Friday, January 24, 2014

ஜனவரி 26 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜனவரி    26 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3ம் ஞாயிறு
Isaiah 8:23--9:3
Ps 27:1, 4, 13-14
1 Corinthians 1:10-13, 17
Matthew 4:12-23

மத்தேயு நற்செய்தி

இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(
மாற் 1:14 - 15; லூக் 4:14 - 15)
12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:15 ' செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!16காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது. '17அதுமுதல் இயேசு, ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

முதல் சீடர்களை அழைத்தல்
(
மாற் 1:15 - 20; லூக் 5:1 - 11)
18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.19 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்றார்.20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.21அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.22உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

திரளான மக்களுக்குப் பணி புரிதல்
(
மாற் 3:7 - 12;லூக் 6:17 - 19)
23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
(thanks to www.arulvakku.com)
உங்களை யார் தொந்தரவு செய்கிறது? இன்றைய நற்செய்தியில், எசாயா கொடுத்த வாக்கு நிறைவேறியதை முதல் வாசகத்தில் பார்க்கிறோம். இருளில் வாழ்ந்த மக்கள், இயேசுவின் மூலம் ஒளியை பார்த்தார்கள், அதன் மூலம் அவர்கள் குணமடைவார்கள் என்று அறிந்தார்கள். பாவ வாழ்வினால், உண்டான, துக்க  பிடையான வாழ்வை துடைத்து எரிய யார் எந்த முயற்சியும் அடைவதில்லை.?  சாத்தானின் இறப்பையும், அழித்தலையும் தன்னுள்ளே வைத்து கொள்பவர்கள் யார்? யாருடைய பிடிவாதம் உங்களை வேதனை படுத்துகிறது?
உங்கள் ஜெபத்தினாலும், விசுவாசமான அன்பினாலும், இயேசுவை அவர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள். இந்த உண்மையை எதிர்த்து, அவர்கள் சண்டையிட்டாலும், இயேசுவிடமிருந்து அவர்கள் மறைந்து இருந்தாலும், கிறிஸ்துவின் மிக பெரிய வெள்ளமென உள்ள ஒளியை யாரும் மறைக்க முடியாது. மிக விரைவில், இந்த ஒளி சந்தோசத்தை கொடுக்கும், உங்களுக்கு மட்டுமல்ல, யாரையெல்லாம், மீட்க வேண்டுமோ அவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

லூக்கா நற்செய்தியில் (12:49-50), இயேசு இருளில் வாழும் மக்களை பற்றி கூறுகிறார்: “அது நிறைவேறுமளவும், நான் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்”. இதன் மூலம் உங்கள் வேதனையை அவர் அறிகிறார் , அவரும் அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறார். இன்னும் ஈடுபாட்டுடனும், மிகவும் ஆர்வத்துடன் உங்கள் வேதனையில் பங்கு கொள்கிறார். நீங்கள் அறிந்ததை விட, அவர் இன்னும் அதிகமாகவே செய்து கொண்டிருக்கிறார். எந்த வெற்றிக்காக வேண்டிகொள்கிறிர்களோ அதற்காக , அதனைசெய்து முடிக்க  எல்லா வகையிலும் – முடியாத காரியாமாக இருந்தாலும் – அதனை முழுமையுடன் செய்ய அயராமல் உழைத்து கொண்டிருக்கிறார்.
ஒவ்வொருவரின் கலகம் செய்யும் தன்மைகள், இறைவனிடம் வராமல் இருப்பதற்கான குணங்கள், அனைத்தும், உடைந்து போக, இறைவனின் அருளால், அவர்கள் கடவுளிடம் நெருங்க நாம் ஜெபிக்க வேண்டும். கடவுள் மற்றவர்கள் மூலம் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர இறைவனிடம் நாம் வேண்டுவோம். அவர்கள் ஒளி பெற வேண்டுவோம் , கடவுள் அவர் வழியில் (இந்த வழி நாம் நினைக்கும் வழியாக இருக்காது) அவர்களின் கடினமான மறுப்பு கொள்கையை உடைத்தேரிக்க இறைவனிடம் நாம் ஜெபிப்போம். மனம் திரும்பியவுடன், அவர்கள் கிறிஸ்துவின் ஒளியை மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல ஜெபிப்போம். அவர்கள் மனம் திரும்புதல், உறுதியான , என்றென்றும் நிலைத்திருக்கும் , ஆழமான மண மாற்றமாக இருக்க வேண்டும் என ஜெபிப்போம்.
நாம் கடவுளின் மனதை மாற்ற ஜெபிக்க வேண்டியதில்லை; அவர் ஏற்கனவே, கிறிஸ்துவின் ஒளியை இருளில் வாழ்வபவர்களுக்கு கொண்டு உழைத்து கொண்டிருக்கிறார். நாம் அவர்களை கடவுளின் கைகளுக்கு கொண்டு செல்ல ஜெபிப்போம். ஏனெனில், அதனை அவர்களாகவே செய்வதில்லை.
© 2014 by Terry A. Modica



Friday, January 17, 2014

ஜனவரி 19, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜனவரி 19, 2013  ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் இரண்டாம் ஞாயிறு
Isaiah 49:3, 5-6
Ps 40:2, 4, 7-10

1 Corinthians 1:1-3
John 1:29-34

யோவான் நற்செய்தி

29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.30எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.31இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் ' என்றார்.32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ' தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார்.34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். '
(thanks to www.arulvakku.com)
ஒவ்வொரு திருப்பலியிலும்,  யோவான் இன்றைய நற்செய்தியில் கூறுவதை, குருவானவர் கூறுவதை கேட்கிறோம்: “இவரே கடவுளின் செம்மறி, இவரே உலகின் பாவங்களை போக்குபவர்”, இதற்கு பதிலுரையாக, நாம் “ஆண்டவரே நாம் உன்னை பெறுவதற்கு தகுதியற்றவன் .. அனால் ஒரு வார்த்தை சொல்லியருளும், எனது ஆன்மா குணமடையும்”
திருப்பலியின் பாவமன்னிப்பு சடங்கில், நாம் உண்மையாக மனம் வருந்தி, பாவ மன்னிப்பு கோரினால், நமது குணப்படுத்துதல் ஆரம்பித்து விடும். நம் பாவங்கள் போக்கப்பட்டு, நாம் இயேசுவை முழு மனிதனாகவும, கடவுளாகவும், திவ்ய நற்கருணையில் பெறுவோம். அதே ஆற்றலோடு , கோவிலை விட்டு, நாம் வெளியே சென்று, யோவானை போல, நாமும், “இயேசுவை கண்டேன், கடவுளின் மகனை தரிசித்தேன்” என்று கூறலாம்.
ஒவ்வொரு திருப்பலியும், இந்த மாதிரி அனுபவத்தோடு தான் முடிகிறதா?
திருப்பலின் ஒவ்வொரு பகுதியின் இதனை நமக்கு வலியுறுத்துகிறது. இயேசு நம்மிடையே நாம் சமூகமாக ஒன்றாய் பாடும்போது இருக்கிறார். பாவ மன்னிப்பு சடங்கில் இயேசு பிரசன்னமாய் இருக்கிறார். நாம் உண்மையாக பாவமன்னிப்பு கேட்பதை உன்னிப்பாக கவனிக்கிறார். வாசகம் வாசிக்கும்பொழுது ஒவ்வொரு வார்த்தையிலும் இயேசு இருக்கிறார். ஒவ்வொரு வார்த்தையும் நம்மில் வந்து, நம் ஆன்ம வாழ்வு வளர உணவாக மாறுகிறது. பிரசங்கம் சில நேரங்களில். நன்றாக இல்லாத பொழுது, அவரின் ஆவி நமக்கு தனியாக நமக்கு சொல்லி தருகிறது. (சில நேரங்களில் தோன்றும் சில சிந்தனைகள், கடவுளின் செயலாகும்) இயேசு ஒவ்வொரு ஜெபத்திலும் இருக்கிறார். நம் ஜெபத்திலும், குருவானவர் சொல்லும் ஜெபத்திலும் இயேசு எங்கும் நிறைந்திருக்கிறார்.
ஒவ்வொரு திருப்பலியும், நம்மை மாற்றுவதற்காக உள்ளது, மேலும், கிறிஸ்துவின் உண்மையான பிரசன்னத்தை இவ்வுலகிற்கு அறிவிக்க நம்மை அனுப்ப்புகிறது.

யோவான் கூறியது போல: “அவரை எனக்கு தெரியாது”, அதனை மாற்றி சொன்னால், “நான் ரொட்டியும், திராட்சை ரசம் மட்டுமே பார்த்தேன்” மேலும், “நாம் பாவியாக இருந்தேன், நான் எவ்வளவு ஆபத்தை உண்டாக்கினேந என தெரியாது” , மற்றும், “நாம் காயமுற்று இருந்தேன் எப்படி குணமடைவது என தெரியாமல் இருந்தேன் “ என்றும் நாம் சொல்வோம்.

யோவானை போல நாமும்: “இப்பொழுது நான் அவரை கண்டுகொண்டேன், இவரை வெளிப்படுத்தும் பொருட்டே , இவர் தான் கடவுளின் மகன், பரிசுத்த ஆவியானவர் இவரை என்னில் வெளிப்படுத்தினார், இயேசு திவ்ய நற்கருணையில் இருப்பதை பரிசுத்த ஆவி என்னில் வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் தயை குணத்துடன், என் பாவங்களை சுட்டி காட்டி, அதனை விட்டு விலக உதவியாக இருந்தார். பரிசுத்த ஆவியானவர் என் காயங்களுக்கு குணமளிக்க கூடிய எல்லா உதவி உள்ள இடத்தையும் என்னை கூட்டி கொண்டு சென்றார்”

© 2014 by Terry A. Modica


Friday, January 10, 2014

டிசம்பர் 12, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 12, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா
Isaiah 42:1-4, 6-7
Ps 29:1-4, 9-10 (with 11b)
Acts 10:34-38
Matthew 3:13-17
இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(
மாற் 1:9 - 11; லூக் 3:21 - 22)
13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.14 யோவான், ' நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்? ' என்று கூறித் தடுத்தார்.15 இயேசு, ' இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை ' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.17 அப்பொழுது, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறில், இயேசு இறைசேவையை ஆரம்பித்ததை , அதற்காக தன்னை ஆயத்த படுத்தி கொண்டதை நாம் கொண்டாடுகிறோம். நாமும் அதே திருமுழுக்கு பெறுகிறோம், ஞானஸ்நானத்தில் நாம் இதே அனுபவத்தை அடைகிறோம். கிறிஸ்துவின் வாழ்வில் நாம் .முழுதும்  மூழ்கிறோம். மற்ற இரண்டு அருட்சாதனங்கள் – புது நன்மையையும் , உறுதிபூசுதல் – நம் பரிசுத்த வாழ்வை உறுதி செய்து, அந்த வாழ்வை நாம் தொடர நமக்கு அதிகாரத்தையும், ஆற்றலையும் கொடுக்கிறது. இதன் மூலம் கடவுள் சொல்கிறார்: இதோ என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்:

தந்தை கடவுள் பூரிப்படையும் அளவிற்கு பரிசுத்த ஆவி உன்னில் என்ன செய்கிறார்? உங்கள் முலமாக இறையரசிற்கு எப்படி சேவை செய்கிறார். நீங்கள் இன்றைய உலகிற்கு அதே பரிசுத்த ஆவிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, கிறிஸ்துவின் இறைசேவையை தொடர செய்வீர்களா?
எல்லா கிறிஸ்தவர்களுக்கும், ஞானஸ்நாணம கொடுக்கப்பட்டு அவர்கள் கிறிஸ்துவின் சேவையை தொடர அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இறை சேவையை தொடர நாம் ஆர்வத்தோடு செயல்பட நமக்கு கடினமாக இருக்கிறது. எடுத்து காட்டாக, தீவிர நோய்கள் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்  மருத்துவர்களாகவோ அல்லது நர்ஸாகவோ ஆகிறார்கள், சிறு வயதில் பல்வேறு துன்பத்திற்கு ஆளானவர்கள், பெரியவர்களின் குற்றங்களுக்கு ஆளானவர்கள், வளர்ந்த பிறகு, சமூக சேவை ஆற்றுபவர்களாகவும், பல குற்றங்களால் துன்பபடும் குழந்தைகளை காப்பவர்களாகவும், மாறுகிறார்கள். பல நிறுவனங்களில் வேலை செய்யும்பொழுது துன்பத்திற்கு உள்ளானவர்கள், தனியே ஒரு நிறுவனம் தொடங்கி, அதில் பலருக்கு வேலை கொடுத்து, அவர்களை நல்ல முறையில் நடத்துவார், எப்படி என்றால், கிறிஸ்துவை நாம் எப்படி நடத்த வேண்டுமோ அதே போல.
நாம் எதிலெல்லாம் ஆர்வத்துடன் செயல்பட முடிகிறதோ, அதற்கான ஆற்றலை, கிறிஸ்துவின் பாடுகளின் மூலமும்,  ஞானஸ்நாணத்தின் மூலமும் நாம் பெறுகிறோம்.
மேலும், திருப்பலியை தொடர்ந்து நாம் கொண்டாடும்பொழுது, திவ்ய நர்கருனையின் உண்மையான அர்த்தத்தை புரிந்து அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து, இறைசெவையை தொடர, நம் அழைத்தலை புதுப்பித்து கொள்கிறோம். திவ்ய நற்கருணை அருட் சாதனத்தின் முலம் நாம் புதுபிக்க படுகிறோம். கிறிஸ்து திவ்ய நற்கருணை முலம் இயேசு அவரின் இறைசேவையில் நம்மை இணைக்கிறார். அதன் முலம் நாம் இவ்வுலகை மாற்ற முடியும்.
இதனை செய்வதற்கு தந்தை கடவுள் உன்னை அழைத்துள்ளார். இந்த அழைப்பினால், தான், நீங்கள் எல்லாம் செய்கிறீர்கள், அதனால் தந்தை கடவுள் உங்களால் பூரிப்படைகிறார்.

© 2014 by Terry A. Modica

Friday, January 3, 2014

ஜனவரி 5,2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜனவரி 5,2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் திருகாட்சி ஞாயிறு
 Isaiah 60:1-6
Ps 72:1-2, 7-8, 10-13
Ephesians 3:2-3, 5-6
Matthew 2:1-12

மத்தேயு நற்செய்தி
ஞானிகள் வருகை
1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள்.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.6 ஏனெனில், யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ' என்றார்கள்.7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.8 மேலும் அவர்களிடம், ' நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் ' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்துமஸ் விழா காலத்தில், ஞாணிகளின் வருகையும் நாம் கொண்டாடுகிறோம். குழ்ந்தை இயேசுவை அவர்கள் வீழ்ந்து வணங்கியதை நாமும் கவனமாக எடுத்து கொள்ள வேண்டும். கிரேக்க வார்த்தையான  ஞாணிக்கு அர்த்தம் என்ன என்றால், கிழ்த்த்திசை விஞ்ஞாணிகள் என்று அர்த்தம். சில நேரங்களில், நாம் அவர்களை “ஜோசியர்கள்” என்று மாற்றி சொன்னாலும், இயேசுவின் குடிலை அவர்கள் சென்று வணங்கியது, ஜோசியத்தால் அல்ல.
ஏனெனில், அவர்கள் யூதர்கள் அல்ல. யூத மீட்பரை ஆவலுடன் காண அவர்கள் உறுதியோடு இருந்தனர். இதன் மூலம் “ஆண்டவரின் திருக்காட்சி” என்று இத்திருவிழாவின் பெயருக்கு ஏற்றார் போல, அவர்கள் இயேசுவை காண வந்த்திருந்தனர். இயேசுவின் முக்கியத்துவத்தை அந்த ஞானிகள் நம்பினார்கள். உலகிற்கு அது புரியாவிட்டாலும், அவர்களுக்கும் அது புரியாவிட்டாலும், அவர்கள் இயேசுவை நம்பினார்கள்.
இயேசுவை அவர்கள் மேசியாகவும், அரசராகவும், ஆராதனை செய்தனர். அவர் எப்பட அராசராவர் என்று கூட தெரியாமல், எப்படி அவர் அரசாட்சி இவ்வுலகை மீட்க போகிறது என்று கூட தெரியாமல் ஞானிகள் இயேசுவை ஆராதித்தார்கள். அவர்கள் விஞ்ஞான அறிவியலாளர்கள், அவர்கள் மத போதனைகள் படித்து உள்ளார்கள், ஆண்டவரின் ஆவியின் தூண்டுதலோடு , அவர்கள் எல்லாம் செய்தார்கள். அதனால் அவர்கள் வாழ்வும் மாறியது.
தூய ஆவியார் ஒருவாரால் தான், ஒவ்வொருவரின் விசுவாசம் கொடுக்க முடியும். விசுவாசம், பரிசுத்த ஆவியின் கொடை. (கொரிந்தியர்கள் 1 12 பார்க்கவும்). ஆண்டவரின் திருக்காட்சி என்றால், “கண்டுபிடித்தல்”, “இரகசியத்தை வெளிப்படுத்தி நம் வாழ்வை மாற்றுதல்” என்று அர்த்தம் ஆகும்.  இந்த நாள் கடவுள் நமக்கு கொடுத்த அன்பளிப்பு ஆகும், இதன் மூலம் நாம் புது வாழ்வை வாழ ஆசை படுவதை தொடங்கி வைக்கிறது.

ஆண்டவரின் திருக்காட்சியின் மூலம் ஞானிகள் , கிறிஸ்துவின் பிரசன்னத்தில், எவ்வளவு சந்தோசத்துடன், இருந்த்திருப்பார்கள் என்பதை நம்மால் நாம் கற்பனை பண்ணி பார்க்கலாம். ஒரு ஏழையின் குடும்பத்தில் பிறந்த இந்த குழ்ந்தை எப்படி அரசராக போகிறார் என்று அவர்களுக்கு புரியாவிட்டாலும், அவரை பற்றிய ஏதாவது செய்தி இஸ்ரேலிலுருந்து வருகிறதா? என்று அவர்கள் வாழ்நாள் முழுதும் அவர் நினைவாகவே இருந்தனர். இயேசுவின் சிலுவை மரணத்தையும், அவர் சீடர்களின் போதனைகளையும் அவர்கள் கேட்டிருக்கலாம் . அதன முலம் அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறியிருக்கலாம். அதன் மூலம் எஞ்சியுள்ள புனித சின்னங்கள் புனிதபடுத்தபட்டுள்ளது .

© 2013 by Terry A. Modica