Saturday, December 31, 2016

ஜனவரி 1, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜனவரி  1, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
கன்னி மரியாள் இறைவனின் தாய் பெருவிழா
Numbers 6:22-27
Ps 67:2-3, 5-6, 8
Galatians 4:4-7
Luke 2:16-21

லூக்கா  நற்செய்தி
16விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.

17பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.

18அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.

19ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

20இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
21குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

(thanks to www.arulvakku.com)
இந்த புது வருடத்தை அன்னை மரியாளிடம் பிரதிஸ்டை பண்ணுவோம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இன்று  கத்தோலிக்க விடுமுறைகளில் எனக்கு பிடித்தமான நாள். இந்த வருடம் முழுதும் இயேசு உங்கள் வாழ்க்கையின் மையமாக இருந்து உங்களுக்கு சந்தோசமும், மகிழ்ச்சியும், அமைதியும், அன்பின் மூலம் ஊக்கம்  அடைந்து ஒவ்வொரு கஷ்டத்திலும் , சோதனையிலும் வென்று வர கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்.
இன்று, இந்த புது வருடத்தை, கிறிஸ்துவின் அன்னை மரியாளிடம் ஒப்படைப்போம், அதன் மூலம் இந்த வருடத்தை ஆசிர்வாதம் பெறுவோம், இதன் மூலம் கிறிஸ்துவின் பாதுகாப்பு, உதவி பெற்று, இந்த வருடத்தை பல ஆசிர்வாதங்கள் பெரும் வரதும் ஆக்குவோம்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆசிர்வாதத்தை எப்படி மற்றவர்களுக்கு கொடுப்பது என்று கடவுள் மோசசுக்கு சொல்லி கொடுக்கிறார். இன்றைய பதிலுரை பாடல், கடவுளிடம் நம்மை ஆசிர்வதிக்க வேண்டுகிறோம். இரண்டாவது வாசகம் நாம் பெற்ற மிக பெரிய ஆசிர்வாதத்தை பற்றி கூறுகிறது: நம்மை பிள்ளைகளாக கடவுள் ஏற்றுகொண்டார். அவரின் பிள்ளைகளாக, கடவுளிடம் உள்ள அனைத்தும், நமக்கும் வருகிறது. நித்திய வாழ்வை நமக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். மோட்சத்தில் உள்ள அனைத்து ஆசிர்வாதங்களும், நமக்கு கொடுக்கபட்டிருகிறது.
ஆசிர்வாதம் எல்லா நேரமும் நமக்கு வந்து கொண்டே இருக்கின்றன, ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு இதய துடிப்பும் , நம் வாழ்வின் ஆசிர்வாதம் ஆகும். இன்றைய நற்செய்தியில் வரும் இடையர்கள் வியப்படைந்து அவர்கள் கண்டதை கூறியதை கேட்டு நீங்கள் வியபபடைகிறிர்களா?

இயேசுவின் பிரசன்னம் நம்மிடம் வருகிறது, நம்மிடயே இருக்கிறது என்ற வியப்பில் , நமக்கு மிக பெரிய சந்தோசமாக இருக்கிறது. இதனை நாம் முழு விழிப்புணர்வுடன்  இயேசுவின் வருகையை ,இயேசுவை முழுதும் உணரும்போது நாம் மிகவும் சந்தோசமடைகிறோம் , அதுவே மிக பெரிய ஆசிர்வாதம் ஆகும். எப்பொழுதெல்லாம் நாம் இயேசுவை அடைகிறோமோ , இயேசுவை பார்க்கிறோமோ, அதெல்லாம் ஆசிர்வாதமாகும். நம் கஷ்ட நேரங்களிலும் கூட , இயேசுவின் வழி காட்டுதலிலும் , அவர் நம்மோடு இருப்பதும் ஆசிர்வாதம் ஆகும்.
விசுவாசத்தில் இன்னும் உறுதியாக வளர, நம் ஆசிர்வாதங்களை நாம் இன்னும் முழுதுமாக உணர வேண்டும். இதற்கு நம் கண்கள் எப்பொழுதுமே இயேசுவை நோக்கி இருக்க வேண்டும். இதனை உறுதியாக தொடர , நமக்கு கடினமாக இருக்கும், ஆனால், பரிசுத்த ஆவியுடன் துணையுடன் முயற்சி செய்தால், நம்மால் முடியும். பழைய பிரசினைகளை யோசித்து பாருங்கள்: வெற்றியின் இயேசு அங்கே இருக்கிறார்! கஷ்டமான நேரங்களில், நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டிர்கள் என்று நினைத்து பாருங்கள். அங்கே ச்ரிச்துவின் அமைதி இருக்கிறது!, உங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள் பாருங்கள், இயேசு உங்களை ஆறுதல் சொல்கிறார்.
இயேசு எப்பொழுதும் நம்மிடையே இருக்கிறார், நமக்கு நடக்கும் அனைத்தும் இயேசுவினால், அவரால் நமக்கு கிடைத்த ஆசிர்வாதம் ஆகும். இதனை நினைத்து நமக்கு பிரமிப்பு ஆகிறது.  இயேசுவோடு இணைந்து, மற்றவர்களுக்கு நல்லது செய்யும் பொழுது, நாம் சாத்தானை வெற்றி கொள்கிறோம். இந்த செயலும் இயேசுவின் ஆசிர்வாதம் தான். இதன் மூலம் , கடவுளின் அன்பும், இரக்கமும், வெற்றியும் நமக்கு ஆசிர்வாதம் ஆகும். மேலும், இன்னும் அதிக ஆசிர்வாதம் பெறுவோம்.
வரும் காலத்தில், உங்களில் சிலர் உங்களிடம் தவறாக நடக்கும் பொழுது, அவர்களிடம் எதுவும் எதிர்பார்க்காதீர்கள்.   இயேசுவே உங்களுக்கு , தேவையானதை கொடுப்பார் என எதிர்பாருங்கள், இயேசுவின் அருகாமையை தொடர்ந்து நீங்கள் உணர ஆரம்பிக்கும்பொழுது , அவரின் அதிக ஆசிர்வாதங்களை நீங்கள் பெறுவிர்கள். உங்கள் சோதனை காலங்களில், நீங்கள் அதனை பெறும்பொழுது , உங்கள் விசுவாசம் இன்னும் உறுதியாக வளரும்.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் இயேசுவின் மேல் உங்கள் கண்கள் இருக்கட்டும். இயேசுவின் கைகள் உங்களை அரவணைப்பதை, அவரின் ஆசிர்வாதத்தை பார்ப்பிர்கள்.
கன்னி மரியாளிடமிருந்து நாம் கற்று கொள்வோம். அவரிடம் நடந்த ஒவ்வொரு நிகழ்விற்கும், கடவுளாக இருந்தால், எப்படி நடந்து கொள்வார் என்று பார்த்து அதே போல நடந்து கொண்டார். இடையர்களை மரியாள் பார்த்த பொழுது, ஒழுங்கற்ற , சுத்தமில்லாத இடையர்களை பார்த்தாரா? கண்டிப்பாக இல்லை, உங்கள் அருகில் இருக்கும் நேர்மையற்ற மனிதர்களை பாருங்கள். எவ்வளவு ஆசிர்வாதத்தை நீங்கள் பார்க்கிறீர்கள்.
இந்த புது வருடம், முழுமையான ஆசிர்வாதங்களுடன் இருக்கட்டும்.!

© 2016 by Terry A. Modica

Friday, December 23, 2016

டிசம்பர் 25, 2016 நற்செய்தி மறையுரை


டிசம்பர் 25, 2016    நற்செய்தி மறையுரை
கிறிஸ்து பிறப்பு விழா
Isaiah 62:1-5
Ps 89:4-5, 16-17, 27, 29
Acts 13:16-17, 22-25
Matthew 1:1-25

மத்தேயு நற்செய்தி

இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும்
இயேசுவின் மூதாதையர் பட்டியல்
(லூக் 3:23 - 38)
1தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:
2ஆபிரகாமின் மகன் ஈசாக்கு;
ஈசாக்கின் மகன் யாக்கோபு;
யாக்கோபின் புதல்வர்கள்
யூதாவும் அவர் சகோதரர்களும்.
3யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த
புதல்வர்கள் பெரேட்சும் செராகும்;
பெரேட்சின் மகன் எட்சரோன்;
எட்சரோனின் மகன் இராம்.
4இராமின் மகன் அம்மினதாபு;
அம்மினதாபின் மகன் நகசோன்;
நகசோனின் மகன் சல்மோன்.
5சல்மோனுக்கும் இராகாபுக்கும்
பிறந்த மகன் போவாசு;
போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த
மகன் ஓபேது;
ஓபேதின் மகன் ஈசாய்.
6ஈசாயின் மகன் தாவீது அரசர்;
தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம்
பிறந்த மகன் சாலமோன்.
7சாலமோனின் மகன் ரெகபயாம்;
ரெகபயாமின் மகன் அபியாம்;
அபியாமின் மகன் ஆசா.
8ஆசாவின் மகன் யோசபாத்து;
யோசபாத்தின் மகன் யோராம்;
யோராமின் மகன் உசியா.
9உசியாவின் மகன் யோத்தாம்;
யோத்தாமின் மகன் ஆகாசு;
ஆகாசின் மகன் எசேக்கியா.
10எசேக்கியாவின் மகன் மனாசே;
மனாசேயின் மகன் ஆமோன்;
ஆமோனின் மகன் யோசியா.
11யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
12பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.
13செருபாபேலின் மகன் அபியூது;
அபியூதின் மகன் எலியாக்கிம்;
எலியாக்கிமின் மகன் அசோர்.
14அசோரின் மகன் சாதோக்கு;
சாதோக்கின் மகன் ஆக்கிம்;
ஆக்கிமின் மகன் எலியூது.
15எலியூதின் மகன் எலயாசர்;
எலயாசரின் மகன் மாத்தான்;
மாத்தானின் மகன் யாக்கோபு.
16யாக்கோபின் மகன்
மரியாவின் கணவர் யோசேப்பு.
மரியாவிடம் பிறந்தவரே
கிறிஸ்து என்னும் இயேசு.
17ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.
இயேசுவின் பிறப்பு
(லூக் 2:1 - 7)
18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.

19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.

21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்என்றார்.
22-23இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார்என்பது பொருள்.

24யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

25மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
(thanks to www.arulvakku.com)

விசுவாசத்தின் பாடல்
இந்த உலகத்தில் சந்தோசம் உண்டாகட்டும்! இது தான் நமது பாடல். விசுவாசத்தின் மக்களாக நாம் இதனை தான் எப்பொழுதும் இந்த உலகத்தில் சொல்லி கொண்டிருக்க வேண்டும்.
உங்கள் மகிழ்ச்சியை எது குழைக்கிறது என்று அதன் மேலே உங்கள் நேரத்தை செலவழிக்காதீர்கள். கடவுள் வருவதை எதுவும் நிறுத்திவிட முடியாது. கடவுள் உங்களுக்கு எதுவும் செய்ய வில்லை என்று நீங்கள் நினைக்கும் பொழுது மகிழ்ச்சி உங்களை விட்டு போய் விடுகிறது.

இயேசு உங்கள் மேல் வைத்துள்ள அன்பை பாருங்கள்! உங்கள் பாவங்களிலிருந்து உங்களை மீட்க மட்டும் இயேசு இங்கே பிறக்கவில்லை, உங்களை இயேசு முழுதும் அன்பு செய்கிறார் - அதற்காக தான் அவர் இங்கே பிறந்தார் . நீங்கள் எந்த பாவம் செய்ய விட்டாலும், கண்டிப்பாக இயேசு இங்கே வந்திருப்பார், மனிதராக நம்மை அன்பு செய்ய வந்திருப்பார்.
சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காமலே நமக்கு கிடைக்கும் வியப்பான பரிசுகள் , நமக்கு பெரிசாக தெரியாது. திவ்ய நற்கருணை - வெள்ளை கலரில் சின்ன ரொட்டி துண்டு -- இயேசு அதிலே மனிதனாகவும் தெய்வமாகவும் அங்கே இருப்பது இயேசுவின் பிரசன்னம் என்று நமக்கு அவ்வளவு சரியாக தெரிவதில்லை. குழந்தை இயேசுவும் --  சிறிய அழகான குழந்தை -- சாத்தானை எதிர்த்து வெற்றி கொள்ள போகிறார் என்றும் நமக்கு தெரிவதில்லை. அனால் அவர் தன சாத்தானை வெற்றி கொண்டார். ! அதே போல திவ்ய நற்கருணை இயேசுவும் வெற்றி கொண்டார். இங்கே நமக்காக காத்திருக்கிறார்.
மேலும் நீங்கள்! பெரிய மனிதராக நீங்கள் நினைத்து கொள்வதில்லை, அனால் உங்களில் இயேசு இருக்கிறார். உங்கள் கற்பனையை தாண்டி நீங்கள் பெரியவர்கள்!, உங்கள் மதிப்பு மிக அதிகம்!. அது உங்களில் தெரிவதில்லை; நீங்கள் செய்யும் ஒவ்வௌர் நல்ல செயல்களிலும், உங்களின் மேன்மை வெளிபடுகிறது இது தான் விசுவாசத்தின் வாழ்வு!

கிறிஸ்துவை பின் செல்பவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றால், நாம் கிறிஸ்துவை போல இருக்க வேண்டும். நல்லது செய்யும் பொழுது, சாத்தானை நாம் தோற்கடிக்கிறோம். நல்லது செய்யும் பொழுது இயேசுவின் பேரொளி நம்மிலிருந்து வெளி வருகிறது. இந்த நன்மைகளுக்காக, எல்லோரும் சந்தோசமாக இருக்க காரணம் இருக்கிறது.

© 2016 by Terry A. Modica