Friday, May 25, 2012

மே 27, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 27, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த ஆவியின் ஞாயிறு
Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3-7, 12-13 or Gal 5:16-25
John 20:19-23 or John 15:26-27; 16:12-15
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 20

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

கிறிஸ்துவின் ஆவியான பரிசுத்த ஆவி நமக்கு தாராளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் பரிசுத்தமாகவும், கிறிஸ்துவின் இறை சேவையை தொடர முடியும்நாம் தனியாக இயேசுவை போல ஆக முடியாது. ஆனால், அவரின் ஆவி நம்மில் வாழ்ந்தால், சுறுசுறுப்பாக அதன் வேலையை செய்தால், நாம் கிறிஸ்துவின் பரிசுத்தத்தை பெறுவோம், அவரின் விசுவாசம், எல்லையில்லாத அன்பு, அமைதி, நம்பிக்கை, இடைவிடா ஆற்றலும், மேலும் இயேசுவிடம் நாம் கானும் அத்தனையும் நாம் பெறுவோம்.


பரிசுத்த ஆவியை உங்கள் ஞானஸ்நாணத்தில் பெற்றீர்கள். உறுதி பூசுதலில், பரிசுத்த ஆவியின் ஆற்றலையும், இருப்பையும் , இது நமக்கு உறுதி படுத்தபடுகிறது. மேலும் பரிசுத்த ஆவியின் ஆற்றல் உங்களில் அதிகபடுத்தப்படுகிறது. பெந்தகோஸ்தே நாளிலிருந்து, பரிசுத்த ஆவியை கடவுள் இவ்வுலகிற்கு கொடுத்ததிலிருந்து,   அவரின் இறையரசிற்கு சேவை செய்பவர்கள் மூலமாக  இவ்வுலகை கடவுள் மாற்றுகிறார். அவரின் ஆவியை தாராளாமாக அதிகமாகவே நமக்கு அள்ளி தந்து , அவர் கேட்பதையெல்லாம் நாம் செய்து வெற்றி பெற துணையாக இருக்கிறார்ஆனால் அவரின் பரிசுத்தமும், இறை சேவையும், நாம் எவ்வளவு வெளியே தருகிறோமோ அவ்வளவு தான் இவ்வுலகிற்கு கிடைக்கும்.

என்னோடு சேர்ந்து இந்த பரிசுத்த ஆவியின் ஜெபத்தை சொல்லுங்கள்:

அன்பு இயேசுவே, பரிசுத்த ஆவியின் முழுமையும் என்னுள் வர செய்யும், உமது பரிசுத்த ஆற்றலில் என்னை வாழச் செய்யும், உமது உண்மைகளை முழுதும் புரிந்து கொள்ள  உதவி செய்யும்.உங்கள் உண்மையை ஏற்று கொள்ள  எனது இதயத்தை திறந்தருளும், நான் அந்த உணமையை புரிந்து கொள்வதற்கு முன் என் இதயத்தை திறந்தருளும்.
பரிசுத்த ஆவியே, மற்ற எல்லாவற்றையும் அறிந்து கொள்வதை விட, இறையரசை புரிந்து கொள்ள உதவும். உன்னோடு என்னை இனைத்து , எதற்காக நான் அனுப்பபட்டேன் என்பதை புரிந்து கொள்ள உதவும், மண உறுதியையும், உடல் ஆற்றலையும் கொடுத்து , என்னை இவ்வுலகில் இறையரசின் சேவை செய்ய உதவும். எனக்கு நீ மட்டுமே தேவை.

பரிசுத்த ஆவியே, எனது பாவத்தை நினைத்து , அதற்காக உண்மையாக வருத்தபட்டு, அதனை கழுவி நீக்கிட உதவி செய்யும். எனது மன்னிப்பிற்காக நான் வேதனை அடையும் பொழுது எனக்கு ஆறுதலாக இருந்தருளும் , புதிய வாழ்விற்கு உமது சந்தோசத்தை கொடுத்தருளும். இந்த புதிய மகிழ்ச்சியை , இரக்கத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு துனை புரியும்.

இயேசு அவர்களுக்கு கட்டளையிட்டார், " இவ்வுலகிற்கு சென்று நற்செய்தியை அறிவியுங்கள்" என்னுடைய கொடைகளையும், திறமைகளையும் உபயோகித்து  இவ்வுலகை மாற்றுங்கள். எனக்கென்று எதை செய்ய வேண்டும், எதனை செய்ய கூடாது  என்று ஒரு வரையரை இருக்கிறது. என்னுடைய எண்ணங்களையும், முன்னுரிமைகளையும் , குறைகளையும் உங்களிடம் சரணடைய செய்கிறேன். உங்களுக்கு உபயோகமாக இருக்கவே விரும்புகிறேன். நீங்கள் எங்கே அழைத்து செல்கிறீர்களோ அங்கே செல்லவே விரும்புகிறேன். பரிசுத்த ஆவியே, இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த , வெற்றியின் அன்பை இவ்வுலகிற்கு பரப்ப, என்னை கொடைகளோடும், ஆற்றலோடும் அனுப்பி வையும்.!
பரிசுத்த ஆவியே என்னில் வாரும், என்னை புதுபித்தருளும். !ஆமென்.
© 2012 by Terry A. Modica


Friday, May 18, 2012

மே 20, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 20, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் 7ம் ஞாயிறு

Acts 1:15-17, 20-26

Ps 103:1-2, 11-12, 19-20
1 John 4:11-16
John 17:11b-19


யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 17

11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.12 நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.13 ' இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன்.14 உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது.15 அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.16 நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.17 உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.19 அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன். '
(thanks to www.arulvakku.com)


விசுவாசத்தில் நம்மை எல்லாம் சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் ஒன்றாய் இனைப்பது எது? ஒரே கடவுளை, இயேசு கிறிஸ்துவை யாரெல்லாம் அன்பு செய்து, அவரை பின்செல்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஒன்றாய் இருக்கிறார்கள்.

நம்மில் பல வேற்றுமைகள் இருக்கலாம், ஆனாலும், ஒன்றாய் இருக்கிறோம். கடவுளுக்கு சேவை செய்பவர்களுக்குள், கோவிலில் வேலை செய்பவர்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கலாம், ஆனலும் ஒற்றுமை இருக்கிறது. கத்தோலிக்கர்களிடமிருந்து, பிரிந்த புராடஸ்டன்டு கிறிஸ்தவர்கள் நம்மிலிருந்து வேறுபட்டு இருக்கலாம், இருந்தாலும், கிறிஸ்துவின் மேல் ஒரே நம்பிக்கையுடன் நாம் இனைந்து இருக்கிறோம்

இயேசு இந்த ஒற்றுமைக்காக வேண்டிக்கொண்டார், இதனை தான் இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். நாம் அவரின் வேண்டுதலை நிறைவேற்றுகிறோமோ? அல்லது அதற்கு எதிரான பாதையில் செல்கிறோமோ?

நம்மில் என்ன வேறுபாடு இருந்தாலும், கடவுளில் ஒன்றாக இருப்பது எந்த பாதிப்பையும் கொடுக்காது. நாம் கிறிஸ்துவை ஒன்றாக ஆராதிப்பதில் இனைந்து இருக்கிறோம். ஆராதனை வழிபாடுகள் வேறு மாதிரியாக இருக்கலாம், ஆனாலும், நாம் கிறிஸ்துவை கடவுளாக ஏற்று கொள்கிறோம். எல்லோரிடமும், ஒரே எண்ணத்துடன் கடவுளை வணங்குவது, நம்மில் பலருக்கு ஊக்கத்தையும் கொடுக்கிறது. ஒரே உடலில் உள்ள பல பாகங்களாய் இருக்கிறோம் , இருந்தும், ஒரு உறுப்புக்கு இன்னோரு உறுப்பு தேவையாக இருக்கிறது என்பதை நாம் ஏற்று கொள்ள வேண்டும், அதே போல், கிறிஸ்துவின் உடல் இப்பூமியில் நன்றாக வளர நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் இனைந்து செயல்பட வேண்டும்.


இயேசுவின் ஒன்றாக இருப்பது, உலகில் மற்ற அனைத்திடமிருந்தும் பிரிந்து இருக்கிறோம். இறையரசில் , நாம் ஒன்றாய் இருக்கிறோம் அதனால், இவ்வுலகில் சாத்தானின் அரசிடமிருந்து வெளியே இருக்கிறோம். நமது பாவங்களை கழுவி , நமது ஒற்றுமையை இன்னும் உறுதியாக்க வேண்டும்

இயேசு அவரது தந்தையிடம், " உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது." என்று சொல்கிறார்.

எல்லோருமே, எந்த கிறிஸ்தவ பிரிவுகளில் இருந்தாலும், கிறிஸ்துவின் பின்பற்றுபவர்களும், அவரை அன்பு செய்பவர்களும், இறைசேவை செய்பவர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், திருக்குடும்பத்தை சேர்ந்தவர்கள். சிலுவையின் ஒரே பக்கத்தில் நாம் எல்லோருமே இருக்கிறோம், அது நித்திய வாழ்வையும், மீட்பையும் கொடுக்கும் சிலுவையாகும்.

எனினும், நாம் பாவத்தில் விழுந்தோமென்றால், இவ்வுலகம் நினைப்பது போல, நாமும் நினைத்து மற்ற கிறிஸ்தவர்களை கண்டித்தும், நிந்தித்தும், பரிகாசம் பன்னியும் இருந்தோமானால், இறையரசின் அன்பிலிருந்தும், நமது சகோதர சகோதரிகளிடமிருந்தும், நாம் பிரிந்து செல்கிறோம். இயேசு வேண்டிகொண்ட ஒற்றுமையை நாமே உடைக்கிறோம்.
© 2012 by Terry A. Modica


Friday, May 11, 2012

மே 13, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மே 13, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 10:25-26, 34-35, 44-48
Ps 98:1-4
1 John 4:7-10
John 15:9-17

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 15

9 என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.10 நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.11 என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.12 ' நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.13 தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.14 நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.17 நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.
(thanks to www.arulvakku.com)




உண்மையான கிறிஸ்தவ வாழ்வில் பணியாளானாக இருப்பது  ஒரு குறிக்கோளாகும். இதனை இறுதி உணவில் இயேசு இன்னும் அழுத்தமாக நமக்கு குறிப்பிட்டு சொன்னார்பணிவிடை பெறுவதற்கு அல்ல, பணி செய்யவே இவ்வுலகிற்கு வந்தேன். அதே போல் நாமும் ஒருவருக்கு ஒருவர் பணிவிடை செய்ய வேண்டும். இறையரசின் பணியாளராக கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களை நாம் அழைக்கிறோம். ஆனால் இன்றைய நற்செய்தியிலோ, இயேசு நம்மை அவரின் நண்பர்களாக இருக்க அழைக்கிறார். அவரின் அடிமையாக அல்ல. அவரே மாற்றி பேசுகிறாரா?

அப்படி ஒன்றும் இல்லை! நண்பர்கள் ஒருவொருக்கு ஒருவர் மற்ற நண்பர்களுக்கு பணிவிடை செய்து கொள்வார்கள் ஏனெனில் அவர்கள் மேல் அக்கறை கொண்டுள்ளனர். அடிமைகள் கடமைக்காகவும், தண்டனைக்கு பயந்தும் வேலை செய்வார்கள். இயேசு சொல்கிறார்: "எனது கட்டளைகளை கடைபிடித்தால், எனது அன்பில் நிலைத்திருப்பீர்கள்". இதனை நண்பனாக அல்லது அடிமையாக ஏற்று கொள்கிறீர்களா?
அடிமைகள், கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்காவிட்டால், என்ன ஆகுமோ என்று பயப்படுகிறார்கள். தன்னையே காத்து கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் நண்பர்களோ, மற்றவர்களை பற்றி அக்கறை கொண்டு, கடவுளின் கட்டளைகள் என்ன என்று தேடியும், அதன் மூலம் அன்பினால் பகிர்தலும், மற்றவர்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பாகவும் எடுத்து கொள்வார்கள்.

"இது என் கட்டளை: நான் உங்களை அன்பு செய்வது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்" என்று இயேசு கூறுகிறார். இது தான் எல்லா கட்டளைகளுக்கும் பெரிய கட்டளை; நட்பின் கட்டளை என்று நாம் சொல்லி கொள்ளலாம். மேலும் இயேசு: "நான் உங்களை எந்த அளவிற்கு அன்பு செய்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் நன்பரே: தந்தை கடவுள் எனக்கு என்ன சொல்கிறாரோ, அதை எல்லாவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்" என்று சொல்கிறார்அவரின் நண்பர்கள் இயேசு எதையெல்லாம் பகிர்ந்து கொள்கிறார் (நற்செய்தியின் மூலமாகவும் , திருச்சபையின் மூலமாகவும்) , அதன் மூலமாக அன்பை பகிர்ந்து கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. ஒவ்வொரு கட்டளையும் அன்பின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. திருச்சபையின் ஒவ்வொரு போதனையும் , எப்படி, எவ்வாறு நாம் அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
நாம் கீழ்ப்படிய மறுக்கும்பொழுது, நாம் கடவுளின் அன்பை இழக்கிறோமோ? எப்பொழுதும் கிடையாது, அவரின் அன்பில் உள்ள இடத்தை இழக்கிறோமோ? ஆம். அவரின் கட்டளைகளை விட்டு நாம் வெளியே வாழ்கிறோம். அவர் நம்மை அன்பு செய்தாலும், நமக்கு அன்பு கிடைக்கவில்லையே என நாம் நினைக்கிறோம்.

இது தான் அடிமை தனம். தவறான நம்பிக்கைகளாழும், நமக்கு ஏற்பட்ட காயங்களாலும், பயத்தினாலும், நமக்கு முழுமையான அன்பு கிடைக்க வில்லை என நினைக்கிறோம்அதனால், கடவுளின் கட்டளைகள் நம்மை ஒரு எல்லைக்குள் வைப்பதாக நினைக்கிறோம், அதனை விட்டு வெளியே வரும்போது, அதனை எதிர்ப்பதாக ஆகிவிடும். அதனை எதிர்க்காதவர்கள், கடவுளின் அன்பை பெறுவதற்காகஅவரின் கட்டளைகளை ஏற்று கொண்டு, அவரின் அடிமையாக இருப்போம். நண்பர்கள், மாறாக, கடவுள் எப்பொழுதும் அன்பு செய்கிறார் என்பதை புரிந்து கொண்டு, அந்த அன்பில், ஒருவருக்கொருவர் அன்பு செய்து, மற்றவர்களுக்கு சந்தோசமாக சேவை செய்வார்கள்.

© 2012 by Terry A. Modica