Saturday, July 26, 2014

ஜூலை 27, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜூலை 27, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு
1 Kings 3:5, 7-12
Psalm 119:57, 72, 76-77, 127-130
Romans 8:28-30
Matthew 13:44-52

மத்தேயு நற்செய்தி
புதயல் உவமை
44 ' ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

முத்து உவமை
45 ' வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.46 விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.

வலை உவமை
47 ' விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.48 வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.49 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;50 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். '

முடிவுரை
51 ' இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா? ' என்று இயேசு கேட்க, அவர்கள், ' ஆம் ' என்றார்கள்.52 பின்பு அவர், 'ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்என்று அவர்களிடம் கூறினார். 
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு விண்ணரசு புதையலுக்கு ஒப்பானது என்று சொல்கிறார். மற்ற எல்லாவற்றையும் விற்று வாங்கப்பட்ட முத்து, மீன் வலையில், நல்ல மீன்களை எடுத்து கொண்டு, தீய மீன்களை வெளியே தூக்கி எறிவார்கள் என்றும் அதனை விளக்கி கூறுகிறார்.

வேறு மாதிரியாக சொல்வதானால், நம் கிறிஸ்துவ வாழ்வு, மிகுதியான செல்வத்தை கொண்டுள்ளது, நம்மிடம் ஒன்றுக்கும் உதவாத பொருள் ஏதேனும் இருந்தால், அதனை,  அகற்றி விட்டு, விலை மதிப்புள்ள பொருளுக்காக தயார் படுத்த வேண்டும். நம்மிடம் மதிப்பான பொருள் சில, தற்காலிக மதிப்புள்ளது, இந்த உலகத்தில் தான் மதிப்பாக இருக்கும். மேலும், அதே பொருட்கள், வின்னரசிற்காக உபயோகபடுத்தப்படும்பொழுது அது உண்மையான மதிப்பை பெறுகிறது.
இரண்டாவது வாசகத்தில், எல்லாம் கடவுளின் அன்பிற்காக இணைந்து செயல்படுகின்றன என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் நம்மிடம் உள்ள தவறான முத்தையும், இறந்த மீன்களையும் தூக்கி எறிந்தோமானால், நாம் தந்தை கடவுளை போல ஆகி விடுவோம். அதன் பிறகு, விண்ணக அரசிற்கு மிகவும் உபயோகமாக இருப்போம். மிகவும் மோசமாக ஏதாவது நமக்கு நடந்தால் கூட, மிக கீழ் தரமான ஆளாக நாம் இருந்தால் கூட , நம்மை எல்லாம் படைத்த , வானாளாவிய இரக்கம் கொண்ட கடவுள் , நம்மையும் நல்ல செயல்களுக்கு உபயோகமாக ஆக்குவார். நல்ல முத்தாக நாம் இருப்போம்.

முதல் வாசகத்தில், சாலமோன் கடவுளிடம் பெரிய சொத்தை கேட்டிருக்கலாம், கண்டிப்பாக கடவுள் அவருக்கு கொடுத்திருப்பார். ஆனால், எல்லாவற்றையும் அறியும் ஞானத்தை கேட்டார். அதன் மூலம் நாட்டை நல்லாட்சி செய்ய முடியும். அவர் ஆட்சி அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும், கூட, மிகவும் ஞானமுள்ள அரசர் ஆள்கிறார் என்றும், மேலும் பல சொத்துக்கள் சேர்த்தார் எனவும் அவர் பெயர் பெற்றார்.
இதன் மூலம் நாம் அறிவது என்ன என்றால், நாம் இறையரசின் செல்வத்தை நாம் தேடினால், இவ்வுலக செல்வத்தை நம்மால் சரியாக உபயோகிக்க முடியும், ஏனெனில், கடவுளின் ஞானம் அவரின் அரசிற்காக இந்த செல்வத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று நமக்கு வழிகாட்டும். எவ்வளவு அதிகம் நாம் கிறிஸ்துவை அன்பு செய்கிறோமோ , மேலும், அவர் வழியில் செல்கிறோமோ , எது உண்மையான மதிப்புள்ள பொருள், செயல் என்று நம்மால் கண்டு பிடிக்க முடியும். அதன் மூலம் கடவுள் அரசிற்கு எல்லாவற்றையும் உபயோகிக்க முடியும்.
© 2014 by Terry A. Modica


Friday, July 18, 2014

ஜூலை 2௦ 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூலை 2௦ 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு
Wisdom 12:13, 16-19
Psalm 86:5-6, 9-10, 15-16
Romans 8:26-27
Matthew 13:24-43
மத்தேயு நற்செய்தி
வயலில் தோன்றிய களைகள் உவமை
24 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார்.25 அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்.26 பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.27 நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ' ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள்.28 அதற்கு அவர், ' இது பகைவனுடைய வேலை ' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ' நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன? ' என்று கேட்டார்கள்.29 அவர், ″ வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும்.30 அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ' முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் ' என்று கூறுவேன் ″ என்றார். '

கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள்
(
மாற் 4:30 - 32; லூக் 13:18 - 21)
31 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: 'ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது.http://www.arulvakku.com/images/footnote.jpg32 ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.33 அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ' பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும். '

உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு
(
மாற் 4:33 - 34)
34 இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை.35 ' ' நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன் ' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.

வயலில் தோன்றிய களைகள் உவமையின் விளக்கம்
36 அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, ' வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும் ' என்றனர்.37 அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: ' நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்;38 வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்;39 அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.40 எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.41 மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்;http://www.arulvakku.com/images/footnote.jpg42 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.43 அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும். '

புதயல் உவமை
44 ' ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

நீங்கள் போய் சீடர்களை உருவாக்குங்கள்: அமெரிக்காவில், மனமாற்றத்திற்கான திட்டத்திற்கு தலைப்பு இதுதான். (1992) , இது மூன்று முக்கிய குறிக்கோள்களை செயல் திட்டத்தில் உருவாக்கப்பட்டது. (1) உங்கள் விசுவாசத்தை இன்னும் உறுதியோடு வளர்த்தல் , (2) மற்றவர்களின் மன மாற்றத்திற்கு அழையுங்கள். (3) உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்து சமூகத்தை மாற்றுங்கள். இன்றைய நற்செய்தியில், இயேசுவும் உவமைகள் மூலம் இதே மூன்று குறிக்கோளை நமக்கு போதிக்கிறார்.
(thanks to www.arulvakku.com)

உங்கள் விசுவாசத்தை உறுதியாக வளர்த்தல்: இறையரசில், நாம் நல்ல கோதுமை போல , களைகளோடு இருக்கிறோம். களைகள் நம்மை தாண்டி வளர்ந்து விடும். அதனால், நாம் தினமும், பரிசுத்த வாழ்வில் வளர முயற்சித்து கொண்டே இருத்தல் வேண்டும். உங்கள் பரிசுத்த வாழ்வை தடுக்கும் களையை எடுக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் மத்தியில், சாத்தானின் தூன்டுதலோடு நடப்பவர்கள் மத்தியில், உங்கள் விசுவாசம் எப்படி வளர்கிறது? உங்கள் தந்தை கடவுள் இந்த உலகை உருவாக்கியவர் விசுவாசத்தில் வளர உங்களுக்கு தேவையான எல்லா ஆற்றலையும் கொடுக்கிறார்

(2) மற்ற சகோதரர்களை இறையரசிற்கு அழைத்தல்: நாம் எல்லாம், மிகச் சிறிய விதை ஆக இருந்து புதர்களுக்கு இடையே மிக பெரியதாக வளரும் மரமாகி, பலருக்கு பயனுள்ளவர்களாக இருப்போம். உங்கள் விசுவாசத்தினால், யார் பயன் பெறுகிறார்கள்? உங்கள் பரிசுத்த வாழ்வு எவ்வாறு அவர்களை இயேசுவை நோக்கி அழைக்கிறது. ? பரிசுத்த ஆவியானவர் , உங்கள் அனுபவத்திலிருந்து, அவர்களை மனம் மாற தயாராக இருந்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு தேவையான ஆற்றலையும் அருளையும் வழங்குகிறார் .
(3) சமூகத்தை மாற்றுதல்: இறையரசில், நாம் ஈஸ்டை போல, சிறிய மாவை மிக பெரியதாக மாற்றி ரொட்டி துண்டுகளாக மாற்றுவது போல, நாமும் இருக்கிறோம். கிறிஸ்தவர்களாக இந்த உலகை முன்னேற்ற நீங்கள் எந்த செயலை செய்கிறீர்கள்? உங்கள் வேலையிடத்தில், உங்கள் விசுவாசம், ஒரு மாற்றத்த்தை கொண்டு வருகிறதா? உங்கள் வீட்டிற்கு அருகில், மற்றும், கோவிலில் மாற்றத்தை கொண்டு வருகிறீர்களா? திருப்பலியில், நீங்கள், திவ்ய நற்கருணையை பெற்று, அதனால், பலம் பெற்று, நீங்கள் இந்த உலகிற்கு, திவ்ய நற்கருனையாக மாற உங்களுக்கு ஆற்றல் தரப்படுகிறது. திருப்பலியில், முடிவுறும் தருவாயில், குருவானவர், உங்களை ஈஸ்டாக மாற ஆசிர்வதித்து அனுப்புகிறார்.

© 2014 by Terry A. Modica

Saturday, July 12, 2014

ஜூலை 13, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜூலை 13, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு
Isaiah 55:10-11
Psalm 65:10-14 (with Luke 8:8)
Romans 8:18-23
Matthew 13:1-23

மத்தேயு நற்செய்தி

உவமைப் பொழிவு
விதைப்பவர் உவமை
(
மாற் 4:1 - 9; லூக் 8:4 - 8)
அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார்.மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: ' விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன;6 ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின.7மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.9கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் என்றார்.

உவமைகளின் நோக்கம்
(
மாற் 4:10 - 12; லூக் 8:9 - 10)
10 சீடர்கள் அவரருகே வந்து, ' ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்? ' என்று கேட்டார்கள்.11 அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: ' விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை.12 உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.13அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.14 இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: ' நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணர்வதில்லை.15 இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன். ' 16 உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.17 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

விதைப்பவர் உவமையின் விளக்கம்
(
மாற் 4:13 - 20; லூக் 8:12 - 15)
18 ' எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்:19 வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான்.20 பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள்.21 ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.22முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள்.23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, விதை விதைப்பதை பற்றி கூறுகிறது. இதில் முக்கியமான செய்தி என்ன என்றால், விதைத்த விதை மண்ணில் கலந்து, அது அழிந்து முளைக்காவிடில், விதைத்த விதை வீணாகிவிடும், ஒவ்வொரு விதையும், விதைத்தவருக்கு கொடுக்க வேண்டும், அது அழிந்து, புதிய முளையாக உருவாக வேண்டும். அதன் பிறகு தான், வேர் வளர்ந்து, பல தண்டுகள் உருவாகி, மேல் நோக்கி வளர ஆரம்பிக்கும், இருந்தும், அந்த செடிக்கோ, மரத்திற்கோ, இன்னும் உரம் போட்டு வளர்க்க பட வேண்டும்.

இந்த வளர்ச்சி எல்லாம் நடந்த பிறகு, அந்த தாவரம் , செடியோ, விதை போல் இல்லாமல், இந்த உலகத்தின், இயற்கையோடு ஒத்து, எல்லோருக்கும் உதவிடும் , பயனுள்ளதாக மாறிவிடும்.

இயேசுவின் உவமையை கேட்டு, நாமும், பல மடங்காக கொடுக்க தயார் என்று அறிவிக்கிறோம். ஆனால், சும்மா ஆமோதித்து விட்டு, நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால், நாம் பல மடங்காக பெருகி விளைச்சலை கொடுக்க முடியாது. நம்மை எப்படி அதிக விளைச்சல் கொடுக்கும்  மண்ணாக செடியாக மாற்றுவது. ?

இசையாஸ் வாசகத்தில், கடவுளே மிகவும் தரமான மண் என்று சொல்லபடுகிறது – கடவுளும் அவரது வார்த்தைகளும், நல்ல மண். பவுலடியார் இரண்டாம் வாசகத்தில், துன்புறுவதும் அழிவதும், உருவாக்கத்தின் ஒரு பாகம் என்று சொல்கிறார் (விதைகள் மண்ணில் விழுந்து மடிந்து தான் புதிய செடியாக மாறுகிறது ). மீட்பு, துன்பத்திலும், மரணத்திலும் இருந்து வருகிறது.

நாம்  நம்மையே இந்த திட்டத்திற்கு உட்படுத்தி கொண்டு, கடவுளிடம் வேண்டி, நம்மை வளர்க்க விட்டால் தான், நாம் முழுமையாக பலன் தருவோம்.


© 2014 by Terry A. Modica