Saturday, May 27, 2017

மே 28 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 28, 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் விண்ணேற்பு பெருவிழா
Acts 1:1-11
Ps 47:2-3, 6-9
Ephesians 1:17-23
Matthew 28:16-20

மத்தேயு நற்செய்தி
இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49; யோவா 20:19 - 23; திப 1:6 - 8)
16பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.

17அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.

18இயேசு அவர்களை அணுகி
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.
19எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
 என்று கூறினார்
(THANKS to www.arulvakku.com)
கிறிஸ்துவை பின் செல்வதும், இன்னும் அதிகம் இறைபணி செய்ய நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய நற்செய்தியில், இயேசு மிக பெரிய கட்டளையை கொடுக்கிறார். இன்னும் ஒவ்வொரு திருப்பலி முடிவிலும் அதே கட்டளை குருவானவர் மூலம் நமக்கு கொடுக்கபடுகிறது.   " நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்"
சீடர் ஒரு மாணவர் ஆவார். கிறிஸ்துவை அப்படியே பின்பற்றுபவர்களை நினைத்து கொள்ளுங்கள் , இயேசுவை பின்பற்றுகிறேன் என்று சொல்பவர்கள், எப்படி கிறிஸ்துவை போல வாழ வேண்டும் என்பதை இன்னும் கற்று கொள்ளாமல் இருப்பவர்கள் , அவர்களின் இறை கற்றலை நிறுத்தி விட்டவர்கள், பற்றி நினைத்து கொள்ளுங்கள். அவர்கள் விசுவாசம் மட்டும் இந்த உலகை மாற்றி விட போவதில்லை. ஏனெனில் அவர்கள் இந்த உலக வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், கிறிஸ்துவின் பிரசன்னமாக இந்த உலகில் இருப்பதில்லை.  இயேசு எந்த அளவிற்கு இவர்கள் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்று அறியாமல் கவலையோடு இருப்பவர்கள். கிறிஸ்துவை வெளிபடுத்த அவர்களுக்கு இன்னும் போதுமான பக்குவம் அடையவில்லை.

அவர்களுக்கெல்லாம் சீடர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என அழைக்கபட்டுள்ளிர்கள். நீங்கள் சீடர்களாக இந்த இறைசெயல்களை செய்ய கட்டளை இட்டுள்ளார். அதனால், அவை அனைத்துமே செய்ய முடியாதவை அல்ல. இந்த "கட்டளை" என்ற வார்த்தையை எடுத்து விட்டு,  இயேசுவோடு இணைந்து இறைபணி என்று பாருங்கள். விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது."  என்று இயேசு கூறுகிறார், அதனால், இயேசுவின் இறைபணியில் நாமும் பங்கு கொண்டு செய்யும்பொழுது , அவரின் ஆற்றலில் நாமும் கொஞ்சம் எடுத்து கொள்கிறோம்.
கிறிஸ்துவை  சாதாரணமாக  பின்பற்றுபவர்களாக  நாம் இருந்தால், மேலும் கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியில் முழுதும் வாழ, நாம் கற்று கொண்டிருந்தால் , இயேசு நமக்கு எந்த வார்த்தைகளை மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும் , எந்த மாதிரியான சூழ் நிலையில் அவர்களை நாம் அணுக வேண்டும் என்றும், நமக்கு கற்று கொடுப்பார்.மேலும் நமக்கு அவர் கொடுத்த கட்டளையை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இயேசு நமக்கு கற்று கொடுப்பார்.

இயேசுவோடு இணைந்து, நம் அருகில் உள்ளவர்கள் இருதயத்தை கிறிஸ்துவின் பின்பற்றுபவர்களாக நம்மால் மாற்ற முடியும். நம் எடுத்து காட்டான வாழ்வால் முதலில் அவர்களை மாற்ற முடியும். மேலும் ஏன் நாம் கிறிஸ்துவை பின் பற்றுகிறோம் என்று அவர்களுக்கு விளக்கி சொல்ல வேண்டும். கடவுளின் அன்பை அவர்களும் அறியும் படி நாம் எடுத்து சொல்ல வேண்டும். கடவுளின் கட்டளைகளை, மற்றும் கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் நாம் எடுத்து சொல்ல வேண்டும்.  ,

" இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
என்று இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதே நமக்கு மிக பெரிய சக்தி கொடுக்கும்.

© 2017 by Terry A. Modica

Saturday, May 20, 2017

மே 21, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே  21, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 8:5-8, 14-17
Ps 66:1-7, 16, 20
1 Peter 3:15-18
John 14:15-21
யோவான் நற்செய்தி

15நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.

16உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.

17அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.

18நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்.

19இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்.

20நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

21என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.
(thanks to www.arulvakku.com)

இயேசு உங்களுக்கு  வல்லமையுள்ள துனையை தருகிறார்.
இன்றைய நற்செய்தியில், பரிசுத்த ஆவி நம் துணை, நமக்கு ஆலோசகராகவும், நம்மமோடு எப்பொழுதும் இருப்பவர என்றும் இயேசு நமக்கு கூ றுகிறார். கிரேக்க மொழியில், இதற்கு அர்த்தம் "கூடவே இருப்பவர்" என்பது ஆகும். மேலும் "தேற்றுபவர்" என்றும் "அறிவாளன்" என்ற அர்த்தத்தையும் குறிக்கும். இன்னும், வழக்குரைஞர், நீதி மன்ற துணையாளர் என்றும் அர்த்தம் கொள்ளபடுகிறது. நம்மை யாராவது தவறான குற்றம் சாட்டினால், தவறாக கண்டனம் செய்யப்படும்பொழுது நமக்காக பரிசுத்த ஆவியானவர் வாதிடிகிறார்.

இயேசு பரிசுத்த ஆவியை "உண்மையை வெளிபடுத்தும் தூய ஆவியார்" என்று குறிப்பிடுவதை உற்று நோக்குங்கள். மற்றவர்கள் நம்மை பற்றி தவறாக என்ன பேசினாலும், நம்மை பற்றி தவறான எண்ணங்கள் பல இருந்தாலும், கடவுளுக்கு உண்மை தெரியும். அவர்களின் தவறான நடத்தையிலிருந்து கடவுளின் உண்மை நம்மை விடுவிக்கும். கடவுள் நம் மேல் கொண்ட எண்ணம் தான் முக்கியம், நாம் எண்ணுவதை விட கடவுள் நம் மேல் மேலான எண்ணம் நர்மதிப்பும் கொண்டவர்.
அளவிற்கு அதிகமாகவே , நாம் நம் மேல் தவறான மதிப்பிடு கொண்டுள்ளோம். அதனால் தான் நாம் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று அதிகம் கவலை படுகிறோம். நாம் மனம் உவந்து, நம் பாவங்களை எண்ணி, நேர்மையாக ஒப்பு கொண்டு, அதற்காக மனம் வருந்தி, திருப்பலியின் பாவ மன்னிப்பு ஜெபத்திலும்,  அல்லது பாவ சங்கீர்த்தனம் செய்தும் இயேசுவோடு நாம் மீண்டும் உறவை புதுபித்து கொண்டால், இயேசு பாவிகளுக்கு சொன்னது போல :" நானும் தன்டனை கொடுக்க மாட்டேன், இனிமேல் பாவம் செய்யாதே, போ " என்று நம்மிடம் சொல்வார்.
உங்களை யாராவது தவறாக நினைத்து விடும் பொழுது, இயேசு அங்கே நேரிடையாக வரவேண்டும் என்றும் , உங்களை அந்த அநிதி சூழ் நிலையில் இருந்து மீட்க வேண்டும் என்று சில நேரங்களில் விரும்புகிறோம் அல்லவா? இயேசு சொல்கிறார், நம்மை அனாதைகளாக  விட்டு விடமாட்டேன் என்கிறார். -- அவரின் பரிசுத்த ஆவியானவர் நம்மோடு எப்பொழுதும் இருப்பவர், நம்மை காக்க வேண்டிய நேரத்திலு காத்து, நம் நல்ல குணாதியங்களை சொல்லி, மற்றவர்களிடமிருந்து நம்மை காப்பார்.
நாம் பாவம் செய்தால் கூட, உண்மையின் ஆவி, நமக்காக மோட்சத்தின் நீதிபதியிடம் பரிந்து பேசும். "விலைமதிப்பற்ற இந்த குழந்தை உண்மையாகவே பரிசுத்தமாக இருக்க விரும்புகிறது " என்று சொல்லும். நம்மிடம் அதே ஆவியானவர், "நான் உனக்கு பரிசுத்தமாக வளரவும் , பாவங்களை விட்டு விலகவும் சொல்லி தருகிறேன் " என்று சொல்கிறார். மற்றவர்களிடம் "நீங்கள் என்னை அன்பு செய்தால், என் நண்பன் இவரையும் அன்பு செய்யுங்கள்" என்று கூறுகிறார்.
© 2017 by Terry A. Modica




Friday, May 12, 2017

மே 14 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே  14 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
பாஸ்கா காலத்தின் 5ம்  ஞாயிறு
Acts 6:1-7
Ps 33:1-2, 4-5, 18-19 (with 22)
1 Peter 2:4-9
John 14:1-12
யோவான்  நற்செய்தி

1மீண்டும் இயேசு, “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.
2தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்என்று சொல்லியிருப்பேனா?
3நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.

4 நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்”  என்றார்.

5தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்றார்.

6இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
7 நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்
 என்றார்.

8அப்போது பிலிப்பு, அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்என்றார்.

9இயேசு அவரிடம் கூறியது: 
பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்என்று நீ எப்படிக் கேட்கலாம்?

10நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.

11நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.

12நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்
(thanks to www.arulvakku.com)
இயேசுவை விட பெரிய செயல்கள் நம்மால் எப்படி/ஏன்  செய்ய முடியும்
இன்றைய நற்செய்தியில், கடைசி வரிகள் மிகவும் அதிர்ச்சி தரகூடிய வசனங்களோடு முடிகிறது: "12நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். "   இதன் அர்த்தம் என்ன ? இயேசு செய்வதை போல , -- இன்னும் அதற்கு மேலே -- நம்மால் எப்படி செய்ய முடியும் ?
இதற்கான பதில் அந்த அதிகாரம் அனைத்திற்குமான அர்த்தத்தில் உள்ளது. இயேசு அவர் தந்தையின் உடன் உள்ள நெருங்கிய தொடர்பை நமக்கு விளக்கி சொல்கிறார். நன்றாக நினைவில் கொள்ளுங்கள், இயேசு இன்னும் மனிதனாகவும் தெய்வமாகவும் இருக்கிறார். இந்த வார்த்தைகளையும் நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். மனிதனின் மகனாக இயேசு அவர் தந்தைக்கு எவ்வாறு பணிவிடை செய்தார்? கடவுளின் மாகனாக அவர் தந்தைக்கு எவ்வாறு பணிவிடை செய்தார் ?

"நான் செய்யும் செயலகள் " மனிதனாக அவர் சொல்லும் செயல்கள்: எல்லோரையும் அன்பு செய்தார், எல்லோருக்கும் போதனை செய்தார், அவரிடம் கேட்க விருப்பம் உள்ளவர்களோடு, உரையாடினார். மற்றவர்களோடு சேர்ந்து விருந்தில் கலந்து கொண்டார். அவர் தனது வேளையில் கடின உழைப்போடு செய்தார், அவர் இறைபணியை  தீவிரமாக மேற்கொண்டார். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்" -- பரிசுத்த மனிதனாக நாம் வாழ இயேசு எடுத்து காட்டாக இருக்கிறார். இயேசு மற்றவர்களை அன்பு செய்வது போல , நாமும் அன்பு செய்வோம் விசுவாசத்தை மற்றவர்களுக்கு போதிப்போம். யாராவது அவர்கள் கவலையை பகிர்ந்து கொள்ளும் பொழுது, நாம் கூர்ந்து கேட்போம், நமது வேளைகளில் கடின வேலை செய்வோம் . தேவையானோர்க்கு உதவி செய்வோம். இன்னும் பல செயல்கள் இயேசுவை போல செய்வோம். இவைஎல்லாம் இயற்கையை தாண்டிய செயல்கள் இல்லை. நாம் யாராக இருக்கிறோம் என்பது தான் முக்கியம்: அன்புள்ள கடவுள் தந்தையின் மனித குழந்தைகளாக இருக்கிறோம்.
"பெரிய செயல்கள்"  தெய்வீக   கடவுளிடமிருந்து வருகிறது: இயேசு தந்தையின் தெய்வீக செயல்களை இங்கே செய்தார். "என் மேல் நம்பிக்கை கொள்பவர் அனைவரும் தந்தையின் செயல்களை செய்வர்"  தந்தையின் வழியே நாம் சென்று நாமும் இவ்வுலகில் அற்புதங்கள் நிகழ்த்த அழைக்கப்ட்டுள்ளோம்.
இயேசு நம்மோடு மனிதனாக இணைத்து கொண்ட பொழுது, இந்த மனிதனுக்குன்டான வரம்புகளை விட்டு எப்படி மேலே வருவது நமக்கு காட்டினார். இப்போது, ஞானஸ்நானம் மூலமாகவும், திவ்ய நற்கருணை மூலமாகவும் , உறுதி பூசுதல் மூலமாகவும் , நாம் கிறிஸ்துவின் தெய்வீகத்தோடு இணைந்து, தந்தையின் பணிகளை நாம் இங்கே தொடர்வோம். திவ்ய நற்கருணை மூலம் எந்த ஒரு பிரிவும் கிறிஸ்துவோடு இணைந்து விடும். அன்பு செய்ய முடியாதவர்களையும் அன்பு செய்ய முடியும் , தெய்வீகத்தின் வழியாக நாம் இருக்க முடியும். நம்மில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் , கடவுள் கேட்கும் அனைத்தும் நம்மால் செய்ய முடியும்.   

© 2017 by Terry A. Modica