Friday, September 30, 2011

அக்டோபர் 2, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 2, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 27ம் ஞாயிறு
Isaiah 5:1-7
Ps 80:9, 12-16, 19-20 (with Is 5:7a)
Phil 4:6-9
Matt 21:33-43

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 21


கொடிய குத்தகைக்காரர் உவமை
(மாற் 12:1 - 12; லூக் 20:9 - 19)
33 ″ மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். 34பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ' இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் ' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.39 பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்? ' என இயேசு கேட்டார்.41 அவர்கள் அவரிடம், ' அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார் ' என்றார்கள்.42 இயேசு அவர்களிடம், ' கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா?43 எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்
(thanks to www.arulvakku.com)

"இறையரசு யார் அதற்காக உழைத்து கணி தருகிறார்களோ அவர்களிடமே கொடுக்கப்படும்" என்பதுதான் இன்றைய நற்செய்தியின் மையக்கருத்தாக இயேசு நமக்கு கொடுக்கிறார். நாம் இன்னும் இப்பூமியில் இருக்கும்பொழுது இறையரசு என்பது என்ன? என்ன மாதிரியான கணிகளை நாம் இப்பூமியிலிருந்து தரவேண்டும்?
கிறிஸ்துவை போல நாமும் எந்த செயலையும் செய்து அதன் விளைவாக தரும் கணியுடன், நாம் மோட்சத்தை நோக்கிய நமது பயணத்திற்கு அது உதவுகிறது. கிறிஸ்து அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்து, அவரை போல நாமும் மன்னித்து, மற்றவர்களுக்கு இறைசேவை செய்து, உண்மையை எடுத்துரைத்து, மணக்காயங்களுக்கு மருந்து போட்டு நமது வாழ்வை தொடர்ந்தோமானால், நாம் இறையரசில் இப்பொழுதே வாழ்கிறோம்.

நான் கத்தோலிக்கர்களை பார்த்து 'அவர்கள் மோட்சத்திற்கு போவார்களா? ' என்று கேட்கும்பொழுது, பலர் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறார்கள், கிறிஸ்துவின் மீட்பை, இனிமேல் நடக்க இருக்கும், சாவான பாவத்தினால் அவர்க்ள் பெறாமல் போய்விடுவார்களோ என்றும், அல்லது 'ஆம் நிச்சயம் மோட்சத்திற்கு போவோம் ' என்று சொல்வது ஆடம்பரமாகிவிடும் என்றோ அவர்கள் நினைக்கின்றனர்.

நாம் கிறிஸ்துவை போல முழுதாக நடந்து கொள்வதில்லை. நம்மில் பலர், உத்தரிக்கிற ஸ்தலத்தில், நமது பாவங்களை, மோட்சத்திற்கு ஒவ்வாத நம்மில் இருக்கும் குறைகளை முழுமையாக அகற்றிவிட்டு , மோட்சத்திற்கு செல்வோம். இந்த சுத்தப்படுத்துதல் முடிந்த உடன், கடவுளின் முழு மோட்சத்தில் நாமும் வாழ்வோம். நாம் உத்தரிக்கிறஸ்தலத்திற்கு சென்று விட்டால், கண்டிப்பாக நாம் மோட்சத்திற்கு செல்வோம். நாம் கிறிஸ்துவை போல இருக்க வேண்டும் என்ற நமது ஆசை, உண்மையாக இருந்தால், கண்டிப்பாக நமக்கு சாவான பாவங்கள் நடக்க போவதில்லை. கண்டிப்பாக நமது இறப்பின் போது , இயேசுவை அனைத்து அவரோடு மோட்சத்தின் பயனத்தை தொடர்வோம்.
கிறிஸ்துவிற்காக நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், அவர் மேல் உள்ள அன்பினால் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும், நீங்கள் இறையரசில் வாழ்ந்து கொண்டும், வாழ்வும் போகிறீர்கள்.

© 2011 by Terry A. Modica

Saturday, September 24, 2011

செப்டம்பர் 25, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 25, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு

Ezek 18:25-28
Ps 25:4-5, 8-10, 14
Phil 2:1-11
Matt 21:28-32

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 21


இரு புதல்வர்கள் உவமை
28 மேலும் இயேசு, ' இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ' மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் ' என்றார்.29 அவர் மறுமொழியாக, ' நான் போக விரும்பவில்லை ' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ' நான் போகிறேன் ஐயா! ' என்றார்; ஆனால் போகவில்லை.31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? ' என்று கேட்டார். அவர்கள் ' மூத்தவரே ' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், ' வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.32 ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை ' என்றார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி, பக்தியிலும், விசுவாசத்த்லும், சரியாக நடந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து கொண்டிருபவர்களுக்கு ஒரு அதிர்ச்சையை கொடுக்கும். ஏனெனில் அவர்கள், கடவுளின் விருப்பத்தை எந்த அளவிற்கு சரியாக செய்கிறார்கள் என்று சுய பரிசோதனை செய்தது கிடையாது. வரி வசூலிப்போடும், விலைமகளிரும், (வெட்ககேடான, அசூத்தமானவர்கள் என்று சமூகம் அவர்களை தூற்றியது) ,சமய அறிஞர்களை விட முன்னே இறையரசிற்கு செல்வார்கள் என்று இயேசு சொல்கிறார்

'அறிஞர்கள்" என்று சொல்லப்படுபவர்களுக்கு இயேசு கேட்ட கேள்விக்கு, பதில் தெரியும் - கடவுளுக்காக "ஆம்" என்று பதில் சொல்வார்கள் - ஆனால், சரியான பதில் சொல்வதற்கும், அவர் என்ன கேட்டோரா, அதனை செய்வதற்கும் வித்தியாசம் - மோட்சத்திற்கும், நரகத்திற்கு இடையே உள்ள ஒரு கோடு போன்றது.

கடவுளோ சரியான பதிலை எதிர்பார்க்கவில்லை; சரியான செயலை தான் எதிர்பார்க்கிறார். திருச்சபையின் போதனைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்று கடவுள் சொல்லவில்லை; அன்பினால் ஊக்கப்படுத்தப்பட்ட கீழ்படிதலும், உற்சாகத்துடன் திருச்சபையின் நோக்கத்திற்கு உழைக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.
ஒவ்வொரு ஞாயிறும் திருப்பலிக்கு போவதால் என்ன பயன்? திருப்பலி முடிந்தவுடன் வெளியேயும் பரிசுத்த செயல்களால் உங்கள் வாழ்வு தொடரவில்லையென்றால், திருப்பலியின் பயன் என்ன? கோவிலை விட்டு வெளியே இருக்கும் உங்களுக்கு தெரிந்த வர்களுக்கு, திவ்ய நற்கருணையிலும்,திருச்சபையின் சமூகத்திலும் பிரிந்து இருப்பது பாவம் என்று அவர்களுக்கு தெரியாது. அவர்கள் நல்ல செயல்கள் செய்தால், அவர்கள் கடவுள் மேல் உள்ள அன்பினால் செய்கிறார்கள். தினமும் திருப்பலி செல்பவர்களை விட, இவர்கள் தான் இறையரசோடு விரைவில் இனைவார்கள் என்று கடவுள் சொல்லவில்லை.



கடவுளை வேண்டாம் என்று சொல்பவர்களை, நாம் கண்டிக்கும்பொழுது , நம்மை அவர்களோடு ஒப்பீட்டு கொள்கிறோம்- இதை தான் நாம் எக்காலமும் செய்ய கூடாது . ஒப்பீட்டு பார்க்கும்பொழுது ஒன்று நாம் மற்றவர்களோடு பெரியவர்களாக இருப்போம் அல்லது சிறியவர்களாக இருபோம். நாம் சரியாக இருக்கும் நம்மையே ஒப்பீடு செய்து கொள்ள வேண்டும். நாம் எவ்வளவு நெருக்கமாக கடவுளோடு நேற்று இருந்ததை விட இன்று இருக்கிறோம் என்று ஒப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

© 2011 by Terry A. Modica

Friday, September 16, 2011

செப்டம்பர் 18, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 18, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
Is 55:6-9
Ps 145:2-3, 8-9, 17-18
Rom 1:20c-24, 27a
Matt 20:1-16a

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 20

திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை
1 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். 3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.4 அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் ' என்றார்.5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ' நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்? ' என்று கேட்டார்.7 அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை ' என்றார்கள். அவர் அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் ' என்றார்.8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ' வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் ' என்றார்.9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,12 கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே ' என்றார்கள்.13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ' தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? ' என்றார்.16இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர் ' என்று இயேசு கூறினார்.

(thanks to www.arulvakku.com)

கடவுள் நியாயமற்றவர் என்று எத்தனை முறை நாம் நினைத்திருக்கிறோம்? நமது பார்வையில் இது உண்மையும் கூட. இன்றைய நற்செய்தியில் வரும் உவமை இதற்கு சான்றாக அமைகிறது.

கூலி தொழிலாளர்கள் கண்டிப்பாக அவர் செய்ததை நியாமில்லாதது என்றே நினைப்பர். எனினும், நாம் அவரை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். நாம் பெற்றோர் போல நினைத்து கொண்டால், அன்பான தந்தை எல்லா குழந்தைகளையும் சமமாகவே பார்ப்பார். அதிகம் தேவையுள்ள குழந்தைக்கு , அவர் அதிக நேரம் செலவிட்டாலும், மற்ற குழந்தைகளையும் அதே போல சமமாகவே பார்க்கிறார்.

தந்தை கடவுள் திராட்சை தோட்டத்தின் உரிமையாளர் போல., எல்லோருக்கும் சமமாகவே கொடுப்பவர். நாம் நாமாகவே மோட்சத்திற்கு செல்ல முடியாததால்,, அதிக காலம் மோட்சம் செல்ல ஆயத்தமானவனுக்கு சம நீதி கொடுப்பது ஒன்றும் குறைவானதில்லை. மேலும், கடவுள் அவருடைய முழுமையான பரிசுத்த அன்பை , இறுதி நேரத்தில் மணந்திருந்துபவனுக்கும் கொடுக்கிறார். அவர் ஒன்றும் குறைவாக கொடுக்க மாட்டார்.

முதல் வாசகத்தில், கடவுள் வழி மிக பெரியது, அவரின் எண்ணங்கள் நம் எண்ணங்களை விட உயர்ந்தது என்றும் நாம் பார்க்கிறோம். நாம் நீதியை சமமாக பார்க்கிறோம், பழைய ஏற்பாட்டில், "கண்ணுக்கு கண் " என்று குறிப்புட்டுள்ளது போல, இயேசு நீதியை மிக பெரிய உயர்த்திற்கு கொண்டு சென்றார். அதன் அர்த்தம் என்னவென்றால், எல்லோரையும் சமமாகவும், ஒரே அன்புடனும் கடவுள் நடத்துவார். அவர்கள் அதற்கு தகுதியானவர்களா இல்லையே என்பது ஒரு பொருட்டல்ல.

கடவுளின் உயர்ந்த வழியை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாம் அன்பில்லாமல் இருந்தாலும், கடவுள் நம்மை முழுமையாக அன்பு செய்கிறார் என்பதே நமக்கு மகிழ்வை தரும். நாம் அவரது அன்பை பெற நாம் தகுதியற்றவராக இருந்தாலும் , எல்லோருக்கும் போல சம அளவு அன்பையே கடவுள் நமக்கு தருகிறார். மிகவும் புனிதமான புனிதர்களுக்கு காட்டும் அன்பையே உங்களுக்கும் கொடுக்கிறார். அண்ணை மேரியை எவ்வளவு அன்பு செய்கிறாரோ அதே போல ஆசிர்வதிக்கபட்ட கிறிஸ்துவின் தாயாகிய மேரியை அன்பு செய்வது போல் உங்களையும் அன்பு செய்கிறார். "எனது அன்பை நாம் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோனோ , அதை கொடுக்க எனக்கு உரிமையில்லைய " ? என்று கடவுள் நம்மிடம் கேட்கிறார்.
© 2011 by Terry A. Modica

Friday, September 9, 2011

செப்டம்பர் 11, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 11, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 24ம் ஞாயிறு

Sir 27:30--28:9
Ps 103:1-4, 9-12
Rom 14:7-9
Matt 18:21-35

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 18


மன்னிக்க மறுத்த பணியாள் உவமை
21 பின்பு பேதுரு இயேசுவை அணுகி, ' ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார்.22 அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ' ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.23 விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார்.24 அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். 25 அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.26 உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ' என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன் ' என்றான்.27 அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.28 ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, 'நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். 29 உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் ' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.30 ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.31 அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.32 அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ' பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.33 நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார்.34 அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.35 உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். '
(thanks to www.arulvakku.com)

இயேசு நமக்கு சொல்லி கொடுத்த ஜெபத்தில் "எங்களுக்கு தீமை செய்தவர்களை , நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் பாவங்களையும் மன்னித்தருளும்" என்று கூறியுள்ளதை, இன்றைய நற்செய்தி விளக்கி சொல்கிறது.

இதில் மிகவும் சக்தி பெற்ற ஒரு வார்த்தை என்னவென்றால், "போல" - நாங்கள் மன்னிப்பது போல, அதே அளவிற்கு, அதே வழியில் என்பது தான்.
நாம் யாரையாவது மன்னியாது இருந்தால், யாருக்காவது , நாம் முழுமையான அன்புடன் ஜெபம் செய்யாமல் இருந்தால், நாம் பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே என்று ஜெபிக்கும் பொழுது, மேற்கூறிய வரிகள் வரும்பொழுது நாம் சொல்லாமலே இருக்கலாம்.
சில நேரங்களில், "மறப்பதும்" , "மன்னிப்பதையும்" சேர்த்து குழப்பிவிடுகிறோம். நாம் கடனாளிகள் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விட வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை. மறப்பது என்பது ஞாபகம் வைத்து கொள்ளவேண்டும் - ஞாபகத்திலிருந்து நாம் நினைவுபடுத்தி கொள்ள வேண்டும் - மீண்டும் பணம் கட்ட சொல்லியோ அல்லது பதிலுக்கு பதில் செய்ய வேண்டும் என்றோ இருக்க கூடாது.

மன்னிக்காமல் இருப்பது ஒரு வகையான தன்டனை ஆகும்: இது திருப்பி செலுத்தும் நேரம் ஆகும். எடுத்து காட்டாக , நாம் கோபத்துடன் இருந்தால், நாம் கோபத்தில் இருக்கும்போது, பாவிகள் திருந்தி விடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் , ஆனால் அது நடக்க போவதில்லை.

அடுத்ததாக இன்னும் பல நீங்கள் செய்தால் அது எதிர்பார்த்தமாதிரி நடக்க போவதில்லை: மேலும் அதிருப்தியை தொடர்ந்து கொண்டிருப்பதும், அந்த தவறான நினைவுகளை , அதனாலும் நமக்கு ஏற்படும் வலியோ பறந்து விடுவதில்லை. இன்னும் அந்த வலி உங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நாம் மற்றவர்களை அவர்களின் குற்றங்களிலிருந்து விடுவித்தால் தான் நமக்கு நம்மை பாதிக்கும் விசயங்கள் நம்மை விட்டு விலகும். (அவர்கள் மனம் திரும்ப நினைத்தாலும், , இல்லையென்றாலும், அவர்கள் உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டலும்), நாம் நம்மையே சுதந்திரமாக உணர்வோம், அப்பொழுது நமக்கும் குணம் அடைவோம்.

இது தான் நாம் நமக்கே கொடுக்கும் மிகவும் அன்பான அன்பளிப்பு ஆகும். அதுவே மற்றவர்களுக்கு கொடுக்கும் அன்பளிப்பு ஆகும். அவர்கள் அதனை புரிந்து கொள்ளாவிட்டால் கூட , கடவுள் புரிந்து கொள்வார்.
© 2011 by Terry A. Modica

Friday, September 2, 2011

செப்டம்பர் 4, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


செப்டம்பர் 4, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு

மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 18


பாவம் செய்யும் சகோதரர்
(லூக் 17:3)
15 ' உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.16 இல்லையென்றால் ' இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும் ' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள்.17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.19 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். '
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் வாசகங்கள் நம்மை நீதிக்கும், பரிசுத்த வாழ்விற்கும், உண்மைக்கும் நாம் துணை நின்றால் தான் மற்றவர்களை பாவ வாழ்விலிருந்து மீட்க முடியும் . அப்படி செய்யாவிடில், அவர்கள் பாவத்திற்கு நாமும் துணை புரிந்த பாவத்திற்கு ஆளாவோம். அதற்கான பொறுப்பு உங்களுக்கும் உள்ளது. (முதல் வாசகத்தை பாருங்கள்).



இரக்கம், நிபந்தனையற்ற அன்பு, கருணை இவை எல்லாவற்றுடனும் சேர்த்து நாம் பாவத்தை எதிர்த்தால் ஒழிய அது பாவமாகாது, இல்லையெனில், அதுவும் பாவமாகும். (இரண்டாவது வாசகம்). இன்றைய நற்செய்தியில், இயேசு சொல்கிறார். கிறிஸ்தவ குழுவோடு இணைந்து அவர்கள் ஆலோசனையுடனும், ஜெப உதவியுடனும் நாம் பாவத்திற்கு எதிராக போராடவேண்டும் என்று சொல்கிறார்.

முதலில் நாம் பாவியோடு பேசவேண்டும். எல்லா பாவங்களும் ஏதோ ஒரு வகையில் அவர்களை சேதப்படுத்துகிறது. (அவர்களுக்கு தெரியாமலே), இதனை நாம் பாவிகளிடம் எடுத்துரைக்க வேண்டும், இல்லையெனில் நாம் அவர்களை அன்பு செய்யவில்லை , அவர்கள் மேல் அக்கறை கொள்ளவில்லை என அர்த்தம்.


நாம் உண்மையை அவர்களுக்கு பகிர்ந்து கொண்டபிறகு, பாவிகள் மணம் திருந்தாவிட்டாலும், நாம் நமது பாவத்திலிருந்து விடுதலை அடைகிறோம். ஆனால், பாவிகளை அன்பு செய்வதை மட்டும் நிறுத்த கூடாது. அதனால், இன்னும் இரண்டு மூன்று பேரை அழைத்து கொண்டு, பாவிகள் திருந்துவதற்கு எது தடுக்கிறது, என்று ஆராய்ந்து அவர்களுக்கு உதவமுடியும்.

அதுவும் தோற்றுவிட்டால், இன்னும் வேறு உதவியுடன் நாம் முயற்சி செய்ய வேண்டும்.


ஒவ்வொரு முயற்சிக்கும், பலன் தரவில்லையென்றால் மட்டுமே, நாம் நமது முயற்சியை கைவிட்டு நாம் நமது வழியில் செல்ல வேண்டும். நாமாக பிரிந்து செல்லவில்லை. பாவிகள் தான் பிரிந்து செல்ல காரணமாக இருக்கின்றனர். இயேசு வரி வசூலிப்போரையும், வெளியாட்களையும் எப்படி அனுகினார் என்பதை நாம் பார்க்கிறோம். : அவர்களை அன்பு செய்வதை என்றுமே அவர் நிறுத்தியதில்லை. அவர்களுக்காக மரணத்தையும் ஏற்றுகொண்டார்.


© 2011 by Terry A. Modica