Friday, November 28, 2008

30 நவம்பர், 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

30 நவம்பர், 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால முதல் ஞாயிறு

Isaiah 63:16b-17, 19b; 64:2-7
Ps 80:2-3, 15-16, 18-19 (with 4)
1 Cor 1:3-9
Mark 13:33-37
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 13
33 கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.34 நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.35 அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.36 அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.37 நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள். '
(thanks to www.arulvakku.com)



எல்லா பொருள்களும் வைத்திருக்கும் ஒருவருக்கு, கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக என்ன கொடுப்பீர்கள்?
நமக்கு மிகவும் முக்கியமானவர்களுக்கு, நாம் அவர்கள் மேல் கொண்டுள்ள அன்பை வெளிக்காட்ட, அவர்களுக்கு உபயோகமான அன்பளிப்பை கொடுப்போம். மேலும், அவர்களுக்கு தேவையான ஒன்றை அன்பளிப்பை கொடுத்தாலும், அது ஏதாவது ஒரு தாக்கத்தை உண்டு பன்னுகிறத? எத்தனை அன்பளிப்புகள், பீரோவில் அடுக்கப்பட்டிருக்கிறது. ?

யேசுவிற்கு பிறந்த நாள் அன்பளிப்பாக என்ன கொடுப்பாய்? உன்னுடைய கிறிஸ்துமஸ் பட்டியலில், யேசுவை விட்டு விட மாட்டாஇ என நம்புகிறேன். மற்றவர்களை விட, கடவுள் மிக பெரிய அன்பளிப்புக்கு உரியவர். ஆனால், அவருக்கு தேவையான எல்லாமே அவரிடம் இருக்கிறது. அல்லது அவருக்கு எதுவும் தேவையா?

இந்த திருவருகை காலம் முழுதும், ஒவ்வொரு நாளும், இந்த மறையுரையில், கடவுளுக்கு என்ன அன்பளிப்புகள் கொடுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவையாவும், மறைந்திருக்கும் கிறிஸ்துமஸ் அன்பளிப்புகள். நாம் நற்செய்தியில், தேடி கண்டுபிடித்து, அதனை பாலிஸ் செய்து, அதனை நமது அன்பால் சுற்றி, கடவுளுக்கு கொடுப்போம். அது கண்டிப்பாக இறைவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும் என்ற எண்ணத்தில் நாம் அவருக்கு கொடுக்கவேண்டும்.

முதல் வாசகம், கடவுள் நமது தந்தை என நினைவுபடுத்துகிறது. பதிலுரையில், நம்மை கடவுள் அவர் பக்கம் திரும்ப வைக்க உதவ வேண்டும் என வேண்டுகிறோம். இரண்டாவது வாசகம், கடவுள் நமக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும், நன்றி கூறுகிறது. அதனால், நீங்கள் எந்த அன்பளிப்பை கடவுளுக்கு கொடுத்தால், அவர் உனக்கு செய்த எல்லாவற்றிற்கும் பொருத்த மானதாக இருக்கும்.

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து வரும் நேரம் விழித்திருக்க வேன்டும் என நினைவுபடுத்த படுகிறோம். இது ஒன்றும், கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை மட்டும் குறிப்பிடவில்லை. உனது கடைசி மூச்சு நிற்கும் நேரமும், உனக்காக அவர் வருவார். மேலும், தற்போது கூட உனக்காக வருவார்.


கடவுள் உனக்காக புதிதாக ஒன்றை கொடுக்க விரும்புகிறார். உன்னை வந்து அவர் அடையும்போது, நீ சரியான காரியத்தை செய்கிறாயா? (முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல), நீ அவர் கொடுத்த பரிசுத்த அன்பளிப்பை உபயோகித்து கொண்டு இருப்பாயா? (இரண்டாவது வாசகத்தில் கூறியிருப்பது போல)? மேலும், விழிப்பாயிருந்து, தந்தை கடவுள் வரும் வழியை பார்த்து கொண்டு இருப்பாய? (நற்செய்தியில் கூறியிருப்பது போல) ?

யேசு அவரை ஒவ்வொரு கனமும் உங்களிடம் வெளிப்படுத்துகிறார். இந்த திருவருகை காலம் , நமக்கு சரியான சந்தர்ப்பம், அவரை ஒவ்வொரு கனமும் எதிர்கொண்டு, அவர் பிறந்த நாளை கொண்டாட நாம் தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில், நாம் விழிப்புனர்வுடன் இருந்து எதிர் கொள்ள வேண்டும். இந்த மறையுரைகளில் வரும் அன்பளிப்புகளை உபயோக்கிது, ஒரு வித்தியாசத்தை அவருக்கும் , உஙளுக்கும் கொடுத்து அவர் பிரந்த நாளை கொண்டாடுங்கள்.



© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 21, 2008

நவம்பர் 23, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 23, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 34 வது ஞாயிறு

Ezek 34:11-12, 15-17
Ps 23:1-3, 5-6
1 Cor 15:20-26, 28
Matt 25:31-46
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 25
31 ' வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.32 எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.33 ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.34 பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் ' என்பார்.37 அதற்கு நேர்மையாளர்கள் ' ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்?38 எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?39 எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்? ' என்று கேட்பார்கள்.40 அதற்கு அரசர், ' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ' எனப் பதிலளிப்பார்.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ' என்பார்.44 அதற்கு அவர்கள், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ' எனக் கேட்பார்கள்.45 அப்பொழுது அவர், ' மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' எனப் பதிலளிப்பார்.46 இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். '
(thanks to www.arulvakku.com)


நாம் மேய்ப்பர்களை, ராஜாக்களாக எப்பொழுதும் நினைப்பதில்லை. ஆனால், இன்றைய நற்செய்தி, நல்ல மேய்ப்பனின் அரசில், அவருடைய செல்வாக்கு, மற்றும் மாட்சிமை என்னென்ன என பட்டியலிடுகிறது. யேசு கிறிஸ்து, நல்ல அரசனாக, அவருடைய ப்ரஜைகளை, எப்படி ஒரு நல்ல மேய்ப்பன் பார்த்து கொள்வானோ, அப்படி பார்த்து கொள்கிறார்.

அரசர்கள் தங்களுடைய ஆட்சியை தன்னுடைய மக்களுக்கெல்லாம் பரப்ப, அவர்களூடைய ப்ரஜைகள் மூலமாக ஆட்சியை, அதிகாரத்தை செலுத்துகின்றனர். அதனால் தான் யேசு "' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று சொல்கிறார்.


நமது அரசர்கள், பஞ்ச காலங்களில், உணவை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க விரும்புகின்றனர். தங்கள் எல்லையின் விளிம்பிலுல்ல எல்லா மக்களுக்கும் இந்த உணவு போய் சேர விரும்புகின்றனர். யேசு இதனை எவ்வாறு செய்கிறார். அவர் அளவிற்கு அதிகமான உணவை நம்மில் பலருக்கு கொடுத்து, அதனை யாருக்கு எல்லாம் தேவையோ, அவர்களிடம் சேர்ப்பிக்க சொல்கிறார்.

நாம் கிறிஸ்து அரசரின் இந்த கட்டளையை செய்யவில்லையென்றால் என்ன ஆகும்? பசியோடு இருப்பவர்கள், கிறிஸ்து அரசர் தயாள குணம் இல்லாதவர் என்றா நினைப்பர்? இல்லை, அவர்கள் கிறிஸ்துவின் நல்ல மனதை, நாம் அவரின் கட்டளையை ஏற்று அதை செய்யும்போது பார்ப்பார்கள்.

உன்னை சுற்றியுள்ளவர்களை பார். ஒவ்வொருவரும், உன் மூலம் கடவுளுக்கு நல்ல பெயரை கொடுக்க வாய்ப்பு கொடுப்பார்கள்.

நீங்கள், யாரைவையாவது வெறுக்கீறீர்களா? உங்களை கோபம் கொள்ள செய்தவர் யார்? உங்களை வருத்தமுற செய்தவர் யார்? நீங்கள் உங்களுக்குள் இந்த கேள்விகளை கேட்டுகொள்ளுங்கள்: அவர்கள் எதற்காக பசியோடு இருக்கிறார்கள்? உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள். அந்த மனிதர்களை கொஞ்ச நாள் கவனித்து பாருங்கள். அவர்கள் எது தேவை என்று பாருங்கள். எதற்காக பயபடுகிறார்கள்? எந்த வலியோடு இருக்கிறார்கள்?


பிறகு இந்த கேள்வியை கேளுங்கள்: நமக்கு கடவுள் என்ன திறமை, கொடைகளை கொடுத்துள்ளார். இந்த குறையுள்ளவர்களுக்கு கடவுளிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்? அவர்களுக்கு கடவுளின் தயாள குணத்தை என்மூலம் கான்பிக்கலாமா? அவர்கள் நாம் கோபமாயிருந்தாலும்?


நாம், நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, இல்லையென்று சொல்லிவிட்டால், நம்மிடம் இருப்பதை, நாம் பகிர்ந்து கொள்ளவில்லையென்றால், நாமெல்லாம், ஆடு மேய்ப்பாளன் , மோட்சத்திற்கு செல்ல கூடாத ஆடுகளை ஒதுக்குவது நாமும் ஒதுக்கபடுவோம். நாம் அவர்கள் மேல் கோபமாயிருந்தாலும், சரி என்று சொல்லி, அவர்களுக்கு தேவையானதை செய்தால், நல்ல ஆடுகளாக ஒதுக்கப்பட்டு, கடவுளின் நல்ல ஆட்சி எல்லோருக்கும் பரவும், அதன் மூலம் நாம் ஆசிர்வதிக்கபடுவோம்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 14, 2008

நவம்பர் 16, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 16, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 33வது வாரம்
Prv 31:10-13, 19-20, 30-31
Ps 128:1-5
1 Thes 5:1-6
Matt 25:14-30

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 25
14 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.ஒரு தாலந்து வெள்ளி 6000 திராக்மாவுக்கு அல்லது தெனாரியத்துக்கு இணையாகும். ஒரு தாலந்து பொன் 180000 திராக்மாவுக்கு அல்லது தெனாரியத்துக்கு இணையாகும். திராக்மா, தெனாரியம் ஆகியவற்றின் விளக்கத்தை முறையே மத் 17:24, 18:28 இல் காண்க. 16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.19 நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.20 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ' ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் ' என்றார்.21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் ' என்றார்.22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ' ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் ' என்றார்.23 அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் ' என்றார்.24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ' ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ' என்றார்.26 அதற்கு அவருடைய தலைவர், ' சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா?27 அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் ' என்று கூறினார்.28 ' எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.29 ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்று அவர் கூறினார்

(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், "நமக்கு கடவுள் கொடுத்த ஆற்றலையும், அன்பளிப்புகளையும் புதைத்து வைத்து விட கூடாது" என்று நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி புதைத்து வைத்தால், "சோம்பேறியானவனாகவும், பொல்லாத பணியாளனாகவும்" மாறிவிடுவோம்.

நாம் சோம்பேறிகளாய் இருப்பதற்கு நாமே அதற்கு ஒரு காரணம் வைத்திருப்போம். "நான் அந்த அளவிற்கு ஆற்றல் உள்ளவனில்லை, போதுமான தகுதிகள் இல்லை" அல்லது "வேறு யாராவது என்னை விட நல்ல முறையில் செய்ய முடியும்" அல்லது "கடவுள் என்னிடம் இந்த செயலை செய்ய சொல்ல கூடாது" , "னம்மிடம் பொருளாதாரம் இல்லை" "போதிய பண வசதி இல்லை" , "உடல் உழைப்புக்கு தயாராய் இல்லை" , "நான் இப்போது ஓய்வு பெற்றுள்ளேன், இனிமேல், நான் எனக்கு தேவையானவற்றை பார்த்து கொள்ள போகிறேன்" என்று கூறிகொண்டு நாம் இருக்கிரோம்.

கடவுள் நமக்கு கொடுத்த எந்த ஆசிர்வாததையும், அன்பளிப்புகளையும்,ஆற்றலையும், கடவுள் நமக்கு புனிதமாக கொடுத்த எதையும் வீணாக்கினால், அதற்கு மன்னிப்பே கிடையாது. அதற்கான எந்த காரனங்களும், கடவுளரசின் முன்னிலையில் எடுபடாது. நமக்காக கடவுளின் அன்பளிப்பை உபயோகித்தால், அது கடவுளரசை போற்றுவதற்கு சமமாகாது.

நாம் எல்லோருமே, நமக்கு தேவையான ஆற்றலும், திறமையும் உள்ளவராய் இருக்கிறோம். அதன் மூலம் கடவுளரசிற்கு நிச்சயம் ஒரு மாறுதலை கொடுக்க முடியும். ஏனெனில், அந்த ஆற்றல் அனைத்து அவரிடமிருந்து வந்தவை. நாம் எல்லாம் அவருடைய ஊழியர்கள். அதனால் கடவுள் தான் நாம் எந்த செயலை செய்ய முடியும் என்றும் முடிவெடுக்கிறார். மேலும், படுத்த படுக்கையாய் இருப்பவர்களூக்கு கூட கடவுளுக்காக சில செயல்களை செய்ய வேண்டும். அந்த கஷ்டத்திலும் வேதனையிலும்,கடவுளுக்காக செய்ய சில வேலைகள் உள்ளன. அதிகமாக, ஜெபங்களிலிலும், இந்த பூமியில் பெற்ற அனைத்து ஞானத்தையும் பகிர்ந்து கொண்டவர்களாய் இருப்பர்.

உங்களிடம் யாராவது இப்படி கேட்டதுண்டா?: "கடவுள் இவவளவு நல்லவராய் இருந்தால், அவர் ஏன் சாத்தானை, பாவங்களை இந்த உலகத்தில் அனுமதிக்கிறார்? " அதற்கு பதில், "கடவுள் அதனை அனுமதிக்கவில்லை", "நாம் தான் சாத்தானை அனுமதிக்கிறோம்". இந்த உலகத்தில், நாம் கிறிஸ்துவின் உடல். நாம் அவரின் கைகள், கால்கள், அரவணைக்கும் கைகள், யேசுவின் குரல். யேசுவிடம் தஙகளது குறைகளை சொல்லி, அழும் மக்களுக்கு, அவர்கள் துயரை துடைக்க வேன்டும் என்று தான யேசு விரும்புகிறார். ஆனால், நம்மில் பலர், அவரின் அன்பளிப்புகளை புதைத்து விட்டு, கடவுளரசில் மாற்றம் கொண்டு வருவதில்லை. அதற்கு பல காரனங்கள் வைத்திருக்கிறோம். எல்லாம் இந்த பொல்லாத சோம்பேறித்தனம்!.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, November 8, 2008

8, நவம்பர் 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

8, நவம்பர் 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32 வது ஞாயிறு

Ezek 47:1-2, 8-9, 12
Ps 46:2-3, 5-6, 8-9
1 Cor 3:9c-11, 16-17
John 2:13-22

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 1

13 யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;14 கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;15 அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.16 அவர் புறா விற்பவர்களிடம், ' இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் ' என்று கூறினார்.17 அப்போது அவருடைய சீடர்கள். ' உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.18 யூதர்கள் அவரைப் பார்த்து, ' இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? ' என்று கேட்டார்கள்.19 இயேசு மறுமொழியாக அவர்களிடம், ' இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் ' என்றார்.20 அப்போது யூதர்கள், ' இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ? ' என்று கேட்டார்கள்.21 ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.22 அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.
(thanks to www.arulvakku.com)

நீஙகள் தான் கடவுளுடைய கட்டிடம், என்று இன்றைய இரண்டாவது வாசகத்தில் நாம் படிக்கிறோம். ஏனெனில் யேசு கிறிஸ்து அக்கட்டிடத்தின் அடிக்கல்லாக (அஸ்திவாரம்) இருக்கிறார். நீங்கள் கடவுளின் கோவில். ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வசிக்கிறார்.

பழைய ஏற்பாட்டில், கடவுளுடைய ஆவி ஒவ்வொரு கோவிலின் நடுவிலும், கோவிலின் இதயம் போல உள்ள பரிசுத்ததின் பரிசுத்தமான இடத்தில் வசிப்பதாக கூறுகிறது. அங்கே எந்த மனிதனும் நுழைய முடியாது. ஒவ்வொரு வருடமும், எல்லோருடைய பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்யும்போது மட்டும் பெரிய குருவானவர் அந்த அறைக்குள் செல்வார்.

இந்த பரிகாரம் செய்யும் நாளைதான், யேசு கிறிஸ்து, தான் ஒரு பெரிய குருவாக இருந்து, தம்மையே பரிகொடுத்து, அந்த நாளை பெரிய வெள்ளி ஆக்கினர். பிறகு அவருடைய ஆவியை அவருடைய சீடர்களின் இதயத்தில் வைத்தார்.

ஆனால், பரிசுத்தத்தின் பரிசுத்தமானவருக்கு நம்முடைய இதயம் எப்போதுமே திறப்பதில்லை. உங்களுடைய வாழ்க்கை எப்போதுமே மேலோங்கியே (அ) எழுச்சியுடன் இருக்கிறதா? ஒரு வேளை, யேசு, உங்கள் மேலோங்கிய வாழ்வை திருப்புகிறாரோ? அதன் மூலம் நீங்கள் முழுமையாக பரிசுத்த ஆவியானவருக்கு உங்களுடைய கதவை திறப்பதற்காக செய்கிறாரோ?

நாம் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வர, எந்த தடுப்புகளெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம், கடவுள் ஒதுக்கியும், திருப்பியும் வைக்க விரும்புகிறார். நமது எந்த ஒரு செயலும், அல்லது எந்த பொருளும், கடவுளரசின் முன்னேற்றத்திற்கு உதவவில்லை என்றால், அது கடவுளின் கோவிலை அசுத்தமாகுதல் ஆகும். யேசு அந்த அசுத்தத்தை துடைக்க விரும்புகிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், தன்னீர் பரிசுத்த ஆவியை குறிக்கிறது, நாம் நமது உள்ளே இருக்கும் பர்சுத்த ஆவியை மற்றவர்களுக்கு செல்ல அனுமதிக்கும் போது, நாம் நிறைய ஆசிர்வாதங்களை நாம் அதிகமாக்குகிறோம். ஆனால் நமது பாவங்கள் அதை வெளியே செல்ல தடை செய்கிறது. அந்த ஆவியின் பாதை அனையில் உள்ளது போல் தடுக்கபடுகிறது. அதனால் அந்த தண்ணியினால்(பரிசுத்த ஆவி) மின்சார அலை உருவாகிறது. யேசு கிறிஸ்து அந்த அடைப்பை உடைக்க முயல்கிறார். அந்த தடுப்பை பிளந்து பரிசுத்த ஆவியை வெளியே செல்ல முயல்கிறார். கேள்வி என்ன வென்றால்: நாம் யேசுவிற்கு அந்த முயற்சியில் வெற்றி பெற அனுமதிக்கிறோமோ? அல்லது அவரை அந்த முயற்சியில் யேசுவை நம்மை விட்டு விலக சொல்கிறோமோ?

பணம் மாற்றுபவர்கள், திருப்பியும் அவர்கள் கடைகளை வைத்தார்களா? நாம் யேசுவை நம்மை மாற்ற அனுமதிக்க போகிறோமோ? அல்லது பழைய வழியிலெயே செல்ல போகிறோமோ?

நமது இதயம் பரிசுத்த ஆவியானவருக்கு திறந்தால், நாம் விரைவில், நமது ஆசிர்வாதங்களை பெறுவோம். மேலும் இந்த ஆசிர்வாதம், பலருக்கு ஆசிர்வாதங்களாக மாறும்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm