Friday, November 23, 2018

நவம்பர் 25 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை



நவம்பர் 25 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை
கிறிஸ்து அரசர் பெருவிழா
Daniel 7:13-14
Ps 93:1-2, 5
Revelation 1:5-8
John 18:33b-37
யோவான் நற்செய்தி
33பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்.
34இயேசு மறுமொழியாக
நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?”
 என்று கேட்டார்.
35அதற்கு பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?” என்று கேட்டான்.

36இயேசு மறுமொழியாக
எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல
 என்றார்.

37பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு
அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்
 என்றார்.

38பிலாத்து அவரிடம், “உண்மையா? அது என்ன?” என்று கேட்டான்.
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்து அரசர் - அனைத்துலக அரசர் பெருவிழா
கிறிஸ்து தான் அரசரா என்ற கேள்வி இன்றைய நற்செய்தியில் வந்த பொழுது, இயேசு  தெய்வீக அரசரை பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள உதவுகிறார். அவர் அரசர் இல்லை என்று சொல்லாமால், ". உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்" , அவர் ஒன்றும் இந்த உலகத்தின் அல்லது ஒரு நாட்டின் அரசர் அல்ல; அவர் உண்மையின் அரசர், உண்மையை ஆட்சி செய்பவர்.

இயேசு நமது போதகர் என்று நாம் ஏற்று கொள்ளாமல், இந்த உலக பொய்யான தகவலை கொண்டு, போலியான வாழ்வில் நாம் இருந்தோமானால், இயேசு தான் உண்மையின் போதகர் என்று இவைகள் அனைத்தும் மறைத்து விடும். இந்த உலக பொய்கள் அனைத்தும் சாத்தானின் முனைப்பில் நடப்பவை. சாத்தான் இவ்வுலக ஆட்சியை ஆட்சி செய்கிறது என்ற எண்ணமே சாத்தான் உண்மையை மறைக்கிறது. உண்மையில் இப்படி நடக்கவில்லை. இயேசு இந்த உலகிற்கு வந்து சாத்தானின் அதிகாரங்களை அழித்து, உயிரினம் அனைத்தையும் அவரின் இறைய்ரசிற்கு அழைத்து சென்றுள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் அரசமைப்பை ஏற்று கொண்டவர்கள் அனைவரும், அவரின் குரலை கேட்டு , உண்மையில் வாழ்வர் .+
நாம் பாவம் செய்யும் பொழுது, நாம் உண்மையின் நிலைமையை புரிந்து கொள்ளாததால் நாம் பாவம் செய்கிறோம். இயேசு இன்னும் இவ்வுலகின் முழு அரசராக வில்லை.
எடுத்து காட்டாக, யாராவது உங்களிடம் ஒரு உதவி கேட்டு, அதனை உங்களால் கொடுக்க முடியாத தருணத்தை நினைத்து கொள்ளுங்கள்.  கோவில் கட்டுவதற்கு தேவையான பணமாக இருக்கலாம், நோயுற்ற சகோதரருக்கு உத வேண்டி இருக்கலாம். அல்லது உங்களோடு வேலை செய்பவர், உங்கள் அளவிற்கு விசுவாசம் இல்லாதவராக இருக்கலாம். அல்லது வயதான பெற்றோர்கள் உங்கள் உதவியை நாடி இருக்கலாம்.
அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய உங்களிடம் போதுமான வசதிகள் இல்லை? நீங்கள் சோர்ந்து போய் இருகிறீர்களா ? உங்கள் சுமையே உங்களை அழுத்துகிறதா?  நம் உடல் சார்ந்து யோசிக்கும் பொழுது, நாம் அடுத்தவர்களுக்கு உதவ போனால், நாம் எதுவும் சந்தோசமாக இருக்க முடியாது என்று நினைக்க தோணும். இது தான் உண்மையை மறைக்கும் சாத்தானின் வேலை.  நம் சொந்த வேலைகளை பார்த்து கொண்டு இருந்தாலே , நமக்கு மகிழ்ச்சி என்று சாத்தான் அடுத்தவருக்கு சேவை செய்யாமல் இருக்க செய்யும்.
இயேசுவின் குரலை கேட்டு, நம் வாழ்வை மாற்றினால், அது தான் சந்தோசமான வாழ்க்கை தரும். இது தான் உண்மை.
"நல்ல சமாரியன் போல இருங்கள், மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள், " "இன்னும் சில தூரம் செல்லுங்கள்" என்று இயேசு சொல்கிறார்.  அவரின் போதனைகளை , உண்மையை நாம் நம்ப வேண்டும்.
கடவுளின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற, நமது புரிதல் இன்னும் வளரும். நமது இறைபணியில் இன்னும் அதிகம் நாம் கவனம் செலுத்த, கடவுளை பற்றிய நமது புரிதலும் சந்தோசமும் அதிகரிக்கும். நமது இறைபணியில் கிடைக்கும் விளைவுகளை, அதனால் வரும் ரிசல்ட் நமக்கு மிக பெரிய சந்தோசம் வரும். ஆனால் பாவம் செய்யும்போது , இந்த ரிசல்டை நாம் பார்ப்பதில்லை. இதனை தான் கிறிஸ்து இங்கே சொல்கிறார். அவரின் ஆட்சியில், பரிசுத்த ஆவியின் ஞானத்துடன் , இந்த பாவ வாழ்வை விட்டு நாம் வெளி வர முடியும்.
© 2018 by Terry A. Modica

Friday, November 16, 2018

நவம்பர் 18 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை


நவம்பர் 18 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு
Daniel 12:1-3
Ps 16:5, 8-11
Hebrews 10:11-14, 18
Mark 13:24-32

மாற்கு நற்செய்தி

மானிடமகன் வருகை
(
மத் 24:29-31; லூக் 21:25-28)
24“அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.

25விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.

26அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.

27பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
அத்தி மர உவமை
(
மத் 24:32-35; லூக் 21:29-33)
28“அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.

29அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

30இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

31விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.
மானிடமகன் வரும் நாளும் வேளையும்
(
மத் 24:36-44)
32“ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை ?
உங்களுக்கு தீராத பிரச்சினை எதுவும் இருக்கிறதா? இயேசு எங்கே? இன்றைய ஞாயிறின் நற்செய்தியில் இயேசு அவரின் இரண்டாம் வருகையை பற்றி பேசுகிறார். ஆனால் அவரின் முதல் வருகையே இன்னும் முடிக்கவில்லை.! அவரின் சீடர்களுக்கு குழப்பத்தை உண்டு பண்ணியது.
இயேசு இறந்த பிறகும், அவர் உயிர்த்தேழுந்தும், மோட்சத்திற்கு எழுந்தருளியும் , பார்த்த சீடர்கள்,  இன்னும் குழப்பமான மனதோடு அவர்கள் இருந்தார்கள். "இந்த தலைமுறை" கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நிறைவேறும் வரை அழியாது என்று அவர் சொன்ன்னதை இன்னும் நினைவில் வைத்தருந்தனர். இருந்தும் காலங்கள் ஓடின. அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவராக இறந்தனர். இயேசு இன்னும் மேகத்தின் நடுவே வரவில்லை.   இந்த வாழ்வின் துயரம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
உங்கள் வாழ்வில் இன்னும் தீர்க்கபடாத பிரச்சினை ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இயேசு இரண்டாம் முறை வந்து அணைத்து சாத்தான்களையும் ஒழித்து விட வேண்டும் என ஆசை  படுகிறீர்களா? இயேசு என்ன சொன்னார் என்று பாருங்கள்: "இந்த விஷயங்கள் நடக்கும் பொழுது, நான் நெருங்கி விட்டேன் , கதவின் அருகில் இருக்கிறேன்"  ஆனால் அவர் ஒரு தேதியை சொல்ல வில்லை. அவர் சீடர்களுக்கும் சரி, நமக்கும் சரி, கடவுளின் நேரத்தை, ஒரு துப்பு கூட கொடுக்கவில்லை. (அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது)  இயேசு இங்கே என்ன சொல்ல வருகிறார். ?
அவரின் அருகாமை!
கடந்த 2000ம் வருடங்களாக, நாம் அனைவரும் "இந்த தலைமுறையின்" மக்களாக இருக்கிறோம். இயேசுவின் இரண்டாம்  வருகை வரும் வரை நாம் ஒழிந்து போகமாட்டோம். கிறிஸ்து மனிதராக இருந்த தலைமுறையை சார்ந்தவர்கள் கிறிஸ்துவின் உடலாக இந்த திருச்சபையில் நாம் இருக்கிறோம். கடவுளின் மகனின் தியாகத்தால், நாம் தந்தை கடவுளின் மகனாக இந்த தலைமுறையின் குழந்தைகளாக உள்ளோம்.
மீட்பின் இறுதி நாட்கள் முதல் பரிசுத்த ஆவியின் கொடை பெற்ற நாளில் இருந்து துவங்குகிறது. இந்த காலம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை தொடரும். இது பரிசுத்த ஆவியின் காலம் ஆகும். இங்கே கிறிஸ்துவின் இறைபணி நம் மூலம், பரிசுத்த ஆவியுடன் தொடர்கிறது.
அத்தி மர கதையின் மூலம் நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம், கோடை காலம் வரும்போது நாம் பிரித்தறியும் ஆற்றல் பெற வேண்டும். இதையே மாற்றி சொல்வதனால், நல்ல நேரத்தையும், கேட்ட நேரத்தையும் பிரித்தறிதல் வேண்டும். இயேசு அருகில் இருக்கிறாரா என்பதை  அறிதல் வேண்டும். திவ்ய நற்கருணையில் நம்மோடு அவர் இருப்பதை அறிதல் வேண்டும். மற்ற எல்லா நேரங்களிலும் பரிசுத்த ஆவி நம்மோடு இருக்கிறார்.
இயேசு உங்களின் அடுத்த முயற்சியின் வாயிலில் இருக்கிறார், மோட்சத்தின் பயணத்தில் நமது அடுத்த தடத்தில் இயேசு இருக்கிறார். வாயில் கதவு திரைப்பட வேண்டும். அதன் மூலம் நாம் உள்ளே செல்ல முடியும். இயேசு தான் அந்த கதவை திறக்கிறார். பரிசுத்தத்தின் வாயில், அன்பின் வாயில் அது தான்.  அதனுள் சென்று நமக்கான இறைபணியை இந்த உலகில் தொடர்வோம்.
© 2018 by Terry A. Modica