Friday, December 20, 2013

டிசம்பர் 22, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 22, 2013  ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால 4ம் ஞாயிறு

Isaiah 7:10-14
Psalm 24:1-6 (with 7c & 10b)
Romans 1:1-7
Matthew 1:18-24

மத்தேயு நற்செய்தி

18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். 22 'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 23இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 
(thanks to www.arulvakku.com) 
திருவருகை கால நான்காவது ஞாயிறின் முக்கிய நோக்கம்/கருத்து அன்பு தான். அன்பின் விளக்கமான கருத்து என்ன என்று முதல் வாசகத்தில் நாம் பார்க்கலாம். பைபிளில் ஆருடம் கூறியதை நடந்துள்ளது”: இம்மானுவேல் என்றால், “கடவுள் நம்மோடு” . அன்புடன் இருப்பது என்பது “கடவுள் நம்மோடு “ இருப்பது என்பதாகும். அன்பினை கொடுப்பது என்பது கடவுள் நாம் நம்மோடு இருப்பவர்களுக்கு கொடுப்பது.

மற்றவர்களை அன்பு செய்ய உங்களால் முடியவில்லை என்று என்றாவது நீங்கள் நினைத்தது உண்டா? அது மாதிரி நாம் இருக்க முடியாது. நாம் சில நேரங்களில் பொறுமை இழ்ந்து விடுவோம். மற்றவர்களிடம் இருந்து வரும் அன்பை விட நாம் அதிகம் கொடுக்கும் அன்பினால் நாம் சோர்வடைந்து விடுகிறோம். அன்பே உருவான கடவுள் நம்மோடு எப்பொழுதும் இருக்கிறார்.
நாம் எவ்வளவு தான் அன்பு செய்தாலும், மற்றவர்கள் அதற்கு பதிலாக நம்மிடம் அன்பு செலுத்தாமல் நம்மை நின்த்தித்தால், நாம் வெறுமையா நம் மனதில் எண்ணுவோம் . இது மாதிரியான நேரத்தில், நாம் கடவுளின் அன்பை நாம் கேட்டு அதன் முலம் நாம் அன்பு செய்ய வேண்டும். இது மாதிரியான வேண்டுதல் கண்டிப்பாக பலன் கொடுக்கும். இப்படிதான் நாம் கடவுளின் அன்பை பகிரும் இவாஞ்சளைசர் நாம் மாற முடியும்.

யாரெல்லாம் அன்பு செய்ய முடியாமல் இருக்கிறார்களோ , அவர்களிடம் நாம் அன்பு செய்தால், நம்மில் உள்ள கடவுளை நாம் அவர்களுக்கு தெரியபடுத்துகிறோம்.
நம்மில் பலர் கிறிஸ்துவாக நம்மிடம் இருப்பதில்லை. கடவுள் அவர்களிடம் கேட்டுள்ளது போல நாம் அவர்கள் நம்மை அன்பு செய்யாமல் இருக்கலாம். இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், மற்றவர்களை சார்ந்து நாம் இருக்க வேண்டியதில்லை. கடவுள் நம்மோடு. அவரை தான் நாம் நாட வேண்டும். நம்மோடு இருக்கும் கடவுள் , நம்மை முழுவதுமாக அன்பு செய்கிறார். நிபந்தனையின்றி நம்மை கடவுள் அன்பு செய்கிறார். நாம் அதற்கு தகுதியானவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அன்பு செய்து கொண்டிருக்கிறார்.
மற்றவர்கள் நம்மை அதிகம் அன்பு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நாம் இருந்தோமானால், நாம் அவர்கள் அன்பு செய்யவில்லை என்று தான் எண்ணுவோம். ஆனால் இயேசுவின் மேல் நாம் கண்களை திருப்பினால், அவர் எங்கெல்லாம் வெற்றிடம் உள்ளதோ அங்கே இயேசுவின் அன்பால் முழுதும் நிறைத்துவிடுவர்.
இம்மானுவேல், கடவுள் நம்மோடு என்று எல்லா காலமும் நாம் அதன் நினைப்பிலே இருத்தல் வேண்டும.
இம்மானுவேல், அது தான் நமக்கு சின்னம். அதனை கடவுள் நாம் ஒவ்வொருவருக்கும் இந்த கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக நமக்கு தருகிறார்.

© 2013 by Terry A. Modica

Friday, December 13, 2013

டிசம்பர் 15, 2013 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 15, 2013 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால மூன்றாம் ஞாயிறு
Isaiah 35:1-6a, 10
Psalm 146:6-10
James 5:7-10
Matthew 11:2-11

மத்தேயு நற்செய்தி

விண்ணரசின் பின்னணியில் திருமுழுக்கு யோவான்
(
லூக் 7:18 - 35)
யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார்.அதற்கு இயேசு மறுமொழியாக, ' நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர் என்றார்.அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: ' நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையா?8இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்.பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.10 ' இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.11 மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(thanks to www.arulvakku.com )
சந்தோசம் தான் கிறிஸ்து வருகை காலத்தின் மூன்றாம் ஞாயிறின் முக்கிய கருத்தாகும். முதல் வாசகத்தில் சொல்வது போல, “உறுதி ஆக இருங்கள், பயப்பட வேண்டாம். உங்கள் கடவுள் இங்கே இருக்கிறார். உங்களை மீட்க உறுதி உடன் வந்துள்ளார். “ நாம் சந்தோசப்படுவதற்கு இது தான் காரணம். நாமெல்லாம் பாவத்தினால் அழிவின் முனையில் உள்ளோம். இயேசு சிலுவையின் முலம், மிக பெரிய தியாகத்தினால், நம் பாவங்களுக்கு பரிசளித்தார். இதற்காக தான், இயேசு இந்த புவியில் பிறந்தார். நம்மை மீட்கவே, கடவுளின் அன்பிலுருந்து பிரிந்து சென்ற நம்மை அவரிடம் அழைத்து செல்லவே வந்தார்.

நித்திய வாழ்வை ஒப்பிட்டு பார்க்கையில், இவ்வுலக பிரச்சினைகள் மிகவும் சிறியது.
இயேசுவினால், நமது பாவங்கள் , அதன் அழிவுகள் நம்மை ஒன்றும் செய்யாது என்று  நாம் புரிந்து கொள்ளும் பொழுது, நமக்கு சந்தோசம், மகிழ்ச்சி அடைகிறோம். கடவுள் நமக்கு தேவையான எல்லாவற்றயும் செய்கிறார், சாத்தானை விரட்டி அடித்து நம்மை ஆசிவதிக்கிறார்.

மிகவும் மோசமான பிரச்சினைகள் கூட, அதனை இயேசுவோடு இணைத்தால்,  நமக்கு ஆசிர்வாதமாக மாறும்., கிறிஸ்து எப்படி சிலுவையில் துன்ப பட்டாரோ, அதனை போல , நாமும் மற்றவர்களுக்காக துன்பத்தை ஏற்று கொண்டு, இந்த துன்பங்கள் நமக்கு என்ன கற்று கொடுத்ததோ அதனை மற்றவர்களுக்காக அர்ப்பன்னித்து, நாம் செய்யும் பொழுது, அது இறைசெவையாக ஆகி விடுகிறது.  நமது துன்பங்களுக்கு, ஒரு மதிப்பு கிடைக்கிறது. அதன் அர்த்தம் என்ன என்றால்,  நமது மகிழ்ச்சி இரட்டிப்பாக, பல மடங்காகிறது.  
கிறிஸ்துவில்  நாம் மகிழ்ச்சியினால் அர்ச்சிக்கபடுகிறோம். அந்த சந்தோசம் என்றும் நிலையானது. நாமும் அந்த சந்தோசத்தை பெற்று மகிழ்ச்சியோடு, நல்லது நமக்கு நடக்க போகிறது என்ற எண்ணத்துடன் வாழ்கிறோம். கவலைகளும், பயமும், நம்மை விட்டு ஓடிவிடும். அதன் முலம், கிறிஸ்துவின் சேவையை நாம் மகிழ்ச்சி அடைகிறோம். விசுவாசத்தின், கருணையின் கடவுள் முலம், நாம் எழுகிறோம்.
இரண்டாவது வாசகத்தில் கூறப்பட்டது போல, நமது சோதனைகளை வெற்றியாக்க கடவுள் நேரம் எடுத்து கொள்ளும்பொழுது, நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் மகிழ்வுடன் இருக்க, நாம் எப்பொழுதும் விசுவாசத்துடனும், கடவுள் நம் மேல் அக்கறை கொள்ளவில்லை என்ற தயக்கத்துடன் இல்லாமலும், இருக்க வேண்டும். மேலும், நாம் எந்த ஒரு குற்றம் கூறாமாலும் ,நாம் கடவுளை விட நம் பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியும் என்ற மனப்பான்மையுடனும் இல்லாமல்   நாம் இருக்க வேண்டும்.
கடவுள் உண்மையாக நம் மேல் அக்கறை கொண்டு, நமது துன்பங்களிலிருந்து, நம்மை மீட்க, அதன் முலம் நாம் ஆசிர்வாதம் பெற, அவர் செயல் புரிந்து கொண்டு இருக்கிறார் என்பதனை நாம் புரிந்து கொண்டால், நமக்கு மகிழ்ச்சி தானாக வந்து விடும். இயேசு சொல்வது போல “என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்”
© 2013 by Terry A. Modica