Friday, September 28, 2007

செப்டம்பர் 30 , 2007 - ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டம்பர் 30 , 2007
ஞாயிறு நற்செய்தி மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 16

19 ' செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். 20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். 21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். 22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். 23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். 24 அவர், ' தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன் ' என்று உரக்கக் கூறினார். 25 அதற்கு ஆபிரகாம், ' மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். 26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது ' என்றார். 27 ' அவர், ' அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். 28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே ' என்றார். 29 அதற்கு ஆபிரகாம், ' மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் ' என்றார். 30 அவர், ' அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள் ' என்றார். 31 ஆபிரகாம், ' அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள் ' என்றார். '

thanks to www.arulvakku.com


இன்றைய நற்செய்தியில், செல்வந்தரின் பாவம் என்ன? அவர் இறந்த பிறகு, ஏன் கடுமையான சித்திரவதைக்கானார்.? செல்வந்தராக இருந்தது தான் பாவமாம்? அவர் செய்த பாவம் என்னவென்றால், அவரின் செல்வத்தை, உணவை லாசரோடு, பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இருந்தும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.

மரணம் வாழ்க்கையின் முடிவல்ல; அது முழு உணர்வுடன், மனத்துடனும், முழுமையாக உண்மையில் வாழ்வது ஆகும். மரணம் தான் கடவுளின் முழு உண்மையில் நம்மை எழுப்புகிறது. இதன் மூலம் தான் கடவுள் யார், நமக்கு கிடைத்த அவருடைய அன்பளிப்புகள், மேலும், நாம் எப்படி அவரின் அன்பளிப்பை, எப்படி வீணக்கினோம் என்பது தெரியும்.

நாம், கடவுளின் அன்பளிப்பை, நமக்கு கிடைத்த திறனை, மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், நாம் கடவுளரசில் முதலீடு செய்கிறோம். கடவுளின், பொருளாதாரத்தில், நம் முதலீடுக்கு பல மடங்காக திரும்ப வரும். நாம் கொடுப்பதை விட அதிகமாகவே திரும்ப கிடைக்கும், அதை கொண்டும் மேலும், நாம் பகிர்ந்து கொள்ளலாம்.

மாறாக, நமக்கு உள்ளதை, நம்மிடையே வைத்து கொண்டால், பெட்டிக்குள் அடைக்கப்பட்டு, கசங்கிய மலர் போல், அந்த திறமைகள், செல்வங்கள் அழிந்து போகும். பெட்டிக்குள் உள்ள பூக்கள் மங்கி போகும், அது போல், நம்மில் அடைத்து வைக்கபட்டிருக்கும் நம் பொருட்களும், செல்வங்களும், உபயோகமில்லாமல் போகும். ஆன்மிகத்திலும், நமது சுய உணர்வுகளுடனும் தேங்கி நிற்போம். அவரின் அன்பளிப்பு அழுகிபோகும். தாராள மனசின் தலைவராய் உள்ள, கடவுளோடு சேரும் இணைப்பை, நமது சுய நலம் அழித்து விடும்.

ஒவ்வொரு நாளும், நாம் பகிர்ந்து கொள்ள நமக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். கடவுளின் ஆசிர்வாதங்களும் நாம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு உண்டு. நற்செய்தியில் வரும் செல்வந்தர், ஏன் லாசரை ஒதுக்கினார். ஏனெனில், லாசருக்கு தொழு நோய் இருந்தது, அருவருக்கதக்க உருவில் இருந்தான்.

இது ஒர் கேள்வியை எழுப்புகிறது: நாம் மிகவும் குறைவாக பகிர்ந்து கொள்கிறோமோ? நாம் மற்றவர்கள் மேல் குறைவான மதிப்பையே வைத்திருக்கிறோமோ? அவர்களை கண்டு நாம் ஒதுங்குகிறோமோ? நமது கோபத்தால், நாம் ஒதுங்கியே இருக்கிறோமோ? இப்படி ஒர் நிலையில் இருந்தால், நாம் கடவுளோடு இணைய முடியாது. நமது அன்பு நம்மை உற்சாகபடுத்தி, இன்னும் தாராளமாக இருக்க உதவ வேண்டும்.

இன்றைய இரண்டாவது வாசகத்தில், "விசுவாசத்திற்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும்" என்று கூறுகிறது. யாரோடு போட்டி போடுகிறோம்? நம்மோடு நம் விசுவாசத்திற்காக. நீ நேற்றைய விட, இன்று பரிசுத்தமாகவும், அதிகம் தாராளமாகவும் இருக்கிறாயா? நீ தேங்கிய நிலையில், அழுகிய நிலையில் இருக்கிறாயா? அல்லது, பரிசுத்த வாழ்வில், வலிமையோடு உங்கள் பாவங்களிலிருந்து மாற முயற்சி செய்கிறீர்கள?


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 21, 2007

ஞாயிறு 23 செப்டெம்பர் 2007 , நற்செய்தி , மறையுரை:

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 16

1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: ' செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. 2 தலைவர் அவரைக் கூப்பிட்டு, ' உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது ' என்று அவரிடம் கூறினார். 3 அந்த வீட்டுப் பொறுப்பாளர், ' நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. 4 வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் ' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். 5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ' நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார். 6 அதற்கு அவர், ' நூறு குடம் எண்ணெய் ' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ' இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும் ' என்றார். 7 பின்பு அடுத்தவரிடம், ' நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார். அதற்கு அவர், ' நூறு மூடை கோதுமை ' என்றார். அவர், ' இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும் ' என்றார். 8 நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள். 9 ' ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள். 10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். 11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? 12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? 13 ' எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது. '


thanks to www.arulvakku.com


ஞாயிறு 23 செப்டெம்பர் 2007 , நற்செய்தி , மறையுரை:

இன்றைய நற்செய்தியில் எப்படி ஒருவர், ஒரே நேரத்தில் செல்வந்தராகவும், பரிசுத்தமாகவும் இருக்க முடியும் என்பதை விளக்குகிறது. பணமும் , சொத்துக்களும் தான் நமது கடவுளாக இருந்தால், நாம் பரிசுத்தமானவர்கள் இல்லை. நாம் கடவுளிடம் இருந்து பிரக்கப்பட்டிருக்கிறோம். ஏனெனில், நம்மிடம் உள்ள சொத்துக்களையும், பணத்தையும், மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை கடவுளின் வார்த்தைகள் முக்கியபபடுத்துகிறது.

நம்மிடம் உள்ளதை பகிர்ந்து கொள்வதை விட, சொத்துக்கள சேர்ப்பது, நம்முடைய குறிக்கோளாக இருந்தால், கடவுள் நமது தலைவர் அல்ல. இந்த உண்மை, நம்மிடம் உள்ள சொத்துக்களுக்கும் மட்டுமல்ல, நம்மிடம் உள்ள மற்ற திறமைகளையும் சேர்த்து தான் குறிப்பிடபடுகிறது.

நாம் எல்லாரும், ஏதாவது ஓர் திறமையோடு, ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்த திறமைகளை எப்படி மற்றவர்களுக்காக உபயோகிக்க போகிறோம்?

"நேர்மையற்ற செல்வங்கள்" என்று யேசு குறிப்பிடுவது யாதெனில், "மற்றவர்களுக்கு உரியதையும்" சேர்ந்தே ஆகும். எடுத்து காட்டாக மற்றவர்கள் பணத்தை உபயோகிக்கும்போது (வங்கி கடன்), நம்முடைய பயன்களுக்காக மட்டும் உபயோகித்தல், அது நேர்மையற்ற செல்வங்களாகிவிடும். கடவுளரசிற்கு உபயோகமில்லாமல், நாம் ஊழியம் செய்தால், நாம் நம்பிக்கயுள்ள ஊழியனாக இருக்க முடியாது.

அதே போல, மற்றவர்களுக்காக ஒதுக்க வேண்டிய நேரத்தை, தவறாக உபயோகப்படுத்தினால், நாம் கடவுளரசிற்காக அவர் கொடுத்த அந்த நேரத்தை உபயோகிக்கவில்லை. இதன் மூலம் நாம் கடவுளரசிற்கு வேலை செய்யாமல் இருக்கிறோம். நமது பணியில் நமக்கு கொடுக்கபட்ட பணிகளை செய்யாமல் இருந்தால், நாம் நமது முதலாளியின் பணத்தை திருடுகிறோம் என்று அர்க்தம். நமது சுய தேவைகளுக்காக, நம குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையோ, நன்பர்களின் தேவைகளையோ, ஏழைகளின் தேவைகளையோ புறக்கனித்தால், ஒதுக்கினால், "உனக்கு தேவையானதை யார் கொடுப்பார்கள்" என்று யேசு கேட்கிறார்.

நம்முடையது எது? நாம் நம்பிக்கையான உன்மையான ஊழியனாய் இருந்தால், அது தான் உண்மையான சொத்தா? அது என்ன வென்றால், பணக்காரர்கள், நம்முடனே நித்தியத்திற்கும் இருப்பார்கள். நம்மோடு எப்போதும் இருப்பது, ஆவ்யின் செல்வங்கள், கடவுள் நம்மை புகழ்வதும், அவர் நாம் ஊழியத்தை ஏற்பதும், முழு அன்புமாகும். இவையாவும் நமக்கு கிடைக்கும் சொத்துக்கள்.

பரிசுத்தத்துடனும், செல்வங்களுடனும் எப்படி இருப்பது? , முதலில், நாம் மற்றவர்களுக்கு உரிய அன்பை நம்பிக்கையோடு அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அந்த அன்பு கடவுள் மற்றவர்கள் மேல் வைத்துள்ளது. நிரந்தரமற்ற இவ்வுலக பொருள்களையும், நித்திய மோட்சத்திற்குரிய விசுவாசம், ,ஞானம், நம்பிக்கை அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, நமது நம்பகத்தன்மை உறுதிபடுத்த படுகிறது.

சுய பரிசோதனைக்கான் கேள்வி:
நீ எதை பகிர்ந்து கொள்ள விருப்பமில்லாமல் இருக்கிறாய்? அந்த பொருளை கடவுளுக்கு அர்ப்பனித்தால் அதை அவர் பனிக்காக உபயோகித்தால், என்ன ஆகும் என்று எதனால் பயப்படுகிறாய்? இந்த் பயத்தை போக்க நீ என்ன செய்ய்வேண்டும் என நினைக்கிறாய், அது போன பின், நீ உன்மையான கடவுளின் மதிப்பிற்கு உரிய ஊழிய்னாய் இருப்பாய்.

thanks to www.gnm.org


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 14, 2007

செப்டம்பர் 16 2007 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

செப்டம்பர் 16 2007 ஞாயிறு நற்செய்தி , மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 15

1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். 2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர். 3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: 4 ' உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? 5 கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; 6 வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன் ' என்பார். 7 அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 8 ' பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? 9 கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன் ' என்பார். 10 அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். ' 11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். 12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். 13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். 14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; 15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். 16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. 17 அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! 18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார். 20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். 21 மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார். 22 தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; 23 கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். 24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். 25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார். 27 அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார். 28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். 29 அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. 30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார். 31 அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. 32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். '


http://www.arulvakku.com

மறையுரை:


இன்றைய நற்செய்தி, இழந்ததையெல்லாம், திரும்ப கிடைக்க வேண்டும் என்ற கடவுளின் விருப்பத்தை உறுதிமொழியாக குறிப்பிடபடுகிறது. நமது கடவுள், சமரசத்திற்கும், புதுபித்தலுக்குமான இறைவன் ஆவார். உண்மையை விட்டு விலகி செல்பவர்களை மீண்டும் கொண்டுவர அவர்கள் பின் செல்கிறார்.

ஏனெனில், அவர் அனைவர் மேலும் அக்கறை கொள்கிறார். அவர், உங்களையும், என்னையும் விட, நம்மில் கானாமல் போனவர்கள் மேல் அக்கறை கொள்கிறார். நம்மை ஒதுக்கி தள்ளுபவர்கள், திருச்சபையின் வாழ்வை விட்டு போனவர்கள், அல்லது தனது விசுவாசத்தை ஒதுக்கியவர்கள், மிக வெகுமதியான் பொருளை இழந்தவர்கள் ஆவர்.இன்றைய நற்செய்தியில் குறிப்பிடபடும், 'காசு' ஆகும்.

அவர்களின், குடும்பத்திற்கும், திருச்சபைக்கும் தேவையான மதிப்பு, இங்கே இழக்கபடுகிறது. அவர்கள் இல்லாமல் இருப்பது, சமூகத்தின் சக்தியை குறைக்கிறது. சமூக வாழ்க்கையின் சக்தி ஊற்று ஆக இருக்கிற கடவுள், எல்லா வகையான வழிகளிலும், அவர்களை சமூகத்தோடு இணைக்க முயற்சிக்கிறார். அவர்கள் ஒன்றினைத்து, திருந்தி வாழவும், பாதுகாப்பாக திரும்ப வரவும் கடவுள் உதவுகிறார்.


நாம் எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டு விட்டு, அவர் பார்த்துகொள்வார் என்று இருந்து விட கூடாது. அவரோடு சேர்ந்து அவர் பணிகளை செய்ய வேண்டும். அவர் நம் மூலம் அவரின் பணிகளை செய்கிறார். ஆனால் நாம் முயற்சி செய்யும் போது, நமது செல்வாக்கு ஒன்றுமில்லை. கடவுள் அந்த எல்லா ப்ரசனைகளிலும் தொடர்ந்து, அவர் கவனித்து , அதனை விலக செய்கிறார். யேசு அந்த ப்ரச்னைகளை தொடர்ந்து விரட்டிகொண்டிருக்கிறார் என்று நாம் நம்புவோம். அந்த எதிர் மறை விசயங்கள், யேசுவை கண்டவுடன், ஓடி ஒளிகின்றன. அவைகள் யேசுவை புறந்தள்ளினாலும், அவர் அந்த ப்ரச்னைகளின் அருகில் தான் இருக்கிறார்.

நாம் இவையெல்லாம் விட்டு விலகாமல், கடவுளை விட்டு விலகி போனவைகளை, இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இல்லையென்றால், யேசுவிற்கு, நாம் ஏன் செய்யவில்லை என்று பதில் சொல்ல வேண்டும். நாம், ஏன் பாவிகளை அன்பு செய்வதில், நம்மை விட்டு விலகி செல்பவர்கள், நம்மை ஒதுக்கியவர்கள் அன்பு செய்வதில், தோற்கிறோம். யேசு அவர்கள் மேல் கொண்ட அன்பு போல், நம்மால் செய்ய முடியவில்லையே? நாம் அவர்களை ஒதுக்கி விட ஏதாவது செய்தோமோ?

நாம் நமது குற்ற உணர்வுகளிடமிருந்து மணம் திரும்பி மாற வேண்டும். நாம் தாழ்மையுடனும், அடக்கத்துடனும், இருந்தால், நமது பூர்த்தியடையாத அன்பிலிருந்து விடுபட்டு, யேசுவின் அன்பை மற்றவர்கள் முழுமையாக புரிந்து கொள்வர், அவர் அவர்கள் பின் செல்வது போல்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
உங்கள் குடும்பங்களில்,உங்கள் பங்கில், யாரெல்லாம், காணாமற் போனவர்கள், இழந்த வெகுமதியான பொருள் எது? யேசுவிடம் அவர்களை கொண்டு செல்ல , அவரின் அன்பை அவர்களுக்கு வழங்க இந்த வாரம் என்ன செய்ய போகிறாய். பங்கு மன்றம், அல்லது மண மாற்றத்திற்கான புத்தகம், அல்லது பயிற்சி புத்தகங்கள் உங்களுக்கு சொல்லி கொடுக்கலாம். அதன் மூலம், மற்றவர்களை யேசுவிடம் கொண்டு செல்லுங்கள்.
http://www.gnm.org

Friday, September 7, 2007

செப் 9 2007, ஞாயிறு நற்செய்தி , மறையுரை:

செப் 9 2007, ஞாயிறு நற்செய்தி , மறையுரை:

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 14

25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: 26 ' என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. 27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. 28 ' உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? 29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 30 ' இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை ' என்பார்களே! 31 ' வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? 32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா? 33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

http://www.arulvakku.com

கடவுளின் உறவை விட உங்கள் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்த்தது எது? அதனை தான் யேசு இன்றைய நற்செய்தியில் பார்க்கச்சொல்லி குறிப்பிடுகிறார். எந்த மாதிரியான வேலைகள்? , என்ன சோதனைகள்? , சொத்துக்கள்?, வாழ்க்கயின் நோக்கங்கள்? மற்றும் எந்த மாதிரியான செயல்கள்? உங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. எந்த மாதிரியான சிலுவைகளை நீங்கள் அகற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்? நீங்கள் அதிலிருந்து வெளியேறினால், அது கிறிஸ்துவை அவரின் சிலுவையிலிருந்து கைவிடுகிறீர்கள் என்று அர்த்தமாகாதா?

உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது. அப்படி செய்யாதவர் எவரும், மற்ற செயல்கள் செய்ய தயாராய் இல்லாதவர் ஆவர். நாம் நல்ல நோக்கத்திற்காக, நம்மை தயார்படுத்தி, அதனை நோக்கி முன்னேறி செல்லலாம். ஆனால், சரியான முடிவை அடைய முடியாமல் இருக்கிறோம். ஏனெனில், உலக உடைமைகளாலும், பாவங்களாலும் தடுமாறுகிறோம். நாம் இந்த சோதனைகளில் தாக்குதலுக்கு உட்பட்டு தோல்வியடைந்தவர்களாகிறோம், வெற்றியாளராக இல்லாமல். நாம் பெறும் எல்லா நன்மைகளும், தற்காலிகமானவை, ஏனெனில், இந்த நன்மைகள், கடவுளரசின் தரத்தில் சிறிது குறைந்தது. மேலும் கடவுளரசின் மதிப்பிற்கு சரிசம்மானது அல்ல.

ஒரு சீடர் என்பவர் ஒரு மானவன் ஆவார். யேசுவிடமிருந்து, மற்றவர்களை எப்படி அன்பு செய்ய வேண்டும் என்று கற்றுகொள்கிறோம். மேலும், நமது பரிசுத்த வாழ்விற்கு குறுக்கே வரும் எவரையும் அனை போட அவரிடமிருந்து கற்றுகொள்கிறோம். இவைகள் தான் நமது சிலுவைகள். நாம் தினமும், நம் முன் வரும் சோதனைகளையும், கஷ்டங்களையும் வெற்றி கொண்டு, நமது பரிசுத்த வாழ்வை, நிபந்தனையற்ற, எப்போதுமே மன்னிக்க கூடிய அன்புடன் வாழ்வை தொடரவில்லையெனில், நாம் சிலுவையின் எடையினால், தடுமாறி விழுந்துவிடுவோம். ஆனால், நாம் அந்த சிலுவைகளை அரவணைத்து, நமது சொந்த பரிசுத்த வாழ்வில் அதனை நமக்கு கிடைத்த ஆசிர்வாதமாக நினைத்து, நாம் யேசுவை போல், மற்றவர்களுக்கு தியாகம் செய்தால், நாம் மேலும், யேசுவை முழுவதுமாக அனைத்து, அவரோடு இணைவோம். இது மற்ற ஜெபம் மற்றும் அவரிடம் வேண்டுவதால் கிடைக்கும் நெருக்கத்தை விட, அதிக முக்கியத்துவத்தை தரும்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
யேசுவிடம் ஜெபிப்பது, நற்செய்தி படிப்பது, மற்ற விசுவாச நடவடிக்கைகள் இவை எல்லாவற்றை விட நீ அதிகம் எதை முக்கியபடுத்துகிறாய். உனக்கு முக்கியமானவைகள் எவை? உன்னுடைய தின நடவடிக்கைகள் இந்த முக்கிய பட்டியலோடு ஒத்து வருகிறதா?


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm