Friday, May 27, 2011

மே 29, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 29, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு

Acts 8:5-8, 14-17
Ps 66:1-7, 16, 20
1 Peter 3:15-18*
John 14:15-21*


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 14


15 நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.16 ″ உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.17 அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்.19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்.20 நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.21 என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன். ″
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், பரிசுத்த ஆவியை நமக்கு உண்மையை எடுத்துரைப்பவர் என்று இயேசு கூறுகிறார். சில அறிஞர்கள் பரிசுத்த ஆவியை "ஆலோசனை" கூறுபவர் என்றும் சொல்கின்றனர். கிரேக்க மொழியில் இதற்கு அர்த்தம் "நம்முடன் வருபவர்", இந்த வார்த்தைக்கு வழக்கறிஞர் என்றும் அர்த்தம் கொள்ளலாம். நாம் தவறான குற்றம் சாட்டப்பட்டாலோ, தவறாக கண்டிக்கபட்டாலோ, தவறான தண்டனை பெற்றாலோ நமக்காக பரிசுத்த ஆவி வாதிடுவார் , நம்மோடு கூட இருப்பார் என்று இயேசு நம்மிடம் கூறுகிறார்.





"அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்" என்று இயேசுவே பரிசுத்த ஆவியை குறிப்பிடுகிறார். கடவுளுக்கு நம்மை பற்றிய எல்லா உண்மைகளும் தெரியும். மற்றவர்கள் நம்மை பற்றி தவறாக பேசினாலும், கடவுள் நம்மை முழுதுமாக அறிந்தவர் ஆவர். நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள்: கடவுள் நம்மை பற்றிய என்ன எண்ணத்துடன் இருக்கிறார் என்பது தான் நாம் முக்கியமாக எடுத்து கொள்ள வேண்டும். மேலும், நாம் நம்மை பற்றி கொண்ட எண்ணத்திற்கு மேலே அவர் நம்மை பற்றி மதிப்பீடு வைத்துள்ளார்.

நாம் நம்மை பற்றிய மிகவும் மோசமான மதிப்பீடு வைத்துள்ளோம். நியாயமாக நாம் நினைக்கவேண்டியதை விட, மிகவும் கீழ்த்தரமாக நாம் மதிப்பீடு வைத்துள்ளோம். அதனால் தான், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நாம் அதிகம் கவலைபடுகிறோம். நாம் நியாயமாக நம் தவறுகளை, எண்ணங்களை ஆராய்ந்து, திருப்பலியில் , பாவமன்னிப்பு கேட்டும், அல்லது பாவசங்கீர்த்தனத்திலும் மன்னிப்பு கேட்டும், கடவுளோடு இணைந்தால் , இயேசு "நான் உங்களை கண்டிக்க வரவில்லை, இனிமேல் பாவம் செய்யாதீர்கள்" என்று சொல்லி அனுப்புவார்.




நீங்கள் சோதனைக்கு உட்படும்பொழுது, இயேசுவே நேரில் வந்து நம்மை மீட்க வேண்டும் எப்பொழுதாவது நீங்கள் ஆசைபட்டதுண்டா? இயேசு நம்மை தனியாக விட்டு செல்லவில்லை, எப்பொழுதும் பரிசுத்த ஆவியாக நம்மோடு இருந்து, நம்மை காப்பார்.



நாம் இயேசுவை அன்பு செய்ய வேண்டுமென்றால், அவரது கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும். அதற்கு மாறாக, நாம் நடக்கும் பொழுது, பரிசுத்த ஆவியானவர் கடவுளிடம் "இந்த பெருமதிப்புள்ள குழந்தை, உண்மையிலேயே பரிசுத்தமாக வாழ விரும்புகிறார்கள்" என்று கூறி, பிறகு நம்மிடம், "எப்படி பாவங்களை கைவிட்டு, பரிசுத்தமாக வாழ்வது என்று" உங்களுக்கு சொல்லி தருகிறேன் என்றும், மற்றவர்களிடம், "நீங்கள் என்னை அன்பு செய்தால், என்னுடைய நன்பனையும் அன்பு செய்யுங்கள் " என்றும் கூறி நமக்கு ஆதரவாக இருக்கிறார்.

© 2011 by Terry A. Modica

Friday, May 20, 2011

மே 22, 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 22, 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 5ம் ஞாயிறு
Acts 6:1-7
Ps 33:1-2, 4-5, 18-19 (with 22)
1 Peter 2:4-9
John 14:1-12


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 14


பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல் ..............தொடர்ச்சி
(மத் 26:31 - 35; மாற் 14:27 - 31; லூக் 22:31 - 34)
1 மீண்டும் இயேசு, ' நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.2 தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ' உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் ' என்று சொல்லியிருப்பேனா?3 நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.4 நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும் ' என்றார்.5 தோமா அவரிடம், ' ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்? ' என்றார்.6 இயேசு அவரிடம், 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. 7 ' நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள் 'என்றார்.8 அப்போது பிலிப்பு, அவரிடம், ' ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும் ' என்றார்.9 இயேசு அவரிடம் கூறியது: ' பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ' தந்தையை எங்களுக்குக் காட்டும் ' என்று நீ எப்படிக் கேட்கலாம்?10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.12 நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.13 நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார்.14நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி வாசகம் " நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்." என்று கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன? நாம் எப்படி இயேசு செய்வது போல செய்ய முடியும்.? - இன்னும் பெரியவற்றை - தெய்வீக அற்புதங்களை இயேசு செய்தது போல நம்மால் செய்ய முடியுமா?



இதற்கான பதில், நற்செய்தியின் அந்த அதிகாரம் முழுது படித்தால் தெரியும். இயேசு அவரின் தந்தையோடு உள்ள நெருங்கிய உறவை விளக்காமாக கூறுகிறார். . அது என்னவெனில், "என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்", ஆனால் நினைவில் வைத்து கொள்ளுங்கள், இயேசு அங்கே மனிதனாகவும், தெய்வமாகவும் இருந்தார். இதனை நாம் எப்பொழுதும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.


"நான் செய்யும் செயல்கள்" என்றால், இயேசு மனிதனாக , தந்தை கடவுளுக்காக செய்யும் செயல்கள், மனிதனாக, அவர் எல்லோரும் செயல்களை செய்தார். அது என்னவெனில், தந்தை கடவுள் நம் மேல் கொண்ட அன்பினால், நாம் அவருக்கு செய்யம் எல்லா நல்ல செயல்களை போல, இயேசுவும் மனிதனாக தந்தை கடவுள் அன்பின் மேல் செய்யும் செயல்களாகும்.


தந்தையின் பாசமிகு குழந்தகளாக, அவர் அன்பு செய்வது போல, நாம் பிறரை அன்பு செய்கிறோஓம். நாம் கற்று கொண்டதை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்கிறோம். நமக்கு கிடைத்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். மற்றவர்களின் ப்ரச்னையை காது கொடுத்து கேட்டு, அவர்களை நாம் புரிந்து கொள்கிறோம். நமது வேலைகளில், கடினமாக உழைத்து, அதனை செவ்வனே செய்து முடிக்கிறோம். தேவை என்று வருபவர்களுக்கு நம்மால் ஆன உதவு செய்கிறோம். இதெல்லாம் தெய்வீக செயல்கள் அல்ல. நாம் கடவுளின் குழந்தைகளாக இருந்து செய்கிறோம்.



"பெரிய செயல்கள்" என்பது இயேசு தெய்வீக காரியங்களை தந்தை கடவுளோடு சேர்ந்து செய்கின்ற செயல்கள் ஆகும். கடவுள் இயேசு மூலமாக நடத்தி காட்டி அற்புதங்கள் ஆகும், ஏனெனில், கடவுளின் அன்பும், இயேசுவின் அன்பும், ஒரே அன்பு தான்.


நமது பாவங்களுக்காக, இயேசு அதற்கான தன்டனையை ஏற்று கொண்டு, சிலுவையில் மரணமடைந்தால், தந்தை கடவுள் அவரை உயிர்த்தெழ செய்தார். இயேசு அவருடைய தெய்வீகத்தை, நமக்கு கொடுத்துள்ளார், அதன் மூலம், இயேசுவின் பணிகளை நாம் இவ்வுலகில் தொடர்ந்து செய்ய வேண்டும். ஏனெனில், நமது ஞாணஸ்தானத்தின் மூலமாக நாம் கடவுளின் தெய்வீகத்தை பெற்று கொண்டோம். தந்தை கடவுள் நம் மூலமாக இவ்வுலகை தொடர்பு கொள்கிறார். அவரோடு நாம் இனைந்து, அன்பிற்காக ஏங்கும் மக்களுக்கு அன்பை கொடுக்கலாம், தெய்வீக அற்புதங்கள் நடக்க நாம் கருவியாக இருக்கலாம், கடவுள் சொல்வதை நம்மால் கேட்க முடியும் , கடவுளின் ஞானத்தை மற்றவர்களோடு நம்மால் பகிர்ந்து கொள்ள முடியும். நமது குறைகளோடு இருந்தும் , கடவுள் நம்மை செய்ய சொல்வதையெல்லாம், நம்மால் செய்ய முடியும்.

© 2011 by Terry A. Modica

Friday, May 13, 2011

மே 15, 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 15, 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை.
ஈஸ்டர் காலத்தின் 4ம் ஞாயிறு



Acts 2:14a, 36-41
Ps 23: 1-6
1 Peter 2:20b-25
John 10:1-10


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 10


ஆட்டுக் கொட்டில் பற்றிய உவமை
1 ' நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர்.2 வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர்.3 அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார்.4 தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும்.5 அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது. ' 6 இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
இயேசுவே நல்ல ஆயர்
7 மீண்டும் இயேசு கூறியது: ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆடுகளுக்கு வாயில் நானே.8எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை.9 நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர்.10 திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்

(thanks to www.arulvakku.com)





உங்களின் தெய்வீக வாழ்வில் வளர ஏதாவது முட்டுகட்டையாக இருக்கிறதா? அல்லது, உங்கள் உறவில் ஏதாவது ப்ரச்னையா? நீங்கள் ஏதாவது வேறு நெருக்கடியிருந்து உங்களால் வெளியே வர முடியாமல் , ஒரு கட்டத்தில் மாட்டி கொண்டு இருக்கிறீர்களா? அதனால், உங்கள் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் , திருப்தியையும் இழந்து நிறிகின்றீர்களா?


இன்றைய நற்செய்தி, இயேசு தான் , அந்த கட்டத்திலிருந்து வெளியே வரும் கதவு என்று கூறுகிறது. இவ்வுலக முட்டுகட்டையிலிருந்து விலகி நாம் மோட்சத்தின் கதவுகளை நோக்கி செல்ல இயேசு நமக்கு உதவி செய்கிறார். அதனால், இவ்வுலக வாழ்விலும் நாம் நித்திய வாழ்வை அனுபவிப்போம். அதனால், நாம் நிறைந்த அன்பினால் கட்டப்பட்ட வாழ்வை இவ்வுலகில் வாழ்வோம்.



நமது வழி தடைபட்டு போனால், நாம் இயேசுவை நமக்கு வழிகாட்டியாக இருக்க செய்து , அவர் நம்மை தடைகளை தாண்டி அழைத்து செல்ல அவரிடம் வேண்டி கொள்ள வேண்டும். கடவுள் நம்மிடம் செய்ய சொன்னதை செய்யும்பொழுது, யாராவது அதற்கான வழியை தடை செய்தால், இயேசு தான் நமக்கு வழியை திறக்கும் கதவாக இருப்பார். இயேசு அதனை வேறு வழியில் நிறைவேற்றிட உறுதுணையாக இருப்பார். கடவுள் நமக்கு மிகவும் செயல் குழைந்து போக கூடிய செயலை செய்ய சொல்லி , அதற்கான வழியே இல்லாத பொழுது, நாம் அதனை நிறுத்தி விடாமல், இயேசுவை நோக்கி வேண்டினால், அவர் அதற்கான வேறு வழியை நமக்கு காட்டுவார்.



இயேசு காட்டும் வழியில் நாம் செல்லும்பொழுது, கடைசி வாசல் செல்லும் வரை, இயேசுவோடு நாம் ஒன்றினைந்து, ஒன்றும் பேசாமல் அவர் பின் செல்லும் ஆட்டினை போல நாமும் செல்ல வேண்டும். நாம் அடுத்த இலக்கிற்கு செல்வதற்கு முன், நாம் நமது வழியில் பெரிய பயணத்தில் செல்ல வேண்டும்.


நாம், இயேசுவை விட்டு தனியே சென்று , அவரை விட்டு ஒதுங்கி இருக்கும்பொழுது தான், ஆட்டினை திருடி, அதனை வெட்டி கொண்டு செல்ல வரும் திருடன், நம்மை தொட முடியும்.


நம்பிக்கையினமையும், கவலையும் இரண்டு திருடர்கள் ஆவர், நமது அமைதியை கெடுத்து விடும், சந்தோசத்தை அழித்து விடும், திருப்தியை கொடுக்காது, நமது காயங்களை குணப்படுத்தாது. ஆனால் நாம் நினைப்பது போல், அவைகள் ஒன்றும் அவ்வளவு சக்தி வாய்ந்தவை அல்ல. அழிவை பற்றிய நமது பயத்தினால், அதனுடைய உண்மையான ஆற்றலை நாம் தெரிந்து கொள்வதில்லை. இயேசு நமது நல்லாயன் என்பதனை, அந்த கவலைகள் நம்மை மறக்க செய்கின்றன. இயேசு நல்லாயன், நமக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றிட, நமக்கு வழி காட்டுவார்.



© 2011 by Terry A. Modica

Friday, May 6, 2011

மே 8, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 8, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் 3ம் ஞாயிறு

Acts 2:14, 22-33
Ps 16:1-2, 5, 7-11
1 Peter 1:17-21
Luke 24:13-35


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 24



எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்
(மாற் 16:12 - 13)
13 அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. 14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள்.15இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்.16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.17 அவர் அவர்களை நோக்கி, ' வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? ' என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.18அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ' எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ! ' என்றார்.19 அதற்கு அவர் அவர்களிடம், ' என்ன நிகழ்ந்தது? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' நாசரேத்து இயேசுவைப் பற்றியே தான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்.20 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.21 இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன.22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்;23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை ' என்றார்கள்.25 இயேசு அவர்களை நோக்கி, ' அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே!26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! ' என்றார்.27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார்.29 அவர்கள் அவரிடம், ' எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று ' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ' வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ' என்று பேசிக் கொண்டார்கள்.33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.34 அங்கிருந்தவர்கள், ' ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார் ' என்று சொன்னார்கள்.35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
(thanks to www.arulvakku.com)




இன்றைய நற்செய்தியில் வரும் இரண்டு சீடர்களும், இயேசு அவர்களுக்கு மறைநூலை மேற்கோள் காட்டி சொன்ன பிறகும், அப்பத்தை எடுத்து இரண்டு துண்டாக பிரித்த பின்பு தான் இயேசுவை அவர்கள் கண்டு கொண்டனர். முதலில் இயேசு கூறிய மறைநூலை கேட்ட பொழுது, அவர்களின் மனது மட்டும் தான் இயேசுவை அறிந்து கொண்டது (மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ). இயேசு அப்பத்தை எடுத்து ஆசிர்வதித்து, அதனை பிட்டு அவர்களுக்கு கொடுக்கும் பொழுது தான் அவர்களின் கண்கள் திறந்தன.அப்பொழுது தான் அவர்கள் உண்மையான இயேசுவை பார்த்தனர்.


நாம் இன்று திருப்பலியில் பங்கு கொள்ளும் பொழுது, நாமும் இயேசுவோடு பயணம் செய்கிறோம். முதலில், நற்செய்தி வாசகத்தில், மறைநூலை கேட்கிறோம், பிறகு ப்ரசங்கத்தில் , அதற்கான விளக்கங்களை கேட்கிறோம், இதன் மூலம், நமது உள்ளத்தில் இயேசுவை கேட்கிறோம். அனுபவப்பட்ட வாசகம் வாசிப்பவர், வாசகங்களை முக்கியமான வசனங்களை அழுத்தம் திருத்தமாகவும் வாசிப்பார், அதன் மூலம் , நம் உள்ளத்தால், இயேசுவை நாம் உணர முடியும். நல்ல பயிற்சி பெற்ற குருவானவர் அவர் ப்ரசங்கத்தின் மூலம், நம் உள்ளத்தை பற்றி எறிய வைப்பார். ஆனால், வாசகம் வாசிப்பவரோ, அல்லது குருவானவரோ, அவர்கள் வேலையை ஒழுங்காக செய்யவில்லையென்றாலும், நமது இதயம் இயேசு பேசுவதை கேட்க முடியும்.


அதன் பிறகு நாம் நற்கருணை சடங்கை தொடங்குகிறோம். குருவானவர் அப்பத்தையும் , திராட்சை ரசத்தையும் ஆசிர்வதித்து தொடர்கிறார். அதில் இயேசுவே தான் அந்த சடங்கை செய்கிறார். குருவானவரின் கைகள், மற்றும் குரல் மூலமாக அதனை செய்கிறார். இயேசுவே தான் நமக்காக அந்த அப்பத்தையும் , ரசத்தையும் புனித படுத்துகிறார். எம்மானுஸ் சீடர்களுக்கு செய்ததை போல நமக்கும் செய்கிறார்.

நாம் , திருப்பலியின் முதல் பகுதியில், இயேசுவிற்காக நமது உள்ளத்தை திறந்தால்,தொடர்ந்து அவரோடு இனைந்து இருந்தால், சாதாரண அப்பத்தை விட பல மடங்கு உயர்ந்த இயேசுவை நாம் பார்க்க முடியும். அவரை நாம் கண்டு மனத்தாலும், உள்ளத்தாலும் கண்டு கொள்ள முடியும். உயிர்த்த இயேசு நம்மோடு உண்மையாகவே இருக்கிறார் என்பது நமக்கு தெரியும்.


© 2011 by Terry A. Modica