Saturday, March 31, 2007

குருத்து ஞாயிறு april 1

http://www.gnm.org/

குருத்து ஞாயிறுடன் இந்த மிக பெரிய புனித வாரம் தொடங்குகிறது. இந்த தொடக்கம், உஙகளயும், யேசு கிறிஸ்துவையும், அவரின் அளப்பிடற்கரிய அன்பையும் இணைகும் அனுபவமாக இருக்குமா? இன்றைய நற்செய்தியில் மிக முக்கிய சொற்றொடர் வரும், அது என்னவென்றால், "இது ஆண்டவருக்கு தேவை" (லூக்: 19:31), இச்சொற்றொடரே ஆண்டவரோடு இணையும் உன்னத அனுபவத்தை பறை சாற்றும்.

யேசு கழுதை சவாரி செய்ய அதனை எப்படி கொண்டுவந்தார்? என்று நற்செய்தி ஆசிரியர் ஏன் எழுதினார் என்ன நினைகிறீர்கள்? நாம் ஒவ்வொருவரும், நம்முடன் ஒரு 'கழுதையை' நம் வாழ்க்கையில் ஏதொ ஒரு விதத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இது நம்மோடு இருக்கும் எதுவேனாலும் இருக்கலாம்.ஆனால் அது யேசுவோடு பகிர்ந்து கொள்ளபடாதது. இந்த 'கழுதை குட்டி', நம்முடைய சொத்து, பணம், திறமை, ஆற்றல், புதியன கண்டுபிடித்தல், நமது நேரம், இன்னும் பல. இதுவெல்லாம் ஆண்டவருக்கு தேவையாயிருக்கிறது!. ஆனால், நாம் இந்த எல்லாவிதமான நமது சொந்தஙகளை, திறமைகளை, நாம் நமது சொந்த பயனுக்காக உபயோகப்படுத்துகிறோம். இவையெலலாம், கிறிஸ்துவிற்கு அவரை பெருமைபடுத்தவும், போற்றவும், அன்பளிப்பாக ஆக்கமுடியும்.

குருத்து ஞாயிறு நமக்கு தரும் போதணை: நாம் கிறிஸ்துவை போற்றவேண்டும், அவரை பெருமைபடுத்தவேண்டும், அவருடைய அளப்பிற்கரிய அன்பிற்காக, அதனை அவர் சிலுவையில் காட்டுகிறார். வேறு யார், உனக்காக இறப்பார்? அவ்வளவு வேதனையிலும் மற்றும் வலியிலும். யேசு அவரின் உடலையும், இரத்தத்தையும் தியாகம் செய்து, நம் பாவங்களுக்கு நமக்கு கிடைக்க வேண்டிய தண்டனையை அவர் ஏற்றுகொண்டார். நாம் இதற்காக, ஒவ்வொரு ஞாயிறும், இறைவனுக்கு ஓசான சொல்லி அவரை மகிமைபடுத்தி சந்தோசப்படுவோம். திவ்ய நற்கருணையில் அவரோட இணைந்து, அவரின் அன்போடு நாமும் நமது அன்பை வெளிபடுத்துவோம். இத்திவ்ய நற்கருணையில், நாம் ஏன், காதலர்கள் அவர்கள் துணையோடு இனைவது போல், நாம் நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதில்லை? ஏனெனில், நமது 'சுயம் (அ) கழுதை' இன்னும் நம்மோடு கட்டப்பட்டிருக்கிறது.

நம்முடைய 'திறமைகளை , ஆற்றல்களை', இறைவனோடு பகிர்ந்துகொள்ள வேண்டும், கடவுளரசின் திட்டத்தில் ஈடுபடவேண்டும் என கேட்டு அவர்களுடைய சீடர்களை அனுப்பிகிறார்.


இன்றைய சிந்தனைக்கு :

உன் வாழ்க்கையில், உன்னிடம் உள்ள 'திறமைகள், ஆற்றல்கள்' அனைத்தும் பட்டியலிடு. அதில் எந்த ஆற்றலை நல்ல உபயோகத்திற்கு ஈடுபட யேசு அழைக்கிறார். எந்த மாதிரியான கெட்ட எண்ணங்கள், தீய உபயோகங்கள் யேசு குணப்படுத்த வேண்டும், அவர் மன்னிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் இறைவழிபாட்டில், இந்த தீய விசயஙகளை, உங்களோடு கட்டப்பட்டிருக்கும் திறமைகளை அவிழ்த்து இறைவனிடம் கையளியுங்கள். யேசு எவ்வளவு சந்தோசப்படுவார் என்று பாருஙகள்.


மற்றுமோர் சிந்தனை:

ஏதாவது ஒரு 'திறமையை', யேசுவுக்கு தேவயானது எது என்று தேர்வு செய். அதனை யேசுவிடம் சமர்ப்பித்து, அதன் மூலம் அவரின் பெரிய வெள்ளியை முழுமையாக்கு.

Thursday, March 29, 2007

March 30 , Friday , Bible & Reflection (sermon)

(www.gnm.org)
உண்மையான விசுவாசதிற்கு அடியெடுத்து வைப்போம்

யேசுவை ஏன் விசுவசிக்கிறீர்கள்? "அவர்கள் பெறும் நல்ல கணிகளை கொண்டே அதனை அறிவார்கள்" (மத்தேயு: 7:16௨0), என ஏசு தன்னுடய பழைய அருளுரையில் சொல்கிறார். "என் செயல்களை கொண்டே, நல்ல கணி தரும் அடையாளங்களால், என்னை அறிவாய்" (இன்றைய நற்செய்தியில்). மக்கள் நல்ல கணிகள் கொடுக்காத விசயத்தில், நம்பிக்கை வைக்க மாட்டார்கள். அல்லது வேறு மாதிரி சொல்வோமானால், மதிப்பில்லாத பொருட்களில் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். உங்களை சுற்றி பாருங்கள், கோவிலுக்கு செல்லாதவர்கள், யேசுவிடம் நம்பிக்கை வைக்காதவர்கள் யாரெனில், உன்மையான விசுவாச வாழ்வின் மதிப்பை அறியாதவர்கள்.
எம்மாதிர்யான முக்கியத்துவத்தை அல்லது எவ்வளவு மதிப்பை யேசுவில் நீ காண்கிறாய்? அதிக மக்கள் கத்தோலிக்கராக இருக்கிறார்கள்,ஏனென்றால் அவர்கள் பெற்றோர் கத்தோலிக்கராக இருந்தார்கள். கொவிலுக்கு செல்பவர்கள் எல்லாம் தான் கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்கிறார்கள், ஆனால் கோவிலுக்கு செல்வது அவர்கள் வாழ்வை, கிறிஸ்துவின் பிரசன்னதோடு மாற்றுவதில்லை, ஏதோ ஒன்று விடுபடுகிறது. அது என்னவெனில், நற்கருணை பெறுவது யேசுவின் உடலோடு நாம் இணைகிறோம் என்பதனை இன்னும் அவர்கள் அறியவில்லை. ஏன் கோவிலுக்கு செல்கிறார்கள் என்றால், போகவிடில் நரகத்திற்கு என்ற பயம்.

நாம் பலமுறை, நம்முடைய யேசுவின் மேல் உள்ள நம்பிக்கை மற்றும் யேசுவை போலவே மாற நாம் ஆசைபடுவதயும் வெளிக்காட்டவேண்டிய சோதனைக்குள்ளாகபடுகிறோம். நாம் நமது விசுவாசத்தால் இம்சைப்படும்போதோ அல்லது கடவுள் நம்மை கைவிடுவது போல தோன்றும் போதும் நமக்கு இது மாதரியான சோதனைகள் வருகிறது. நமக்கு கஷ்டமான காலங்களிலும், கடவுள் அர்த்தமற்றவராக அல்லது உபயோகமில்லாமல் தெரியும் போது, இன்னும் ஏன் கிற்ஸ்துவோடு நாம் உறவு கொண்டிருக்கவேண்டும்? மேலும் கோவிலை சார்ந்தவர்கள் தவறான் வழியில் ஈடுபடும்போது, நாம் ஏன் கத்தோலிக்க விசுவாசத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இதற்கு உங்களது பதில் தான், உங்கள் விசுவாசத்தின் மதிப்பையும் , ஆழத்தையும் அறியும் கருவியாகும். இது தான் உங்கள் சாட்சியம். இதன் மூலமாக தான், நம்பிக்கை இல்லாதவர்கள் கிறிஸ்து தான் உண்மையான கடவுள் மற்றும் அன்பின் கடவுள் என்று அறிந்துகொள்ள முடியும்.

நாம் ஏன் யேசுவை ஏன் பின்பற்றுகிறோம் என்று நம்மையே சோதித்துகொண்டால், நம் விசுவாசம் இன்னும் அதிகரிக்கும். எந்த பயன்கள் உங்கள் அன்பின் வாழ்க்கையின் சாட்சிகளாய் இருக்கிறது.? எம்மாதிரியான கடவுளின் அறிகுறிகளை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்? பல சோதணைக்களுகிடையில், அது உஙகள் விசுவாசத்தைன் நிலைப்பாட்டை குலைக்க முற்படும்போது, உஙளுக்கு யேசுவால் கிடைத்த நற்கணிகளை நினைத்து, கடவுளின் மீது உள்ள நம்பிக்கையை உறுதிபடுத்திகொண்டு மற்றவர்களையும் இறைவனிடம் அழைத்து செல்லுஙகள். இது மாதிரியான ஆண்மீக பயிற்சி ப்ரச்னைகளின் தெளிவற்ற நிலையிலிருந்து யேசுவைபின் பற்றி செல்ல உதவும்.

உம்மோடு உள்ளவர்கள், அருகில் இருப்பவர்கள், அவர்களுக்காக வேண்டிகொள்ள சொல்கிறார்களை?, நீ அவர்களை நன்றாக கவனிப்பதால் உன்னை தேடுகிறார்களா? நீ அவர்களை பார்க்க செல்லும் போது அவர்கள் சந்தோசமடைகிறார்களா? உன்ன்டைய அறிவுரையை கேகிறார்களா? ஏன் உன் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள், ஏனெனில், அவர்கள் நீஙகள் உங்கள் விசுவாசத்தின் மூலம், நீங்கள் பெறும் நற்கணிகளை அவர்கள் பார்க்கிறார்கள். உஙகள் ப்ரச்னையை உஙள் விசுவாசத்தின் மூலம் நல்ல முறையில் கையாள்வதை கவணிக்கிறார்கள் . இது அவர்களை கேள்வி கேக்க வைக்கிறது, "அவர்களும் நீஙகள் பெற்றுள்ள பேரமைதியை பெற முடியுமா?. அவர்களுடய தேவை அவர்களின் பெருமையை விட பெரிதானது எனில், உஙகளுடைய ஆண்மீக உதவையை அவர்கள் நாடுவார்கள். அப்படியிருந்தாலும் அவர்கள் உன்மீது வைக்கும் நம்பிக்கை, உன் மீது அல்ல, இறைவன் யேசுவின் மீது வைக்கும் நம்பிக்கை.

உஙளுடைய விசுவாசதில் இன்னும் ஒரு அடி எடுத்து வையுஙகள்:
ஏன் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்திருகிறீர்கள் என்று கொஞ்ச நேரம் அமர்ந்து தியாணம் செய்யுங்கள். அதற்கு மேலும், உங்களுடைய அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வாய்ப்பை தேடுங்கள். உண்மையான விசுவாசி, திருச்சபையின் புத்தகங்களிருந்து அனுபவசாலி ஆக முடியாது. ஆனால், உன்மையான வாழ்க்கை அனுபவத்திலிருந்து, விசுவசிப்பவனே, மற்றவர்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு சேவை செய்பவனாவான்.




யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 10
31 அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். 32 இயேசு அவர்களைப் பார்த்து, ' தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்? ' என்று கேட்டார். 33 யூதர்கள் மறுமொழியாக, ' நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய் ' என்றார்கள். 34 இயேசு அவர்களைப் பார்த்து, ' ″ நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன் ″ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? 35 கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. 36 அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ″ இறை மகன் ″ என்று சொல்லிக் கொண்டதற்காக ' இறைவனைப் பழித்துரைக்கிறாய் ' என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? 37 நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம். 38 ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள் ' என்றார். 39 இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார். 40 யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். 41 பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், ' யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று ' எனப் பேசிக்கொண்டனர். 42 அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

(www.arulvakku.com)

Wednesday, March 28, 2007

March 29 , மறையுரை , நற்செய்தி

மறையுரை: (http://gnm.org)
"னீ உன்னை யாரென்று நினைக்கிறாய்?" யாராவது உன்னிடம் இதுமாதிரி கேட்டிருக்கிறார்களா? இன்றைய நற்செய்தியில், யேசுவை எதிர்த்து இதுமாதிரியான் மறைமுக, மேதாவியான, தவறான குற்றச்சாட்டில் ஈடுபட்டார்கள். அவர்கள் யாரெனில் , அவர்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்த மெசியாவை, "பகைவனை அன்பு செய்", கலிலேயாவிலிருந்து வந்த எழை தொழிலாளியை ஏற்றுக்கொள்ளாதவர்கள்.
"னீ உன்னை யாரென்று நினைக்கிறாய்?" என்று அழுபவர்கள், ஆதங்கபடுபவர்கள் யாரெனில், கடவுளுக்கோ அல்லது சமூகத்திற்கோ சேவை செய்ய நீஙகள்தகுதியானவர்கள் இல்லை என நம்ப மறுப்பவர்கள் ஆவர். அவர்கள் தகுதியை விட நம் தகுதி தாழ்ந்தது என்று நினைப்பவர்கள். அவகளுக்கே இன்னும் தகுதி வேண்டும் என்று நினைப்பவர்கள். இப்படி சவால் விடுபவர்கள், நம்மை ஒதுக்கி தள்ளி விட்டு அவர்கள் வாழ்வை எளிதாக்க முற்படுவார்கள்.
எனக்கு தெரிந்த ஒரு இளைய மாது,அவர் வேலை செய்யும் புத்தக கடையில், அவர் வேலை போகும் அளவிற்கு ஒரு ஆபத்தான செயலை செய்தார். அது யாதெனில், சாத்தானின் பைபிளை குப்பையில் தூக்கி எறிந்தார். அவருடைய மேலதிகாரி கண்டுபிடித்தால், அவர் என்ன சொல்வார். "னீ என்ன நினைத்துகொண்டிருக்கிறாய்? , கடையின் புத்தகம் உனக்கு புடிக்க வில்லை என்பதால், தூக்கி எறிவதா?"
னீஙகள் கிறிஸ்துவுக்காக, இது போல் ஆபத்தான செயலை ஏற்பீர்களா?
எனக்கு தெரிந்த போதகர் ஒருவர், வேத புத்தகத்தை மூடி வைத்து விட்டு, உறுதிபூசுதல் வகுப்பு எடுத்தால் ப்ரச்னைக்குள்ளானாரி. புத்தகத்தில் உள்ள் கருத்துகள் மானவர்களை சென்று சேராதபோது, அவர் தன் சொந்த விசுவாச வாழ்வின் அனுபவஙகளை எடுத்து கூறினார், அவர்களோடு பகிர்ந்துகொண்டார். அது அந்த மானவர்களை சென்றடைந்தது. அவர் அதனால் கண்டனத்திற்கு உள்ளானார். "ஏன் கண்டனத்திற்கு உள்ளானார்", அவர் முறைப்படி வகுப்புகள் நடத்தவில்லை என்பதற்காக"னி யாரென்று நினைத்துகொண்டிருக்கிறாய், இயக்குனரின் அதிகாரத்தை மீறி உன் இஷ்டத்திற்கு வகுப்புகள் எடுக்கிறாய்" என்று சொல்வார்கள்.
எப்போதும் , "னி யாரென்று உன்னை நினைத்து கொண்டிருக்கிறாய்" என்ற கேள்வி கேட்கப்பட்டாலோ, தூய அன்பினால் ஊக்குவிக்கபடுவோமானால், மற்றவர்கள் மீட்பின் பால் அக்கறை இருந்தால், மற்றும் கடவுளின் ஆனையை செய்ய விருப்பமிருந்தால். நாம் கிறிஸ்துவை போல் இருக்கிறோம்.
னமக்கு அதிகாரம் கடவுளிடமிருந்து வருகிறது, ஆனால் கவனமாயிருங்கள், ஏசு கிறிஸ்து குறிப்பிடுவது போல், நாம் நம்மையே பெருமைபடுத்திக்கொண்டால், அந்த பாராட்டு, ஒன்றுமில்லாததாக போய்விடும். கட்வுள் தான் நம்மை பெருமைபடுத்துவார், அதுவே கணக்கில் எடுத்து கொள்ளப்படவேண்டும்.
கடவுள் வார்த்தயை கேட்பவர்களே, அவரின் அங்கீகாரத்தை ஏற்றவர்கள் ஆவர். இறைவனின் அங்கீகாரத்திற்காக முயற்சி செய்யுங்கள். கடவுளுக்கு சேவை செய்யவும், அவர் அன்பை மற்றவர்களுக்கு பரவசெய்ய வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை மீண்டும் உறுதிபடுத்தி கொள்ளுங்கள். நீங்கள் செய்வதை ஏற்றுகொள்ளாதவர்களிடமிருந்து வரும் எதிர்ப்புகளை சமாளிப்பீர்களா?
கிற்ஸ்துவிடம், போதுமான சக்தியும், தைரியத்தயும் வேண்டி பெறுவோம். மேலும் இறைவன் உஙகளை பெருமைபடுத்துவதை கேட்கும் சக்தியை, பரிசுத்த ஆவியிடம் வேண்டுவொம்.




யோவான் (அருளப்பர்) நற்செய்தி (http://www.arulvaakku.com)
அதிகாரம் 8
51 என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். 52 யூதர்கள் அவரிடம், ' நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! 53 எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? ' என்றார்கள். 54 இயேசு மறுமொழியாக, ' நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள். 55 ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைபிடிக்கிறேன். 56 உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார் ' என்றார். 57 யூதர்கள் அவரை நோக்கி, ' உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா? ' என்று கேட்டார்கள். 58 இயேசு அவர்களிடம், ' ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். 59 இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.

Tuesday, March 27, 2007

march 28th reflection

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 8
31 இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, ' என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; 32 உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் ' என்றார். 33 யூதர்கள் அவரைப் பார்த்து, ' ″ உங்களுக்கு விடுதலை கிடைக்கும ″ என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே! ' என்றார்கள். 34 அதற்கு இயேசு, ' பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 35 வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு. 36 மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள். 37 நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். 38 நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள் ' என்றார். 39 அவர்கள் அவரைப் பார்த்து, ' ஆபிரகாமே எங்கள் தந்தை ' என்றார்கள். இயேசு அவர்களிடம், ' நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள். 40 ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே! 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள் ' என்றார். அவர்கள், ' நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர் ' என்றார்கள். 42 இயேசு அவர்களிடம் கூறியது: ' கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.

வாசகம். தானியேல் 3:14௨0, 91௯2, 95
நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவில்லை என்பதும் உண்மைதானா? 15 இப்பொழுதாவது எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லாவகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்டவுடன், நீங்கள் தாழவீழ்ந்து நான் செய்துவைத்துள்ள சிலையைப் பணிந்து தொழத் தயாராயிருக்கிறீர்களா? தொழாவிட்டால் அந்த நொடியிலேயே எரிகிற தீச்சூளையில் தூக்கிப் போட 16 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் செபுகத்னேசர் அரசனை நோக்கிப் பதில்மொழியாக, இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை. 17 அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். 18 அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்: நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும் என்றார்கள். 19 இதைக் கேட்ட நெபுத்னேசர் அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்மீது வெகுண்டெழ, அவனது முகம் சினத்தால் சிவந்தது. வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாகத் தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான். 20 பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் கட்டளையிட்டான்.
சிந்தனை:
இன்றைய நற்செய்தியில், யேசு கிறிஸ்து நம்மை இறைவனை விசுவசிக்க அழைக்கிறார். "என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; 32 உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் ". இந்த விடுதலையிலிருந்து என்ன செய்ய உள்ளோம்?
கிறிஸ்துவின் போதனையிலிருந்து, நமக்கு விடுதலை வாழ்வு கிடைக்கும், இந்த விடுதலை வழ்வு, எவ்வித அர்த்தத்தையும் கொடுக்கவில்லை எனினும், அவருடைய வழியே சரியான வழி. எடுத்துக்காட்டாக, தீங்கு உண்டாகக்கூடிய ஒருவரை மன்னிப்பது, நமக்கு முரன்பாடாக இருந்தாலும், நிபந்தனையற்ற இந்த அன்பு, அவர்கள் மேல் நீடித்து இருக்கும் கோபம், வன்மம், அதிருப்தி, மற்றும் பயம் சுத்தமாக நீங்கிவிடும். நாம், நமது எதிரிகளை பழிவாங்குவதற்கு பதிலாக, நல்லது செய்ய நினைக்கும்போது, பிரச்னை மேலும் பெரிதாகும் என கவலை படவேண்டியதில்லை. பழிவாஙும் உணர்வு பிரசுனையை மேலும் பெரிதாக்கும். மற்றும், விவாதம் கூட ஒரு வகையன பழிவாஙும் செயல் தான்.அமைதியாக இருத்தல் கூட பழி வாஙும் செயல் தான்.
நாம் நமது எதிரியை அன்பு செய்வது என்பது, போதனையின்படி வாழ்ந்து சிலுவையோடு சேர்வதற்கும் சமம்.னான் நம்மையே அன்பின் வாழ்வில் ஆட்படுத்திகொள்வது அர்த்தமற்றதாக தெரியலாம். அனால் இது தான் புனிததன்மை. இவ்வழியே பாவங்களிலுருந்து விடுபட்டு, பரிசுத்த ஆவியின் துனையுடன், நாம் புனிதத்தன்மையுடன் இருக்க முடியும். நாம் நம்பிக்கை கொள்ள வேண்டியன:
அ) கடவுளுக்கு அவர் என்ன செய்கிறார் என்பது தெரியும், மேலும் சாத்தனிடமிருந்து உன்னை வெற்றி பெறச் செய்வார். ஆ) இறுதி முடிவு நாம் நினைப்பதை விட மிக நன்றாகவே இருக்கும்.
இன்றைய முதல் வாசகத்தில், சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்னெகேவிற்கு இந்த விசுவாசம் இருந்தது. உஙளுடைய வாழ்க்கயில், இம்மாதிரியான தீய நெருப்புகள் எவை? உஙகளை அடிமைகளாகச் செய்யும் நெருப்புகள், தவ்றான முடிவை தரும் குறுக்கு வழிகள், தவறன வேலைகள், தவறன நட்பு மற்ரும் உறவுகள், ஆபத்தை தரும் தவறான முடிவுகள் இவை எல்லாம் நம்முடய கோபம், பயம், அதிருப்தி மற்றும் மனக்கவலை அதிகரிக்க செய்யும்.
விசுவாசமிக்க வழியே, யேசுவோடு நடந்து இத்தீய நெருப்பில் நடந்து அவைகளை எரித்து தள்ளலாம். யேசு புனித வெள்ளியின் வேதனை நெருப்பை தாங்கினார், ஏனெனில், வேதனையைவிட பெரிய இன்பத்தை தரும் என நம்பினார். யேசுவோடு பின் செல்ல, நாம் நமது சிலுவைகளை, நமது வெற்றிக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும். இது நமக்கு பிடிக்காத உண்மை எனினும், நம் வாழ்விலுருந்து நம்மை விடுவிக்கிறது.
எப்படி சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்னெகேவிற்கு நெருப்பில் நடுவில் ஒருவர் வந்து பார்த்தாரோ( கடவுளின் மகன் போல), நம்மோடும் நம் இறைவன் யேசு நம் நெருப்பின் மத்தியில் இருப்பார். அந்த நெருப்பினிடையே நாம் தெய்வீகத்தை அனுபவிப்போம். இந்த நெருப்பில் (அ) துன்பத்தில் ஏசுவோட இருப்போம் எனில், புனித வாழ்வில் எழுந்தருளப்படுவோம், அங்கே கடவுளே நம் விசுவாசத்தை புகழ்வார். அங்கே கிறிஸ்துவுடன் மிக நெருங்கிய ஐக்கியத்தில் சேர்வோம்.
கிறிஸ்துவோடு முதல் அடி எடுத்து வைப்போம்: தீய நெருப்பிலிருந்து வெளியேற வழி தேடுவதை விட்டு, கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை, அந்த நெருப்பினில் தேடுவோம், அவரை தழுவி, அவரோடு சேர்ந்து நில், உன் விசுவாசத்தை அவருக்கு காட்டு.


© 2007 by Terry A. ModicaDid today's reflection bless you? Please bless me!
Be my Good News Partner.
For PERMISSION to copy this reflection, go to:http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, March 23, 2007

கனிபொறியில் தியானம் for lent days.

http://wordbytes.org/Lent/Father.htm,

Thursday, March 22, 2007

arulosai

தமிழ் கத்தோலிக்க மறையுரை மற்றும் செய்திகள்
ஆங்கிலத்திற்கு இந்த லிங்கை கிளிக்கவும் http://www.gnm.org