Friday, June 1, 2012


ஜூன் 3 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த திரித்துவ திருவிழா

மத்தேயு நற்செய்தி             

Deut 4:32-34, 39-40
Ps 33:4-6, 9, 18-20, 22 (with 12b)
Rom 8:14-17
Matt 28:16-20

அதிகாரம் 28
இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49; யோவா 20:19 - 23; திப 1:6 - 8)
16 பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.17 அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.18 இயேசு அவர்களை அணுகி, ' விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ' என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)


நீங்கள் கடவுளுக்கு மிகவும் முக்கியமானவர். நீங்கள் கடவுளுக்கு சொந்தமானவர்கள்: தந்தை கடவுள், மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவராக இருக்கிற கடவுளுக்கு சொந்த மானவர்கள்.

அதனால் தான், நமக்கு ஞானஸ்நாணம் கொடுக்கும் பொழுது, திரித்துவ கடவுள் பெயரால் கொடுப்பது மிகவும் முக்கியமானது. அதனால் தான் இயேசு இன்றைய நற்செய்தியில், "தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்",  என்று கூறினார். கடவுள் மூவொரு கடவுளாக முழுதுமாக உள்ளார். மூவொரு கடவுளும், உங்களோடு  தனிப்பட்ட நட்பு வைத்து கொள்ள ஆசைபடுகின்றார்.

மூவொரு கடவுளின் ஒவ்வொருவரோடும், நீங்கள் அன்பான நட்பை கொண்டு வாழ்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? தந்தை கடவுளோடு நீங்கள் பேசியதுண்டா? மீட்பராகிய மகனோடு தனியாக அமர்ந்து பேசியதுன்டா? பரிசுத்த ஆவியோடு தனியாக உரையாடியதுன்டா? நீங்கள் மனதளவில் காயப்படும்பொழுது, தந்தை கடவுளின் மடியில் அமர்ந்து, அவரது ஆறுதலை பெற்று கொண்டீர்களா? சோதனைகளை வெல்ல முற்படும்பொழுது, இயேசுவின் ஆற்றலை பெற்று சோதனைகளை வென்றதுன்டா? விசுவாசத்தில், குழுப்பமடைந்து, போராடி கொண்டிருக்கும்பொழுது, பரிசுத்த ஆவியின் ஆலோசனைகள் உங்களுக்காக தயாராக இருப்பது தெரியுமா?

இயேசுவின் தந்தை கடவுள், நமக்கும் தந்தைதான் . அவர் நமக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரத்தில் இருந்து கொண்டு, நம்மை முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறா என்ற பயத்தோடு இருக்கிறோமோஉங்கள் ஞானஸ்நாணத்தில், உங்களை சந்தோசமாக தத்தெடுது உள்ளார், ஏனெனில், அவர் உங்கள் அன்பான , நமது தேவைகளை கவனித்து கொள்ளும் அப்பாவாக இருக்கிறார்.
பரிசுத்த ஆவி இதனை உறுதிபடுத்துகிறார். கடவுளின் ஆவியானவர், நமக்கு ஆறுதலாக இருந்து, அரவனைத்து, அனைத்து பரிந்துரைகளையும் நமக்கு போதித்து, நமது வாழ்வில் முழு அன்போடும், வாழ்வில் சந்தோசத்தோடும் நம்மை வழி நடத்துகிறார்அந்த அன்பில், இயேசு தன்னையே தியாகம் செய்து, நமது பாவத்தின் தண்டனையிலிருந்து  நம்மை மீட்டு, பரிசுத்த ஆவியின் உதவியால், பரிசுத்த வாழ்வு வாழ உதவிடுகிறார்.

சக்தி தருபவராகவும், நோய் தீர்ப்பவராகவும், உதவி செய்பவராகவும் மூவொரு கடவுளாக கடவுள் இருக்கிறார். அவரது தெய்வீகத்தின் முழுமையுடன் நீங்கள் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்! அவரிடமிருந்து, எல்லாவற்றையும் பெற்று பயனடைய வேண்டும் என்று ஆசைபடுகிறார்.

ஞானஸ்நாணம் பெற்ற கிறிஸ்தவர்களாக, அர்ச்சிக்கபட்ட கத்தோலிக்கர்களாக கடவுளின் முழு ப்ரசன்னமும் நற்கருணையில் வீற்றிருக்கும் கடவுள் நமக்கு முழுமையாக உள்ளதுநமக்கு எதுவும் குறைவில்லை.! எல்லாமே நமக்கு கிடைக்கிறது!

© 2012 by Terry A. Modica