Saturday, July 30, 2016

ஜூலை 31, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூலை 31, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 18ம் ஞாயிறு
Ecclesiastes 1:2; 2:21-23
Ps 90:(1) 3-6, 12-14, 17
Colossians 3:1-5, 9-11
Luke 12:13-21
லூக்கா நற்செய்தி
அறிவற்ற செல்வன் உவமை
13கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்என்றார்.

14அவர் அந்த ஆளை நோக்கி,  “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார்.

15பின்பு அவர் அவர்களை நோக்கி,  “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.
16அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்
செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.

17அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான்.

18‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’.

19பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
20ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார்.

21கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”
(Thanks to www.arulvakku.com)

கடவுளின் தாராள செல்வம்
நாம் கடவுளின் தாராள குணத்தை புரிந்து கொண்டால், நமக்கு எவ்வளவு செல்வம் இருக்கிறது என்று நமக்கு புரியும். நம்மிடம் கொஞ்சம் குறைவான பணம் வங்கியில் இருந்தாலும் , கடவுளில் நாம் பணக்காரர் தான். கடவுள் நம்மை காக்கிறார், மேலும், அக்கறையுடன் நம்மை கவனித்து கொள்கிறார். கடவுள் நமக்கு மிக பெரிய சோதனைகளிலும் , போராட்டங்களிலும் கடவுள் நமக்கு மிக அமைதியை கொடுத்து , நமக்கு ஞானம்  மற்றும் ஆற்றலை கொடுக்கிறார்.
கடவுளின் தாராள குணம் நம்மை  பொருட்செல்வத்திற்கும் அழைத்து செல்கிறது. நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் கடவுளின் ஆசிர்வாதமாக நமக்கு கிடைக்கிறது. கடவுள் நமக்கு கொடுத்த திறமைகள் மற்றும் உழைப்பின் மூலம் நமக்கு எல்லா பொருளும் கிடைக்கிறது. நம்  முயற்சியால் கிடைக்கும் அனைத்தும் கடவுளின் முயற்சியால் வருகிறது. நம் வாழ்வில் கிடைக்கும் அனைத்து நலன்களுக்கும் கடவுள் தான் மூல காராணம்.
எனினும், ஒவ்வொரு பொருளும் , அன்பளிப்பும், ஆற்றலும் நமக்கு கிடைக்கும் பொழுது அதற்குண்டான காரியாங்கள் நம்மை தாண்டியவை  கடவுளிடமிருந்து வரும் ஒவ்வொன்றும் மற்றவர்களை ஆசிவதிக்கவும் கூட பயன் பட வேண்டும். கடவுள் தாராள குணத்தை கொண்டு செல்லும் வழியாக நாம் இருக்கிறோம்.
நம்மில் உள்ளதை நாம் பகிர்ந்து கொள்ள வில்லை என்றால, நம் பாவத்திற்கு காரணமாக இருக்கிறது. நம் சுய நலத்தினால் நாம் பகிர்ந்து கொள்வதில்லை, அதன் மூலம் நாம் கர்வம் கொள்கிறோம். இதனால் என்ன பிரச்சினை என்றால், நம் சுய கர்வத்தால், கடவுளிடமிருந்து வரும் அனைத்தையும் நாம் மற்றவர்களுக்கு நிராகரிப்பதால், மற்றவர்களை காயபடுத்துகிறோம்.
நாம் நம்மையே நம்பி இருக்கும் பொழுது, நாம் பாவங்களில் விழுகிறோம். நம்மிடம் உள்ளதை வைத்தே நாம் வாழ முடியும் என்ற சுய நம்பிக்கையில் இருந்து கொண்டு, கடவுளிடம் நாம் இணைந்து  தொடராமல இருக்கும் பொழுது நாம் பாவத்தில் விழுகிறோம். கடவுள் நம்மிடம் தாராளாமாக அதிகம் கொடுத்திருக்கிறார் என்று நாம் நினைத்தாலும், நமது சுய சார்பு கொள்கை, நம்மிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்தால் நாம் ஏழையாகி விடுவோம் என்று சொல்லும்.
நாம் நமது பொருட்களை மற்றவர்கள் துன்பத்தில் இருக்கும்பொழுது சேர்த்து வைத்து இருந்தால், , இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்வது போல, நாம் கர்வமும் சுய சார்போடும் இருக்கிறோம். ஏனெனில் இவை இரண்டும், கடவுளின் தன்மைக்கு எதிரானதாக இருக்கிறது.
கடவுள் தான் நமக்கு தேவையான அனைத்தும் கொடுக்கிறார், இன்னும் கொடுத்து கொண்டிருப்பார், என்று நாம் புரிந்து கொள்ளும் பொழுது , நம்மில் தாராள குணம் வளரும். நம்மிடம் உள்ளதை நாம் கொடுக்கும் பொழுது கடவுள் கொடுத்து கொண்டே இருப்பார். உங்களிடம் உள்ள அதிகமானது எது (பணம் , சந்தோசம், ஞானம் , அனுபவ அறிவு ) , சுற்றி பாருங்கள் , யாருக்கு உங்கள் பொருள் தேவை படுகிறது?
நம்மிடம் உள்ளது அனைத்தும் கடவுளிடமிருந்து வந்தவை , மேலும் அதனை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் . இது தான் இறையரசின் பொருளாதார கொள்கை. கிறிஸ்துவின் உடல் , நாம் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் பொழுது தான் , பரவும். இதனை தான் நாம் புனிதர்களின் கூட்டுறவு என்கிறோம்.

© 2016 by Terry A. Modica

Saturday, July 23, 2016

24 ஜூலை 2016, ஞாயிறு நற்செய்தி மறையுரை

24 ஜூலை  2016, ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு
Genesis 18:20-32
Ps 138:1-3, 6-8
Colossians 2:12-14
Luke 11:1-13
லூக்கா  நற்செய்தி

இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தல்
(மத் 6:9 - 15; 7:7 - 11)
1இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்என்றார்.

2அவர் அவர்களிடம், 
நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்:
தந்தையே, உமது பெயர்
தூயதெனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
3எங்கள் அன்றாட உணவை
நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.
4எங்களுக்கு எதிராகக் குற்றம்
செய்வோர் அனைவரையும்
நாங்கள் மன்னிப்பதால் எங்கள்
பாவங்களையும் மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு
உட்படுத்தாதேயும்.
[தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்]
என்று கற்பித்தார்.
5மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: 
உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு.

6என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லைஎன்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

7உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாதுஎன்பார்.

8எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

9மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்.

10ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

11பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?

12முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?

13தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!
(thanks to www.arulvakku.com)

விசுவாசத்தோடு ஜெபிப்பது எப்படி ?
இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு எப்படி விசுவாசத்துடன் ஜெபம் செய்ய வேண்டும் என போதிக்கிறார். மேலும் நீங்கள் கூர்ந்து வாசித்தால், நாம் கேட்பது அனைத்தும் கிடைக்கும் என்பதை அவர் சொல்லவில்லை. எல்லாமே நமக்கு நல்லதில்லை. "உணவு" என்று இந்த நற்செய்தியில் வரும் அனைத்தும் பரிசுத்த வாழ்வை குறிக்கிறது. இயேசு தான் "வாழ்வின் உணவு" . பரிசுத்த ஆவியின் அன்பளிப்பு நமக்கு கிடைக்கும் பரிசுத்த வாழ்வு.
நற்செய்தியின் உவமையில், நண்பராக வருவபவர் கடவுளின் நண்பர், அவர் ஒன்றும் புதியவர் இல்லை. மற்ற நண்பரோடு தனது உணவை பகிர்ந்து கொள்ள விரும்பினார். கடவுளின் நட்பை (மூன்று ரொட்டி துண்டுகள்-- திரித்துவ கடவுள்)  ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்கள் பகிர்ந்து கொள்ள விரும்புவதை காட்டுகிறது. ஆனால் மற்றவர்களோ அதனை பெற   தகுதி அடையவில்லை.
நம்மிடம் இல்லாதாதை பெற கடவுளின் இருதயத்திடம் கேட்கும்பொழுது , தந்தை கடவுள் எல்லாமும் நிறைந்த பரிசுத்த ஆவியை நமக்கு கொடுக்கிறார், அது மட்டும், ஒவ்வொரு முறை நாம் ஜெபம் செய்யும் பொழுது, பரிசுத்த ஆவியானவர் நம்மை தந்தை கடவுளிடமும் , இயேசுவிடமும் இணைக்கிறார். அதனால் ஒவ்வொரு ஜெபமும் நமது பரிசுத்தத்தை அதிகமாக்குகிறது, மேலும், நம்மை கடவுளிடம் நெருங்கி அழைத்து செல்கிறது, அதன் மூலம் இயேசுவை போல நம்மை மாற்றுகிறது. ஆனால் பரிசுத்தம் அவ்வளவு சீக்கிரத்தில் சுலபமாக வந்து விடுவதில்லை. நமது ஜெப வாழ்வில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டு இருக்க வேண்டும். கடவுளின் ஆவியை நம்பி எப்பொழுதும் அவரின் துணை வேண்டி , நமது சோதனைகளை எதிர்கொள்ளும் ஆற்றலை அவரிடம் வேண்டி தொடர்ந்து பரிசுத்த வாழ்வில் பயணம் செய்ய வேண்டும்.
கடவுளிடம் நாம் என்ன கேட்டாலும், பொருளுதவி கேட்டாலும், நமது ஆசைகள் எது கேட்டாலும், கடவுள் அதன் மூலம் நமது ஆன்மா பயன் பட வேண்டும் என ஆசைபடுகிறார். "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு கொடுத்தருளும்" என்று தான் நாம் கேட்கிறோம். தொடர்ந்து ஜெபியுங்கள், ஒரே ராத்திரியில் கடவுளின் உணவு கிடைத்து விடுவதில்லை (நாம் மிகவும் மெதுவாக கற்று கொள்பவர்கள்)
சாத்தான் தான் நாம் கேட்கும் அனைத்து உடனே கிடைத்து விடும் என்று சொல்லி நம்மை அழைக்கிறது. இந்த புதிய யுகத்தில்,துரித உணவு கலாசாரத்தில் , நாம் தவறான நம்பிக்கை கொண்டு இருக்கிறோம். இந்த காலத்தில், பரிசுத்த வாழ்வின் வளர்ச்சி தடை பட்டு கொண்டு இருக்கிறது. பரிசுத்த ஆவி தான் நமக்கு பரிசுத்த வாழ்வை கொடுப்பவர் என்பதை நாம் நம்ப வேண்டும். பரிசுத்த வாழ்வு வாழ்வதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதால் பல, சுலபமான சாத்தானின் வழியில் சென்று விடுகிறார்கள்.
நமது ஞானஸ்நானத்தில் பரிசுத்த ஆவியை நாம் ஏற்கனவே பெற்று விட்டோம். நமக்கு தேவையான அனைத்தும் பரிசுத்த ஆவியிடம் போதுமான அளவிற்கு இருக்கிறது, அதனை நாம் கேட்க வேண்டும் . எனினும், கடவுளின் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலில் வாழ்வதற்கு , நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும், நமது பாவங்களை கண்டறிந்து , மனம்  வருந்தி, நமது சுய நலன்களை களைந்து எறிந்து, பரிசுத்த ஆவியின் பரிசுத்தத்திற்கு நம்மை ஒப்படைப்போம்.


© 2016 by Terry A. Modica