Friday, February 26, 2010

பிப்ரவரி 28, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 28, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்கால இரண்டாம் ஞாயிறு

Gen 15:5-12, 17-18
Ps 27:1, 7-9, 13-14
Phil 3:17--4:1
Luke 9:28b-36


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 9

28 இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.29 அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.30 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.31 மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.32 பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.33 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.34 இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.35 அந்த மேகத்தினின்று, ″ இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது.36 அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.


(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இதுவரையிலும் பார்க்காத வெண்மையான நிறத்தில் யேசு தோன்றி , அவரது உண்மையான உருவத்தை, அவர் யார் என்பதை காட்டுகிறார். கடவுள் "″ இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் " என்று கூறியதை கேட்கிறோம்.

யேசுவின் உண்மையான அடையாளத்தை, நாம் அவரை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அனுபவிக்கிறோம். மேலும் கிறிஸ்துவின் வார்த்தையின் அர்த்தத்தை பரிசுத்த ஆவியின் துனையுடன் நாம் யேசுவின் கிறிஸ்துவின் வார்த்தையை முழுதாக புரிந்து கொள்ள முடியும், , அவரின் வழி காட்டுதலை அறிந்து கொள்ள முடியும்.


யேசுவின் வார்த்தையை கேட்பதினால், அவரின் பள பளக்கும் வென்மை ஒளி, நம்மில் இன்னும் இருக்கும் இருளை போக்கிவிடும். பிறகு, நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் கிறிஸ்துவை அனுபவிப்பார்கள். ஏனெனில், நம் மூலம் யேசுவை கான்கிறார்கள் - நமது நடவடிக்கைகள் மூலமும், நமது இரக்கத்தின் மூலமும், நமது மன்னிப்பின் மூலமும் , மேலும் பல விசயங்களிலும், யேசுவை நம்மில் கான்கின்றனர். இது தான் மணமாற்றம் ஆகும்.




தவக்காலத்தில், நம்மில் உள்ள இருளை கிறிஸ்துவின் ஒளியின் மூலம் போக்குவதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். யேசுவின் ஒளி நம்மில் ஓளிர்வதற்கு நாம் அனுமதிக்கும்பொழுது, அதனால், நாம் மனந்திருந்தி, அவரின் மன்னிப்பை கேட்டு, பரிசுத்த ஆவியின் ஆற்றல் பெற்று நம் வாழ்வை மாற்றி , நாம் கிறிஸ்துவை போல மாறமுடியும். நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து ஒளிர்வோம். இந்த உலகை மீட்கும் கிறிஸ்துவின் மீட்பு பணியில் நாம் இனைகிறோம். இந்த மீட்பு பனியில் பல துன்பங்கள் இருந்தாலும், பெரிய வெள்ளியின் துன்பத்திற்கு பிறகு ஈஸ்டர் வெற்றி தொடரும் என்பது நமக்கு தெரிந்ததே.


நமது சோதனைகளும், தியாகங்களும் - நமது சிலுவைகள் - நமது பரிசுத்த வாழ்வு இவ்வுலகை மாற்றும். கல்வாரிக்கு யேசுவை பின் சொல்ல நாம் தைரியமாக இருக்கிறோமா? இது தான் நம்மை ஈஸ்டருக்கு அழைத்து செல்லும்!. நமது சோதனைகள் மூலம், கிறிஸ்துவின் இரத்தம் மீண்டும் வழிந்தோடுகிறது. நமது வலிகள் எல்லாம் கிறிஸ்துவின் வலிகள். நாம் ஏற்கனவே கிறிஸ்துவோடு சிலுவையில் இருக்கிறோம். கிறிஸ்துவோடு நமது நெருங்கிய இனைப்பினால், நாம் ஏன் நமக்கு துரோகம் பன்னுகிறவர்களையும், நமக்கு தண்டனை கொடுப்பவர்களையும் மன்னித்தால் என்ன? நம்மை அன்பு செய்யாதவர்களை அன்பு செய்வதாலும், நம்மை தவறாக நடத்துபவர்களை மன்னிப்பதாலும், இறையரசை இங்கே நிறுவ கடினமாக உழைத்தும், கிறிச்துவின் ஒளியை, இருளில் வாழ்பவர்களுக்கு நாம் காட்டுகிறோம்.

© 2010 by Terry A. Modica

Saturday, February 13, 2010

பிப்ரவரி 14, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 14, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 6வது ஞாயிறு

Jer 17:5-8
Ps 1:1-4, 6 (with 40:5a)
1 Cor 15:12, 16-20
Luke 6:17, 20-26

லூக்கா நற்செய்தி


அதிகாரம் 6

17 இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். 20 இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ' ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.21 இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.22 மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.23 அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.24 ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.25 இப்போது உண்டு கொழுந்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.26 மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், ஏழைகளிடத்திலே, கடவுள் பரிவும் அன்பும் கொண்டு, அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று நமக்கு தெளிவாக சொல்கிறார். ஏழைகள் (இவ்வுலக செல்வம் இல்லாமல் இருக்கும் ஏழைகள் மற்றும், பரிசுத்த வாழ்விலும் வளம் இழந்தவர்கள்), பசியுற்றவர்கள், அழுபவர்கள், பலர் வெறுப்புக்கு ஆளானவர்கள், விலக்கி வைக்கப்பட்டவர்கள், அவமானப்படுத்தபட்டவர்கள், யேசுவின் மேல் கொண்ட விசுவாசத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அனைவரிடமும், கடவுள் பரிவும் பாசமும் கொண்டு அவர்கள் பக்கம் நிற்கிறார்.

மற்றவர்களின் துக்கத்திற்கு நாமும் ஒரு காரணமாக எப்பொழுது இருந்தாலும், நாம் கடவுளுக்கு எதிராக இருக்கிறோம். எடுத்து காட்டாக, மற்றவகளை பற்றி தவறாக கிசு கிசு பேசும்பொழுது, அந்த கிசு கிசு உண்மையாக இருந்தாலும், கூட, நாம் யேசுவிற்கு எதிராக வேலை செய்கிறோம்.

இழிவான ஜோக்குகள், நீதியற்ற வழக்குகள் பதிவு செய்வது, நம்மால் உதவ முடியும் என்று தெரிந்தும், தேவையானவர்களுக்கு அவர்கள் தேவை அறிந்தும் செய்யாமலிருப்பது எல்லாமே யேசுவிற்கு எதிரானது தான். மற்றவர்களை பயமுறுத்துவது, , எப்பொழுதுமே தாமதமாக செய்வது, மற்றவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பது போன்ற செயல்கள் அனைத்தும் கடவுளுக்கு எதிரானவையே.

இது மாதிரியாக, கடவுளை தொடர்ந்து ஒதுக்கியும், எதிராகவும் செய்பவர்களுக்கு என்ன ஆகும்? அவர்களுக்கு அழிவு தான்!, கடவுள் மேல் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆவர். (இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது உள்ளது போல), தம்மையே நம்பியவர்களுக்கு துக்கமும், துன்பமும் அனுபவிப்பது தவிர்க்க முடியாதது ஆகும்.

சுய நலக்காரர்கள், அவர்களுடைய சொத்து மூலம் அதிக பயனடையலாம், ஆனால், அது தற்காலிகமானது தான், அதை எடுத்து கொண்டு மோட்சத்திற்கு செல்ல முடியாது அல்லது அந்த சொத்தை வைத்து கொண்டு, மோட்சத்திற்கான வழியை வாங்க முடியாது. இதற்கினிடையே, கடவுள் இந்த சொத்தையெல்லாம் அனுபவிக்காத ஏழைகள் பக்கம் நிற்கிறார். ஏனெனில் அந்த சொத்துக்கள் / செல்வங்கள் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்க படவில்லை.

அதேபோல, அழுபவர்களை பார்த்து, சிரிப்பவர்கள், அதிக நாள் சிரிக்க மாட்டார்கள். அடுத்தவர்களின் துன்பத்தால், இன்பம் பெறுபவது தற்காலிகமானது, மேலும் அதனால் உண்மையான திருப்தி அடைய முடியாது.
புகழுடனும், பிரபலத்துடனும், எல்லோராலும் புகழப்படுபவர்கள் , அவர்கள் திரும்பி நடக்க ஆரம்பிக்கும்போதே, அவர்கள் எல்லாரும் குறை சொல்ல ஆரம்பிப்பார்கள்.
கீழே தள்ளப்படுபவர்கள் எல்லாரையும் யேசு மேலே தூக்குகிறார். தன்னை தானே தூக்கி கொள்பவர்கள், ரொம்ப நேரம் தூக்க முடியாமல் தவிப்பார்கள் , அந்த துயரத்தினிடையே புன்னகைப்பார்கள் .

http://catholicdr.com/ebooks/Lent.htm
© 2010 by Terry A. Modica
This work is NOT in Public Domain and may NOT be copied without permission.
You may print one copy for your own personal use.
For PERMISSION and info on how to copy this reflection for sharing, see:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, February 5, 2010

பிப்ரவரி 7, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 7, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு
Is 6:1-2a, 3-8
Ps 138:1-5, 7-8
1 Cor 15:1-11
Luke 5:1-11



லூக்கா நற்செய்தி


அதிகாரம் 5

1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4 அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ' ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் ' என்றார்.5 சீமோன் மறுமொழியாக, ' ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ' என்றார்.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ' ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் ' என்றார்.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ' அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ' என்று சொன்னார்.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

(thanks to www.arulvakku.com)

பல நேரங்களில், அடிக்கடியும் கூட, நாம் கேட்காமலே, கடவுள் நமக்கெல்லாம் பல உதவிகள் செய்து வருகிறார். அப்படி சீமோனுக்கு செய்ததை, நாம் இன்று பார்க்கிறோம். அவர்கள் அளவிற்கு அதிகமான மீன்களை பிடிப்பதற்கு உதவினார்.

அவருடைய நோக்கம் என்ன? அந்த மீனவர்கள் யேசுவிற்கு படகை கொடுத்ததினால், அவர் அவர்களுக்கு உதவி செய்தாரா? நீங்கள் செய்த உதவிக்கு , அவர் நன்றியாக மேலும் பல உதவி செய்வார் என்று நினைக்கிறீர்களா? இல்லை, இது அவரின் பரிசு அல்ல, அதனையும் தான்டி , அவரின் உதவிகளுக்கு பின் பெரிய விசயம் இருக்கிறது.

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து எப்படி நம்மிடம் நெருங்கினார், மற்றும் எப்படி தொடர்பு கொண்டார் என்பதை பார்ப்போம்.
1 -- முதலில், மீனவர்களுக்கு, யேசுவை ஏற்கனவே தெரியும்; அவர்களெல்லாம், அவரை "மாஸ்டர்" என்று அழைப்பார்கள், ஏனெனில், அவர்களெல்லாம், கிறிஸ்துவின் மானவர்கள் ஆவர்.
2 -- இரண்டாவதாக, யேசு அவர்கள் எதிர்பார்க்காமலே அவர்களுக்கு உதவி செய்தார்.
3 -- மூன்றாவது, யேசு அந்த அன்பளிப்பை, அழைத்தலாக மாற்றினார்.
4 -- நான்காவது, சீடர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, அவரின் அழைத்தலை ஏற்றார்கள்

.
கடவுள் நமது வாழ்வில் தலையிடும்பொழுது, நமது நன்மைக்காகவும், மற்றவர்களின் நன்மைக்காகவும் செய்கிறார். நாம் இந்த சமூகத்தில் ஒரு அங்கமாக உள்ளோம், கடவுளின் குடும்பத்தில் ஒரு அங்கமாக உள்ளோம். நாம் தனியாக ஒன்றும், கடவுளோடு உறவாடவில்லை. கடவுளோடு , நமது ஜெபத்திலும், திவ்ய நற்கருணையிலும், அவரின் வேண்டுதலிலும் , மற்றவர்களோடு நாமும் இனைந்து, அவர்களின் கவலைகளுக்கு, நாமும் அக்கறை கொன்டு, அவர்களின் வாழ்வில் நாமும் இனைகிறோம்.
நாம் உதவி கேட்டு செய்யும் ஜெபங்களுக்கு, நம் ஒருவரின் பலனுக்காக, நமக்கு கொடுக்கபடுவதில்லை. மாறாக, அதனால், பலர் பயனடையவே கடவுள் கொடுக்கிறார். நமக்கு கிடைக்கும் உதவியினால், பலர் பாதிக்கப்படுகிறார்களா? என்று கடவுள் எப்பொழுமே பார்க்கிறார், அவர்களின் மேலும் அக்கறை கொள்கிறார். கடவுள் உங்கள் வேண்டுதலுக்கு பதில் கொடுக்காமல் இருப்பது போல தோனலாம், ஆனால், அவர் எப்பொழுதுமே எல்லா சூழ்நிலையையும் பார்த்து தான் செய்வார். கடவுள் உங்கள் வேன்டுதலுக்கு , உதவி செய்தால், அது எத்தனை பேருக்கு பலனாகும் என்று பார்த்து கொண்டே இருக்கிறார்.

உங்களுடைய தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் கடவுள் மிகவும் அக்கறையுடன் பார்த்து கொள்கிறார். ஆனால், அந்த உதவிகளையெல்லாம், அழைத்தலாக மாற்றுகிறார்,அந்த அழைத்தல், உங்களால், முடிந்த செயல்கள், இறைசேவையாக, மக்கள் சேவையாக செய்ய அழைக்கப்படுகிறீர்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் எப்பொழுது கடவுளிடம் உதவி கேட்க ஆரம்பித்தீர்களோ, உங்களுக்கு கிடைக்கும் உதவி, மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும், என்று கடவுள் உங்களை அழைக்கிறார்.


நமது ப்ரச்னைகள் முடிவுக்கு வர, நாம் காத்திருக்கும் பொழுது, நாம் நம்மை தான்டி மற்றவர்களுக்காக அக்கறை படும் பொழுது, நாம் அமைதியையும், நம்பிக்கையையும் பெறுகிறோம். நமது கடின உழைப்பு இதனை கொடுக்கும். இது தான் நாம் அன்றாடம் செய்யும் அழைத்தலாகும்.


http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica