Saturday, August 26, 2017

ஆகஸ்டு 27 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஆகஸ்டு  27 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  21ம் ஞாயிறு
Isaiah 22:19-23
Ps 138:1-3, 6, 8
Romans 11:33-36
Matthew 16:13-20
மத்தேயு நற்செய்தி
அக்காலத்தில் இயேசுபிலிப்புச் செசாரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ``மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?''என்று கேட்டார்.          அதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள்.
``ஆனால் நீங்கள்நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியாவாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனேநீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை;மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுருஇந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார்.
பின்னர்தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.

சாத்தானின் ஆக்கிரமிப்பை தகர்த்து எறிதல்
இயேசு  இராயப்பரை இந்த திருச்சபையின் பாறையாக அர்சித்து, அதன் மேல் திருச்சபையை கட்டுவேன் என்று சொல்லி, மேலும், ஒரு வாக்குறுதியை கொடுக்கிறார். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா, அதன் ஆற்றலும் , இருளின் சக்தியும் , எப்பொழுதுமே வெற்றி கொள்ளா  என்று சொல்கிறார்.
இயேசு பாதாளம் கிறிஸ்துவுடன் உண்டான போரில் வெற்றி கொள்ளாது என்று சொல்லவில்லை, பாதாளத்தின் வாயில்கள் கூத வெற்றி கொள்ளாது  என்று சொல்கிறார். கண்டிப்பாக அது நடக்க போவதில்லை. வாயில்கள் என்றுமே தாக்குவதில்லை!, ஆனால், வாயில்கள் தற்காக்கும், அதனுடன் தொடர்புடைய வெளியுடன் அல்லது காம்பௌண்ட் உடன் அனைத்தையும் காக்கும். சிலர் அவர்களின் பாவங்களினால், அந்த வாயில்களுக்கு அடைந்து இருப்பவர்களை உங்களுக்கு தெரியுமா?
சாத்தானின் செயல்களை செய்பவர்களிடமிருந்து நாம் தற்காத்து இருக்க வேண்டும் என்று திருச்சபை நம்மை அழைக்கவில்லை. கிறிஸ்தாவர்கள் நாம் அனைவரும், சாத்தானை தாக்கி அழிக்க வேண்டும், அதன் வாயில்களை தாக்க அழைக்கபட்டிருக்கிறோம். வாயில்களை தாக்கி அதனை கிழே தள்ள வேண்டும். மேலும் சாத்தானை வெற்றி கொள்ள வேண்டும். சாத்தான் நம் மக்களை அவர்களின் ஆளுகைக்குள், நிரந்தர அழிவிற்கு கொண்டு செல்லும் அதன் நாம் தகர்த்து எரிய வேண்டும்.
2000 வருடங்களுக்கு முன் இயேசு எப்படி மக்களை தீய சக்தியிடமிருந்து விடுதலை கொடுத்தாரோ அதே செயலை இன்று நம் மூலம் செய்கிறார்.
சாத்தானிடமிருந்து வெளியேற நினைக்கும் பாவிகள் , வெளியே வர இரயப்பரிடம் அந்த வாயிலின் சாவியை இயேசு கொடுத்தார், அவர் தான் முதல் ஆயான் (போப் , குருக்கள்) . அந்த சாவி , அப்படியே வழி வழியாக பல தலைமுறைகளை தான்டி கத்தோலிக்க குருக்களிடம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த சாவிகள் என்ன ?  சாத்தானின் வாயில்கள் அருட் சாதனங்களால் திறக்கபடுகின்றன: நித்திய வாழ்விற்கு வழியை திறக்கின்றன. பாவ சங்கீர்த்தனம் முலம் குருவானவர் அருளினையும், கடவுளின் பாவ மன்னிப்பையும் நமக்கு கொடுக்கும் பொழுது நாம் மனம் திருந்தி பாவ மன்னிப்பு பெற விழையும் பொது நமக்கு மோட்சத்தின் வழி பிறக்கின்றது. குருவானவர் , ஆணையும் பெண்ணையும் திருமண அருட்சாதனம் மூலம் இணைக்கும் போது இயேசுவே அதனை செய்கிறார்.
இறைவனின் வரத்தால், இந்த அருட்சாதனங்கள் சாத்தானை ஆட்கொண்டு, வெளியேற்றுகிறது. பிறகும், நாம் கடவுளின் அருளை பெற்று ஒவ்வொரு முறையும் சாத்தானுடன் வெற்றி கொள்கிறோம்.

© 2017 by Terry A. Modica

Friday, August 18, 2017

ஆகஸ்டு 20 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஆகஸ்டு  20 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 20ம் ஞாயிறு
Isaiah 56:1, 6-7
Ps 67:2-3, 5-6, 8 (with 4)
Romans 11:13-15, 29-32
Matthew 15:21-28

மத்தேயு நற்செய்தி

கானானியப் பெண்ணின் நம்பிக்கை
(
மாற் 7:24 - 30)
21இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.

22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்எனக் கதறினார்.

23ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்என வேண்டினர்.

24அவரோ மறுமொழியாக
இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்
 என்றார்.

25ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்என்றார்.

26அவர் மறுமொழியாக
பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல
 என்றார்.

27உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமேஎன்றார்.

28இயேசு மறுமொழியாக
அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்
என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
(thanks to www.arulvakku.com)
அயல் குலத்தவர்கள்
இன்றைய நற்செய்தி நாம் மற்றவர்களை பற்றி கருத்து சொல்வதை நாம் நமக்கு சுய சோதனை செய்து கொள்ள வேண்டும் என நமக்கு சவால் விடுகிறது. கானானிய பெண்னை பற்றி இயேசுவின் சீடர்கள் , இயேசு அவளை கண்டு கொள்ள வேண்டியதில்லை என இரண்டு காரணங்களால் அவர்கள் அந்த முடிவை எடுத்தனர். ஒன்று அவள் ஒரு பெண் மற்றும் அவள் இஸ்ரேயலர் அல்ல.
கண்டிப்பாக இயேசு உலக மக்கள் அனைவருக்கும் மிட்பாராக தான் வந்தார், ஆனால் அந்த சீடர்கள் அதனை அறிந்திருக்கவில்லை. அவர்கள் அறிவை விருத்தியாக்க, நமக்கும் அறிவுருத்தவும், இயேசு அந்த கானானிய பெண்ணின் விசுவாசத்திற்காக இயேசு காலம் தாழ்த்தினார். அந்த விசுவாசம் அந்த  பெண்  மேல் உள்ள அணைத்து குறைகளும் துடைத்து எறிந்து விடும்.
இறையரசிற்கு வருவதற்கு தயாராய் இல்லாதவர்களை தான் இயேசு அயல் குலத்தவர் என்று கருதினார். ஆனால் நாம் இன்னும் அந்த நிலைக்கு நாம் வரவில்லை. நமது திருச்சபையில் எல்லோருமே மிக தவறாக கணிக்கபட்டவர்களாக தான் இருக்கிறோம். பலர் தங்களையே வெளியாளாக தான் நாம் நினைத்து கொள்கிறோம். மிகவும் சுலபமாக நாம் நம்மை பற்றி தவறான முடிவிற்கு வருகிறோம்.
எடுத்து காட்டாக, கோவிலில் உங்கள் அருகில் இருப்பவரோடு கை குலுக்கி சிநேகம் கொள்ள நீங்கள் தயாராய் இருக்கிறீர்களா?  திருப்பலி முடிந்த பின்பு, எந்த அளவிற்கு சவுகரியத்தொடு , பிரீயாக நீங்கள் கவலையோடு இருப்பவர்களை அழைத்து பேசுவிர்களா?  தனியாக இருக்கும் தந்தையை அல்லது தாயை நீங்கள் கோவில் காரியங்களில் விழாக்களில், அவர்களை அழைத்து, கலந்து கொள்ள செய்து, அவர்கள் குழந்தைகளை நீங்கள் கவனித்து கொள்வீர்களா ?
நீங்கள் டைவர்ஸ் செய்தவர்களாக இருந்தால், உங்களை எல்லோரும் ஒதுக்கி வைக்கிறார்கள் என நீங்களே நினைத்து கொள்கிறீர்களா? அதுவும் தவறான கணிப்பு தான்.
ஓரினசேர்க்கை கொண்டவர்களும் ஒதுங்கி கொள்கிறார்கள், ஆனால், திருச்சபை, அவர்களை கனிவோடு பரிசுத்த வாழ்விற்கு திரும்பி வாருங்கள் என்று அழைக்கிறது ?
ஏன் பலர், குருவானவரோடு ஒரு நட்பில் இல்லாமல், தனியே விடப்பட்டுள்ளது போல நடந்து கொள்கிறார்கள்?
நமது சக கிறிஸ்தவர்களை தவறாக கணிப்பது அவர்களுக்கு துன்பம் கொடுப்பதாகும்.  மேலும், திருச்சபைக்கு தேவையான பல செயல்கள் செய்ய முடியாமல் போகும். ஏனெனில் அதனை யார் செய்ய வேண்டுமோ அவர்களை நாம் ஒதுக்கி விடுகிறோம்.  ஆனால், நாம் சுய சிந்தனையோடு, மற்றவர்களை பற்றி தவறான எண்ணம் கொள்ளாமல், இயேசுவின் ஆற்றலை பெற்று கொண்டு, கிறிஸ்துவாக அவர்களுக்கு நாம் இருந்து, கிறிஸ்துவை அவர்களிடமிருந்து பெற்று கொள்வோம்.
© 2017 by Terry A. Modica