Saturday, September 26, 2009

27 செப்டம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை

27 செப்டம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Num 11:25-29
Ps 19:8, 10, 12-14
James 5:1-6
Mark 9:38-43, 45, 47-48


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 9
38 அப்பொழுது யோவான் இயேசுவிடம், ' போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர் ' என்றார்.39 அதற்கு இயேசு கூறியது: ' தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.40 ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.41 நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ' 42 ' என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.43 உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது..45 நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது..47 நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.48 நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.


(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு, 'நமக்கு எதிராக யார் யாரெல்லாம் இல்லையோ அவர்களெல்லாம், நம்மை சார்ந்தவர்கள் " என்று கூறுகிறார். இறையரசில் நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. மக்களோடு பழகுவதில், அவர்கள் எண்ணங்கள் , நம்மிடம் அனுகுவது பற்றி பல் ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.

சில நேரங்களில், ஒரு சிலர் நமக்கு எதிராக இருக்கின்றனர் என்று நாம் நினைப்போம், ஆனால், உண்மையில் அவர்கள் அது மாதிரியான எண்ணத்தில் இல்லாமல் இருப்பார்கள். எடுத்து காட்டாக , சிலர் ஒரு சில உண்மைகளை ,நம்மிடம் சொல்லும்போது, நமக்கு பிடிக்காத விசயமாக இருந்தால், அவர்களை நம் எதிரி போல் பார்க்கிறோம், ஆனால், அவர்கள் கடவுளின் தூதர்கள் மற்றும் தீர்க்கதரிசி ஆவர்.

வேறு சில நேரங்களில், பலர் அவர்களின் தேவைகளுக்காக, நம்மோடு சேர்ந்து இருப்பது போல் இருப்பார்கள், கடவுள் நம்மை எதற்காக தேர்ந்தெடுத்தாரோ, நம்மை என்ன செய்ய சொல்கிறாரோ , அதனை செய்ய அவர்கள் நமக்கு உதவுவதில்லை.

சில சமயம் இறைபணி செய்பவர்கள், நாம் எதிர்பார்ப்பது போல் அவர்கள் இறைபணி செய்வதில்லை. அதனால், கடவுள் என்ன செய்ய சொல்கிறாரோ, அதனை அவர்கள் செய்யவில்லை என நாமாக அனுமானித்து கொள்கிறோம். நீங்கள் யாரையாவது உங்கள் கருத்துகளுக்காக ஆண்டவரிடம் வேண்டிகொள்ள சொல்லி, அவர்கள் அந்த கருத்துக்கு எதிராக வேண்டி கொண்டார்களா? இது மாதிரியான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டது உண்டா?

பல வருடங்களுக்கு முன், எனது கணவர் கம்பெனியில் ஆள்குறைப்பு நடந்தது, நிறைய பேர் வேலையிழந்தனர். எனது நண்பர் ஒருவரிடம், எனது கணவருக்கு வேலை போகக்கூடாது என்று இறைவனிடம் எங்களுக்காக வேண்டி கொள்ளஸ் சொன்னேன், ஆனால், அவளோ அந்த கம்பெனி நல்ல நிலைமைக்கு வரவேண்டும், அதனால், எனது கணவர் வேலை நிரந்தரமாக இருக்கும் என வேண்டிகொண்டாள். ஆனால் எனது எதிர்பார்ப்போ, எனது கணவருக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அவளுடைய ஜெபம் எனக்கு பிடிக்கவில்லை. இறுதியில், அந்த நண்பர் மட்டும் தான் கடவுள் என்ன நினைத்தாரோ, அதையே வேண்டிகொண்டாள்.

நம் நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ நமக்கு நல்லது செய்கிறார்களோ அல்லது நமக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுகிறார்களா? அல்லது கடவுளின் தூதர்களா? என்று தெரிந்து கொள்வதற்கு, நம்முடைய ப்ரச்சினைகளை ஒதுக்கி , நமது கோப தாபங்களை தள்ளி, யேசுவோடு தனிமையில் அமர்ந்து அவரிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். நமது பயத்தை , கோபத்தை கடவுளிடம் கொடுத்து விட்டு, நமக்கு எதிரானவர்களை மன்னித்து, இறைபணிக்காக நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும், உண்மையாகவே சிலர் உங்களுக்கு எதிராக இருந்தால், ஜெபத்தில், நாம் தனியாக உட்கார்ந்து, ஞானத்தையும், அறிவையும், பரிசுத்த ஆவியிடம் கேட்டு, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் முதன்மைபடுத்த வேண்டும். அவர் நமக்கு உற்சாகத்தையும், சக்தியையும் கொடுத்து நமது ப்ரச்சினைகளை தாண்டி வர உதவி செய்வார்.

(thanks to www.azhagi.com)

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 18, 2009

செப்டம்பர் 20, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 20, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு


Wis 2:12, 17-20
Ps 54:3-6, 8
James 3:16--4:3
Mark 9:30-37


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 9
30 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார்.31 ஏனெனில், ' மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் ' என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.32 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.33 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, ' வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்? ' என்று அவர்களிடம் கேட்டார்.34 அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.35 அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், ' ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் ' என்றார்.36 பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,37 ' இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார் ' என்றார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், நாம் பல தீமைகளை பார்க்கிறோம்: பொறாமை நல்லதை அழிப்பதையும், சுய நலம் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதையும், தற்பெருமை, வழியில் வருவபவர்களை அழிப்பதையும் பார்க்கிறோம்.

முதல் வாசகம், வெளியாட்களின் தீய நடவடிக்கைகளால், இஸ்ரேல் நாடு எப்படி அமுக்கப்பட்டது. என்று விளக்குகிறது. நற்செய்தியில், தெய்வத்தை விட்டு விலகி நிற்பவர்களின் தீய எண்ணங்களை யேசு கண்டறிகிறார். இதை அனைத்தையும்விட பெரிய இழிவான தீமையை, ஜேம்ஸ் சொல்கிறார். பங்கு திருச்சபையில், கிறிஸ்தவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையை குறிப்பிடுகிறார்.

பொறாமையும், சுய நலத்தின் விருப்பங்களும் தான் ஒவ்வொரு பங்கிலும் நடக்கும் ப்ரச்சினைகளுக்கு மூல காரணம் ஆகும். பங்கு கோவிலின் உள்ள ஊழியர்களிடையே ஏற்படும் பிரிவு, கோவில் சேவை செய்பவர்களிடம் ஏற்படும் ஒற்றுமையின்மை, தான் வெளியே தள்ளப்படுகிறோமோ என்று நினைக்கும் ஒவ்வொரு தொண்டரிடமும், கிறிஸ்துவ குடும்பங்களிடையே ஏற்படும் பிளவுகள், குறைவான விசுவாசம் உள்ளோரை வெளியே தள்ளும் குணங்கள் எல்லாமே பொறாமையாலும், சுய நலத்தாலுமே ஏற்படுகிறது. -- இவையெல்லாமே தீயவை.

எந்த ஒரு பிரச்சினையின் மூலக்கூற்றை அறிய வேண்டுமானால், நமது சுய நலத்துடன் கூடிய விருப்பங்களை பார்த்தோமானல் தெரியும். நேர்மையாகவும், உள்ளார்ந்த நோக்கத்துடனும், பிரச்சினையின் உள்ள நயவஞ்சக நோக்கங்க்களை பாருங்கள். மற்றவர்களிடம் இதனை பார்க்கும்போது,நீங்கள் வருத்தபட்டது உண்டா? அப்படி வருத்தபடவில்லை என்றால்? ஏன்? நீங்கள் இன்னும் உங்கள் சுய நலத்தினால் உள்ள கொளவரத்தினாலும், தற்பெருமையினாலும் இருக்கிறீர்கள் என்று தானே அர்த்தம்.

இதற்கெல்லாம், யேசு நிவாரண மருந்து தருகிறார்: "யாராவது முதலாவதாக இருக்க நினைத்தால்( இந்த ஆசை நமது சுய நலத்தினால் தோன்றியது) அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் " என்று கூறுகிறார்.
சுய நலத்தினால் நம்மில் உண்டாகும் நோக்கம், பாவமாகும், ஏனெனில், மற்றவர்களிடமிருந்து வெற்றியை தட்டி பறிக்க முயற்சி செய்யும். ஜேம்ஸ் , நமது நோக்கம் என்னவாக இருந்தாலும், அது நல்ல நோக்கமாக இருந்தாலும், கடவுளிடம் வேண்டி, பரிசுத்த ஆவியுடன் இனைந்து , அந்த நோக்கத்திற்காக பாடுபட வேண்டும்- ஆனால், நாம் நமது சுய நலத்தினால், அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என நினைக்க கூடாது.

கடவுள் நமது வேண்டுதலுக்கு செவிசாய்த்து, நாம் கேட்பவற்றை கொடுக்க தயாராய் உள்ளார், ஆனால் அந்த வேண்டுதல், நமது பங்கு திருச்சபைக்கு பயனுள்ளதாகவோ, நமது குடும்பம் முழுதுக்கும் பயனுள்ளதாகவோ, இறைசேவையில் பங்கு கொள்வோருக்கு பயனுள்ளதாகவோ இருந்தால் கடவுள் நமது வேண்டுதலுக்கு செவி சாய்க்கிறார். மற்றவர்களுக்கு எப்படி உதவமுடியும் என்று நமது வேண்டுதல்கள் நினைத்து நாம் இறைவனிடம் வேண்டினால், அந்த ஜெபம் தூய்மையானது, அமைதிக்குரியது, முழு இரக்கத்துடன் உள்ளது, நிச்சயம் அதற்குண்டான கனியை தரும்.


(thanks to www.azhagi.com)

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 11, 2009

செப்டம்பர் 13, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 13, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 24ம் ஞாயிறு

Is 50:5-9a
Ps 116:1-6, 8-9
James 2:14-18
Mark 8:27-35

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 8
27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.28 அதற்கு அவர்கள் அவரிடம், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.29 ' ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா ' என்று உரைத்தார்.30 தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.31 ' மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் ' என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.32 இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். 33 ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், ' என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ' என்று கடிந்துகொண்டார்.34 பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.35 ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியின், இரண்டாவது வாசகம், கத்தோலிக்க மதத்தின் கோட்பாடுகளையும், சிந்தனைகளையும், அதன் தொடர்புகளையும் விளக்கி சொல்கிறது.

விசுவாசமில்லாத எந்த ஒரு சேவையும், எவ்வளவு நல்ல சேவையாக இருந்தாலும், நம்மை அது மோட்சத்திற்கு இட்டு செல்லாது. நம்மில் சிலர், கோவில் வேலைகளில் ஈடுபட்டு செய்து, இறைவனின் இதயத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறோம், எல்லா ஜெபங்களையும், மிக சரியாக சொல்வதும், அதில் ஒரு அங்கமாகும். இந்த மாதிரியான எண்ணங்கள், நமது குழந்தை பருவத்திலே இருந்து வருகிறது. நாம் நல்ல மாதிரியாக இருந்தால், நமது அம்மா அப்பா, நமக்கு பரிசு தருவார்கள் என நினைக்கிறோம். பள்ளியில் ஒழுங்காக படித்தால், ஆசிரியர் நமக்கு பரிசு தருவார் என்ற எண்ணத்தோடு உள்ளோம்.
பிரச்சினை என்னவெனில், நாம் மோட்சம் செல்லக்கூடிய தகுதியை என்ன செய்தாலும் பெற முடியாத நிலையில் தான் உள்ளோம். அதனால் தான் யேசு இந்த பூமிக்கு வந்து, நமது பாவங்களை சிலுவையில் எடுத்து கொண்டார்.

விசுவாசமற்ற எந்த ஒரு வேலையும், நம்மை மோட்சத்திற்கு எடுத்து செல்லாது. ஏனெனில்:
யேசுவின் மேல் விசுவாசம் கொண்டவர்களாக நாம் இருந்தால், "யேசு நம் மேல் அளவு கடந்த அன்பு கொண்டு, நமக்காக சிலுவை மரணமடைந்து, உயிர்த்தெழுந்தார், அதனால் நாம் நித்திய வாழ்வை அடைவோம்" என்ற நம்பிக்கை கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். இது தான் நமக்கு மோட்சத்தின் கதவை திறக்கும். எனினும், அந்த கதவுக்குள் நாம் நடக்க வேண்டுமானால், நாம் யேசுவை பின் செல்ல வேண்டும். அவரை பின் செல்வதற்கு, அவர் நமக்காக இறந்தார், உயிர்த்தெழுந்தார் என்று நம்புவதை விட இன்னும் அதிகம் நாம் செய்ய வேண்டியிருக்கிறது, அது என்னவெனில், அவரது வாழ்வையும், எப்படி வாழ்ந்தார் என்பதையும் நாம் நம்ப வேண்டும். யேசுவை பின் செல்வது, நமது சொந்த வாழ்வை பாதிக்கும், நாம் நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், கிறிஸ்துவை போல நாம் மாறவேண்டும்.
நாம் யேசுவின் மேல் விசுவாசம் கொண்டுள்ளோம் என்பதை நாம் செய்யும் நல்ல காரியங்களே நிருபிக்கிறது. யேசுவின் மேல் விசுவாசம் கொண்டுள்ளோம் என்பது, அவர் மேல் அதிக அளவு அன்பு செய்து, அவர் யாரையெல்லாம் அன்பு செய்கிறாரோ, அவர்களையெல்லாம் நாமும் அன்பு செய்வதில் உள்ளது. மற்றவர்கள் அனைவருமே அவர்களுக்கு நமது அன்பை பெற அந்த தகுதி இருந்தாலும், இல்லையென்றாலும், நாம் அவர்களை அன்பு செய்ய வேண்டும்.

யேசுவின் மேல் உள்ள விசுவாசம் என்பது, நாம் அவர் என்ன சொன்னாலும், அதனை செய்ய தயாராக உள்ளோம் என்பதை காட்டுகிறது. அவரை போலவே நமது எல்லா செயல்களிலும் நடந்து கொள்வது, அவரது குண நலன்களை நாமும் பின் பற்றுவது, அவரது அழைப்பை ஏற்று கொள்வது. (குருவாக, இறைசேவையாளராக).
யேசு இன்றைய நற்செய்தியில் கேட்பது போல் "நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" நம்மை கேட்டால், நமது பதில், நீங்கள் எங்களது மெசியா, எங்களை மோட்சத்திற்கு அழைத்து செல்பவர், நீங்கள் தான் கடவுள், எப்படி வாழ்வேண்டும் என, எங்களுக்கு சொல்லி கொடுப்பவர், நம் மேல் அதிக அன்பு கொண்டவர், மற்றவர்கள் மேல் நாம் அன்பு கொள்ள நமக்கு அதிகாரம் அளிப்பவர், அதனால், நமக்கு சிலுவை துன்பம் வந்தாலும், நம்மை காப்பவர். என்று சொல்பவர்களாக நாம் இருப்போம்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 4, 2009

செப் 6, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப் 6, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு

Is 35:4-7a
Ps 146:7-10 (with 1b)
James 2:1-5
Mark 7:31-37

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 7
31 மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார்.32 காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.33 இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.34 பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ' எப்பத்தா ' அதாவது ' திறக்கப்படு ' என்றார்.35 உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.36 இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.37 அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ' இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே! ' என்று பேசிக்கொண்டார்கள்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், கடவுள் உடல் ஊணமுற்றவர்கள் மேல் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை நமக்கு கான்பிக்கிறது.
நாம் எல்லோருமே ஒரு வகையில், ஊணமுற்றவர்களாக தான் இருக்கிறோம், நமக்கு கண்ணிருந்தும், குருடர்களாக இருக்கிறோம், புனித ஜேம்ஸ் வாசகத்தில் நாம் எவ்வளவு குருடாக இருக்க முடியும் என்பதை நமக்கு எடுத்து காட்டுகிறது

ஒரு மனிதன் எந்த மாதிரியான உடை உடுத்துகிறான் என்பதை தான் நாம் பார்க்கிறோம், எடுத்து காட்டாக, அவர்கள் இதயத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்காமல், அவர்களுடைய ஆற்றல்கள், திறமைகள் அனைத்தும், கடவுளின் பிரதிபலிப்பு ஆகும் என்பதை நம்மால் எப்படி அறிய முடியும்?. நாம் தீர்ப்பளிப்பவராக இருக்கிறோம். ஒருவருடைய கல்வியறிவு, சொத்து, சமூகத்தில் அவரின் மதிப்பு ஆகியவற்றால், நாம் கவர்ந்திழுக்கபடுகிறோம், அவர்களின் புனிதத் தன்மையை நாம் பார்ப்பதில்லை, மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைக்கும் அவர்களது ஆர்வம், மற்றும், அவர்கள் உள்ளத்டதில் என்ன உள்ளது என்பதை நாம் பார்ப்பதில்லை. நாம் தீர்ப்பளிப்பவராக இருக்கிறோம்.

கடவுளுக்கு மட்டும் தான் ஒவ்வொருவரின் புனித தன்மை மற்றும் அவர்களிடத்தில் உள்ள நல்ல விசயங்கள் தெரியும். ஆனால், நாமும் கடவுள் போல, அவருக்கு சரிசமமாக, மற்றவர்களை நாம் அனுமானிக்கிறோம். கடவுளுக்கு மட்டும்தான் ஒவ்வொருவரின், மனதுக்குள்ளும், வார்த்தைகளிலும், உள்ள நோக்கங்களும் தெரியும். இருந்தாலும், நாம் ஒவ்வொருவரையும் , மற்றவர்கள் சொல்வதை வைத்து , அவர்களை மதிப்பிடுகிறோம்.

தீர்ப்பளிப்பது, நம்மை எவ்வளவு குருடாக இருக்கிறோம் என்பதை தான் காட்டுகிறது.
யேசு நம்மையெல்லாம், கடவுளை நோக்கி, "எப்பத்தா!, உனது கண்களும், காதுகளும், மேலும் மன எண்ணங்களும் திறந்து உண்மை நமக்கு கிடைக்கட்டும்" என்று வேண்டவேண்டும் என ஆசைபடுகிறார். இதன் மூலம் நாம் குணமடையலாம், நமக்கு தெரிந்தவைகளிடமும், கேட்ட விசயங்களிலும், ,கொஞ்சம் மெதுவாக செயல்பட வேண்டும். நாம் பார்ப்பதிலும், கேட்பவற்றையும், நம்ப கூடாது. மெதுவாக, நிறைய நேரம் எடுத்து கொண்டு, ஞானத்திற்காகவும், உள் குணங்களை அறிவதற்கும், தீர்ப்பளிப்பதற்கும், கடவுளிடம் வேண்டி , அதன் பிறகு தான் நாம் அடுத்த முயற்சிக்கு செல்லவேண்டும்.

யேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தற்கு, இதுவும் ஒரு காரணமாகும். நாம் கடவுளின் ஆவியை ஒவ்வொரு விசயத்திற்கும், முடிவெடுக்க , அனுமானிக்க அனுமதித்தால், நாமும் கடவுளை போல் செயல்படுவோம். கொஞ்சம் கொஞ்சம் விசயங்களை வைத்து கொண்டு, நாம் எந்த ஒரு முடிவுக்கும் வந்து விட கூடாது. விசுவாசத்துடனும், இரக்கத்துடனும், நாம் செயல்படவேண்டும்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm