Friday, April 29, 2016

மே 1 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 1 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 15:1-2, 22-29
Ps 67:2-3, 5-6, 8
Revelation 21:10-14, 22-23
John 14:23-29

யோவான்  நற்செய்தி


23அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: 
என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.

24என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.

25உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.

26என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.

27அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.
28நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.

29இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.
(thanks to www.arulvakku.com)

இயேசுவை போல அன்பு செய்ய, நமக்கு தேவையான  வழி
இன்றைய நற்செய்தி கூறுவது போல, இயேசுவை அன்பு செய்வது என்பது, அவர் கொடுத்த கட்டளைகளை , போதனைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். நம் இதயத்தில் நாம் இதனை விரும்புவதில்லை. நாம் கிறிஸ்துவை போற்ற விரும்புகிறோம், அவரை போல நாம் நடித்து அவரை மரியாதையை செய்ய விரும்புகிறோம். இயேசு அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்ய விரும்புகிறோம். இதனை செய்யும் பொழுது, கடவுள் நம்மில் ஒளிர்கிறார் என்று நமக்கு தெரியும்.

எனினும், இது அவ்வளவு சுலபமில்லை. ஒவ்வொரு நாளும், இயேசுவை போல நாம் நடந்து கொள்வதிலும் , இயேசுவை வார்த்தையை கடைபிடிப்பதிலும் நமக்கு மிக பெரிய சவாலாக இருக்கிறது. இயேசு அது மாதிரியான நேரங்களில் எப்படி நடந்து கொண்டிருப்பார் என்று நாம் மறந்து விடுகிறோம் அல்லது , எப்படி நாம் நடந்து கொள்வது என்று நமக்கு தெரியவில்லை. சிலர் நம்மை காயபடுத்தும் பொழுதும் , அன்பு இல்லாத செயல்களில் நமக்கு காட்டும்பொழுதும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து , பாவ செயல்களாய் நாம் அவர்களிடத்தில் திருப்பி செய்கிறோம்.
நற்செய்தி வாசகங்கிளிலோ , நாம் எப்படி கிறிஸ்துவை பின் செல்வது என்று ஒவ்வொரு விசயத்திற்கும் கொடுக்கவில்லை. "எப்படி ஒரு நிகழ்வு நடந்தால், கடவுள் கட்டளை என் 12ஐ பின்பற்றவும் " என எங்கும் கொடுக்கப்படவில்லை.
அதனால் தான் , இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுப்பேன் என்று உறுதி அளித்தார். பரிசுத்த ஆவி தான் நம்மோடு இருந்து , இயேசுவும், அவரின் வழியும் நமக்கு நினைவுபடுத்துகிறார். ஒவ்வொரு சவாலையும் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று நமக்கு பரிசுத்த ஆவியானவர் அறிவுறுத்துகிறார். காலையில் எழுந்தது முதல் மாலை தூங்க போகும் வரை அவர் நமக்கு பரிசுத்த வழியை நமக்கு சொல்லி கொண்டிருக்கிறார்.
நமது பிரச்சினை எப்படி கிறிஸ்துவின் கட்டளையை பின்பற்றுவது என்பதல்ல, பரிசுத்த ஆவியின் உதவியை பெற்று கொள்ள , அவரோடு இணைந்த வாழ்வை பெற நாம் மறந்து விடுகிறோம். அல்லது பரிசுத்த ஆவியின் வழிமுறைகளை முழுமையாக அறிந்து கொள்ள நமக்கு தெரியவில்லை. கடவுள் முழு உதவி நமக்கு எப்பொழுதும்  உள்ளது, ஆனால், நம் வாழ்வின் ஒவ்வொரு சவாலையும் நாமே கையாளவேண்டும் என முடிவெடுத்து அதன்படி நடக்கிறோம்.
பரிசுத்த ஆவியின் குரலை எப்பொழுதும் கேட்டு நடந்து கொள்ள இங்கே ஒரு பயிற்சி முறை கொடுக்க பட்டுள்ளது: ஒவ்வொரு மணி நேரத்தையும் புனிதமாக்குங்கள். உங்கள் கடிகாரத்திலோ அல்லது மொபைலிலோ ஒவ்வொரு 6௦௦0 நிமிடங்களுக்கும், அலாரம் வைத்து கொண்டு, பரிசுத்த ஆவியை நினைவுபடுத்தி , அவரின் வழிகாட்டுதலோடு நடந்து கொள்ள , அவர் காட்டும் பரிசுத்த வழியில் செல்ல பயிற்சி மேற் கொள்ளுங்கள். சில வாரங்களுக்கு பிறகு , உங்களுக்கு இது பழக்கமாகி விடும், கடவுளின் பிரசன்னம் நம் அருகில் எப்பொழும் இருப்பதையும் , அவரிடமிருந்து நமக்கு எப்பொழுதும் கிடைக்கும் உதவி நமக்கு அருகே இருப்பதையும் நாம் விழிப்புணர்வுடன் புரிந்து கொள்வோம்.
© 2016 by Terry A. Modica


Friday, April 22, 2016

ஏப்ரல் 24, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஏப்ரல் 24, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் கால 5ம் ஞாயிறு
Acts 14:21-27
Ps 145:8-13
Revelation 21:1-5a
John 13:31-35
யோவான் நற்செய்தி
புதிய கட்டளை
31அவன் வெளியே போனபின் இயேசு, 
இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.
32கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.

33பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.

34ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.

35
நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்
 என்றார்.
(thanks to www.arulvakku.com)
மாட்சிமைபடுத்தும்  இறைபணி
நீங்கள் இறக்க போகிறீர்கள் என்று உங்களுக்கு தெரிந்தால், உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு என்ன  ஞானம் / அறிவை கொடுக்க விருபுவீர்கள்? உங்களிடமிருந்து மிக முக்கியமான எதனை அவர்கள் கற்று கொள்ள வேண்டும்?
இன்றைய நற்செய்தியில்  , இயேசுவிற்கு அவரது நேரம் குறைவு என்று தெரியும். முதல் வார்த்தைகளாக அவர் சிடர்களுக்கு கூறியது, தந்தை கடவுளை புகழ்ந்து , இயேசுவும் தந்தை கடவுளும் ஒன்று என்றும் அறிவுறுத்துகிறார். பிள்ளைகளே என்றும் அவர் கூறுகிறார், இயேசுவும் தந்தை கடவுள் போல சீடர்களை கூப்பிடுகிறார். இப்படி சொல்வதால் - இயேசுவும் தந்தை கடவுளும் ஒன்று தான் - அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள கோடு மறைந்துள்ளது போல தெரிகிறது.இதனை தாழ்மையுடன் இயேசு செய்கிறார். அவர் கூட மாற்றாக , "எல்லோரும் கேட்டு கொள்ளுங்கள், நான் தான் கடவுள் , என்னை வணங்குங்கள்" என்று கூறலாம், அதற்கு மாறாக, கடவுளை மகிமை படுத்தினார்.
கடவுளின் மாட்சி ஒளி கீற்றுகளாக வெளிபடுகிறது: அவரின் அன்பு, மகிழ்ச்சி, அவரின் பரிசுத்தம், அவரின் அமைதி, அவரின் ஞானம், அவரின் படைப்புகள், மேலும் பல நம்மில் வருகிறது, எப்பொழது ? அவரின் மாட்சிமையில் நாம் பங்கு கொள்ள வேண்டும் என்று விரும்புகிற பொழுது நமக்கு கிடைக்கும். கடவுளை புகழ்ந்து, மாட்சிமைபடுத்தும் பொழுது , அவர் நமக்கு கொடுக்கும் மாட்சியை நாம் திருப்பி கொடுக்கிறோம். உங்களில் எவ்வளவு மாட்சிமை ஒளிர்கிறது  ?
தந்தை கடவுளும் , இயேசுவும் ஒருவருக்கொருவர் மாட்சிமை படுத்துவதை கூறி விட்டு, இயேசு அவரின் சீடர்களுக்கு இந்த உலகின் அதி முக்கியமான ஞானத்தை, அறிவுரையை வழங்கினார். : கடவுளின் மாட்சியில், இயேசுவோடு இணைவதற்கு முக்கியமான வழி, இயேசுவை போல நாமும் அன்பு செய்ய வேண்டும்.
சுய நலமில்லாமல் கொடுக்கும் அன்பு தான் உண்மையான அன்பாகும். இயேசு நமக்காக அவரையே கொடுத்தார், மரணத்தில் கூட சுய நலமின்றி தன்னை ஆட்படுத்தி கொண்டார். இயேசுவின் பின்செல்பவர்களும், சீடர்களும், குருவானவர்களும் , திருச்சபை உறுப்பினர்களும் , அன்பினாலும், அன்பாலும், அன்பு மூலமாகவே இறைசேவை செய்தால் ஒழிய அவர்கள் குருவானவர்களாகவே , சீடர்களாகவோ , திருச்சபை உருப்பினராக இருக்க முடியாது.
கடவுளின் அன்பு முழுமையானது, தியாகத்தினால் ஆனது , அதிலிருந்து கடவுளின் மாட்சிமை பெருகுகிறது. அவரது மாட்சிமை அன்பினால் ஆனது. ஈஸ்டர் காலத்தை நாம் கொண்டாடுகின்ற பொழுது  , நற்செய்தி வாசகங்களில், இயேசுவின் பாடுகளை பற்றி ஏன் குறிப்பிடுகிறார்கள் ?  மற்ற வாசகங்களோ ஈஸ்டரை பற்றியே பேசுகின்றன : "  ``இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்'' என்று திருவெளிபாடு கூறுகிறது. மேலும், இயேசு, நம்பிக்கை துரோகத்திற்கும், சிலுவை வேதனைகளுக்கும், மரணத்திற்கும் தயாராகிறார் என நற்செய்தி குறிப்பிடுகிறது . ஏன் ?
நற்செய்தி மூலமாக இயேசு நமக்கு ஒன்றை அறிவுறுத்துகிறார். நாம் அனைவரும் இயேசுவின் இறைசேவையை தொடர்ந்து நடத்துதல் வேண்டும், இயேசு ஆரம்பித்த இவ்வுலக இறைபணியை நாம் தொடர்ந்து நடத்திட நம் அனைவரையும் அழைக்கிறார். தியாகம் செய்து நாம் ஒருவரை அன்பு செய்யும்பொழுது நம் மூலம் இயேசு உண்மையான கடவுள் என்று இந்த உலகம் அறியும். அவர் நமக்காக மரணமடைந்து , உயிர்த்தெழுந்து ,நம்மோடு வாழ்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் .

© 2016 by Terry A. Modica