Friday, December 28, 2012

டிசம்பர் 30 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 30 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருகுடும்ப விழா
Sirach 3:2-6, 12-14 or
1 Sam 1:20-22, 24-28
Ps 128:1-5
Colossians 3:12-21
Luke 2: 41-52
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 2:41-52
கோவிலில் சிறுவன் இயேசு
41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்;42 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.43விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது;44பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்;45 அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.46 மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.47 அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.48 அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ' மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே ' என்றார்.49 அவர் அவர்களிடம்,  நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்றார். 50அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.51 பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.52 இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
(thanks to www.arulvakku.com)



மகிழ்ச்சியும், ஒரு நாடகம் மூலம் கிடைப்பது தான் 5வது சந்தோச தேவ ரகசியம்” என்று போப் 2ம் ஜான் பால் அவருடைய ஜெபமாலையை பற்றிய குறிப்புகளில் கூறியுள்ளார். சிறுவன் இயேசு கிறிஸ்து கானாமற் போய் கிடைப்பதை இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதை தான், போப் 2ம் ஜான் பால்  நினைவு கூர்ந்துள்ளார். கோவிலில், இயேசு இறைப்ரசன்னத்தோடு, இயேசு இருந்த்தை பார்க்கிறோம். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். அங்கே அவரே போதனையை ஆரம்பித்தது போல, பேசினார். இந்த நற்செய்தி வாசகம், தனது தந்தை கடவுளின் இறைசேவையை ஆரம்பித்து, அவருக்காக தனது முழு நேரத்தை செலவழிக்க தயாராகிவிட்டார் என்பதை கான்பிக்கிறது. இந்த 5ம் தேவ ரகசியத்தில், எவ்வளவு சீக்கிரம் இயேசு தந்தை கடவுளுக்காக இறைசேவை செய்ய தயாராகிவிட்டார் என்பதை நமக்கு காட்டுகிறது.

இந்த தேவ ரகசியத்தின் இரண்டாம் பகுதியில், இரண்டாம் ஜான் பால் இவ்வாறு கூறுகிறார்: “நற்செய்தியின் இயற்கையான கொள்கை மூலம் அறிந்தால், மிகவும் நெருங்கிய உறவினர்கள் கூட, இறையரசின் அழைத்தலுக்கு சவால் விடப்படுகிறார்கள்” , எந்த உறவு? கண்ணி மரியாளும், சூசையப்பரும் இந்த சவாலை எதிர்கொண்டனர். அவர்கள் “கவலையோடும், பயத்தோடும்” இருந்தனர். ஏனெனில், இந்த நிகழ்ச்சியை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.  இன்றைய உலகிலும் நாம் இதே சவாலை எதிர் கொள்ளுகிறோம்.

இயேசுவின் வார்த்தைகள்  நாமும் கூட பல  நேரங்களில் புரிந்து கொள்வதில்லை. அவருடைய போதனைகள் நம் வாழ்வில் இன்னும் கடினமான சவால எதிர்கொள்ள, ஏற்றுகொள்ள தூண்டுகிறது. நம் பகைவருக்கும் நல்லது செய்ய வேண்டிய வாழ்வை வாழச்சொல்கிறது. அநீதிக்கு எதிராக இருக்க வேண்டும், அதனால் நீங்கள் பரிகாசத்திற்கு உள்ளாவீர்கள். உங்கள் மேல் குறைகள் கூறப்படும். இன்னொரு கண்னத்தை காட்ட வேண்டியிருக்கும். இன்னும் ஒரு மைல் நாம் அதிகமாக  வாழ்வில் நடக்க வேண்டும். கடவுளின் நல்ல உயர்ந்த குணங்க்களை நம் வாழ்வில் தைரியத்தோடு கடைபிடிக்க வேண்டும். பரிசுத்த வாழ்வு வாழ எது முறையோ, அது கடினமாக இருந்தாலும், அதன் படி வாழ்வேண்டும், அதே போல், கிறிஸ்துவிற்கு எதிரான வாழ்வை அறவே விட்டு விலக வேண்டும். எனினும், கிறிஸ்துவை பின் செல்ல மனப்பூர்வமாக இருந்தால், எந்த கஷ்டமாக இருந்தாலும், அதனை ஏற்று கொள்ள நாம் தயாராக இருப்போம். மேலும் இந்த செயல்கள் மூலமாக, நாம் கிறிஸ்துவை போல மாற இன்னும் அதிக புரிதலை நாம் பெற்று கொள்வோம்.

இயேசுவின் வார்த்தைகளை நாம் நம்பவேண்டும். கன்னி மரியாளையும், சூசையப்பரையும் போல, நமது இருதயத்தில், என்ன புரியவில்லையோ, அதனை இருத்தி, மேலும் அதன் அர்த்தங்களை தேடியும், கிறிஸ்துவின் பின்னே சென்று, அவர் என்ன கேட்டு கொண்டாரோ அதனை செய்ய வேண்டும். கிறிஸ்துவிற்குள் நம் வாழ்வை அர்ப்பணித்து வாழும் பொழுது, அதனிடமிருந்து வரும் மகிழ்ச்சியை நாம் கண்டு கொள்ள முடியும்.

இன்றைய திருகுடும்ப விழாவில், கன்னி மரியாளும், சூசையப்பரும் நமக்காக இயேசு என்ன சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ள நாம் அவர்களிடம் வேண்டி கொள்வோம். நமது சோதனைகளிலும், வேதனையிலும், இயேசுவை பாராமல் இருக்கும் நேரத்திலும்,  இயேசு பரிசுத்த ஆவியில் மூலம் நம்மில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள நாம் கற்று கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியின் மூலம், நமக்கு உதவி செய்கிறார், நம்மை சரியான பாதைக்கு அழைத்து செல்கிறார், பேரிரக்கத்தோடு நம்மை அன்பு செய்கிறார் மேலும், நாம் சவால்களை சந்திக்கும் நேரத்தில் இன்னும் அதிகம் நமக்கு உதவி செய்கிறார்.

© 2012 by Terry A. Modica

Friday, December 21, 2012

டிசம்பர் 23, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



டிசம்பர் 23, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால 44434நான்காம்  ஞாயிறு
Micah 5:1-4
Ps 80:2-3, 15-16, 18-19
Hebrews 10:5-10
Luke 1:39-45

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார்அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்துஎலிசபெத்தை வாழ்த்தினார்மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்அப்போது எலிசபெத்து உரத்த குரலில்பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்உம்வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதேஎன் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என்வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்றுஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்''என்றார்.

(thanks to www.arulvakku.com and arulvakku google group)
திருவருகை கால நான்காவது வாரமான இன்று, எலிசபெத்தும், அவருடைய வயிற்றில் உள்ள குழந்தை ஜானும், சிசுவான இயேசு அருகில் வந்ததை அறிந்து மிகவும் சந்தோசமாக வரவேற்பளித்தனர். துய அன்னை கர்ப்பமுற்று இருக்கிறார் என்பதை எலிசபெத் புரிந்து கொண்டார் என்று நமக்கு தெரியும், ஏனெனில், நற்செய்தியில் எலிசபெத் பரிசுத்த அவியால் நிரம்பபட்டிருந்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், சிசுவான ஜான் எப்படி அறிந்து கொண்டார்? வயிற்றுனுள் எப்படி அவர் துள்ளி குதிதார்?

குழந்தை பிறந்து முதல் மூச்சு விடும்போது தான் அதற்கு ஆண்மாவும் , உடலும் உள்ள மனிதனாக ஆகிறது என்று அபார்ஷனை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள் ஆனால், இன்னும் பிறக்காத ஜான் எப்படி இன்னும் பிறக்காத இரட்சகரை அறிந்து கொண்டார். ?

கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை, சிசுவாகவும், திவ்ய நற்கருணையிலும், பெண்களின் வயிற்றில் வளரும்  மனிதனிலும் அறிந்து கொள்ள, நாம் பரிசுத்த ஆவியின் முழுமையில் இருக்க வேண்டும். நமது ஞானஸ் நானத்திலிருந்து நமக்கு முழுமையாக பரிசுத்த ஆவி வழங்கப்பட்டு உள்ளது. எனினும், கடவுள் நம்மையும், நம் மனதையும்  மாற்றிட நம்மையே அனுமதித்து, அவரிடம் சரணடைந்தால், நாம் என்ன நினைக்கிறோமோ அதன் உண்மையான அர்த்தத்தை நமக்கு கடவுள் பரிசுத்த ஆவியின் மூலம் புரிய வைப்பார்.

சிசுவாக இருந்த யோவானுக்கு ஒன்றும் புரிந்திருக்காது, மேலும், கருவின் வெளியே நடக்கும் விசயம் கண்டிப்பாக புரிந்து கொள்ள முடியாது தான், இருந்தாலும் சந்தோசத்தில் துள்ளி குதித்தார். இதனிலிருந்து நமக்கு கிடைக்கும் போதனை என்னவென்றால், கடவுள் நமக்காக பிரச்சினைகளை கையாண்டு அதற்கு நல்ல முடிவை கொடுக்கும் முன்பே நாம் சந்தோசம் அடையலாம். கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நமக்கு புரியாது, மேலும் அவரின் திட்டம் என்ன என்று கூட நமக்கு தெரியாது.
திருவருகை காலம் முதலே, கிறிஸ்துமஸுக்காக நம் விசுவாசம் வளர நாம் தயாரித்து கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை  நாம் அறிந்து கொண்டு அதில் சந்தோசம் அடைய கடவுள் அந்த விசுவாசத்தை கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக நமக்கு கொடுப்பார். இந்த சந்தோசம் வருசம் முழுதும் நமக்குள் நீடிக்கும்.  இது வாழ்வின் வழிமுறை, விடுமுறை காலம் அல்ல. கடவுள் நமக்காக வழிகளை உண்டாக்கிகொண்டிருக்கிறார் என்று நாம் நம்புவதே கடவுள் மேல் நாம் கொண்டுள்ள விசுவாசத்தால் ,  கடவுள் என்ன செய்கிறார் என்பதே நமக்கு தெரியாவிட்டாலும், நாம் கடவுளின் நல்ல விசயத்தில் நம்பிக்கை வைக்கிறோம்.  நாம் வருத்தத்தில் இருந்தாலும், பிரச்சினைகளில் மாட்டியிருந்தாலும், கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை, நம்மிடையே இருக்கிறார் என்பதை,  நாம் கற்று கொள்ளலாம்.

அடுத்து என்ன? யோவானை போல நாமும், இறைவனின் இருப்பை,  ப்ரகனப்படுத்துபவன் ஆவோம். எப்படி? முதலில் நம்மில் உள்ள சந்தோசத்தை மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோம். விசுவாச ஆற்றலை இன்னும் அதிகம் அனுபவிக்க, கிறிஸ்துவின் அன்பை எல்லோருக்கு அறிவிக்கும் பணியில் ஈடுபட்டால், அவரின் சமாதானத்தையும், தாராள மனசையும் எல்லோருக்கும் அறிவிக்கும் பணியில் ஈடுபட்டால், கிறிஸ்துமேல் உள்ள நம்பிக்கை இன்னும் வளரும். கிறிஸ்து மற்றவர்கள் மேல் கரிசனத்தோடு இருக்கிறார் என்பதை நாம் மற்றவர்களுக்கு வெளிபடுத்துவதன் மூலம் இயேசுவை நாம் அவர்களுக்கு காட்டுகிறோம்.
கிறிஸ்துவின் எல்லா நல்ல பலண்களும், குணமும் மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் தாராள குணத்துடன் கிறிஸ்துவின் கொள்கைகளை அறிவிக்க தேவையானவர்களுக்கு பண உதவியும் செய்து நாம் அவரின் இறைசேவையில் பங்கு கொள்ளலாம். அதன் மூலம் நாம் சந்தோசம் அடைவோம். கிறிஸ்துவின் தாராள குணத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்.
© 2012 by Terry A. Modica

Friday, December 14, 2012

டிசம்பர் 16 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

டிசம்பர் 16 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால 3ம் ஞாயிறு

Zephaniah 3:14-18a
Isaiah 12:2-6
Philippians 4:4-7
Luke 3:10-18
லூக்கா நற்செய்தி

http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 3
 திருப்பணிக்குத் தயார் செய்தல்
திருமுழுக்கு யோவான் முழக்கமிடுதல்


10 அப்போது, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.11 அதற்கு அவர் மறுமொழியாக, ' இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும் ' என்றார்.12 வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, ' போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்? ' என்று அவரிடம் கேட்டனர்.13 அவர், ' உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள் ' என்றார்.14 படைவீரரும் அவரை நோக்கி, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டனர். அவர், ' நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள் ' என்றார்.15 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, ' நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.17 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் ' என்றார்.18 மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்
(thanks to www.arulvakku.com)
திருவருகை காலத்தின் 3ம் வாரமான இன்று, நமது கவனத்தை மகழ்ச்சியான மண  நிலையை கொண்ட வாராமாக , சந்தோசத்துடன் நமது கவனத்தை, நோக்கத்தை குழந்தை யேசுவின் திருவருகைக்காக காத்திருப்போம். இந்த சந்தோச தருணங்கள் நமது விசுவாசத்திற்கு இன்றியமையாதது. எல்லா வாசகங்களும், நற்செய்தியும், முழு மகிழ்ச்சையையும், சந்தோசத்தையும், காத்திருத்தலையும்  நமக்கு சொல்கிறது. நற்செய்தி வாசகத்தில், யோவான் மக்களுக்கு நற்செய்தியை தமது பேச்சில் குறிப்பிடுகிறார். மெசியா வருவதை அவர் அறிவிப்பில் தெரிந்து கொண்டு, அவர்கள் அனைவரும் மண நிறைவுடனும், சந்தோச எதிர்பார்ப்பும் அடைந்தனர்.

சந்தோசமாக இருப்பது ஒரு இறைசேவை என்று உங்களுக்கு தெரியுமா? நமது விசுவாசத்தை பகிர்ந்து கொள்ள இது ஒரு முக்கியமான வழியாகும். கலக்கமும், நம்பிக்கையின்மையும் உள்ள இடத்தில், நாம் மகிழ்ச்சியை கொண்டு செல்ல நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

யோவான் எவ்வாறு இந்த சந்தோசத்தை, அதன் இறைசேவையை நிறைவேற்றினார் என்பதை பார்ப்போம். ஒட்டக தோலை அனிந்து கொண்டு, வீர வசனமாக அவர் ப்ரசங்கம் செய்து பாவத்திலிருந்து மீண்டு வாருங்கள் என்று சொல்லும்பொழுது அவர் சந்தோசமாகவே இருந்தார் என்று நாம் நினைக்கலாம். ஆனால், இன்னும் உற்று  நோக்கி அவர் இறைசேவையை பார்த்தோமானால், இயேசுவை வரவேற்க மக்களின் இதயத்தை தயார்படுத்தினார்.

கடவுள் மேல் விசுவாசத்துடன் இருப்பது, அவரிடம் நம்பிக்கை வைத்து , எதிர்பார்ப்போடு, சந்தோசத்தில் காத்திருப்பதற்கு ஒப்பாகும். உங்களிடமோ, அல்லது உங்களுக்கு தெரிந்தவர் ஒருவர் மகிழ்ச்சியற்று இருப்பது, இயேசுவை இன்னும் முழுமையாக, நீங்கள் அழைக்காமல் இருக்கிறீர்கள். உங்கள் கஷ்டம் இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கும் அல்லது, உங்கள் விசுவாசம் குறைவானதாக இருக்கலாம், அதனை இன்னும் உறுதியாக்கவேண்டும்.

நாம் கொண்டுள்ள விசுவாசத்தில் மகிழ்ச்சியடைய, கடவுளின் அன்பினை தேடி,  நம் கஷ்டமான நேரத்தில், கடவுளின் ஆறுதலை பெற்று, அவரது அரவனைப்பில் இருந்தால், நாம் விசுவாசத்தில் சந்தோசத்துடன் இருப்போம். இயேசுவின் போதனைகளில் மகிழ்ச்சியோடு இருக்க நாம் அழைக்கப்பட்டுள்ளதையும், இயேசுவின் சந்தோசத்தையும் நாம் அறிந்து கொண்டால், நம்மில் இந்த விசுவாச மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

நம் முயற்சிகளில், இன்னும் ஒரு அடி அதிகம் எடுத்து வைக்க வேண்டும் என்று இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். பகைவரையும் அன்பு செய்வது, நமக்கு கஷ்டத்தை கொடுப்பவர்களுக்கு நல்லது செய்வது போன்றவை நமக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியை தராது. நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், பரிசுத்த வாழ்வை எப்படி வாழ்வது என்று அறிந்து அதன் படி வாழ்ந்து , அதனை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது ஆகும். இது நமக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இல்லை என்றாலும், இது தான் இயேசுவின் சந்தோசத்துடனும், சந்தோசத்திற்காக இயேச் நமக்கு கூறியதையும், நம்மோடு ஒன்றினைக்கும்.  சிலுவையை ஏற்று கொள்வது கூட சந்தோசமான முடிவை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு நல்ல செய்தி: எப்படி பரிசுத்தமாக இருப்பது என்று இயேசு நமக்கு சொல்லவில்லை. நாம் பரிசுத்தமாக இருக்க தேவையான ஆற்றலை நமக்கு இயேசு கொடுத்துள்ளார். அவரது பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்துள்ளார். மற்றவர்கள் நம்மில் பரிசுத்த ஆவியின் செயலை பார்த்தால், இது இயேசுவினால் தான் நாம் மகிழ்வோடு இருக்கிறோம் என்று அவர்கள் அறிந்து கொண்டால், நம் விசுவாசத்தின் மூலமாக அவர்கள் மணம் மாற்றமடைந்துள்ளார்கள்.
© 2012 by Terry A. Modica


Friday, December 7, 2012

டிசம்பர் 9, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை



டிசம்பர் 9, 2012  ஞாயிறு  நற்செய்தி மறையுரை
திருவருகை கால இரண்டாம் ஞாயிறு
Baruch 5:1-9
Ps 126:1-6
Philippians 1:4-6, 8-11
Luke 3:1-6

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 3

3. திருப்பணிக்குத் தயார் செய்தல்
திருமுழுக்கு யோவான் முழக்கமிடுதல்

(மத் 3:1 - 12; மாற் 1:1 - 8, யோவா 1:19 - 28)
1 திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர்.2 அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார்.3 ' பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் ' என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.4இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ' பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ' ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்;5 பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.6 மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர் ″ .

(thanks to www.arulvakku.com)

திருவருகை காலத்தின் இரண்டாவது ஞாயிறான இன்று , நற்செய்தி வாசகம், நாம் இக்காலத்தில் நமது ஆண்மிக வளர்ச்சிக்காக செலவிட வேண்டும் என்று நம்மை அறிவுறுத்துகிறது. அலங்கரிப்பதிலும், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்புவதிலும், நாம் அதிக நேரம் செலவழிக்கிறோம். கிறிஸ்து நம் வாழ்வில் மீண்டும் பிறக்கவும், அதனை ஒரு பரிசுத்த நாளாகவும் ஆக்க நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?


இந்த ஆண்டு, நாம் விசுவாச ஆண்டாகவும் கொண்டாடுகிறோம், இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி தான், நாம் விசுவாச ஆண்டாக கொண்டாடுகிறோம். விசுவாசத்தில் புதிய வளர்ச்சியை அடைய நாம் என்ன செய்கிறோம்?

இன்றைய முதல் வாசகத்தில் பதிலுரை பாடலில் நாம் “ ஆண்டவர் நமக்கு மாபெரும்செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.” என்று முழக்கமிட்டு சொல்கிறோம். இதனை நீங்கள் சொல்லும்பொழுது, உண்மையாக மகிழ்ச்சியாக சொல்கிறீர்களா? கடினமான  நமது ஒவ்வொரு நாள் வாழ்விலும், விசுவாசத்தோடு இருந்தால் தான், நாம் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.
ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” என்று யோவான் முழங்குகிறார்.
இயேசுவோடு நல்லுறவு கொண்டு, அவர் மேல் உள்ள விசுவாசத்தில் நிலைத்து, மகிழ்ச்சியோடும் சந்தோசத்துடனும் இருக்க எப்படி நம்மை தயாரிப்பது என்று நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டிய நேரமிது.

உங்கள் வாழ்வில் உள்ள குழப்பங்களையும், கோணல்களையும் நேராக்க என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உறுதியான விசுவாசத்தை உங்களிடம் வைக்காமல் இருக்க செய்யும் பாவத்தை ஒழிக்க நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்ன மாதிரியான தண்டனை உங்களை நேராக்கும்? உங்களுக்கு நம்பிக்கையில்லையா? ஏனெனில், இயேசு உங்கள் வாழ்வை நேராக்குவார் என்ற விசுவாசத்தின் கதவுகளை நீங்கள் இன்னும் திறக்கவில்லை.


இயேசுவின் மேல் விசுவாசம் கொள்ள, மலை போல் குவிந்திருக்கும் தடைகளை அகற்ற இயேசு பல முறைகளில் , அந்த மலையை தகர்த்தெறிவார். இந்த திருவருகை காலத்தில், அந்த வழி முறைகளை தெரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. அந்த வழி முறைகளை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய காலம் இது. இந்த விசுவாச ஆண்டின் மூலமாக இயேசு நமக்கு வழிமுறைகளை காட்டுகிறார். இது நமது கோவிலிலும், விசுவாச கூட்டங்கள் மூலமாக நமக்கு கிடைக்கிறது.

குழப்பமான பாதை கொண்ட சாலைகள் போல உங்கள் மனதில் எதையெல்லாம் நினைத்து குழம்பி கொண்டிருக்கிறீர்கள்? பரிசுத்த ஆவியின் மேல் உள்ள விசுவாசம் உங்களை பரிசுத்த வாழ்விற்கு அழைத்து செல்லும். உங்களில் கடினமானது எது? எது கூர்முனையோடு அடுத்தவரை காயப்படுத்துகிறது? வைரத்தை பட்டை தீட்டுவது போல, இயேசு உங்களை பட்டை தீட்ட ஆசைபடுகிறார். இதையே வேறு மாதிரி சொல்லவேண்டுமானால், கடவுளின் மீட்பை எப்படி பார்க்க விரும்புகிறீர்கள்? அதற்காக என்ன செய்ய போகிறீர்கள்?
© 2012 by Terry A. Modica


Friday, November 30, 2012

டிசம்பர் 2, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 2, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால முதல் ஞாயிறு
Jeremiah 33:14-16
Ps 25:4-5, 8-10, 14
1 Thessalonians 3:12-4:2
Luke 21:25-28, 34-36

புனித.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21:25-36 

அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும்அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாதுகுழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள்அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத்தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்: ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது." இயேசு அவர்களுக்கு மேலும் ஓர் உவமைசொன்னார்: "அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும் போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக்காலம்நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதைநீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா. " மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி,களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல்உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும்விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்றார். 
(thanks to arulvakku group)
இரண்டாம் வத்திக்கான் சங்கம் துவங்கி 50வது வருட நினைவாக, போப் பெனடிக்ட் 16ம் அருளப்பர், நம்மையெல்லாம் இவ்வருடம் விசுவாச வருடமாக கொண்டாட நம்மை கலந்து கொள்ள அழைக்கிறார். அதனால், இத்திருவருகை காலத்தில், நமது விசுவாசத்தை இன்னும் உறுதியாக்க இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவிடம் வேண்டுவோம். இன்றைய கால கட்டத்தில், நம்மிடையே உள்ள பல கஷ்டங்களின் மத்தியில், கிறிஸ்தவர்களாகிய நாம், விசுவாசம் தான், நமக்கு நம்பிக்கையையும் வெற்றியையும் தருகிறது என்பதை உண்மையாக புரிந்து கொண்டுள்ளோம்.

கத்தோலிக்கர்கள் அனைவரும், இன்றைய உலக தேவைகளை அறிந்து, திருப்பலிக்கு செல்வது, ஒரு அற்புதமான நிகழ்வு என்று நாம் உணர்ந்திருக்கிறோம். ரொட்டியும் திராட்சை ரசமும், கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் தெய்வீக அற்புதத்தால் மாறுகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். திவ்ய நற்கருணையில், கிறிஸ்துவின் ப்ரசன்னத்தால், நீங்கள் மாறியிருக்கிறீர்களா? அப்படியென்றால், கோவிலை விட்டு வெளியே வந்த பின்பு, உங்களை விசுவாசத்தின் சாட்சியாய் மற்றவர்கள் பார்த்திருப்பார்கள் தானே?

உண்மைகளை தெரிந்து வைத்திருப்பதற்கும், அதன்படி வாழ்வதற்கும் வித்தியாசம் உள்ளது. நீங்கள் எந்த வேண்டுதலை இறைவனிடம் கேட்டு, இன்னும் கடவுள் கொடுப்பார் என்று காத்திருக்கிறீர்கள்? அந்த வேண்டுதலை திருப்பலியில் இறைவனிடம் கொடுக்கும் பொழுது, விசுவாசத்தால் வரும் நம்பிக்கையில் நிலைத்திருந்து வேண்டுகிறீர்களா?  திவிய நற்கருணை ஆசிர்வதிக்கப்படும்பொழுது, கடவுள் ரொட்டி துண்டுகளையும், திராட்சை இரசத்தையும், கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றுகிறார் என்ற நம்பிக்கை நம்மிடம் இல்லையென்றால், திவிய நற்கருணை மூலமாக இயேசு நமக்கு இறைசேவை செய்து வருகிறார் என்று நாம் விசுவாசம் கொண்டிருக்கமாட்டோம்.

இன்றைய நற்செய்த்யில், இயேசு அவரது இரண்டாவது வருகையை குறிப்பிடுகிறார். அதையே நாம் அனுதின வாழ்வில் எடுத்து கொண்டால், நமக்கும் எதிர்காலத்தை பற்றி பயமும், என்ன நடக்க போகிறதோ என்ற் எண்ணத்துடனும் நாம் இருக்கிறோம். அது தான் இவ்வுலக வாழ்வாகும். இயேசு அதற்காக நமக்கு உதவி செய்ய ஆசைபடுகிறார். இதனை நாம் விசுவசித்தால்,  நமக்கு வெற்றியும் நம்பிக்கையும் வரும்.
எனினும், நாம் நமது ப்ரஸ்னையையே நினைத்து கொண்டு, கிறிஸ்துவை பாராமல் இருந்துவிட்டால், நாம் விசுவாசத்தில் வாழ்வதில்லை. நமது இருதயம் தெய்வீக தேடலில் மங்கி விடுவதை இயேசு கவனத்தில் கொண்டு நமக்கு எச்சரிக்கை செய்கிறார். கிறிஸ்துவை சுற்றியே இருக்க வேண்டியதை நாம் மறந்து விடுகிறோம். பரிசுத்த ஆவியின் ஆலோசனையை கேட்க நாம் தவிர்த்துவிடுகிறோம். ஆனால் இயேசுவிடம் நம் வாழ்வை விசுவாச வாழ்க்கையாக மாற்றியமைக்க வேண்டினால், நமது வாழ்வு விழிப்புடனும், ஆர்வத்துடனும், கடவுளை நம்பினால், நம் வாழ்வில் என்ன நடந்தாலும், அவர் உதவி செய்வார் என்று இருப்போம்.

நமது ப்ரச்னைகள் நம்மை பயம் கொண்டவராக செய்கிறது. இயேசுவின் நம்பிக்கை கொள்ளவும், பயத்தை விட்டொழிந்து மகிழ்ச்சியில் வாழவும், விசுவாசம் நமக்கு வழியாக இருக்கிறது. தெய்வீக வாழ்வில் சோம்பலாயிருப்பது, நமது வாழ்வில் மிகவும் சோர்வை ஏற்படுத்தும்.
© 2012 by Terry A. Modica

Saturday, November 24, 2012

நவம்பர் 25, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை


நவம்பர் 25, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 34ம் ஞாயிறு
Dan 7:13-14
Ps 93:1-2, 5
Rev 1:5-8
John 18:33b-37

நற்செய்தி வாசகம்

அக்காலத்தில் பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், ``நீ யூதரின் அரசனா?'' என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, ``நீராக இதைக் கேட்கிறீராஅல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?''என்று கேட்டார்.
அதற்குப் பிலாத்து, ``நான் ஒரு யூதனாஎன்னஉன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?''என்று கேட்டான்.
இயேசு மறுமொழியாக, ``எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல'' என்றார்.
பிலாத்து அவரிடம், ``அப்படியானால் நீ அரசன்தானோ?'' என்று கேட்டான்.
அதற்கு இயேசு, ``அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்'' என்றார்.

இன்றைய வாசகத்தில், கிறிஸ்து அரசனா என்ற கேள்வி எழும்பியபொழுது, இயேசு அதனை விண்ணகத்தின் அரசனாகவும், அதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ளுமாறு நம்மை எல்லாம் வேறு பாதைக்கு அழைத்து சென்று விட்டார். மேலும் “. உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்.” என்றும் கூறுகிறார். அவர் ஒன்றும் ஒரு நாட்டிற்கோ அல்லது உலகத்திற்கோ அரசனில்லை; அவர் உண்மையின் அரசர், உண்மையை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்.

இந்த உண்மைகளையெல்லாம், நாம் முழுமையாக அறிந்து கொள்வதற்கு, இயேசு நமக்கு ஆசிரியாக இல்லாமலும், உண்மையை நமக்கு விளக்கமாக சொல்லாததாலும், நாம் சாத்தானின் ஆளுகைக்கு உள்ளான இவ்வுலக வாழ்வில் , நாமாக தப்பிதமாக அர்த்தத்தை புரிந்து கொண்டு, நாமாக ஒரு அர்த்தத்தை புரிந்து கொள்கிறோம். சாத்தான் ஆளும் இவ்வுலகில் உண்மை மட்டும் மாற்றாக நெய்யபட்டிருக்கிறது. இது உண்மையில்லை. நினைவில் வைத்து கொள்ளுங்கள், இயேசு இவ்வுலகிற்கு வந்து சாத்தானை ஒழித்து அவர் படைத்தது அனைத்தையும் விண்ணக அரசின் ராஜ்ஜியத்திற்கு கொண்டுவந்தார். கிறிஸ்துவை அரசனாக ஏற்று கொள்வபவர்கள், அவருடைய குரலை கேட்டு , உண்மையில் வாழ்கிறார்கள்.

சூழ் நிலையின் உண்மையை அறியாமல், நாம் பாவம் செய்கிறோம். நமது வாழ்வின் முழுமையாக யேசு இன்னும் அரசராகவில்லை.

உதாரணத்திற்கு, உங்களை ஒருவர் ஏதாவது கேட்டு, அதனை உங்களால் கொடுக்க முடியாமல் போனால், எடுத்து காட்டாக , கோவில் கட்ட பொருளாதார தேவை  என்றோ அல்லது பக்கத்து விட்டு நோயாளியாக இருக்கட்டும், அல்லது நம்மோடு வேலை செய்பவர்கள் உங்களை விட விசுவாசம் குறைவாக இருந்தால், அல்லது வயதான பெற்றோர்கள் உங்கள் உதவி தேவைக்காக காத்திருப்பவர்கள்.


உங்களால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? உங்களோடு சொந்த வேலைகளிலே நீங்கள் சோர்வாகி, மற்ற வேலைகள் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? இது நமது உடல் சார்ந்த ஒரு முடிவாகும். நாம் செய்யும் இந்த வேலைகளை விட்டுவிட்டு நாம் வேறு வேலை செய்தால், நாம் வாழ்வை அனுபவிக்க முடியாது என்று நம் உடல் கூறுகிறது. இது தான் உண்மையை மறைப்பது ஆகும். நாம் நமது தேவைகளை மட்டும் பார்த்து கொண்டு, மற்றவர்களின் வேலைகளை செய்யாமல் இருந்தால், நாம் சந்தோசமாக இருப்போம் என்று நாமாக நினைத்து கொள்கிறோம்.

நிஜத்தில், இயேசுவின் குரலை கேட்டால்,  நாம் சந்தோசமாக நமது வாழ்க்கை முறை அமைந்துவிடும். இயேசுவே “சமாரியனாக இருங்கள் , மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள்” என்று கூறுகிறார். நாம் அவரின் போதனைகளை கேட்டு, அவரை விசுவசித்து , வாழ்ந்தோமானால், நமக்கு மிகவும் சந்தோசமாக வாழ்க்கை இருக்கும். அவர் சொல்வதில் கொஞ்சம் புரிந்தால் கூட போதும்.

கடவுளின் விருப்பம் எதுவோ அதனை செய்து கொண்டு வந்தால், இன்னும் அதிகமாக நாம் அவரை புரிந்து கொள்வோம். நாம் செய்த இறைசேவையால் வரும் சந்தோசத்தில் , நமது மகிழ்ச்சி இன்னும் அதிகமாகும். நாம் பாவம் செய்யும்போது, நல்ல செயல்கள் செய்வதால் வரும் பயனை நாம் புரிந்து கொள்ளாததால் நாம் பாவம் செய்கிறோம். கிறிஸ்துவின் அரசாட்சியில் , பரிசுத்த ஆவியின் ஞானத்தாலும், அவருடைய உதவியாலும், நாம் பாவ வாழ்விலிருந்து சுதந்திரம் அடைவோம்.

© 2012 by Terry A. Modica