Friday, March 27, 2009

மார்ச் 29, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 29, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 5ம் ஞாயிறு
Jeremiah 31:31-34
Ps 51:3-4, 12-15
Hebrews 5:7-9
John 12:20-33
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 12
20 வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.21 இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, ' ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் ' என்று கேட்டுக் கொண்டார்கள்.22 பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.23 இயேசு அவர்களைப் பார்த்து, ' மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.24 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.25 தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.26 எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் ' என்றார்.27 மேலும் இயேசு, ' இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ' தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ' என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.28 தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும் ' என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், ' மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன் ' என்று ஒலித்தது.29 அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, ' அது இடிமுழக்கம் ' என்றனர். வேறு சிலர், ' அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு ' என்றனர்.30 இயேசு அவர்களைப் பார்த்து, ' இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.31 இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.32 நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன் ' என்றார்.33 தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
(thanks to www.arulvakku.com)


நாம் கடவுளை விசுவசிக்க வேண்டும், யேசு நம்மை எங்கு அழைத்து சென்றாலும், அவரை பின் தொடர வேண்டும் என்ற நமது ஆசையில் ஊடே, அதனுடைய துன்பங்களை நினைத்து, நாம் வருத்தபட்டால், அது ஒன்றும் பாவம் இல்லை.

நமது சொந்த வாழ்வை, அதனுடைய விருப்பங்களை நாம் நிராகரிக்க நாம் உறுதியுடன் இருக்க வேண்டும். (நம் சொந்த ஆசைகள், நாம் நம் நேரத்தை எப்படி செலவிட வேண்டும் என்று நாம் விரும்புவது) போன்றவற்றை நாம் விடவேண்டியிருக்கும். அதனால், கிறிஸ்துவுடன் நம்மை இனைத்து கொள்ள முடியும், அதன் மூலம், அவரின் கருணையுள்ள அன்பை நாம் அனைத்து கொள்ள முடியும்.

இன்றைய நற்செய்தியில், யேசு செய்ய வேண்டிய தியாகத்தை நினைத்து கலக்கமுற்றார் என்பதனை காட்டுகிறது. ஆம், யேசு கூட அதனை நினைத்து, மிகவும் கலக்கமும், வேதனையும் அடைந்தார்!. கடவுள் அவரை மாட்சிமைபடுத்தினார்.

கடவுளின் அன்பையும், அவரின் வழிகளையும் நமக்கு காட்டவே யேசு இவ்வுலகிற்கு வந்தார், மேலும், நம்மையெல்லாம், மோட்சத்திற்கு அழைத்து செல்லவும், யேசு இங்கு வந்தார். தற்போது, நாம், அவரை பின் செல்பவர்களாக, இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும், வாழும் நாம், கடவுளின் வழியையும், கடவுளின் அன்பையும் நம்மை சுற்றி இருப்போருக்கு எடுத்து சொல்ல, அருட்சாதனங்கள் மூலம், நாம் அழைக்கபட்டிருக்கிறோம். அந்த பொருப்புகள் நமக்கு ஒப்படைக்கபட்டிருக்கிறது. அவர்களையெல்லாம், மோட்சத்திற்கு அழைத்த செல்ல வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.

ஞனஸ்நாண அருட்சாதனம் இந்த அழைப்பை ஆரம்பித்துவைக்கிறது. உறுதிபூசுதல் மூலம் இந்த அழைப்பு உங்களுக்கு அளிக்கபடுகிறது. பாவசங்கீர்த்தனம் நம்மை சுத்தபடுத்தி, இந்த இறைசேவையை இன்னும் நல்ல முறையில் செய்ய வைக்கிறது. திருமணமும் இந்த அழைப்பை முழுமையாக்க வழிதடத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது. நோயுற்றிருப்போருக்கு எண்னெய் அபிஷேகம் செய்வது, கிறிஸ்துவின் சேவைக்கு சாட்சியம் கொடுக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது. கிறிஸ்துவின் திவிய நற்கருணை நம்மை கிறிஸ்துவின் கருனையுள்ள அன்போடு இனைத்து, நாம் எதற்காக அழைக்க பட்டிருக்கோமோ, அப்படியே மாற்றிவிடுகிறது.

இது தான் நாம் தினமும், மணம் மாறுதலுக்கு செய்ய வேண்டிய இறைசேவையாகும். நாம் மற்றவர்களை யேசு அன்பு செய்வது போல அன்பு செய்ய வேண்டும். யேசு அவர்களுக்கு என்ன செய்ய விரும்புகிறாரோ, அதனையே நாம் அவர்களுக்கு செய்ய வேண்டும். நாம் நற்செய்தியை பரப்ப வேண்டும், இதுவே தொடர்ந்து நடைமுறைபடுத்தினால், அதுவே யேசுவின் சேவையை தொடர்ந்து செய்வதாகும்.

அடிக்கடி, நாம் தியாகம் செய்ய வேண்டியிருக்கும், நம்மை நிராகரித்தவர்களுக்கு நாம் நல்லது செய்ய வேண்டியிருக்கும். எந்த வழியிலும் அவர்கள் நம்மை துன்புறுத்தினாலும், அவர்களுக்கு நல்லது செய்தல் வேண்டும். இது தான் நாம் கிறிஸ்துவோடு இனைதல் ஆகும். நமது ஆர்வம் இதன செய்ய வேண்டும் என்று விரும்புவதாக இருக்க கூடாது, இந்த செயல்கள் எல்லாவற்றையும் நாம் செய்ய கடமை பட்டிருக்கிறோம்.

தந்தை கடவுள் இதற்காக நம்மை மகிமைபடுத்துகிறார். யேசுவை எப்படி மகிமைபடுத்தினாரோ, அப்படியே கடவுள் நம்மை மகிமைபடுத்துகிறார். அவரின் கருனையாலும், பாராட்டுதலாலும், நம்மை ஏற்றுகொண்டும் நம்மை கொளரப்படுத்துகிறார்.

இந்த இறைசேவையில், பல சவால்களை சந்திப்பதால், நம் மண சஞ்சலம் அடைவதால் ஒன்றும் தப்பில்லை. நாம் தொடர்ந்து செயல்பட, கடவுள் நம்மோடு கூடவே இருக்கிறார், அவர்தான் நம்மை வழி நடத்துகிறார் என்று அறிந்திருந்தாலே அதுவே நமக்கு பலம். ஒவ்வொரு சிலுவைக்கு பின்பும் வெற்றி உள்ளது.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, March 20, 2009

மார்ச் 22, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 22, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 4 வது ஞாயிறு

2 Chronicles 36:14-16, 19-23
Ps 137:1-6
Ephesians 2:4-10
John 3:14-21

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 3
14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.19 ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது.20 தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.21 உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.
(thanks to www.arulvakku.com)


நாம் எல்லாம் ஏன் இருளிலேயே ஒளிந்திருக்கிறோம்? நாம் ஏன் நம் பாவங்களை மூடி மறைக்கிறோம், அவைகளை வெளியே காட்டாமால், பாவசங்கீர்த்தனம் செய்து, நற்கருணை யேசுவிடம் நாம் என்ன பாவம் செய்தோம் என சொல்லி மன்னிப்பு கேட்பதில்லை.

பாவசங்கீர்த்தனத்தில், நம்மை சந்திப்பது யேசு கிறிஸ்து தான், குருவானவராக அங்கே நமக்கு காட்சி அளிக்கிறார். எல்லா குருவானவர்களும் இரகசியத்தை காக்க வேண்டும் என்று உறுதி மொழி அளித்துள்ளனர். இன்றைய நற்செய்தியில், யேசு "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல" என்று நமக்கு நினைவுறுத்துகிறார். நமது பாவங்கள் வெளியே தெரியும்போது, நாம் ஒளியில் வருவது நல்லது தான்.

எப்படி இருந்தாலும், நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய விரும்புவதில்லை. நமது பாவங்களால், நாம் குற்ற உணர்வு அதிகமாகி, சுய கொளரவம் குறைந்து , நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய செல்வதில்லை. மேலும், மற்றவர்கள் நம்மை இந்த பாவங்களால் நேசிக்க மாட்டார்கள், நாம் நம்மையே மன்னித்து கொள்ள முடிவதில்லை,, என்று நினைத்து நாம் பாவசங்கீர்த்தனம் செய்வதில்லை.

குற்ற உணர்வு, நாம் மணம் திரும்பி, மாற்றம் அடைவதற்கு பெரிய தூண்டுதலாக இருக்கும், ஆனால், ந்ம்முடைய குறைவான சுய மதிப்பீட்டினாலும், நாம் மன்னிப்பு பெற தகுதி இல்லாதவர்கள் என நினைக்கிறோம். நாம் நமது பாவங்களை நினைத்து அவமானம் அடைகிறோம், அதனால், நமது பாவங்கள வெளியே தெரிந்துவிடும் என நாம் பயப்படுகிறோம்.

எனினும், நாம் யேசுவிடம், நம் குறைவான சுய கொளரவத்தையும், நமது பயத்தையும், போக்க அனுமதித்தால், யேசு அதனையெல்லாம் போக்கி சந்தோசமாக்கி விடுவார். உங்களின் முதல் படி, சமய ஆலோசனை வழங்குபவர் அல்லது பாவசங்கீர்த்தனத்தில் குருவானவராக இருக்கட்டும். உங்களுடைய குணமடைதல், பாவசங்கீர்த்தனத்தில் என்ன கிடைக்கிறதோ அதன மூலம் கிடைக்கும்.

குருவானவர் மூலமாக யேசு உங்களிடம் பேசி, உங்களுக்கு மன்னிப்பையும், இரக்கத்தையும், நிபந்தனையற்ற அன்பையும் உங்களுக்கு வழங்குகிறார்.

இன்றைய நற்செய்தியில், யேசு " உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். ", அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை" என்று நினைவூட்டுகிறார். நாம் தப்பு செய்துவிட்டோம், என்று ஒத்து கொள்ளும்போது, கிறிஸ்துவின் வேலையாளிடம் (குருவிடம்) சத்தமாக சொல்லும்போது, நாம் யேசுவினால் காப்பாற்றபடுகிறோம். குருவின் குரல்கள் மூலம் யேசு நமக்கு பேசுவதை கேட்கிறோம். மேலும் அதே பாவங்களை செய்யாமல் இருக்க யேசுவிடமிருந்து, ஆற்றலை பெறுகிறோம்.

இருளிலேயே ஏன் இன்னும் துன்புற்று இருக்க வேண்டும். யேசு உங்களை மீட்க வந்துள்ளார்!.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, March 13, 2009

மார்ச் 15, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 15, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3வது ஞாயிறு

Exodus 20:1-17
Ps 19:8-11
1 Cor 1:22-25
John 2:13-25
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 2
13 யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;14 கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;15 அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.16 அவர் புறா விற்பவர்களிடம், ' இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் ' என்று கூறினார்.17 அப்போது அவருடைய சீடர்கள். ' உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.18 யூதர்கள் அவரைப் பார்த்து, ' இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? ' என்று கேட்டார்கள்.19 இயேசு மறுமொழியாக அவர்களிடம், ' இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் ' என்றார்.20 அப்போது யூதர்கள், ' இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ? ' என்று கேட்டார்கள்.21 ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.22 அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.23 பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர்.24 ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும்.25 மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியின் கடைசி பத்தி நமக்கு முக்கையமான செய்தியை கூறுகிறது. யேசு செய்த அடையாளங்களை/சாட்சியத்தை வைத்து அவரை நம்பிய மக்களை அவர் நம்பிக்கை வைக்க விடவில்லை. யேசு செய்த பல புனித காரியங்களினால் அவர்கள் அவரை நம்பினர். காரணம்: யேசு மனித உணர்வுகளுடன்/மனிதர்கள் அனைவரும் அவரை நம்ப வேண்டாம் என்று என்னினார்.

அடையாளங்களை வைத்து, அதனை நம்புவது, மனிதரின் குணம். நாம் பார்ப்பதை, தொட்டு பார்த்ததை, மற்றவர்மூலம் கேட்டதை நாம் நம்புவது மிகவும் சுலபம் ஆகும். ஆனால் கடவுளோ எதையுமே மிகவும் மொளனமாக, யாருக்கும் தெரியாதவர். இந்த மாதிரி அடையாளங்களை வைத்து விசுவாசம் கொள்வது, ஆச்சரியமானதோ, தெய்வீகமானதோ இல்லை. ஆனால் கடவுள் தெய்வீகமானவர்.

நாம் கடவுளிடம் பல முறை தொடர்ந்து வேண்டி அந்த வேன்டுதலுக்கு எதுவும் கடவுளிடமிருந்து கிடைக்கா விட்டால் என்ன ஆகும் ?

யேசு அங்கே முழுமையாக இருப்பதே மிகப்பெரிய அடையாளமாகும், ஆனால், அதுவும் சீக்கிரமே அகன்று விடும். சில நேரங்களில், யேசு நம் முன்னே தோன்றி நாம் கேட்பவற்றை நமக்கு கொடுக்க வேன்டும் என நினைப்பதுண்டு. இப்படி நடந்தால், நமது விசுவாசம் இன்னும் உறுதியாகும் என நாம் நினைக்கிறோம்.

பல அடையாளங்களை வைத்தே நமது விசுவாசம் இருக்கிறது. நம்து வேண்டுதல்களுக்கு பதில் கிடைக்கிறது. அன்பின் சாட்சியம் பெறுகிறோம், அமைதியும், சந்தோசமும் நமது இதையத்தை நிரப்புகிறது. ஆனால், பல சோதனைகளையும், வேதனைகளையும், நம் வாழ்க்கையில் நடைபெறும்போது நமது விசுவாசம் எப்படி இருக்கிறது? நாம் தொடர்ந்து கடவுள் மேல் நம்பிக்கை வைக்கிறோமோ? இல்லையா?

எந்த மாதிரியான விசுவாசம் நமக்கு தேவை என்றால், அது நம்பிக்கையில்ருந்து வருகிறது. உண்மையான நம்பிக்கை. கடவுள் எந்த அளவிற்கு அக்கறை கொண்டுள்ளார், உண்மையாகவே நம் மீது அன்பு வைத்துள்ளார் என்பதனை கொண்டு நாம் அவர் மேல் நம்பிக்கை கொண்டுள்ளோம், பல அடையாளங்களினால் அல்ல.
இந்த விசுவாசத்தில் நாம் வெற்றி கொள்ள, நமக்கு தெய்வேக விசுவாசம் தேவை. நாம் கிறிஸ்துவின் தெய்வீகத்தோடு இனைந்தால், நாம் அவரின் விசுவாசத்தில் சேர்கிறோம். பிறகு நாம் எந்த் அடையாளங்களும் இல்லாமல், அவரை முழுதும் நம்புவோம்.

இதனை அடுத்த முறை திருப்பலியில், திவிய நன்மை பெறும்போது நினைவுகொள்ள வேன்டும். அவர் உடலை மட்டும் நீங்கள் வாங்கவில்லை, அவரோடு அவர் தெய்வீகத்தில் இனைகீறீர்கள். மேலும் யேசு உங்களோடு அவரை இனைத்து கொள்கிறார்!. இதனை நீங்கள் உண்மையாக நம்பினால், கண்டிப்பாக அற்புதம் நிகழும். ஆனால் அது ஒன்றும் யேசுவின் மிகப்பெரிய அன்பளிப்பு அல்ல. யேசு உங்களோடு பகிர்ந்து கொண்டவைகளில் அது ஒன்றும் பெரிய அன்பளிப்பு அல்ல. எது பெரிய அன்பளிப்பு என்றால், அவரையே முழுமையா உஙக்ளுக்கு தர விரும்புகிறார்.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, March 6, 2009

மார்ச் 8, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 8, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 2 வது ஞாயிறு

Gen 22:1-2, 9-13, 15-18
Ps 116:10, 15-19
Rom 8:31b-34
Mark 9:2-10

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 9
2 ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.3 அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.4 அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.5 பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்றார்.6 தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.7 அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ″ என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது.8 உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.9 அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், ' மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது ' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.10 அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ' இறந்து உயிர்த்தெழுதல் ' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
(thanks to www.arulvakku.com)

பைபிளில் குறியீடுகளில் பெரிய மலை என்றால், கடவுளோடு மிகவும் நெருங்கி செல்வதற்கு சமமாகும். அந்த டபோர் மலையில் தான், யேசு அவரின் நெருங்கிய நன்பர்களிடம் கடவுள் புகழொளியை காட்டினார்.

மிக "பெரிய மலை" என்று பைபிளில் குறிப்படப்பட்டுள்ளது போல, அது ஒன்றும் மிகப்பெரிய மலை அல்ல. எது மிகப்பெரிய விசயம்/நிகழ்ச்சி என்றால், அந்த மூன்று சீடர்களும், யேசுவின் தோற்றம் மாறுதலை அடைந்ததை, அவர்கள் கண் முன்னெ பார்த்தார்கள். அவர்கள் பார்க்க வேண்டிய தேவையாக இருந்தது. ஏன்? ஏனெனில், சில நாட்களுக்கு பிறகு, யேசு செய்த இறைசேவையை இவர்கள் இந்த உலகில் தொடர வேண்டும்.

தந்தை கடவுள் " என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று கூறினார். நாம் யேசுவின் போதனையை செவிசாய்த்தால், நாமும் தோற்றம் மாறுகிறோம். இந்த தவக்காலம், நமக்கும் தோற்றம் உருமாரும் காலம், நமக்கு மலை உச்சியில் நடந்த உருமாற்றாம் போல நடக்கும். நாம் யேசுவை அவரின் ஒளியை நம்மில் வர வழி விட்டே ஆக வேன்டும். அந்த ஒளி நம்மில் உள்ள இருளை அனைத்து விடும்.

எவ்வளவுக்கு அதிகமாக நாம் யேசுவின் போதனைகளை கேட்டு, அதனை நம் வாழ்விலும் இறைசேவையிலும் நடைமுறைபடுத்துகிறோமோ, அவரை போல நாமும் மாறுகிறோம். மேலும் யேசுவை போல நாம் மாற, நமது வாழ்வும் தோற்றம் மாறி, நம்மை சுற்றியும் உள்ள வாழ்வு மாறுகிறது.

முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல, ஆப்ரகாம் எப்படி அவரது மகனை அவரோடு வைத்து கொள்ளாமல், கடவுளுக்கு கொடுக்க முன்வந்தாரோ, அதனை போல, அவரது மகனை அவரோடு வைத்து கொள்ளாமல், நமக்காக கொடுத்தார்.

அதே போல , கிறிஸ்துவ வாழ்வில் உள்ள பொருப்புகளை உணர்ந்து, நாம் நமது விசுவாச வாழ்வில் சந்திக்கும் சகோதரர்களிடம் கிறிஸ்துவை கொடுக்க வேன்டும். இது ஒரு சின்ன சினேகமான சிரிப்பாக இருக்கலாம், சின்ன உதவியாக இருக்கலாம், இரக்கமும் அக்கறையும் கொண்டு அவர்கள் ப்ரச்னை செவிமடுத்தலாக இருக்கலாம், மன்னிப்பு, உதவும் கரங்கல், கொஞ்சம் பண உதவி, இதெல்லாம் செய்தால், நாம் கிறிஸ்துவின், கரங்களாக , காலாக இந்த உலகில் இருப்போம். நாம் கிறிஸ்துவின் குரலாகவும், அவரின் குணப்படுத்தலின் அன்பளிப்பகவும் இருப்போம். நாம் அவரின் இந்த உலகத்தின் உடலாக இருக்கிறோம். மக்களின் வேண்டுதலுக்கு நாம் கொடையாக இருக்கிறோம்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm