Friday, November 22, 2013

நவம்பர் 24 2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர் 24 2013 ஞாயிறு  நற்செய்தி மறையுரை
கிறிஸ்து அரசரின் பெருவிழா

2 Samuel 5:1-3
Psalm 122:1-5
Colossians 1:12-20
Luke 23:35-43


லூக்கா நற்செய்தி


35 மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ' பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும் ' என்று கேலிசெய்தார்கள்.36 படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து,37 ' நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள் ' என்று எள்ளி நகையாடினர்.38 ' இவன் யூதரின் அரசன் ' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.39சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ' நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று ' என்று அவரைப் பழித்துரைத்தான்.40 ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, ' கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே! ' என்று பதிலுரைத்தான்.42 பின்பு அவன், ' இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் ' என்றான்.43 அதற்கு இயேசு அவனிடம், ' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசுவோடு மற்ற சிலுவைகளில் தொங்கி கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவனை போல நாமும் இருக்கிறோம். இயேசுவின் இறையரசில், கிறிஸ்து அரசரோடு நித்தியா வாழ்வில் இணைந்து வாழவே விரும்புகிறோம்.  இந்த மனப்பான்மையோடு இருந்தோமானால், நிச்சயம், நாம் இறந்த பிறகு, பரலோக ராஜ்ஜியத்தில் இருப்போம்.



விண்ணகத்தின் ராஜாவான இயேசு, விண்ணரசிறகு யார் வரலாம், யார வர கூடாது என்று முடிவு செய்வதில் அவருக்கு அதிகாரம் உள்ளது. பெரிய வெள்ளியன்று சிலுவை மரணமடைந்த குற்றவாளிகளை ஒருவன் இதனை நமக்கு உணர்த்துகிறான். அவனிடம் இயேசு, “' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்” என்று அவரிடம் சொல்லி, அவருக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதை நமக்கு எல்லாம் காட்டுகிறார்.

இயேசுவின் அதிகாரம் என்ன என்று பார்ப்போம். கடைசி இரா உணவின் பொழுது, சீடர்களின் பாதங்களை கழுவியபோழுது, விண்ணக அரசர், தனது அதிகாரத்தை, இறையரசின் சார்ந்தவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நமக்கு காண்பிக்கிறார்.


அதற்கு மறுநாள், தங்கத்தினால் ஆனால் கிரீடம்  சுட்டி கொள்ளாமல், முள்ளினால் ஆன கிரிடம் சுட்டி கொண்டார். ஏனெனில், கிறிஸ்துவின் அரசின் புகழ் , இவ்வுலக ஆபரணங்களால், ஆனது அல்ல, மாறாக அன்பினால், மற்றவர்கலுக்காக நாம் செய்யும் தியாகம் பெரியது. அந்த தியாகத்திற்கு , அவர்கள் தகுதியானவர்கள் இல்லையென்றால் கூட , அவர்களுக்காக தியாகம் செய்வது, இறையரசின் கருணையாகும்.

அவர் உயிர்த்து எழுந்த பின்பு, மரணத்தின் அழிவிழுருந்து,, அவரது காயங்கள் ஆறிவிட்டாலும், அவரின்  ஐந்து காயங்கள் ஆறவில்லை. இன்று வரை , அவர் அதனை தனது உடலில் இருக்கிறது. இதன் முலம் நாம் அறிவது என்ன என்றால், அவர் அதிகாரத்தை , அவருக்காக உபயோகித்து கொள்ளவில்லை மாறாக, நமக்காக எல்லாம் செய்தார். இந்த உலக அரசர்கள், விலை மதிப்பு மிக்க மோதிரத்தை அணிந்திருக்கிராற்கள். நமது மோட்சத்தின் அரசரோ, அவரின் தியாக அடையாளங்களை அணிந்து இருக்கிறார்.


நாம் அனைவரும், கடவுளரசின் பிள்ளைகள் ஆவோம்.எப்பொழுது?  கிறிஸ்துவோடு இணைந்து, அன்போடு, நாம் மற்றவர்களுக்கு சேவை செய்யும்பொழுது, தாராளமாக மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுதும், நமது அன்பிற்கு தகுதியில்லாதவர்களுக்கும, அன்பு செய்வதால் நாம் கடவுளரசின் பிள்ளைகள் ஆகிறோம்.

நமது துன்பங்களை, இயேசுவிடம் அர்ப்பனித்து, , அதற்கு கண்டிப்பாக மதிப்பு இருக்கிறது என்று நாம் அறிந்து, அவரிடம் அதனை சமர்ப்பிக்கிறோம். இயேசு ஐந்து காயங்களையும் நமது ஆன்மாவில் சுமப்போம். கண்டிப்பாக ஏசுவோடு அவரது பேரரசில் இணைவோம். இப்பொழுதே நாம் அவரோடு இணைந்து விட்டோம்.


© 2013 by Terry A. Modica

Friday, November 15, 2013

நவம்பர் 17 2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர் 17 2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு

Malachi 3:19-20a
Psalm 98:5-9
2 Thessalonians 3:7-12
Luke 21:5-19

லூக்கா நற்செய்தி

எருசலேம் கோவிலின் அழிவு பற்றி முன்னறிவித்தல்
(
மத் 24:1 - 2; மாற் 13:1 - 2)
கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.6இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் என்றார்.

வரப்போகும் கேடு பற்றி அறிவித்தல்
(
மத் 24:3 - 14; மாற் 13:3 - 13)
அவர்கள் இயேசுவிடம், ' போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? ' என்று கேட்டார்கள்.அதற்கு அவர், ' நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்றும், ' காலம் நெருங்கி வந்துவிட்டது ' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது என்றார்.10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ' நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.12 இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.15 ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.16 ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.
 (thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் என்றார். இவ்வுலகில் உள்ள அனைத்துமே நிரந்தமற்றவை என்பதை நமக்கு இயேசு எடுத்து உரைக்கிறார் .


இவ்வுலகில் நீங்கள் எதையெல்லாம் சந்தோசமாக அனுபவிக்கிறீர்கள் என்று பாருங்கள். இவை அனைத்துமே தற்காலிகமானது. உங்களுக்கு துக்கம் , துன்பம் தருவது எது, அதுவும் தர்காமானது தான். இவ்வுலகில் எந்த விசயங்களை , பொருளை நீங்கள் சார்ந்து இருக்கிறீர்கள். அதுவும் நிரந்தரமானது இல்லை. எதனை பார்த்து ஆச்சரியபடுகிரஈர்கள்?  எதற்காக நீங்கள் அதிக நேரம் செலவழித்து, உழைத்து பலன் பெறுகிறீர்கள்? அதுவும் தற்காலிகமானதே , இறையரசிர்காக இவை அனைத்தும் செய்யும்பொழுது, அவை  நிரந்தரமானது. பலன் தர கூடியது.

கடவுளை நோக்கியே நாம் எப்பொழுதும் இருக்க வேண்டும், என்று நமக்கு தெரியும். நித்திய வாழ்விற்கு தேவையானதையே நாம் செய்ய வேண்டும் என்றும் தெரியும். ஆனால், அதனை செய்வதில் நாம் அவ்வளவு விருப்பத்துடன் இருபதில்லை. கண்மூடி தனமான விசுவாசம் நம்மிடம் இருப்பதில்லை. கடவுள் அநியாயத்திற்கு எதிரான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், இவ்வுலகில் தவறு செய்பவர்கள் துன்ப பட வேண்டும் என்று சீடர்கள் சிலர் கருதுவது போல நாம் இருக்கிறோம். போர்களும், கடும் நோய்களும், துன்பமும், தற்காலிக உலகில் நடப்பவை. இயேசு மீண்டும் இரண்டாம் முறை வந்து, இவ்வுலகில் உள்ள துன்பத்தையும், கடினமானதையும் போக்க வேண்டும். என நாம் ஆசைபடுகிறோம்.

நம் அனுதின நிகழ்வில், கடவுளின் உதவியை நாம் வேண்டுகிறோம். நாம் நம் விசுவாசத்தின் அடிப்படையில், கண்டிப்பாக நமக்கு உறுதியான பலன் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். எதிர்காலம் பற்றி அறிய நாம் ஆசைபடுகிறோம். கடவுள் என்ன நமக்கான என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்ற அறிய நாம் ஆவல் படுகிறோம். அதனை தெரியாமல் நாம் பாதுகாப்பற்ற நிலையில் இருக்க விரும்புபவதில்லை. நாம் நம் கண் முன்னே என்ன தெரியுதோ அதனை தான் நாம் சார்ந்து இருக்கிறோம். கடவுளை நம்புபவதை விட , அவர் கொடுப்பதை நம் கண் முன்னே நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

எனினும், கடவுளோடு இணைந்து நடப்பதற்கு முதலில் ஒரு அடியை எடுத்து வைக்க வேண்டும். அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராக இருக்க வேண்டும். அந்த கால் காற்றில் இருக்கும்பொழுதே , கடவுளே, எனது காலை எங்கே வைக்க வேண்டும். என்று நாம் கேட்க வேண்டும்.
இதற்கு நாம் நிதானமாக இருக்க வேண்டும்: கடவுளே சுற்றியே நம் எண்ணங்கள் இருக்க வேண்டும். சில நேரங்களில் குழம்பி நாம் விழுந்து விடுகிறோம். ஆனால் கடவுள் உடனே உங்களுக்கு பதில் கொடுக்க வில்லை என்றால். நாம் கிழே விழ வேண்டும், அல்லது கடவுளின் கைகளில் விழ வேண்டும். கடவுளின் கைகள் நிரந்தரமானது, அவர் கைகள் உங்களுக்க பாதுகாப்பை கொடுக்கும். அந்த பாதுகாப்பு முடிவில்லாதது, சக்துயுள்ளது, முழு அன்பு நிறைந்தது. அவரின் அன்பு, பாதுகாப்பும், என்றுமே தோற்றதில்லை.
© 2013 by Terry A. Modica



Friday, November 1, 2013

நவம்பர் 3 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 3 2013  ஞாயிறு  நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 31ம் ஞாயிறு
Wisdom 11:22–12:2
Psalm 145:1-2,8-11,13,14
2 Thessalonians 1:11–2:2
Luke 19:1-10

இயேசுவும் சக்கேயுவும்
இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.2அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ' சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் 'என்றார்.அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.இதைக் கண்ட யாவரும், ' பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர் ' என்று முணுமுணுத்தனர்.சக்கேயு எழுந்து நின்று, ' ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் ' என்று அவரிடம் கூறினார்.இயேசு அவரை நோக்கி, ' இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!10 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார் என்று சொன்னார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில் சக்கேயுவின், தீவிரத்தை தீர்மானமாக இயேசுவை க்கான அவர் எடுத்து கொண்ட முயற்சியை பார்த்தீர்களா? இயேசுவை அவரால் பார்க்க முடியவில்லை. ஆனால் அது ஒன்றும் அவர் இயேசுவை பார்ப்பதை தடை செய்யவில்லை. மக்கள் கூட்டமும், குள்ளமாக இருப்பதாலும், அவருக்கு பெருந் தடையாக இருந்தது. இருந்தும் , இயேசுவை பார்க்கும் அவர் நோக்கம் ஒன்றும் அவர் விடவில்லை.

இயேசுவை அவர் பார்த்தே ஆகவேண்டும், அவரை அருகாமையில் இருந்து அவர் செய்வதை பார்க்க வேண்டும், என்ற ஆர்வத்தில், மரத்தின் மேல் ஏறினார். அவர் மரக்கிளையில் ஏறி நிற்பதால், அவருக்கு அவமானமாக கூட இருந்திருக்கலாம். அவரை பார்ப்பவர்கள், அவரை ஒரு மாதிரியாக கூட பார்த்திருக்கலாம். சிலர் கீழ்த்தரமாக கூட பேசியிருக்கலாம். மரத்தின் கடினமான உராய்வு கூட அவரின் சட்டையை கிழித்திருக்கலாம்,  ஆனால் இதெல்லாம் சக்கேயுவை நிறுத்தவில்லை.

நமக்குள்ளும் பல குறைகள் உள்ளன – தவறான கண்ணோட்டம், தவறான பயிர்ச்சிகள், பயம், தெய்வ விசயத்தில் சோம்பல், பயம், சந்தேகம், இன்னும் பல – இவையெல்லாம் நாம் இயேசுவை பார்ப்பதற்கு தடையாக இருக்கின்றன. நமக்குள்ளும், பல குறைவான குணங்கள் உள்ளன. கடவுளோடு ஒப்பிடுகையில், நாம் மிகவும் சிறியவர்களே, கடவுளின் மேலான குணங்கள் , அவர் பார்ப்பது போன்று நம்மால் பார்க்க இயலாது, நம் குறைவான குணங்களால் , இயேசு நம்மை நிராகரித்து விட்டார் என்று நாமாக ஒரு முடிவிற்கு வந்து விடுகிறோம். அதன் பிறகு தனிமையாகி விடுகிறோம்.
மாறாக, நாம் சக்கேயுவை போல இருக்க வேண்டும். இயேசுவை முழுதுமாக பார்க்க வேண்டும் என்று விருப்பத்துடன், எல்லா வகையான வழியிலும், முயற்சி செய்து, எல்லா தடைகளையும் மீறி அவரிடம் செல்ல வேண்டும்.

சக்கேயு மரத்தின் மேல் ஏறியவுடன், இயேசு தனியாக அவரை கண்டறிந்ததை பாருங்கள், மேலும், அவரை தனியே அழைத்து, அவருக்கு உறுதியளிக்கிறார். சக்கேயு அதற்கு எவ்வாறு பதிலுரைத்தார், எப்படி எப்படி ஏற்றுகொண்டார், உடனடியாக மரத்திலிருந்து இறங்கி ஓடோடி வந்து, இயேசுவை சந்தோசமாக ஏற்றுகொண்டார்.  மிகவும் உற்சாகத்துடன் வந்து, அவருடைய பாவங்களுக்காக, அதன் தண்டனையாக பல மடங்கு ஏற்றுகொள்ள தயாரானார்.

திருப்பலியில் இயேசுவை திவ்ய நற்கருணையில் பார்க்கிறீர்களா? கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு எவ்வாறு சக்கேயு நடந்து கொண்டாரோ, அதே போல், நாம் நடந்து கொள்கிறோமோ, அப்படி இல்லையெனில், நம்மில் இன்னும் தடைகள் இருக்கின்றன என்று அர்த்தம், இன்னும் நாம் மேலே போக வேண்டும்.

© 2013 by Terry A. Modica