Friday, January 28, 2011

ஜனவரி 30, 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜனவரி 30, 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 4ம் ஞாயிறு

Zep 2:3; 3:12-13
Ps 146:6-10 (with Matt 5:3)
1 Cor 1:26-31
Matt 5:1-12a


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 5


மலைப்பொழிவு
1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
பேறுபெற்றோர்
(லூக் 6:20 - 23)
3 ' ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். 6 நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.7இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, நமது புனிதராக இருக்கும் காட்சியை கொண்டு வருகிறது. மத்தேயு 5:12ல் 8 பேரின்பங்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பேரின்பங்கள் இயேசு கிறிஸ்துவை போல இருப்பவர்களுக்கு கிடைப்பவை ஆகும். முதல் நான்கும் நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை பற்றியதாகும்; கடைசி நான்கும் நாம் மற்றவர்களோடு உள்ள உறவை குறிப்பிடுகிறது.

நாமே நம்மை புனிதர் என்று சொல்லிகொள்ளலாம்? நினைவில் வையுங்கள், நீங்கள் ஒரு புனிதர், உங்கள் பயனத்தில், நீங்கள் குறையுள்ளவர்களாக இருந்தாலும், யேசுவின் சிலுவையின் மூலம் கடவுள் உங்களை புனிதப்படுத்தியுள்ளார். இதன் அர்த்தம் என்னவென்றால், கடவுள் உங்களை ஆசிர்வதித்துள்ளார். மேலும் நீங்களும் மற்றவர்களை கிறிஸ்துவை போல் அன்பு செய்வதால் நீங்களும் ஆசிர்வதிக்கப்படுகிறீர்கள்.

கடவுள் ஆசிர்வதித்த அனைத்துமே பரிசுத்தம் தான்! கிறிஸ்துவை போல், பேரின்பத்தை அடைய முற்படும் யாரும் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்,மேலும் அவர்களை நாம் புனிதர்கள் என்று சொல்லலாம்: அவர்கள் கடவுளின் அன்பு நமக்கு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள். பரிசுத்த ஆவியின் மூலம் அவர்கள் கவலைக்கு மருந்தும் , ஆறுதலும் தேடிகொள்வர். பரமானந்தத்தின் ஒவ்வொரு பயனும் அடைய அவர்கள் செயல்களை செய்வர், எங்கெல்லாம் அவர்கள் குரல் எங்கே ஒலிக்க வேண்டுமோ அங்கே அவர்கள் நிற்பார்கள், ஏனெனில், அவர்கள் கடவுளை அன்பு செய்பவர்கள். அதனால், அவர்கள் பேரின்பத்தை அடைவார்கள். ஒவ்வொரு சவாலையும் ஏற்று நீங்கள் இயேசுவை போல் நடந்து கொண்டு, புனித வாழ்வில் வாழ் வேண்டும். ஒவ்வொரு ஆசிர்வாதத்தையும் நினைத்து தியானம் செய்யுங்கள்.

திருச்சபை புனிதர்களை புனிதர்கள் என்று அர்ச்சித்து அவர்களை போல நாமும் இருக்க வேண்டும் என கூறுகிறது. அவர்கள் நமக்கு முன் மாதிரியாக இருக்கிறார்கள். நாம் அந்த புனிதர்களை போல் பரிசுத்தமாக இல்லாவிட்டாலும், நாமும் அந்த புனிதர்களின் குழுவோடு தான் இருக்கிறோம். மோட்சாத்தை நோக்கி கிறிஸ்துவின் பாதையை பின் செல்பவர்கள் யாவரும் புனிதர்கள் தான், உத்தரிக்கிறஸ்தலத்திற்கு சென்றோ அல்லது போகாமலே நாம் எல்லாருமே புனிதர்கள் தான். நாம் இன்னும் புனித வாழ்வில் முன்னேற , புனிதர்களிடம் நாம் அவர்கள் நம்மை வழிநடத்த சொல்லி கேட்கலாம்.


© 2010 by Terry A. Modica

Friday, January 21, 2011

ஜனவரி 23, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 23, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3ம் ஞாயிறு
Isaiah 8:23--9:3
Ps 27:1, 4, 13-14
1 Cor 1:10-13, 17
Matt 4:12-23

மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 4


இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(மாற் 1:14 - 15; லூக் 4:14 - 15)
12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:15 ' செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!16 காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது. '17 அதுமுதல் இயேசு, ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' எனப் பறைசாற்றத் தொடங்கினார்.
முதல் சீடர்களை அழைத்தல்
(மாற் 1:15 - 20; லூக் 5:1 - 11)
18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.19 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார்.20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.21 அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.22 உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
திரளான மக்களுக்குப் பணி புரிதல்
(மாற் 3:7 - 12;லூக் 6:17 - 19)
23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.24
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், இசையாஸ் கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறியதை பார்க்கிறோம்: உங்களுக்கு தெரிந்த மக்கள் இருளில் வாழ்பவர்கள் (மேலும் அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்யாதவர்கள்), அவர்கள் மேல் பிசாசின் தீய ஆவி அவர்களை ஆட்கொண்டு, அவர்களின் அழிவுக்கு காரணமாக இருக்கும் வேளையில், இயேசுவின் மகிமையால், அவர்களின் வாழ்வு வெளிச்சத்திற்கு வருவதை பார்ப்பீர்கள்.
உங்களின் ஜெபத்தினாலும், விசுவாசமிக்க அன்பினாலும், யேசுவை அவர்களுக்கு வெளிப்படுத்தினோம். அவர்கள் இயேசுவை விட்டு வெளியே இருக்க முயற்சி செய்தாலும், அவரிடமிருந்து மறைந்து இருந்தாலும், ப்ரகாசமான கிற்ஸிதுவின் ஒளியை நிறுத்தி விட முடியாது. கூடிய விரைவிலோ அல்லது சில கால தாமதமானாலும், அவர்கள் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியிலும் , அளவில்லா சந்தோசத்தையும் இயேசுவின் முலம் அடைவார்கள். அது உங்களுக்கும் பரவும்.

மேலும் (லூக்கா 12:49- 50), இயேசு இருளில் இருக்கும் மக்களை பார்த்து: "அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்." உங்களின் வேதனையும் எவ்வளவு என்று இயேசுவிற்கும் தெரியும் என்று இங்கே கூறிகொள்கிறார். ஆனால் இந்த மணவேதனையை இன்னும் ஆழத்துடனும் ,அதிக பற்றுடனும், அவரது வேதனையை கூறுகிறர். நீங்கள் நினைக்கும் வித்ததை விட, எதிர்பார்க்கும் செயல்களை விட, இயேசு அதிகமாகவே செய்கிறார், உங்களின் ஜெபத்தினால், என்ன அடைய விரும்புகிறீகளோ, அதைவிட அதிகமாகவே செய்கிறார். இயேசு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, செய்ய முடியாததை கூட செய்து, உங்களுக்கு தேவையான அனைத்தையும் முழுதுமாக கிடைக்க ஏற்பாடு செய்கிறார்.


இருளில் இருக்கும் மக்களின் தீய குணத்தினால் , தவறான விளைவுகள் ஏற்பட்டுவிட கூடாது என இறைவனிடம் ஜெபியுங்கள். கடவுள் மற்றவர்கள் மூலம் அவரின் ஒளியை பரப்ப செய்ய வேண்டுங்கள். தீய ஆவியின் எதிர்ப்புகளை, கலகங்களை நீக்க கடவுள் அவரது வழியில் (நாம் எதிர்பார்க்கும் வழியில் அவர் செய்வதில்லை) செய்ய நாம் ஜெபிக்க வேண்டும். இருளில் இருப்பவர்கள், அவர்களது மணமாற்றத்திற்கு பிறகு, அவர்களும் கிறிஸ்துவின் ஒளியை இன்னும் அதிகமாக எல்லோருக்கும் பரவ செய்ய வேண்டும் என்று கடவுளின் மன்றாடுங்கள். மேலும் அவர்களின் மணம் மாறுதல், ஆழமான மணம் மாறுதலாகவும், நிரந்தரமானதாகவும், உறுதியான மணம் மாற்றமாக இருக்க ஜெபியுங்கள்.

நாம் கடவுளின் மனதை மாற்ற ஜெபம் செய்வதில்லை. கடவுள் ஏற்கனவே இருளில் இருக்கும் மக்களிடம் கிறிஸ்துவின் ஒளியை கொண்டு செல்வதில் முழு முனைப்புடன் இருக்கிறார். நாம் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவர்களை கடவுளின் கைகளில் வைப்பதற்காக ஜெபியுங்கள். ஏனெனில் அவர்கள் அவர்களுக்காக ஜெபிப்பதில்லை.

© 2010 by Terry A. Modica

Friday, January 14, 2011

ஜனவரி 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 2ம் ஞாயிறு

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 1

29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.30 எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.31 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் ' என்றார்.32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ' தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார்.34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். '
(thanks to www.arulvakku.com)

ஒவ்வொரு திருப்பலியிலும், "இதோ இறைவனின் செம்மறி, இவரே உலகின் பாவங்களை போக்குபவர்" என்று இன்றைய நற்செய்தியில் வருவது போல குருவானவர் சொல்வதை நாம் கேட்கிறோம். அதற்கு பதிலுரையாக நாம் : " இறைவா உன்னை பெறுவதற்கு நான் தகுதியற்றாவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆண்மா குணமடையும்" என்று சொல்கிறோம்.

இந்த ஆண்மாவின் குணமடைதல், திருப்பலியின் ஆரம்ப நிலையிலேயே, நாம் பாவ மன்னிப்பு கேட்கும்பொழுது ஆரம்பித்து விடுகிறது. இந்த குணமடைதலால், நாம் யேசுவை தெய்வமாகவும், மனிதனாகவும் முழுவதுமாக பெறுகிறோம். அதன் மூலம், கோவிலை விட்டு வெளியேறி, யோவானை போல , நாமும், "யேசு தான் கடவுளின் மகன் " என்று இவ்வுலகிற்கு எடுத்துரைக்க தயாராக நாம் செல்கிறோம்.
திருப்பலியில் உங்களுக்கும் இதுபோல அனுபவம் இருக்கிறதா?

திருப்பலியின் எல்லா பகுதிகளிலும் இந்த ஆண்ம குணமடைதல் பங்களிப்பு இருக்கிறது. நாம் பாடல் குழுவோடு இனைந்து பாடும்பொழுது, இயேசு அங்கே இருக்கிறார். பாவ மன்னிப்பு அருட்சாதனத்தில் இயேசு அங்கே இருக்கிறார். நாம் முழுமனதுடன் நமது பாவ மன்னிப்பையும், மனம் திருந்துவதையும் பார்க்கிறார். நற்செய்தி வாசகத்திலும் இயேசு இருக்கிறார், எப்படி ரொட்டி துண்டு உடைந்து நம்மை வளர்க்கிறதோ, அதே போல் ஒவ்வொரு நற்செய்தி வார்த்தையும் உடந்து நமது ஆன்மீக வளர்ச்சிக்காக உதவும். ப்ரசங்கம் நன்றாக இல்லாவிட்டாலும், அந்த திருப்பலியில் ப்ரசங்கமே இல்லாவிட்டாலும் , பரிசுத்த ஆவியானவர் நமக்கு தனியாக ப்ரசங்கம் சொல்கிறார். (நமது மனத்தில் ஒடும் ஏனோதானோ எண்ணங்கள் இறைவனின் செயலாகும்) மேலும் ஒவ்வொரு வேண்டுதலிலும் யேசு அங்கே இருக்கிறார்: நமது ப்ரார்த்தனைகளிலும் , குருவானவர் சொல்லும் ஜெபத்திலும் இயேசு இருக்கிறார்.

எல்லா திருப்பலியும், நம்மை மாறச் செய்கிறது, நம்மை தயார்படுத்துகிறது, கிறிஸ்துவின் சாட்சியாக நம்மை வெளியே அனுப்புகிறது. ஞான்ஸ்நாணம் கொடுத்த யோவானை போல நாமும் : "அவரை எனக்கு தெரியாது", அதனையே மாற்றி : " நாம் ரொட்டி துண்டையும், திராட்சை ரசத்தையும் தான் பார்த்தேன்",மேலும் " நான் பாவியாய் இருக்கிறேன் , மேலும் நான் செய்த அழுவுகள் எனக்கு தெரியவில்லை" மேலும் "எப்படி நாம் குணமடைகிறோம் என்பது எனக்கு ஆச்சரியாமாக இருக்கிறது" .

யோவனை போல நாமும்: "இப்போது நானும், கடவுளின் மகனை பார்த்து விட்டேன்" என்று சாட்சியம் கூற முடியும், "பரிசுத்த ஆவியானவர் திவிய நற்கருணையில் இயேசு இருக்கிறார் என்பதை எனக்கு உணர்த்தினார், அதே பரிசுத்த ஆவியானவர், எனது பாவங்களை எனக்கு கான்பித்து அதிலிருந்து மீண்டு வர உதவினார். எனது புண்களை குணமாக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்தார்"

© 2010 by Terry A. Modica