Saturday, November 13, 2010

நவம்பர் 14, 2010 ஞாய்று நற்செய்தி, மறையுரை

நவம்பர் 14, 2010 ஞாய்று நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு
Mal 3:19-20a
Ps 98:5-9
2 Thess 3:7-12
Luke 21:5-19

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 21


எருசலேம் கோவிலின் அழிவு பற்றி முன்னறிவித்தல்
(மத் 24:1 - 2; மாற் 13:1 - 2)
5 கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.6 இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் ' என்றார்.
வரப்போகும் கேடு பற்றி அறிவித்தல்
(மத் 24:3 - 14; மாற் 13:3 - 13)
7 அவர்கள் இயேசுவிடம், ' போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? ' என்று கேட்டார்கள்.8 அதற்கு அவர், ' நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்றும், ' காலம் நெருங்கி வந்துவிட்டது ' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.9 ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது ' என்றார்.10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ' நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.12இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.15 ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.16 ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு, "ஒரு நாள் வரும், அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்" என்று கூறி இவ்வுலகில் உள்ளதெல்லாம் தற்காலிகமானது தான் நமக்குஅறிவுறுத்துகிறார்.

இவ்வுலகில் நீங்கள் அனுபவிக்கும் சந்தோசமான எல்லாமெ தற்காலிகமானது தான். உங்களை எது அதிகம் துன்பத்தை கொடுக்கிறது. அதுவும் தற்காலிகமானது தான். இவ்வுலகில் எந்த விசயங்களை அதிகம் சார்ந்து இருக்கிறீர்கள்? அதுவும் தற்காலிகமானது தான். எதனை பார்த்து ஆச்சரியபடுகிறீர்கள்? யாரிடம் நம்பிக்கை கொள்கிறீர்கள்? என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? அதிக நேரம் உழைத்து எந்த குறிக்கோளை அடைய முற்படுகிறீர்கள், மேலும், உங்கள் உழைப்புக்காக , அதன் பரிசாக எங்கே சுற்றுலா கிளம்பிவிட்டீர்கள்? இது எல்லாமெ தற்காலிகமானது தான். அல்லது இதனையெல்லாம், இறையரசிற்காக உபயோகித்தால், அது உபயோகமானதாக இருக்கும்.

கடவுளுடைய அரசிற்காகவும் அவரைபற்றியும், நாம் எப்பொழுதும் நோக்கி அதற்காகவே நாம் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும், அவை தான் நமது இறுதி காலம் வரைக்கும் இருக்கும் என்பதும் நமக்கு தெரியும், ஆனால் இந்த கண்மூடிதனமான விசுவாசம் நம்பிக்கை நமக்கு என்னமோ பிடிப்பதில்லை. நாமெல்லாம் கடவுளின் சீடர்கள், கடவுள் அநீதிக்காக எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும், அநியாயத்திற்கு பழிவாங்க வேண்டும் , இந்த அழிவுள்ள உலகில் பழிவாங்களை கடவுள் நிகழ்த்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். போர்கள், நில அதிர்வுகள், ப்ளேக் நோய் மற்றும் பல கஷ்டங்கள். மேலும், இயேசு அவரது இரண்டாம் வருகையை விரைவில் வந்து, இவ்வுலக சாத்தானையும், ப்ரச்னைகளுக்கும் முற்று புள்ளி வைக்க வேண்டும் என ஆசைபடுகிறோம்.

ஒவ்வொரு நாளும், நமது வாழ்வில், கடவுளின் உதவியை எதிர்பார்க்கிறோம், ஆனால், மிகச்சரியான ஆணித்தரமான ஒரு ஆதாரத்தை நமது விசுவாசத்திற்கு கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதனை நமக்கு தெரிய வேண்டும் என நினைக்கிறோம்; கடவுளின் நமக்கான திட்டம் என்ன என்பதனை நமக்கு தெரியாமல் இருப்பதால் ஒரு வித தவிப்புடனும், பயத்துடனும் இருக்க நாம் விரும்புவதில்லை. நாம் நமக்கு கண்ணுக்கு முன்னே தெரிவதில் தான் நாம் சார்ந்து இருக்கிறோம், கடவுள் நம் கண்ணில் காமிக்காததை நாம் சார்ந்து இருக்க விரும்புவதில்லை. அதனால் கடவுளிடம் நாம் அதற்கான குறிப்புகளை கேட்கிறோம், ஆதாரங்களையும் கேட்கிறோம். எனினும், நாம் கடவுளோடு கூட சேர்ந்து நடந்து , முதல் அடியாக ஒரு காலை தூக்கி காற்றில் நிறுத்துங்கள், அடுத்த காலை எங்கே வைப்பது என்று கடவுளிடம் கேளுங்கள்.
இதற்கு நாம் சமநிலையான போக்கை கடைபிடிக்க வேண்டும், நாம் கடவுளை சார்ந்து எப்பொழுது இருக்க வில்லை என்றால், நாம் நிலை தடுமாறி விழுவோம். கடவுள் நமக்கு அடுத்த காலை எங்கே வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்றால், நாம் தடுமாறி விழலாம் அல்லது கடவுளின் கைகளில் விழுந்துவிடுவோம்.
கடவுளின் கைகள் தற்காலிகமானது அல்ல! அவரது கைகள் தான் நமக்கு உண்மையான பாதுகாப்பு, அதுவும் கடவுளின் இணையில்லாத, முடிவில்லாது, எல்லா வல்ல ஆற்றல்களுடன், முழு பரிசுத்த அன்புடனும்,அந்த கைகள் நம்மை தாங்கும். இது எல்லாவற்றையும் நாம் எப்பொழுதும் பெறாத மாதிரியாக இருக்கும் ஆனால், அவரது அன்பும், பாதுகாப்பும் என்றுமே தவறுவதில்லை.

© 2010 by Terry A. Modica

நவம்பர் 14, 2010 ஞாய்று நற்செய்தி, மறையுரை

நவம்பர் 14, 2010 ஞாய்று நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு
Mal 3:19-20a
Ps 98:5-9
2 Thess 3:7-12
Luke 21:5-19

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 21


எருசலேம் கோவிலின் அழிவு பற்றி முன்னறிவித்தல்
(மத் 24:1 - 2; மாற் 13:1 - 2)
5 கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.6 இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் ' என்றார்.
வரப்போகும் கேடு பற்றி அறிவித்தல்
(மத் 24:3 - 14; மாற் 13:3 - 13)
7 அவர்கள் இயேசுவிடம், ' போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? ' என்று கேட்டார்கள்.8 அதற்கு அவர், ' நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்றும், ' காலம் நெருங்கி வந்துவிட்டது ' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.9 ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது ' என்றார்.10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ' நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.12இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.15 ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.16 ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு, "ஒரு நாள் வரும், அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்" என்று கூறி இவ்வுலகில் உள்ளதெல்லாம் தற்காலிகமானது தான் நமக்குஅறிவுறுத்துகிறார்.

இவ்வுலகில் நீங்கள் அனுபவிக்கும் சந்தோசமான எல்லாமெ தற்காலிகமானது தான். உங்களை எது அதிகம் துன்பத்தை கொடுக்கிறது. அதுவும் தற்காலிகமானது தான். இவ்வுலகில் எந்த விசயங்களை அதிகம் சார்ந்து இருக்கிறீர்கள்? அதுவும் தற்காலிகமானது தான். எதனை பார்த்து ஆச்சரியபடுகிறீர்கள்? யாரிடம் நம்பிக்கை கொள்கிறீர்கள்? என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? அதிக நேரம் உழைத்து எந்த குறிக்கோளை அடைய முற்படுகிறீர்கள், மேலும், உங்கள் உழைப்புக்காக , அதன் பரிசாக எங்கே சுற்றுலா கிளம்பிவிட்டீர்கள்? இது எல்லாமெ தற்காலிகமானது தான். அல்லது இதனையெல்லாம், இறையரசிற்காக உபயோகித்தால், அது உபயோகமானதாக இருக்கும்.

கடவுளுடைய அரசிற்காகவும் அவரைபற்றியும், நாம் எப்பொழுதும் நோக்கி அதற்காகவே நாம் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும், அவை தான் நமது இறுதி காலம் வரைக்கும் இருக்கும் என்பதும் நமக்கு தெரியும், ஆனால் இந்த கண்மூடிதனமான விசுவாசம் நம்பிக்கை நமக்கு என்னமோ பிடிப்பதில்லை. நாமெல்லாம் கடவுளின் சீடர்கள், கடவுள் அநீதிக்காக எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும், அநியாயத்திற்கு பழிவாங்க வேண்டும் , இந்த அழிவுள்ள உலகில் பழிவாங்களை கடவுள் நிகழ்த்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். போர்கள், நில அதிர்வுகள், ப்ளேக் நோய் மற்றும் பல கஷ்டங்கள். மேலும், இயேசு அவரது இரண்டாம் வருகையை விரைவில் வந்து, இவ்வுலக சாத்தானையும், ப்ரச்னைகளுக்கும் முற்று புள்ளி வைக்க வேண்டும் என ஆசைபடுகிறோம்.

ஒவ்வொரு நாளும், நமது வாழ்வில், கடவுளின் உதவியை எதிர்பார்க்கிறோம், ஆனால், மிகச்சரியான ஆணித்தரமான ஒரு ஆதாரத்தை நமது விசுவாசத்திற்கு கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதனை நமக்கு தெரிய வேண்டும் என நினைக்கிறோம்; கடவுளின் நமக்கான திட்டம் என்ன என்பதனை நமக்கு தெரியாமல் இருப்பதால் ஒரு வித தவிப்புடனும், பயத்துடனும் இருக்க நாம் விரும்புவதில்லை. நாம் நமக்கு கண்ணுக்கு முன்னே தெரிவதில் தான் நாம் சார்ந்து இருக்கிறோம், கடவுள் நம் கண்ணில் காமிக்காததை நாம் சார்ந்து இருக்க விரும்புவதில்லை. அதனால் கடவுளிடம் நாம் அதற்கான குறிப்புகளை கேட்கிறோம், ஆதாரங்களையும் கேட்கிறோம். எனினும், நாம் கடவுளோடு கூட சேர்ந்து நடந்து , முதல் அடியாக ஒரு காலை தூக்கி காற்றில் நிறுத்துங்கள், அடுத்த காலை எங்கே வைப்பது என்று கடவுளிடம் கேளுங்கள்.
இதற்கு நாம் சமநிலையான போக்கை கடைபிடிக்க வேண்டும், நாம் கடவுளை சார்ந்து எப்பொழுது இருக்க வில்லை என்றால், நாம் நிலை தடுமாறி விழுவோம். கடவுள் நமக்கு அடுத்த காலை எங்கே வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்றால், நாம் தடுமாறி விழலாம் அல்லது கடவுளின் கைகளில் விழுந்துவிடுவோம்.
கடவுளின் கைகள் தற்காலிகமானது அல்ல! அவரது கைகள் தான் நமக்கு உண்மையான பாதுகாப்பு, அதுவும் கடவுளின் இணையில்லாத, முடிவில்லாது, எல்லா வல்ல ஆற்றல்களுடன், முழு பரிசுத்த அன்புடனும்,அந்த கைகள் நம்மை தாங்கும். இது எல்லாவற்றையும் நாம் எப்பொழுதும் பெறாத மாதிரியாக இருக்கும் ஆனால், அவரது அன்பும், பாதுகாப்பும் என்றுமே தவறுவதில்லை.

© 2010 by Terry A. Modica

Saturday, November 6, 2010

7 நவம்பர் 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

7 நவம்பர் 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32ம் ஞாயிறு
2 Macc 7:1-2, 9-14
Ps 17:1, 5-6, 8, 15
2 Thess 2:16–3:5
Luke 20:27-38
லூக்கா நற்செய்தி

அதிகாரம் 20


உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி
(மத் 22:23 - 33; மாற் 12:18 - 27)
27 உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,28 ' போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார்.29 இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.30 இரண்டாம்,31 மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்;32 கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.33 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே? ' என்று கேட்டனர்.34 அதற்கு இயேசு அவர்களிடம், ' இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.35 ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.36 இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.37 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ' ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் ' என்று கூறியிருக்கிறார்.38 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே ' என்றார்.39 மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, ' போதகரே, நன்றாகச் சொன்னீர் ' என்றனர்.40 அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

(thanks to www.arulvakku.com)


உயிர்த்தெழுதலை நீங்கள் நம்புகிறீர்களா? இன்றைய நற்செய்தியில், இந்த கேள்வியை தான், யேசுவிடம் சதுசேயர்களிடமிருந்து வேறு மாதிரியான கேள்வியாக கேட்கப்பட்டது.
கிறிஸ்தவர்களாக, நாம் அனைவரும் ஒரு நாள் கிறிஸ்துவை போல் உயிர்த்தெழுவோம் என்று நம்புகிறோம். இவ்வுலக வாழ்வைவிட்டு கடவுளோடு இனைவோம். யேசுவை பின் செல்பவர்கள் அனைவரும் வான தூதர்கள் போல் வாழ்வோம். இதனால் தான் கத்தோலிக்க திருச்சபையில் , மரண சடங்குகளில், திருப்பலியில் குருவானவர்கள் வெள்ளை உடை அணிந்து ,அதனை மறு பிறப்பு திருப்பலியாக, உயிர்த்தெழும் திருப்பலியாக ஜெபிக்கிறோம்.
ஆனால், நீங்கள் மீண்டும் பிறக்கும் அன்பினை நம்புகிறீர்களா? யேசு உயிர்த்தெழுதலை, திருமணத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார். கடவுளின் அன்பை இவ்வுலக மக்கள் பிரதிபலிக்க ஒரு வாய்ப்ப்பாக திருமணத்தை நாம் சொல்ல வேண்டும். கடவுளிடமிருந்து வரும் என்றும் மிளிரும் அன்பினால் ஆனும் பெண்ணும் திருமணத்தில் இணைந்திருக்க வேண்டும்; அதன் மூலம் கடவுளின் விசுவாசத்திற்கும், பொறுப்பிற்கும் , அக்கறைக்கும் சாட்சியாக விளங்கவேண்டும்.

பிறகு ஏன், யேசு திருமணம், இறந்தவர்களின் மறு பிறப்பில் இல்லை என்று கூறினார். ஏன் இன்றைய திருமணம், அதே ஒற்றுமையோடு மோட்சத்திலும் சேர்ந்தே அவர்களின் இறப்பிற்கு பிறகும் இருந்தால் என்ன?
இவ்வுலகில், அன்பை நாம் மிக சரியாக கொடுப்பதுமில்லை, சரியாகவும் பகிர்ந்து கொள்வதில்லை. அதனால் இவ்வுலக அன்பு தொடர்ந்து மரித்தும், மீண்டும் உயிர்த்தெழுகிறது. எல்லா கணவன் மனைவியுமே பல நேரங்களில் அன்பின் குறையால், மனந்திரும்பியும் மன்னிப்பையும் பெறுகின்றனர்.(நண்பர்களிடத்திலும் அது உள்ளது).
மிக சரியான அன்பு என்பது கடவுள் தான். கடவுள் எல்லோரையும் அன்பு செய்வது போல், நாம் நமது சகோதரரையும், சகோதரிகளையும் அன்பு செய்தால், நாம் கடவுளின் உண்மையான குழைந்தைகள் ஆவோம். திருமணம் மோட்சத்தில் இல்லை, ஏனெனில், அதில் முழுமையான, பரிசுத்தமான அன்பு இல்லை. நாம் நமது துணைவரை மற்றவர்களை விட அதிகமாக அன்பு செய்கிறோம். மோட்சத்தில், நமது துணைவரை நிச்சயமாக அன்பு செய்வோம், முழுமையாகவும் அன்பு செய்வோம். மேலும் மற்றவர்களையும் அதே அளவிற்கு அன்பு செய்வோம். நம்மை நல்ல முறையில் அன்பு செய்யாதவர்கள் கூட மோட்சத்தில் நமது துணைவரை விட அதிகமாக அன்பு செய்வார்கள்.

திருமணம் என்பது மோட்சத்தில் ஒருவொருக்கு ஒருவர் எப்படி அன்பு செய்கிறார்களோ அதனை இவ்வுலகில் ப்ரதிபலிப்பதாகும்.
© 2010 by Terry A. Modica

Friday, October 22, 2010

அக்டோபர் 24,2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 24,2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30 வாரம்
Sirach 35:12-14,16-18
Ps 34:2-3, 17-19, 23 (with 7a)
2 Tim 4:6-8, 16-18
Luke 18:9-14

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18




பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை
9 தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:10 ' இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ' கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். ' 13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ' கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் ' என்றார். ' 14 இயேசு, ' பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.

(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், நமது நோக்கம், நம்முடைய சொந்த சுய லாபங்களுக்காக இருந்தால், அதன் விளைவு என்ன என்பதை விளக்கி சொல்கிறது. "தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் " கூடிய விரைவிலோ அல்லது சிறிது காலம் சென்றாலும் தம்மை தாமெ உயர்தி கொள்பவர்கள் தாழ்த்தபடுபவார்கள். அவர்கள் அதனை புரிந்து கொண்டார்களா அல்லது தெரிந்தும் அப்படி செய்தார்கள என்பது தெரியாது. அவர்களின் சொந்த நடவடிக்கையினாலே அவர்கள் தனது மதிப்பை குறைத்து கொள்வார்கள். அவர்கல் சந்திக்கும் மக்கள் அவர்களை உயர்வாக கருத மாட்டார்கள். கண்டிப்பாக, கடவுளும் அவர்களை உயர்வக மதிப்பதில்லை.


ஒரு நல்ல மாற்று முறை என்ன வென்றால், நமது அன்பை மற்றவர்களுக்காக கொடுக்கும்பொழுது, நம்மை பணிவுடனும், அடக்கத்துடனும் இருக்க செய்கிறது. நமது நோக்கம் அன்பில் நிலைத்திருக்காவிட்டால், நாம் சரியாக தான் நடந்து கொள்கிறோம் என்று நாம் நினைத்தாலும், அது சரியான வழி இல்லை. மற்றவர்களின் மேல் சரியாக அக்கறை கொண்டு, அவர்களுக்கு நாம் நல்லது செய்யும்பொழுது, நாம் நாமாகவே சரியாக இருக்கிறோம் என்று நினைத்து இருந்தாலும் , இந்த நல்ல செயல்கள் மூலமாக நாம் தாழ்ந்து கடவுளுடன் பரிசுத்த வாழ்வில் தொடர்வோம்.


மற்றவர்களிடம் நாம் அன்பு செய்ய வேண்டும் என்று தான் நாம் சரியாக படைக்கபட்டிருக்கிறோம். நமக்கு நாமே சரி என்று நிர்ணயித்து கொள்வது, நாமே முடிவெடுத்து கொள்வது ஆகும். இது நம்மை நல்ல விசயங்கள் செய்வதற்காக ஊக்குவிக்கிறது. ஆனால் இது நமது சுய லாபங்களுக்காக நம்மையே பாராட்டுவது போல ஆகும். அதன் மூலம், கடவுளின் அங்கீகாரத்தை பெறுவதற்கும், அல்லது நமது சொந்த லாபங்களுக்காகவும், இதனை செய்யலாம். அன்பு, தான் சரியானது. அது தான் மற்றவர்களுக்காக பல சேவைகள் செய்ய ஊக்குவிக்கும்.

இன்றைய நற்செய்தியில் வரும் பரிசேயர் போல தான் நாம் பலர் இருக்கிறோம். நம்மை விட இன்னும் பாவ வாழ்வில் இருப்பவரை பற்றி நினைத்து பாருங்கள், கோவிலுக்கு செல்லாதவர்கள், உங்களை போல அதிகம் ஜெபம் செய்யாதவர்கள். உங்களை போல நேரத்திற்கும், அக்கறைக்கும் மதிப்பு கொடுக்காதவர்களை நினைத்து பாருங்கள். ஒரு சிலரை அன்பு செய்வது மிகவும் கடினமாக உள்ள சிலரை நினைத்து பாருங்கள்.

இதற்கெல்லாம், சரியான தீர்வு என்னவெனில், கடவுள் அவர்கள் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்பதனை நினைத்து அவரிடம் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். கடவுளின் அன்பை நம்மோடு இனைத்து, அவர்கள் மேல் அக்கறை கொண்டால், முழு ஆற்றலோடும், எடுத்த காரியத்தில் வெற்றியோடும் நம்மால் அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய முடியும் . நாம் கடவுளின் திவ்ய நற்கருணையோடு இனைந்து நாம் எல்லா சேவைகளிலும் ஈடுபட்டால், அவர் நம்மை நமக்கு உள்ள குறைகளை முழுதும் நீக்கி கடவுளுக்கு எது சரியென்று படுகிறதோ அதனையே நமக்கும் ஆற்றலாய் கொடுத்தருளுவார்.

© 2010 by Terry A. Modica

Saturday, October 16, 2010

அக்டோபர் 17 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை

அக்டோபர் 17 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Exodus 17:8-13
Psalm 121:1-8
2 Tim 3:14 – 4:2
Luke 18:1-8


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18

நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமை
1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.2 ' ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ' என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். ' 6 பின் ஆண்டவர் அவர்களிடம், ' நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?8 விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ' என்றார்.


(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில்,கடவுளிடம் விசுவாசம் கொள்பவர்களிடம் , அவர்கள் நீதி வேண்டி அவரிடம் வந்தால் , கண்டிப்பாக அவர்க்ளுக்கு தேவையான உரிமையையும், பாதுகாப்பையும் தருவார். நம்மை யாராவது நிராகரித்தாலோ, ஒதுக்கபட்டாலோ, தவறான குற்றமிழைக்கபட்டாலோ, கடவுள் நம்மை காப்பார். மேலும் கடைசியாக, எவ்வளவு சீக்கிரமாக உங்களை காப்பாற்ற வருவார்? நிச்சயம் உடனே வருவார். அவர் கொடுத்த வாக்கை காப்பாற்றினாரா?

கடவுள் எப்பொழுமே மெதுவாக தான் நாம் வேண்டும் ஜெபத்திற்கு பதிலளிப்பார். (சில நேரங்களில் மாதங்கள் , வருடங்கள் ஆகலாம்). , அந்த ப்ரச்னை முடிவிற்கு வரும் வரை, யேசு உங்களோடு இருப்பார், மேலும் சாத்தானிடமிருந்து உங்களை காப்பார்.

யேசு எங்கே என்பது நமது கேள்வியல்ல. அல்லது ஏன் அவர் உடனே நமக்கு உதவி செய்ய வில்லை என்பது நமது கேள்வி அல்ல. இன்றைய நற்செய்தியில் கடைசி வாக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, யேசு உங்களிடம் வரும்போது நம்பிக்கையோடு இருப்பீர்களா? அல்லது ப்ரச்னையில் உள்ள பயத்தால் அவரை நாம் அடையாளம் கொள்ளவில்லையா?

நாம் விசுவாசத்தோடு வாழாவிட்டால், நமது ப்ர்ச்னையை இன்னும் பெரிதாக்கி செல்கிறோம். கடவுளை உதவிக்கு அழைத்த பின் இன்னும் மனச்சோர்வு அடைகிறீர்களா? நன்றாக கவனியுங்கள், யேசு உங்கள் அருகிலேயே நிற்கிறார், உங்கள் அதி விசுவாசத்தையும் நம்பிக்கையும் பெற. கடவுள் உங்கள் தடைகளை உடைதெறியாமல் இருப்பதால், நீங்கள் செயல்குழைந்து போகிறீர்களா? மேலும் கவனியுங்கள் யேசு உங்கள் நீங்கள் செல்லும் வழியை விட்டு, வேறு வழிக்கு , அவர் காட்டும் வழியில் செல்ல சொல்கிறார்.

நாம் எல்லாருக்கும் பகைவர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு எதிராக வேலை செய்யும் சாத்தானின் ஆவியை யேசு வெட்டி உங்களை விட்டு தூர ஒட்டுகிறார். ஆனால், அந்த யேசுவின் செயலை நம்பவில்லையானால், யேசுவின் வாளினால், உங்களுக்கு ஒரு உதவியும் இல்லை.
உங்களை அடிக்கடி எப்பொழுதுமே தொந்தரவு செய்பவர்களை என்ன செய்யலாம். உங்கள் கண்கள் யேசுவை பார்க்காமல், அவர்களையே பார்த்து கொண்டிருந்தால், யேசு உங்களுக்கு கொடுக்கும் உரிமையை நீங்கள் தவற விட்டு விடுவீர்கள். நாம் விசுவாசத்தோடு வாழும்போது, யேசு நமக்கு கொடுக்கும் உரிமையை, அன்பளிப்பை நாம் அனுபவிக்க முடியும். அதனை நாம் இதயத்திலும், அவரது அமைதியையும், சமாதானத்தையும்,இடைவிடா முயற்சியையும் நாம் அனுபவிப்போம்.

© 2010 by Terry A. Modica

Friday, October 8, 2010

அக்டோபர் 10, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 10, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 28ம் ஞாயிறு
2 Kings 5:14-17
Psalm 98:1-4
2 Timothy 2:8-13
Luke 17:11-19

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 17


பத்து தொழுநோயாளர்கள் நோய் நீங்கப்பெறுதல்
11 இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.12 ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே,13 ' ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் ' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.14 அவர் அவர்களைப் பார்த்து, ' நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள் ' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.15 அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்;16 அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.17 இயேசு, அவரைப் பார்த்து, ' பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?18கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே! ' என்றார்.19 பின்பு அவரிடம், ' எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், ஏன் 9 தொழு நோயாளிகள், தங்கள் நோய் குணமாகிய பின் யேசுவிடம் திரும்பி வந்து நன்றி சொல்லவில்லை? ஒரு வேளை, அவர்கள் குடும்பத்தினருக்கும் அல்லது நணபர்களிடமும் சொல்ல சென்று விட்டார்களோ? அல்லது உண்மையிலேயே நாங்கள் குணமாகிவிட்டோம், அதனால் உங்களோடு நாங்களும் சேர்ந்து இருக்கலாம் என்று அவர்களிடம் கூறினார்களோ? அல்லது ஒரு வேலை வாங்கி கொண்டு தங்கள் சம்பாத்தியத்தை பார்க்கலாம் என்று இருந்தார்களோ? ஏனெனில் தற்போது மற்றவர்களிடம் பிச்சை எடுத்து வாழமுடியாது என்று வேலை தேடியிருக்கலாம்.

எல்லாமே தகுதியான, மற்றும் நம்ப தகுந்த பதில்களே ஆகும்.
அந்த சமாரிய தொழுநோயாளிக்கும் மட்டும் என்ன வித்தியாசம். வித்தியாசம் அவனது உள்ளத்தில் இருந்தது. அவனது தெய்வீக ஆண்மாவில் இருந்தது. யேசுவின் மேல் உள்ள அவனது விசுவாசம் அவனது உடலை மட்டுமல்ல, அவனது ஆன்மாவையும் குணமாக்கியது. அவனுக்காக மட்டும் அவன் கடவுளை பார்க்க போகவில்லை. கடவுளுக்காகவும் அவன் யேசுவை பார்க்க சென்றான். அவனிடமிருந்து சிலவற்ற அவன் யேசுவுக்கு கொடுக்க விரும்பினான். பாராட்டுதல், ஆராதனை நன்றி மற்றும் பல, அவன் யேசுவிற்கு கொடுக்க விரும்பினான்.

நாமும் அப்படித்தான் இருக்கிறோமோ?
நாம் திருப்பலிக்கு செல்லும்பொழுது, நமக்காக மட்டும் தான் போகிறோமோ? அல்லது கடவுளுக்காகவும் போகிறோமா? இது இரண்டும் நடந்தால், நாம் கோவிலில் நல்ல ஒரு அனுபவத்தை அடைகிறோம். யேசு திவ்ய நற்கருணை வழியாக உங்களிடத்தில் வருவதற்கு யேசுவுக்கு நன்றியும், போற்றுதலும் கூறுகிறீர்களா? உங்கள் வேண்டுதலில் பெரு மகிழ்ச்சி அடைகிறீர்களா? நீங்கள் சந்தோசத்துடனே அங்கே இருக்கிறீர்களா?
நாம் நமது வேண்டுதலை கடவுளிடம் வைக்கும் பொழுது, நமக்காக அதனை கேட்கிறீர்களா? அல்லது கடவுளுக்காகவும் அந்த வேண்டுதல், கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கடவுளிடமிருந்து உங்களுக்கு என்ன தேவை என்று நினைத்து பாருங்கள். அந்த தேவைகள் கடவுளரசிற்கு எவ்வளவு உதவியாக இருக்கும் ?
ஒரு குறிக்கோளை நாம் அடையும் போது, அதனால் கடவுள் பயனடைகிறாரா? நமது சோதனைகளுக்கிடையே அவர் நமது வேண்டுதலுக்கு பதிலளிக்கும்போது , அவருக்கு என்ன கைமாறு கிடைக்கிறது?
கடவுள் அவருக்கே கொடுக்க முடியாத சில விசயங்கள் உங்களிடம் உள்ளன. நமது பாராட்டுதல் மற்றும் வேண்டுதல், ஆராதனை. இந்த அன்பளிப்புகளை குறைவாக மதிப்பிடாதீர்கள்.

© 2010 by Terry A. Modica

Friday, October 1, 2010

அக்டோபர் 3, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

அக்டோபர் 3, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 27ம் ஞாயிறு
Habakkuk 1: 2-3; 2: 2-4
Psalm 95:1-2,6-9
2 Timothy 1:6-8, 13-14
Luke 17:5-10

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 17

இயேசுவின் அறிவுரைகள்
(மத் 18:6 - 9; மாற் 9:42 - 48)
. ' 5 திருத்தூதர்கள் ஆண்டவரிடம், ' எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் ' என்று கேட்டார்கள்.6அதற்கு ஆண்டவர் கூறியது: ' கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ' நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில் ' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.7 ' உங்கள் பணியாளர் உழுது விட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ' நீர் உடனே வந்து உணவருந்த அமரும் ' என்று உங்களில் எவராவது சொல்வாரா?8 மாறாக, ' எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம் ' என்று சொல்வாரல்லவா?9 தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?10 அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ' நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம் ' எனச் சொல்லுங்கள். '

(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, நமக்கு அதிகம் தொந்தரவாக உள்ளது. கடினமான வேலைகளை செய்து, அதனை கடவுளுக்கு அர்ப்பணிக்கும்பொழுது, கடவுளிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது "நீங்கள் ஒரு நல்ல பணியாளன்"
நாம் வீட்டினில் வேலை செய்தாலும், அலுவலகத்தில் வேலை செய்தாலும், அதற்குரிய பாராட்டு கிடைக்காமல், மேலும் பல வேலைகள், நம்மை செய்ய சொல்வார்கள்!. குடும்பத்தில், பெற்றோர்கள் நாள் முழுதும் வேலை செய்து ஓய்வாக இருக்கும் நேரத்தில் கூட, குழந்தைகளுக்காக படிப்பு வேலை செய்ய வேண்டியிருக்கும். அலுவலகத்தில், நேர்மையாக வேலை செய்பவர்களுக்கு அதிக வேலை பளு தரப்படுகிறது, ஏனெனில் சோம்பேறிகளாக உள்ள நபரிடம் வேலை கொடுப்பதை விட, நல்ல முறையில் வேலை செய்பவர்களுக்கே அதிக வேலை கொடுக்கபடுகிறது. பங்கு கோவிலிலும், 10 சதவிகித மக்களே எல்லா வேலைகளையும் செய்கின்றனர்.
"கடவுளே நான் உங்கள் இறையரசின் நல்ல ப்ணியாளன் இல்லை! ஏனெனில், எனக்கு இடப்பட்ட வேலைகளை மட்டுமே நான் செய்கிறேன்!". என்று நாம் இந்த வேலைகளை செய்யும்போது , நம்முடைய பதில் இதுவாக இருக்கும் என்று இயேசு சொல்கிறார். அதிக வேலை பளு நமக்கு கொடுக்கபடவேன்டும் என்று இயேசு கூறுகிறாரா? அப்படி ஒன்றும் இல்லை. என்ன சொல்கிறார் என்றால், நமக்கு கொடுக்கபட்ட வேலைகளை செய்வதை விட, நமது அன்பினாலும், அக்கறையினாலும் நாமே அந்த வேலைகளை எடுத்து செய்ய வேண்டும் என்பதே ஆகும்.


ஓய்வெடுப்பதும் மிக முக்கியமாகும். இயேசுவும் சில நேரம் எடுத்து கொன்டு ஜெபம் செய்து, அவர் சக்தி பெறுவார். மற்றவர்களுக்கு வேலை கொடுப்பது சரியானது தான், அதனால், நாம் மட்டுமே எல்லா வேலைகளை செய்து நாம் நமது சக்தியை வீனடிக்க வேண்டியது இல்லை. இயேசுவும் சில வேலைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். இதே போல் சமமக பிரித்து கொள்வது தான் நாம் எல்லாருக்கும் தேவையானது.
எனினும், நம்மில் பலர், இன்னும் கொஞ்சம் அதிகம் வேலை செய்ய வேன்டும் என்று நினைப்பதில்லை, அதற்காக முயற்சி எடுப்பதுமில்லை. ஏனெனில், நமக்கு எதிலும் சமமான , ஆக்கபூர்வமான விசுவாசம் இல்லை. மிதமான நிலையிலேயே, இருக்க விரும்புகிறோம். ஒரு வேலை நாம் செய்ய வேன்டிய தேவையிருந்தால் தான் நாம் செய்கிறோம். அல்லது நமக்கு தோதுவாக இருந்தால் தான் அந்த வேலையை செய்கிறோம். இதையே தான் நமது தெய்வீக வாழ்விலும் செய்கிறோம். மேலும் ஒரு மரத்தை கடலில் போய் விழு என்றால் , விழுந்துவிடும் என்று இயேசு சொல்வதை பார்த்து நாம் ஆச்சரியபடுகிறோம். எப்பொழுது நீங்கள் இது போல ஆச்சரியத்தை பார்த்தீர்கள்?

அதிக விசுவாசத்துடனும், அதிக சேவையும், வேலையும் செய்வதிலும் உள்ள தொடர்பு இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது: இந்த இரண்டுமே நடக்க, நாம் கடவுளின் அன்பு முழுமையானது என்றும், எவ்வித நிபந்தனையற்றது எனவும், நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதிலிரிந்தே கடவுள் நமக்கு சேவை செய்ய எப்பொழுது தயாராய் இருக்கிறார் என்பது நமக்கு தெரிகிறது. அதனால், நம் மூலம், அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதனை அவரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நமக்கு கிடைக்கிறது. நாம் அயற்சி ஆகும்பொழுது , கடவுள் நமக்கு மீண்டும் உற்சாகமும், ஆற்றலும் சக்தியும் கொடுப்பார். இதனை நீங்கள் நம்புகிறீர்களா?

© 2010 by Terry A. Modica

Friday, September 24, 2010

செப்டெம்பர் 26, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டெம்பர் 26, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Amos 6:1a, 4-7
Ps 146:(1b) 7-10
1 Timothy 6:11-16
Luke 16:19-31

செல்வரும் இலாசரும்
19 ' செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.24 அவர், ' தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன் ' என்று உரக்கக் கூறினார்.25 அதற்கு ஆபிரகாம், ' மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது ' என்றார்.27 ' அவர், ' அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே ' என்றார்.29 அதற்கு ஆபிரகாம், ' மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் ' என்றார்.30 அவர், ' அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள் ' என்றார்.31 ஆபிரகாம், ' அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள் ' என்றார். '

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் உள்ள பணக்காரனின் பாவம் என்ன? அவன் இறந்த பிறகு எதனால் அவனுக்கு அந்த சித்திரவதை கிடைத்தது.? செல்வத்துடன் இருப்பது ஒன்றும் பாவமில்லை; அவனுடைய ஆண்மாவை துன்புறுத்தியது எது என்றால், அவருடைய செல்வத்தை பிறருக்கு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை, லாசருடனும் அவன் பகிரிந்து கொள்ளவில்லை, அவனுக்கு வாய்ப்பு இருந்தும் அந்த பணக்காரன் பயன்படுத்தி கொள்ளவில்லை.

மரணம் ஒன்றும் வாழ்வின் முடிவல்ல; நமது ஆண்மா, நமது மரணத்தில் தான் முழுதுமாக திறந்து கடவுளின் அன்பில் வாழ்வோம். மரணத்தின் மூலம்தான், நாம் கடவுளையும் அவர் நமக்கு கொடுத்த அன்பளிப்புகளையும், ஆற்றலையும் முழுது அறிந்து கொள்ள முடியும். மேலும், அந்த ஆற்றலை நாம் சரியாக பயன்படுத்த வில்லை என்றும் நாம் அறிவோம்.

நாம் நமது திறமைகளை, கடவுளின் அன்பளிப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், நாம் கடவுளரசில் முதலீடு செய்கிறோம். கடவுளின் பொருளாதாரத்தில், நமது முதலீடு பல மடங்கு பெருகும். நாம் கொடுப்பதை விட பல மடங்காக நமக்கு கிடைக்கும் அதனையும் நாம் பலரோடு பகிர்ந்து கொள்ளலாம்.

அதற்கு மாறாக, நாம் நமது செல்வத்தை நமக்காக மட்டும் வைத்திருந்தால், இருட்டறையில் இருக்கும் பூவை போல வாடிவிடும். இருட்டறையில் பூச்செடியினால் வளர முடியாது. எதையெல்லாம் காப்பாற்றி வைக்க ஆசைபடுகிறீர்களோ , அது உபயோகமில்லாமல் போகும், மேலும் விசாமாக கூட போகலாம்; பரிசுத்த வாழ்விலும் , சொந்த வாழ்விலும் தேங்கி நிற்கிறோம். நமக்கு கிடைத்த அன்பளிப்புகள் வீணாகி விடும். நமது சுய ஆசைகளுக்காக நாம் கடவுளோடு நமக்கு உள்ள இணைப்பை நாமே அழித்து கொள்கிறோம். அந்த கடவுள் தான் தாராள மனத்தின் அரசராவார்.

ஒவ்வொரு நாளும், நாம் நம்மளுடையதை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் ஆசிர்வாதங்களையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். லாசரை அந்த பணக்காரன் ஒதுக்கியதற்கு காரணம், லாசருக்கு உள்ள நோய் தான். அவன் தொழு நோயாளி என்பதை நீங்கள் அனுமானிக்கலாம்.

அடுத்து இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: நாம் கொடுத்து உதவ வேண்டியவர்களை பார்க்கும் போது அருவருப்பாக இருப்பதினால், நாம் கொஞ்சமாக கொடுக்கிறோமோ? அல்லது அவர்கள் மேல் மனக்கசப்பும் , மன்னிக்க முடியாத கோபமும் இருக்கிறதா? கடவுளோடு இனைந்திருக்க வேன்டுமானால், இதே மாதிரி நிலையில் நாம் இருக்க முடியாது. அன்பின் மூலம் நாம் நம்மையே உறசாகபடுத்தி கொண்டு, தாராள மனதை வளர்ப்போம்.

இன்றைய இரண்டாவது வாசகத்தில், "விசுவாசத்திற்காக போராடு" யாரோடு போட்டி போடுகிறோம்.? நம்மோடு!, நேற்றையை விட இன்று இன்னும் பரிசுத்த மாக இருக்கிறீர்களா? இன்னும் தாராள மனதை கொண்டு இருக்கிரீர்களா? இன்னும் பழைய நிலையிலே மந்தமாக இருக்கிறீர்களா? அல்லது இன்னும் பரிசுத்தமாகவும், உங்கள் பாவங்களை கண்டு கொண்டு மணம் மாறி கடவுளோடு இணைந்து இருக்கிறீர்களா?

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, September 17, 2010

செப்டம்பர் 19, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 19, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 16


முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்
1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: ' செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.2 தலைவர் அவரைக் கூப்பிட்டு, ' உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது ' என்று அவரிடம் கூறினார்.3 அந்த வீட்டுப் பொறுப்பாளர், ' நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.4வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் ' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ' நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார்.6 அதற்கு அவர், ' நூறு குடம் எண்ணெய் ' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ' இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும் ' என்றார்.7 பின்பு அடுத்தவரிடம், 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். 8நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.9 ' ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?13 ' எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது. '

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், எப்படி ஒருவன் செல்வத்துடனும், பரிசுத்தமாகவும் இருக்க முடியும் என்று கூறுகிறது. பணமும், பொருட்செல்வமும் நமது கடவுளாக இருந்தால், நாம் பரிசுத்தமானவர்களாக இருக்க முடியாது; நாம் கடவுளிடமிருந்து பிரிந்து விடுகிறோம். ஏனெனில் நமக்கு கிடைத்த பொருட்களை தாராளாமாக மற்றவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று பைபிள் குறிப்பிட்டு சொல்கிறது.

செல்வத்தை சேர்த்து கொள்வதில் நாம் அதிகம் ஆர்வம் காட்டி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்தும், அதனை மற்றவர்களிடம் பிரித்து கொடுப்பதில் முக்க்யத்துவம் கொடுக்காமல் இருந்தால், கடவுள் நமது தலைவராக இருக்க மாட்டார். இது பொருட்செல்வத்திற்கு மட்டும் இல்லை, நம்மிடம் உள்ள எல்லா நல்ல விசயங்களுக்கும் பொருந்தும்.
நமக்கு எல்லா வகையான திறமைகளும், ஆற்றலும், செல்வமும் கொடுக்கப்பட்டிருக்கிறது; இதனையெல்லாம் பகிர்ந்து கொள்வதற்கு நாம் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறோம்?

"நேர்மையற்ற முறையில் வந்த செல்வம்" எது என்றால், யேசு "மற்றவர்களுக்கு போய் சேரவேண்டியது" என்று சொல்கிறார். மற்றவர்களின் பணத்தை (கடன் ) நமது சொந்த உபயோகத்திற்காக வாங்கினாலும், கடவுளரசிற்கு அதனால், சிறிதளவேனும் பயன் இல்லையெனில் , நாம் நம்பிக்கையானவர்களாக கடவுளின் பணியாளனாக இல்லை


அதே போல, நமது நேரத்தை நமது சொந்த உபயோகத்திற்காக செலவழித்தாலோ, பரிசுத்தமற்ற விசயங்களில் செல்வழித்தாலோ, நாம் கடவுளரசிற்கு நம்ப தகுந்தவர்கள் இல்லை. இயேசு உங்கள் மூலமாக மற்றவர்களை ஆசிர்வதிக்க விரும்புகிறார். அவர்களுக்கு சேரவேண்டியதை உங்களிடம் வைத்து கொண்டிருக்கிறீர்கள், யேசு அதனை அவரின் அன்பளிப்பாக உங்கள் மூலம் கொடுக்க சொல்கிறார். நாம் இந்த கடமையை (கடவுளின் பொருளாதாரத்தில் முக்கிய கொள்கை ) ஒதுக்கி தள்ளினால், "உங்களுக்கு சேர வேண்டியதை யார் தருவார்?" என்று இயேசு கேட்கிறார்.

நாம் கடவுளின் நம்பிக்கைகுரிய பணியாளனாக இருந்தால், நமக்கு என்ன கிடைக்கும். நித்திய வாழ்விற்கு உரித்தான அத்தனை செல்வங்களும் நமக்கு உண்டு: ஆவியின் செல்வங்கள், கடவுளின் பாராட்டுதலும் , அவரின் முழு அன்பும், இன்னும் பல உங்களுக்கு கிடைக்கும்.
நமது செல்வங்களுடனும், பரிசுத்த வாழ்விலும் இருக்க வேண்டுமானால், நாம் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய அன்பை - கடவுளின் அன்பை- மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். நாம் இவ்வுலக செல்வங்களையும், நித்திய வாழ்வின் செல்வங்களையும்(விசுவாசம், ஞாணம், நம்பிக்கை, இன்னும் பல) , மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதில் தான் நாம் கடவுளின் நம்பிக்கை உள்ள பணியாளனாக இருக்க முடியும்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, September 10, 2010

செப்டம்பர் 12, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 12, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 24ம் ஞாயிறு
Exodus 32:7-11, 13-14
Ps 51:3-4, 12-13, 17, 19
1 Timothy 1:12-17
Luke 15:1-32



லூக்கா நற்செய்தி


அதிகாரம் 15


காணாமற்போன ஆடு பற்றிய உவமை
(மத் 18:12 - 14)
1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர்.3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:4 ' உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?5 கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்;6வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன் ' என்பார்.7 அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
காணாமற்போன திராக்மா உவமை
8 'பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? 9 கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன் ' என்பார்.10 அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். '
காணாமற்போன மகன் உவமை
11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.17 அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார்.20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.21 மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார்.22 தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;23 கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார்.27 அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார்.28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.29 அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார்.31 அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். '

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, எதையெல்லாம் கடவுளரசிடமிருந்து இழந்தாரோ, அதனை அவர் பக்கம் கொண்டு வருவதில் தான் அவர் ஆர்வம் உள்ளது என்று கூறுகிறது. நமது கடவுள் மீண்டும் நட்பினை புதுப்பிப்பதிலும், சமாதானம் ஆவதிலும் ஆர்வம் உள்ளவர் ஆவார். உண்மையிலிருந்து விலகி நிற்பவர்களை மீண்டும் உணமை அறிய செய்பவர் ஆவார். ஏன்? காணாமற் போன ஆடுகளை போல , காணாமற் போன பொருட்களை போல உள்ளவர்கள் மேல், நாம் கொண்டுள்ள அக்கறை விட, கடவுள் அவர்கள் மேல் அதிக அக்கைறை கொண்டுள்ளார்.


உங்களை நிராகரித்தவர்கள், உங்களை விட்டு விலகியவர்களை நினைத்து பாருங்கள். அந்த நட்பினை புதுப்பிக்க , உடைந்த உறவை இணைக்க கடவுள் அக்கறை கொள்கிறார். அந்த முயற்சியை, அவர்களின் கடைசி மூச்சு இருக்கும் வரை கடவுள் கைவிடமாட்டார். (சில நேரங்களில், அந்த சமரசப்படுத்துதல், இறப்பிற்கு பிறகும் கூட நடக்கும்). மேலும் விசுவாசத்தை ஒதுக்குபவர்களை நினைத்து பாருங்கள். அவர்களை யேசு என்றும் கைவிடமாட்டார், அவர்க்ளை கடவுளிடம் திருப்பும் முயற்சியில் என்றுமே கைவிடமாட்டார்.

ஏன்? ஏனெனில், அவர்களின் பங்கும், மதிப்பும், உங்களுடைய குடும்பத்திற்கும், திருச்சபைக்கும் இல்லாமல் இருக்கிறது. சமுகத்தில் சக்தியை குறைக்கிறது. சமூகத்தின் வாழ்விற்கு ஊற்றாக இருக்க கூடிய கடவுள், அவர்களையெல்லாம், குணப்படுத்தி, பாதுகாப்பாக மீண்டும் கடவுளரசில் இணைய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.


இவையெல்லாவற்றையும், கடவுளே செய்யட்டும் என்று நாம் விட்டு விட கூடாது. எனினும், அவர் இந்த வேலைகளையெல்லாம், நம் மூலம் செய்கிறார், ஆனால், நாம் முயற்சி செய்து, அந்த் முயற்சி பலனடையாவிட்டால், இன்னும் நாம் முயற்சியை அதிகமாக்க வேண்டும் என்றில்லை. இந்த ப்ரச்னையில், கடவுள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று நாம் நம்ப வேண்டும். இயேசு அவர்களை பின் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்று நாம் நம்புவோம். அவர்கள் இயேசுவிடமிருந்து ஒளிந்து இருந்தாலும், அவர்களை தேடி யேசு செல்வார். அவர்க்ளை யேசுவை தள்ளிவிட்டாலும், யேசு அவர்களை மணம் மாற்ற முயற்சிப்பார்.


இந்த மந்தையில் , வேறு ஏதாவது வழியில் அவர்களை அழைக்க வழியிருந்தாலும், அந்த முயற்சியை மேற்கொள்ளுங்கள். அப்படியில்லையெனில், யேசுவிற்கு நாம் ஏன் அந்த வழியில் முயலவில்லை என்று பதில் சொல்ல வேண்டும். பாவிகளை அன்பு செய்வதில் நாம் ஏன் தோல்வியுற்றோம், தனியாக திரிபவர்களிடமும், ஒதுக்கபட்டோரிடமும், நாம் ஏன் நமது அன்பை காட்டவில்லை என்று யேசுவிடம் பதில் கூறவேண்டும். அவர்களுக்கு எப்படி உதவி செய்திருக்கலாம் என்றும், நாம் ஏதோ செய்து, அவர்களை தள்ளிவிட்டோமா? என்றும் நாம் யேசுவிற்கு பதில் சொல்ல வேண்டும்.


நம்முடைய குற்ற உணர்வுகளுக்காக நாம் மணம் திரும்பி நாம் முதலில் ஆரம்ப்பிபோம். நம் தாழ்ச்சியும், இரக்கமும், பாவமன்னிப்பும் , நமது குறைபாடுள்ள அன்பை விலக்கி, முழு அன்பை , தூய அன்பை அவர்கள் புரிந்து கொள்ள உதவும். அதன் மூலம் யேசுவின் தூய அன்பை அவர்களுக்கு அளிப்பார்.


http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, September 3, 2010

செப்டம்பர் 5, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 5, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு
Wisdom 9:13-18b
Ps 90:(1) 3-6, 12-17
Philemon 9-10, 12-17
Luke 14:25-33

லூக்கா நற்செய்தி


அதிகாரம் 14



இயேசுவின் சீடர் யார்?
(மத் 10:37 - 38)
25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:26 ' என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.28 ' உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,30 ' இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை ' என்பார்களே!31 ' வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

(thanks to www.arulvakku.com)

உங்கள் வாழ்க்கையில் கடவுளின் உறவை விட,வேறு எதற்கு முதன்மை இடம் கொடுக்கிறீர்கள்? இன்றைய நற்செய்தியில், யேசு எதற்கு முதன்மையிடம் கொடுக்கிறீர்கள் என்று பார்க்க சொல்கிறார். உங்கள் நன்பர்களுக்கா ?, உங்கள் வேலைக்கா? உங்கள் சொத்துக்கா? உங்கள் லட்சியங்களுக்காகவா? இல்லை உங்கள் அனுதின செயல்களுக்கா?

எந்த சிலுவையிலிருந்து விலக விரும்புகிறீர்கள்? அதிலிருந்து விலகுவதால், இயேசுவை ஒதுக்கி தள்ளுகிறீர்களா? (குறிப்பாக: அன்பிற்காக எந்த தியாகத்தை செய்ய நீங்கள் விரும்பவில்லை? )

நாம் அவருடைய சீடராக இருப்பதற்கு முழுமையான பற்றுதலோடும், ஒத்துழைப்போடும் இல்லாமல் இருந்தால், அவரை போல மாறாமலும், அவரிடமிருந்து கற்காமலும் இருந்தால், நமது வாழ்வில் மற்ற வேலைகளுக்கும் நாம் சரியாக தயார் படுத்தவில்லை என்று இயேசு கூறுகிறார்.


மாறாக சொல்வதானால், நாம் நமது முக்கிய நோக்கத்திற்காக, நமது வேலைகளை சரியாக செய்து வந்தாலும், கிறிஸ்துவோடு உள்ள நமது உறவு எல்லாவற்றிற்கும் மேலான , முதன்மையான குறிக்கோளாக இல்லையெனில், நாம் மிகச்சரியான முடிவிற்கு செல்ல முடியாமால் இருப்போம். ஏனெனில், இவ்வுலக சிந்தனைகளால், மிகவும் தொந்தரவிற்கு உள்ளாவோம். அதனால் பாதிக்கபடுவோம், வெற்றியாளராக இல்லாமல், பாதிக்கப்பட்டோராய் இருப்போம். இவ்வுலகில் நாம் செய்து முடிக்கும் எந்த வெற்றியும் தற்காலிகமானதே, ஏனெனில், அந்த வெற்றியில், கடவுளரசின் நோக்கங்களோ, அல்லது நித்திய வாழ்விற்கான ஆயத்தங்களோ இல்லை.



சீடர் என்பவர் மானவர் ஆவார். யேசுவிடமிருந்து, மற்றவர்களை அன்பு செய்வது எப்படி என்று கற்று கொள்கிறோம். சில் நேரங்களில், இதுவே, நமக்கு மிகப்பெரிய சிலுவை ஆகும். யேசு நமக்கு எப்படி , அன்புடனும், சந்தோசத்துடனும், நிபந்தனையற்ற அன்புடனும், மன்னித்து வாழவும் வாழ கற்று தருகிறார். நமது பரிசுத்த வாழ்வில் தொந்தரவு செய்பவர்களையும் நமது எல்லைக்குள் வரவிடாமல் இருக்கவும் யேசு நமக்கு கற்று தருகிறார். இதுவே நமக்கு ஒரு சிலுவையாக இருக்க கூடும்.

இயேசுவை பின் செல்வதிலும், அவரை போலவே மாறுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றால், தொடர்ந்து நாம் முயற்சி செய்து, நமக்கு வரும் சிலுவையை தூக்கி கொண்டு , நம்மையே யேசுவோடு இணைத்து, அவரின் சிலுவையோடு, நாமும் இனைந்து, அவரது ஆற்றலோடு நாமும் இனைந்தால் தான், நம்மால் அவர் பின் செல்ல முடியும். கிறிஸ்துவோடு உள்ள இனைப்பில் நாம் கவனம் செலுத்தவில்லையென்றால், நாம் நமது முயற்சியில் தோல்வியடைவோம். சிலுவையின் பாரத்தால், நாம் கீழே விழுவோம். ஆனால் இயேசு செய்ததை போல , மற்றவர்களின் அன்பிற்காக நாம் தியாகம் செய்ய முயற்சித்தால், யேசுவை முழுமையாக அனைத்து, அவரோடு முழு இனைப்பில், நாம் செய்ய வேண்டியதை செய்வோம். இது எந்த் ஒரு ஜெபமும், அல்லது மற்ற முறைகளையும் விட மிகவும் அதிக பலனை தரக்கூடியது.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, August 27, 2010

ஆகஸ்டு 29, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 29, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு

Sirach 3:17-18, 20, 28-29
Ps 68:4-7, 10-11
Hebrews 12:18-19, 22-24a
Luke 14:1, 7-14

லூக்கா நற்செய்தி


அதிகாரம் 14


1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
விருந்தினருக்கும் விருந்தளிப்போருக்கும் ஒரு போதன
7 விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை:8 ' ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ' இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள் ' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ' நண்பரே, முதல் இடத்திற்கு வாரும் ' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.11 தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். ' 12 பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ' நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். 13 மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும் ' என்று கூறினார்.
(www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி நம்மில் ஒரு கேள்வியை எழுப்புகிறது: நான் ஒரு நல்ல விசயம் செய்யும்பொழுது, என்னுடைய நோக்கம் என்ன? என்னுடைய எதிர்பார்ப்பு என்ன? நான் சுய நலத்துக்காக செய்தேனா? அல்லது மற்றவர்களின் நலனுக்காக செய்தேனா?


மற்றவர்கள் பலனடைந்து , அதன் மூலம் நமக்கு திரும்பி ஏதாவது கிடைக்கும் என்ற என்னத்தில் செய்தோமானால், அது தவறானது. அது கிறிஸ்துவை போல நாம் செய்ய வில்லை என்று அர்த்தம்.
இதனைதான், யேசு ஒரு உவமையாக சொல்கிறார், யாரெல்லாம் உங்களுக்கு திருப்பி செய்ய முடியாமல் இருக்கிறார்களோ? அவர்களை உங்கள் விருந்திற்கு அழையுங்கள் என்று கூறுகிறார். நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டுமானால், இதனை செய்ய வேண்டும் என்று யேசு கூறவில்லை. அப்படி நாம் அர்த்தம் எடுத்து கொள்ள கூடாது.

உண்மையான செய்தி என்னவென்றால், நாம் என்ன செய்தாலும், அதனை அன்பினாலும், அன்பிற்காகவும் செய்தோமானால், அது நல்லது என்பது ஆகும். நமக்கு பலன் கிடைக்கும் என்று எதையும் செய்ய கூடாது. மற்றவர்கள் பலன் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதனால் நமக்கு ஒன்றும் பலன் இல்லை. ஆனால் கொஞ்ச நேரம் யோசித்தால், உங்களுக்கு புரியும், இதனால், நம்மை எவ்வளவு நன்றியோடு அவர்கள் கான்பார்கள். இதை விட வேறு என்ன உங்களுக்கு வேண்டும்.
யாராவது நமக்கு எதிராக பாவம் செய்தால் கூட, நாம் அவர்கள் மாற வேண்டும் என வேண்டிகொள்வோம். அவர்களின் ஆண்ம நலனுக்காக நமது ஜெபம் இருக்க வேண்டும். நமது வாழ்வு ப்ர்ச்னை இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் நாம் அக்கறை கொள்கிறோம். ஆனால் இது தான் நமது முக்கிய நோக்காமாக இருக்க கூடாது.

கிறிஸ்துவை பின் பற்றுவர்களாக நாம் இருப்பதால், நாம் செய்யும் நல்ல விசயங்களுக்கு நாம் ஏதாவது பலன் அடைந்தால், அது நமக்கு கிடைக்கும் கூடுதல் ஊக்கமாகும். நாம் இந்த கூடுதல் ஊக்கத்திற்காக எதிர்பார்ப்போடு இருக்கலாம், ஆனால் நமது சந்தோசம் அதில் இருக்க கூடாது.
நமது நோக்கமும், எதிர்பார்ப்பும் தெளிவாக இருக்கும்பொழுது, நாம் யேசுவை போல இருக்க அதிக சுதந்திரத்துடன் தெரிந்து கொள்கிறோம். இயேசு ஏற்கனவே கூறியது போல, "உங்கள் பரிசும், மீட்பும், சரியான நேரத்தில் உங்களை வந்தடையும்". அந்த வாக்குறுதியின் பலன் இப்பொழுதிலிருந்தே ஆரம்பிக்கிறது. நாம் யேசுவை போல மாற , நாமும் மீட்படைந்து விட்டோம் என்ற என்னத்துடன், ஆரம்பிதால், கண்டிப்பக அந்த வாக்குறுதி நமக்கு கிடைக்கும்.

நமக்கு இப்பொழுது கிடைக்கும் பரிசு என்னவென்றால், கடவுள் நமக்கு கொடுக்கும் தெய்வ கிருபை, அதன் மூலம், அவர் கேட்கும் எல்லாவற்றையும் செய்யும் ஆற்றல்: சுயநலமில்லாமல், பரிசுத்தத்துடனும், தாராள குணத்துடனும் இருத்தல் வேண்டும். இது இல்லாமல் மேலும் பல ஆசிர்வாதங்களை நாம் பெறுவோம். ஆனால், அந்த மற்ற பலனுக்காக கிறிஸ்துவை போல நாம் இருப்பதாக கூடாது.

© 2010 by Terry A. Modica

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/

Friday, August 20, 2010

ஆகஸ்டு 22, 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 22, 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு
Isaiah 66:18-21
Ps 117:1, 2 (with Mark 16:15)
Hebrews 12:5-7, 11-13
Luke 13:22-30

லூக்கா நற்செய்தி


அதிகாரம் 13


இடுக்கமான வாயில்
22 இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.23 அப்பொழுது ஒருவர் அவரிடம், ' ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? ' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:24 ' இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ' 25 ' வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும் ' என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது ' எனப் பதில் கூறுவார்.26 அப்பொழுது நீங்கள், ' நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே ' என்று சொல்வீர்கள்.27 ஆனாலும் அவர், ' நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள் ' என உங்களிடம் சொல்வார்.28 ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள்.29 இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.30 ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர். '
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியின் வாசகங்கள், மோட்சத்தின் கதவுகள் மிகவும் குறுகியது என்று கூறும் சாலையோர போர்டுகளாகும். கடவுளுக்கு நமது செயல்களும், எண்ணங்களும் தெரியும் என்று இசையா கூறுகிறார். நமது செயல்களை புனிதமாக்கவும், எண்ணங்களை தூய்மையாக்கவும், அதன் மூலம், நாம் இறக்கும்பொழுது, கடவுளின் முழு புகழொளியை நாம் முழுமையாக பார்க்க முடியும் . அதற்காக கடவுள் நமக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தார், அது தான் இயேசு. அவரின் வாழ்வு, எப்படி வாழ்ந்தார், எப்படி இறந்தார் என்பதெல்லாம், நமக்கு பல அடையாளங்களாக, நம்மை மோட்சத்திற்கு செல்லும் வழியாகும். அதன் மூலம், நாம் மோட்சதிற்கு சென்று நமது முழு வாழ்வை வாழ்வோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கிறார்: தகுதியற்று , போதுமான ஆற்றலுடன் நிறைய பேர் மீட்பிற்காக முயற்சிப்பார்கள் என்று சொல்கிறார். அந்த போதுமான தகுதி என்ன?
நற்செய்தியில் எல்லா இடத்திலும் இயேச் இதற்கு பதில் சொல்கிறார்: நமது அன்பில் பரிசுத்தமான முழுமையான அன்பாக இருக்க வேண்டும். மோட்சத்தை திறக்கும் சாவி அன்பு தான். நாம் அதனை தூக்கி எறிந்தால், நாம் சாவியையும் தூக்கி எறிகிறோம்.

நாம் எப்பொழுதுமே அன்பினை தூக்கி எறிவதில்லை, நாம் பாவியாக இருந்தாலும். ஆனாலும், நாம் நமது அன்பில் பரிசுத்தமாகவும், முழுமையாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், எப்பொழுதுமே, எவ்வித நிபந்தனையுமின்றி , தியாகத்துடனும் அன்பு செய்ய வேண்டும்.
முழுமையான அன்பு செய்ய வேண்டும் என்றால், நாம் கடவுளின் அன்பை கொண்டிருக்க வேண்டும். யேசு நம்மில் வசித்து , அதன் மூலம், மற்றவர்களிடம் அவர் சென்றடைய வேண்டும். அப்பொழுதுதான் அது முழுமையான அன்பாகும்.
ஆண்டவரின் அன்பில் நாம் திளைக்க வேண்டும் என்றால், அவரின் அன்பை தடுக்கும் எதனையும் நாம் தூக்கி எறிய வேண்டும்: மன்னிக்காமல் இருப்பது, பழிவாங்குதல், நீடித்து இருக்கும் கோபம், மகிழ்ச்சியை வெறுப்பது, மேலும் மற்றவர்களின் தேவைகளை நிராகரிப்பது.
கடவுளின் ஒழுங்கை அவமதிக்க வேண்டாம் என்று இன்றைய வாசகம் கூறுகிறது. நமக்கு கஷ்டமாகவும், சோதனையாகவும் இருப்பவற்றை , கடவுள் உபயோகப்படுத்தி, நமது அன்பு முழுமையாக இருக்க உதவுகிறார். இதனையெல்லாம், நாம் அன்பினில் வளரும் வாய்ப்பாக நாம் எடுத்து கொண்டு , கடவுளின் உதவியை நாடி, அவர் நம்மை அன்பு செய்ய வைப்பார். அப்பொழுது, நாம் யேசுவை போல் மாறுவோம். மோட்சத்திற்கு நேரான பாதையை ஏற்படுத்து கிறோம்.மேலும் நமது பரிசுத்த வாழ்வில் உள்ள குறைகளும் குணமாக்கபடுகின்றன.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Saturday, August 7, 2010

ஆகஸ்டு 8, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 8, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு

Wisdom 18:6-9
Ps 33:1, 12, 18-22
Heb 11:1-2, 8-19
Luke 12:32-48

2 ' சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.34 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்
(மத் 24:45 - 51)
35 உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும்.36 திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.37 தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.38 தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.39 எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.40 நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். ' 41 அப்பொழுது பேதுரு, ' ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா? ' என்று கேட்டார்.42 அதற்கு ஆண்டவர் கூறியது: ' தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?43 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்.44 அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.45 ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில்46 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.47 தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.48 ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.
(thanks to www.arulvakku.com)



இன்றைய நற்செய்தியில், கடவுள் அவரது இறையரசை நமக்கும் தர திருவுளம் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த இறையரசு, நமது மோட்சத்திற்கும் , கடவுளின் நம் மேல் கொண்டுள்ள அன்பினால் நமக்கு இவ்வுலகில் கிடைக்கும் பயன்கள் பல.

கடவுள் நமக்காக எவ்வித நல்ல விசயங்களையும், பலன்களையும் அவருக்குள் வைத்து கொண்டு, நம்மை காத்திருக்க சொல்ல வில்லை. ஆனால், அதனை நாம் பயன்படுத்துகிறோமோ?

இயேசு இவ்வாறு விளக்குகிறார்: கடவுளின் அன்பையும், தாராள அன்பளிப்புகளையும், மற்றவர்களோடு பகிராமால், இந்த உலகின் செல்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், உங்கள் கைகளில் இருப்பவை அனைத்தும், சிறிது காலம் கூட உங்களுடன் இருக்காது. உங்கள் பணப்பைகள், இவ்வுலக நோக்கத்தால், கடவுளை வெளியே தள்ளுகிறீர்கள், மற்றவர்களையும் ஒதுக்குகிறீர்கள், கடவுளுக்கு உதவாத உறுவுகளால், நம் பரிசுத்த வாழ்விலிருந்தும் விலகுகிறோம். கடவுளின் அற்புதமான மற்றும், நித்திய அன்பளிப்புகளுக்கும் நாம் இடம் கொடுக்காமல் இருக்கிறோம். "உங்கள் மதிப்பும், பொருட்செல்வமும் எதனை பற்றி இருக்கிறதோ, அதில் தான் உங்கள் மனசும் செல்லும்."

கடவுளுக்கு உதவாத , ஒத்து வராத எதுவும் நமக்கு தீங்கிழைக்க கூடியது, மேலும் இறுதியாக நாம் விரும்பும் எதுவும் ஒன்றுமில்லாமல் போகும். ஏனெனில், அது நம்மை கடவுளோடு இனைப்பதில்லை, நம்மை மோட்சத்திற்கும் அழைத்து செல்வதுமில்லை. நாம் இந்த அழியும் விருப்பங்களையும், கடவுளின் அழியாத செல்வங்களுக்காக நாம் விட்டு விட வேண்டும்.

இயேசு ஒன்றும் நமது செல்வங்கள் அனைத்தையும், கடவுளின் செல்வங்களுக்காக நாம் விற்று விட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், கடவுளின் செல்வங்களை நோக்கி நமது எண்ணம் இருக்கவேண்டும். அது தான் முக்கியம். அந்த செல்வங்கள் எல்லாம் கடவுளரசிற்காக உபயோகப்படவேண்டும்.

நம்மை கடவுளோடு இனைப்பது எதுவெல்லாமோ, அதெல்லாம் தான் நமது செல்வமாகும், அதன் பலனை நித்திய வாழ்விலும் நாம் அனுபவிப்போம்.

நாம் இவ்வுலக ஆசைகளினால், நமது நேரத்தை செலவிட்டு வீணாக்க வேண்டாம் என்று யேசு நம்மை எச்சரிக்கிறார். நமது கடவுள் எப்பொழுது நம்மை இவ்வுலகை விட்டு அழைத்து செல்வார் என்று நமக்கு தெரியாது. அவர் நம்மை எடுத்து சென்று , மோட்சத்தில் நம்மை அவரோடு இனைத்து கொள்வார். நாம் தயாராய் இருக்கிறோமோ? அல்லது, இவ்வுலக செல்வங்களுக்காக நாம் விரும்பி, அதற்காக உழைக்கிறோமோ?

அதனால் தான், கடவுள் அவரது இரக்கத்தினால், நமக்கு உத்தரிக்கிரஸ்தலத்தை நமக்கு கொடுத்திருக்கிறார். நமது இவ்வுலக செல்வங்களை, ஆசைகளை ஒழித்தொழிக்க தான், உத்தரிக்கிறஸ்தலத்தை நமக்கு கடவுள் கொடுத்துள்ளார். அதை தான் சிறிதே கடவுளிடமிருந்து அடிபடுவான் என்று இயேசு சொல்கிறார். அதற்காக ஏன் காத்திருக்க வேண்டும், இன்றே நாம் கடவுளரசின் செல்வத்திற்காக உழைத்து , எந்த ஒரு திருடனும் திருட முடியாத நித்திய செல்வங்களை சேர்ப்போம்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Saturday, July 17, 2010

ஜுலை 18 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜுலை 18 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு

Gen 18:1-10a
Ps 15:1-5
Col 1:24-28
Luke 10:38-42



லூக்கா நற்செய்தி


அதிகாரம் 10


மார்த்தா மரியாவைச் சந்தித்தல்
38 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.39 அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.40 ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ' ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும் ' என்றார்.41 ஆண்டவர் அவரைப் பார்த்து, ' மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.42 ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், நமது கவலைகள் மற்றும் பயம் பற்றியும் யேசு நம்மிடம் பேசுகிறார். அவைகள் நம்மை தொந்தரவு செய்கிறது. அவைகள் நம்மை கட்டுபடுத்த ஆரம்பித்தால், நம் வாழ்விற்கு கேடு வந்து விடும். ஏனெனில், அவைகள், நாம் கடவுள் மேல் வைத்துள்ள கண்களை வேறு பக்கம் திருப்பிவிடும், மற்றும் அதன் விளைவுகள் இன்னும் மோசமாகி விடும்.

மரியாவோ நல்ல பங்கை தேர்த்தெடுத்து கொண்டாள்; யேசுவிற்கு சீடராக இருப்பதையே குறிக்கோளாக கொண்டு , வேறு எதுவும் அவரை தொந்தரவு செய்யாதபடி பார்த்து கொண்டார். நாம் நமது பல வேலை நெருக்கடிகளிடையே, சில நேரம் ஒதுக்கி, யேசுவோடு அமைதியாக உட்கார்ந்து , அவரிடமிருந்து கற்று கொண்டால், நமது பல கவலைகள் , கவலையே பட தேவையில்லை என்று நமக்கு புரியும்.
யேசுவின் காலடியில் நாம் அமைதியாக உட்கார்ந்து அவரிடம் வேண்டினால் தான், நமது துயரங்கள் கவலைகள், மற்றும் துன்பங்கள் அனைத்தும் போக்கும், நம்பிக்கை கிடைக்கும். இந்த சோதனைகளிலிருந்து வெளிவர நமக்கு தேவையான ஞானம் கிடைக்கும். மார்த்தாவின் சின்ன கவலை போல, நமது சின்ன கவலைகளும், யேசுவின் மேல் இருந்த நமது கண்கள் எடுக்கப்பட்டால், அது பாவமாகும். எதுவும், யேசுவிடமிருந்து நம்மை அகற்றினால், அது நமக்கு நல்லதல்ல.

யேசுவிடமிருந்து , நாம் எப்படி பரிசுத்த வாழ்வை வாழ்வது என்று கற்று கொள்ளவில்லை என்றால், அவர் மேல் நம் கண்கள் இல்லாமல் இருந்தால், நாம் பரிசுத்த வாழ்வில் வளர முடியாது. அவரை போல நாமும் அன்பு செய்ய முடியாது, அவர் கொடுக்கும் எல்லா அன்பையும், நாம் பெற முடியாது. நாம் அவரோடு அமைதியாக அமர்ந்து, அவரிடம் வேண்டி, அவர் கூறும் போதனைகளை குடித்தால், ஒழிய நாம் அவரின் அன்பை அரவணைக்க முடியாது. வண்டி ஓட்டுபொழுதோ, அல்லது, ப்ரசங்கம் கேடபதும் போதாது.

கலக்கமும், கவலைகளும் பயத்தின் வகைகள் ஆவை. என்னவோ தவறான விசயம் நடக்க போகிறது என பயப்படுகிறோம். உண்மையான காரணத்திற்காக கவலைபட்டாலும், அது யேசுவின் மேல் உள்ள கண்களை தடுத்தால், அது தவறாகும். பயம் நமக்கு, ஒரு எச்சரிக்கை மணியாகும், அதனை கண்டவுடன், நாம் அமைதியாக யேசுவோடு உட்கார்ந்து ,அவருடன் கலந்தாலோசித்து, எதனால் இந்த பயம் என்று தெரிந்து, அவரிடமிருந்து அதற்கான பதிலையும், ஊக்கத்தையும், அதன் பிறகு அமைதி வரும் என்ற நம்பிக்கையையும் பெறலாம்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, June 25, 2010

ஜூன் 27, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஜூன் 27, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 13ம் ஞாயிறு

1 Kings 19:16b, 19-21
Ps 16:1-2, 5, 7-11
Gal 5:1, 13-18
Luke 9:51-62


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 9


1 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,52 தமக்கு
முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.54 அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள்.55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ' நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ' என்றார்.58 இயேசு அவரிடம், ' நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ' என்றார்.59 இயேசு மற்றொருவரை நோக்கி, ' என்னைப் பின்பற்றிவாரும் ' என்றார். அவர், ' முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் ' என்றார்.60 இயேசு அவரைப் பார்த்து, ' இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் ' என்றார்.61 வேறொருவரும், ' ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் ' என்றார்.62 இயேசு அவரை நோக்கி, ' கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல ' என்றார்.
(thanks to www.arulvakku.com)



உங்களை யாரும் ஏற்று கொள்ளவில்லையெனில், அந்த நிலைமையை எப்படி சமாளிப்பீர்கள்? இன்றைய நற்செய்தியில் சீடர்கள் அந்த நிலைமையை எப்படி கையாண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. யேசுவுக்கு முன்னரே சாமரியரின் ஊருக்கு சென்றவர்கள், யேசு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார்கள். ஏனெனில், சமாரியர்கள் ,யூதர்களுக்கு எதிரான தவறான எண்ணத்தில் இருந்தனர். யேசு சொல்வதை அவர்கள் கேட்க விரும்பவில்லை. யேசு என்ன சொல்ல விரும்பினாலும், அவர்கள் இதயத்தை மூடி விட்டார்கள். அதனால், உலகை இரட்சித்தவரோடு இனைந்து இருக்கும் அனுபவத்தை அவர்கள் தவற விட்டு விட்டனர்.



உங்களோடு நெருக்கமாக இருப்பவர்களிடம், யேசுவை கொன்டு செல்லும்பொழுது, அவர்கள் ஏற்று கொள்ளவில்லையெனில், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? நீங்கள் சொல்வதை ஒருவர் கேட்கவில்லையெனில், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? திருச்சபையின் போதனைகளை, நீங்கள் விளக்கி சொல்லும்பொழுது, அதனை புரிந்து கொள்ள கூட அவர்கள் முயற்சிக்காத பொழுது, நீங்கள் என்ன நினைப்பீர்கள்?


உங்களை விட, யேசுவின் சீடர்கள் அவர்கள் ஏற்று கொள்ளப்படாததை அதிகம் விரும்பவில்லை. யேசுவின் நெருங்கிய நன்பர்களான ஜானும், ஜேம்ஸும் , அவர்களை நெருப்பில் வைத்து எரிக்க வேண்டும் என விரும்பினர். "' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?" என்று யேசுவிடம் கேட்டனர். இயேசு ஏற்கனவே யாரவது "உங்களை யாராவது நிராகரித்தால், உங்கள் கால் செருப்பில் உள்ள தூசியை தட்டிவிட்டு, அந்த இடத்தை விட்டு செல்லுங்கள் " என்று கூறியிருக்கிறார். தற்போது, அவர் என்ன போதனை கூறினாரோ, அதையே அவர் பின் பற்றினார். யேசு அவரின் நம்பிக்கைகளை , அந்த ஊர் மக்களுக்கு தினிக்க விரும்பவில்லை. அவரின் போதனைகளை அந்த ஊருக்கு தேவை என்று தெரிந்திருந்தும், அவர் அந்த போதனைகளை அங்கே கூறியிருக்க முடியும்.


நாம் இயேசுவை பின் செல்ல வேண்டும் என்றால், நாம் நமக்கு பிடித்த நிறைய விசயங்களை, கெட்ட எண்ணங்களை விட்டு அவர் பின் செல்ல வேண்டும். மற்றவர்கள் மேல் உள்ள பொறாமையும், அதிருப்தியும், விருப்பமின்மையும் நீங்கள் தூக்கி எறியவேண்டும். யாரும் உங்களை ஏற்று கொள்ள வில்லையெனிலும், அதனை ஏற்று கொண்டும் நாம் யேசுவின் பின் செல்ல வேண்டும். நமது எண்ணங்களை மற்றவர்கள் கட்டுபாட்டுக்குள் விட கூடாது. நமது காலணியில் உள்ள அழுக்கை துடைத்து எறிய வேண்டும் என்றால், நமது தீய எண்ணங்களை துடைத்து விட்டு, யேசுவின் சந்தோசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.



இன்றைய நற்செய்தியின் முடிவில், யேசுவை பின் செல்வது, எப்போதுமே முன்னேறும் செயலாகும், என்று யேசு விளக்குகிறார். நாம் எப்போதுமே ஏதாவது ஒரு விசயத்தைவிட்டு வெளியே வருகிறோம். யாராவது நிராகரித்தால், அங்கிருந்து வெளியே வருகிறோம், அதிருப்தியான விசயத்தை விட்டு வெளியே வருகிறோம். இதயம் இல்லாதவர்களிடமிருந்தும் யேசுவை பின் செல்லாதவர்களிடமிருந்தும், நாம் வெளியே வருகிறோம்.


முன்னேறி செல்ல, பரிசுத்த ஆவிதான் , நம்மை தயார் பன்னி யேசுவை நாம் பெற்று கொள்ள உதவி செய்பவர். நாம் யாரையாவது, யேசுவிடம் அழைத்து வந்து, அந்த முயற்சி வெற்றி பெறவில்லயென்றால், நாம் உண்மையாக தோல்வி அடையவில்லை; நாம் அறுவடை செய்யாமல், விதை விதைக்கிறோம். பரிசுத்த ஆவி அந்த விதையை வளர்த்து, அறுவடை செய்வார். நாம் மற்ற வயல்களை பார்த்து செல்ல வேண்டும்.


http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Saturday, June 19, 2010

ஜூன் 20,2010 ஞாயிறு நற்செய்தி,மறையுரை

ஜூன் 20,2010 ஞாயிறு நற்செய்தி,மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு

Zec 12:10-11; 13:1
Ps 63:2-6, 8-9
Gal 3:26-29
Luke 9:18-24

லூக்கா நற்செய்தி


அதிகாரம் 9

18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று அவர் கேட்டார்.19 அவர்கள் மறுமொழியாக, ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.20 ' ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? 'என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ' நீர் கடவுளின் மெசியா ' என்று உரைத்தார்.21 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.22 மேலும் இயேசு, ' மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் ' என்று சொன்னார்.23 பின்பு அவர் அனைவரையும் நோக்கி, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.24ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.



(thanks to www.arulvakku.com)


"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" இந்த கேள்வியை தான் இன்றைய நற்செய்தி மூலமாக நம் ஒவ்வொருவருக்கும் கேட்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கை , இந்த கேள்விக்கு சரியான பதிலை கொடுக்கிறதா? , உங்கள் வாழ்வின் மூலமாகவும், உங்கள் பேச்சின் மூலமாகவும், யேசு தான் உங்கள் கடவுள், உங்களை இரட்சிப்பவர், உங்கள் அன்பு , உங்கள் போதகர், வழிகாட்டி, மேலும், மிக்ச்சரியான வாழ்வு வாழ்வதற்கு எடுத்து காட்டாக யேசு தான் இருக்கிறார் என்பதனை ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் எடுத்து சொல்கிறீர்களா?

உங்கள் வாழ்வு நலமாக இருக்கும்போது, யேசுவால் தான் இத்தனை ஆசிர்வாதமும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்கிறீர்களா? நீங்கள் ப்ரச்சினைகளில் இருக்கும்போதும், நீங்கள் மற்றவர்களை மன்னித்து, யேசு உங்கள் வலியையும் வேதனையையும் , அவர்களின் பாவங்களையும் யேசு சிலுவைக்கு எடுத்து சென்று விட்டார் என உங்களால் சொல்ல முடிகிறதா? சரியான காரணத்திற்காக நீங்கள் கோபப்படும் பொழுது, மற்றவர்களுக்கு எரிச்சல் கொடுக்கும் பேச்சை நீங்கள் பேசுகிறீர்களா? அல்லது யேசுவிடம் வேண்டி, இருவருக்கும் நடுவே அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்று கேட்கிறீர்களா?


நமது உதடுகள் யேசு தான் கடவுள் என்று சொல்லலாம் ஆனால், நமது வாழ்வோ அதற்கு எதிர்மாறாக இருக்கும். நமது நடவடிக்கைகள் மூலம், நாம் என்ன செய்தியை கொடுக்கிறோம் என்பதில் நாம் கன்னும் கருத்துமாக இருக்க வேண்டும். மிக கவனத்துடன் நமது வாழ்வை நடத்திட வேண்டும், நமது வார்த்தைக்கும், வாழவிற்கும் ஒற்றுமை இருக்க வேண்டும்.


நமது உள்ளத்திள் ஏற்படும் விளைவுகளாலும், வலியினாலும், பயத்தினாலும் நாம் பாவம் செய்கிறோம். நமது நடவடிக்கைகளில் என்ன மாறுதல் என்று நாம் கவனித்து கூர்ந்து பார்த்தால், யேசுதான் கடவுள் என்பதனை நாம் நினைவில் கொள்ளாமல் வைக்க என்ன நம்மிடம் இல்லை என்பது தெரியும். இதன் மூலம், நாம் யேசுவின் அன்பையும், அவரது குணப்படுத்தலையும் நாம் பெறுவோம்.

"எனது வாழ்வு யேசு தான் கடவுள் என்பதை ஆணித்தரமாக காட்டுகிறதா? , அவரின் உண்மையான ஆற்றலை , அன்பை காட்டுகிறதா? இந்த கேள்வியை நாம் ஒவ்வொரு நாளும் நமக்குள்ளே கேட்டு கொள்ள வேண்டும். இதற்குண்டான பதிலில்,நாம் எங்கே முன்னேற வேண்டும் என்பது நமக்கு தெரியும். அதன் மூலம் யேசு யார், அவர் எப்படிபட்டவர் என்பதும் நமக்கு தெரியும். இதன் மூலம், நம்மால் ஏன் மற்றவர்கள் மனதை மாற்ற முடியவில்லை என்பதும் தெரியும். நமது வாழ்க்கை வேறாக இருக்கும்பொழுது, நமது வார்த்தையை யாரும் நம்புவது இல்லை.


இயேசு யார்? அவருக்கு உன்னை நேரடியாகவும், உன் உள்ளத்தையும் அறிந்தவர். உனக்கு தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் உன்னை முழுதும் அன்பு செய்பவர், உனக்கு எப்பொழுதும் உதவி செய்பவர், நீங்கள் அந்த அன்பையும், உதவியையும் கான முடியாவிட்டாலும் கூட. என்றுமே உன்னை நிராகரித்ததில்லை. இதனை நீங்கள் நம்பினால், அவரிடம் பாதுகாப்பை நீங்கள் உணர முடியும். உங்கள் வாழ்க்கையில் எந்த ப்ரஸ்ன்னை இருந்தாலும், அவரின் அன்பு உங்களை என்றுமே அவர் பக்கத்தில் இருக்க வைக்கும். உங்கள் தூய சிலுவையை எடுத்து கொண்டு, அவரின் பின் செல்லுங்கள்.

© 2010 by Terry A. Modica

Friday, June 4, 2010

ஜுன் 6, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுன் 6, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
நற்கருணை திருவிழா

Gen 14:18-20
Ps 110:1-4
1 Cor 11:23-26
Luke 9:11b-17


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 9

11 அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.12 பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.13 இயேசு அவர்களிடம், ' நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். அவர்கள், ' எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும் ' என்றார்கள்.14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, ' இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள் ' என்றார்.15 அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.16 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.17 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.



(thanks to www.arulvakku.com)

அன்பானது ஐந்து அப்பங்களும் ,இரண்டு மீனும் போன்றது, அதனை மற்றவர்களிடம் கொடுக்காதவரை அன்பு மிகவும் குறைவாகவே காணப்படும்." கலிலேயே கடற்கரையில் வடக்கு பக்கம் உள்ள கோவிலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான், இயேசு இரண்டு மீனையும் , ஐந்து அப்பங்களையும் பல மடங்காக பெருக்கினார். அவரை பார்க்க வந்த அனைவருக்கும் உணவு வழங்கினார்.


அந்த கோவிலின் பீடத்தின் முன்னே மொசைக்கில் செய்யப்பட்ட மீனும், ரொட்டி துண்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. எந்த பாறையிலிருந்து யேசு அதனை பல மடங்காக பெருக்கினாரோ அதற்கு பக்கத்திலேயே உள்ளது. ஆனால் அங்கே 4 ரொட்டி துண்டுகள் தான் உள்ளது. ஏன்? ஐந்தாவது ரொட்டி துண்டானது, நமக்கு ஒவ்வொரு திருப்பலியிலும் திவ்ய நற்கருணையாக வழங்கப்படுகிறது.

இந்த கோவிலின் முகப்பை இந்த முகவரியில் நீங்கள் பார்க்கலாம். http://wordbytes.org/holyland/pilgrim049.htm

திவ்ய நற்கருணை கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை விட மேலானது. கிறிஸ்துவின் உடலுடன் இணைவதைவிட மேலானது, ஏனெனில், நாம் அனைவரும் திருச்சபயில் இணைகிறோம். இது ஒரு அற்புதமான தெய்வீக நிகழ்வாகும். பல மடஙக பெருகுகிறது. நமக்கு என்ன குறை இருந்தலும், யேசுவாக , பரிசுத்த ஆவி மூலம் நம்மில் வருகிறது. திருப்பலியில், நாம் திவ்ய நற்கருனையில் பங்கு கொள்ளும் பொழுது, நம்மிடம் இல்லாததை, பல மடங்காக பெருக்க வேண்டும் என நாம் யேசுவிடம் கேட்கலாம்.

இயேசு நமக்கு தேவையன அனைத்தையும் கொடுப்பார் என்று நாம் நம்பலாம், சரியான நேரத்தில், நம்மால் எவ்வளவு எடுத்து கொள்ள முடியுமோ அவ்வளவையும் தருவார். இருந்த போதிலும், இது ஒரு வளரும் செயலாகும்.
உங்கள் வாழ்க்கையில், உங்களுக்கு தேவையான அன்பு கிடைத்துள்ளதா? நம்மில் பலர் இல்லை என்று தான் சொல்வார்கள். ஏனெனில், கடவுளை தவிர மற்றவர்கள் யாராலும், நமக்கு தேவையான அன்பை கொடுக்க முடியாது. யாராலும், அவர்க்ள நம்மிடம் மிகவும் நெருக்காமாக இருந்தாலும், நம் நம்பிக்கைக்கு தகுந்தவர்களாக இருந்தாலும், கிறிஸ்துவோடு நெருக்கமாக இருந்தாலும், அவர்களால் நமக்கு தேவையான அன்பை கொடுக்க முடியாது.

திவ்ய நற்கருணை, கடவுளின் பரிசுத்த அன்பிற்கும், நமக்கும் இவ்வுலகில் இணைப்பை ஏற்படுத்துவது ஆகும். திவ்ய நற்கருணையோடு நம் இணைப்பை நாம் சரியாக புரிந்து கொள்ளாததால் தான், நாம் இன்னும் முழுமையான அன்பை உணரமுடியவில்லை. அந்த நற்கருணையின் முழுமையை , நம் வாழ்க்கையை மாற்றும், நற்கருணையை முழுமையாக பெற , நாம் நற்கருணையாக, முழு அன்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் நலனுக்காக , தியாகம் செய்த அன்பு தான் திவ்ய நற்கருணை. நீங்கள் உஙளுக்கு போதிய அளவு அன்பு கிடைக்கவில்ல என்றால், எவ்வளவு அன்பு நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ , அவ்வளவையும் கொடுங்கள். எல்லோருக்கும் திவ்ய நற்கருணையாக இருங்கள்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, May 28, 2010

மே 30, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 30, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த திரித்துவ திருவிழா
Proverbs 8:22-31
Ps 8:4-9 (with 2a)
Rom 5:1-5
John 16:12-15

________________________________________
யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 16

12 ' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.


கடவுள் , உங்களுக்கு தெரியாததை உங்களுக்கு தெரியப்படுத்துவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் யேசுவிடம் என்ன கேட்டு கொண்டிருக்கிறீர்கள் , இன்னும் உங்களுக்கு பதில் கிடைக்கவில்லை? திருச்சபை உங்களுக்கு கூறும் போதனைகளில் எது உங்களுக்கு ப்ரியவில்லை அல்லது உங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை? இன்றைய நற்செய்தியில், யேசு இன்னும் உங்களுக்கு நிறைய சொல்ல ஆசைபடுகிறார் என்று கூறுகிறார். ஆனால் அவர் கூறும் எல்ல விசயங்களையும் நம்மால், கையாள முடியாது.

ஏன் இன்னும் நாம் தயாராய் இல்லை? ஏனெனில், நாம் இன்னும் பரிசுத்த ஆவியிடம் நம்மை ஒப்படைத்து நம்மை தயார் படுத்தவில்லை. பரிசுத்த ஆவி நம்மை தயார்படுத்த விடவில்லை. நாம் நம்மையே கடவுளிடம் கொடுத்து நம்மை மாற்ற அவரிடம் கேட்க வேண்டும். உண்மை நமக்கு பெரிய சுமையாகவே இருக்கும், அது நமக்கு ஆசிர்வாதமாக இல்லாமல், சுமையாக இருப்பதால், நாம் உடனடியாக ஒதுக்கி வைத்து விடுகிறோம்.
யேசு சொன்னது அனைத்தும், தந்தை கடவுளிடமிருந்து பரிசுத்த ஆவி மூலமாக யேசுவிற்கு வந்தது. கடவுள் நமக்கும் அதே பரிசுத்த ஆவியை கொடுத்திருக்கிறார். அதே ஞானம், அதே உண்மை, எல்லா அன்பளிப்புகளும், அதனை உபயோகப்படுத்தவில்ல என்றால், அதெல்லாம் வீனான பொருளாகிவிடும் ஆனால், நம்மையும் பரிசுத்த ஆவியிடம் ஒப்படைத்து அவர் நம்மை தூய்மைபடுத்த வேண்டும். பரிசுத்த திரித்துவத்தில், தந்தை கடவுள் நமது பாவங்களை மன்னிப்பவர், யேசு அந்த மன்னிப்பை வழங்குபவர், பரிசுத்த ஆவி நம்மை தூய்மைபடுத்தி, இனிமேல் பாவம் செய்யாதே என்ற ஆற்றலை வழங்குபவர்.

பாவசங்கீர்த்தனத்தில், குருவானவர் யேசுவின் ப்ரசன்னமாகவும், இந்த திருச்சபையின் உடலாகவும் இருக்கிறார். பாவ மன்னிப்பு பரிசுத்த ஆவியின் செயலாகும், ஆனால், அதற்கு மேலும், குற்ற உணர்வை சுத்தமாக தூக்கி எறிவதாலும், பாவ நடத்தையிலிருந்து மாறி அந்த பாவங்களை இனிமேல் செய்யாமல் இருக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார். திருப்பலியில் நடக்கும் பாவ மன்னிப்பில், பரிசுத்த திரித்துவ கடவுள் நம் மனம் திருந்துவதை ஏற்று கொண்டு, நம்மை இன்னும் பரிசுத்த வாழ்வில் வாழ மாற்றுகிறார்கள்.
தாழ்ச்சியுடன் இருப்பது, நம்மால் இருக்க முடியும். நம் வாழ்வில் இன்னும் பதில் கிடைக்காத பல கேள்விகளுக்கு, நம்மாலே பதில் கண்டு பிடிக்க முடியும், எப்படி? தந்தை கடவுளின் விருப்பங்களை யேசுவுடன் இனைந்து நாம் இவ்வுலகில் நிறைவேற்றினால், இன்னும் பரிசுத்த வாழ்வில் வாழ்ந்தால், நமக்கு பதில் கிடைக்கும்.

© 2010 by Terry A. Modica

Saturday, May 22, 2010

மே 23 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 23 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை
பரிசுத்த ஆவியின் ஞாயிறு

Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13 (or Rom 8:8-17)
John 20:19-23 (or John 14:15-16, 23b-26)


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 20

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.

(thanks to www.arulvakku.com)



இன்று இரண்டு நற்செய்தி வாசகங்கள் நாம் வாசிக்க முடியும். அதில் யேசு, , ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று இரண்டு முறை கூறுகிறார். முதலில், இயேசு அவரின் சீடர்களுக்கு அமைதியின் அன்பளிப்பை கொடுக்கிறார், அதன் மூலம், அவர்களின் கவலைகளை விட்டு விட்டு, அவர்களின் நடுவே நின்றிருக்கும் யேசுவை அவர்கள் கண்டு கொள்ள முடியும்.


மீண்டும், அவரின் இறைசேவையை ,சீடர்கள் தொடர அவர்களை அழைக்கும் பொழுதும், அவர்களிடம், "' உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று கூறி, பரிசுத்த ஆவியோடு வாழும்பொழுது , இவ்வுலகத்திற்காக, மக்களுக்காக கடவுளின் சேவையை நாம் தொடரமுடியும். யேசு நம்மோடு இருக்கிறார் என்று நாம் நினைக்கும் பொழுது, நாம் அமைதியோடு இருக்க முடிகிறது. இருந்தாலும், மற்றவர்களிடம் இயேசுவை பற்றி சொல்லும்பொழுது, நமக்கு சவாலக தான் இருக்கிறது. ஏனெனில், நாம் தகுதியற்றவர்களாக, அல்லது அதிக உறசாகத்துடனும், மேலும், நாம் நிராகரிக்கபடுவோஓம் என்றும், அல்லது நம்மை கேலி செய்வார்கள் என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் தான் அவர் நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தார்.


தந்தை கடவுள் நம்மிடம் கேட்கும் இறைசேவையை செய்யும்பொழுது, நம்ம என்னவெல்லாம் தேவையோ அதனையெல்லாம் நமக்கு தருபவர் பரிசுத்த ஆவியானவர் ஆவார். அதனால், நாம் தகுதியற்றவர்களாக இருந்தாலும், கடவுள் நமக்கு ஆறுதல் தராமல் இருக்க மாட்டார், அதுவும் மக்கள் நம்மை நிராகரிக்கும் பொழுது கண்டிப்பாக நம்முடன் இருப்பார்.

பரிசுத்த ஆவியின் துனையுடன் , யேசுவோடு நாம் இனைந்து இருப்பதால், நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய நன்மை, நம்து உள் அமைதி, நமக்கு என்ன நடந்தாலும், மற்றவர்கள் நம்மை என செய்தாலும், அல்லது ஒன்றுமே செய்ய வில்லை என்றாலும், நமது உள் அமைதி அமைதியாகவே இருக்கும். ஆவியோடு வாழ்வது என்றுமே அமைதியை தரும். பரிசுத்த ஆவியின் கொடைகளில் ஒன்று நமக்கு அமைதியை தருவது.

இன்றைய நற்செய்தியின் இறுதியில், யேசு அவருடைய சீடர்களுக்கு (முதல் கத்தோலிக்க குருக்கள்) பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுத்து, இறைவனின் ப்ரசன்னம் இங்கே தொடர்ந்து இருக்க அவர்களை தயார் படுத்தினார். பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தை குருக்கள் மூலமாக யேசு நம்மிடம் வர தயார் படுத்தினார்.


பரிசுத்த ஆவியின் மன்னிக்கும் ஆற்றல், நமது பாவ வாழ்விலும் , அமளியான வாழ்விலும் , நாம் அமைதியை அனுபவிக்க ஆற்றல் தருகிறது. மன்னிப்பது ரொம்பவும் கடினமாக இருந்தாலும் கிறிஸ்துவின் ஆவியில், நாம் அதனை செய்ய முடியும். நம்மை காயப்படுத்துபவர்களை நாம் மன்னிக்கலாம், அவர்கள் திருந்தாவிட்டாலும் நாம் மன்னிக்கலாம். இது தான் நமக்கு அமைதியை கொடுக்கும்.

© 2010 by Terry A. Modica

Friday, May 14, 2010

மே 16, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 16, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 7ம் ஞாயிறு
Acts 7:55-60
Ps 97:1-2, 6-7, 9
Rev 22:12-14, 16-17, 20
John 17:20-26


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 17

20 ' அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.21எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.22நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.23இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும். ' 24 ' தந்தையே, உலகம் தோன்று முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.25நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள்.26நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள் மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன். '



(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி ஒற்றுமையின் நற்செய்தி. யேசு இறப்பதற்கு முன் விண்ணகத்தை நோக்கி முன் நமக்காக நமது திருச்சபைக்காக அவர் வேண்டினார். உறவிற்கான அருட்சாதனத்தை எஏற்படுத்துகிறார். யேசுவும் தந்தை கடவுளும் ஒன்றானவர்கள் போல, நாமும் ஒருவரோடு ஒருவர் ஒன்றானவர்கள் தான். அதன் மூலம் நமது ஒற்றுமையின் சாட்சியாக - நிரந்தரமான , பொறுப்புடனும், சுய தியாகத்தாலும், நிபந்தனையற்ற அன்பினாலும் - நாம் கடவுளின் அன்பை இந்த உலகத்திற்கு காட்டலாம். கடவுளின் அன்பு தான் உண்மையானது என்று உலகுக்கு நிருபித்து காட்டலாம். அவரின் அன்பு, நிரந்தரமானது, பொறுப்பானது, நிபந்தனையற்றது, தியாகத்தாலனது, யார் என்ன தவறு செய்திருந்தாலும், எல்லோர் மேலும் அன்போடு இருப்பவர்.

இவ்வுலகில், நமது திருமண அருட்சாதனமே , நமது ஒற்றுமையின் எடுத்து காட்டாகும். இதன் மூலம் நாம் கற்கும் போதனை கடவுள் நம்மை எந்த நிபந்தனையுமின்றி அன்பு செய்கிறார். நல்லதோ கெட்டதோ அவர் எப்பொழுமே நம்மை அன்பு செய்கிறார். நோயுற்று இருந்தாலும், மிகுந்த நலமுடன் இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், முழு நம்பிக்கையுடன் கடவுள் நம்மை அன்பு செய்கிறார். திருமண அருட்சாதனத்தில், கணவன் அவருடைய வாழ்க்கையை மனைவிக்கு சேவை செய்வதற்காக தியாகம் செய்கிறார், மனைவி, கணவனுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கிறார். கிறிஸ்து அவருடைய வாழ்வை நமக்காக , இந்த திருச்சபைக்க்காக தம் வாழ்வை கொடுத்தார். கிறிஸ்து தான் இந்த திருச்சபையின் மணமகன் அவர். திருச்சபைக்காக , அவரின் வாழ்வை கொடுத்தார். அந்த வாழ்க்கையின் அர்ப்பணிப்பால் , நாம்மையும் அவர் பின் செல்லவும், அவருக்கு சேவை செய்யவும் நம்மை அழைக்கிறார்.



திருமணம் புனிதமானது! விவாகரத்து ஆன தம்பதிகளை கத்தோலிக்க குருக்கள் மீண்டும் திருமணம் செய்து வைக்க முடியாது, (அவர்களது முந்தைய திருமணம் உண்மையான ஒற்றுமையின்றி இருந்தால் தான்). தம்பதிகளின் இணைப்பு ஒற்றுமை , யேசுவும் , கடவுளும் கொண்ட ஒற்றுமையாக , அதே புனிதத்துடன் இருக்க வேண்டும். நாமெல்லாம் கடவுளின் இறைசேவைக்காக நாம் ஒற்றுமையின் புனிதத்துடன் இருக்க வேண்டும். அவரின் அன்பிற்கு உதாரணமாய் இருக்க வேண்டும்

இதே ஒற்றுமை, எல்லோருக்கும் பொருந்தும், கடவுள் எங்கெல்லாம் இரண்டு பேரோடு அல்லது அதற்கு மேற்பட்டவரோடு இனைகிறாரோ அங்கெல்லாம் கடவுளின் அன்புடன், நமது ஒற்றுமை பிரதிபலிக்க வேண்டும்.

ஒவ்வொரு இணைப்பும், (கடவுளால் உண்டாக்கப்பட்டது) அனைத்தும் புனிதமானது. ஒவ்வொரு உறவும், இவ்வுலகிற்கு யேசுவின் தியாகத்தையும், அவரின் உண்மையான அன்பையும் பிரதிபலிக்க வேண்டும். கிறிஸ்துவின் உடலில் (நமது திருச்சபை) பிரிவினையும், வேற்றுமையும் இருந்தால், எவ்வளவு துன்பத்திற்கும் வேதனையுமாக இருக்கும். !

© 2010 by Terry A. Modica

Friday, May 7, 2010

மே 9 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 9 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 15:1-2, 22-29
Ps 67:2-3, 5-6, 8
Rev 21:10-14, 22-23
John 14:23-29



யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 14

23 அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: ' என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.24 என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.25 உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.26 என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவு+ட்டுவார்.27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.28 ' நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன் ' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.29 இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி நமக்கு நல்ல பாடத்தை கற்று தருகிறது. இயேசுவை நாம் அன்பு செய்தோம் என்றால், அவரின் கட்டளைகளையும் , போதனைகளையும் நம் வாழ்வில் கடைபிடிக்கிறோம் என்று அர்த்தம். நாம் அதனை தான் செய்ய விரும்புகிறோம். கிறிஸ்துவிற்கு மரியாதை செய்யும் விதமாக, அவரை போல வாழ முயற்சிக்கிறோம். யேசு அன்பு செய்வது போல , நாம் அன்பு செய்ய ஆசைபடுகிறோம். நாம் இதனையெல்லாம் செய்யும்போது, கடவுள் நம்மில் நீடித்து இருக்க ஆசைபடுகிறோம்.

எனினும், இது ஒன்றும் அவ்வளவு சுலபமானதில்லை. ஒவ்வொரு நாளும், அவரின் வார்த்தையை காப்பாற்றவும், அவரை போல வாழவும், நாம் முயற்சிக்கும்போது பல சவால்களை சந்திக்க நேரிடுகிறது. அது மாதிரியான சவாலான நேரங்களில் இயேசு எப்படி கையான்டார் என்பதனை நாம் மறந்து விடுகிறோம். மக்கள் அவர்களின் தோல்விகளிலும், அன்பற்ற நடவடிக்கைகள் மூலமும், நமக்கு தொல்லை தருகின்றனர். மேலும், இதனையெல்லாம் பார்த்து விட்ட்ய், என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி, பதில் நடவடிக்கையாக பாவ செயல்கலில் ஈடுபடுகிறோம்.

நமது நற்செய்திகளில், எந்த ஒரு இடத்திலும், ஒவ்வொரு சம்பவத்திற்கும், நாம் எப்படி கிறிஸ்துவை போல இருக்க வேன்டும் என குறிப்படவில்லை. "அது மாதிரியான நிகழ்ச்சிகள் நமக்கு நேர்ந்தால், கடவுளின் கொள்கயான #127 வை பின்பற்றுங்கள்:”



அதனால் யேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுப்பதாக நமக்கு உறுதியளிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருந்து கொன்டு, யேசுவையும், அவரின் பரிசுத்த வழியையும் நாம் ஒவ்வொரு முறை சவாலை சந்திக்கும் போது நமக்கு வழி காட்டுகிறார். காலையில் எழுந்தது முதல், இரவில் தூங்கும் வரை நம்மோடு கூடவே பரிசுத்த ஆவியானவர் இருந்து நமக்கு வழி காட்டுகிறார்.


அப்புறம் என்ன, ? நமது ப்ரச்னை, எப்படி கிறிஸ்துவின் கட்டளைகளை கடைபிடிக்க வேன்டும் என்று நமக்கு தெரியாமல் இல்லை, ஆனால் நாம் கிறிஸ்துவின் கட்டளைகளை படி நடக்க பரிசுத்த ஆவியை துனையாக வைத்து கொள்ள மறந்து விடுகிறோம். அல்லது, அவரது பரிந்துரைகளை, வழிகாட்டுதலை நன்றாக புரிந்து கொள்ள நம்மால் முடியவில்லை. கடவுளின் முழு துனையும் நமக்கு உள்ளது. ஆனால் நமது வாழ்வில் சவால்களை , நாம் தான் கையாள வேண்டும் என நினைது கடவுளின் துணையின்றி முயற்சிக்கிறோம்.

பரிசுத்த ஆவியின் குரலை கேட்க , அவருடன் கூடவே எப்பொழுது இருக்க, இந்த பயிற்சியை செய்யுங்கள். ஒவ்வொரு மணி நேரமும், பாவங்களை கழுவி தூய்மையாக இருங்கள். ஒவ்வொரு மணி நேரமும் மாறும்போது, உங்கள் கடிகாரத்தில் அலாரம் வைத்து கொள்ளுங்கள். எப்பொழுதெல்லாம் அலாரம் அடிக்கும் போது, பரிசுத்த ஆவியான்வர் உங்களோடு இருந்து உங்களுக்கு வழிகாட்டுவதற்கு நன்றி சொல்லுங்கள். இன்னும் அடுத்த 60 நிமிடன்களுக்கு உஙளை வழி நடத்துவதற்கும் நன்றி சொல்லுங்கள். இதையே சில வாரங்கள் தொடர்ந்து செய்தால், நீஙள் அனைவரும் கடவுள் நம்மோடு இருப்பதையும், எப்பொழுது அவர் நமக்கு உதவி செய்கிறார் என்பது நமக்கு தெரியும்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, April 30, 2010

மே 2, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 2, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 5ம் ஞாயிறு
Acts 14:21-27
Ps 145:8-13
Rev 21:1-5a
John 13:31-35

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 13

31 அவன் வெளியே போனபின் இயேசு, ' இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.32கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.33பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.34 ' ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் ' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.35நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர் ' என்றார்.



(thanks to www.arulvakku.com)

நீங்கள் இப்போது மரணமடைய போகிறீர்கள் என்று தெரிந்தால் உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு என்ன சொல்வீர்கள்? என்ன அறிவுரை கூறுவீர்கள்? உங்களிடமிருந்து மிகவும் முக்கியமான ஒன்றை அவர்கள் கற்று கொள்வார்கள்?


இன்றைய நற்செய்தியில், யேசுவுக்கு அவரது காலம் மிகவும் குறைவு என்று தெரியும். அவரது நண்பர்களிடம் , யேசு சொல்லும் முதல் வார்த்தையே கடவுளை புகழ்வது தான். கடவுளையும் , தம்மையும் மாட்சிமைபடுத்துவது பற்றி தெரிவிக்கிறார். அவருடைய நண்பர்களை 'குழந்தைகள்' என்று கூட யேசு அழைக்கிறார். அவரே தந்தை கடவுள் போல! இப்படி செய்வதால், அவர் கடவுளோடு இருக்கிறார் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. இதன் மூலம், தந்தை கடவுளுக்கும், மீட்பர் மகனுக்கும் இடையே உள்ள சின்ன கோடு தெளிவாக தெரிகிறது. இதனை மிகவும் பணிவுடனும், தாழ்மையுடனும் செய்கிறார். இயேசு இப்படி கூட சொல்லலாம், "நான் கடவுள் என்றும், தெய்வீகமானவன் என்றும் உங்களுக்கு நம்பிக்கை இல்லைஎனில், என்னை வழிபடுங்கள் " என்று சொல்லவில்லை. மாறாக தந்தை கடவுளை மாட்சிமைபடுத்துவை குறிக்கோளாக கொண்டிருந்தார்.


கடவுளின் ப்ரசன்னத்தை புகழொளியை மாட்சிமைபடுத்துவது: அவரின் அன்பை, அவரின் சந்தோசத்தை, அவரின் பரிசுத்ததை, அவரின் அமைதியையும், அவரின் படைப்பையும், மற்றும் பலவும் அவர் கொடுத்ததை, அவர் புகழொளியில் சேர்ந்தது ஆகும். நாம் கடவுளை மாட்சிமைபடுத்தும் பொழுது , அவரின் புகழொளியை நாம் திருப்பி காட்டுகிறோம். இந்த புகழொளி, உங்களில் எவ்வளவு வெளிச்சத்தை கொடுக்கிறது?

தந்தை கடவுள், மகன் யேசுவை மாட்சிமைபடுத்துவதும், மகன் இயேசு தந்தை கடவுளை மாட்சிமைபடுத்துவது உண்டு என்று கூறிய பிறகு, இவ்வுலகிற்கு தேவையான , மிக முக்கியமான அறிவுரை யேசு அவரது சீடர்களுக்கு கொடுக்கிறார்: கடவுளை மாட்சிமைபடுத்துவதில், யேசுவோடு சேர்ந்து கடவுளை போற்றுவதில் நாம் சேரவெண்டும் என்றால், கடவுள் எல்லோரையும் அன்பு செய்வது போல், நாமும் அன்பு செய்ய வேண்டும்..
எவ்வித சுயநலமின்றி கொடுக்கப்படு அன்பு தான் உண்மையான அன்பு ஆகும். இயேசு தன்னை முழுமையாக , எவ்வித சுய நலமின்றி நமக்காக கொடுத்தார். அவரின் மரணத்தையும் சேர்த்து நமக்காக கொடுத்தார். முழு உண்மையான அன்பின்றி யேசுவை பின் செல்பவர்கள், உண்மையாக யேசுவின் பின் செல்பவர்கள் அல்ல, சீடர்கள் உண்மையான சீடர்கள் இல்லை, குருவானவர்கள் உண்மையான குருவாவனவர்கள் இல்லை, பொது மக்கள் உண்மையான பொது மக்களாய் இருக்க மாட்டார்கள், ஒவ்வொருவரும் முழு அன்போடு, கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும்.



கடவுளை மாட்சிமைபடுத்துவதில், உண்மையான அன்பை முழுமையக கொடுத்தால் தான், தியாகத்துடன் கொடுத்தால் தான் அது கடவுளை மாட்சிமைபடுத்துவதாகும். நாம் ஈஸ்டர் காலத்தில் கொண்டாடிகொண்டிருக்கும் போது , நமக்கு ஏன் யேசுவின் பாடுகளை பற்றிய நற்செய்தி வாசகங்கள் இன்று கொடுக்கப்பட்டிருக்கின்றன? மற்ற வாசகங்கள் ஈஸ்டர் வெற்றியை பற்றி பேசுகின்றன. 'இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன் ' இருந்தாலும், இயேசு, நம்பிக்கை துரோகத்திற்கும், வேதனைகளுக்கும், மரணத்திற்கும் தயாராகிறார். ஏன்?



கடவுளின் மாட்சிமையை, புகழை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதனை இயேசு தன் மரணத்தின் முன் நம் எல்லோருக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார். யேசு கடவுளை மாட்சிமைபடுத்துவதை ஆரம்பித்து வைத்து, நம்மையும் கடவுளை மாட்சிமைபடுத்த அழைக்கிறார். தியாகத்துடன், நாம் ஒவ்வொருவரையும் அன்பு செய்யும்போது, இயேசு உண்மையான கடவுள் என்பதன் நாம் இவ்வுலகிற்கு காமிக்கிறோம். அவர் உயிர்த்தெழுந்து விட்டார், நம்மில் வாழ்கிறார்.


© 2010 by Terry A. Modica

Friday, April 23, 2010

ஏப்ரல் 25, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் கால 4ம் ஞாயிறு
Acts 13:14, 43-52
Ps 100:1-3, 5
Rev 7:9, 14b-17
John 10:27-30


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 10

27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.28நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. 30நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் ' என்றார்


(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி மிகச் சிறியது மேலும், சரியான விசயத்தை நமக்கு எடுத்து காட்டுகிறது: யேசு , நமது நல்லாயன். அவரை மட்டும் தான், நாம் அவர் பின் செல்கிறோம். அவரை மட்டும் தான் நாம் கண் மூடித்தனமாக நம்புகிறோம். நம் வாழ்வில், நம் மேல் அக்கறை உள்ளவர்கள் நமக்கு நல்ல ஆயனாக இருக்கலாம், ஆனால் அவர்களை நாம் கன்மூடி தனமாக பின் பற்ற வேண்டியதில்லை. பிஷப்களையும், பங்கு குருக்களையும், முதலாளிகள், பெற்றோர்கள் அவர்கள் அனைவரையும், அவர்களின் பொறுப்புகளுக்காக நாம் மதிக்கிறோம். ஆனால் அவர்கள் அனைவரும் சில நேரஙளில் தவறு செய்பவர்கள். அவர்கள் பொறுப்புகளை விட்டு , எது சரி , தவறு என்று அவர்களால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.


ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், முடிவெடுக்கும் திறமையை நாம் பரிசுத்த ஆவியின் மூலம் பெற்று, நாம் நடந்து கொள்ள வேண்டும். அப்படி செய்ய வில்லையெனில், நமது தந்தை கடவுளை நாம் வருத்தப்பட வைக்கிறோம். யேசு ஒருவரை தான் நாம் கண்மூடித்தனமாக நாம் நம்ப வேண்டும். யேசு மட்டும் தான் மிகச் சரியானவர். அவருக்கு தான் எல்லாம் தெரியும். எல்லாவற்றையும் புரிந்து கொள்ளுபவர், மேலும் எந்த பாவமும் செய்யாதவர். யேசுவால் மட்டும் தான் வெற்றிகரமாக , மிக சரியான முடிவுகளை எடுக்க முடியும். எல்லா நேரங்களிலும், கடினமான நேரங்களிலும், எல்லா சமயஙளிலும், சாத்தானில் உதவியின்றி, யேசுவால் மட்டுமே முடியும். எல்லா திட்டங்களிலும், யாருமே பாதிக்கபடாமால், சரியான வழியை கொடுக்க முடியும். யேசுவால் மட்டுமே நம்மை மோட்சத்திற்கு நமது ஆபத்தான பயனத்திலிருந்து நம்மை அழைத்து செல்ல முடியும்.



யேசுவின் திட்டத்திலிருந்து, நாம் விலகி செல்கையில், நாம் தவறு செய்கையில் யேசுவினால் மட்டும் தான் நம்மை பார்த்து சிரிக்க முடியும். ஏனெனில், நாம் அவரை அன்பு செய்கிறோம், நல்லதைய செய்ய விரும்புகிறோம் என்று யேசுவிற்கு தெரியும். பாதுகாப்பான வழியில் நம்மை மீண்டும் அழைத்து செல்வார். இரக்கத்துடனும், அன்புடனும் நமது கைகளை பற்றி கொண்டு நம்மை யேசு அழைத்து செல்கிறார், அதனால், நாம் நமது தந்தை கடவுளின் கைகளை விட்டு விடாமல் பார்த்து கொள்கிறார்.



எப்பொழுதாவது நீங்கள் யாரையாவது நம்ப வில்லையென்றால் -- நம்மையும் சேர்த்து தான் -- கண்டிப்பாக யேசு நம்முடன் இருக்கிறார் என்று நாம் நம்பலாம். ஒவ்வொரு நிலைகளிலும், நம்மை வழி நடத்தி செல்வார், நாம் அவரை விட்டு விலகி சென்றாலும், மீண்டும் வந்து நம்மை மீட்டு நல் வழியில் வழி நடத்தி செல்வார். ஏனெனில், நாம் அவரை உண்மையாகவே அன்பு செய்கிறோம். மேலும், நல்லதையே செய்ய விரும்புகிறோம். என்று அவருக்கு தெரியும். நமது பாதுகாப்பை உறுதி படுத்துகிறார். நமது தவறுகளிலிருந்து நம்மை மீட்டு , நாம் நமது பாவங்களுக்காக மனம் வருந்தும் போது, நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்கிறார்.

© 2010 by Terry A. Modica

Friday, April 16, 2010

ஏப்ரல் 18 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 18 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் 3வது ஞாயிறு
Acts 5:27-32, 40b-41
Ps 30:2, 4-6, 11-13
Rev 5:11-14
John 21:1-19

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 21

1 பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:2 சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்,3 அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ' நான் மீன்பிடிக்கப் போகிறேன் ' என்றார். அவர்கள், ' நாங்களும் உம்மோடு வருகிறோம் ' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.4ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை.5 இயேசு அவர்களிடம், ' பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இல்லை ' என்றார்கள்.6 அவர், ' படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.7 இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ' அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம் ' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.8 மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.9 படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.10 இயேசு அவர்களிடம், ' நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள் ' என்றார்.11 சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.12 இயேசு அவர்களிடம், ' உணவருந்த வாருங்கள் ' என்றார். சீடர்களுள் எவரும், ' நீர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.13 இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.14 இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! 'என்றார். இயேசு அவரிடம், 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்' என்றார். 16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், ' என் ஆடுகளை மேய் ' என்றார்.17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? 'என்று கேட்டார். ' உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ' ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? ″ என்றார். இயேசு அவரிடம், ″ என் ஆடுகளைப் பேணிவளர். ″ 18 ' நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், ' என்னைப் பின் தொடர் ' என்றார்.



(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியை மீண்டும் படித்து பாருங்கள். சீடர்கள் கரைக்கு வரும்போது, இயேசு எப்படி மீனை சுட்டு கொண்டிருந்தார், அவருக்கு அந்த மீன்கள் எங்கிருந்து வந்தது? அவரிடம் வலை இருந்ததா? அல்லது ரொட்டி துன்டுகளை வாங்கும்போது, மீனையும் அந்த நகரத்தில் வாங்கினாரா? அப்படி இருந்திருக்குமேயானால், அவரை யாரும் கண்டுபிடிக்க வில்லையா? யேசு தான் அவர் என்று யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா? அல்லது அந்த மீன்கள் நீரிலிருந்து குதித்து வந்ததா? மேலும், யேசுவே, கற்களை ரொட்டி துண்டுகளாக மாற்றினாரா? சாத்தான் பாலைவனத்தில் அவரை சோதித்த போது ரொட்டி துண்டுகளாக மாற்றியதை போல இயேசு மாற்றினாரா?


ரொட்டி துன்டுகளையும் மீன்களையும் பல மடங்காக யேசு பெருக்கியதை நினைத்து பாருங்கள். அதே உணவு தான்: ரொட்டியும் மீனும். அதே அற்புதம் இங்கும் நடந்துள்ளது. சிறியதாக இருக்கிறதே என்பது ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை. கடவுள், இந்த உலகை படைத்தவர், நமக்கு என்னிலடங்கா பொருட்களை கொடுத்தவர் ஆவார். அவரால் தேவையான அளவு உருவாக்க முடியும். நம்மிடம் என்ன இருக்கிறது என்பதால் அவர் கொடுப்பதில்லை, நம் மேல் உள்ள அன்பினால், அவர் நமக்கு கொடுக்கிறார்.


கடவுள் நம்மிடம் கேட்பதெல்லாம் , அவர் நமக்கு கொடுத்ததை மற்றவர்களிடமும் பகிரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார். கூட்டத்தினருக்கு தேவையான உணவை பல மடங்காக பெருக்கிய அற்புதத்தில், சீடர்களை கூப்பிட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்க சொன்னார். இன்றைய அற்புதத்தில், சீடர்களிடம் மீனை பிடித்து வந்து , அவர் சமைத்து கொண்டிருக்கும் உணவோடு சேர்க்க சொல்கிறார்.

அதற்கு பிறகு, இராயப்பரிடம் ,யேசுவின் அன்புக்கு பாத்திரமான ஆடுகளுடன் , யேசுவின் அன்பை பகிரிந்து கொள்ள சொல்கிறார். அன்பு எங்கிருந்து வருகிறது. இராயப்பர் அவருடைய சொந்த முயற்சியில் யாரையும் அன்பு செய்ய வில்லை. நாமும் அப்படி செய்வதில்லை. இராயப்பர் , கடவுளின் அன்பால் உருவாக்கப்பட்டவர், அந்த அன்பு இராயப்பரிடம் உள்ளது. அதே போல், நம்மிடமும் கடவுளின் அன்பு உள்ளது. முழு அன்பாய் இருக்கிற கடவுளின் உருவத்தை போல நாமும் படைக்கப்பட்டிருக்கிறோம். அளவுக்கு அதிகமான கடவுளின் அன்பை நாமும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என இராயப்பர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். அதன் மூலம், கடவுளரசு இந்த பூமி முழுதும் பரவட்டும்.

கடவுள் உன்னிடம் என்ன செய்ய சொல்கிறார்? எதனை பகிர்ந்து கொள்ள சொல்கிறார். அதற்கு பதில், உன்னிடம் என்ன உள்ளது என்பது இல்லை, ஆனால், கடவுளிடம் உள்ளதை வைத்து நீ பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறாயா, உளப்பூர்வமான ஆர்வத்துடன் உள்ளாயா என்பது தான்.

© 2010 by Terry A. Modica