Saturday, March 31, 2012

ஏப்ரல் 1, 2012 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 1, 2012 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
குருத்து ஞாயிறு
For the Entrance Procession:
Mark 11:1-10 or John 12:12-16
Psalm 24 & Psalm 47
For Mass:
Isaiah 50:4-7
Ps 22:8-9, 17-20, 23-24
Phil 2:6-11
Mark 14:1–15:47



மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 14: 1-15: 47
பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக்கொண்டிருந்தனர்; ஆயினும், `விழாவின்போது வேண்டாம்; ஒருவேளை மக்களிடையே கலகம் ஏற்படக் கூடும்' என்று நினைத்தனர்.
இயேசு, பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார்.
ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, ``இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே,'' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்பெண்மீதும் சீறி எழுந்தனர்.
இயேசு அவர்களிடம், ``அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்ய முடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்;இவரும் நினைவுகூரப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறினார்.
பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான். அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக் கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது.
பாஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ``நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்கள்.
அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ``நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள்.
அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், `` `நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?' என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
'' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார்.
அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டுகொண்டிருந்தபொழுது இயேசு, ``என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்''என்றார்.
அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக ``நானோ? நானோ?'' என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.
அதற்கு அவர், ``அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்'' என்றார்.
அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு,அவர்களுக்குக் கொடுத்து, ``இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்'' என்றார்.
பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், ``இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.
அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள். இயேசு அவர்களிடம், ``நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், `ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன்'' என்றார்.
பேதுரு அவரிடம், ``எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்'' என்றார். இயேசு அவரிடம், ``இன்றிரவில் சேவல் இரு முறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்'' என்றார்.
அவரோ, ``நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்'' என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள்.
பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், ``நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்''என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார்.
அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், ``எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.
சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார். ``அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்'' என்று கூறினார்.
அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ``சீமோனே,உறங்கிக்கொண்டா இருக்கிறாய்? ஒரு மணி நேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்'' என்றார்.
அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.
அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி, ``இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும்,நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார். எழுந்திருங்கள்,போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்'' என்று கூறினார்.
இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ``நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு. அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டுபோங்கள்'' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ``ரபி'' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர். அருகில் நின்றுகொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.
இயேசு அவர்களைப் பார்த்து, ``கள்வனைப் பிடிக்க வருவதுபோல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக்கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும்'' என்றார்.
அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர். இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக்கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள். ஆனால் அவர் துணியை விட்டுவிட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்.
அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்றுகூடினார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம்வரை வந்து காவலரோடு உட்கார்ந்து நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்துகொண்டிருந்தார்.
தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. பலர் அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன.
சிலர் எழுந்து, ``மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்'' என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர்.
அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை.
அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, ``இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூறமாட்டாயா?'' என்று இயேசுவைக் கேட்டார்.
ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை.
மீண்டும் தலைமைக் குரு, ``போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ?'' என்று அவரைக் கேட்டார்.
அதற்கு இயேசு, ``நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள்'' என்றார்.
தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, ``இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா?இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?'' என்று கேட்க, அவர்கள் அனைவரும், ``இவன் சாகவேண்டியவன்'' என்று தீர்மானித்தார்கள்.
பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, ``இறைவாக்கினனே,யார் எனச் சொல்'' என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.
அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப்பெண் ஒருவர் வந்து, பேதுரு குளிர்காய்ந்துகொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி, ``நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே'' என்றார்.
அவரோ, ``நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை'' என்று மறுதலித்து,வெளிமுற்றத்திற்குச் சென்றார்.
அப்பொழுது சேவல் கூவிற்று. அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழஇருந்தவர்களிடம், ``இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான்'' என்று மீண்டும் கூறத் தொடங்கினார். அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்தவர்களும், ``உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன்'' என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள். அவரோ, ``நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது'' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.
உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, ``சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்'' என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவுகூர்ந்து மனம் உடைந்து அழுதார்.
பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று, பிலாத்திடம் ஒப்புவித்தனர்.
பிலாத்து அவரை நோக்கி, ``நீ யூதரின் அரசனா?'' என்று கேட்க அவர், ``அவ்வாறு நீர் சொல்கிறீர்''என்று பதில் கூறினார். தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். மீண்டும் பிலாத்து, ``நீ பதில் ஒன்றும் சொல்லமாட்டாயா? உன்மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே!'' என்று அவரிடம் கேட்டான்.
இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான். விழாவின்போது மக்கள் கேட்டுக்கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு.
பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன். மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது. அதற்குப் பிலாத்து, ``யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?'' என்று கேட்டான்.
ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான். ஆனால் தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள்.
பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, ``அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான், அவர்கள், ``அவனைச் சிலுவையில் அறையும்'' என்று மீண்டும் கத்தினார்கள்.
அதற்குப் பிலாத்து. ``இவன் செய்த குற்றம் என்ன?'' என்று கேட்க, அவர்கள், ``அவனைச் சிலுவையில் அறையும்'' என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். ஆகவே பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.
பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டுபோய்ப் படைப்பிரிவினர் அனைவரையும் கூட்டினர்; அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள்முடி பின்னி அவருக்குச் சூட்டி, ``யூதரின் அரசே வாழ்க!'' என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலையில் அடித்து, அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர்; அவரை ஏளனம் செய்தபின் செந்நிற ஆடையைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர்.
அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படை வீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.
அவர்கள் `மண்டை ஓட்டு இடம்' எனப் பொருள்படும் `கொல்கொதா'வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அங்கே அவருக்கு வெள்ளைப்போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை.
பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க``யூதரின் அரசன்'' என்று அவர்கள் எழுதி வைத்தார்கள்; அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். இவ்வாறு `கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்' என்ற மறைநூல் வாக்கு நிறைவேறிற்று.
அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ``ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள்'' என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, ``பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை'' என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள்.
அவர்கள், ``இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்;அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்'' என்றார்கள்.
அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள். நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.
பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ``எலோயி, எலோயி, லெமா சபக்தானி?'' என்று உரக்கக் கத்தினார்.``என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?'' என்பது அதற்குப் பொருள். சூழ நின்றுகொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, ``இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான்'' என்றனர்.
அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, ``பொறுங்கள் ள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்'' என்றார்.
இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார். ( இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும். )
அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ``இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்'' என்றார்.
பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும்,சலோமி என்பவரும் இருந்தனர். இயேசு கலிலேயாவில் இருந்தபோது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள். அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறு பல பெண்களும் அங்கே இருந்தார்கள். இதற்குள் மாலை வேளையாகிவிட்டது.
அன்று ஓய்வு நாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, ``அவன் இதற்குள் இறந்துவிட்டானா?'' என்று கேட்டான்.
நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான். யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.


குருத்து ஞாயிறன்று , சிலுவையின் பாடுகளை பார்க்கும் முன்பு, இயேசுவின் பாடுகளையும், சிலுவையின் வலியையும் , அவ்வளவு வேதனையையும், துன்பத்தையும், நம் மேல் உள்ள அபரிதமான அன்பினால், இயேசு தாங்கி கொண்டார். இன்றைய நற்செய்தியில், ஒரு பெண்ணின் ஆழ்ந்த அன்பையும், அவள் இயேவின் மேல் வாசனை தைலைத்தை கொண்டு அபிசேகம் செய்து அவளின் அன்பை வெளிப்படுத்தியதை நாம் பார்ப்போம்.
அந்த காலத்தில், டியோடரன்டோ, வீட்டுகுள்ளேயே பாத்ரூம் இருந்ததில்லை. அதனால், வாசனை திரவியத்தை தயாரித்து, அதனை உபயோகித்தனர். வாசனை என்னெய் மற்றும், மூலிகைகளையும் பாட்டிலில் போட்டு அதனை புளிக்க செய்து, உபயோகித்தனர். அதிக நாட்கள் அந்த பாட்டிலில் இருந்தால், அதன் மதிப்பு கூடி இன்னும் நல்ல வாசனையை கொடுக்கும்.
இன்றைய நற்செய்தியில், வாசனை திரவியம் மிகவும் விலை மதிப்புள்ள அன்பளிப்பாக இயேசுவிற்கு கொடுக்கபடுகிறது. அதனை அதிக நாட்கள் வைத்திருத்திருக்க வேண்டும்.

நாம் ஒரு அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், ஒரு கடைக்கு போய், புதிதாக ஒரு பொருளை வாங்குகிறோம். நாம் பல வருடங்களாக பாதுகாத்து வைத்திருக்கும் பொருளை தான் நாம் மிகவும் மதிக்கிறோம். அதனை மற்றவர்களுக்கு கொடுக்கும்போது நாம் மிக பெரிய தியாகம் செய்கிறோம்.
உங்களுக்கு மிகவும் முக்கியமான பொருளோ அல்லது முக்கியமான விசயம் இன்னும் வைத்திருக்கிறீர்கள்? அதிக நாட்களாக நீங்கள் காத்து வைத்திருக்கும் பொருள் என்ன ?

அதனை நீங்கள் கொடுப்பதாக யோசித்து பாருங்கள்? நீங்கள் யாருக்கு கொடுக்கிறீர்களோ அவர் மேல் ஆழ்ந்த அன்பு கொண்டிருப்பீர்கள். கொடுப்பதில் தான் அதிக மதிப்பு!, அதனை வைத்திருப்பதைவிட. இது அன்பினால் தான் முடியும்.

இயேசுவின் மேல் உங்கள் ஆழ்ந்த அன்பு எவ்வளவு? அவர் உங்களிடமிருந்து பெறக்கூடிய மிகவும் மதிக்க கூடிய பொருள் எது? அதனை கொடுக்க மிகவும் யோசிப்பது எது? இயேசுவின் மேல் உள்ள அன்பினால் நீங்கள் அதனை கொடுக்க ஆமோதிப்பீர்களா? அவரின் மேல் உள்ள அன்பினால் நீங்கள் கொடுக்க தயாரா?
இதனை மாற்றாக சொல்ல வேண்டுமானால், உங்கள் ஜாடியினுள் உள்ளவற்றை தாராளாமாக இயேசுவிற்கு மனமுவந்து கொடுப்பீர்களா?
இயேசு உங்களுக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்பதனை நினைத்து பாருங்கள். இப்புனித வாரம் முழுவதும் அதனை நினைத்து பாருங்கள். புனித வியாழன்றும், பெரிய வெள்ளியன்றும், புனித சனியன்றும் இயேசு உங்களுக்கு கொடுத்தது நினைத்து பாருங்கள்.
மேலும், உங்களையே கேட்டு கொள்ளுங்கள்: உங்களுள் மதிப்புள்ள பொருள் அதனை கொடுக்க மனமுவந்து தயாராய் இருக்கிறீகளா?

© 2012 by Terry A. Modica

Friday, March 23, 2012

மார்ச் 25, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மார்ச் 25, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை
Jer 31:31-34
Ps 51:3-4, 12-15
Heb 5:7-9
John 12:20-33

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 12

கிரேக்கர் இயேசுவைக் காண விரும்புதல்
20 வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.21 இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, ' ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் ' என்று கேட்டுக் கொண்டார்கள்.22 பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.23 இயேசு அவர்களைப் பார்த்து, ' மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.24 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.25 தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.26 எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் ' என்றார்.

மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும்
27 மேலும் இயேசு, ' இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ' தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ' என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.28 தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும் ' என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், ' மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன் ' என்று ஒலித்தது.29 அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, ' அது இடிமுழக்கம் ' என்றனர். வேறு சிலர், ' அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு ' என்றனர்.30 இயேசு அவர்களைப் பார்த்து, ' இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.31இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.32 நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன் ' என்றார்.33 தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
(thanks to www.arulvakku.com)


இயேசு நம்மை எவ்வழியில் அழைத்து செல்கிறாரோ அந்த வழியில் செல்ல நமக்கு கஸ்டமாக இருந்தாலும் நாம் அவரை நம்பி, விசுவாசித்தோமானால் , நாம் அதனை செய்வோம்.

நாம் , நமது வாழ்வையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். (அது என்னவெனில், நமது சொந்த விருப்பங்கள், நிகழ்ச்சிகள், எண்ணங்கள், மற்ற நேரங்களில் நாம் செய்யும் வேலைகள் ) அனைத்தையும் விட தயாராக இருக்க வேண்டும். அப்பொழுது, நாம் கிறிஸ்துவோடு இனைந்து, இறைசேவையாற்ற முடியும். எனினும், நாம் இழப்பை விருப்ப வேண்டும் என்பதில்லை.

இன்றைய நற்செய்தியில், இயேசு அவரின் தியாகத்தை/சிலுவையில் மரணத்தை நினைத்து பதட்டப்பட்டார் என்று சொல்கிறது. ஆமாம், இயேசுவும் சங்கடமாக நினைத்தார், கடவுளோ அவரை மகிமைபடுத்தினார்.
கடவுளின் வழியையும், கடவுளின் அன்பையும் நமக்கு வெளிப்படுத்தி நம்மையெல்லாம் மோட்சத்திற்கு அழைத்து செல்லவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இப்போது, நாம் அவரை பின்செல்வதால், நாமும், கடவுளின் அன்பை நம்மை சுற்று உள்ளவர்களிடத்தில் வெளிப்படுத்த அழைக்கப்பட்டிருக்கிறோம். கடவுளால் தயார்படுத்த பட்டிருக்கிறோம். நாம் கடவுளின் அன்பை வெளிப்படுத்தி, அதன் மூலம் இயேசு அவர்களை மோட்சத்திற்கு அழைத்து செல்ல்கிரார். இது தான் நமது கடமை, இறைசேவை, திருச்சபையில் உள்ள ஒவ்வொருவரும், குருக்களும், நாமும் செய்ய வேண்டும்.
ஞாணஸ்நாண அருட்சாதனம் நம்மை இந்த அழைப்பிற்கு தொடங்கி வைக்கிறது. உறுதிபுசுதல் அருட்சாதனம், இச்சேவையை நம்மிடம் ஒப்படைக்கிறது. பாவசங்கீர்த்தனம், இறைசேவையை இன்னும் நன்றாக செய்ய நம்மை இன்னும் சுத்தபடுத்தி நம்மை இன்னும் பலமாக்குகிறது. திருமணச்சடங்குகளும், கடவுளின் அன்பு கட்டளைகளும், நமக்கு இன்னும் இறைசேவையை பிழையற்று செய்ய நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. நோயாளிகளை அர்ச்சிப்பது, அவர்களை குணமாக்குவது, கிறிஸ்துவின் இறைசேவையை செய்ய சாட்சியாக இருக்கிறது. திவ்ய நற்கருணை கிறிஸ்துவின் முழு பயணத்தில் நம்மை இணையவைத்து, நம் இறைசேவயை தொடர செய்கிறது.
மணம் திருந்த வைப்பது நம் ஒவ்வொரு நாளின் இறைசேவையாகும்: இயேசு அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்கிறோம், இயேசு அவர்களுக்கு என்ன செய்ய விரும்புகிறாரோ அதையே நாம் செய்கிறோம். நற்செய்தியை அவர்களுக்கு பரப்பி, நாம் இயேசுவைன் இறைசேவயை தொடர்கிறோம்.



இறைசேவையை செய்யும்பொழுது, நாம் தியாகம் செய்ய வேண்டும். நம்மை ஒதுக்கி வைப்பவர்கள், துன்பபடுத்துபவர்கள், மோசம் செய்தவர்கள் மேல் நாம் நல்லது செய்ய வேண்டும்.
இது தான் நாம் கிறிஸ்துவோடு இனைந்து இருப்பது. நம் நோக்கமும் கூட. நாம் இதனை செய்ய ஆசைபட தேவையில்லை ஆனால் நாம் செய்ய வேண்டிய கடமை.
கடவுள் இதற்காக நம்மை மகிமைபடுத்துகிறார். இயேசுவை மகிமைபடுத்துவதை போல, நம்மையும், கடவுள் அவரது முழு இரக்கத்தினாலும், அன்பினாலும், நம்மை மகிபடுத்துகிறார். அன்பளிப்பும், வெகுமதியும் நமக்கு தருகிறார்.

நமது இறைசேவையில் பல தொந்தரவுகளை , கஷ்டங்களை சந்திப்பது சாதாரண விசயம் ஆகும். கடவுள் தான் நம்மை ஒவ்வொரு முறையும் எழுப்பி தாங்கி கொள்கிறார். துன்பத்திற்கு பிறகு சந்தோசமும், வெற்றியும் உண்டு.
© 2012 by Terry A. Modica

Friday, March 16, 2012

மார்ச் 18, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 18, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 4ம் ஞாயிறு
2 Chron 36:14-16, 19-23
Ps 137:1-6
Eph 2:4-10
John 3:14-21

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 3

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.19 ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது.20 தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.21 உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.
(thanks to www.arulvakku.com)

ஏன் நாம் இருளில் ஒளிந்து கொள்கிறோம்? நம் பாவங்களை ஏன் நமக்குள்ளே வைத்து கொண்டு இருக்கிறோம்? அதற்கு பதிலாக பாவசங்கீர்த்தனம் செய்து, அந்த பாவங்களை எடுத்து சொல்லி, அதனை கழுவினால் என்ன?
பாவசங்கீர்த்தனத்தில், இயேசுதான் நம்மை சந்திக்கிறார். குருவின் வழியாக நம்மை சந்திக்கிறார். குருக்கள் அனைவரும், இரகசியத்தை காப்பாற்றா வேண்டும் உறுதி மொழி எடுத்து உள்ளனர். இன்றைய நற்செய்தியில், இயேசு , தம் வருகை 'தண்டனை தீர்ப்பளிக்க அல்ல, மாறாக மீட்கவே' என்பதனை வலியுறுத்துகிறார். ஒளியின் பாதையில் வந்து நம் பாவங்களை வெளி கொண்டு வரவேண்டும்.

எனினும், நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய விரும்புவதில்லை, நமது குற்ற உணர்வு நம்மை குறைவாக மதிப்பிட வைத்து, நம்மை தூர ஓட வைக்கிறது. நம்மை யாரும் அன்பும், சினேகமும் கொள்ள மாட்டார்கள் என்று பய்ப்படுகிறோம் மேலும், நம்மையே நாம் மன்னிப்பதுமில்லை.
குற்ற உணர்வு, நம்மை மணம் மாறுவதற்கு , மாற்றத்திற்கும் தூண்டுகிறது. ஆனால், அதே குற்ற் உணர்வு, நம் நம்மையே குறைவான மதிப்பீட்டுடன், நாம் மன்னிப்பிற்கு தகுதியில்லாதவன் என நீனைக்கிறோம். அவமானமாக உணர்கிறோம் , அதனால், நம் குற்றத்தை வெளிக்கொணர, அவமானம் தடுக்கிறது.

எனினும், பாவசங்கீர்த்தனத்தில், நாம் பாவ மன்னிப்பு பெற்றபின், நமது மகிழ்ச்சிக்கும், மணம் மாறியபின்பும், நமக்கு என்ன ஆகும் என்ற பயம் நமக்கு இருக்கிறது. எது உங்களை தூரத்திலேயே வைத்த்ருக்கிறது? உங்கள் மண மாற்றத்தின் பயணத்தின், முதல் அடியாக, உங்களுக்கு ஒரு ஆண்மீக ஆலோசகர் வழி நடத்த வேண்டும், அல்லது, ஒரு குருவானவர், உங்களை அந்த பாதையில் அழைத்து செல்லலாம். எந்த ஒரு வாய்ப்பு அமைந்தாலும், அங்கு தான் உங்கள் மணமாற்றம் ஆரம்பிக்கிறது.
உங்கள் ஆண்மாவை மன்னிப்பின் மூலம் இயேசு குணப்படுத்துகிறார். இரக்கத்தின் மூலமும், நிபந்தனையற்ற அன்பின் மூலமும், பாவ மன்னிப்பின் மூலமும், குருவின் வழியாக உங்களை குணப்படுத்துகிறார்.

இன்றைய நற்செய்தியில், உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும். என்று இயேசு சொல்கிறார். நாம் நமது பாவங்களை சொல்லி, கிறிஸ்துவின் ப்ரசன்னமான குருவிடம் மனம் விட்டு சொன்னால், இயேசு நம்மை காப்பார். மேலும், அதே பாவங்களை மீண்டும் செய்யாமல் இருக்க நாம் இயேசுவிடமிருந்து மண உறுதி பெறுகிறோம்.
ஏன் இன்னும் வேதனை அனுபவித்து கொண்டு இருக்கிறீர்கள், பயத்திலும், இருளிலும், குறைவாக மதிப்பீட்டுடனும் இருக்கிறீர்கள்? இயேசு உங்களை காக்க வந்திருக்கிறார்!
© 2012 by Terry A. Modica

Friday, March 9, 2012

மார்ச் 11, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 11, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Ex 20:1-17
Ps 19:8-11
1 Cor 1:22-25
John 2:13-25

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 2
கோவிலைத் தூய்மைப்படுத்துதல்
(மத் 21:12 - 17; மாற் 11:15 - 17; லூக் 19:45 - 46)
13 யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;14 கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;15 அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.16 அவர் புறா விற்பவர்களிடம், ' இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் 'என்று கூறினார்.17 அப்போது அவருடைய சீடர்கள். ' உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.18 யூதர்கள் அவரைப் பார்த்து, ' இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? ' என்று கேட்டார்கள்.19 இயேசு மறுமொழியாக அவர்களிடம், ' இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் ' என்றார்.20அப்போது யூதர்கள், ' இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ? ' என்று கேட்டார்கள்.21 ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.22 அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

இயேசு அனைவரையும் அறிபவர்
23 பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர்.24 ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும்.25 மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியின் கடைசி பாரா நமக்கு ஒரு விசயத்தை நன்றாகவே வெளிப்படுத்துகிறது: நாம் அடையாளங்களையும், குணப்படுதலையும், தெய்வீக காரியங்களையும் நேராக பார்த்த பிறகு தான் இயேசுவை நம்புகிறோம். இயேசு இது மாதிரி ஆட்களை , அவர்களுடய இவ்வுலக இயல்பை வைத்து கொண்டு , அவர்கள் இயேசுவிற்காக சாட்சியம் சொல்ல வேண்டும் என்பதை அவர் விரும்பவில்லை.

வெறும் அடையாளத்தையும், சாட்சிகளையும் கொண்டு விசுவாசிப்பது மனிதனின் இயல்பு: நாம் பார்ப்பதையும், தொட்டு பார்ப்பதையும், காதால் கேட்பதையும், நம்மால் நம்ப முடியும். ஆனால் மறைந்திருக்கும் கடவுளை, அவரது குரலையும் நம்மால் நம்ப முடிவதில்லை. இந்த நம்பிக்கையினால், நாம் இயற்கை நியதிகளை மீறிய, தெய்வீகமான கடவுளை நாம் அறிந்து கொள்ள முடியும்.

கடவுளிடம் வேண்டி, ப்ரார்த்தித்து, மீண்டும் ஜெபித்து நீங்கள் கேட்ட கோரிக்கைக்கு ஒரு பதிலும் கிடைக்காவிட்டால், உங்கள் விசுவாசம் என்னாகும்? இதன் பதில், நம் விசுவாசம் மனிதத்தனமானதா? அல்லது தெய்வீகமானதா என தெரியும்.
இயேசு, அவர் இவ்வுலகில் இருப்பது எல்லோருக்கும் பெரிய சாட்சியாகவும், அடையாளமாகவு இருக்கும் என்பது அவருக்கு தெரியும். ஆனால் விரைவில் அவர் விண்ணகம் சென்று விடுவார். சில நேரங்களில் இயேசு நம் முன்னே தோன்றி , நாம் கேட்கும்படியாக பேசினால், ஒருவேளை நம் விசுவாசம் இன்னும் அதிகம் ஆகுமோ?


குறிகளும் , அடையாளங்களும் வைத்து தான் நாம் விசுவசிக்கிறோம்: நாம் கேட்ட வேண்டுதலுக்கு கிடைத்த பின்பும், அன்பின் சாட்சியங்களை வைத்தும், நம் உள்ளத்தில் உள்ள மன அமைதியை வைத்தும் நாம் விசுவாசம் கொள்கிறோம். ஆனால், நம் வாழ்வு மன் இறுக்கத்தையும், தோல்விகளையும் நோக்கும்பொழுது,அவரிடமிருந்து எந்த ஒரு அறிகுறியும் காணவில்லை என்றால், நாம் கடவுளை இன்னும் நம்பி கொண்டு இருக்கிறோமோ?
உண்மையான விசுவாசம், எந்த அளவிற்கு கடவுள் நம்மை காக்கிறார் என்பதை வைத்தே நாம் விசுவாசத்தை கடைபிடிக்க வேண்டும். மாறாக என்ன அறிகுறியும், பதிலும், நமக்கு கிடைக்கிறதோ அதை வைத்து அல்ல.
இதனை வெற்றி கொள்ள, நமக்கு தெய்வீக விசுவாசம் வேண்டும். கிறிஸ்துவின் தெய்வீகத்தோடு நாம் இனைந்து, நாம் அவரின் விசுவாசத்தில் சேர்வோம். பின்பு, எவ்வித அறிகுறி இன்றியும், நாம் விசுவாசம் கொள்வோம்.
அடுத்த முறை நீங்கள் நற்கருணை வாங்கும்பொழுது இதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள். கிறிஸ்துவின் உடலை மட்டும் நாம் வாங்குவதில்லை, அவரது தெய்வீகத்தோடு நம்மையும் இனைத்து கொள்கிறோம், அவரும் நம்மில் இனைகிறார்!, இதனை நீங்கள் நம்பினீர்கள் என்றால், நிச்சயம் அற்புதம் நடக்கும். ஆனால் அது தான் கடவுள் கொடுக்கும் மிகப்பெரிய அன்பளிப்பு இல்லை, அவரையே முழுதுமாக உங்களுக்கு கொடுப்பது தான் மிகப்பெரிய அன்பளிப்பு ஆகும்.
© 2012 by Terry A. Modica

Friday, March 2, 2012

மார்ச் 4, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 4, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 2ம் ஞாயிறு
Gen 22:1-2, 9-13, 15-18
Ps 116:10, 15-19
Rom 8:31b-34
Mark 9:2-10

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 9
இயேசு தோற்றம் மாறுதல்
(மத் 17:1 - 13; லூக் 9:28 - 36)
2 ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.3 அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.4 அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.5 பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்றார்.6 தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.7 அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ″ என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது.8 உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.9 அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், ' மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது 'என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.10 அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ' இறந்து உயிர்த்தெழுதல் ' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்
(thanks to www.arulvakku.com)

உங்களுக்கு மலை மேல் நடந்த ஒரு அனுபவத்தை நினைத்து பாருங்கள். அதில் நடந்த முக்கிய தருணம் எது? அது உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது? அதன் மூலம் என்ன கிடைக்க பெற்றது? உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? உங்கள் வாழ்க்கையை முழுதுமாக மாற்றியதா? அல்லது கொஞச நேரம் தான் உங்களை உற்சாகப்படுத்தியதா?

பைபிளில் உள்ள அர்த்தத்தின் படி, மலை என்றால், கடவுளுக்கு அருகில் செல்கிறோம் என்று அர்த்தம். உங்கள் அனுபவம் உங்களை கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றதா?

தேபர் மலையின் மேல், இயேசு அவரின் தெய்வீகத்தை அவரின் நெருங்கிய நண்பர்களுக்கு காண்பித்தார். "உயந்த மலை" என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது, தேபர் மலை அப்படி ஒன்று பெரிய மலை அல்ல, அதில் பெரிய நிகழ்ச்சி என்ன என்றால், அங்கு நடந்த "இயேசு தோற்றம் மாறியது" தான் பெரியது. --ஏன்?

நமது ஆன்மீக வாழ்வில், நடந்த குறிப்பிட்ட சம்பவங்களில், மலை மேல் நடந்த அனுபவம் போல இல்லை என்று நாம் நினைக்கலாம், ஆனால், உண்மையிலேயே, அது மிக சிறந்த அனுபவம் தான்.
அந்த மூன்று சீடர்களும், கிறிஸ்துவின் தோற்றம் மாறுதலை பார்த்து , இயேசுவின் பிரகாசமிக்க ஒளியை கண்டுனர்ந்து அதன் மூலம் பயனடைந்தனர். ஏனெனில், அவர்கள் தான், இயேசுவின் இறைசேவையை இவ்வுலகில் தொடர அழைக்கப்பட்டிருந்தனர்.

தவக்காலம் என்பது, நாம் எல்லோருக்கும், இது போல மலை அனுபவம் இக்காலத்தில் நடக்கும் என்பதாகும். அவரின் ஒளி நம்மில் உள்ள எல்லா இருளையும் எடுத்து விடும்.
எந்த அளவிற்கு , அவரின் போதனைகளை கேட்டு , அதனை நம் வாழ்வில் கடைபிடிக்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் கிறிஸ்துவை போல மாறுவோம். எந்த அளவிற்கு நாம் இயேசுவை போல மாறுகிறோமோ அந்த அளவிற்கு அவரின் ஒளியால், நமது வாழ்வு மாறும், அதே போல, நம் அருகில் உள்ள அனைவரின் வாழ்வும் மாறும்.
முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல, ஆப்ரகாம், கடவுளிடம் அவரது மகனை கொடுக்காமலிருக்கவில்லை, அதே போல், கடவுளும் நமக்கு அவரது மகனை முழுமையாக கொடுத்துள்ளார்.
அதே போல, கிறிஸ்தவ வாழ்வின் பொறுப்பான நாம், கிறிஸ்துவை நாம் சந்திக்கும் மனிதர்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டும். இரக்கத்துடன் கூடிய அன்பினாலும், புன்னகையினாலும், அவர்களுக்கு உதவி செய்வதாலும், அவர்களின் கவலையை ப்ரச்னையை காது கொடுத்து கேட்பது, தாராளாமாக, பொருட்களையும், இரக்கத்தையும் , மன்னிப்பின் மூலமும், நாம் இயேசுவை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். நாம் கிறிஸ்துவின் கைகளாகவும், கால்களாகவும் இவ்வுலகில் இருக்கிறோம். அவரின் உண்மையின் குரலாக, அவரின் குணப்படுத்தும் கரமாக , இயேசுவின் இவ்வுலக உடலாக இருக்கிறோம். மக்களின் ஜெபத்திற்கு பதிலுரையாக இருக்கிறோம்.
கிறிஸ்துவின் அன்பின் புகழொளியோடு இருக்க , நாம் நமது ஞானஸ்நானத்தின் மூலம் கடவுளிடமிருந்து அருள் பெற்றுள்ளோம். இயேசுவின் இவ்வுலக இறைசேவையை நாம் தொடர அழைக்கப்பட்டுள்ளோம். இந்த தவக்காலத்தின் அனுபவம் நம்மை இன்னும் இறைசேவையிலும், கிறிஸ்துவோடு இனைந்து செல்வதிலும் அதிகமாக்கட்டும்.
© 2012 by Terry A. Modica