Wednesday, April 25, 2007

ஏப்ரல் 29 ஞாயிறு மறையுரை

ஏப்ரல் 29 ஞாயிறு

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 10

27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. 28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார். 29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. 30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் ' என்றார்.


மறையுரை:


இன்றைய நற்செய்தி மிகவும் சிறிய பகுதியை கொண்டது ஆனால், மிகவும் முக்கியமான கருத்தை கொண்டது. யேசு தான் நமது நல்லாயன், அவர் ஒருவரோடு தான் நாம் பின் செல்லவேண்டும். அவர் ஒருவரைதான் நாம் கண்மூடிதனமாக நம்பலாம். மற்றவர்கள், நம்மேல் அதிகாரம் கொண்டவர்கள், நமக்கு நல்லாயனாக இருக்கலம், ஆனால், அவர்களை நாம் கண்மூடிதனமாக பின் பற்ற வேண்டியதில்லை. அவர்களில் நல்லவர்கள், மிகவும் உயர்ந்தவர்களை கூட நாம் பின்பற்ற வேண்டியதில்லை. நாம் பிஷப்பானவருக்கும், பங்கு சாமியாருக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் மரியாதை செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் எல்லாம் தவறு செய்கிறார்கள், பாவம் செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் சரியான புரிதலின்றி அவர்கள் பொறுப்புகள் என்ன என்று தெரியாமல் தவறு செய்கிறார்கள். நாம் பரிசுத்த ஆவியின் அன்பளிப்பான பகுத்தறியும் ஆற்றலை உபயோகித்து,னல்ல முடிவை எடுக்க வேண்டும். நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறான முடிவினால், கடவுளுக்கு துயரத்தை கொடுக்கிறோம்.

யேசு மட்டும் தான் நாம் கண் மூடி நம்பபடக்கூடியவர். யேசு மட்டும் தான் எல்லாவற்றிலும் மிக சரியானவர் அவருக்கே எல்லாவற்றிர்க்கும் புரிதல் உண்டு மேலும் எந்த பாவமும் செய்யாதவர். யேசு மட்டும்தான் மிக சரியான வெற்றியை தரும் முடிவுகளை எல்லா நேரமும் எடுக்க வல்லவர். அவரே நம்மை தலமையேற்று வழி நடத்தி, எல்லா நேரங்களிலும் (அ) சூழ்நிலைகளிலும், நாம் நமக்கே தெரியாமல் சாத்தானோடு சேர்ந்து எதுவும் செய்யாமல் நல்ல நிலையில் வைத்திருக்கிறார். யேசுவுக்கு மட்டும் தான் நன்கு பகுத்து அறிந்து நமக்கு எது நல்லது திட்டம் அதனை நிறைவேற்றுவார். யேசு மட்டும் தான், நம்மை மோட்சத்திற்கு மிக கிட்டவும், அங்கே நுழையவும், பல அபாயங்களுக்கிடையே அழைத்து செல்ல முடியும்.

மேலும் யேசுவால் மட்டும் தான், நாம் தவறுகள் செய்ய்ம்போதோ அல்லது அவருடைய திட்டத்தை விட்டு விலகி செல்லும்போதோ நம்மை பார்த்து சிரிக்க முடியும். ஏனெனில் அவருக்கு, நாம் இன்னும் அவரை அன்பு செய்கிறோம் என்று தெரியும், மேலும் நாம் சரியானதை தான் செய்ய விரும்புகிறோம். என்று அவருக்கு தெரியும். அவருக்கு புதிய திட்டத்தை கொடுத்து, நமமை பாதுகாப்பான வழிக்கு கொண்டுவர தெரியும். அவர் இரக்கத்துடன் நம்மை கட்டி கொள்கிறார், அதன் மூலம், நாம் தந்தையின் கைகளை விட்டு போகாமல் பார்த்து கொள்கிறார்.

நாம் எப்போதாவது, யார் மேலும் அவநம்பிக்கை கொண்டால் -- நாம் நம் மேல் அவநம்பிக்கை கொண்டாலும் -- நாம் எப்போதுமே நம்பலாம், ஏனெனில் யேசு எப்போதும் இருக்கிறார், உறுதியான வழியில், நம்மை பாதுகாத்து வழி நடத்துகிறார். நம்மை எப்போதுமே பாதுகாப்புடன், மோட்சத்திற்கு செல்ல வழி நடத்தி , அங்கே சரியாக சேரச் செய்கிறார்.

சுய சிந்தனைக்கான கேள்விகள்:
நீயே உன் மேல் எவ்வளவு நம்பிக்கை கொள்கிறாய். மேலும் எவ்வாறு உண்மையாக இருந்து மோட்சத்தின் பாதையில் செல்ல முடியும் என்று நினைக்கிறாய்? வேறு யாரை நம்புவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நீ இந்த வாரம் யேசுவிடம் இந்த விசயங்களை ஒப்படைத்து விடு.

Tuesday, April 24, 2007

ஏப்ரல் 25 2007 மறையுரை

ஏப்ரல் 25 2007

Good News Reflection
Wednesday of the Third Week of Easter
April 25, 2007
Feast of Saint Mark, evangelist

Today's Readings:
1 Peter 5:5b-14
Ps 89:2-3, 6-7, 16-17
Mark 16:15-20
பேதுரு திருமுகம் (1 இராயப்பர்)

அதிகாரம் 5

5 இளைஞர்களே, நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள். ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்: தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார். 6 ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்: அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். 7 உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். 8 அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. 9 அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? 10 எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். 11 அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென். 12 நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள். 13 உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். 14 அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 16

15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். 17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார். 19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். 20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.)



மறையுரை:

எந்த அடையாளங்கள் உன்னோடு சேர்ந்தே இருக்கிறது?

யேசு இன்றைய நற்செய்தியில், "இந்த மாதிரியான அடையாளங்கள்" கிறிஸ்தவர்களாகிய உங்களோடு சேர்ந்து வரும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் பல அற்புத அடையாளங்களில் பட்டியலிடுகிறார். மேலும் பல வியப்ப்டைய செய்யும் அடையாளங்களை பைபிளில் பல்வேறு இடங்களில் எடுத்துரைக்கிறார். இன்னும் புதிய ஏற்பாட்டில்,இன்றைய முதல் வாசகத்தில் பார்ப்பது போல, நாம் பல கிறிஸ்தவர்களோடு சேர்ந்து வரும் எடுத்து காட்டுகளை பார்க்கிறோம்,

எந்த விதமான ஆச்சரியமான அடையாளங்களும், நம்முடைய சுய தம்பட்டங்களுக்கோ அல்லது, நம்மின் சுய சந்தோசங்களுக்காக பயன்படுத்தகூடாது. அல்லது நமது வாழ்க்கையை சுலபமாக்கவோ பயன்படுத்தகூடாது. எப்போத்மே அவைகள் எல்லாம், மத /மன மாற்றத்திற்கு உதவ கூடிய கருவியாகும்.


உங்களுடைய தினசரி வாழ்வில், என்ன மாதிரியான அடையாளங்கள் சேர்ந்தே இருக்கின்றன? (ஒ, நான் தினசரி வாழ்வு என்று குறிப்பிட்டேன், ஆம் இது ஒரு சவால்) கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடமிருந்து உங்களை எது குறிப்பிடபடும்படி வேறுபடுத்துகிறது. இந்த வார்த்தை "பரிசுத்தம்" என்பது, இவ்வுலகிலிருந்து வேறுபட்டதாகும். கடவுளரசிற்கு சொந்தமானது. இது "தெய்வீகம்" அல்லது "மிக சரியான" என்ற வார்த்தைகளிலிருந்து மாற்று அர்த்தம் கொண்டது.


நீ பரிசுத்தமானவனா? அல்லது புனிதமானவனா? ஆமாம், நீ பரிசுத்தமானவன் தான். நான் உங்களுக்கு விளக்கி சொல்கிறேன். புனித வாழ்க்கையை விட்டு விலகி வாழ்கிறீர்களா? ஆமாம், நீங்கள் அவ்வாறு நடந்து கொள்கிறீர்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விட வேறு மாதிரி நடந்து கொண்டாலும். நீங்களும், நானும் இன்னும் மிக சரியான பரிசுத்தத்தை பெறவில்லை.

நாம் இன்னும் சரியாக நம் புனிதத்தை அடையவில்லை. (மேலும், நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தை அடைந்து அதை முடித்த பின்பு தான், நாம் இந்த பரிசுத்தத்தை அடைய முடியும்) இருந்தும், நாம் பரிசுத்தமானவர்கள். நாம் மேலும் எப்படி இதில் உறுதியாக இருக்க முடியும்.? ஏனெனில் பரிசுத்த ஆவி நம்மோடு இருக்கிறார். நம்முடைய ஞான்ஸ்நானத்தில், நாம் பரிசுத்த மானவர்கள் ஆனோம், உறுதிபூசுதலில் அதனை மீண்டும் புதுபித்து, பரிசுத்த ஆவ்யின் மேல் உள்ள நம்பிக்கையை, பரிசுத்த வாழ்வில் மேலும் வளர்கிறோம்.

நம்முன் தற்போது உள்ள கேள்வி: மற்றவர்களுக்கு நாம் பரிசுத்தமானவர்கள் அல்லது தெய்வீகமானவர்கள் என்று எப்படி தெரியும்.? உனது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ எப்படி தெரியும். அல்லது உங்களோடு வாழ்கின்றவர்களுக்கு எப்படி தெரியும். உனது முதலாளி அல்லது மேலாளருக்கு எப்படி நீ பரிசுத்தமானவன் என தெரியும். நீ மாணவனாக இருந்தால், உனது ஆசிரியருக்கு தெரியுமா? உனது குருவானவருக்கு தெரியுமா? உனது அருகாமையில் வசிப்பவருக்கு தெரியுமா? உனது நண்பர்களுக்கு தெரியுமா? உங்களது ஏரியாவில் இருக்கு கடைக்காரர்களுக்கு தெரியுமா? கோவிலில், நீங்கள் ஒன்ரோடொன்றாக கலந்து ஜெபத்திலும், மற்ற சேவைகளிலும் கலந்து கொள்வோருக்கு, நீங்கள் பரிசுத்தமானவர் என்று தெரியுமா?

கடைசி கேள்வியால், நீங்கள் ஆச்சரியபடவேண்டாம். பிரிவுகளும், அநீதிகளூம் பங்கு வாழ்க்கையிலும் உள்ளதால், நாம், கிறிஸ்தவர்கள் நாம், நிறைய உழைத்து, தெய்வீகத்தில் வளர வேண்டும்.

கிறிஸ்துவில் நாம் கொண்ட விசுவாசம், மற்றவர்களுக்கு தெரிய வேண்டும், நம்மோடு உள்ள அடையாளங்களால், அவர்களை மத மாற்றம் செய்யவேண்டும். --கடவுளின் அடையாளங்கள், நம்மிடம் இருக்கிறது. அவரது அன்பு, இரக்கம், ஞானம், பொறுமை, அவரின் மன்னிப்பு, தாழ்மை, குணப்படுத்தும் குணம், அவரது ஆச்சரியங்கள் அனைத்தும் நம்மில் இருந்து, இந்த உலகிற்கு, நம்மை வேறுபடுத்தி காட்டுகிறது.

மக்களுக்கு நீ கிறிஸ்தவன் என்று எப்படி தெரியும்.?

ஏப்ரல் 25 2007 மறையுரை

ஏப்ரல் 25 2007

Good News Reflection
Wednesday of the Third Week of Easter
April 25, 2007
Feast of Saint Mark, evangelist

Today's Readings:
1 Peter 5:5b-14
Ps 89:2-3, 6-7, 16-17
Mark 16:15-20
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 16

15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். 17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார். 19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். 20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.)



மறையுரை:

எந்த அடையாளங்கள் உன்னோடு சேர்ந்தே இருக்கிறது?

யேசு இன்றைய நற்செய்தியில், "இந்த மாதிரியான அடையாளங்கள்" கிறிஸ்தவர்களாகிய உங்களோடு சேர்ந்து வரும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் பல அற்புத அடையாளங்களில் பட்டியலிடுகிறார். மேலும் பல வியப்ப்டைய செய்யும் அடையாளங்களை பைபிளில் பல்வேறு இடங்களில் எடுத்துரைக்கிறார். இன்னும் புதிய ஏற்பாட்டில்,இன்றைய முதல் வாசகத்தில் பார்ப்பது போல, நாம் பல கிறிஸ்தவர்களோடு சேர்ந்து வரும் எடுத்து காட்டுகளை பார்க்கிறோம்,

எந்த விதமான ஆச்சரியமான அடையாளங்களும், நம்முடைய சுய தம்பட்டங்களுக்கோ அல்லது, நம்மின் சுய சந்தோசங்களுக்காக பயன்படுத்தகூடாது. அல்லது நமது வாழ்க்கையை சுலபமாக்கவோ பயன்படுத்தகூடாது. எப்போத்மே அவைகள் எல்லாம், மத /மன மாற்றத்திற்கு உதவ கூடிய கருவியாகும்.


உங்களுடைய தினசரி வாழ்வில், என்ன மாதிரியான அடையாளங்கள் சேர்ந்தே இருக்கின்றன? (ஒ, நான் தினசரி வாழ்வு என்று குறிப்பிட்டேன், ஆம் இது ஒரு சவால்) கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடமிருந்து உங்களை எது குறிப்பிடபடும்படி வேறுபடுத்துகிறது. இந்த வார்த்தை "பரிசுத்தம்" என்பது, இவ்வுலகிலிருந்து வேறுபட்டதாகும். கடவுளரசிற்கு சொந்தமானது. இது "தெய்வீகம்" அல்லது "மிக சரியான" என்ற வார்த்தைகளிலிருந்து மாற்று அர்த்தம் கொண்டது.


நீ பரிசுத்தமானவனா? அல்லது புனிதமானவனா? ஆமாம், நீ பரிசுத்தமானவன் தான். நான் உங்களுக்கு விளக்கி சொல்கிறேன். புனித வாழ்க்கையை விட்டு விலகி வாழ்கிறீர்களா? ஆமாம், நீங்கள் அவ்வாறு நடந்து கொள்கிறீர்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விட வேறு மாதிரி நடந்து கொண்டாலும். நீங்களும், நானும் இன்னும் மிக சரியான பரிசுத்தத்தை பெறவில்லை.

நாம் இன்னும் சரியாக நம் புனிதத்தை அடையவில்லை. (மேலும், நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தை அடைந்து அதை முடித்த பின்பு தான், நாம் இந்த பரிசுத்தத்தை அடைய முடியும்) இருந்தும், நாம் பரிசுத்தமானவர்கள். நாம் மேலும் எப்படி இதில் உறுதியாக இருக்க முடியும்.? ஏனெனில் பரிசுத்த ஆவி நம்மோடு இருக்கிறார். நம்முடைய ஞான்ஸ்நானத்தில், நாம் பரிசுத்த மானவர்கள் ஆனோம், உறுதிபூசுதலில் அதனை மீண்டும் புதுபித்து, பரிசுத்த ஆவ்யின் மேல் உள்ள நம்பிக்கையை, பரிசுத்த வாழ்வில் மேலும் வளர்கிறோம்.

Monday, April 23, 2007

ஏப்ரல் 24, 2007 மறையுரை

ஏப்ரல் 24, 2007

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6

30 அவர்கள், ' நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? 31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ' என்றனர். 32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. 33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார். 34 அவர்கள், ' ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் ' என்று கேட்டுக்கொண்டார்கள். 35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.



மறையுரை:

கொடுமைபடுதலுக்கு, தைரியத்துடன் தயாராய் இருப்பது:

புனித ஸ்டீபன் தான், கிறிஸ்துவுக்காக முதலில் மரித்தது. இன்றைய முதல் வாசகத்தில், அவருடைய கதையை பற்றி பார்க்கிறோம், அது ஜெருசலேத்தை சுற்றி கி.பி. 35 வருடம் நடந்தது. அவரி கிரேக்க மொழி பேசும் இஸ்ரேலராக இருந்தார்.மேலும் அவர் உற்சாகமுள்ள "வழி" (இப்படித்தான், அன்றைய கிறிஸ்துவ மதம் பெயரிடப்பட்டு வழக்க நிலையில் இருந்தது), உறுப்பினர் ஆவார். அவரை அப்போஸ்தலர்கள் முதல் 'டீகன்" ஆக தேர்ந்தெடுத்தனர். அவர் மிகவும் தைரியமாக, யேசுவை எல்லா இடத்திலும் பிரசங்கம் செய்தார், அதுவே அவர் உயிர் பலியாக காரணமாயிருந்தது.

அவருடைய தைரியம், அவருடைய சமய சேவையை கடவுளை நோக்கியும், மோட்சத்தை நோக்கியும் கொண்டு சென்றது. அவருடைய இயற்கையான் விருப்பம் "கடவுளை நம்பாதவர்களை காப்பாற்றவேண்டுன்" என்ற கொள்கையிலிருந்து மீறி அதனை வெற்றி கொண்டு வந்தார். அவர் மோட்சத்தில் கொண்ட பரிவினால், அவரால், அவருடைய எதிரியை கூட அன்பு செய்ய முடிந்தது. கல்லடியால், பலமான வலியை தாங்கிகொண்டும், அவர் கடவுளிடம், "இறைவா அவர்களை மன்னித்து விடு" என்று வேண்டினார். இதன் தாக்கம், பொறாமையும், கொடுமைபடுத்தும் எண்ணமும் கொண்ட சவுல் என்கிற பரிசேயருக்கு இருந்தது.

அது நடந்து சிறிது காலத்திற்கு உள்ளாகவே, சவுலுக்கு மிக பெரிய மாறுதல் நடந்து, அவர் புனித பவுலானார். புனித பவுலானவர், நமக்கு தெரிந்த எல்லா நாடுகளுக்கும் பயனித்து, பல புதிய கோவிலகளை உருவாக்கினார். மேலும், புதிய ஏற்பாட்டின் பைபிளில் பல பகுதிகளை தந்தார்.

புனித ஸ்டீபன் விட்டு போனவைகளை 415 ஆம் வருடம், லூசியன் என்ற குருவானவர் கண்டுபிடித்தார். அந்த குருவானவரை ஒரு மனிதன் வெள்ளை உடை அனிந்து, ஒர் இரவில் எழுப்பினான். அந்த காட்சி, அவரை பெயர் சொல்லி அழைத்து, அவரை ஜெருசலேம் போகச் சொல்லியது. அங்கே உள்ள பிஷப்பிடம் கூறி, புனித ஸ்டீபனுடைய கல்லறையையும், மற்ற கடவுளின் சேவகர்களின் கல்லறையையும், திறக்க சொல்லியது. இதன் மூலம், கடவுள் பலரை மதம் மாற்றுவார் என்றும் கூறியது.

அந்த உருவம், அவரை "கமேலியேல்" என்று அறிமுகபடுத்தி கொண்டு, "பவுலுக்கு ஆலோசனை கூறியவன்" நான் தான் என்றும் சொல்லி, அந்த லூசியன் என்ற குருவானவரிடம், புனித ஸ்டீபன் அவர்களின் கல்லறை நகரை விட்டு வெளியே வடக்கு வாயிலில் இருக்கும் என்றும், அவருடைய உடல், ஒரு பகலும், ஒரு இரவும் வெளியே வைக்கப்பட்டு, யாராலும் தொடப்படாமல் இருந்தது. என்றும் கூறினார். அதற்கு அப்புறம், விசுவாசிகள் இரகசியமாக தூக்கி சென்று, அவருடைய வீட்டை அடைந்தனர். நிக்கோடமுஸின் உடலும் மற்றும் அந்த கால விசுவாசிகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டது.

குரு லூசியன், எங்கே இதனை வெளியே சொன்னால், நம்மை பரிகாசமும், கொடுமையும் படுத்துவர் என அஞ்சினார். இது கட்வுளிடமிருந்து வந்த செய்தி என்றால், திரும்பவும் இது நடக்க வேண்டும் என்று வேண்டிகொண்டார். அதனால், கமாலியெல் மீண்டும் தோன்றினார். இருந்தும், லூசியன் தயங்கினார். மூன்றாவது முறை அந்த செய்தி வந்த பிறகுதான், அவர் கீழ்படிந்தார். அவர் மூன்று சவ பெட்டிகளை கண்டு பிடித்தார். கிரேக்க சித்திரத்தின் முறைப்படி அந்த சவபெட்டிகள் ஸ்டீபன், நிக்கோடமுஸ், மற்றும் அபிபாஸ் என்று கண்டுபிடித்தார். இந்த செய்தி, மிக பெரிய கூட்டத்தை கூட்டியது, அந்த கூட்டத்தில் பிஷப்பும் உண்டு. அவர்கள், ஸ்டீபனின் சவப்பெட்டியை திறந்த போது, நல்ல ஒரு வாசனை காற்றில் கலந்தது. மிக அதிகமாகன அற்புதங்களும், மத/மன மாற்றங்களும் அங்கே நடந்தது.

எங்கே நாம் பரிகசிக்கபடுவோம், அல்ல்து கொடுமைபடுத்தபடுவோம் என்று நாம் பயப்படும்போது, நாம் முன்னேற வேண்டும், அவர்களை மன்னிதுது, கடவுளிடம் யேசு சிலுவையில் வேண்டியது போல், நாமும் "உனது கையில் எனது ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று கூறி வேண்டவேண்டும். இதற்கப்புறம், இது ஒரு பெரிய விசயமாகவே இருக்காது. மற்றவர்கள் நம்மை பற்றி என்ன சொல்கிறார்கள், அல்லது என்ன நினைக்கிறார்கள் என்பது ஒரு விசயமாகவே இருக்காது. நம் நோக்கம், மோட்சமாக இருக்கட்டும்.

Sunday, April 22, 2007

மறையுரை April 23rd 2007

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6

22 சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறு நாளும் மக்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத்தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார் 23 அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. 24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். 25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ' ரபி, எப்போது இங்கு வந்தீர்? ' என்ற கேட்டார்கள். 26 இயேசு மறுமொழியாக, ' நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார் ' என்றார். 28 அவர்கள் அவரை நோக்கி, ' எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார்கள். 29 இயேசு அவர்களைப் பார்த்து, ' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் ' என்றார்.


மறையுரை:

முழுமையான அருளை அடவது

கன்னி மரியாள் தான், மனித குலத்தில் "அருள் நிறைந்தவளா?", இன்றைய நற்செய்தியில், ஸ்டீபன் கூட அருள் நிறைந்தவர் தான்!. "அருளை" ஒரு செயலாக நினைத்து கொள், அதனை கடவுள் உனக்கு கொடுத்து, அவருடைய அன்பளிப்பு எல்லாம் சேர்த்து, உன்னில் அந்த அருளை வைத்திருப்பதாக நினைத்து கொள். முழுமையான அருள் நிறைந்தவராக இருப்பது என்பது, நாம் எல்லவற்றிர்க்கும், முழுவதுமாக நாம் திறந்த மனதுடன், இந்த அருளுடன இனைந்தவராக இருத்தல் வேண்டும். நான் "அருள் நிறைந்த நிலையில்" இருக்கும்போது, பாவங்களிலிருந்து விடுபட்டவராகவும், கடவுளுக்கு எதிரான விசயங்களிலிருந்து விலகியும் இருக்க வேண்டும். நாம் கடவுளோடும் , மகன் கிறிஸ்துவோடும், பரிசுத்த ஆவியோடும் இனைந்து இருக்கிறோம்.

னற்கருணையை நாம் பெறும்போது .நாம் "முழு அருள் நிறைந்தவராக", ஆகிறோம். உன்மையான கிறிஸ்துவின் இருப்பு குருவானவர் உருவில் அங்கு தான் இருக்கிறார். குருவானவரும், முழு குழுவோடும், அந்த குழுவானது நமது பாவங்களால், காயப்பட்ட குழுவாகும். கிறிஸ்து நமது பாவங்களை எடுத்து , அவருடைய சிலுவையோடு அறைந்து, நமக்கு கிடைக்க வேண்டிய தன்டனையிலிருந்து, விடுவிக்கிறார், மற்றும், நம் பாவங்களால் ஏற்பட்ட பிரிவுகளை குணமாக்க ஆர்ம்பிக்கிறார்.

இந்த குணமாக்குதல் முழுமையடைய, நம்மிடமிருந்தும், ஆக்கமும், செயலும் தேவை. ஆனால், இந்த நற்கருனையில், கடவுளின் செயல், அருள் நிறைந்தது, இது ஒரு அருள் நிறைந்த அனுபவமாகும். இது நமக்கு அதிகாரம் கொடுத்து, நம்மையே மாறச்செய்து, இனி அதே பாவங்களை தொடராமல் இருக்க செய்கிறது. நற்கருணையில் , ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க இது மிகவும் சக்தி வாய்ந்த அனுபவமாகும்,

நாம், முழு அருள் பெற இன்னோரு வாய்ப்பு, திருப்பலியின் போது நமக்கு கிடைக்கிறது. நமது பாவங்களை நினைத்து, கிறிஸ்த்வின் இரக்கத்தை இறைஞ்ச குருவானவர் சொல்லும் போது, இது ஆரம்பிக்கிறது. மேலும் இறைவனின் வார்த்தைகளை கேட்கும்போது, அதனை தொடர்ந்து, பிரசங்கத்தின் மூலம் விளக்கம் பெறும்போதும், இது தொடர்கிறது. அப்புறம், "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே" என்ற ஜெபத்தை குழுவோடு சொல்லும் போது, நமது பாவங்கள் குணமளிக்கப்படுகிறது. மற்றவர்களுடன், நாம் சமாதானம் செய்ய்ம்போதும், நாம் இந்த சமூகத்தினருடன், நமது பாவங்களினால், ஏற்பட்ட பிரிவை குணமாக்குகிறது.

நாம் எப்போது கிறிஸ்துவின் உன்மையான் ப்ரசன்னத்தை பார்க்க ஆரம்பிக்கிறோமோ, அப்போதே, அருளை, நாம் சந்தித்துவிடுகிறோம். நாம் நம்மையே முழுவதுமாக திறந்து, இந்த அருளை அடைய, நாம் ஜெபிக்கும்போது, "இறைவா உன்னை அடைய நான் தகுதியற்றவன், ஆனால் ஒருவார்த்தை மட்டும் சொல்லும், நான் குண்மடைவேன்" முழுவதுமாக அருளை அடைகிறோம்.

உன்னால், நற்கருணையை, சில காரணங்களுக்காக பெற முடியாத போது, கடவுள், உன் விருப்பத்தை தெரிந்து கொள்கிறார். நீங்கள், தொடர்ந்து செய்யும் பாவங்களுக்கு திருந்தி, நல்ல நிலையில் இருக்கும்போது, நீங்கள் "இறைவா, உன்னை அடைய நான் தகுதியற்றவன்.. " என்று ஜெபம் செய்யும் போதே, கடவுளின் அருளால், நிறைக்கப்படுகீறீர்கள். ஆவியின் நற்கருணையை பெற்று கொள்ளுகிறீர்கள். ஆனால், முழுமையான இறைவனை நற்கருனை மூலம் பெற்றுகொள்ள எல்லா முயற்சியையும் செய்ய்ங்கள். குருவான்வரிடம் பேசி, உங்கள் சூழ்நிலைக்கு, வேறு மாற்று வழியை யோசியுங்கள். திருச்சவை ஆண்டவர் வழங்கும் எல்லா வழிகளையும் உஙகளுக்கு கொடுக்க தயாராய் இருக்கிறது.

நற்கருணையை பெறுவது என்பது, கடவுளின் இணைப்பை, குழுவோடு சேர்ந்து, பெறுவது ஆகும். நாம் நமக்கு தெரிந்தே, பாவங்களில் தொடர்ந்து கொண்டிருந்தால், நாம் குழுவிலிரிந்து பிரிகிறோம். இது நற்கருணைக்கு எதிரான செயல் ஆகும். தயவு செய்து, நீங்கள் பாவம் செய்யாதது போல் தொடர்ந்து செய்ய வேண்டாம். நாம் நமது வாழ்வை, புனிதப்படுத்துவது என்பது, மிகவும் கடினமான் ஒன்று தான், ஆனால், கடவுள், தெய்வீகமான உதவி செய்து, அவருடைய மிக பெரிய அருளை அடையசெய்கிறார்.

© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you?
Please bless me! Be my Good News Partner.

For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, April 20, 2007

ஏப்ரல் 22, ஞாயிறு : நற்செய்தி

Good News Reflection (http://gnm.org)
FOR NEXT SUNDAY: April 22, 2007
Third Sunday of Easter
Next Sunday's Readings:
Acts 5:27-32, 40b-41
Ps 30:2, 4-6, 11-13
Rev 5:11-14
John 21:1-19
http://www.usccb.org/nab/042207.shtml

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 21

1 பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: 2 சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர், 3 அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ' நான் மீன்பிடிக்கப் போகிறேன் ' என்றார். அவர்கள், ' நாங்களும் உம்மோடு வருகிறோம் ' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. 4 ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை. 5 இயேசு அவர்களிடம், ' பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இல்லை ' என்றார்கள். 6 அவர், ' படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. 7 இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ' அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம் ' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். 8 மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். 9 படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. 10 இயேசு அவர்களிடம், ' நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள் ' என்றார். 11 சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12 இயேசு அவர்களிடம், ' உணவருந்த வாருங்கள் ' என்றார். சீடர்களுள் எவரும், ' நீர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். 13 இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். 14 இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார். 15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், ' என் ஆ 16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், ' என் ஆடுகளை மேய் ' என்றார். 17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று கேட்டார். ' உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ' ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது 18 ' நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' 19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், ' என்னைப் பின் தொடர் ' என்றார்.



மறையுரை:

இன்றைய நற்செய்தியில், நான் படிக்கும்போது, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி யேசு கிறிஸ்து, மீண்களை பிடித்து, அதனை சுட்டு வைத்திருந்தார்? அவர் வலை வைத்திருந்தாரா? இல்லை டவுனிலிருந்து ரொட்டியையும், மீணையும் வாங்கி வந்தாரா? அதனால் தான் , யாரும் கண்டுபிடிக்க வில்லையா? இல்லை மீனே தண்ணீரிலிருந்து, குதித்து வந்ததா? எப்படி சாத்தான், ஒரு முறை யேசுவை அவர் பாலைவனத்தில், விரதம் இருந்த போது அவரை சோதனையிட்டபோது போல.
யேசு, கற்களை ரொட்டி துண்டுகளாக மாற்றினாரா?

யேசு கிறிஸ்து, எப்படி சில மீன்களையும், சில ரொட்டி துண்டுகளையும், பல மடங்காக பெருக்கி காட்டினார் என்பதை சிந்தனை செய்து பார். அதே உணவு: ரொட்டியும், மீணும். அதே அற்புதம்: நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் குறைத்து இருந்தாலும், இல்லை ஒன்றுமே இல்லையென்றாலும், கடவுள் , எல்லாவற்றையும் அளவிற்கு அதிகமாக வைத்திருக்கிறார்! ஆனால் இதனையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. எது தேவையென்றால், நாம் எந்த அளவிற்கு, கடவுள் கொடுப்பதை பகிர்ந்து கொள்ள விருப்பமுடன் இருக்கிறோம் என்பது தான். இந்த மீன்களையும், ரொட்டி துண்டுகளையும், சீடர்களை அழைத்து எல்லோருக்கும் கொடுக்க சொன்னார்கள். அதிக மீன்களை பிடிக்கும் இன்றைய அற்புதத்தில், "நீங்கள் பிடித்த மீன்களையும், கொண்டு வாருங்கள்", என்று யேசு சீடர்களையும் அழைக்கின்றார்.

அதன் பிறகு, பேதுரு யேசுவின் மேல், எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாரோ, அதே அன்பை, அவருடைய "ஆடுகள்" மீது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார். எங்கிருந்து அன்பு வருகிறது. பேதுரு யாரையும், அவருடைய சொந்த முயற்சியால் அன்பு செய்யவில்லை. நாம் யாருமே அப்படி அன்பு செய்வதில்லை. பேதுருவும், கடவுளைடைய அன்போடு உருவாக்கப்பட்டார். நாமும் அப்படித்தான் உருவாக்கப்பட்டோம். நாம் அன்பான கடவுளின் உருவத்தோடு உருவாக்கப்பட்டோம். பீட்டருக்கு, கடவுளின் அபரிதமான அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படுகிறது. அதன் மூலம், கடவுளின் அரசை தொடர்ந்து பரவ செய்யலாம்.

கடவுள் உங்களிடம் என்ன கேட்கிறார்? அதற்கு பதில், உங்களிடம் என்ன இருக்கிறது என்பதை விட, நீங்கள் எவ்வள்வு விருப்பத்துடன், கடவுள் கேட்பதை செய்ய தயாராக இருக்கிறாய்.

சுய சிந்தனைக்கான் கேள்வி:

எந்த மாதிரியான கடவுளரசின் வேலையை (பங்கு வேலை, நண்பருக்கு, அல்லது சமூக சேவை) செய்யலாம் என்று நினைத்து, ஆனால் வலையில் ஒன்றுமில்லை என நினைத்து, இன்னும் ஏதாவது செய்யமலிருக்கிறீர்கள்?. யேசுவே உன்னிடம் கேட்பதாக நினைத்து கொள், என்ன வேலை, இந்த வாரம், நீ செய்யலாம்?


© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you? Please bless me! Be my Good News Partner.

For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Thursday, April 19, 2007

April 20th 2007 bible and reflection

Good News Reflection
Friday of the Second Week of Easter
April 20, 2007

Today's Readings:
Acts 5:34-42
Ps 27:1, 4, 13-14
John 6:1-15

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6

1 இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. 2 உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர். 3 இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். 4 யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. 5 இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ' இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? ' என்று பிலிப்பிடம் கேட்டார். 6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். 7 பிலிப்பு மறுமொழியாக, ' இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே ' என்றார். 8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, 9 ' இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்? ' என்றார். 10 இயேசு, ' மக்களை அமரச் செய்யுங்கள் ' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். 11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. 12 அவர்கள் வயிறார உண்டபின், ' ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள் ' என்று தம் சீடரிடம் கூறினார். 13 மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். 14 இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ' உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே ' என்றார்கள். 15 அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

http://www.arulvaaku.com



சோதனைகளிடையே இன்பம்.

இன்றைய முதல் வாசகத்தில், ஒரு வரி அர்த்தம் இல்லாமல் இருக்கிறது: அவர்கள் அவமரியாதைக்குரியவர்கள், அதனால், கஷ்டபடுகிறோம், என்று நினைத்து அதனால் சந்தோசப்படுகிறார்கள். எப்படி, ஒருவர், தனக்கு இழைக்கப்படும், தீங்கு கிறிஸ்துவுக்காக ஏற்று கொண்டு சந்தோசமடைகின்றனர்.


எனக்கு மற்றவர்களால், சோதனை அனுவவம் ஏற்படும் போது, அவர்களுடைய விமர்சனங்களால், மரியாதை குறைவாக பேசும்போது, என்னை தவறாக புரிந்து கொள்ளும்போது, அல்லது என்னை நிராகரிக்கும்போது, எனது புகழ், தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதனை பற்றி, முனுமுனுக்க தோன்றுகிறது. குறைந்தது ஏதாவது சொல்ல தோன்றுகிறது. என்னை யாராவது, எனக்கு மேல் உள்ளவர்கள், இந்த மறையுரையை தொடர வேண்டாம் என்று கூறும்போது,ஏனென்றால், அவருக்கு இந்த மறயுறரையில் உள்ள உண்மை பிடிக்கவில்லை. அதனால், நான் சந்தோசமடைய போவதில்லை.

உண்மையான நிலை என்னவென்றால், நாம் எங்கு வாழ்கிறோம் என்ற அர்த்ததைவிட, நாம் எல்லோரும், நமது விசுவாசத்தின் சோதனைக்கு ஒவ்வொரு நாளும் ஆட்படுகிறோம். என்னுடைய மறையுரையின் சில வாசகர்கள், அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் அவமானப்படுத்தபடும், நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் இந்த மறையுறையை வாசிக்கின்றனர் என்றாலே, மிக பெரிய ஆபத்தை எதிர் நோக்கி இருக்கின்றனர். எனினும், அவர்கள், விசுவாசத்திற்காக, சோதனைக்கு உட்படவில்லை. அவர்களுடைய விசுவாசம், அதனுடைய உண்மையான் நிலை வெளியே தெரிவதில்லை.

நாம் வார்த்தைகளால், அடிக்கப்படுகிறோம். இருந்தாலும், மக்களின் மனதில், நாம் இழுக்கப்படுகிறோம். நாம் அநீதியாக தீர்ப்பளிக்கப்படுகிறோம். அதனால் கேவலப்படுத்தப்படுகிறோம். நாம் கிறிஸ்துவை பற்றி பேசாமல் இருக்க தன்டனை அளிக்கப்படுகிறோம். இது , நாம் அபார்சன் ஆக இருக்கும் குழந்தைகளை பற்றி பேசு முற்படும்போது ஏற்படுகிறது. இது, ஓரின சேர்க்கை உடையவர்களுடன், நாம் கட்டிபிடித்து , தூய்மான வாழ்க்கைக்கு செக்ஸ் வாழ்க்கையில்லாமல் வாழலாம் என்று, நாம் தூண்டும்போது, ஏற்படுகிறது. நமக்கு உள்ள கல்வியறிவு, ஆற்றலை, நாம் கடவுளுக்காக உபயோகிக்கும் போது, மற்றவர்கள், நாம் அந்த அளவிற்க்கு தகுதியானவர்கள் இல்லை என்று நினைக்கும் போது, நமக்கு இழிவு ஏற்படுகிறது.

உன்னுடைய நேரத்தில், வேறு யாராவது, கடவுளுக்கு நீ செய்ய வேண்டும் என்று நினைக்கிற நேரத்தில், எடுத்து கொள்ளும் நேரத்தை நினைத்து கொள். நீ முழுமையாக சந்தோசப்படுகிறாயா? அல்லது கோபமாக பயனற்று போகிறாயா? அப்ப முதல் அப்போஸ்தலர்கள், எப்படி சந்தோசமடைந்தார்கள்.?

இழிவுபடுத்தலில் இருந்து வரும் சந்தோசம், கடவுளிடம் நாம் கொண்டுள்ள அன்பிலிருந்து வருகிறது. நாம் நமது புகழின் மேல் உள்ள அன்போடு அதிகம் நேச்முடன் இருக்கும்போது, மற்றவர்கள், நம்மை அங்கீகரிக்காமல் போகும்போது, நாம் மிகவும் கவலைக்கு உள்ளாகிறோம். நமது சந்தோசம், நாம் கடவுளிடம் நோக்கி இருக்கும்போது வருகிறது, (நாம், நமக்கு என்ன நடக்கிறது என்று பார்க்காமல் இருக்க வேண்டும்). மற்றும், நாம் நமது பார்வையை யேசுவை நோக்கி நிறுத்த வேன்டும். நமது சிலுவைகள் நம்மை மீட்படைய செய்யும் என்று நாம் நிணைவு கூறவேண்டும். மேலும், நமக்கு நிராகரிக்கப்பட்ட சுதந்திரம், நமக்கு கடவுளோடு இணையும் ஒரு வாய்ப்பாக கருத வேண்டும். ஏனென்றால், கடவுளின் திரூவுளத்தை யாரும் நிறுத்த முடியாது, அல்லது நிறைய நாள் , நீடித்து தள்ள முடியாது. இதுவே நமக்கு மிக பெரிய சந்தோசத்தை கொடுக்கும் எண்ணம் ஆகும்.

நாம் கடவுள் மேல் கொண்ட ஈர்ப்பை தொடருவது என்பது மிகவுல் எளிதல்ல. இது மிக பெரிய முயற்சியையும் , மேலும், முழுமையான முடிவையும் எடுக்க வேண்டியுள்ளது. எவ்வளவு அதிகமாக் நாம் வேலை அல்ல்து ஈடுபடுகிறோமோ, அந்த அளவிற்கு, நமது கடவுளின் நம்பிக்கை அதிகப்படுகிறபோது, நமது அற்புதமான சந்தோசத்தை , நாம் அனுவவிக்கிறோம். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு, எல்லாமே நமக்கு சாத்தியமாகிறது. நாம், யேசுவிடம், இந்த சந்தோசத்தை பெருக செய்ய சொல்லாம், அவர் அதனை கண்டிப்பாக செய்வார். நாம், மிகவும் சிறிய சந்தோசம் அடைந்தாலும், எப்படி அவர் சிறிய துண்டு ரொட்டி துண்டையும், சில மீண்க்ளையும், பல மடங்காக்கினாரோ? அதே போல், உனது சந்தோச்த்தை, அவர் அதனை பலுகி பெருக செய்வார்.

Wednesday, April 18, 2007

April 19th

sorry friends.

http://www.gnm.org

Tuesday, April 17, 2007

april 18th bible reflection

Good News Reflection
Wednesday of the Second Week of Easter
April 18, 2007
Today's Readings:
Acts 5:17-26
Ps 34:2-9
John 3:16-21
http://www.usccb.org/nab/041807.shtml

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 3

16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். 18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. 19 ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. 20 தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. 21 உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.



கண்டனத்திலிருந்து விடை பெற்று வாழ்தல்.

இன்றைய நற்செய்தி மிகவும் உறுதி பட ஒரு உண்மையை கூறுகிறது. அது என்னவெனில் யேசு கிறிஸ்து யாரையும் கண்டிக்கவோ அல்ல்து தன்டனை கொடுக்கவோ இந்த உலகத்திற்கு வரவில்லை. இருந்தாலும், நாம் கண்டனத்திற்குள்ளானவராக நினைக்கிறோம், அது ஏன்?

நீ உன்னை பற்றி தவறாக நினைக்கிறாயா? உன்னையே மன்னிக்க முடியாமல் இருந்து இருக்கிறாயா? மற்றவர்களிடம் கடினமாக நடந்து கொள்வது போல், உன்னிடமும் நடந்து கொள்கிறாயா? மற்றவர்கள் உன்னை எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்து சந்தோசமடைகிறாயா? , ஏனெனில், உன்னில் நீ சந்தோசமடைவதில்லை. உனக்கு சரியான அல்லது உறுதியான அங்கீகாரம் கிடைக்கவில்லையா? அல்லது கிடைக்கு தர்ம சங்கடபடுகிறாயா? நாம் இவ்வ்ளவு மதிப்புடையவர் என்று நினைக்கிறாயா?


நற்செய்தியை முழுமையாக புரிந்து கொள்ளவில்லையென்றால், இது மாதிரியான விளைவுகள் ஏற்படும். மேலே குறிப்பிடப்பட்ட விசயங்கள் எல்லாம், நாம் முழுமையாக நற்செய்தியை நம்ப வில்லையென்றால், நாம் என்ன செய்தாலும், கன்டனத்திற்கு உள்ளானவர்களாக நினைப்போம். ஒவ்வொரு முறை நாம் பாவம் செய்யும்போதும், குற்ற உணர்வு, நாம் கண்டனத்திற்கும், தன்டனைக்கும் உரிய தகுதியானவர்கள் என் நினைக்கிறோம்.

நாம் நம்மை அறியாமல், ஒரு தவறை செய்யும்போது, அதற்கும், நாம் தன்டனைக்குரியவர் என என்னுகிறோம். அதனால், இதன் மூலம், ஒரு பாடத்தை அறிந்து கொள்ளாமல், நாமே நம்மை கண்டிக்கிறோம்
மேலும், நியாயமற்ற, அநீதியான, இரக்கமற்ற விச்யங்கள் நடக்கும் போது, நாம் கண்டனத்திற்கு உள்ளானவர்களாக நினைக்கிறோம்.

உண்மை என்னவென்றால்: நீ கிறிஸ்து சிலுவையில் அவரது வாழ்வை தியாகம் உனக்காக தியாகம் செய்தார் என்பதை ஏற்றுகொண்டால், உனது தன்டனையிலிருந்து, கண்டனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டாய். இப்போது, நீ புரிந்து கொள்ள வேண்டியது: குற்ற உணர்வுக்கும், அவமானத்திற்கும் வேறுபாடு உள்ளது.

ஏதாவது தவறான செயலை செய்யும்போது, குற்ற உணர்வு வருகிறது. நாம் பாவம் செய்யும்போது, குற்ற உணர்வு அடைகிறோம், நாம் அதனால் வருந்தி திருந்தும்போது, கிறிஸ்துவால் பெற்ப்பட்ட மீட்பை அடைகிறோம். நாம் தவறாக ஒரு விசயத்தை என்னும்போது, நம் பாவங்களினால் நாம் அவமானமடைகிறோம். நாம் தீமையானவர்கள். நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட பின்பும், நமது அவமானம் தொடர்கிறது. யேசு நம்மை கண்டனம் செய்வதில்லை. ஆனால் அவமானம் நம்மை கண்டிக்கிறது. அவமானம் நம்மை குற்ற உணர்விலிருந்து விடுவிப்பதில்லை. நம்மை கடவுளின் மன்னிப்பின் முலம் சந்தோசம் அடைய விடுவதில்லை. நம்மையே மன்னிக்க விடுவதில்லை. குற்ற உணர்வு, நம்மை பற்றிய உண்மைகள எடுத்து கூறி, அதிலேயே நம்மை வளர செய்கிறது. அவமானம் நம்மிலே விழுந்து, நம் வளர்ச்சியை வீழ்த்தி விடுகிறது.

உண்மை: யேசு உனக்கு சிலுவையில் செய்த தியாகத்தினால், உன்னுட்ய பாவங்களுக்காக நீ புரிந்து நடந்தால், அவமானம் என்று ஒன்று இல்லை. ஏனெனில், அது உன்னை மாற்றி , உன்னை தெய்வீகமானவராக ஆவாய். கிறிஸ்துவின் ஒளியில், உன் பாவங்களை வெளி காட்டுவதால், அவமானமில்லை. ஏனெனில், அவர் உனக்கு பரிசுத்த ஆவியை கொடுத்து, உன்னை நீ யாரென்று முழுமையாக புரிய வைக்கிறார். உன்மையில் நீ யார், நீ தெய்வீகமானவன், கடவுளுடைய அழகான படைப்பு. அவருடைய உருவத்திலேயே படைக்கப்பட்டு, அவருடைய நல்ல விசயஙகள் உனக்கு அருளப்பட்டன.

© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you? Please bless me! Be my Good News Partner.

For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Monday, April 16, 2007

April 17th tuesday

Good News Reflection
Tuesday of the Second Week of Easter
April 17, 2007
Today's Readings:
Acts 4:32-37
Ps 93:1-2, 5
John 3:7b-15
http://www.usccb.org/nab/041707.shtml

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 3

7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். 8 காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும் ' என்றார். 9 நிக்கதேம் அவரைப் பார்த்தது, ' இது எப்படி நிகழ முடியும்? ' என்று கேட்டார். 10 அதற்கு இயேசு கூறியது: ' நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரிவில்லையே! 11 எங்களுக்குத் தெரிந்ததைப் பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப் பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன். 12 மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும் போது எப்படி நம்பப்போகிறீர்கள்? ' 13 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. 14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். 15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.

http://www.aruvakku.com

மறையுரை:

ஆவியுடன் சமூக இணைப்பில் ஒன்றிப்பை அனுபவிப்பது:

இன்றைய முதல் வாசகத்தில், உண்மையான கிறிஸ்துவின் சமூக ஒன்றிப்பு என்ன என்பதை காட்டுகிறது. நாம் ஏன், அந்த தாராள அன்பினை இன்றைய திருச்சபையில் அனுபவிப்பதில்லை.

நம் விசுவாசத்தில் நாம் தனிபட்டு நிற்கிறோம். வரலாற்றில் பார்த்தோமானால், லத்தின் மொழிகளில், திருப்பல் நிறைவேற்றப்படும்போது, அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்ன நடந்தது என்றால், அவர்கள் தனியாக ஜெபமாலை சொல்லிகொண்டிருப்பார்கள், குருவானவர் ஒருபக்கம் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருப்பார். இன்னும் பெரிய கோவில்களில், ஒவ்வொரு பக்கமும், ஒரு குருவானவர் திருப்பலி நிறைவேற்றுவர். எல்லாரும், கடவுளை வணங்க ஒன்றாக வந்தாலும், ஒருவர் மற்றவரோடு ஒன்றாக இணைந்து இருப்பதாக யாரும் அறிந்து கொள்வதில்லை.

சமூக இணைப்பும், தாரளமாக இருப்பது, கருணையோடு நடந்து கொள்வதும், ஒன்றோடொன்று பிணைந்தது. பழைய கிறிஸ்துவர்களுக்கு இருந்த தாராள் குணத்தால், மற்றவர்களுக்கு என்ன தேவை என அறிந்து, அவர்கள் மேல் அக்கறை கொள்வதும் பழக்கத்தில் இருந்தது. அவர்கள் இதனை செய்தது ஒன்றும், ஆச்சரியமாக இல்லை, மேலும் அவர்கள், தங்களது உடைமைகளை விற்று மற்றவர்களுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் வீடு இல்லாதவர்களாக மாறவில்லை, அவர்களிடம் இருந்ததை, தேவையானது போக மீதியை பகிர்ந்து கொடுத்தார்கள். இன்று, அதனை நம் குடும்ப உறுப்பினர்களுக்கு செய்யலாம். ஆனால், நமது பங்கில் உள்ளவர்களுக்கு என்ன தேவை என்பதை கூட நாம் தெரிந்து கொள்வதில்லை. கண்டிப்பாக அவர்களோடு இணைந்து, அவர்களுக்காக நாம் தியாகம் செய்வதாக எண்ணம் நம்மிடம் இல்லை.

அன்பினிலுருந்து தான், தாராளமாக இருப்பது, கருணையோடு இருப்பது நமக்கு வருகிறது. எவ்வளவு அதிகமாக ஒருவரை அன்பு செய்கிறோமோ? அவ்வளவு அதிகமாக அவரிடம் தாராளமாக நடந்து கொள்கிறோம். மீண்டும், முந்தைய கிறிஸ்தவர்கள், ஒருவர் ஒருவரோடு, எப்படி இணைந்து இருந்தார்கள, என்று பார்ப்போம். "ஒரே உள்ளமும் ஒரே எண்ணமும்" ஆக இருந்தார்கள். இதனால் எல்லாவற்றிலும், உடன்பாடாய் இருந்தார்கள், அப்ப்டியில்லை. அவர்கள் நட்பு, ஒருவரை ஒருவர் ஆறுதலோடு பாதுகாப்பதில் இருந்தது. அந்த பொறுப்பு, திரு ப்பலியில் ஆரம்பித்து, அதனை விட்டு வெளியில் வந்து, அதன் மூலம் ஏற்படும் ஈடுபாட்டில் தொடர்கிறது.

இன்றைய நற்செய்தியில், ஏசு கிறிஸ்து, மோட்சத்தில் உள்ள விசயங்களை புருந்து கொள்ள சொல்கிறார். நாம் "பரிச்த்த ஆவியானவராக இருக்க வேண்டும்". இதன் மூலம் யேசுவை, நாம் தனிபட்ட முறையில் தெரிந்து கொள்ளலாம். ஆனால், கடவுள், நம்மிடம் மேலும் அதிகமாக தெரியவேணும் என்று கூற்கிறார். ஏனெனில், மோட்சத்தில் அதிகமான விசயங்கள் அதிகமாக இருக்கிறது. பெந்தகோஸ்து அன்று பரிசுத்த ஆவியானவர், ஒரு குழுவின் மீது தான் இறங்கி வந்தார். அந்த குழுவில் உள்ள அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து இருந்தனர்.

தாராளமாக இருத்தல், ஒரு குழுவின் ஆரோக்கியமான, முழு சக்தியுடன் இருப்பதற்கான அறிகுறி. மோட்சத்தில் அன்பு எல்லா இடத்திலும் இருக்கிறது. இதனை தான், நாம் புனிதர்களின் இணைப்பு அல்லது ஒன்றினைப்பு என்று கூறுகிறோம். இருந்தும், நண்மை வாங்குவதை தான், நாம், "ஒருங்கிணைப்பு" என்று நினைக்கிறோம். அது சரியல்ல. அது என்ன்வென்றால், நண்மை வாங்க செல்லும்போது தனியாக செல்கிறோம் (இறைவா நான் தகுதியாற்றவன்.. )ஆனால் நண்மை திரும்பி வரும்போது , ஒரு குழுமத்தின் ஒன்ற்னைப்பாக வருகிறோம். அது தான், புனிதர்களின் ஒன்றினைப்பு.

மோட்சத்தில், மற்றவர்களை நாம் சமமாக நடத்துவோம், நம்மை எல்லோரும் முழுமையாக அன்பு செய்வார்கள். இந்த பூமியில், நாம் இது மாதிரி ஒர் அன்பை பெற முடியாது. அல்லது பரிசுத்த ஆவியின் துணையுடனோ, ஒன்றினைந்த குழுவின் துணையோடு தான் இந்த முழு அன்பை பெறமுடியும்.

http://gnm.org

Sunday, April 15, 2007

APRIL 16th II week of Easter

Good News Reflection
Monday of the Second Week of Easter
April 16, 2007
Today's Readings:
Acts 4:23-31
Ps 2:1-9 (with 11d)
John 3:1-8
http://www.usccb.org/nab/041607.shtml

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 3

1 பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர். 2 அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, ' ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது ' என்றார். 3 இயேசு அவரைப் பார்த்து, ' மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன் ' என்றார். 4 நிக்கதேம் அவரை நோக்கி, ' வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா? ' என்று கேட்டார். 5 இயேசு அவரைப் பார்த்து, ' ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். 6 மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். 7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். 8 காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும் ' என்றார்.

http://www.arulvakku.com


பரிசுத்த ஆவி உங்களுடன் இருக்கிறாரா? செயல்படுகிறாரா?

"நீங்கள் மறுபடியும் பிறந்துவிட்டீர்களா? " என்ற கேள்வியை உங்களிடம் யாராவது கேட்டதுண்டா? நேரடியாக மேலே உள்ள கேள்விக்கு செல்வோம்: "பரிசுத்த ஆவி உங்களுடன் இருக்கிறாரா? செயல்படுகிறாரா? " யேசு கிறிஸ்துவாக மாறுவது போதுமானது அல்ல. பரிசுத்த ஆவியுடன் நாம் கொண்டுள்ள உறவு தான் நம்மை பாவ மனிதனாகவும் அல்லது தெய்வீக மனிதனாகவும் வேறுபடுத்துகிறது.

நாம் உயிர்த்த யேசுவை ஈஸ்டரில் கொண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில், "ஈஸ்டருக்கு பிறகு, பெந்தகோஸ்து " என்று நமது திருச்சபை, மீண்டும், மீண்டும் நமக்கு நிணைவு படுத்துகிறது. இன்றைய முதல் வாசகத்தில், சீடர்கள், ஆண்டவரிடம், முழுமையாக வேண்டி, அவர்கள் பரிசுத்த ஆவியை முழுவதும் பெற்றுகொண்டதை நாம் காண்கிறோம்.

பரிசுத்த ஆவி தான், சீடர்களுக்கு, எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல், கடவுளின் வார்த்தையை அறிவிக்கும் சக்தியை கொடுத்தது. பரிசுத்த ஆவி இல்லாமல், அவர்கள் பயந்து கொண்டும், திறமையற்றும் இருந்தார்கள். உங்களுடைய விசுவாசம், உங்களை பயமுறுத்தும் விசயங்களிலுருந்து உங்களை விடுவிக்கிறதா? உங்கள் விசுவாசம் உங்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கிறதா?

சீடர்கள், மற்றவர்களால் இம்சை படுத்தப்படும்போது, பரிசுத்த ஆவிதான் அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. உன்னுடைய கஷ்டமான நேரங்களில் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா? பரிசுத்த ஆவியானவர் தான் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து , அவர்களின் ஜெபத்தை இன்னும் ஆழப்படுத்தியது. உங்களுடைய ஜெப வாழ்விற்கு உதவி தேவை படுகிறதா? பரிசுத்த ஆவி தான் சீடர்களின் அறையை குலுக்கியது, அது பூமி அதிர்ச்சி அல்ல. உங்கள் விசுவாசம், உங்களின் வாழ்க்கையை குலுக்குகிறதா? நீங்கள், ஜெப சமூகத்துடன் சேர்ந் இருக்கும் போது, உங்களால், கடவுளின் இருப்பை, பிரசன்னத்தை உணர முடிகிறதா?

இன்றைய நற்செய்தியில், யேசு பரிசுத்த ஆவியின் மூலம் நடக்கும் ஞானஸ்தானத்தையும், நீரினால் நடக்கும் ஞானஸ்தானத்தையும் சமமாகவே வைக்கிறார். அவைகள் இரண்டும் ஒன்றாகவே சேர்ந்து ப்ணி செய்கிறது. நீரின் மூலம் பெறும் ஞான்ஸ்தானம், நம் பாவங்களை கழுவுகிறது. பரிசுத்த ஆவியோ, நாம் தெய்வீகத்துடனும், பாவங்களில் விழாமல் இருக்க சக்தியை தருகிறது. உங்கள் விசுவாசம், மீண்டும், மீண்டும் பாவம் செய்ய தூண்டும் விசயங்களில் இருந்து உங்களை மீட்கிறதா? நீரினால், கடவுள், உங்களின் பாவங்களில் விழும் குணத்தினை போகசெய்கிறார். பரிசுத்த ஆவியின் மூலம், கடவுளின் தெய்வீக குணம் உங்களின் இயற்கை குணமாகிறது.

நமது தெய்வீகத்தை, பரிசுத்த ஆவி தான் திறக்கிறது. "தண்ணீராலூம், பரிசுத்த ஆவியாலும் பிறக்காதவர்கள், கடவுளின் விண்ணரசிற்குள் நுழைய முடியாது... ஆவிதான் ஆவியை உண்டாக்குகிறது". பரிசுத்த ஆவி நம்மில் இருந்து நம்மை இயக்கினால் தான், நாம் கிறிஸ்துவாக இருக்க முடியும். பரிசுத்த ஆவி, நமக்கு வழிகாட்டினால் தான், நாம் மோட்சத்தின் பாதையில் இருக்க முடியும். அவர் நம்முடன் இருக்கும் போது, நமக்கு மோட்சம் செல்வதற்கும், மீட்பும் அடைய எதையும் இழக்க வில்லை. நம்முடைய ஞான்ஸ்தானத்தில், நமக்கு பரிசுத்த ஆவி முழுமையாக கொடுக்கப்பட்டது. இது உறுதி பூசுதலில் உறுதி படுத்தபட்டது. கடவுளின் மீட்பின் திட்டத்தில் வெற்றியடைய, நம்முடைய தின நடவடிக்கைகளில், நம் ஆவியை, கிறிஸ்துவின் ஆவ்யுடன் முழுமையாக இணைந்து செயல்பட வேண்டும்.

பரிசுத்த ஆவிக்கான ஜெபம்: http://wordbytes.org/prayers/HolySpirit.htm

Saturday, April 14, 2007

april 15h sunday மறையுரை

Acts 5:12-16
Ps 118:1-4, 13-15, 22-24
Rev 1:9-13, 17-19
John 20:19-31
http://www.usccb.org/nab/041507.shtml

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார். 22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார். 24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. 25 மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார். 26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பு+ட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார். 28 தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார். 29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ' என்றார். 30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. 31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.


மறையுரை:

இந்த வார ஞாயிறு நற்செய்தி, பெந்தகோஸ்தோவிற்கான நாளை முன்னிறுத்துகிறது. யேசு "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று கூறி, அவர்களுக்கு ஆவியின் அன்பளிப்பை தருகிறார். இது ஒரு தெய்வீகமான அன்பளிப்பு. இது நம்மில் ஊடுருவி, நம்முடைய சோதனைகளிலும், கக்ஷ்டமான நேரங்களிலும் நம்மோடு இருப்பது. இது ஒரு அமைதி, இது கடவுளின் மன்னிப்பிலுருந்து வரும் அமைதி. இந்த ஒரே சந்திப்பில், இரண்டு முறை யேசு அவருடைய சீடர்களுக்கு கொடுக்கிறார். அதற்கு அப்புறம், தன்னுடைய முதல் அப்போஸ்தலர்களுக்கு, அவர்களை குருத்துவ நிலைக்கு உயர்த்துகிறார் , அதன் மூலம், அவர்கள் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கினார்.

யேசுவால் கொடுக்கப்பட்ட இந்த அமைதியின் அன்பளிப்பு, தற்போது குருவானவரிடமிருந்து கொடுக்கப்படுகிறது, அதனை தான் நாம் இப்போது, "இறவனில், மீண்டும் இணைதல்" என்று கூறுகிறோம். இதன் மூலம், நாம் தெய்வீகத்துடன் இருக்கும் முயற்சியில் திடமாகிறோம். யேசு இன்னனும், நமக்கு கடவுளின் ஆவியை தருகிறார், அது தான் பரிசுத்த ஆவி. அது தான் நம்மை உயிரோடு வைத்திருக்கிறது. சாவிலிருந்தும், பாவத்தின் அழிவிலிருந்தும் நம்மை விடுவிக்கிறது. இந்த பரிசுத்த ஆவி கடவுளின் தெய்வீக ஆவி.

நம் பாவங்களை மன்னிப்பதற்காக இரக்கம் நிறைந்த கடவுள் தன்னையே சிலுவை சாவிற்கு அர்ப்பனித்தார். இந்த தியாகத்தினால் தான், நாம் சாவின் அழிவிலிருந்து கடவுளின் நித்திய இளைப்பாற்றலை, அவரின் அன்பை அடைய எழ முடியும்.

"பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே" என்ற யேசுவின் செபத்தை, மிகவும் மெதுவாகவும், கவனத்துடனும் சொல்லவும், "எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்" என்ற வாக்கியத்தை கூர்ந்து நோக்கவும். எந்த பாவங்களை, உங்களால் மன்னிக்க விருப்பமில்லாமல், உங்களில் வைத்திருக்கிறீர்கள். இது அவர்களுடைய ஆன்மாவையும், உங்களின் ஆன்மாவையும் பாதிக்கும். ஏனெனில், உங்கள் மூலம் கடவுளின் மன்னிப்பை அவர்கள் அறியும் ஒரு வாய்ப்பை ஒதுக்கி விடுகிறீர்கள். மற்றும், கடவுள் உங்கள் பாவங்களை மன்னிப்பதற்கும் உள்ள வாய்ப்பை தவற விடுகீறீர்கள்.
நாம் ஒவ்வொரு முறை மன்னிக்கும் போதும், கிறிஸ்துவின் மீட்பில், உயிர்த்து எழுதலில் பங்கு கொள்கிறோம். அவர்கள் மன்னிப்பு கேட்டாலும், கேட்காவிடினும், நாம் மன்னிக்க வேண்டும். ஏனென்றால், "கொடுப்பதில் தான் நாம் பெறுகிறோம்"

நம் சுய சிந்தனைக்கான கேள்வி:
உங்கள் வாழ்க்கையில், யாரை மன்னிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.? சில சமயம், நீங்களாக கூட இருக்கலாம். எந்த பாவங்களை கடவுள் மன்னிப்பு வழங்கிய பின்பும், நாம் மன்னிக்காமல் நிராகரிக்கிறோம். இந்த வாரம், இந்த பாவங்களை உன்னிடமிருந்து அகற்ற என்ன செய்ய போகிறாய்.?
(http://gnm.org)

Wednesday, April 11, 2007

April 12th bible

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 24

35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். 36 சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று அவர்களை வாழ்த்தினார். 37 அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். 38 அதற்கு அவர், ' நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? 39 என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே ' என்று அவர்களிடம் கூறினார்; 40 இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். 41 அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ' உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா? ' என்று கேட்டார். 42 அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். 43 அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார். 44 பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ' மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே ' என்றார்; 45 அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார். 46 அவர் அவர்களிடம், ' மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், 47 ″ பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. 48 இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.



please refer http://www.gnm.org for reflection..

Tuesday, April 10, 2007

மறையுரை april 11th 2007

Today's Readings:
Acts 3:1-10
Ps 105:1-4, 6-9
Luke 24:13-35
http://www.usccb.org/nab/041107.shtml

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 24

13 அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வ+ரின் பெயர் எம்மாவு. 14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். 15 இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். 16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. 17 அவர் அவர்களை நோக்கி, ' வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? ' என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள். 18 அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ' எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ! ' என்றார். 19 அதற்கு அவர் அவர்களிடம், ' என்ன நிகழ்ந்தது? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' நாசரேத்து இயேசுவைப் பற்றியே தான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். 20 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். 21 இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. 22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; 23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். 24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை ' என்றார்கள். 25 இயேசு அவர்களை நோக்கி, ' அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! 26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! ' என்றார். 27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். 28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். 29 அவர்கள் அவரிடம், ' எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று ' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். 30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். 31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். 32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ' வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ' என்று பேசிக் கொண்டார்கள். 33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். 34 அங்கிருந்தவர்கள், ' ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார் ' என்று சொன்னார்கள். 35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.



மறையுரை :
அற்புதமான் வாழ்விற்கு அடியெடுத்து வை:

இன்றைய முதல் வாசகத்தில், பீட்டரும், அருளப்பரும் நமக்கு ஒரு எடுத்து காட்டு ஒன்று சொல்கிறார்கள். பரிசுத்த ஆவியின் முழு ஆதிக்கத்துடன் கிறிஸ்துவை எப்படி பின்பற்றுவது என்று. இதனை சுருக்கமாக சொன்னால், "என்னிடம் தங்கமோ அல்லது வெள்ளியோ இல்லை, ஆனால் என்னிடமிருந்ததை உங்களிடம் கொடுக்கிறேன்... "

நாம் யேசுவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். அவர் என்ன செய்தாரோ அப்படியே நாமும் செய்து, அவர் இன்று என்ன செய்ய சொல்கிறாரோ, அதை நிறைவேற்றுகிறோம். இப்போது நாம் பூமியில் தங்கியிருக்கும் கிறிஸ்துவின் உடல். கிறிஸ்து கடைசி இரா உணவின் போது என்ன சொன்னார் என்பதை இப்போது நிணைவுகொள்வோம். "நான் உங்களுக்கு என்ன செய்த் கொண்டிருக்கிறேனோ அதையே மற்றவர்களுக்கும் செய்யுங்கள் "

அவர் செய்தது போல , நாமும் செய்ய முடியாது போல தோன்றும் வேளையில், நாம் நம்மிடம் இல்லாத ஒரு திறமைக்காகவோ, நாம் நமது நற்செயல்களை நிறுத்தி விட கூடாது. இந்த செயல்களில் என்னால் ஈடுபட முடியாது ஏனெனில் என்னிடம் அதற்கு போதுமான் ஆதார வசதிகள் இல்லை அல்லது எப்படி உதவு பன்னுவது என தெரியவில்லை என்று சொல்வதற்கு பதிலாக "என்னிடம் எது இருக்கிறதோ அதனை கொடுக்கிறேன்" என்று கூறவேண்டும்.

எடுத்துகாட்டாக, உங்கள் பங்கில், அதிக பணம் தேவைபடுகிறது. (நிறைய பேர், குறைவான நிதியே தருகிறார்கள், ஏனெனில், அவர்கள் கோவிலுக்கு கொடுக்கும் பண விசயத்தில், தாராளமக இருக்க இன்னும் புரிந்து கொள்ளவில்லை). உங்களிடத்தில், அதிக வருவாய் இல்லை என்றாலும் கூட, வேறு வழிகளில் நீங்கள் கோவிலுக்கு உதவி செய்யலாம். எப்படி என்றால், உங்கள் பங்கின் அடுத்த முக்கிய நிகழ்ச்சிக்கு, ஏதாவது ஒரு நிறுவனத்திடம் பேசி, அவர்களை சாப்பாட்டிற்கு உதவ செய்ய அல்லது ஏதாவது தேவையான பொருள்களை கொடுக்க சொல்லாம். இது ஒன்றும் கஷ்டமான விசயமில்லை. ஏனெனில் பல நிறுவனங்கள் இது மாதிரியான உதவி செய்வதற்கு தயாராய் இருக்கிறார்கள்.

உன்னால் என்ன பிறருக்கு அவர்கள் தேவையின் போது என்ன கொடுக்க முடியும்?
நீங்கள் வேலை செய்யும் இடத்தில், ஒருவர் அவர் பிரச்னையோடு வரும்போது, உங்களால் தீர்த்து வைக்கமுடியாவிட்டாலும், கருணையோடு செவிமடுத்து அவர் சொல்வதை கேட்பீர்களா? இறைவனுக்கு சேவை செய்வதில், இது ஒர் அருமையான் வழி.
உங்களுக்கு வீட்டு ரிப்பேர் வேலை செய்ய தெரியுமா? உங்கள் ப்ங்கின் மூலம், தனியாக உள்ள பெண்களையும் அல்லது வயதானவர்களையும் கூப்பிட்டு, அவர்களை உபயோகித்து அதன் மூலம் அவர்கள் வருவாயை பெருக்கலாம். இது மிகவும் தேவையான, அற்புதமான் சேவை.

யாராவது ஒருவர் உங்களிடம் அவர்களுக்காக வேண்டி கொள்ள சொன்னால், நீங்கள் எந்த வேலை செய்தாலும், அதனை ஒதுக்கி வைத்து விட்டு, அப்போதே அவர்களுடன் சேர்ந்து வேண்டுங்கள்,அதன் மூலம் அவர்கள் மீது நாம் அக்கறை கொள்கிறோம் என்பதனை உறுதி செய்கிறோம். யார் வேண்டுமானாலும், ஜெப குழுக்களை ஆரம்பித்து நடத்த முடியும். அதன் முடிவு கடவுளை பொருத்தது. சில நேரங்களில், கடவுள் உங்கள் மூலம் சில அதிசயத்தை நடத்தலாம். யேன் உங்களை, ஏனெனில் நீங்கள் யேசுவை போல செய்கிறீர்கள். அவரே பீட்டர் மூலமும், அருளப்பர் மூலமும் பல அதிசயங்களை நிகழ்த்தியவர்.

நீ இறைவனின் விண்ணரசில் முக்கியமானவன். கடவுள் உன்னை உருவாக்கியபோது, உனக்கு ஒரு முக்கியமான வேலையை கொடுத்தார், அவருடைய கிறிஸ்துவின் உடலோடு ஒன்றாக்கப்பட்ட திட்டத்தில் , உனக்கு ஒரு சேவையை ஒதுக்கினார். நீ நிறைய கொடுக்க வேண்டும், அது இந்த தூதர் சேவைக்கு முக்கியமானது.
© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you? Please bless me! Be my Good News Partner.

For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Monday, April 9, 2007

மறையுரை april 10th

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

11 மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுது கொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். 12 அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். 13 அவர்கள் மரியாவிடம், ' அம்மா, ஏன் அழுகிறீர்? ' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ' என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை ' என்றார். 14 இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை. 15 இயேசு அவரிடம், ' ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்? ' என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், ' ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன் ' என்றார். 16 இயேசு அவரிடம், ' மரியா ' என்றார். மரியா திரும்பிப் பார்த்து, ' ரபு+னி ' என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ' போதகரே ' என்பது பொருள். 17 இயேசு அவரிடம், ' என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ' என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன் ' எனச் சொல் ' என்றார். 18 மகதலா மரியா சீடரிடம் சென்று, ' நான் ஆண்டவரைக் கண்டேன் ' என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.



மறையுரை:

மோட்சத்திலிருத்திற்கு, பூமியில் அடியெடுத்து வை:

ஏன் யேசு கிறிஸ்து மரிய மகதாலேனை அவரை பற்றிகொண்டிருக்க வேண்டாம் என்று இன்றைய நற்செய்தியில் கூறினார்? அவர் அணைத்து கொள்வதற்கு எதிர்ப்பாளரா? உன்னை அவர் அனைத்து கொள்ள வேண்டும் என நீ விரும்பவில்லை. எப்படி மேரி யேசுவை அனைப்பதால், அவர் மோட்சத்திற்கு எழுந்து தடுக்கப் போகிறதா?

ஜெருசலேத்தில் உள்ள மேரி மகதாலேன் ஆலயத்தில், ஒரு வெண்கல சிலை உள்ளது. அச்சிலுவையில், இந்த நற்செய்தி பதிக்கப்பட்டுள்ளது. யேசு, மேரியின் நன்பர் சாவிலிருந்து உயிர்த்து எழுட்ந்துவிட்டார் என்றறிந்து மேரி முழு சந்தோசத்துடன் இருப்பதாக காண்பிக்கப்படுகிறது. யேசுவின் ஒரு கை மேரியை நிறுத்த சொல்வது போல் இருக்கிறது. இன்னோரு கை, மோட்சத்தை நோக்கி காண்பிக்கிறது. மேலும் அவருடைய பார்வை, அவருடைய மேலோங்கிய கையை போல் மேல் நோக்கி இருக்கிறது. மேலும், "அங்கே மோட்சத்தை நோக்கி பார், பூமியை பற்றிலான விசயங்கள், ஒன்றுமில்லை" என சொல்வது போல் இருக்கிறது.

மேரியின் தலை மேல் நோக்கி இருக்கிறது. மேரியின் பார்வை யேசு அங்கே பார்க்கிறாரோ அங்கே போக விரும்புவது போல் இருக்கிறது. ஆனால் அவருடைய கண்ணோ மோட்சத்திற்கும், பூமிக்கும் நடுவில் இருக்கிறது. அவளுடைய ஒரு கை யேசுவை தொட விரும்புவது போல் இருக்கிறது, மற்றொரு கையோ அவள் நெஞ்சை தொட்டு இருக்கிறது. அது எப்படி இருக்கிறது என்றால், அவர் மோட்சத்திற்கு சென்ற பின்பு இந்த நெஞ்சில் தான் வருவார், வசிப்பார் என்பது போல் இருக்கிறது. நீங்கள் இந்த போட்டோவை gnm.org/faithbuilders/marymagdalene.htm என்ற லிங்கிலிருந்து தருவிக்கலாம்.


நீ எப்போதவது, யேசுவின் உடலை தொட வேண்டும் என்று விரும்பியிருக்கிறாயா? யேசு உனக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறார். "தற்காலிகமான், சிற்து நேரத்தில் முடியும் இது போன்ற அனுபவத்தை விட, மோட்சத்தின் ஆசிர்வாதத்திற்காக நாம் முழு நேரமும் செல்விடுவது மேல்" என்கிறார். யேசு நம்மை அரவணைக்கிறார், மற்ற மக்களின் மூலம் நாம் பெறும் ஒவ்வொரு அரவணைப்பும், அவருடையது தான். ஆனால், உடலோடு ஏற்படும் எந்த ஒரு தொடுதலும், சிற்து நேரத்திற்கு தான், அது எப்போதும் போதுமானதாக இல்லை. அதனால் தன் யேசு மேரியிடம், "என்னை அரவணைக்காதே " என்று கூறாமல், "என்னை பற்றிக்கொண்டிருக்க வேண்டாம்" என்று கூறினார்.

நித்திய இளைப்பாற்றியை அடைய, நாம் இந்த பூமியோடு பற்றி கொண்டிருக்கும் விசயஙகளை விட்டு விட வேண்டும். புனிதர்கள் அவர்கள் ஜெப நேரத்தில், மேலே எழுந்து விடுவார்கள், ஏனெனில் அவர்களின் உடல், இந்த பூமியின் மீது எந்தவொரு பற்றுதலும் இல்லை. அவர்களின் இறைவனுடன் உள்ள தொடர்பு, கடவுளை பார்க்கா விட்டாலும், அவர்கள் பார்க்க்க முடிந்த உலக தொடர்புகளை விட மிகவும் உறுதியானது.

யேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்து, நம்முடைய தந்தையை நோக்கி எழுந்தருளச் செய்கிறார். எந்த பற்றுதல், உனக்கு இடையூறு செய்கிறது.? சில நேரங்களில், தந்தை கடவுள், நம் தந்தையர்களை போல, குறைபாடுகள் உள்ளவர் என்று நினைத்துகொள்கிறோம். ஒரு வேளை, நாம் கடவுளின் விருப்பங்களை விட, நம் விருப்பங்கள், நம் எண்ணங்கள், நம் நோக்கங்கள், நமக்கு தேவையானவைகளையும் சார்ந்து இருக்கிறோம்.
நாம் பூமியின் மீது உள்ள பற்றினால், மற்றவர்களுக்கு தியாகம் செய்யாமல் இருக்கிறோமோ? நம்மின் பாதுகாப்பான வட்டாரத்தை விட்டு வெளியே வராமல், நமக்கு பழக்கப்பட்ட வட்டாரத்திற்குள் இருக்க விரும்புகிறோமா? நாம் பழைய பழக்க வழக்கங்களை விட முடியாமல் அல்லது ஏதாவது ஒரு விசயத்தில் அடிமையாக இருக்கிறோமோ?

மீட்பின் வாழ்வு என்பது, நாம் யேசுவை விட்டு, அவரால் நம் சாவிலிருந்தும்,நிரந்தரமற்ற பூமியின் தேவையை விட்டு எழ செய்து, நிரந்தரமான மோட்சத்தின் சந்தோசத்தை அடைய செய்ய வேண்டும். நாம் பூமியில் இருக்கும் போதே, நாம் யேசுவின் உடலை தொட வேண்டிய அவசியமில்லை. ஆனால், நம்முடைய ஆவி மோட்சத்தை நோக்கி இருக்க வேண்டும் என நம்மை அழைக்கிறார்.நாம் நமக்கு பூமியில் தேவையானவை இல்லை, ஆனால், மோட்சத்தில் அது இருக்கிறது என்று நினைக்கும் போது, நாம் ஆண்டவரை நோக்கி செல்கிறோம்.

© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you? Please bless me! Be my Good News Partner.

For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Sunday, April 8, 2007

monday 9th april reflection

Good News Reflection
Monday in the Octave of Easter
April 9, 2007
Today's Readings:
Acts 2:14, 22-33
Ps 16:1-2a, 5, 7-11
Matt 28:8-15
http://www.usccb.org/nab/040907.shtml

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 28

8 அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். 9 திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். 10 அப்பொழுது இயேசு அவர்களிடம், ' அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் ' என்றார். 11 அவர்கள் போய்க்கொண்டிருந்த போது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர். 12 அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, 13 ″ ' நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர் ' எனச் சொல்லுங்கள். 14 ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம் ″ என்று அவர்களிடம் கூறினார்கள். 15 அவர்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள் வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.

http://www.arulvakku.com


மறையுரை:

கிறிஸ்து உயிர்ப்பின் நல்ல செய்தியுடன் அடுத்து முன்னேறுவோம்:

அதிக சந்தோசத்தோடும், அதே நேரத்தில், பயத்துடனும் எப்படி இருப்பது என உனக்கு தெரியுமா? அப்படித்தான், இன்றைய நற்செய்தியில் வந்த பெண்களும், உயிர்த்த யேசுவை பார்த்தவுடன் அனுபவப்பட்டார்கள்.நானும், பல நேரங்களில் இது மாதிரி உணர்ந்திருக்கிறேன். எடுத்துகாட்டாக, என்னுடைய முதல் குழந்தை பிறந்த போது, அந்த மிக மகிழ்ச்சியான சந்தோசதிற்கிடையே, ஒரு பயம் என்னை ஆச்சரியபட வைத்தது. நான் நல்ல அம்மாவாக இருந்து இந்த மகனை கடவுளின் மகனாக வளர்ப்பேனா? (அதற்கு பதில்: ஆமாம், ஆனால், பரிசுத்த ஆவியுடன் துனையுடன்)


அதிக மகிழ்ச்சியுடன், ஆனால் மிக கடினமான, முடிக்கமுடியாத செயல் உங்களுக்கு கொடுக்கப்பட்டாதாக நினைத்துகொள்ளவும்.

ஈஸ்டர் தவக்காலத்தின் முடிவல்ல. கிறிஸ்துவின் உயிர்ப்பு, பழைய வாழ்க்கையின், பழைய பழக்க வழக்கங்களின், அல்லது பழைய பிரச்னையிலிருந்து வெளியே வர விரும்புவதின் முடிவு அல்ல. ஈஸ்டர் காலம், ஒர் முடிவில்லாத காலம். அல்லது ஓடி ஓடி மற்ரவர்களிடம் இறைவனின் நல்ல செய்தியை கூறுவது ஆகும்.இது எப்படியென்றால், முதல் ஈஸ்டர் அன்று எப்படி அந்த சகோதரர்கள், யேசுவின் உயிர்ப்பின் செய்திகளை கூறினார்களோ. யேசுவின் உயிர்ப்பை அனுபவிப்பது என்பதே, அது ஒரு பருவ காலமாகும். வாழ்க்கை முழுவதும், உங்களுடைய விசுவாசம், யேசுவின் உயிர்ப்பை அறியாதவர்களுக்கு ஊற்றாய் இருக்கட்டும். எப்படி அந்த பெண்கள் சீடர்களுக்கு அந்த அற்புதமான உயிர்ப்பு நாளில் இருந்தார்களோ? அதே மாதிரி உங்கள் விசுவாசம் இருக்கட்டும்.



உஙளுக்கு அந்த மாதிரியான வேலை எவ்வளவு சந்தோசத்தை தருகிறது.

நாமெல்லாம் ஈஸ்டரின் மக்கள் என்பதை உண்மையாக புரிந்தோமானால், நாமும் பாவங்களின் அழிவிலிருந்து, மீட்கப்பட்டிருக்கோம் என்று புரிந்தால், நாம் எப்படி நாம் அடையும் சந்தோசத்தை தடுக்க முடியும். கிறிஸ்து சாத்தான் மீது மேல் பெற்ற வெற்றியை நமக்குள்ளே வைத்து கொள்ள விரும்புவதில்லை. நாம் நம்முடைய பயத்தை தள்ளி வைத்து விட்டு, நாம் கண்ட விசயத்தை, யேசுவின் உயிர்ப்பை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

தவக்காலத்தில் நம் நோக்கம், நம் உள் மனத்தை நோக்கி இருந்தது. நம் பாவத்திற்காக நாம் மன்னிப்பு கேட்டு அக்காலத்தை செலவிடுகிறோம். தற்போது, நம் நோக்கம், நம்மை விட்டு வெளியே செல்கிறது. இப்போது நமக்கு பயம் வருகிறது. எங்கே நம்மை விலக்கி விடுவார்களோ. அல்லது நம்மை கொடுமை படுத்துவார்களோ? என்ற பயம் இருக்கிறது.


ஆனால் யேசு நமக்கு சொல்கிறார்: "பயப்பட வேண்டாம்", அவர் முதல் சீடர்களுக்கு சொன்னது போல. ஏன் அப்படி? ஏனெனில், யேசு நம்மோடு எப்போதும் இருக்கிறார். அவர் நம்மில் உள்ள குறைகளை பரிசுத்த ஆவியின் உதவியுடன் நிரப்புகிறார். யேசு நம்மை முத்தம் கொடுத்து, நம்முடைய வேதனையான காலங்களில் நம்மை அனைத்துகொள்கிறார். அவருடையா ஆவி நமக்கு ஞானத்தையும், உற்சாகத்தையும் தருகிறது.

சிலுவையை தாண்டி அடுத்த அடி எடுத்து வை: ஈஸ்டர் ஞாயிறின் சந்தோசம் நல்லது, ஆனால், நாம் கொஞ்சம் யதார்த்தமாக இருப்போம். நம்முடைய ஒவ்வொரு நாள் வாழ்விலும், நாம் சந்தோசத்தோடு வாழ்கிறோமா? அல்லது பயத்துடன் வாழ்கிறோமா? ஈஸ்டர் ஞாயிறு, ஒரு காலத்தின் ஆரம்பம். ஈஸ்டரின் விசுவாசம், வாழ்நாள் சந்தோசத்தின் ஆரம்பம். நாம் கொண்டாட இன்னும் யேசுவிடம் அதிகம் இருக்கிறது. நம்மை சுற்றி இருப்பவர்கள் நம் விசுவாசத்தை எப்படி கொண்டாடுகிறோம் என்று பார்க்க வேண்டும் . மக்களின் துயரத்திலிருந்து அவர்களை எழுப்பாத , அல்லது யேசு நம்மோடு வாழ்கிறார் என்பதனை நிரூபிக்காத நற்செய்தி உணமையாக நற்செய்தியாக இருக்காது.

© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you? Please bless me! Be my Good News Partner.

Saturday, April 7, 2007

ஈஸ்டர் ஞாயிறு : யேசுவின் வெற்றி

Easter Sunday, The Resurrection of the Lord
Scriptures for the Mass of Easter Morning:
Acts 10:34a, 37-43
Ps 118:1-2, 16-17, 22-23
Col 3:1-4 or 1 Cor 5:6b-8
John 20:1-9
http://www.usccb.org/nab/040807.shtml


மறையுரை:

மிகவும் மகிமையுள்ள, யேசுவின் உயிர்த்தெழுந்த நாள், யேசுவோடு சேர்ந்து , இந்த புனித வாரத்தில், நாம் பயணம் செய்யாவிடில், இது நிறைவானதான ஒரு நாளாக இருக்காது. மோட்சத்தின் நுழைவாயில் சிலுவை தான். யேசுவோடு சேர்ந்து, முதலில், வேதனைகளையும், தியாகமும் செய்யாவிடில், நாம் சந்தோசத்தையும், மகிமையையும் அனுபவிக்க முடியாது.

ஈஸ்டர் சந்தோசம், மகிழ்ச்சி யேசுவின் சிலுவையை ஏற்றுக் கொள்வதால் மட்டும் வருவது அல்ல, அந்த பயனத்தை தொடரவேண்டும். நீங்கள், உண்மையாக யேசுவை பின் தொடர விரும்பினால், நாமும் அவர் செய்ததையெல்லாம் செய்து, பிறருக்கு உதவி செய்து, அவர்கள் நித்திய வாழ்வை அடைய யேசுவின் சேவையோடு இனைந்து செய்திடல் வேண்டும். இச்சேவையில், நாம் மீண்டும் மீண்டும் சிலுவையை சந்திப்போம். இத்தகய தியாக அன்பின் வலியில்லாமல், நாம் மோட்சத்தை அடைய முடியாது.


ஒருவர் நம்மிடம் மிக கோபமாக திட்டும்போது, நாமும் அவர்களை திட்ட வேண்டும் என தோன்றும்.ஆனால், நாம் மென்மையான, மிகவும் கருணையுடன் பேசுவது, நமது சிலுவையாகும். ஒருவரி தொந்தரவில் இருக்கும்போது, நமக்கு வசதியின்றி, நாம் ஈடுபட வேண்டாம் என நினைக்கும் அள்விற்கு வரும்போது, நமது இரு கைகளாலும், அவர்களுக்கு தேற்றுதல் கூறும் போது, நமக்கு சிலுவையாகும். நம்மை அநியாயமாக நடத்துபவர்களுக்கு, நம்மை பழி வாங்குபவர்களுக்கு நல்ல செயல் செய்வது ஒரு சிலுவையாகும். இறைவனின் விண்ணக அரசுக்காக, நாம் நமது வாழ்க்கையை வேறுபடுத்தி வாழும்போது, நமக்கு மீட்பின் சந்தோசம் கிடைக்கிறது.


கடினமான நேரத்தில் கொடுக்கும் அன்பு, வேதனையின் அன்பு, ஆழமான அன்பு, இது மற்றவர்களின் நித்திய வாழ்விற்கு உதவியாக இருக்கும். நம் தியாகம், முடிவில்லா மதிப்பை தரும். இது நமக்கு நாமே செய்து கொள்ளும் வாழ்வினை விட மிக சிறந்த வாழ்க்கையாகும். நித்திய வாழ்விற்கும் மிக சிறந்தாகும். ஈஸ்டர் ஞாயிறன்று, யேசுவின் உயிர்ப்பில் நாம் கலந்துகொள்ளும் திருப்பலி, சாத்தான் மீது பெற்ற வெற்றியாகும்.

சுய சிந்தனைக்கான கேள்வி: எந்த மாதிரியான தியாகங்களால், நீ இப்போது வேதனை படுகிறாய்? யேசுவிற்கு ஒரு அன்பு கடிதம் எழுது. அக்கடிதத்தில், உனது வலியையும், அவரது வலியையும் இனைத்து அவரோடு அமைதியாக அவர் கல்லறையில் அவரோடு சேர்ந்து இரு, நீ எப்போது தயாராக இருக்கிறாயோ? அப்போது, எழுந்து யேசு, உன் செயல்களை பாராட்டுகிறார் என்று அறிந்து அப்போது கொண்டாடு. இது தான் உனது மீட்பு.


http://www.gnm.org

ஈஸ்டர் ஞாயிறு : யேசுவின் வெற்றி

Easter Sunday, The Resurrection of the Lord
Scriptures for the Mass of Easter Morning:
Acts 10:34a, 37-43
Ps 118:1-2, 16-17, 22-23
Col 3:1-4 or 1 Cor 5:6b-8
John 20:1-9
http://www.usccb.org/nab/040807.shtml


மறையுரை:

மிகவும் மகிமையுள்ள, யேசுவின் உயிர்த்தெழுந்த நாள், யேசுவோடு சேர்ந்து , இந்த புனித வாரத்தில், நாம் பயணம் செய்யாவிடில், இது நிறைவானதான ஒரு நாளாக இருக்காது. மோட்சத்தின் நுழைவாயில் சிலுவை தான். யேசுவோடு சேர்ந்து, முதலில், வேதனைகளையும், தியாகமும் செய்யாவிடில், நாம் சந்தோசத்தையும், மகிமையையும் அனுபவிக்க முடியாது.

ஈஸ்டர் சந்தோசம், மகிழ்ச்சி யேசுவின் சிலுவையை ஏற்றுக் கொள்வதால் மட்டும் வருவது அல்ல, அந்த பயனத்தை தொடரவேண்டும். நீங்கள், உண்மையாக யேசுவை பின் தொடர விரும்பினால், நாமும் அவர் செய்ததையெல்லாம் செய்து, பிறருக்கு உதவி செய்து, அவர்கள் நித்திய வாழ்வை அடைய யேசுவின் சேவையோடு இனைந்து செய்திடல் வேண்டும். இச்சேவையில், நாம் மீண்டும் மீண்டும் சிலுவையை சந்திப்போம். இத்தகய தியாக அன்பின் வலியில்லாமல், நாம் மோட்சத்தை அடைய முடியாது.


ஒருவர் நம்மிடம் மிக கோபமாக திட்டும்போது, நாமும் அவர்களை திட்ட வேண்டும் என தோன்றும்.ஆனால், நாம் மென்மையான, மிகவும் கருணையுடன் பேசுவது, நமது சிலுவையாகும். ஒருவரி தொந்தரவில் இருக்கும்போது, நமக்கு வசதியின்றி, நாம் ஈடுபட வேண்டாம் என நினைக்கும் அள்விற்கு வரும்போது, நமது இரு கைகளாலும், அவர்களுக்கு தேற்றுதல் கூறும் போது, நமக்கு சிலுவையாகும். நம்மை அநியாயமாக நடத்துபவர்களுக்கு, நம்மை பழி வாங்குபவர்களுக்கு நல்ல செயல் செய்வது ஒரு சிலுவையாகும். இறைவனின் விண்ணக அரசுக்காக, நாம் நமது வாழ்க்கையை வேறுபடுத்தி வாழும்போது, நமக்கு மீட்பின் சந்தோசம் கிடைக்கிறது.


கடினமான நேரத்தில் கொடுக்கும் அன்பு, வேதனையின் அன்பு, ஆழமான அன்பு, இது மற்றவர்களின் நித்திய வாழ்விற்கு உதவியாக இருக்கும். நம் தியாகம், முடிவில்லா மதிப்பை தரும். இது நமக்கு நாமே செய்து கொள்ளும் வாழ்வினை விட மிக சிறந்த வாழ்க்கையாகும். நித்திய வாழ்விற்கும் மிக சிறந்தாகும். ஈஸ்டர் ஞாயிறன்று, யேசுவின் உயிர்ப்பில் நாம் கலந்துகொள்ளும் திருப்பலி, சாத்தான் மீது பெற்ற வெற்றியாகும்.

சுய சிந்தனைக்கான கேள்வி: எந்த மாதிரியான தியாகங்களால், நீ இப்போது வேதனை படுகிறாய்? யேசுவிற்கு ஒரு அன்பு கடிதம் எழுது. அக்கடிதத்தில், உனது வலியையும், அவரது வலியையும் இனைத்து அவரோடு அமைதியாக அவர் கல்லறையில் அவரோடு சேர்ந்து இரு, நீ எப்போது தயாராக இருக்கிறாயோ? அப்போது, எழுந்து யேசு, உன் செயல்களை பாராட்டுகிறார் என்று அறிந்து அப்போது கொண்டாடு. இது தான் உனது மீட்பு.


http://www.gnm.org

Thursday, April 5, 2007

புனித வெள்ளி april 6 2007

Today's Readings:
Isaiah 52:13 -- 53:12
Ps 31:2, 6, 12-13, 15-16, 17, 25
Heb 4:14-16; 5:7-9
John 18:1 -- 19:42
http://www.usccb.org/nab/040607.shtml
http://www.arulvakku.com/

யேசுவின் மரணம், அதன் பிறகு அவரின் உயிர்ப்புக்கு பிறகு, பல நூற்றாண்டுகளாக யேசு நற்செய்தியாளர்களுக்கு, சமய அறிஞர்களுக்கு, "யார் அவருடைய ஆர்வமான அல்லது அவர் கொடுக்கும் முக்கிய செயலை நினைத்து தியாணிக்கிறார்களோ" அவர்கள் அனைவரும் ஆண்டவரால் விரும்பப்படுபவர்கள். புனித அகுஸ்தினார் இப்ப்டி எழுதியுள்ளார்." யார் கடவுளின் ஆழ்ந்த விருப்பத்தை தினமும் தியாணம் செயவது, நமது ஆண்மாவிற்கு அதிக லாபம் கொடுக்கும் செயலாகும்".

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் உருவம், இந்த காலங்களில் நாம் பார்ப்பது, யேசு நம் மீது உள்ள அன்பினால், அவர் அடைந்த கொடூரமான வேதனைகளை நீக்கி விட்டு காட்டப்படும் உருவம். இன்று அந்த அன்பை நினைத்து தியானம் செய். அந்த அன்பு அளவிட முடியாதது, பிரமாண்டமானது. அவர் சந்தோசமாகவும், ஆர்வத்துடனமும் தன்னையே இந்த மிக பெரிய வேதனைக்கு கையளித்து, பல வேதனைகளை அடைந்தார், ஏனெனில், அவர் உன்னை முழுமையாக அன்பு செய்கிறார். அவருக்கு இந்த வேதனை உனக்கு நல்லது செய்யும் என்பது தெரியும்.

இந்த மிக பெரிய அன்பளிப்பு, யெசெஉ உனக்கும், எனக்கும் கொடுத்தது, மற்றும் எல்லோருக்கும் , அதனை ஏற்றுகொள்கிறவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இன்றைய நற்செய்தியை படித்து, அதில் ஒவ்வொரு வலிக்கும், காயங்களுக்கும் எவ்வளவு வேதணைபட்டார் என்பதை புர்ந்து கொள், அத்தனை வேதனையும், வலியும், உன் நலனுக்காக கொடுக்கப்பட்டது, உன் பாவங்கள் உன்னை அழிக்காமல் இருப்பதற்காக கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர் உனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் எவ்வளவு உன்னை பாதுகாக்கிறார் என்பதை புரிந்து கொள்.

யேசுவின் சிலுவையை உற்று நோக்கு அது உன்னை பற்றிய தாழ்வான மதிப்பை குணமாக்கும். ஏனெனில் யேசு எவ்வளவு உயரத்தில் நம்மை தூக்கி வைத்தார் என்பதை இந்த சிலுவை நமக்கு காட்டுக்கிறது. இவ்வளவு உனக்கு இதனை செய்த பின்பு , உனக்கு வேறு தேவையானவற்றை செய்யாமலிருப்பார? அவர் உன் உணமையான் நலம் விரும்பியாக இருந்தால்.? எந்த வேதனை இது மாதிரியான சந்தேகத்தை எழுப்பியது, உன்னைபற்றிய இரக்கமற்ற யோசனை என்ன? நீ உன்னை பற்றி தாழ்வாக எதை நினைத்து கொள்கிறாய். இதனையெல்லாம் சிலுவைக்கு எடுத்து செல், அதனை அந்த வீரர்களிடம் கொடு, அவர்கள் அதனை அந்த ஆணியோடு அறைவதை பார், இந்த காயங்கள் யேசுவோடு மரணமடையட்டும். அவர் இதன் வேதணைகளை உனக்காக அவர் ஏற்கனவே வாங்கிவிட்டார்.

கத்தோலிக்க கோவில்களில், புனித வெள்ளியனன்று, மிக பெரிய மரியாதை செலுத்தும் விதமாக சிலுவையை முத்தம் செய்கிறோம். உஙகளுடைய முத்தம், யேசுவிற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கட்டும்.

பிறகு, புனித சனியன்று, யேசுவின் கல்லறையோடு சேர்ந்து அமைதியாக ஓய்வெடு. கடவுள் உன் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார், என்பதை நினைத்து அமைதியாக ஓய்வெடு. ஈஸ்டர் ஞாயிறு அன்று உனக்காக மிக பெரிய மீட்பை, உயிர்த்தழுதலை கொடுக்க இருக்கிறார்.

கல்வாரி மலைக்கு இறுதி அடி எடுத்து வை: உன்னை பற்றி தவறாக நினைக்கும் விசயங்களை பட்டியலிடு. உஙகளை ஏளனம் செய்த, அவமானம் செய்தவர்களின் பெயர்களை பட்டியலிடு. உன்னை பற்றி மதிப்பில்லாதவன் என நினைத்த நேரங்களை பட்டியலிடு. உன்னை குறைவாக மதிப்பிட செய்யும் எல்ல விசயங்கலும் பட்டியலிடு. அதற்கு பிறகு, யேசுவின் சிலுவையை பார்த்து அவரின் தியாகம் செய்த அன்பினை நினைத்து தியாணம் செய். அவர் சந்தோசத்தோடும், மிகவும் விருப்பத்துடனும் இந்த வலியையும் வேதனையையும் ஏற்றுக்கொண்டார், ஏனெனில், கடவுள் உங்களை அன்பு செய்கிறார்.இந்த வேதனையும், வலியும் உஙகளை வின்னக அரசுக்கு அழைத்து செல்லும் என்று அவருக்கு தெரியும்.

http://www.gnm.org

Wednesday, April 4, 2007

punitha viyaazan april 5th

© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you? Please bless me!
Be my Good News Partner.For PERMISSION to copy this reflection,
go to:http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்

அதிகாரம் 11

23 ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, 24 கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார். 25 அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார். 26 ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.


யோவான் (அருளப்பர்) நற்செய்தி (http://www.arulvakku.com)

அதிகாரம் 13

1 பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதி வரையும் அன்பு செலுத்தினார். 2 இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில், 3 தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய், 4 இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். 5 பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார். 6 சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், ' ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்? ' என்று கேட்டார். 7 இயேசு மறுமொழியாக, ' நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய் ' என்றார். 8 பேதுரு அவரிடம், ' நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்Nடன் ' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ' நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை ' என்றார். 9 அப்போது சீமோன் பேதுரு, ' அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும் கூடக் கழுவும் ' என்றார். 10 இயேசு அவரிடம், ' குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை ' என்றார். 11 தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் ' உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை ' என்றார். 12 அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: ' நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? 13 நீங்கள் என்னைப் ' போதகர் ' என்றும் ' ஆண்டவர் ' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். 14 ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். 15 நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.


சிந்தனை:


யேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு பனிவிடை பெறுவதற்கு அல்ல. அவருக்கு அந்த தகுதி இருந்தாலும், அவர் பனி செய்யவே வந்தார். உனக்காக பனி / சேவை செய்ய வந்தார். மற்றும் உன் மூலமாக, நீ உனக்கு தெரிந்தவர்களுக்கு பனி செய்ய வேண்டும் என்று விரும்பிகிறார்.

நம்மை அழைத்து, நமக்கு பனிவிடை செய்த நம் கடவுள், நம்மை நோக்கி, "நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன். " என்கிறார்.

இது மாதிரி யேசு செய்தது போல, நாமும் செய்வது மிகவும் கடினமானது. இது மாதிரி செய்ய வேண்டும் என்றால், நமது சகோதரர்களையும், நாம் விரும்பாதவர்களையும் அதிகமாக அன்பு செய்து அவர்களுக்கு நல்ல செயல்கள் செய்து கடவுளை போல இருக்க முயற்சிக்க வேண்டும். வேறு விதமாக சொன்னால், நமக்கு நெருக்கமானவர்கள், நமக்கு நாம் விரும்புவது போல் செய்யாவிட்டால், நமக்கு ஏமாற்றம் அடையும் போது, நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து அவர்களுக்கு நன்மையாக இருக்க வேண்டும்.


"நாம் நனமையாக" இருக்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம். நாம் யேசுவின் உடலையும், இரத்தத்தையும் பெற்று, அவரோடு இனைந்து, இந்த திருச்சபையோடும் இனைய வேண்டும். நாம் கிறிஸ்துவை பெறுவதற்காக நாம் நற்கருணையை நோக்கி தனியாளாய் செல்கிறோம், அப்போது நாம் சொல்வது " ஆண்டவரே உன்னை பெற நான் தகுதியற்றவன்.. " . ஆனால், நற்கருணையை பெற்ற பின் கிறிஸ்துவின் உடலனி ஒரு உறுப்பினராகி, அவரோடு ஒன்றாய் இனைந்து விட்டோம். கிறிஸ்துவின் உடலின் ஒர் அங்கமாகி, நாமும் ரொட்டியும் , திராட்சை ரசமும் ஆக மாறிவிட்டோம். திருப்பலி முடிந்தவுடன், நாமும் நன்மையாக இருக்க அழைக்கப்படுகிறோம் - உண்மையான கிறிஸ்துவின் பிரசன்னமாக இவ்வுலகில் இருக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, யேசு எனக்கு இந்த கருத்தினை அறிவுறுத்தினார். குரு ஒருவர்க்கு காலை கழுவி விடுவது போல ஒரு நிகழ்ச்சி நடந்தது. அவர் எங்கள் பங்கு உறுப்பினர்களுக்கும், எங்களுக்கும் , அதிகம் குடித்தும், காமப் பார்வை பார்த்தும், எங்களுக்கு துரோகம் செய்தார். அவருடைய பாதஙல், மிகவும் மோசமாக இருந்தது, அதைவிட மோசமானது, "அவருடைய பாவங்களை ஒத்துகொள்ளாதது".


"காலை கழுவுவதால்" எது நிறைவேற்றப்படுகிறது அல்லது எது பூர்த்தி செய்யப்படுகிறது. இது கருணையின் அடிப்படையாக அமைகிறது. அந்த குருவானவருக்கு நான் செய்தது , அவருக்கு பனிவிடை செய்ய விரும்புகிறேன், அவர் இந்த செயல், அவர் பாவஙகளின் குணப்படுத்தும் செயலாக நினைத்து , அதற்கு உட்படுத்த வேண்டும். அவர் அதனை ஏற்று கொள்ளவில்லை. அதனால் அவரை பற்றி, நிர்வாகத்தினரிடம் புகார் செய்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சி, எனக்கு பெரிய மாற்றமாயிர்ந்தது. என்னுடைய நிபந்தனையில்லாமால் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டியதன் விருப்பத்தை என்னுள் மாற்றியது. யேசு என் காலையும் , எனது இதயத்தையும் சேர்த்து கழுவினார். இந்த நிகழ்ச்சி யேசுவின் ஆழ்ந்த அன்பை என்னால் புர்ந்து கொள்ள முடிந்தது.

கலவாரி மலைக்கு யேசுவோடு சேர்ந்து அடியெடுத்து வை: மனதுக்கு இணிய செயலாக இல்லாவிட்டாலும், மற்றவர்களுக்கு நல்லது செய்ய முற்படவேண்டும். முதலில் ஏன் யேசு உங்களின் கால்களை கழுவினார் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்று சிறிது நேரம், யேசு உஙகள் காலை கழுவுவது போல் நினைத்து கொள்ளுஙகள். உஙகள் முன் முழஙகாலிட்டு உஙகள் கால்களின் அழுக்குகளை மென்மையாக துடைந்து கழுவது போல் கற்பனை செய்து கொள்ளுங்கல். அப்புறமாக புந்த வியாழன் திருச்சடங்குகளில், 'யேசு என்னை எந்த மாதிரி பனி விடை செய்ய அழைக்கிறார்' என்ற் கேள்வியுடன் கலந்து கொள்ளுஙகள்.

Tuesday, April 3, 2007

april 4th , புனித வாரம் புதன்

http://www.gnm.org
http://www.arulvakku.com

எசாயா

அதிகாரம் 50

4 நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்: காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்: கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். 5 ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்: நான் கிளர்ந்தெழவில்லை: விலகிச் செல்லவுமில்லை. 6 அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7 ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்: நான் அவமானம் அடையேன்: என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்: இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். 8 நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்: என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்: என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். 9 இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்: நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்? அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்: புழுக்கள் அவர்களை அரித்துவிடும். 10 நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்: காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்: கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். 11 ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்: நான் கிளர்ந்தெழவில்லை: விலகிச் செல்லவுமில்லை. 12 அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 13 ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்: நான் அவமானம் அடையேன்: என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்: இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். 14 நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்: என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்: என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். 15 இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்: நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்? அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்: புழுக்கள் அவர்களை அரித்துவிடும்.

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 26

14 பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, 15 ' இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? ' என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். 16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். 17 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள். 18 இயேசு அவர்களிடம், ' நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ' எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன் ' எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள் ' என்றார். 19 இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். 20 மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். 21 அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், ' உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். 22 அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ' ஆண்டவரே, அது நானோ? ' என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். 23 அதற்கு அவர், ' என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். 24 மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும் ' என்றார். 25 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் ' ரபி, நானோ? ' என அவரிடம் கேட்க இயேசு, ' நீயே சொல்லிவிட்டாய் ' என்றார்.

மறையுரை :

நாம் எப்படி கிறிஸ்துவுக்கு துரோகம் செய்கிறோம்? நம்முடைய சுய நலத்தினால். இன்றைய நற்செய்தியில் யூதாஸின் நோக்கத்தை பார்ப்போம். யேசுவின் மூன்று வருட நிபந்தனையற்ற அன்பினை அனுபவித்த பின்பும், ஏன் யூதாஸ் யேசுவுக்கு துரோகம் செய்தான்?

யூதாஸ் சுயநலமுள்ளவனாக இருந்தான் என்பதனை, அவன் எப்படி யேசுவிற்கு வரும் நன்கொடைகளை மோசடி செய்தான் அறிவோம்(யோவான்: 12:6). "எனக்கு அதில் என்ன கிடைக்கும்" என்ற எண்ணத்திலேயே இருந்தான். அவன் யேசுவை, ரோமானியர்களின் கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து மீட்கும் மெசியாவாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். ஆனால் அது யேசுவால், ஏற்றுகொள்ள முடியாத ஏமாற்றமாக ஆகி விட்டது. யூதாஸின் கணகள் அவனுடைய சொந்த யோசனையினால் கட்டப்பட்டிருந்தது. அவனால் கடவுள் வேறு ஓர் நல்ல யோசனையை வைத்திருப்பார் என்ற விசயத்தை அறிந்து கொள்ள முடியவிலலை.

யூதாஸை போல் சுய நலமுள்ள மக்கள் எந்த ஒரு ஏமாற்றத்தையும் தாங்கிகொண்டு சும்மா இருப்பதில்லை. அவன் யேசுவை இஸ்ரேல் மக்களிடம் காட்டி கொடுக்க முடிவு செய்த போது, இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? ' என்று கேட்டான். அவர்கள் அதற்கான உறுதியை தரும் வரை, அவன் யேசுவை காட்டிகொடுப்பது என்பது கேள்வி குறியாகவே இருந்தது.

நீ என்றாவது, யேசு உனக்கு என்னவாக இருக்கவேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என நினைத்து , அதனை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து இருக்கிறாயா? நாமெல்லாம் இந்த ஒரே ப்ரிவில் தான் இருக்கிறோம்.நாம் யேசுவிடம் எதிர் பார்த்தது கிடைக்காதபோது அல்லது அவர் நம்மிடம் மிகவும் கழ்டமான விசயத்தை செய்ய கூறும்போது, "நமக்கு இதில் என்ன இருக்கிறது" என்ற கேள்வியில் நுழைந்துவிடுகிறோம்.

நம்முடைய ப்ரச்னைகளுக்கு முடிவு தேடி, கடவுளிடம் எதிர்பார்த்து, அது அவரிடமிருந்து கிடைக்காத போது, நாமெல்லாம், "நமக்கு இதில் என்ன இருக்கிறது" என்று கேட்கும் பகுதியில் அல்ல்து அது மாதிரியான சுழ்னிலையில் விழுந்துவிடுகிறோம். நம்மை தற்காத்து கொள்ளும் பயம் வந்து அதனில் வீழ்ந்து விடுகிறோம். சுய நலம் நம்முடைய தேவைகளை, நம் மகிழ்ச்சியை , நம் பாதுகாப்பை, நம் செல்வங்களை மற்றும் நம் வாழ்ககை முறையை காத்துகொள்ள செய்கிறது. கடவுள் வேறு ஓர் நல்ல முடிவை அல்லது நல்ல தீர்வை வைத்திருப்பார் என்பதனை காண முடியாமல, சுய நலம் நம் கண்கலை கட்டி விடுகிறது.


யூதாசை போல நாமும் நம் சுய நலத்தினால், நாம் யேசுவிற்கு துரோகம் செய்கிறோம். நாம் கடவுளை விசுவசிப்பதாக பகிரஙமாக அறிவிக்கிறோம். ஆனாலும், நம் சுய் நலத்தால் தேர்வு செய்யும் வாழ்க்கை முறை வேறு விதமாக இருக்கிறது. நமக்கு தேவையான விசயஙகள் நமக்கு அவரிடமிருந்து கிடைக்கும் போது தான், நாம் அவரை நம்புகிறோம். நமக்கு சுலபமாக இருக்கும்போதுதான் அவரை வழிபடுகிறோம்.


இப்போதைய கேள்வி, நான் யேசுவிற்கு துரோகம் செய்தேனா? என்பது இல்லை. நம் ஒவ்வொரு துரோகத்திற்கு பிறகும் எவ்வளவு விரைவாக, நாம் கடவுளிடம் சரனைடைந்து, அவருடைய மன்னிப்பு கோருகிறோம், என்பது தான். ராயப்பரும், யேசுவிற்கு துரோகம் இழைத்தார், ஆனால், அவர் யேசுவின் மேல் வைத்திருந்த அன்பினால் அவருடைய சுயநலம் சிறிது நேரம் தான் நீடித்தது

மன்னிப்பதற்கு ஓர் அடி எடுத்து வை: சீடர்களோடு கடைசி இரவு உணவில் கலந்து கொள்வதாக நினைத்த்க்கொள், யேசு அவருடைய உணவை உனக்கு தருகிறார். உன் கண் வழியாக உன்னை பார்க்கிறார். உன் இதயத்தை அவருக்கு தெரியும். உன் துரோகங்கள் தெரிந்தும் உன்னை அன்பு செய்கிறார். நீ என்ன சொல்வாய் அவரிடம்? உன் பாவங்களை ஒப்புக்கொள். அவருடைய சிரிப்பை ஏற்று கொள். ஒவ்வொரு திருப்பலியிலும் இந்த முறையை பின்பற்று. ஏனெனில் இந்த பயிற்சி கால்ங்களை கடந்து அவருடைய கடைசி இரவு உணவோடு, நம்மை சேர்த்து வைக்கிறது.


Today's Readings:
Isaiah 50:4-9
Ps 69:8-10, 21-22, 31, 33-34
Matt 26:14-25
http://www.usccb.org/nab/040407.shtml

Monday, April 2, 2007

April 3rd , மறையுரை

எசாயா
அதிகாரம் 49
1 தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்: தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்: கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். 2 என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்: தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்: என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்: தம் அம்பறாத் துணியில் என்னை மறைத்துக் கொண்டார். 3 அவர் என்னிடம், நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன் என்றார். 4 நானோ, வீணாக நான் உழைத்தேன்: வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்: ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது: என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது என்றேன். 5 யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்: ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்: என் கடவுளே என் ஆற்றல்: அவர் இப்பொழுது உரைக்கிறார்: 6 அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 13
21 இப்படிச் சொன்னபின் இயேசு உள்ளம் கலங்கியவராய், ' உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்று திட்டவட்டமாகக் கூறினார். 22 யாரைப் பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். 23 இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர் மேல் இயேசு அன்பு கொண்டிருந்தார். 24 சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, ' யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக்கேள் ' என்றார். 25 இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், ' ஆண்டவரே அவன் யார்? ' என்று கேட்டார். 26 இயேசு மறுமொழியாக, ' நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான் ' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். 27 அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், ' நீ செய்யவிருப்பதை விரைவில் செய் ' என்றார். 28 இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்து கொள்ளவில்லை. 29 பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டனர். 30 யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம். 31 அவன் வெளியே போனபின் இயேசு, ' இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார். 32 கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். 33 பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன். 36 சீமோன் பேதுரு இயேசுவிடம், ' ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்? ' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ' நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய் ' என்றார்.



மறையுரை
இன்றைய முதல் வாசகத்தில், எந்த வரிகள் உனக்கு ஆறுதல் தருகின்றது?

நீ எபொழுதாவது, நான் வேண்டபடாதவன் என்றோ, குறைந்து மதிப்பிடப்பட்டோ, அல்லது நிராகரிக்கப்பட்டோ இருந்தால், இன்றைய வாசகத்தில், "கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்" என்ற வார்த்தை கடவுளின் ஆறுதலையும், அரவணைப்பையும் தரும்.

உன்னுடைய திட்டஙகள், கனவுகள், அல்லது கடின உழைப்பு நசுக்கப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ, நீ இந்த வார்த்தைகளிலுருந்து உற்சாகத்தையும், உறுதியையும் காணலாம். "வீணாக நான் உழைத்தேன்: வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்: ஆயினும் எனக்குரிய நீதியும் பரிசும் ஆண்டவரிடம் உள்ளது".



நீ அதர்மமான முறையில் நடத்தப்பட்டாலோ, உன்னுடைய திறமை , ஆற்றல் மற்றும் உனது நுண்ணறிவு மற்றவர்களால் தடைபட்டாலோ அல்லது உன்னிடம் ஒரு மதிப்பும் இல்லை என்று மற்றவர்கள் நினைத்தாலோ, உன்ன் மதிப்பை இந்த வார்த்தையிலிருந்து பெறுவாய்."ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்: என் கடவுளே என் ஆற்றல்:"

இந்த மாதிரி வேதணை தரும் செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு எதிரான செயல். கடவுள் நம்மிடையே ஒரு சிலரை நம்மை வழிநடத்தவும், நம்மை தூக்கி விடவும் அனுப்புகிறார், ஆனால் அவர்களும் சில நேரஙலிஅல் நம் நம்பிக்கைக்கு எதிராக செயல்படுகின்றனர்.

சில வேதனைகள் மிக பெரிய நம்பிக்கை துரோகம், அதிலிருந்து நாம் மீள் முடியாது. நாம் ஆண்டவரிடம் ஜெபித்து, இந்த மாதிரியான காயங்களை குணப்படுத்தவும் இது மாதிரியான நட்பை மீண்டும் சரிபடுத்தவும் வேண்டிகொள்ள வேண்டும். ஆனால், கிறிஸ்துவின் வழி நடக்க உண்மையான விருப்பம் உள்ளவராய் நீ இருந்தால், நாமும் இந்த மாதிரியான துரோகத்தை இன்றைய நற்செய்தியில் யேசு ஏற்றுகொள்வது போல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

யேசுவிற்கு இன்றைய இசையாவின் நற்செய்தி தெரியும். சந்தேகதிற்கு இடமில்லாமல், அவருக்கு துரோகம் இழைக்கப்படும்பொழுது, அதனை நினைவு கூர்ந்து கடவுளின் ஆறுதலையும், சக்தியையும் பெற்றார்.

கடவுளின் அன்பிலும், ஆறுதலிலும் அமைதியை பெற வேண்டுமானால், நாம் யேசுவை நோக்கி செல்ல வேண்டும். அதை விட்டு நாம், அந்த துரோகத்தையே நினைத்தோமானால், நமக்கு அமைதி கிடைக்காது. யேசுவுக்கு நாம் எப்படி நினைக்கிறோம் என்று தெரியும். அவர் அந்த துரோகத்தை நம்மோடு சேர்ந்து அனுபவிக்கிறார். அவர் நம் மேல் வைக்கும் அக்கறயினால் நமக்கு குணமாவதையும், புதிய அமைதியையும் காணலாம்.

கிற்ஸ்துவின் சிலுவைக்கு அருகில் அடியெடுத்து வை: உனக்கு ஏற்பட்ட துரோகஙகளை, உனக்கும் யேசுவுக்கும் உள்ள மிக நெருங்கிய தொடர்பாக ஏற்றுக்கொள். அவைகளை கிறிஸ்துவின் சிலுவையில் அறைந்து அதனை போக விடு. அதனுடைய அசிஙகத்திலிருந்து திரும்பி, அந்த துரோகிகளை மன்னித்து விடு. உன்னுடைய வலியை யேசு ஏற்று கொண்டதிற்காக அவருக்கு நன்றி சொல். அவருடைய காயஙகளை முததம் செய்வதாக நினைத்து , அடுத்த முறை நன்மை பெறும்பொழுது அதனை முத்தம் செய். இங்கு தான் உன்னுடைய முதல் மீட்பு தொடங்குகிறது.

Sunday, April 1, 2007

மறையுரை , april 2nd 2007

© 2007 by Terry A. ModicaDid today's reflection bless you? Please bless me! Be my Good News Partner.For PERMISSION to copy this reflection, go to:http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm


இறை ஏசு கிறிஸ்துவின் காலண்டரில், இன்றைய நற்செய்தியில் நடக்கும் விஜயம், அவரின் வாழ்க்கையின் நடகக விருக்கும் கடினமான தியாக உயிர்பலிக்கு ஒரு வாரம் முன் நடந்தது. அவருக்கு அடுத்து என்ன நடக்கபோகிறது என்று தெரியும். அதனை அவர் அவருடைய சீடர்களுக்கு நுட்பமான முறையிலோ அல்லது மறைமுகமாகவோ குறிப்பிட்டு கொண்டிருக்க வில்லை. இருந்தும் அவர் எப்படி அவ்வளவு அமைதியாக அந்த இரவு உணவில் கலந்து கொள்ள முடிந்தது.?
புனிதர்களின் வாழ்க்கை வரலாறை நாம் படிக்கும்போது, அவர்கள் வேத சாட்சிகளாக மரிக்கும் போது, ஒரே மாதிரியான விசயம் நடப்பதை காண்கிறோம். அவர்கள் மரணத்தை அமைதியாகவும் , சந்தோசமாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். எல்லோரும் இதை எப்படி செய்கிறார்கள்.?
நான் இதனை, விசேசமான தெய்வ கிருபை என நினைக்கிறேன். பரிசுத்த ஆவி அவர்களுக்கு தெய்வீக சந்தோச பரிசை அளித்து, அந்த வேதனையை தாங்கிகொள்ள உதவுகிறார். யேசு கிறிஸ்துவே இதற்கு மிகச் சரியான உதாரணம். பெரிய வெள்ளியை பற்றி கவலை படாமல், அவருடைய நண்பர்களோடு அந்த தருணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்தார். இந்த மக்கள் யாவரும், தந்தையின் கைகள், யேசுவை கட்டியணைத்து, அவருக்கு தேவையானதைஊட்டி, அவருக்கு மீண்டும் உறுதிபடுத்தி, தைலம் பூசுவது போல் , தந்தையின் மிக ஆழ்ந்த அன்பை கொடுக்கும் கைகளாயிறுந்தது.
கிற்ஸ்துவும், தந்தையின் கருணையையும், ஊக்கத்தையும், வேதாகமத்தின் மூலம் அனுபவித்திருக்கிறார். இன்றைய முதல் வாசகத்திலும், அதன் பதிலுரையிலும், யேசு எவ்வாறு இந்த் அனுபவத்தை பெற்றார் என்பதனை படித்து பார்க்கவும்.
நீ செய்யும் எந்த தியாகத்திற்கு, இறைவனின் உறுதிப்பாடு தேவை? கடவுளுக்காக உனக்கு பிரியமன எந்த விசயத்தை விட்டு கொடுத்திருக்கிறாய்? கடவுளுக்கு உன்னையே அர்ப்பனித்து, உனது வாழ்க்கையை கடவுளரசுக்கு கொடுத்து, இந்த உலகத்தில் நீ எவ்வாறு வேறு பட போகிறாய்? தந்தை உன்னல் சந்தோசப்படுகிறார், உன்னை ஊக்குவிக்கிறார், உன்னை தேற்றுகிறார்.
மதலேன் மரியவிற்கு யேசுவின் மேல் உள்ள அன்பு அவ்வளவு ஆழமானது, அந்த அளவற்ற ஆழமான அன்பினால் யேசுவிற்கு மிக விலை உயர்ந்த வாசதனை தைலத்தை பூசி விடுகிறாள். அவள் மற்றவர்களின் ஏளனத்தை பொருட் படுத்தாமல், தனது பெருமையை விட்டு கொடுத்து யேசுவிற்கு இந்த அன்பளிப்பை தருகிறாள். அவள் அவளுடைய கூந்தலால், யேசுவின் காலை துடைப்பது மடத்தனமாக தெரியலாம். (எல்லார் வீட்டிலும் துடைக்கும் துண்டு கண்டிப்பாக இருக்கும்). ஆனால், அவள் அதனை பொருட்படுத்தவில்லை. சிலர் அவளுடைய அன்பை புரிந்து கொண்டார்கள், சிலருக்கு அது தெரியவில்லை. அதனால் என்ன, அவளுக்கு யேசுவின் மீது உள்ள அன்புதான் முக்கியாமாக பட்டது. அதற்கு பிரதி பலனாக, யேசு அவளை பாராட்டினார்.
நாமும் யேசுவை அந்த அளவிற்கு அன்பு செய்கிறாமோ? மற்றவர்களுக்காக நீயும் எம்மாதிரியான தியாகங்கள் செய்து அவர்களுக்கு எந்த பரிசு பொருளை கொடுக்கலாம் என நினைத்து பார். மற்றவர்களுக்காக எதையெல்லாம் செய்கிறோமோ? அது கிறிஸ்துவுக்கே செய்கிறோம். நாம் யேசுவின் காலுக்கு வாசனை தைலத்தை தடவ முடியாது, ஆனால், நாம் பார்க்கும் ஒவ்வொரு மனிதன் மூலமாக நம்மை வந்து சந்திக்கிறார். எவ்வாறு உங்கள் அன்பு அவர்கள் வாழ்க்கையை வாசனைபடுத்துகிறது.
தூய அன்பினில் அடியெடுத்து வைப்போம்: நீ செய்யும் தியாகங்களில், கடவுள் எதெற்கெல்லம், தனது உறுதிபாட்டையும், பாராட்டுதலையும் கொடுக்கிறார் என்பதனை கண்டுபிடிப்போம். தந்தையே உனக்கு நன்றிக் கடிதம் எழுதுவது போல் ஓர் கடிதம் எழுது. அவரது அன்பின் ஞாபகார்த்தமாக யாராவது ஒருவருக்கு உம்முடைய தியாக அன்பை கொடு, இது யேசுவிக்கு நீ கொடுக்கும் மிகப்பெரிய அன்பளிப்பகும். சில நேரங்களில், நம்முடைய அறிவிற்கு உட்படாமல், யாரை நாம் ஆசிர்வதிக்கிறோமோ? உன்மையான பெரிய வெள்ளியை அனுவிப்பார்கள்.




http://www.arulvakku.com/
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 12
1 பாஸ்கா விழாவுக்கு ஆறு நாள்களுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார். 2 அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார். 3 மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது. 4 இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து, 5 ' இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா? ' என்று கேட்டான். 6 ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு. 7 அப்போது இயேசு, ' மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும். 8 ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை ' என்றார். 9 இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச் செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். 10 ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். 11 ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.