Friday, November 30, 2012

டிசம்பர் 2, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 2, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால முதல் ஞாயிறு
Jeremiah 33:14-16
Ps 25:4-5, 8-10, 14
1 Thessalonians 3:12-4:2
Luke 21:25-28, 34-36

புனித.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21:25-36 

அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும்அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாதுகுழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள்அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத்தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்: ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது." இயேசு அவர்களுக்கு மேலும் ஓர் உவமைசொன்னார்: "அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும் போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக்காலம்நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதைநீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா. " மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி,களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல்உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும்விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்றார். 
(thanks to arulvakku group)
இரண்டாம் வத்திக்கான் சங்கம் துவங்கி 50வது வருட நினைவாக, போப் பெனடிக்ட் 16ம் அருளப்பர், நம்மையெல்லாம் இவ்வருடம் விசுவாச வருடமாக கொண்டாட நம்மை கலந்து கொள்ள அழைக்கிறார். அதனால், இத்திருவருகை காலத்தில், நமது விசுவாசத்தை இன்னும் உறுதியாக்க இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவிடம் வேண்டுவோம். இன்றைய கால கட்டத்தில், நம்மிடையே உள்ள பல கஷ்டங்களின் மத்தியில், கிறிஸ்தவர்களாகிய நாம், விசுவாசம் தான், நமக்கு நம்பிக்கையையும் வெற்றியையும் தருகிறது என்பதை உண்மையாக புரிந்து கொண்டுள்ளோம்.

கத்தோலிக்கர்கள் அனைவரும், இன்றைய உலக தேவைகளை அறிந்து, திருப்பலிக்கு செல்வது, ஒரு அற்புதமான நிகழ்வு என்று நாம் உணர்ந்திருக்கிறோம். ரொட்டியும் திராட்சை ரசமும், கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் தெய்வீக அற்புதத்தால் மாறுகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். திவ்ய நற்கருணையில், கிறிஸ்துவின் ப்ரசன்னத்தால், நீங்கள் மாறியிருக்கிறீர்களா? அப்படியென்றால், கோவிலை விட்டு வெளியே வந்த பின்பு, உங்களை விசுவாசத்தின் சாட்சியாய் மற்றவர்கள் பார்த்திருப்பார்கள் தானே?

உண்மைகளை தெரிந்து வைத்திருப்பதற்கும், அதன்படி வாழ்வதற்கும் வித்தியாசம் உள்ளது. நீங்கள் எந்த வேண்டுதலை இறைவனிடம் கேட்டு, இன்னும் கடவுள் கொடுப்பார் என்று காத்திருக்கிறீர்கள்? அந்த வேண்டுதலை திருப்பலியில் இறைவனிடம் கொடுக்கும் பொழுது, விசுவாசத்தால் வரும் நம்பிக்கையில் நிலைத்திருந்து வேண்டுகிறீர்களா?  திவிய நற்கருணை ஆசிர்வதிக்கப்படும்பொழுது, கடவுள் ரொட்டி துண்டுகளையும், திராட்சை இரசத்தையும், கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றுகிறார் என்ற நம்பிக்கை நம்மிடம் இல்லையென்றால், திவிய நற்கருணை மூலமாக இயேசு நமக்கு இறைசேவை செய்து வருகிறார் என்று நாம் விசுவாசம் கொண்டிருக்கமாட்டோம்.

இன்றைய நற்செய்த்யில், இயேசு அவரது இரண்டாவது வருகையை குறிப்பிடுகிறார். அதையே நாம் அனுதின வாழ்வில் எடுத்து கொண்டால், நமக்கும் எதிர்காலத்தை பற்றி பயமும், என்ன நடக்க போகிறதோ என்ற் எண்ணத்துடனும் நாம் இருக்கிறோம். அது தான் இவ்வுலக வாழ்வாகும். இயேசு அதற்காக நமக்கு உதவி செய்ய ஆசைபடுகிறார். இதனை நாம் விசுவசித்தால்,  நமக்கு வெற்றியும் நம்பிக்கையும் வரும்.
எனினும், நாம் நமது ப்ரஸ்னையையே நினைத்து கொண்டு, கிறிஸ்துவை பாராமல் இருந்துவிட்டால், நாம் விசுவாசத்தில் வாழ்வதில்லை. நமது இருதயம் தெய்வீக தேடலில் மங்கி விடுவதை இயேசு கவனத்தில் கொண்டு நமக்கு எச்சரிக்கை செய்கிறார். கிறிஸ்துவை சுற்றியே இருக்க வேண்டியதை நாம் மறந்து விடுகிறோம். பரிசுத்த ஆவியின் ஆலோசனையை கேட்க நாம் தவிர்த்துவிடுகிறோம். ஆனால் இயேசுவிடம் நம் வாழ்வை விசுவாச வாழ்க்கையாக மாற்றியமைக்க வேண்டினால், நமது வாழ்வு விழிப்புடனும், ஆர்வத்துடனும், கடவுளை நம்பினால், நம் வாழ்வில் என்ன நடந்தாலும், அவர் உதவி செய்வார் என்று இருப்போம்.

நமது ப்ரச்னைகள் நம்மை பயம் கொண்டவராக செய்கிறது. இயேசுவின் நம்பிக்கை கொள்ளவும், பயத்தை விட்டொழிந்து மகிழ்ச்சியில் வாழவும், விசுவாசம் நமக்கு வழியாக இருக்கிறது. தெய்வீக வாழ்வில் சோம்பலாயிருப்பது, நமது வாழ்வில் மிகவும் சோர்வை ஏற்படுத்தும்.
© 2012 by Terry A. Modica

Saturday, November 24, 2012

நவம்பர் 25, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை


நவம்பர் 25, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 34ம் ஞாயிறு
Dan 7:13-14
Ps 93:1-2, 5
Rev 1:5-8
John 18:33b-37

நற்செய்தி வாசகம்

அக்காலத்தில் பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், ``நீ யூதரின் அரசனா?'' என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, ``நீராக இதைக் கேட்கிறீராஅல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?''என்று கேட்டார்.
அதற்குப் பிலாத்து, ``நான் ஒரு யூதனாஎன்னஉன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?''என்று கேட்டான்.
இயேசு மறுமொழியாக, ``எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல'' என்றார்.
பிலாத்து அவரிடம், ``அப்படியானால் நீ அரசன்தானோ?'' என்று கேட்டான்.
அதற்கு இயேசு, ``அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்'' என்றார்.

இன்றைய வாசகத்தில், கிறிஸ்து அரசனா என்ற கேள்வி எழும்பியபொழுது, இயேசு அதனை விண்ணகத்தின் அரசனாகவும், அதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ளுமாறு நம்மை எல்லாம் வேறு பாதைக்கு அழைத்து சென்று விட்டார். மேலும் “. உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்.” என்றும் கூறுகிறார். அவர் ஒன்றும் ஒரு நாட்டிற்கோ அல்லது உலகத்திற்கோ அரசனில்லை; அவர் உண்மையின் அரசர், உண்மையை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்.

இந்த உண்மைகளையெல்லாம், நாம் முழுமையாக அறிந்து கொள்வதற்கு, இயேசு நமக்கு ஆசிரியாக இல்லாமலும், உண்மையை நமக்கு விளக்கமாக சொல்லாததாலும், நாம் சாத்தானின் ஆளுகைக்கு உள்ளான இவ்வுலக வாழ்வில் , நாமாக தப்பிதமாக அர்த்தத்தை புரிந்து கொண்டு, நாமாக ஒரு அர்த்தத்தை புரிந்து கொள்கிறோம். சாத்தான் ஆளும் இவ்வுலகில் உண்மை மட்டும் மாற்றாக நெய்யபட்டிருக்கிறது. இது உண்மையில்லை. நினைவில் வைத்து கொள்ளுங்கள், இயேசு இவ்வுலகிற்கு வந்து சாத்தானை ஒழித்து அவர் படைத்தது அனைத்தையும் விண்ணக அரசின் ராஜ்ஜியத்திற்கு கொண்டுவந்தார். கிறிஸ்துவை அரசனாக ஏற்று கொள்வபவர்கள், அவருடைய குரலை கேட்டு , உண்மையில் வாழ்கிறார்கள்.

சூழ் நிலையின் உண்மையை அறியாமல், நாம் பாவம் செய்கிறோம். நமது வாழ்வின் முழுமையாக யேசு இன்னும் அரசராகவில்லை.

உதாரணத்திற்கு, உங்களை ஒருவர் ஏதாவது கேட்டு, அதனை உங்களால் கொடுக்க முடியாமல் போனால், எடுத்து காட்டாக , கோவில் கட்ட பொருளாதார தேவை  என்றோ அல்லது பக்கத்து விட்டு நோயாளியாக இருக்கட்டும், அல்லது நம்மோடு வேலை செய்பவர்கள் உங்களை விட விசுவாசம் குறைவாக இருந்தால், அல்லது வயதான பெற்றோர்கள் உங்கள் உதவி தேவைக்காக காத்திருப்பவர்கள்.


உங்களால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? உங்களோடு சொந்த வேலைகளிலே நீங்கள் சோர்வாகி, மற்ற வேலைகள் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? இது நமது உடல் சார்ந்த ஒரு முடிவாகும். நாம் செய்யும் இந்த வேலைகளை விட்டுவிட்டு நாம் வேறு வேலை செய்தால், நாம் வாழ்வை அனுபவிக்க முடியாது என்று நம் உடல் கூறுகிறது. இது தான் உண்மையை மறைப்பது ஆகும். நாம் நமது தேவைகளை மட்டும் பார்த்து கொண்டு, மற்றவர்களின் வேலைகளை செய்யாமல் இருந்தால், நாம் சந்தோசமாக இருப்போம் என்று நாமாக நினைத்து கொள்கிறோம்.

நிஜத்தில், இயேசுவின் குரலை கேட்டால்,  நாம் சந்தோசமாக நமது வாழ்க்கை முறை அமைந்துவிடும். இயேசுவே “சமாரியனாக இருங்கள் , மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள்” என்று கூறுகிறார். நாம் அவரின் போதனைகளை கேட்டு, அவரை விசுவசித்து , வாழ்ந்தோமானால், நமக்கு மிகவும் சந்தோசமாக வாழ்க்கை இருக்கும். அவர் சொல்வதில் கொஞ்சம் புரிந்தால் கூட போதும்.

கடவுளின் விருப்பம் எதுவோ அதனை செய்து கொண்டு வந்தால், இன்னும் அதிகமாக நாம் அவரை புரிந்து கொள்வோம். நாம் செய்த இறைசேவையால் வரும் சந்தோசத்தில் , நமது மகிழ்ச்சி இன்னும் அதிகமாகும். நாம் பாவம் செய்யும்போது, நல்ல செயல்கள் செய்வதால் வரும் பயனை நாம் புரிந்து கொள்ளாததால் நாம் பாவம் செய்கிறோம். கிறிஸ்துவின் அரசாட்சியில் , பரிசுத்த ஆவியின் ஞானத்தாலும், அவருடைய உதவியாலும், நாம் பாவ வாழ்விலிருந்து சுதந்திரம் அடைவோம்.

© 2012 by Terry A. Modica

Friday, November 16, 2012

நவம்பர் 18 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



நவம்பர் 18 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32ம் ஞாயிறு

Dan 12:1-3
Ps 16:5, 8-11
Heb 10:11-14, 18
Mark 13:24-32

நற்செய்தி வாசகம்
நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பிஅவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாதுவிண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.
 (thanks to www.arulvakku.com)

உங்களுக்குள் தீர்க்க முடியாத ப்ரச்சினை ஏதாவது உள்ளதா? கிறிஸ்து எங்கே போனார்? இன்றைய நற்செய்தியில் இயேசு அவரது இரண்டாவது வருகையை பற்றி சொல்கிறார். ஆனால், அவரின் முதல் வருகையையே இன்னும் இங்கு முடிக்கவில்லை. சீடர்களுக்கு இது எவ்வளவு குழப்பத்தை கொடுத்திருக்கும்.

இயேசு இறந்த பின்பு, சீடர்கள் இன்னும் குழ்ப்பமடைந்தனர். அவர் உயிர்த்தெழுந்து , விண்ணகத்திற்கு எழுந்து சென்று, இரண்டாவது முறை வருவதை காலம் தாழ்த்தியதால், இன்னும் அவர்கள் குழப்பமடைந்தனர். இயேசு , ‘இந்த தலைமுறை’ நாம் வரும்வரை இவ்வுலகை விட்டு மறைய மாட்டார்கள் என்று சொன்னதை நினைவில் வைத்திருந்தனர். இருந்தும், அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவராக இறக்க ஆரம்பித்தனர். இன்னும் இயேசு மேக கூட்டங்களிலிருந்து வரவில்லை. இந்த சோக வாழ்வு இன்னும் இவ்வுலகில் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.


உங்களில் முடிவிற்கு வராத ப்ரச்சினை எடுத்து கொண்டால், இயேசு உடனே இவ்வுலகில் இரண்டாவது முறை வந்து இவ்வுலகில் உள்ள எல்லா தீமைகளையும் களைந்துவிட வேண்டும், என்ற ஆவல் உங்களில் உண்டா? இயேசு என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள். “அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்” ஆனால், அவர் எந்த தேதியையும் கொடுக்கவில்லை. அவருடைய சீடர்களுக்கும் கொடுக்கவில்லை, நமக்கும் கொடுக்கவில்லை.  ஒரு அடையாளத்தையும் கூட கொடுக்கவில்லை. “அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாதுவிண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.” இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்?

அவர் அருகில் இருக்கிறார்!
கடந்த 2000 வருடங்களாக, நாம் இந்த ‘தலைமுறையில்’ தான் இருக்கிறோம், அவர் இரண்டாவது வருகையை தாண்டி தான் நாம் இவ்வுலகை விட்டு செல்வோம். கிறிஸ்து மனிதனாக பிறந்த தலைமுறையில் தான் நாமும் இருக்கிறோம். கிறிஸ்து இவ்வுலக திருச்சபையில் இருந்த திருச்சபையில் தான் நாமும் ஒரு அங்கமாக இருக்கிறோம். தந்தை கடவுளால் தத்தெடுக்கபட்டு , அவருடைய ஒரே மகனால், அவருடைய தியாகத்தால், மீட்கப்பட்ட தலைமுறையில் நாம் இருக்கிறோம்.

கடவுளின் பாவ மீட்பு முதல் ஈஸ்டர் ஞாயிறன்று ஆரம்பித்தது. அந்த “கடைசி நாட்கள்” கிறிஸ்து மீண்டும் வரும்வரை தொடரும். இது பரிசுத்த ஆவியின் காலமாகும். கிறிஸ்துவின் முதல் இறைசேவை தொடர்ந்து,  பரிசுத்த ஆவியின் ஆற்றலால் நாம் இவ்வுலகில் தொடர்கிறோம்.

உங்களின் அடுத்த செயலுக்காக, மோட்சத்திற்கு செல்ல உங்கள் அடுத்த ஸ்டெப்பிற்காக இயேசு கதவின் வாயிலில் காத்திருக்கிறார், கதவை திறந்து தான், நாம் அதன் வழியே செல்ல முடியும். இயேசு உங்களுக்கு இப்போதே கதவை திறக்கிறார். பரிசுத்த வாழ்வின் கதவை, அன்பின் கதவை திறக்கிறார். உங்களுக்காக அவர் வகுத்த வாழ்க்கையை , இறைசேவையை முழுதுமாக வாழ அந்த கதவில் நுழையுங்கள்.
© 2012 by Terry A. Modica

Friday, November 9, 2012

நவம்பர் 11 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


நவம்பர் 11 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32ம் ஞாயிறு
1 Kgs 17:10-16
Ps 146:7-10 (with 1b)
Heb 9:24-28
Mk 12:38-44

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 12

மறைநூல் அறிஞரைக் குறித்து எச்சரிக்கை
(மத் 23:1 - 36; லூக் 20:45 - 47)
38 இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, ' மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்;39 தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்;40 கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே ' என்று கூறினார்.

ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை
(லூக் 21:1 - 4)
41 இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்.42 அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். 43அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, ' இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.44 ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார் ' என்று அவர்களிடம் கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இயேசுவை பின் செல்வதற்கு, மிக ஆழ்ந்த விசுவாசம் வேண்டும், ஏனெனில் அடிக்கடி நம்மை எதிர்பார்க்காத இடத்திற்கு அழைத்து செல்கிறார், அங்கே புது வாழ்விற்கு நாம் தயாராக வேண்டும்,  நமக்கு சுலபமான வாழ்வியல் சூழ் நிலையை விட்டு அதன் எல்லையை தாண்டி நாம் செல்ல வேண்டும்.

இன்றைய ஞாயிறின் முதல் வாசகத்திலும், நற்செய்தியிலும் வரும் இரண்டு விதவைகளை பாருங்கள். அவர்களிடம் உள்ள அனைத்தையும் கொடுத்தால், திரும்ப சம்பாதிக்க மிகவும் கடினம் என்று  அவர்களின் சாதாரண அறிவிற்கு ஏன் எட்டவில்லை? கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார் என்பது கண்டிப்பாக அவர்களுக்கு தெரியுமா? இல்லை, கடவுள் மேல் உள்ள அன்பினாலும், அசாத்திய நம்பிக்கையாலும், அவர்களிடமிருந்த அனைத்தையும் கொடுத்தனர்.

விசுவாசம் நியாயமான அன்பின் வெளிப்பாடு – கடவுளாக ஒருவரை நாம் தெரிந்தெடுத்து, அவரை அன்பு செய்கிறோம். நாம் கடவுளை நம்பி , நமது கஷ்டத்தை போக்க அவரிடம் வேண்டினால், நாம் மற்றவர்களை தாரளமாகவும், சந்தோசத்துடனும் அன்பு செய்ய முடியும் . எவ்வித நிபந்தனையும் இன்றி, நாம் சுதந்திரமாக மற்றவர்களோடு அன்புடன் இருப்பது , நாம் அவர்களோடு கொண்டுள்ள பாதுகாப்பினால் அல்ல, நாம் கடவுளோடு பாதுகாப்பில் இருக்கிறோம். அதனால் தான் நாம் மற்றவர்களோடு அன்புடன் இருக்க முடிகிறது.

அந்த விதவைகள் அவர்களால் இழக்க கூடாததை, கடவுளுக்கு கொடுத்தனர். நமக்கு ஏமாற்றத்தையும், துக்கத்தையும் , நிராகரிப்பையும் கொடுத்தவர்களை நம்மால் அன்பு செய்ய முடியாது. இருந்தாலும், இயேசு நம்மை  நோக்கி, அவர்களையும் அன்பு செய்து , மன்னித்து அன்பு செய்ய வேண்டும் என்றும், கூறுகிறார்.

சிலரை அன்பு செய்ய கடினமாக இருக்கும், அவர்களை சுற்றி ஒரு வளையத்தை வைத்திருப்பார்கள், அதனை தாண்டி செல்லவே மிகவும் கடினமாக இருக்கும். இயேசு என்ன சொன்னார் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பெரிய வெள்ளி அன்று வரை , அவரை கேலி பேசியவர்களிடமிருந்தும், குற்றம் சாட்டியவர்களிடமிருந்த்தும் ஒதுங்கியே இருந்து வந்தார். ஆனால் அவர்களின் தொடர்பை விடவில்லை. திருந்த மாட்டார்கள் என்று ஒதுங்கி போகவில்லை. அவர்களை அன்பு செய்வதை நிறுத்தி விட்டாரா? கண்டிப்பாக இல்ல. இயேசுவை பின் செல்வது, கடவுளின் சரியான நேரத்திற்கு கவனமாக காத்திருந்து அந்த நேரத்தில் அவர்களை அனுகி கடவுளின் அன்பை பகிர்ந்து அவர்களோடு இனிய முகத்துடன் பேசவேண்டும், மாறாக, அவர்களை விட்டு ஒதுங்கி செல்ல கூடாது.
சில நேரங்களில், அவர்களின் கடினமான மனதின் காரணமாக, அவர்கள் விதைத்ததை, அவர்களே அறுவடை செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதும் ஒரு வகையில் நல்லதாகவே அமையும். ஏனெனில், அவர்களுக்கு அது நல்ல புரிதலை கொடுத்து, அவர்கள் மணம் மாற உதவும். அவர்கள் அதில் கஷ்டப்பட விட வேண்டும். கடவுள் நம் குறைகளை நாம் மணம் திருந்துவதற்கு முன் சுத்தம் செய்கிறாறா? என்று சிந்தித்து பாருங்கள். இயல்பாக நாம் மணம் திருந்திய பின் நமது குறைகளை நீக்க/சுத்தம் செய்ய முற்படுவதில்லை. வேறு யாராவது அழிவிலிருந்து காக்க முனையும்போது, நாம் அதிலிருந்து என்ன கற்று கொள்கிறோம்?  மற்றவர்களை அன்பு செய்வது என்பது, நாம் நம்மையே தியாக செய்து கடவுள் மேல் முழு பாரத்தையும் போட்டு, அவர் நம் காயங்களை குணப்படுத்தவும்,  நம்மை மீண்டும் புதுபிக்கவும், ஆசிர்வதிக்கவும் இறைவனிடம் நாம் வேண்டவேண்டும்.  மற்றவர்களுக்காக நம்மிலிருந்து வெளியே செல்லும் எதுவும் காலியாக இருப்பதில்லை. கடவுள் அதனை நிரப்பி கொண்டே இருப்பார்.

© 2012 by Terry A. Modica

Friday, November 2, 2012

நவம்பர் 4, 2012 ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை


நவம்பர் 4, 2012 ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை
ஆண்டின் 31ம் ஞாயிறு
Deut 6:2-6
Ps 18:2-4, 47, 51 
Heb 7:23-28
Mark 12:28b-34

மாற்கு நற்செய்தி

http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 12

முதன்மையான கட்டளை
(மத் 22:34 - 40; லூக் 10:25 - 28)
28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, ' அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? ' என்று கேட்டார்.29 அதற்கு இயேசு, ' இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.30 உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக ' என்பது முதன்மையான கட்டளை.31 ' உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் கட்டளை வேறு எதுவும் இல்லை 'என்றார்.32 அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ' நன்று போதகரே, ' கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ' என்று நீர் கூறியது உண்மையே.33 அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ' என்று கூறினார்.34 அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ' நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை 'என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
(thanks to www.arulvakku.com) 


இன்றைய நற்செய்தியில்,  இயேசு இரண்டு பெரிய கட்டளைகளை நமக்கு நினைவுபடுத்துகிறார். ஹீப்ருவின் வாசகத்திலிருந்த்து மேற்கோள் காட்டி நமக்கு கூறுகிறார். இதனை தான் நாம் முதல் வாசகத்தில் படிக்கிறோம். இரண்டாவது வாசகமோ, புதிய ஏற்பாட்டில் ஹீப்ருவிற்கு எழுதிய கடிதத்திலிருந்த்து , அன்பு தான் முக்கிய கட்டளை, மற்ற கட்டளைகள் எல்லாம், அன்பிற்கு பிறகு தான், அன்பிற்கு தான் முன்னுரிமை. அன்பு தான் மேலான கட்டளை என இரண்டாவது வாசகம் கூறுகிறது.  முழுமையாக நம்மை அன்பு செய்த இயேசு, எந்த பாவமும் செய்யாத இயேசு, நமது பாவங்களுக்காக தன்னையே அர்ப்பணித்தார். அதனால், அவரை பின்பற்றி மோட்சத்திற்கு செல்ல ஆசைபடும் நாம், இயேசுவின் அன்பின் காலடியில் நமது காலை எடுத்து வைத்து, கடவுளையும் மற்றவரையும், முழு உள்ளத்தோடும் அன்பு செய்வோம்.

நமது அன்பு, குறையுள்ளதாய் இருந்தாலும், நாம் பாவம் செய்கிறோம். அதற்கு சரியான தண்டனை அன்பு மட்டுமே. நமது பாவத்தால், ப்ரச்சினைக்கு உண்டானவர்களிடம் நாம் தியாகத்தை காட்டினால், அதுவே நமது பாவத்தின் தண்டணையாக நாம் ஏற்கிறோம். ஆனால், நாம் அவர்களுக்கு செய்த தீமையால், அதன் விளைவுகளை நம் பார்வையை தாண்டி சென்று விட்டது.  கத்தோலிக்க திருச்சபையில், பாவசங்கீர்த்தனம் மூலமாக நாம் பாவமன்னிப்பு பெறுகிறோம். பாவசங்கீர்த்தனத்தில், இயேசு குருவானவர் மூலமாக அமர்ந்து நமது பாவமன்னிப்பை ஏற்று, நமது பாவங்களை கழுவுகிறார். குருவானவர் மூலமாக இந்த திருச்சபை  நம் பாவங்களை , பாவ தண்டனை மூலமாக , இவ்வுலகில் நாம் ஏற்படுத்திய பாதிப்பிற்கு மன்னிப்பு வழங்குகிறது.
பாவ தண்டனை ஒன்றும் அன்பினால் ஆன வழி மட்டும் இல்லை, மேலும், நம்மை இன்னும் உறுதியாக்கி, இனிமேலும் பாவம் செய்யாமலும், அன்பை தொடர்வதற்கும் சக்தி அளிக்கிறது.  குருவானவர் நமக்கு சுலபமான தண்டனை கொடுத்தாலும், (எ.கா மூன்று அருள் நிறைந்த மரியே) , நீங்கள் உண்மையாகவே பரிசுத்தமாக விரும்பினால், அருள் நிறைந்த மரியே ஜெபம் சொல்லும்பொழுது, மிகவும் கடினமான அன்பு செய்யும் தண்டனையை ஆண்டவரிடம் நாம் கேட்க வேண்டும். அன்பின் கடவுளை நாம் முழுதும் ஏற்று, நாம் தியாகம் செய்ய தயாராக வேண்டும். முழு மனதுடனும், ஆன்மாவோடும், கடவுளையும் மற்றவர்களையும் அன்பு செய்ய தயாராக இருக்க வேண்டும். புனித அந்தோணிமேரி க்ளாரட் “ கிறிஸ்துவின் அன்பு நம்மை உற்சாகம் ஏற்பட செய்கிறது, பரிசுத்த வாழ்வின் சந்தோசத்தில், நாம் பறப்பதற்கும்,ஓடி ஓடி அன்பு செய்யவும் “ நம்மை தள்ளுகிறது. உங்கள் அன்பு எவ்வளவு உயரம் பறக்கிறது.? உங்கள் பெரும் உற்சாகம் தான் நீங்கள் கடவுளை எவ்வளவு அன்பு செய்கிறீர்கள் என்பதன் அளவாகும்.
© 2012 by Terry A. Modica