Saturday, October 27, 2018

அக்டோபர் 28 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை


அக்டோபர் 28 2018  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 30ம் ஞாயிறு
Jeremiah 31:7-9
Ps 126:1-6
Hebrews 5:1-6
Mark 10:46-52
மாற்கு நற்செய்தி
பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல்
(
மத் 20:29-34; லூக் 18:35-43)
46இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.

47நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்என்று கத்தத் தொடங்கினார்.

48பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

49இயேசு நின்று
அவரைக் கூப்பிடுங்கள்
 என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்என்றார்கள்.

50அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.

51இயேசு அவரைப் பார்த்து
உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?”
என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்என்றார்.

52இயேசு அவரிடம்
நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று
 என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.
(thanks to www.arulvakku.com)
தெய்வீக வாய்ப்புகளை அதிகம் பயன் படுத்தி கொள்ள முயல்வது
இயேசு நம் வாழ்வை தொட்ட பின்பு -- நாம் கேட்ட ஜெபத்திற்கு பதில் கிடைப்பது, அல்லது, நம் நோய்களுக்கு குனமளிப்பது, அல்லது, நம் வாழ்வை மாற்ற கூடிய ஞானம் கொடுத்தார் என்றால் -- நாம் அடுத்து என்ன செய்வோம்? தெய்வீக அருளால் நம் வாழ்வு மாற்றமடைந்துள்ளது.  இந்த புதிய வாய்ப்பை நாம் நன்றாக பயன்படுத்தி கொள்வோமா ? இல்லையா ?
கடவுள் நம்மை வேறு வழியில் செல்ல சொல்லவில்லை, அல்லது அவரிடம் பேரம் பேச கூட  சொல்லவில்லை. "கடவுளே என்னை குனமாக்கினால், நான் தினமும் திருப்பலிக்கு செல்வேன்" என்று வேண்ட சொல்லவில்லை
இன்றைய நற்செய்தியில் பர்திமேயுக்கு சொன்னது போல,   "நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று போகலாம் என்கிறார். எங்கே போவது?

சில நேரங்களில், அவருடைய குறிப்புகள் நமக்கு சில விசயங்களை சொல்லும். சிலர் பாவங்களை குணமாக்கிய பின்பு, "போ இனிமேல் பாவம் செய்யாதே " என்கிறார். எல்லாம் சரி, எங்கே போவது ?
நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் முக்கியமானது. நாம் எங்கே செல்கிறோம், அடுத்து என்ன செய்ய இருக்கிறோம். என்பது, அதன் விளைவு பல மடங்காகும். (ஆசிர்வதாமாக இருந்தாலும் சரி அல்லது அழிவாக இருந்தாலும் சரி ) , நம்மால் என்ன நடக்க போகிறது என்று நம்மால் கணித்து சொல்ல முடியாது. இயேசு இதனை பயன்படுத்தி கொண்டு, நம்மை கீழே தள்ளி விட வில்லை, அனால், அனைத்திற்கும் நாம் பொறுப்பெடுத்து கொண்டு, நம் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறார்.
இயேசு பர்திமேயுவிடம் "உன் வழியில் செல்"  என்று சொல்கிறார்.  அந்த சுதந்திரத்தோடு பர்திமேயு என்ன செய்தார், "இயேசுவை பின் சென்றார்", அவரிடம் உள்ள சிறந்த வழியை தேர்ந்தெடுத்து கொண்டார். அவரின் வாழ்வு அதன் பின்பு பிரமாதமாக மாறியது, அவருக்கு இப்போது கண் தெரிவதால் மட்டும் அல்ல, இயேசுவிடமிருந்து அவர் கற்று கொள்ள விரும்பினார் அதனால், இயேசுவை பின் செல்பவராக மாறினார்.
கிறிஸ்துவோடு நாம் ஆசிர் பெற்ற பின்பு, எத்தனை முறை நம் பழைய வாழ்விற்கு சென்றுள்ளோம்.? அவரை பின் செல்வதற்கு , புது வழியில் செல்வதாக கூட இருந்தாலும், புது இறைபணியில் செய்வதாக இருந்தாலும், அல்லது நண்பர்களின் வேலை மாற்றமாக இருந்தாலும், நாம் பழைய வாழ்விற்கே சென்று விடுகிறோம். ஆனால்   நாம் நேர்மையாக உண்மையாக இயேசுவை பின் செல்ல முடிவெடுத்து , விசுவாசம் கொண்டோமானால், நாம் வாழ்வு மாறும் சாகசமான வாழ்விற்கு மாறுவோம்.
இயேசுவை பின் செல்வது, அவரிடமிருந்து கற்றுகொள்வது மட்டுமே நம் முதன் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். கிறிஸ்துவோடு நாம் சந்திக்கும் ஒவ்வொரு தருணமும் நம்மை மாற்றும் தருணம் ஆக இருக்க வேண்டும். -- திருப்பலியில் கூட , திவ்ய நற்கருணையில் நாம் அவரோடு இணைகிறோம்.
 © 2018 by Terry A. Modica



Friday, October 12, 2018

அக்டோபர் 14 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை



அக்டோபர் 14 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 28 ஞாயிறு
Wisdom 7:7-11
Ps 90:12-17
Hebrews 4:12-13
Mark 10:17-30


மாற்கு நற்செய்தி

இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர்
(
மத் 19:16-30; லூக் 18:18-30)
17இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.

18அதற்கு இயேசு அவரிடம்
நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.

19
உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா?
கொலைசெய்யாதே;
விபசாரம் செய்யாதே;
களவு செய்யாதே;
பொய்ச்சான்று சொல்லாதே;
வஞ்சித்துப் பறிக்காதே;
உன் தாய் தந்தையை மதித்து நட’”
என்றார்.

20அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்என்று கூறினார்.

21அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி
உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்
என்று அவரிடம் கூறினார்.

22இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
23இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம்
செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்
என்றார்.

24சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து
பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.

25
அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது
 என்றார்.

26சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

27இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி
மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்
 என்றார்.

28அப்போது பேதுரு அவரிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றேஎன்று சொன்னார்.

29அதற்கு இயேசு
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும்

30இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

31
முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்
 என்றார்.
 (thanks to www.arulvakku.com)
கடவுளின் செல்வங்களை பகிர்ந்துகொள்வது
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசு பணக்கார இளைஞனை பார்த்து,  " நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே." என கேட்கிறார். இதில் இரண்டு செய்திகள் இருக்கின்றன.
முதலில், அந்த இளைய அன்பர், இயேசு நல்லவர் என்றும் அவரின் போதனைகள் நல்லவைகள் என்று நம்பினார். (அவரை உயர்வாக சொல்வதால், அவரின் அன்பை பெற்றுவிட ஒன்னும் அவர் ஆசையில் இருந்தார் என்று நாம் சொல்லிவிட முடியாது) , மேலும், இயேசு செய்த அதிசயங்கள் மற்றும் பாவமில்லா வாழ்வை பார்த்து, இயேசு நல்லவர் என்று அவர் நம்பினார். மேலும் இயேசு தான் கடவுள் என்றும் நம்பினார்.

இரண்டாவதாக, இயேசுவின் கேள்விகள் அந்த இளைய மனிதரை, இரக்கத்துடன், தாழ்ச்சியுடன் நடந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இயேசு என்ன சொல்கிறார் என்று அவர் உண்மையாகவே நம்பினால், கடவுள் தான் நல்லவர் என்று அவர் அறிந்து கொள்ளவேண்டும். கடவுளை தவிர வேறு எவரும் நல்லவர் இல்லை. என்றும் அறிந்து, அவரின் கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த புரிதல் அவரின் இதயத்தை திறந்திருக்க வேண்டும் , அதனை தான் இயேசு அடுத்து சொல்கிறார்:
"கடவுளை விட்டு நீங்கள் தள்ளி இருப்பதற்கு ஒரே காரணம்: இந்த பூமியில் நமக்கு உள்ள உறவு (சொத்துகள், இந்த பூலோக ஆசைகள்) . இதிலிருந்து விடுபட , மேலும், இறையரசின் சொத்துகளை பெற, இந்த உலகில் உள்ள சொத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்"
இயேசு மேலும், "எல்லாவற்றையும் விட்டு விடுவதால்",  நாம் ஆதரவற்றோர் ஆக மாறிவிட கூடாது  என்றும் சொல்லி, நம்மில் உள்ள சொத்துக்களை மற்றவர்களுக்கு கொடுக்க மனம் வேண்டும் என்று சொல்கிறார். அவர் சொல்வதெல்லாம் எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்பதில்லை. நம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க நாம் முன் வர வேண்டும். என்று தான் இயேசு சொல்கிறார். இந்த பகிர்ந்தளிப்பு ஒரு நல்ல செயல், அதனால், நமக்கு ஆசிர்வாதம் உண்டு, இந்த செயல் மூலம் நாம் சந்தோசம் அடைய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். ஆனால் உண்மையான சந்தோசம், இந்த பகிர்ந்தளிப்பில் கடவுளையும் நம்மை இணைத்து கொண்டால் நாம் பெற முடியும். இது தான் முழுமையான வாழ்வு! இப்படிதான் நம் வாழ்வு இருக்க வேண்டும். நம் எல்லோரும் இந்த வாழ்வை வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.
இந்த உலக சொத்துகளுடன் நம் ஆசை தொடருமானால், கடவுளிடமிருந்து நாம் விலகி செல்கிறோம், மேலும், அது கிடைக்க பெற வேண்டியவர்களையும் நாம் காயபடுத்துகிறோம். எனினும் இந்த உலக சொத்துகளை முழுமையாக விட , நம் முயற்சி மட்டும் போதாது, இந்த செயல் மிகவும் கடினமானது, சும்மா  ஒன்றும் எல்லா ஆசைக்காகளையும் சொத்துகளையும் நாம் கொடுத்து விட முடியாது.
இயேசு நம் பாவங்களுக்காக, சிலுவையில் துன்பபட்டு , நம் பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, நமக்கு பரிசுத்த ஆவியையும் கொடுத்துள்ளார். இது தான் நமக்கான நற்செய்தி, பரிசுத்த ஆவியானவர் கடவுள் நம்மை என்ன செய்ய சொல்கிறாரோ அதனை செய்ய நமக்கு தேவையான ஆற்றலை திறமையை கொடுக்கிறார். நாம் பகிர்ந்து கொள்ளும் பொழுது,   விண்ணக அரசின் செல்வங்களை நாம் மிகுதியாக பெறுகிறோம். கண்டிப்பாக விண்ணக அரசின் ஒரு அங்கமாக ஆகிறோம்.
© 2018 by Terry A. Modica