Friday, October 20, 2017

அக்டோபர் 22 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

 அக்டோபர் 22 2017   ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Isaiah 45:1, 4-6
Ps 96:1, 3-5, 7-10
1 Thessalonians 1:1-5b
Matthew 22:15-21
மத்தேயு  நற்செய்தி

சீசருக்கு வரி செலுத்துதல்
(மாற் 12:13 - 17; லூக் 20:20 - 26)
15பின்பு பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள்.

16தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்.

17சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்என்று அவர்கள் கேட்டார்கள்.

18இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு
வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?

19
வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்
 என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.

20இயேசு அவர்களிடம்
இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?”
 என்று கேட்டார்.

21அவர்கள், “சீசருடையவைஎன்றார்கள். அதற்கு அவர்
ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்
 என்று அவர்களிடம் கூறினார்.

22இதைக் கேட்ட அவர்கள் வியந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
(thanks to www.arulvakku.com)

நம் இதயத்தில் பொறிக்கபட்ட வரைபடம்
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசு பரிசேயர்களிடம் வரி கொடுக்க வேண்டிய காசில் எந்த உருவம் பொறிக்கபட்டிருக்கிறது  என்று கேட்கிறார். இதன் மூலம், நமது இதயத்தில் எந்த உருவம் பொறிக்கபட வேண்டும் என்று நமக்கு போதிக்கிறார். நமது இதயம் கடவுளிடம் இருக்க வேண்டும் என சொல்கிறார். கடவுளிடம் மட்டுமே இருக்க வேண்டும் என இயேசு சொல்கிறார்.

ரோமானியர்கள் அவர்களின்  அரசர்களை தெய்வமாக பார்த்தார்கள். அதனால், ரோமானிய காசை கையில் வைத்திருப்பது , அவர்களின் கடவுளின் படத்தை தம்முடன் வைத்திருப்பதாக நினைத்தார்கள். இயேசுவை சோதிக்கும்போழுது பரிசேயர்கள் இதனை நினைத்தே கேட்டார்கள்.
சீசருக்கு வரி செலுத்துவது   என்பது அந்நிய நாட்டிற்கு வரி செலுத்துவதை விட மேலானது . இது தெய்வ சித்தாந்தங்களோடு சம்பத்தப்பட்டது. இயேசு உண்மையான தீர்க்கதரிசியாக  இருந்தால், யூதர்கள் இந்த காசினை வைத்திருப்பதற்கு எதிர்த்து பேசியிருக்க வேண்டும். அவர் உண்மையான மெசியாவாக இருந்தால், அடிமைதனத்தையும் , அந்நிய நாட்டு வரியையும் துரத்தியிருக்க வேண்டும். அப்படி தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
இயேசுவிடம் காட்டிய , ரோமானிய காசை அவர்கள் கையில் எப்படி வைத்திருந்தார்கள் என்று நமக்கு தெரியாது. அவர்கள் பர்ஸில்  இருந்து எடுத்து இருந்தால், அவர்களின் போலித்தனத்தை காட்டுகிறது. ஆனால் இயேசு அவர்களின் போலித்தனத்தை வெளிபடுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை ஆனால் உண்மையான மெசியா தான் என்பதை அழுத்தாமாக வெளிபடுத்தினார்.
நாம் கடவுளுடைய சொந்தங்களாக இருப்பதால், இயேசு நம் இதயத்தில் பொறிக்கபட்டிருக்கிறார். பாவங்களின் அழிவிலிருந்து நம்மை மெசியா மீட்டு உள்ளார்.  நம் பாவங்களால் சாத்தானின் பிடியிலிருந்த நம்மை இயேசு மீட்க நாம் அனுமதித்து உள்ளோம்.
உங்கள் வாழ்க்கையை பார்க்கும் பொழுது எந்த படத்தை பார்க்கிறார்கள்? அவர்கள் உங்களை பார்க்கும் பொழுது இயேசுவின் படம் உங்களில்  பொறிக்கபட்டிருப்பதை பார்க்கிறார்களா ? ஓரளவிற்கு அவர்கள் இயேசுவை உங்களிடம் பார்ப்பார்கள். ஏனெனில், நீங்கள் கடவுளின் இறையரசில் ஓர் அங்கமாகும்.

© 2017 by Terry A. Modica

Thursday, October 12, 2017

அக்டோபர் 15 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

அக்டோபர்   15 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 28ம்  ஞாயிறு
Is 25:6-10a
Ps 23:1-6
Phil 4:12-14,19-20
Matthew 22:1-14
மத்தேயு நற்செய்தி
திருமண விருந்து உவமை
(லூக் 14:15 - 24)
1இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது:

2விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.

3திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.

4மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

5அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்.

6மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.

7அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.

8பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள்.

9எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்என்றார்.

10அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.
11அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.

12அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்.

13அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்என்றார்.

14இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.
(thanks to www.arulvakku.com)
போலியானவர்களை கையாள்வது எப்படி ?
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசு போளியானவர்களை பற்றி குறிப்பிடுகிறார் (மக்கள் மிகவும் பக்தியாகவும் , திருப்பலிக்கு செல்பவர்களாகவும் காட்டி கொண்டு இயேசுவின் நட்புக்காக அதனை பெறுவதற்காக முயற்சிப்பவர்களை பற்றி இங்கே குறிப்பிடுகிறார்)  அதே நேரத்தில் நியாயமான நற்குனத்துடேன் கூடிய இறைவனுடன் நட்பை அவர்கள் பேணுவதில்லை.
உங்களுக்கு சிலரின் குணங்கள் தெரியும்: உங்களுடைய நட்பு அவர்களுக்கு பயன் உள்ளதாய் இருக்கும் வரை அவர்கள் உங்களோடு நட்பாய் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லையென்றால், அவர்களுக்கு பயன் உள்ளதாய் இருக்கும் பொழுது அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். கத்தோலிக்க மத சடங்குகளை மிக சரியாக செய்வார்கள், கோவிலுக்கு கண்டிப்பாக வருவார்கள், ஆனால் வீட்டில் ஜெபம் செய்ய மாட்டார்கள். அவர்கள் விசுவாசம் மிகவும் ஆழ்ந்த பக்தி இல்லாமல் இருக்கும் , பல வேலைகள் அவர்களை கோவிலை விட்டு செல்ல செய்யும்.  குருவானவர் பாவம் செய்யும் பொழுது அவர் கத்தோலிக்கத்தை விட்டு வெளியேறுகிறார். அவர்கள் உங்களுடன் கொண்டுள்ள உறவிற்கு, அவர்கள் தியாகம் செய்து, மன்னிப்பு பெற்று மனம் திருந்த வேண்டும், ஆனால், அவர்கள் உங்களை புறம் தள்ளுகின்றனர்.
உண்மையான  கிறிஸ்தவர்களிடமிருந்து , கடவுளின் பிரசன்னம், அவரின் ஆழ்ந்த அன்பு அவர்கள் மூலம் நாம் கான முடியும். மேலும், கடினமான அன்பு காட்ட முடியாதவர்களிடம் கூட அவர்கள் அன்பு காட்டுவர்.
இயேசு இன்றைய நற்செய்தியின் உவமை மூலம் எப்படி போளியானவர்களை கையாள்வது  என்று சொல்கிறார். விருந்துக்கு எல்லோருக்கும் அழைப்பு விடுக்கபடுகிறது. ஆனால் சிலர், கடவுளின் குழந்தையாக சந்தோசமான வாழ்வை மட்டும் வாழ் விரும்புகின்றனர் ஆனால், கடவுளின் அன்பை மற்றவர்கள் மேல் காட்ட அதற்காக சில துன்பங்களை ஏற்க அவர்கள் மனம் ஒப்பவில்லை. கடவுள் அவர்களை ஒரு எல்லைக்குள் கொண்டு வருகிறார்.
நீங்கள் விருந்திற்கு அழைத்த சிலரை பற்றி நினைத்து பாருங்கள். அந்த   விருந்து கடவுளுடன் உண்டான நட்பிற்கும் உள்ளடக்கியது. ஆனால், அவர்கள் அதனை மாற்றி அமைக்க விரும்புகிறார்கள், அவர்களின் தவறான நடவடிக்கை களினால் இன்னும்  தவறாக கொண்டு செல்கிறார்கள். அவர்கள் மேல் நாம் அன்பு செலுத்த வேண்டும். அனால், அவர்களால் நமக்கு எந்த துன்பமும் நேரக் கூடாது. நம்மால் முடிந்த வரை அந்த உறவு தொடர நாம் முயற்சிக்க வேண்டும். ஆனால், அதனை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள வில்லை என்றால், அவர்கள் இந்த உறவை தள்ளி விடுகின்றனர் என்று அர்த்தம்.

எல்லா வழிகளிலும் நீங்கள் துன்பத்தை  ஏற்று கொண்டு அவர்களை நல்ல வாழ்விற்கு அழைத்து  வர வேண்டும் என கடவுள் விருபுகிறார். அதன் முலம் அவர்கள் மனம் மாறவும், குணமடையவும் உங்கள் முயற்சியால் நடக்க வேண்டும் என விருபுகிறார். எனினும், அது ஒரு எல்லை கோட்டோடு நிற்க வேண்டும், நமது முயற்சி வீனானது என்றால், கடவுள் உங்கள் முயற்சியை கைவிட்டு விட வேண்டும் என்று சொல்கிறார்.
மேலும் கண்டிப்பாக , வேறு தொடர்பில், கடவுளோடு கூடிய நல்ல உறவில் உள்ளவர்களோடு நமது பயணம் இருக்க வேண்டும்.

© 2017 by Terry A. Modica