Friday, February 24, 2012

பிப்ரவரி 26, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 26, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் முதலாம் ஞாயிறு
Gen 9:8-15
Ps 25:4-9
1 Peter 3:18-22
Mark 1:12-15
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 1

இயேசு சோதிக்கப்படுதல்
(மத் 4:1 - 11; லூக் 4:1 - 13)
12 உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.13 பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

2. இயேசுவே மெசியா
இயேசுவும் மக்கள் கூட்டமும்
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(மத் 4:12 - 17; லூக் 4:14 - 15)
14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் 'என்று அவர் கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தி, இயேசு அவர் ஜோர்டான் நதியில் ஞானஸ்நாணம் பெற்ற பின், அவர் சோதனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவர் தந்தை கடவுளிடம் தன்னை முழுதும் ஒப்படைத்ததை ஞானஸ்நாண நாள் குறிக்கிறது. தண்ணீரிலிருந்து அவர் எழுந்த பொழுது, அவரின் பழைய வாழ்வை விட்டு விட்டு, இறைசேவையை தனது புதிய வாழ்வில் ஆரம்பித்தார்.

தந்தை கடவுள் இயேசுவிடம், அவர் மிகவும் சந்தோசமடைந்துள்ளார் என்பதை தெரிவித்தார். மேலும் பரிசுத்த ஆவி, இயேசுவை முழுதும் மனிதனாக்கினார். கடவுளாக இயேசு, ஏற்கனவே பரிசுத்த ஆவியானவர் அவரிடத்தில் இருக்கிறார். அந்த ஜோர்தான் நதியில், இயேசுவிற்கு பரிசுத்த ஆவியை பெற்ற பின்பு, அவர் எப்படி உற்சாகத்தில் இருந்திருப்பார் என்பதை நாம் கற்பனை பன்னி பார்க்கலாம். அதற்கு அடுத்ததாக , சாத்தான் அவரை சோதித்தது.
இதே சுழற்சி முறை தான் நமக்கும் நடக்கிறது. நமது விசுவாசத்தில், நாம் புதிய வளர்ச்சியை கானும் பொழுது, இந்த இறையரசில் , இறைவனின் விருப்பத்தை , செய்ய நாம் அழைக்கப்டும்பொழுது, நமது வலிமையையும், விசுவாசத்தின் மேல் உள்ள உண்மையும் சோதிக்கபடுவோம். எனினும், இப்படி நடக்க வில்லையென்றால், நமது விசுவாசம் எவ்வளவு உறுதியானது, என்பது நமக்கு எப்படி தெரியும்.? . நாம் ஆன்மீகத்தில் முதிர்ச்சி அடைந்து விட்டோம் என்பது நமக்கு எப்படி தெரியும். இறையரசிற்காக நாம் இறைசேவையை செய்து, நாம் கடவுள் வழியில் செல்கிறோம் என்பது நமக்கு எப்படி தெரியும்?
சில நேரங்களில், நமது ஆன்மீக வாழ்வு ஒரு பலனையும் அளிக்கவில்ல என்று நம்மை அறியாமலேயே நாம் உள்ளுக்குள் நினைப்பது உண்டும். நாம் சோதிக்கபட இருக்கிறோம் என்று நினைத்தால், நாம் நமது போராட்டதில், தோத்து விடுவோம் என்று நினைத்தால், நமது ஆண்மீக வாழ்வில் வளராமல், இறையரசிற்கு கிறிஸ்துவோடு இனைந்து இறைசேவை செய்யாமல், ஆண்மீகத்தில் இன்னும் அதிகம் வளராமல் இருந்து விடலாம் எனவும் தோனலாம். இன்னும் ஒரு சோதனை நமக்கு.!
தவக்காலத்தில், நாம் சந்திக்கும் சோதனைகளை நாம் சுய பரிசோதனை செய்து, அந்த சோதனைகள் நம் விசுவாசத்தை இன்னும் உறுதிபடுத்தி கொண்டு வளரவேண்டும்.
ஒவ்வொரு முறையும், நாம் பாவத்தில் விழுந்து, கடவுள் மன்னிப்பை கோரும்பொழுது, இன்னம் நாம் விசுவாசத்தில் உறுதியாகிறோம். இன்னும், கொஞ்சம் அதிகமாக, நாம் பாவசங்கீர்த்தனம் செய்து நாம் பாவமன்னிப்பு பெறும்பொழுது, குருவின் வழியாக இயேசு விடமிருந்து நாம் பல அருட்கொடைகளை பெறுகிறோம், அந்த அருட்கொடைகள் நம் சோதனையை இன்னும் உறுதியாக எதிர்கொள்ள துனைபுரியும்.
இதன் மூலம், கடவுளின் இறைசேவையை முழுதும் ஏற்று அதனை செய்யும்பொழுது, இவ்வுலகில் உள்ள சாத்தானை வெற்றி கொள்ள முடியும். மேலும் இறையரசை நம்மிடையே உள்ள மக்களுக்கும் பரப்ப முடியும்.
எனவே சோதனைகள் என்று வரும்போது, மறைந்திருக்கும் ஆசிர்வாதம் என நினைத்து, அதனை நம் வாழ்வை சுத்தம் செய்யும் வாய்ப்பாக எடுத்து கொண்டு, யேசுவை போல நாம் வாழ முயலவேண்டும். மேலும் விசுவாசத்தில் வலிமையுடன் இருக்க வேண்டும்.
© 2012 by Terry A. Modica

Friday, February 17, 2012

பிப்ரவரி 19, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 19, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 7ம் ஞாயிறு

Isaiah 43:18-19,21-22,24b-25
Ps 41:2-5,13-14
2 Cor 1:18-22
Mark 2:1-12


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 2

முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துதல்
(மத் 9:1 - 8; லூக் 5:17 - 26)
1 சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.2 பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.3 அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.4 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.5 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ' மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார்.6 அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ' இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?7 இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ' உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?9 முடக்குவாதமுற்ற இவனிடம் ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்பதா? ' எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,11 ' நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ ' என்றார்.12 அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ' இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், முடக்குவாதமுற்றவரை வீட்டின் கூரையை பிரித்து இயேசு குணமாக்கியதை பார்க்கிறோம். அவர் குணமானது அவரின் நண்பர்களால் தான்.

கடவுள் நாம் வாழ்க்கை முழுவதும் தனியாகவே நம் கஷ்டங்களோடு வாழவேண்டும் என நினைக்கவில்லை. பல நேரங்களில் நமது ஜெபத்திற்கு விசுவாசமிக்க குழுவில் இருக்கும் மற்ற கிறிஸ்தவ நண்பர்கள் மூலமாக தான் கடவுள் பதிலும், வேண்டுதலுக்கு என்ன தேவையோ அதனையும் கொடுக்கிறார். நாம் கிறிஸ்துவை இவ்வுலகில் உள்ள கிறிஸ்துவின் உடல் மூலமாகவும், குருக்களாலும், மற்ற திருச்சபை குழுவில் உள்ள சகோதரர்களாலும் கொடுக்கப்படும் திவ்ய நற்கருனை மூலமாகவும், பங்கு குழுக்களின் வழியாகவும் நாம் கிறிஸ்துவை பெறுகிறோம். அது என்னவென்றால், நம் பங்கில் உள்ள குழுக்களோடும், கோவிலிலும், தூரத்தில் இருக்கும் நமது நண்பர்களின் வழி வரும் நல்ல செய்திகளாலும், தொலைபேசி அழைப்புகளாலும் , இந்த தோழமையில் நாம் கிறிஸ்துவை காண்கிறோம்.

கடவுள் மற்றவர்கள் மூலம், நம்மை அரவணைத்து நமக்கு அன்பை தெரிவிக்கிறார். கடவுள் நம் சகோதரர்கள் மூலம் நம்மிடம் பேசுகிறார். நாம் நமது துன்ப வேளையில், நம் நன்பர்கள் மேல் தோளை சாய்த்து நமக்கு ஆறுதல் பெறுவது , கடவுள் நமக்கு நண்பர்கள் மூலம் அவர் தோளை கொடுக்கிறார்.

கடவுள் அன்பை, கிறிஸ்தவ நண்பர்கள் மூலம், நாம் பெறும்போது நாம் நமது விசுவாசத்தில், மிக விரைவாக வளர்கிறோம், மிகவும் விரைவாக குணமடைகிறோம் , கடவூலை இன்னும் அதிகம் நம்புவதற்கு கற்று கொள்கிறோம் , இதன் மூலம், நமக்கு தேவையான எல்லாம் இருக்கிறது என்ற கர்வத்தோடு இல்லாமல் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு , மற்றவர்கள் நம்மிடம் கொடுப்பதை கனிவோடு பெற்று கொள்ள வேண்டும்.



உங்களுக்கு யேசுவோடு நெருக்கம் உள்ள 4 நண்பர்கள் உண்டா? உங்கள் படுக்கையின் 4 முனைகளிலும் உங்களை தூக்கி செல்ல ? இவர்களை கண்டு கொள்ள, நாம் பங்கு மற்றும் கிறிஸ்தவ மத குழுக்களில் இனைந்து செயல்பட வேண்டும். உங்கள் பங்கில் பல வாய்ப்புகள் இருக்கும். அதில் உங்களை இனைத்து கொண்டு, கடவுள் கொடுத்த திறமைகள உபயோகிக்க வேண்டும்.

எவ்வித குழு ஈடுபாடும் இல்லாமல், விசுவாசமிக்க நண்பர்களோடு நாம் இனையாமல், கடவுளோடு ஒரு நல்ல உறவில் இருக்கிறோம் என்பது நல்ல அர்த்ததுடன் இல்லை.
© 2012 by Terry A. Modica