Friday, June 26, 2015

ஜூன் 28 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூன் 28 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 13ம் ஞாயிறு


Wisdom 1:13-15; 2:23-24
Ps 30:2, 4-6, 11-13
2 Cor 8:7, 9, 13-15
Mark 5:21-43


மாற்கு நற்செய்தி

இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர் பெற்றெழுதலும்
(
மத் 9:18 - 26; லூக் 8:40 - 56)
21இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார்.22தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து,23' என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள் ' என்று அவரை வருந்தி வேண்டினார்.24இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.25அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார்.26அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது.27அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார்.28ஏனெனில், ' நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன் ' என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்.29தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.30உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து,' என் மேலுடையைத் தொட்டவர் யார்? 'என்று கேட்டார்.31அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ' இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ' என்னைத் தொட்டவர் யார்? ' என்கிறீரே! ' என்றார்கள்.32ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.33அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார்.34இயேசு அவரிடம்,' மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு 'என்றார்.35அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ' உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்? ' என்றார்கள்.36அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம்,' அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் 'என்று கூறினார்.37அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.38அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார்.39அவர் உள்ளே சென்று,' ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் 'என்றார்.40அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார்.41சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம்,' தலித்தா கூம் 'என்றார். அதற்கு,' சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு 'என்பது பொருள்.42உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள்.43' இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது 'என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.
(thanks to www.arulvakku.com)




இயேசுவின் உடையை தொடுவது எப்படி

இயேசுவின் உடையை தொட்டு பார்க்கும் அனுபவம் நமக்கு கிடைத்தல், எவ்வளவு மகத்தான விசயம் ஆக நமக்கு இருக்கும். இன்றைய நற்செய்தியில் வரும் பெண் போல, நமக்கு ஒரு அனுபவம் கிடைத்தால் எப்படி இருக்கும். ? இயேசுவின் அருகில் இருந்து, அவர் மூலம் உள்ளத்திலும், உடலிலும், மனதளவிலும் நாம் குணமடையும், 2000 வருடத்திற்கு முன்பே இயேசு விண்ணகத்திற்கு சென்ற பின்பு, நம்மால் எப்படி அவர் அருகில் செல்ல முடியும்?

கண்டிப்பாக முடியும். இதனயே தான் இயேசுவும் விரும்புகிறார். இயேசு உண்மையிலேயே யார் என்று நாம் நன்றாக புரிந்து கொண்டு, எவ்வளவு அவர் நம் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்று நாம் அறிந்து கொள்வதை நாம் இன்னும் முயற்சிக்கும் பொழுது நம்மால் இயேசுவின் தெய்விகத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். தொழுகை கூடத்தின் தலைவருக்கு இது புரிந்து தான் இயேசுவிடம் , “ என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்" என்று கூறினார் . அவர் இயேசுவை அவர் கண் முன்னே தோன்றிய இயேசுவை விட தெய்விக இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்தார் .

இயேசுவை தெரிந்து கொள்வது என்பது தெய்வீக வாழ்வை தெரிந்து கொள்தல் ஆகும் . அது நம்மை இந்த உலக வாழ்விலிருந்து நம்மை மாற்றி, இன்னும் பரிசுத்த வாழ்விற்கு சென்று , நம்மை விண்ணகம் எடுத்து செல்லும். முதல் வாசகத்தில், மரணம், கடவுளின் திட்டம் அல்ல என்று உறுதியாக சொல்கிறது. இயேசு இதே செய்தியை நமக்கு மீண்டும் உறுதியாக நமக்கு நினைவுட்டவே, அந்த பெண் இறந்தவுடன் செல்கிறார். கண்டிப்பாக கடவுளால் இயேசு செல்வது வரை, அந்த பெண்ணை உயிரோடு வைத்திருக்க முடியும், ஆனால், இயேசு மரணத்திலிருந்து உயிர் கொடுக்க முடியும் என்று காட்டவே , வாழ்வை மீட்க முடியும் என்று இயேசு காட்டவே இப்படி செய்தார்.


நாம் மரணத்திற்காக பயந்தால், கிறிஸ்து நமக்கு அருகில் இருப்பதை நாம் மறந்து விடுகிறோம். இயேசுவின் உடையை நம்மால் தொட முடியும், ஆனால் நாம் அதை பார்க்க முடியாது, அதனால் நாம் இதனை நம்புவதில்லை, தொழுகை கூட தலைவரின் வீட்டில் அழுது கொண்டிருந்தவர்களை போல நாம் இருக்கிறோம் , இயேசு அந்த பெண்ணை எழ செய்யும் அற்புதற்கு முன்பு ,அவர்களை இயேசு விரட்டி அடித்தார் .

நமது சோதனைகள் நம்மை முடிவில்லாத அழிவிற்கு கொண்டு சென்று விடும் என்று நாம் பயப்பட்டால், இயேசு எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பதை நாம் மறந்து விட்டோம் , இயேசு நம்மை காப்பவர் என்பதை நாம் மறந்து விட்டோம். நாம் இயேசுவின் அருகில் செல்ல முயற்சிக்க வேண்டும். நமக்கு உள்ள சந்தேகங்கள், தடைகள் மீறி நாம் அவர் அருகில் செல்ல முயற்சிக்க வேண்டும். நமது கண்கள் இயேசுவை நோக்கி , நமக்கு கைகள் அவரிடமும் செல்ல , நமது ஜெபம் மூலம் பிரார்த்திக்க வேண்டும்.

கடவுள் நம்மை இன்னும் முழுமையாக அக்கறை காட்டவில்ல என்று நாம் பயந்தோமானால், ஏன் இயேசு அவரது வாழ்வையே நமக்காக கொடுத்தார் என்பதை நாம் இன்னும் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் என் அவர் மகனை இந்த உலகிற்கு அனுப்பினார் என்பதும், நாம் அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

© 2015 by Terry A. Modica

Friday, June 19, 2015

ஜூன் 21 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூன் 21 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு
Job 38:1, 8-11
Ps 107:23-26, 28-31
2 Cor 5:14-17
Mark 4:35-41

மாற்கு நற்செய்தி


காற்றையும் கடலையும் அடக்குதல்
(
மத் 8:23 - 27; லூக் 8:22 - 25)
35அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி,' அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் 'என்றார்.36அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.37அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.38அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், ' போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? ' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.39அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி,' இரையாதே, அமைதியாயிரு 'என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.40பின் அவர் அவர்களை நோக்கி,' ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? 'என்று கேட்டார்.41அவர்கள் பேரச்சம் கொண்டு, ' காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ! ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

(thanks to www.arulvakku.com)


இப்போது ப்ளோரிடாவில், சூறாவளி வீசம் காலம். சேதத்தை விளைவிக்க கூடிய இந்த சூறாவளி கடவுள் அனுப்பும் தண்டனை என சிலர் நினைக்கின்றனர். கண்டிப்பபாக மக்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என நாம் நினைத்தாலும், இயேசு தந்தை கடவுளின் கோபத்தை தன உடலில் ஏற்று , இரத்தம் சிந்தி , சிலுவையில் மரணமடைந்தார். அதனால் எல்லா பாவிகளும் தண்டனையிலிருந்து தப்ப முடிந்தது.


நம்மிடையே உள்ள புயலை தணிக்கவே இயேசு விரும்புகிறார் . அதன் மூலம் கலகத்தை உண்டாக்க அல்ல .


நம்மிடம் உள்ள கஷ்டங்கள் எல்லாம் தண்டனை அல்ல. ஆனால், அவையெல்லாம் நாம் கடவுளிடம் இன்னும் நெருக்கமாக செல்ல ஒரு வாய்ப்பாக அமைகின்றன. நம்மில் எல்லோருக்கும் புயல் காலம் என்று ஒன்று இருக்க தான் செய்யும். ஒவ்வொரு புயலும், இயேசு நம்மோடு நடந்து வருகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளும் தருணம் ஆகும். நாம் அதற்கு தகுதி இல்லாதவர்களாக இருந்தாலும் கூட அவர் நம்மோடு நடந்து வருகிறார். . அதிக ஞானத்தையும் , அறிவும், பெற்று விசுவாசத்தில் உறுதியாய் இருக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது. கனிவுடனும், எளிமையுடனும், இருக்க நமக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது. நாம் கடவுளை அதிகம் நம்பியிருக்க வேண்டிய நிலையில் , அவரின் அதீத அன்பை கண்டு கொள்கிறோம். ஆனால், விளக்கிலிருந்து வரும் பூதம் போல கடவுளும் இருக்கிறார், அதனால், நம் பிரச்னையை நம் விருப்ப படி கையாள்வது நல்லதில்லை, அவரை தொடர்ந்து நம்பி இருந்தால் கடவுள் நம் தேவையை செய்வார்.


சில பிரச்சினைகள் நம்மில் தொடர்ந்து கொண்டே இருக்கும், ஏனெனில், கிறிஸ்துவின் பிரசன்னத்தை நம் அருகில் கொண்டு வர நாம் போதுமான முயற்சி செய்வதில்லை. நமது அனுபவம் மூலம் நாம் கிறிஸ்துவை கண்டறிந்து, மற்றவர்களுக்கும், அவர்கள் புயலை (பிரச்சினையை) அமைதியாக்க உதவ வேண்டும். நாம் இயேசுவின் கைகளாக இந்த உலகில் இருந்து , இந்த புயலை அமைதியாக்க வேண்டும். இதன் மூலம் நமக்கு உள்ள புயலும், நம்மை விட்டு அகலும். நமக்கு உள்ள கவலைகள் அகலும் வருத்தங்கள் போய்விடும்


பல நேரங்களில், நம் பாவ வாழ்வின் மூலம் நாமே சூறாவளியை உண்டாக்குகிறோம். அனால் கடவுள் அதற்காக நமக்கு தண்டனை தர விரும்பவில்லை. அதிக முறை அவர் நமக்கு எச்சரிக்கை அனுப்புகிறார் பல வழிகளில், ஆனால் நாம் புயலில் மாட்டி விடுகிறோம். இயேசு அவரிடம் மனம் திரும்பி நாம் சேர்ந்து விடவேண்டும். கிறிஸ்து விரும்புகிறார்.




© 2015 by Terry A. Modica

Friday, June 12, 2015

ஜுன் 14 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜுன் 14 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 11ம் ஞாயிறு

Ezekiel 17:22-24
Psalm 92:2-3,13-16
2 Corinthians 5:6-10
Mark 4:26-34

மாற்கு நற்செய்தி

முளைத்துத் தானாக வளரும் விதை உவமை
26தொடர்ந்து இயேசு,' இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்:27நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது.28முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது.29பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது 'என்று கூறினார்.
கடுகு விதை உவமை
(
மத் 13:31 - 32; லூக் 13:18 - 19)
30மேலும் அவர்,' இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்?31அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது.32அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும் 'என்று கூறினார்.

(thanks to www.arulvakku.com) 

கடவுள் உங்களை அழைக்கிறார்

இந்த வாரத்தில், உங்களுக்கு ஏதாவது ஒரு நிகழ்வு நடக்கும், அந்த நிகழ்வு கடவுளின் அன்பை மற்றவர்களுக்கு நீங்கள் காட்டும் வாய்ப்பாக அமையும். கவனமாக எதிர் பார்த்து கொண்டு இருங்கள்.

நீங்கள் ஒவ்வொரு நிகழ்வையும், மிகவும் கவனமாகவும் நீங்கள் உற்று கவனித்து நடந்து கொண்டால், உங்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும், கொஞ்சம் நடுக்கத்துடனும், பதற்றமாக கூட இருக்கலாம், ஆனால், இறையரசிற்கு நாம் இந்த செயல், நமக்கு சந்தோசத்த கொடுக்கும். உங்களுக்கே இது மிக ஆச்சரியமாக இருக்கும், நாமா இதனை செய்தோம் என நாம் நினைப்போம்.

இந்த நிகழ்ச்சிக்காக கடவுள் உங்களை பல காலமாக தயாரித்து வந்திருக்கிறார் , உங்கள் சசோதனைகள் , உங்கள் நற்செய்தி வகுப்புகள், நீங்களே உங்களை புனிதப்படுத்தி கொண்டது, உங்கள் ஜெபங்களின் மூலம் நீங்கள் பெற்ற உள்ளார்ந்த அறிவு, கிறிஸ்துவை முன்னிறுத்தி நீங்கள் மற்றவர்களிடம் மேற்கொண்ட விவாதங்கள், - அனைத்தும், உங்களை தயார் படுத்தி வந்திருக்கிறது.

இன்றைய நற்செய்தியில் வரும் விதை போன்றவர்கள் நீங்கள். வாழ்க்கை சூழ்நிலைகள் உங்களுக்கு உரமாக இருந்துள்ளன . உங்களுக்கு அதுவே நீர் ஊற்றி , மண்ணை பதப்படுத்தி உள்ளது. சில காலங்களில், விதை முளைத்து , செடி வளர ஆரம்பிகிறது . பிறகு பூவாகி , நல்ல பழங்களை கொடுக்க ஆரம்பிக்கிறது


ஒவ்வொரு நாளும் நமக்கு சிறிதோ அல்லது பெரிய வாய்ப்பாக , இறையரசிற்கு பணி செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது, கிறிஸ்துவின் இறைபணிக்காக நாம் முழு நேர சம்பள ஊழியராகவோ அல்லது சம்பளமில்லா முழு நேர பணியாளரகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு விருப்பமிருந்தால், கடவுள் இந்த உலகை நம் மூலம் தொடர்பு கொண்டு , நமது வீட்டில் , வேலை செய்யும் இடத்தில், பங்கு திருத்தலத்தில், கடைகளில், சாலைகளில் சென்று கொண்டிருக்கும்பொழுது , இணையத்தில் , நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் கடவுள் நம் மூலம் இந்த உலகை தொடுகிறார்.

உங்களால் வளர்க்கப்பட்ட மரம், வேறு யாராவது வெட்டினார்களா ? அல்லது அதனை யாராவது நிராகரித்து, வளர்க்காமல் விட்டு விட்டார்களா ? நம்மில் பலருக்கும் இது ஏற்படுகிறது . நல்ல விசயம் என்னவெனில், ஒவ்வொரு காய்ந்த மரத்திலும், ஒரு கனி உள்ளது, காய்ந்த கிளையில் தொங்கி கொண்டு உள்ளது. அதற்குள் மறைவாக ஒரு விதை உள்ளது.

அந்த அழுகிய பழத்தை எடுத்து, நாம் நல்ல தரமான மண்ணில் விதைத்தோமானால், புதிய மரம் ஒன்று வளரும், பழைய மரத்தை விட, புதிய மரம் இன்னும் ஆதிகமான பழங்களை கொடுக்கும், இன்னும் பெரிதாக வளரும், பழைய மரம், உத்து போய் இன்னொரு மரத்திற்கு உரமாக மாறிவிடுகிறது.

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும், உங்களால் நல்ல கனியை கொடுக்க முடியும், பகிர்ந்து கொள்ள முடியும். அந்த பழங்கள் வளர கடவுள் ஊட்டி வளர்த்திருக்கிறார். நீங்கள் தயார்!



© 2015 by Terry A. Modica