Friday, November 27, 2015

நவம்பர் 29 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


நவம்பர் 29 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால முதல் ஞாயிறு
Jeremiah 33:14-16
Ps 25:4-5, 8-10, 14
1 Thessalonians 3:12-4:2
Luke 21:25-28, 34-36

லூக்கா நற்செய்தி

அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கிஎன்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர்.
ஏனெனில்வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போதுநீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது."
மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறிகளியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும்அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்.
மண்ணுலகெங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும்மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்'' என்றார்.  


நம்பிக்கையும் வெற்றியையும் கொடுக்கும் விசுவாசம்
இன்றைய உலகில், நடக்கும் எல்லா பிரசினை நடுவிலும், கஷ்டங்கள் ஊடே , கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பிக்கையும் வெற்றியும் விசுவாசத்தின் மூலம் பெற முடியும் என்ற விசுவாசம் நமக்கு வேண்டும்.
கத்தோலிக்கர்களாகிய நாம் இன்னும் ஒரு படி மேலே போய் , திருப்பலியில் அப்பமும் திராட்சை ரசமும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் அதிசயத்தை விசுவசித்து , அதனை நன்று புரிந்து கொண்டு திருப்பலிக்கு செல்வது நல்லது. திவ்ய நற்கருணையில்  உண்மையான கிறிஸ்துவின் பிரசன்னத்தால், நீங்கள் மாறி உள்ளீர்களா? அப்படி என்றால், நீங்கள் திருப்பலி விட்டு வெளியே செல்லும்பொழுது , உங்களை  விசுவாசத்தின் சாட்சியாக பார்கிறார்களா?


விசுவாசத்தை தெரிந்து வைத்திருப்பதும், அந்த விசுவாசத்தோடு உண்மையாக வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
எந்த வேண்டுதலை நீங்கள் கடவுளிடம் கேட்டும் இன்னும் காத்து இருக்கிறீர்கள்?  அனந்த ஜெபத்தை நீங்கள் திருப்பலியில் இயேசுவிடம் சொல்லும் பொழுது முழு நம்பிக்கை உங்கள் விசுவாசத்தின் முலம் வருவதை நீங்கள் உணர்கிரிர்களா?
திவ்ய நற்கருணையை குருவானவர் புனிதபடுத்தும் பொழுது கடவுள் அந்த அப்பத்தையும் இரசத்தையும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகிறார் என்ற விசுவாசம் நம்மிடம் இல்லை என்றால், திவ்ய நற்கருணை முலம் இயேசு நமக்கு இறைசேவை செய்து வருகிறார் என்பதை நாம் அறியாமல் போய்விடுவோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு இரண்டாவது வருகையை பற்றி பேசுகிறார்.  அனால் இதனை நம் அனுதின வாழ்வோடு ஒப்பிடலாம். புதிய பிரச்சினைகள் , கலக்கமும், கஷ்டமும் நமக்கு எதிர் காலத்தில் வரும். அது என்ன பிரச்சினை , எப்படி வரும் என்றும் நமக்கு தெரியாது. இது இந்த உலக வாழ்க்கை. இதிலிருந்து வெளி வர  இயேசு நமக்கு உதவ விரும்புகிறார். இந்த விசுவாசம் நமக்கு இருந்தால், வெற்றியும் நம்பிக்கையும் நம்மை வந்து சேரும்.

எனினும். நாம் நமது பிரசினை பற்றியே சிந்தித்து கொண்டு இருந்தால், கிறிஸ்துவை நோக்கி இருக்க வேண்டிய மனது வேறு பக்கம் சென்று விடும். விசுவாசத்தில் நாம் வாழவில்லை. நாம் ஆவியில் நிலைத்து இல்லாமல், அதிலே குறைந்து விடுகிறோம் என்பதை இயேசு நமக்கு எச்சரிக்கையாக சொல்கிறார். இப்படியான சூழ் நிலையில் நாம் விசுவாசத்தை இழக்கிறோம். நாம் கிறிஸ்துவை எப்போதுமே முன்னுறுத்தி இருப்பதில்லை. பரிசுத்த  ஆவியின் ஆலோசனைகளை கேட்க நாம் முயல்வதில்லை. ஆனால், நாம் இயேசுவிடம், நம் வாழ்வின் பிரச்சினகளில்ருந்து வெளியே வர உதவி கோரினால், அவர் அதனை செய்வார், நாம் உற்சாகமடைவோம் , இயேசுவின் பாதுகாப்பில் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையில் நாம் மகிழ்வோடு இருபோம், நமக்கு எதிரே எந்த பிரச்சினை வந்தாலும், கடவுள் மேல் நாம் நம்பிக்க கொண்டால், கடவுள் காப்பாற்றுவார்.
நம் பிரச்சினைகள் நமக்கு பயம் கொடுக்கிறது. விசுவாசம் தான், நாம் இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்வதற்கும், சந்தோசமாக நமது வாழ்வை தொடர்வதற்கும் உதவி செய்கிறது. இந்த விசுவாசத்தை நிலை நிறுத்துவதற்கு நாம் முறையான தொடர்ந்து முயற்சி செய்து விசுவாசத்தில் நாம் தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால், ஆவியில் குறைந்து இருப்பது, மிகவும் சோர்வான வாழ்வை வாழ வைக்கிறது.


© 2015 by Terry A. Modica

Friday, November 20, 2015

நவம்பர் 22 2௦15 ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர் 22 2௦15 ஞாயிறு நற்செய்தி மறையுரை
கிறிஸ்து அரசர் பெருவிழா
Daniel 7:13-14
Ps 93:1-2, 5
Revelation 1:5-8
John 18:33b-37
யோவான் நற்செய்தி
அக்காலத்தில் பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், ``நீ யூதரின் அரசனா?'' என்று கேட்டான்.
இயேசு மறுமொழியாக, ``நீராக இதைக் கேட்கிறீராஅல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?'' என்று கேட்டார்.
அதற்குப் பிலாத்து, ``நான் ஒரு யூதனாஎன்னஉன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?''என்று கேட்டான்.
இயேசு மறுமொழியாக, ``எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல'' என்றார்
பிலாத்து அவரிடம், ``அப்படியானால் நீ அரசன்தானோ?'' என்று கேட்டான். அதற்கு இயேசு, ``அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்'' என்றார்.


உண்மையின் அரசர்
இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவின் அரசரா? என்ற கேள்வி எழுகிற பொழுது, இயேசு அதனை தெய்வீக அரசை பற்றி திருப்பிவிடுகிறார். கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல், . உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்இதற்காகவே உலகிற்கு வந்தேன்.  " என்று பதில் கூறுகிறார், இயேசு இந்த உலகின் அரசர்  அல்ல, அவர்  உண்மையின் அரசர்,  உண்மையை ஆட்சி செய்கிறவர்.
இயேசு நமக்கு போதகராக , இல்லாத போது, விசுவாசத்தையும் நம்பிக்கையும் அவர் நமக்கு வெளிபடுத்தாத போது , அது நமக்கு குழப்பமாகவும், தெளிவில்லாமலும் இருக்கும். மேலும், நாமே எடுக்கும் தவறான கணிப்புகளால், இந்த சாத்தான் ஆட்சி செய்யும் உலகத்தில் பல தவறான முடிவுகள் , சிந்தனைகள் எழுகின்றன. அனால் , சாத்தான் இந்த உலகை ஆட்சி செய்கிறான் என்பதே ஒரு தவறான எண்ணம் தான் இங்கே உலவுகிறது. உண்மையை திரித்து எடுக்கப்பட்ட முடிவு ஆகும். ஆனால் இது உண்மை இல்லை. நன்றாக நினைவில் கொள்ளுங்கள், இயேசு இந்த உலகிற்கு வந்து சாத்தானின் பாதாளம் வரை சென்று , இந்த உலக உயிரினங்கள் அனைத்தும் மீட்பின் வாழ்விற்கு கொண்டு வந்தார். கிறிஸ்துவின் அரசை ஏற்று கொள்பவர்கள் அனைவரும் , உண்மையில் வாழ்கின்றனர்.

நாம் பல விஷயங்கள் புரியாமல், நாம் பாவம் செய்கிறோம் என்று நினைத்து விட கூடாது. இன்னும் இயேசு  நம் வாழ்வின் அரசராக இருப்பதில்லை.
உதாரணமாக , உங்களிடம் ஒருவர் ஏதோ ஒன்றை கேட்கிறார், அதனை உங்களால் கொடுக்க முடியவில்லை , அது கோவில் கட்டும் நன்கொடையாக இருக்கலாம், அல்லது நோயுற்ற ஒருவருக்கு உதவி செய்வது, அல்லது, உங்களோடு வேலை செய்பவர் உண்மையான விசுவாசத்துடன் இல்லாமல் இருக்கலாம், அல்லது, வயதான பெற்றோருக்கு உதவ முடியாமல் போகலாம்.
அவர்கள் தேவைகளை செய்து கொடுக்க, உங்களிடம் போதுமான ஆளவு இல்லை என்று நினைக்கிறீர்களா? உங்கள் சொந்த வேலைகளினால், அதிகம் சோர்வுற்று இருக்கிறீர்களா? மற்றவர்களுக்கு நாம்  செய்யும் உதவிகள் போதும், இன்னும் அதிகம் உதவி செய்து கொண்டிருந்தால், நம்மால் வாழக்கையை அனுபவிக்க முடியாது. என்று நமது உடல் சொல்லும். இது ஏன் என்றால், நம் குழப்பமான மன நிலையால். நமது சொந்த விருப்பங்களை நிறைவேற்றினால் தான் நம்மால் சந்தோசமாக இருக்க முடியும் என்றும், மற்றவர்களுக்கு உதவுதால், நமக்கு ஒன்றுமில்லா என்றும் நாம மனம் நமக்கு சொல்லும்.
ஆனால் அதற்கு மாறாக, இயேசுவின் குரலை கேட்டு, அதன் படி நடப்பது சந்தோசமான வாழ்க்கை முறை ஆகும், "இன்னும் ஒரு படி மேலே செல்லுங்கள் " என்றும் "நல்ல சமாரியனை போல இருங்கள்" "மற்றவர்களுக்கு உதவுங்கள்" என்றும் இயேசு சொல்கிறார். இயேசு போதிக்கும் அனைத்து உண்மைகளையும் நாம் உறுதி ஆக நம்ப வேண்டும். அவர் போதிப்பது புரிந்தாலும், புரியாவிட்டாலும். நாம் அதனை நம்பி நம் வாழ்வில் பின் பற்ற வேண்டும்.
கடவுளுடைய விருப்பத்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது , நமக்கு உண்மைகள் புரிய ஆரம்பிக்கும். . இந்த புரிதல் இன்னும் அதிகம் ஆகும் பொழுது, நமக்கு சந்தோசம் பெருகும். இந்த புரிதலினால், ஏற்படும் நன்மைகளை கண்டு நாம் இன்னும் சந்தோசம் அடைவோம். இந்த நற்பலன்களை நாம் பார்க்காத பொழுது தான் நாம் பாவம் செய்கிறோம். கிறிஸ்துவின் அரசமைப்பில், பரிசுத்த ஆவியின் ஞானத்துடன் , நமது பாவ வாழ்விலிரூந்து வெளியேறி கிறிஸ்துவின் வாழ்விற்கு வருவோம்.

© 2015 by Terry A. Modica

Friday, November 13, 2015

நவம்பர் 15 2௦15 ஞாயிறு நற்செய்தி மறையுரை


நவம்பர் 15 2௦15 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு
Daniel 12:1-3
Ps 16:5, 8-11
Hebrews 10:11-14, 18
Mark 13:24-32

மாற்கு நற்செய்தி

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.

பின்பு அவர் வானதூதரை அனுப்பிஅவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.

அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது;விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை?
உங்களுக்கு தீர்க்கபடாத பிரச்சினை ஒன்று இருக்கிறதா?  இயேசு எங்கே? இன்றைய நற்செய்தியில், இயேசு அவரின் இரண்டாவது வருகையை பற்றி பேசுகிறார். ஆனால், அவரின் முதல் வருகையையே இன்னும் முடிக்கவில்லை! அந்த சீடர்களுக்கு கண்டிப்பாக குழப்பமாக இருந்திருக்கும்.

இயேசு இறந்த பிறகு, உயிர்தெழுந்தும், மோட்சத்திற்கு எழுந்து சென்ற பிறகும்,   சீடர்கள் இன்னும் குழப்பமாக இருந்தனர். அனால் இன்னும் இரண்டாம் வருகை நடைபெறவில்லை. இயேசு "இந்த தலைமுறை" முடிவதற்குள் இரண்டாவது வருகை இருக்கும் என்று கூறியதை  அவர்கள் இன்னும் மறக்கவில்லை. இருந்தாலும், காலங்கள் ஓடிவிட்டன. அப்போஸ்தலர்கள் செத்து பிழைத்தனர். இயேசு மேகத்தில் இன்னும் தோன்றவில்லை. இந்த உலக வாழ்வில்  பிரச்சினை  இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது

உங்களில் தீர்க்கபட்டாத பிரச்சினை பற்றி நினைவில் கொள்ளுங்கள். இயேசு உடனே இரண்டாவது வருகை புரிந்து இந்த உலகில் உள்ள , நமக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்கமாட்டாரா என நாம் ஏங்குவதில்லை? இயேசு என்ன சொன்னார் என்பதை பாருங்கள்: "இந்த நிகழ்வுகள் நடக்கும் பொழுது, நான் அருகே இருக்கிறேன், வாயில் கதவிற்கு வந்து நிற்கிறேன்  " என்று சொல்கிறார். ஆனால், சரியான தேதியை அவர் சொல்லவில்லை, சிடர்களுக்கும் , என் நமக்குமே அவர் தேதி குறித்து கொடுக்கவில்லை. -- கடவுளின் நேரத்திற்காக எந்த ஒரு துப்பு கிடைக்கவில்லை. (அந்த நேரம், எந்த மணி என்று யாருக்கும் , வான தூதர்களுக்கு கூட , மகனுக்கும் கூட , தந்தைக்கு மட்டும் தான் தெரியும் ) , இயேசு என்ன சொல்ல வருகிறார் ?

அவர் அருகில் வருகிறார்!
கடந்த 2௦௦௦ வருடங்களாக, நாமெல்லாம் இந்த "தலைமுறையில்" ஒரு அங்கத்தினாராக இருக்கிறோம், இயேசு இரண்டாம் வருகை வரும் வரை இந்த தலைமுறை போகாது. இது கிறிஸ்துவின் மனித குலத்தின் தலைமுறை , கிறிஸ்துவின் உடலாக இந்த உலகில், இந்த திருச்சபையில் இருக்கிறோம். இயேசுவின் தியாகத்தால், மிட்பினால், கடவுளால் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள்.
"இறுதி நாட்கள்" அந்த கடைசி காலம், முதல் பரிசுத்த ஆவியின் வருகையிலிருந்து ஆரம்பித்து விட்டது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை இந்த காலம் தொடரும். இது பரிசுத்த ஆவியின் காலம். இதிலே கிறிஸ்துவின் இந்த உலக இறைசேவை , பரிசுத்த ஆவியின் ஆசியுடன், ஆலோசனையுடன் நம் மூலம் தொடர்கிறோம்.

அத்தி மரத்தின் உவமை மூலம் நமக்கு சொல்லப்படும் போதனை என்ன என்றால், நல்ல நேரத்தையும், கெட்டதையும் நாம் கண்டு கொண்டு, இயேசு நமக்கு அருகில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும். நம் மனித உணர்வினால் அல்ல, திவ்ய நறுகருனையிலும் , பரிசத்த ஆவியின் மூலமும் .
உங்களின் அடுத்த செயலுக்கு அருகே இயேசு வாயிலில் இருக்கிறார். மோட்சத்திற்கு நீங்கள் எடுக்கும் அடுத்த காலடி அருகில் இயேசு நிற்கிறார். வாயில் என்றால், அதற்குள் நாம் நுழைந்து செல்ல வேண்டியிருக்கும். இயேசு அதன் கதவை உங்களுக்காக இப்போது திறந்து வைக்கிறார். பரிசுத்த வாயிலை, அன்பின் வாசலை உங்களுக்காக திறக்கிறார். உங்களுக்காக இந்த உலகில் கொடுக்கப்பட்ட பணியை செயது, முழுமையான வாழ்வை வாழா அந்த வாயிலில் நுழையுங்கள்.

© 2015 by Terry A. Modica

Friday, November 6, 2015

நவம்பர் 8 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர் 8 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 32ம் ஞாயிறு
1 Kings 17:10-16
Ps 146:7-10 (with 1b)
Hebrews 9:24-28
Mark 12:38-44
மாற்கு நற்செய்தி
அக்காலத்தில் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, ``மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே'' என்று கூறினார்.
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து கொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.
அப்பொழுதுஅவர் தம் சீடரை வரவழைத்து, ``இந்த ஏழைக் கைம்பெண்காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமேஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' என்று அவர்களிடம் கூறினார்.


நீங்கள் கடவுள் மேல் எவ்வவளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்?
இயேசுவை பின் செல்வதற்கு மிகவும் அதிக நம்பிக்கை தேவை, ஏனெனில், இயேசு நம்மை நாம் எதிர்பாராத இடத்திற்கு அழைத்து செல்வார். அதனால், நாம் மிகவும் கடினமான தியாகம் செய்ய வேண்டி இருக்கும், புதிய வளர்ச்சி இருக்கும், நமக்கு மிகவும் சுலபமான பழக்கமான வாழ்வை விட்டு வேறு கடினமான வாழ்க்கையை ஏற்று கொள்ள வேண்டி இருக்கும்.
இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தியிலும் வரும் இரண்டு கைபென்களை பாருங்கள். நமது பொது அறிவிற்கு, அவர்கள் இருவரும், அவர்களால் முடியாததை , அவர்கள் கொடுத்தார்கள். கடவுள் கண்டிப்பாக அவர்களின் தேவைகளை கொடுப்பார் என்று அவர்கள் நினைத்தார்களா? அப்படி ஒன்றும் இல்லை. ஆனால், கடவுள் மேல் உள்ள அன்பால், அவரின் அன்பின் மேல் உள்ள நம்பிக்கையில் கொடுத்தார்கள்.
உண்மையான அன்பின் வெளிப்பாடு நம்பிக்கை  - அதுவும் நாம் கடவுளை நம்புபோது.
நம்மிடம், அவ நம்பிக்கை உள்ள மக்கள் அவர்கள் நிருபிக்கும் பொழுது, அந்த துன்பத்திலிருந்து நம்மை கடவுள் உதவி செய்து மீட்டு விடுவார் என்று நாம் நம்பிநாள்,  நாம் எந்த வித கவலை இன்றி , தாராளாமாக நாம் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்தலாம். எந்த வித சங்கடமும் இன்றி நாம் மற்றவர்களை அணுகலாம். கடவுளிடத்தில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை பொருத்து நம் அனுகு முறை இருக்கிறது.
ஒவ்வொரு கைம்பெண்ணும் தன்னிடம் இழப்பதற்கு வேறு ஒன்றும் இல்லாத பொழுது கொடுத்தார்கள், நமக்கு துன்பம் கொடுப்பவரிடம், ஒதுக்கி தள்ளி வைப்பவர்களிடம் நாம் அன்பு செலுத்த முடியாது. இருந்தாலும், இயேசு நம்மிடம் சொல்கிறார். அவர்களை  மன்னித்து , அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் என்று சொல்கிறார். ஒரு படி மேலே போய் செய்யுங்கள் என்று இயேசு நம்மிடம் கூறுகிறார்.
சில நேரங்களில், அன்பு செய்ய மிகவும் கடினமான நபராக இருப்பவரிடம், நாம் நல்லது செய்வது , ஒரு எல்லை வரை செய்யலாம். இயேசு என்ன செய்தார் என்று பாருங்கள், பெரிய வெள்ளி  வரை, அவரை கேலியும் கிண்டலும் செய்தவர்களை விட்டு விலகியே சென்றார். இயேசு அவர்களை அன்பு செய்வதை நிறுத்தினாரா ? அக்கறையுடன் அணுகினார். அவர்கள் மேல் கவலை கொண்டார். கிறிஸ்துவை பின் செல்வது என்பது, நாம் கடவுளின் சரியான நேரத்தை நாம் கவனித்து கொண்டு இருக்க வேண்டும், எப்பொழுது அவர்களுடன் அக்கறையாக பேசுவது, அல்லது, அந்த இடத்தை விட்டு நகர்ந்து போவது. என்று நாம் கவனித்து நடந்து கொள்ள வேண்டும்.
சில நேரங்களில், அன்பு செய்ய கடினமானவர்களிடம் , நாம் நல்லது செய்யும்பொழுது, அவர்கள் மனம் திரும்ப ஒரு வாய்ப்பாக . மாறுகிறது. அவர்கள் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அவர்கள் குறைகளை போக்க நாம் உதவாமல், அவர்கள் அதனால் துன்பம் பட நாம் அனுமதிக்க வேண்டும். நாம் மனம் வருந்தாமல் இருந்தால், கடவுள் நாம் பாவங்களை துடைப்பாரா? என்று எண்ணிப்பாருங்கள். சில நேரங்களில் கடவுள் நாம் மனம் திருந்தினால் கூட ;;கடவுள் உடனே நம் குறைகளை ஒழித்து கட்டுவது இல்லை. மற்றவர்கள் சேதம் விளைவித்தால், நாம் அதிலிருந்து என்ன கற்று கொண்டோம். ?
மற்றவர்களை அன்பு செய்வது, எப்பொழுதுமே நாம் சில விசயங்களில் தியாகம் செய்து, கடவுள் நம்மை தேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பது, மேலும், அவர் நம் காயங்களை குணப்படுத்துவார், நம்மை மீட்பார், மேலும் ஆசிர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் நாம் தொடர வேண்டும். அன்பிற்காக நமது ஜாடியிலிருந்து நாம் எதை எடுத்து கொடுத்தாலும், அந்த ஜாடி எப்பொழுதுமே காலியாகாது.

© 2015 by Terry A. Modica