Saturday, November 13, 2010

நவம்பர் 14, 2010 ஞாய்று நற்செய்தி, மறையுரை

நவம்பர் 14, 2010 ஞாய்று நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு
Mal 3:19-20a
Ps 98:5-9
2 Thess 3:7-12
Luke 21:5-19

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 21


எருசலேம் கோவிலின் அழிவு பற்றி முன்னறிவித்தல்
(மத் 24:1 - 2; மாற் 13:1 - 2)
5 கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.6 இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் ' என்றார்.
வரப்போகும் கேடு பற்றி அறிவித்தல்
(மத் 24:3 - 14; மாற் 13:3 - 13)
7 அவர்கள் இயேசுவிடம், ' போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? ' என்று கேட்டார்கள்.8 அதற்கு அவர், ' நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்றும், ' காலம் நெருங்கி வந்துவிட்டது ' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.9 ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது ' என்றார்.10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ' நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.12இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.15 ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.16 ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு, "ஒரு நாள் வரும், அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்" என்று கூறி இவ்வுலகில் உள்ளதெல்லாம் தற்காலிகமானது தான் நமக்குஅறிவுறுத்துகிறார்.

இவ்வுலகில் நீங்கள் அனுபவிக்கும் சந்தோசமான எல்லாமெ தற்காலிகமானது தான். உங்களை எது அதிகம் துன்பத்தை கொடுக்கிறது. அதுவும் தற்காலிகமானது தான். இவ்வுலகில் எந்த விசயங்களை அதிகம் சார்ந்து இருக்கிறீர்கள்? அதுவும் தற்காலிகமானது தான். எதனை பார்த்து ஆச்சரியபடுகிறீர்கள்? யாரிடம் நம்பிக்கை கொள்கிறீர்கள்? என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? அதிக நேரம் உழைத்து எந்த குறிக்கோளை அடைய முற்படுகிறீர்கள், மேலும், உங்கள் உழைப்புக்காக , அதன் பரிசாக எங்கே சுற்றுலா கிளம்பிவிட்டீர்கள்? இது எல்லாமெ தற்காலிகமானது தான். அல்லது இதனையெல்லாம், இறையரசிற்காக உபயோகித்தால், அது உபயோகமானதாக இருக்கும்.

கடவுளுடைய அரசிற்காகவும் அவரைபற்றியும், நாம் எப்பொழுதும் நோக்கி அதற்காகவே நாம் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும், அவை தான் நமது இறுதி காலம் வரைக்கும் இருக்கும் என்பதும் நமக்கு தெரியும், ஆனால் இந்த கண்மூடிதனமான விசுவாசம் நம்பிக்கை நமக்கு என்னமோ பிடிப்பதில்லை. நாமெல்லாம் கடவுளின் சீடர்கள், கடவுள் அநீதிக்காக எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும், அநியாயத்திற்கு பழிவாங்க வேண்டும் , இந்த அழிவுள்ள உலகில் பழிவாங்களை கடவுள் நிகழ்த்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். போர்கள், நில அதிர்வுகள், ப்ளேக் நோய் மற்றும் பல கஷ்டங்கள். மேலும், இயேசு அவரது இரண்டாம் வருகையை விரைவில் வந்து, இவ்வுலக சாத்தானையும், ப்ரச்னைகளுக்கும் முற்று புள்ளி வைக்க வேண்டும் என ஆசைபடுகிறோம்.

ஒவ்வொரு நாளும், நமது வாழ்வில், கடவுளின் உதவியை எதிர்பார்க்கிறோம், ஆனால், மிகச்சரியான ஆணித்தரமான ஒரு ஆதாரத்தை நமது விசுவாசத்திற்கு கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதனை நமக்கு தெரிய வேண்டும் என நினைக்கிறோம்; கடவுளின் நமக்கான திட்டம் என்ன என்பதனை நமக்கு தெரியாமல் இருப்பதால் ஒரு வித தவிப்புடனும், பயத்துடனும் இருக்க நாம் விரும்புவதில்லை. நாம் நமக்கு கண்ணுக்கு முன்னே தெரிவதில் தான் நாம் சார்ந்து இருக்கிறோம், கடவுள் நம் கண்ணில் காமிக்காததை நாம் சார்ந்து இருக்க விரும்புவதில்லை. அதனால் கடவுளிடம் நாம் அதற்கான குறிப்புகளை கேட்கிறோம், ஆதாரங்களையும் கேட்கிறோம். எனினும், நாம் கடவுளோடு கூட சேர்ந்து நடந்து , முதல் அடியாக ஒரு காலை தூக்கி காற்றில் நிறுத்துங்கள், அடுத்த காலை எங்கே வைப்பது என்று கடவுளிடம் கேளுங்கள்.
இதற்கு நாம் சமநிலையான போக்கை கடைபிடிக்க வேண்டும், நாம் கடவுளை சார்ந்து எப்பொழுது இருக்க வில்லை என்றால், நாம் நிலை தடுமாறி விழுவோம். கடவுள் நமக்கு அடுத்த காலை எங்கே வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்றால், நாம் தடுமாறி விழலாம் அல்லது கடவுளின் கைகளில் விழுந்துவிடுவோம்.
கடவுளின் கைகள் தற்காலிகமானது அல்ல! அவரது கைகள் தான் நமக்கு உண்மையான பாதுகாப்பு, அதுவும் கடவுளின் இணையில்லாத, முடிவில்லாது, எல்லா வல்ல ஆற்றல்களுடன், முழு பரிசுத்த அன்புடனும்,அந்த கைகள் நம்மை தாங்கும். இது எல்லாவற்றையும் நாம் எப்பொழுதும் பெறாத மாதிரியாக இருக்கும் ஆனால், அவரது அன்பும், பாதுகாப்பும் என்றுமே தவறுவதில்லை.

© 2010 by Terry A. Modica

நவம்பர் 14, 2010 ஞாய்று நற்செய்தி, மறையுரை

நவம்பர் 14, 2010 ஞாய்று நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு
Mal 3:19-20a
Ps 98:5-9
2 Thess 3:7-12
Luke 21:5-19

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 21


எருசலேம் கோவிலின் அழிவு பற்றி முன்னறிவித்தல்
(மத் 24:1 - 2; மாற் 13:1 - 2)
5 கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.6 இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் ' என்றார்.
வரப்போகும் கேடு பற்றி அறிவித்தல்
(மத் 24:3 - 14; மாற் 13:3 - 13)
7 அவர்கள் இயேசுவிடம், ' போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? ' என்று கேட்டார்கள்.8 அதற்கு அவர், ' நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்றும், ' காலம் நெருங்கி வந்துவிட்டது ' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.9 ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது ' என்றார்.10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ' நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.12இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.15 ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.16 ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு, "ஒரு நாள் வரும், அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்" என்று கூறி இவ்வுலகில் உள்ளதெல்லாம் தற்காலிகமானது தான் நமக்குஅறிவுறுத்துகிறார்.

இவ்வுலகில் நீங்கள் அனுபவிக்கும் சந்தோசமான எல்லாமெ தற்காலிகமானது தான். உங்களை எது அதிகம் துன்பத்தை கொடுக்கிறது. அதுவும் தற்காலிகமானது தான். இவ்வுலகில் எந்த விசயங்களை அதிகம் சார்ந்து இருக்கிறீர்கள்? அதுவும் தற்காலிகமானது தான். எதனை பார்த்து ஆச்சரியபடுகிறீர்கள்? யாரிடம் நம்பிக்கை கொள்கிறீர்கள்? என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? அதிக நேரம் உழைத்து எந்த குறிக்கோளை அடைய முற்படுகிறீர்கள், மேலும், உங்கள் உழைப்புக்காக , அதன் பரிசாக எங்கே சுற்றுலா கிளம்பிவிட்டீர்கள்? இது எல்லாமெ தற்காலிகமானது தான். அல்லது இதனையெல்லாம், இறையரசிற்காக உபயோகித்தால், அது உபயோகமானதாக இருக்கும்.

கடவுளுடைய அரசிற்காகவும் அவரைபற்றியும், நாம் எப்பொழுதும் நோக்கி அதற்காகவே நாம் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும், அவை தான் நமது இறுதி காலம் வரைக்கும் இருக்கும் என்பதும் நமக்கு தெரியும், ஆனால் இந்த கண்மூடிதனமான விசுவாசம் நம்பிக்கை நமக்கு என்னமோ பிடிப்பதில்லை. நாமெல்லாம் கடவுளின் சீடர்கள், கடவுள் அநீதிக்காக எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும், அநியாயத்திற்கு பழிவாங்க வேண்டும் , இந்த அழிவுள்ள உலகில் பழிவாங்களை கடவுள் நிகழ்த்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். போர்கள், நில அதிர்வுகள், ப்ளேக் நோய் மற்றும் பல கஷ்டங்கள். மேலும், இயேசு அவரது இரண்டாம் வருகையை விரைவில் வந்து, இவ்வுலக சாத்தானையும், ப்ரச்னைகளுக்கும் முற்று புள்ளி வைக்க வேண்டும் என ஆசைபடுகிறோம்.

ஒவ்வொரு நாளும், நமது வாழ்வில், கடவுளின் உதவியை எதிர்பார்க்கிறோம், ஆனால், மிகச்சரியான ஆணித்தரமான ஒரு ஆதாரத்தை நமது விசுவாசத்திற்கு கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதனை நமக்கு தெரிய வேண்டும் என நினைக்கிறோம்; கடவுளின் நமக்கான திட்டம் என்ன என்பதனை நமக்கு தெரியாமல் இருப்பதால் ஒரு வித தவிப்புடனும், பயத்துடனும் இருக்க நாம் விரும்புவதில்லை. நாம் நமக்கு கண்ணுக்கு முன்னே தெரிவதில் தான் நாம் சார்ந்து இருக்கிறோம், கடவுள் நம் கண்ணில் காமிக்காததை நாம் சார்ந்து இருக்க விரும்புவதில்லை. அதனால் கடவுளிடம் நாம் அதற்கான குறிப்புகளை கேட்கிறோம், ஆதாரங்களையும் கேட்கிறோம். எனினும், நாம் கடவுளோடு கூட சேர்ந்து நடந்து , முதல் அடியாக ஒரு காலை தூக்கி காற்றில் நிறுத்துங்கள், அடுத்த காலை எங்கே வைப்பது என்று கடவுளிடம் கேளுங்கள்.
இதற்கு நாம் சமநிலையான போக்கை கடைபிடிக்க வேண்டும், நாம் கடவுளை சார்ந்து எப்பொழுது இருக்க வில்லை என்றால், நாம் நிலை தடுமாறி விழுவோம். கடவுள் நமக்கு அடுத்த காலை எங்கே வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்றால், நாம் தடுமாறி விழலாம் அல்லது கடவுளின் கைகளில் விழுந்துவிடுவோம்.
கடவுளின் கைகள் தற்காலிகமானது அல்ல! அவரது கைகள் தான் நமக்கு உண்மையான பாதுகாப்பு, அதுவும் கடவுளின் இணையில்லாத, முடிவில்லாது, எல்லா வல்ல ஆற்றல்களுடன், முழு பரிசுத்த அன்புடனும்,அந்த கைகள் நம்மை தாங்கும். இது எல்லாவற்றையும் நாம் எப்பொழுதும் பெறாத மாதிரியாக இருக்கும் ஆனால், அவரது அன்பும், பாதுகாப்பும் என்றுமே தவறுவதில்லை.

© 2010 by Terry A. Modica

Saturday, November 6, 2010

7 நவம்பர் 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

7 நவம்பர் 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32ம் ஞாயிறு
2 Macc 7:1-2, 9-14
Ps 17:1, 5-6, 8, 15
2 Thess 2:16–3:5
Luke 20:27-38
லூக்கா நற்செய்தி

அதிகாரம் 20


உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி
(மத் 22:23 - 33; மாற் 12:18 - 27)
27 உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,28 ' போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார்.29 இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.30 இரண்டாம்,31 மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்;32 கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.33 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே? ' என்று கேட்டனர்.34 அதற்கு இயேசு அவர்களிடம், ' இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.35 ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.36 இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.37 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ' ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் ' என்று கூறியிருக்கிறார்.38 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே ' என்றார்.39 மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, ' போதகரே, நன்றாகச் சொன்னீர் ' என்றனர்.40 அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

(thanks to www.arulvakku.com)


உயிர்த்தெழுதலை நீங்கள் நம்புகிறீர்களா? இன்றைய நற்செய்தியில், இந்த கேள்வியை தான், யேசுவிடம் சதுசேயர்களிடமிருந்து வேறு மாதிரியான கேள்வியாக கேட்கப்பட்டது.
கிறிஸ்தவர்களாக, நாம் அனைவரும் ஒரு நாள் கிறிஸ்துவை போல் உயிர்த்தெழுவோம் என்று நம்புகிறோம். இவ்வுலக வாழ்வைவிட்டு கடவுளோடு இனைவோம். யேசுவை பின் செல்பவர்கள் அனைவரும் வான தூதர்கள் போல் வாழ்வோம். இதனால் தான் கத்தோலிக்க திருச்சபையில் , மரண சடங்குகளில், திருப்பலியில் குருவானவர்கள் வெள்ளை உடை அணிந்து ,அதனை மறு பிறப்பு திருப்பலியாக, உயிர்த்தெழும் திருப்பலியாக ஜெபிக்கிறோம்.
ஆனால், நீங்கள் மீண்டும் பிறக்கும் அன்பினை நம்புகிறீர்களா? யேசு உயிர்த்தெழுதலை, திருமணத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார். கடவுளின் அன்பை இவ்வுலக மக்கள் பிரதிபலிக்க ஒரு வாய்ப்ப்பாக திருமணத்தை நாம் சொல்ல வேண்டும். கடவுளிடமிருந்து வரும் என்றும் மிளிரும் அன்பினால் ஆனும் பெண்ணும் திருமணத்தில் இணைந்திருக்க வேண்டும்; அதன் மூலம் கடவுளின் விசுவாசத்திற்கும், பொறுப்பிற்கும் , அக்கறைக்கும் சாட்சியாக விளங்கவேண்டும்.

பிறகு ஏன், யேசு திருமணம், இறந்தவர்களின் மறு பிறப்பில் இல்லை என்று கூறினார். ஏன் இன்றைய திருமணம், அதே ஒற்றுமையோடு மோட்சத்திலும் சேர்ந்தே அவர்களின் இறப்பிற்கு பிறகும் இருந்தால் என்ன?
இவ்வுலகில், அன்பை நாம் மிக சரியாக கொடுப்பதுமில்லை, சரியாகவும் பகிர்ந்து கொள்வதில்லை. அதனால் இவ்வுலக அன்பு தொடர்ந்து மரித்தும், மீண்டும் உயிர்த்தெழுகிறது. எல்லா கணவன் மனைவியுமே பல நேரங்களில் அன்பின் குறையால், மனந்திரும்பியும் மன்னிப்பையும் பெறுகின்றனர்.(நண்பர்களிடத்திலும் அது உள்ளது).
மிக சரியான அன்பு என்பது கடவுள் தான். கடவுள் எல்லோரையும் அன்பு செய்வது போல், நாம் நமது சகோதரரையும், சகோதரிகளையும் அன்பு செய்தால், நாம் கடவுளின் உண்மையான குழைந்தைகள் ஆவோம். திருமணம் மோட்சத்தில் இல்லை, ஏனெனில், அதில் முழுமையான, பரிசுத்தமான அன்பு இல்லை. நாம் நமது துணைவரை மற்றவர்களை விட அதிகமாக அன்பு செய்கிறோம். மோட்சத்தில், நமது துணைவரை நிச்சயமாக அன்பு செய்வோம், முழுமையாகவும் அன்பு செய்வோம். மேலும் மற்றவர்களையும் அதே அளவிற்கு அன்பு செய்வோம். நம்மை நல்ல முறையில் அன்பு செய்யாதவர்கள் கூட மோட்சத்தில் நமது துணைவரை விட அதிகமாக அன்பு செய்வார்கள்.

திருமணம் என்பது மோட்சத்தில் ஒருவொருக்கு ஒருவர் எப்படி அன்பு செய்கிறார்களோ அதனை இவ்வுலகில் ப்ரதிபலிப்பதாகும்.
© 2010 by Terry A. Modica