கொள்கிறார் என்று தெரிந்து கொள்கிறார்கள். (நற்செய்தி மூலம், கோவில் மூலம்), அன்பு செய்ய வாய்ப்புகளை அறிவுறுத்துகிறது. ஒவ்வொரு கட்டளையின் அடிப்படை அன்புதான். திருச்சபை ஒவ்வொரு படிப்பினையும் அன்பை வைத்து தான் தரப்படுகிறது.

இந்த கட்டளைகளை நாம் பின்பற்றவில்லையென்றால் கடவுளின் அன்பு கிடைக்காதா? கடவுளின் கட்டளைகளை பின்பற்றாமல் இருக்கும்போது, நம்மை கடவுள் அன்பு செய்தாலும், நாம் அன்பு செய்யபடவில்லை என நினைக்கிறோம்.

இது ஒரு அடிமைத்தனம். பயத்தினாலும், தவறான நம்பிக்கையினாலும், நம்மில் உள்ள குறைகளாலும், நாம் முழுமையாக அன்பு செய்யபடுவதில்லை. என நாம் நினைக்கிறோம். கடவுளின் கட்டளைக்கு கட்டுபடுகிறோம். அந்த கட்டளையிலிருந்து , தப்பி , கட்டளை தவறினால் , அவருக்கு எதிராக நாம் போகிறோம். யார் கலகம் செய்யாமல், கடவுளை ஏற்று , அவருக்கு அடிமையாகி, அவர் கட்டளைகளை ஏற்று நடக்க ஆரம்பித்தால், அவரின் அன்பை திரும்பி பெறலாம்.

நண்பர்களே, கடவுள் உங்களை எப்போதுமே அன்பு செய்கிறார். அந்த அன்பில், நாம் ஒருவொருக்கு ஒருவர் உதவி செய்து சந்தோசமாக இருக்கலாம்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, May 8, 2009

மே 10, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 10, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா கால 5 வது ஞாயிறு

Acts 9:26-31
Ps 22:26-28, 30-32
1 John 3:18-24
John 15:1-8

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 15
1 ' உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.2 என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்.3 நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.4 நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.5 நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.6 என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.7 நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.8 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.9 என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.10 நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.11 என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.12 ' நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.13 தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.14 நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.17 நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.18 ' உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில் நாம் என்ன பார்க்கிறோம், நல்ல திராட்சை கனிகளை கொடுக்கிற திராட்சை கொடியாக யேசு இருக்கிறார். நாமெல்லாம் அந்த திராட்சைகொடியோடு உள்ளோம். யேசு தான் அந்த திராட்சை கொடி, அவருக்கு இடப்பட்ட அழைப்பே, நமக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எப்படி நல்ல திராட்சை கனிகளை கொடுக்கிறாரோ, அதே போல் நாம் நல்ல கனிகளை கொடுக்க வேண்டும்.
எனினும், நம்மில் நிறைய பேர் , இது எவ்வளவு முக்கியமானது என்பதை மறந்து குறைவாக மதிப்பிடுகிறோம். இவ்வாறு முக்கியமானதற்றதாக ஆக்காமல், நீங்கள், கிறிஸ்துவின் கனிகளை தரவேண்டும். அதிக கனிகளை கொடுக்க வேண்டும். அதுவும் இன்றே. அதிகமான கிறிஸ்தவர்கள் , ஓரளவிற்கு நல்ல முறையில் இருந்தாலே போதும் என்று இருந்து விடுகின்றனர். நாம் நமக்குள்ளே திருப்தியடைந்து, எல்லோரும் நம் செயலில் திருப்தியாக இருக்கின்றனர் என நினைத்து, நாம் அப்படியே இருந்து விடுகின்றோம். கருனையுடனும், தாராள மனத்துடனும், அன்பினாலும் சிலருக்கு நாம் உதவி செய்துவிட்டு, கடவுள் நாம் தரும் கனிகளால் மிகவும் திருப்தியாக உள்ளார் என நாம் நினைக்கின்றோம்.


ஏன் இந்த உலகில் அதிக தவறுகளும், சாத்தானும், அதன் நிகழ்வும் இருக்கிறது என்று உங்களுக்குள்ளே கேட்டதுன்டா? ஏன் கடவுள், அவர் கையை உயர்த்தி, போருக்கு எதிராகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும், வேலையில்லாமைக்கு எதிராகவும், அதிகம் சம்பளம் வாங்குவோரின் கரவத்திற்கு எதிராகவும், உடல் மற்றும் மண ரீதியாகவும் நடைபெறும் அநியாயங்களுக்கும், அபார்சனுக்கு எதிராகவும், ஏழ்மைக்கு எதிராகவும், அதிகமாகும் குற்றங்களுக்காகவும், இந்த உலகத்தை கறையாக்கும் செயல்களுக்கும் ஏன் கடவுள் தடுப்பதில்லை ?

ஏன் கடவுள் ஒன்றும் செய்வதில்லை?

நிச்சயமாக, அவர் செய்கிறார்!, எனினும், அவர் எப்படி திராட்சி செடியை வளர்க்கிறாரோ அப்படியே இங்கும் செய்கிறார். திராட்சை கொடியின் ஆற்றல் (யேசுவின்), நம் மூலம் , அந்த கொடியின் மூலம் கடவுள் செய்கிறார். எவ்வளவு அதிகமாக யேசுவிடமிருந்து அதிக சத்துக்களை நம் கொடி பெறுகிறதோ, அந்த அளவிற்கு யேசு அதிக கனிகளை உங்கள் மூலம் கொடுப்பார். ஆனால், திராட்சை கனிகள் அங்கேயே இருக்க போவதில்லை.
அவருடைய கனிகளை இந்த உலகிற்கு அதிக அளவில் எடுத்து செல்ல, கிறிஸ்துவின் மூலம் நாம் ஊட்டசத்து பெறுகிறோம். நாம் இன்னும் அதிக சக்தியுடையவராக வேன்டும், அதிக கிளை கொடியை வளர்க்க வேண்டும்,யேசுவிடமிருந்து பெற்ற அனைத்தையும், மற்றவர்களின் நலனுக்காக எடுத்து செல்ல வேண்டும்.
நாம் கிறிஸ்துவின் இறைசேவையை இந்த பூமியில் தொடர்ந்து செய்தால், இந்த சாத்தானின் செயல்கள் கொஞ்சம் மட்டுபடும். சாத்தானின் மீது வெற்றி கொள்வது என்பது கிறிஸ்துவிடமிருந்து வருகிறது. அது நம் மூலம் வருகிறது. கிறிஸ்துவின் புனிதத்துவம் , பரிசுத்த ஆவியின் மூலம் இந்த உலகிற்கு , நம் மூலம் வருகிறது.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, May 1, 2009

மே 3, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 3, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் நான்காம் ஞாயிறு

Acts 4:8-12
Ps 118:1, 8-9, 21-23, 26, 28-29
1 John 3:1-2
John 10:11-18

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 10
11 நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.12 ' கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும்.13 கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.14 நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன்.15 அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.16 இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.17 தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.18 என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன். '
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், நானே நல்ல ஆயன் என்று யேசு கூறுகிறார். நாம் தான் ஆடுகள், நமக்காக அவர் உயிரையே விட்டார். நம்முடைய நலனுக்காக, அவரின் மனித ஆசைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, அவருடைய தூக்கம், சோர்வு, இந்த குற்ற தன்டனையிலிருந்து ஒதுங்குவது , அதனால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் சிலுவை மரணம் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு நமக்காக உயிர் துறந்தார்.
நாம் தான் ஆடுகள், நமது ஆயனின் குரலை தெரிந்து கொண்டு, நல்ல மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்து செல்வார், என்று ஆர்வத்தோடு அவர் பின் செல்வோம். யேசு நமக்கு நல்ல ஆயனாக இருக்க வேண்டும் என ஆசைபடுகிறோம். அவருடைய பாதுகாவலும், வழிகாட்டுதலும் மேலும், அவரின் அன்பு நமக்கு தேவை என விரும்புகிறோம்.

எனினும், சில சமயங்களில், அவருடைய குரலை கேட்க மறந்துவிடுகிறோம். நமது வாழ்வு நாம் திட்டமிட்டபடி நடக்கவில்லையென்றால்,எப்படி இந்த வாழ்வு இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ, அப்படி இல்லையென்றால், இறைவனின் குரலை நாம் கேட்காமல் போய்விட்டதற்கான வாய்ப்பாக அமைகிறது. இப்படி செயல்குழந்து போகும்போதும், பயத்தினாலும், யேசு மேய்ப்பர், இந்த ஆட்டு கூட்டத்தை விட்டு சென்று விட்டார் என்று நாமே அனுமானித்து கொள்கிறோம். கானாமற் போன ஆடுகளை தேடி சென்று விட்டார், நம்மை தனியே விட்டு விட்டு. என்று நாம் நினைக்கிறோம். அதுவும் ஓநாய்கள் நம்மை தாக்கும்போது, அவர் எப்படி நம்மை விட்டு போகலாம். ஏன் கானாமற்போன ஆடுகளுக்காக அவர் ரொம்பவும் சிரத்தை எடுத்து கொள்கிறார் ? நல்ல ஆடுகளை நிற்கதியில் விட்டு விட்டு.

எப்படி இருந்தாலும், எவ்வளவு அதிக நேரம் செலவழித்து, அதிக தூரம் போயும், கானாமற் போன ஆடுகளை கொண்டுவந்தாலும், நம்மை அவர் என்று விட்டு செல்வதில்லை. எப்பொழுதும் நம்முடனே இருக்கிறார். நம் வாழ்வு நாம் விரும்பிய படி செல்லாவிட்டால், யேசு நம்மை ஒதுக்கிவிட்டார் என்று அர்த்தமில்லை. அவர் நம்மை வேறு திசையில் செல்ல சொல்கிறார், ஆனால் நாமோ அதனை நம்பாமல் வேறு பக்கம் செல்கிறோம்.

நாம் அவர் சொல்கிற திசையில் செல்ல விரும்பவில்லை. ஏற்கனவே நாம் இருக்கும் மேய்ச்சல் நிலத்திலேயே இருக்க விரும்புகிறோம். ஒவ்வொரு முறையும் யேசுவின் மேய்ப்பர்கள் தட்டி தட்டி வேறு பக்கம் போக சொல்லும்போது, எரிச்சல் அடைகிறோம். நாம் யேசுவை நம்பி, அவர் சொல்வதை கேட்ட்டால் தான்,அவருடைய ஆசிர்வாதங்களை நம்மல் அறிய முடியாது. அவர் பேசுவது அனைத்தையும் நாம் கூர்ந்து கேட்க ஆரம்பிப்போம். முதல் முறை அவர் கூறுவது நமக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm