Friday, May 31, 2019

ஜுன் 2 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜுன் 2 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் வின்னேற்ற பெருவிழா
Acts 1:1-11
Ps 47:2-3, 6-9
Ephesians 1:17-23
Luke 24:46-53

லூக்கா நற்செய்தி
46அவர் அவர்களிடம்
மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,

47பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது.
48இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.

49
இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள்
 என்றார்.
இயேசு விண்ணேற்றம் அடைதல்
(மாற் 16:19-20; திப 1:9-11)
50பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

51அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.
52அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.

53அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இயேசு ஏன் விண்ணேற்றம் அடைந்தார்?
இயேசு உயிர்த்தேழுந்ததும், அவர் மீண்டும் வந்து, அவர் இறைபணியை தொடர்ந்தால், எத்தனை பேர் மனம் திருந்தி இருப்பார்கள் என கற்பனை செய்து பாருங்கள். அவர் மரணத்தை நேராக பார்த்த பரிசேயர்கள் கூட இயேசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இருப்பார்கள்.
எனினும், இந்த உலகை மீட்க கடவுளின் திட்டம் இன்னும் மிக பெரியதாக இருந்தது, இயேசு இந்த உலகில் இருந்த பொழுது, அவர் மனிதனாகவே இருந்தார், தன்னை திவ்ய நற்கருணையில் சீடர்களுக்கு கொடுத்த பின்பு, இந்த அன்பளிப்பை உண்மையாக ஏற்று கொண்ட சீடர்கள் அனைவரும் மனித இயேசுவாக மாறுகிறார்கள்.அவரோடு நாம் அனைவரும் இணைகிறோம்.அவரின் இறைபணியில் இணைகிறோம்.
இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம், இயேசு விண்ணகத்திற்கு செல்லும் முன்பு, இயேசு சீடர்கள் அனைவரையும் ஆசிர்வதித்தார் - உங்களையும் சேர்த்து தான் -- இறைபணியை தொடர நீங்கள் அனைவரும் அழைக்கபடுகிறீர்கள்.  இந்த அதிகாரம் வழங்குதல், ஒவ்வொரு திருப்பலியில் இறுதியாக நிறைவேற்றபடுகிறது. இயேசு குருவானவர் மூலமாக, அனைவரும் அன்பு செய்து, இந்த உலகத்தில் மாறுதலை கொண்டு வர நமது கடவுள் தந்தை கொடுக்கிறார்.
மனிதர்களாக, இந்த உலகை மாற்ற நாம் முழு தகுதியில்லாமல் இருக்கிறோம். அதனால், இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை நமக்கு கொடுக்கிறார். நமது ஆவியை பரிசுத்த ஆவியோடு இணைத்து, கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு, ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும். நமக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதே ஒரு கேள்வியாக இருக்க கூடாது, நாம் எவ்வளவு விருப்பத்தோடு இறை பணி செய்ய ஆயத்தமாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். நமது நேரத்தை ஒதுக்கி , முயற்சி செய்து, நாம் கிறிஸ்துவின் கைகள் ஆகவும், கால்கள் ஆகவும், அவரின் குரலாக இந்த உலகில் இருப்பிர்களா?
இயேசு விண்ணகம் சென்று விட்டதால், நாம் அவரின் கைகளாக இருக்க வேண்டும், அவரின் குரலாக இந்த உலகில் இருக்க வேண்டும்.
இந்த உலகத்தில் சாத்தான் இருப்பதால், நீங்கள் சந்தோசமாக இல்லையா? கடவுள் இது மாதிரியான சூழ்நிலைகளுக்கு மிக பெரிய திட்டம் வைத்திருக்கிறார்.
உங்களுக்கு எதிரான அநிதியை நினைத்து வருந்துகிறிர்களா? தொலைகாட்சியில் நடைபெறும் ஒழுக்க கேட்டை நினைத்து வருந்துகிறீர்களா உங்கள் வேலையிடத்தில் அநீதியை நினைத்து வருத்தபடுகிறீர்களா?  அல்லது உங்கள் பங்கில் உள்ள பிரிவுகளை நினைத்தோ, உங்கள் தலைவர்களின் கீழ் தரமான நடவடிக்கைகள், உங்களை வருந்த செய்கிறதா? உங்களை விட இந்த சாத்தானின் செயல்களை கண்டு இயேசு அதிகம் வருந்துகிறார். அதற்கெல்லாம் திட்டம் வைத்திருக்கிறார். அவரோடு  இணைந்து, அதற்கெல்லாம் என்ன திட்டம் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். உங்கள் மூலம் அவர் என்ன செய்ய முடியும்?
இயேசு விண்ணகம் சென்றதை அடுத்து, பரிசுத்த ஆவியை நமக்கு அனுப்பினார், கடவுள் இந்த உலகை நம் மூலம் இறைபணி செய்ய பணிக்கிறார். முதலில் நம் வீட்டில், மேலும் அதே அன்பை, நம் பங்கிற்கும், இந்த உலகிற்கும் கடவுளின் அன்பை நாம் எடுத்து செல்ல வேண்டும்.
© 2019 by Terry A. Modica


Friday, May 17, 2019

மே 19 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மே  19 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 5ம் ஞாயிறு
Ps 145:8-13
Revelation 21:1-5a
John 13:31-35
யோவான் நற்செய்தி

புதிய கட்டளை
31அவன் வெளியே போனபின் இயேசு
இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.

32கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.

33பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.

34ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.

35
நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்
 என்றார்.

மாட்சிமை மிக்க இறைபணி
நீங்கள் இறக்க போகும் தருணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால்,உங்கள் குடும்பத்தினருக்கு என்ன ஞானத்தை கொடுப்பீர்கள்? அவர்களுக்கு மிகவும் முக்கிய தேவையானது எது ?
இன்றைய ஞாயிறு நற்செய்தியில், இயேசுவிற்கு அவரின் நேரம் குறைவானது என தெரியும். முதல் வார்த்தை அந்த சீடர்களிடம் தந்தை கடவுளை புகழ்ந்து பேசுகிறார். அதே நேரத்தில், தானும் தந்தையே ஒன்று எனவும் சொல்கிறார். மேலும் அவர் தந்தையை போல "பிள்ளைகளே" என சொல்கிறார். இதன் மூலம் அவர் தந்தையுள்ளும், தந்தை இவருள்ளும் இருக்கிறார் என்பதை நமக்கு சொல்கிறார். மொத்தமாக இந்த வார்த்தைகள் நமக்கு குழப்பத்தை கொடுப்பது போல இருக்கிறது. மேலும் இதனை பணிவுடன் இயேசு செய்தார். அவர் இப்படி கூட சொல்லியிருக்கலாம். "எல்லோரும் கவனமாக கேட்டு கொள்ளுங்கள், நான் தெய்வம். கடவுள். என்னை ஆராதியுங்கள்" என்றும் சொல்லலாம். ஆனால், அவர் கடவுளின் மாட்சிமையை பெரிது படுத்தினார்.
கடவுளின் பிரசன்னத்தை, ஒளிரும் வெளிச்சம் பரவும் , எப்படி, அவரின் அன்பு, அவரின் மகிழ்ச்சி, அவரின் பரிசுத்தம், அவரின் அமைதி, அவரின் ஞானம், அவரின் புத்திசாலித்தனம், மேலும் இன்னும் பலவும், அவரின் மாட்சியில் குளிக்க விரும்பும் அனைவருக்கும் கொடுபார். நாம் கடவுளை மாட்சிபடுத்த, அவரின் மாட்சிமை நம் மூலம் வெளிப்பட்டு மீண்டும் கடவுளுக்கே திரும்பும். இதில் எத்தனை அருள் உங்கள் வாழ்வில் ஒளிர்கிறது?
தந்தை கடவுள் மற்றும் மகனிடையே உள்ள உறவை பற்றி பேசிய பின்பு, இயேசு இந்த உலகத்திற்கே தேவையான, மிகவும் முக்கியமான, விஷயத்தை நமக்கு சொல்கிறார். இயேசுவையும், கடவுளின் மாட்சிமையை நெருங்கி இணைய நாம் ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
தன்னலமின்றி, எப்பொழுது அன்பு மற்றவருக்கு கொடுக்கபடுகிறதோ, அப்பொழுது தான் அது உண்மையான அன்பாக இருக்கும். இயேசு தன சுய நலமின்றி, தன்னையே மரணத்திற்கு முழுமையாக கொடுத்தார். குருக்களோ, அல்லது, சீடர்களோ, அல்லது இயேசுவை பின் செல்பவர்கள், அனைவரும், முழுமையாக அன்புடன் அவரவர் இறைபணி செய்ய முடியும். அன்பில்லையெனில் அது முழுமையாகாது.
கடவுளின் மாட்சிமை என்பது, முழுமையான அன்பை, அதுவும், தன்னலமின்றி கொடுப்பது ஆகும். திருவெளிப்பாடு வாசகத்தில், "இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்" என்று இயேசுவின் ஈஸ்டர் காலத்தை பற்றிய வாசகமாக இருக்கிறது, ஆனால், நற்செய்தி வாசகமோ கிறிஸ்துவின் பாடுகளை பற்றி பேசுகிறது. ஈஸ்டர் காலத்தில் நாம் இருக்கும் பொழுது ஏன் இந்த நற்செய்தி வாசகம். ஏனெனில் இயேசு இன்னும் பாடுகளுக்கும், ஏமாற்றத்திற்கும், மரணத்திற்கும் தயாராகி கொண்டிருக்கிறார். ஏன்?
இன்றைய நற்செய்தியில், இயேசு அதே இறைபணியை கடவுளின் மாட்சிமையை எல்லோருக்கும் பகிர நம்மை அழைக்கிறார். இயேசு ஆரம்பித்த இறைபணியை, நாம் தொடர்ந்து செய்திட விரும்புகிறார். தியாகத்தோடு, ஒருவரை ஒருவர் அன்பு செய்து, இயேசு தான் உண்மையானவர் , அவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்து , நம்மோடு இன்னும் வாழ்கிறார் என்று எடுத்துரைப்போம்.
© 2019 by Terry A. Modica


Friday, May 10, 2019

மே 12 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மே 12 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 4ம் ஞாயிறு
Acts 13:14, 43-52
Ps 100:1-3, 5
Revelation 7:9, 14b-17
John 10:27-30

யோவான் நற்செய்தி

27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.28நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.
29அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.⁕✠30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்
 என்றார்.
(thanks to www.arulvakku.com)
கண் மூடி கொண்டு இயேசுவை நம்புங்கள்
இன்றைய ஞாயிறின் நற்செய்தி மிகவும் சிறியது, மேலும், ஒரே குறிப்பை நமக்கு உணர்த்துகிறது. இயேசு தான் நம் ஒரே நல்ல மேய்ப்பர், அவர் ஒருவரை தான் நாம் பின்பற்ற வேண்டும், அந்த ஒருவரை தான், கண் மூடிகொண்டு நம்பவேண்டும்.
நம் வாழ்வில் நம் மேல் அக்கறை கொண்டவர்கள், நல்லாயனாக இருக்கலாம். ஆனால் அவர்களை அப்படியே நாம் நம்ப வேண்டியதில்லை. அவர்களில் மிக சிறந்த ஒருவரை கூட அப்படியே நாம் நம்ப வேண்டியதில்லை. ஆயர்கள், பங்கு குருக்கள், கம்பெனி முதலாளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், இன்னும் பலர்,  இருக்கலாம், அவர்கள் மேல் நாம் மரியாதை கொண்டுள்ளோம். ஆனால், எல்லோருமே பாவம் செய்கிறவர்கள் தான், அவர்கள் பொறுப்பில் இருக்கும் வேளைகளில் பல நேரங்களில் சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். நாம் பரிசுத்த ஆவியின் துனையை வேண்டி, ஒவ்வொரு விசயத்திலும் நாம் முடிவெடுக்க வேண்டும். ஆட்டு மந்தையை போல தந்தை கடவுள் வருத்தப்படும்படி நாம் எந்த முடிவும் எடுக்க கூடாது.
இயேசுவை மட்டும் தான் , நாம் கண்மூடி தனமாக நம்பலாம். இயேசு மட்டுமே எல்லாவற்றிலும் முழுமையானவர். அவருக்கு எல்லாம் தெரியும். அனைத்தையும் புரிந்து கொள்பவர். மேலும், பாவம் ஏதும் செய்யாதவர். இயேசுவால் மட்டுமே சரியான முடிவை எடுக்க முடியும். எல்லா நேரங்களிலும், எல்லா சூழ் நிலைகளிலும் எடுப்பவர். இயேசு மட்டுமே எலோருக்கும் பயன் தர கூடிய நல்ல முடிவெடுப்பவர். இயேசுவால் மட்டுமே, நம்மை பாவ குழியிலிருந்து மோட்சத்திற்கு அழைத்து செல்பவர்,
நம் தவறுகளை பார்த்து சிரித்து கொண்டே இயேசு, அவரின் வழியில் நாம் விலகி செல்வதை பார்க்கிறார். ஏனெனில் நாம் அவர் மேல் உண்மையாகவே அன்பு வைத்திருக்கிறோம். மேலும், எது சரியோ அதை செய்ய நாம் விருப்பத்தில் இருக்கிறோம். என்பதையும் அவருக்கு தெரியும். மேலும், இயேசுவிற்கு புதிய திட்டத்தை நமக்கு கொடுக்க முடியும், அதன் மூலம், நம்மை நல் வழியில் அழைத்து செல்ல முடியும். கிறிஸ்து அவரின் பேரிரக்கத்தால், நம் கைகளை பிடித்து கொண்டிருக்கிறார், அதன் மூலம், கடவுளின் கைகள் விட்டு நாம் நழுவ விடாமல் பார்த்து கொள்கிறார்.
நாம் ஒருவர் மேல் , அவ நம்பிக்கை கொண்டால் -- நம் மேலும் கூட -- அப்படி அவநம்பிக்கை இருந்தாலும், இயேசு நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இருப்போம். கண்டிப்பாக அவர்  நம்மை நல் வழியில் அழைத்து செல்வார். ஏனெனில், நாம் அவரை முழுமையாக அன்பு செய்கிறோம். எது சரியோ அதனை செய்ய தயாராய் இருக்கிறோம். நமது பாதுகாப்பை இயேசு உறுதி செய்கிறார், நம் குறைகளிலிருந்து நம்மை காப்பாற்றி , தவறுகளிலிருந்து நல்லதை கொண்டு வருபவர். நாம் நம் பாவங்களுக்காக மனம் வருந்தும் போது, நம்மை மோட்சத்திற்கு கண்டிப்பாக அழைத்து செல்லும், வழியை காட்டுபவர்.
நல்ல ஆடாக இருக்க, அவரின் வழிகாட்டுதலுக்கு செவி சாய்ப்போம்!
© 2019 by Terry A. Modica


Wednesday, May 1, 2019

மே 5 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மே 5 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 3ம் ஞாயிறு

Acts 5:27-32, 40b-41
Ps 30:2, 4-6, 11-13
Revelation 5:11-14
John 21:1-19
யோவான் நற்செய்தி
8. பிற்சேர்க்கை
இயேசு தம் சீடர் எழுவருக்குத் தோன்றுதல்
1பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:
2சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்.

3அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்என்றார். அவர்கள், “நாங்களும் உம்மோடு வருகிறோம்என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
4ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை.

5இயேசு அவர்களிடம்
பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?”
 என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லைஎன்றார்கள்.

6அவர்
படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்
 என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

7இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.

8மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகுதொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.
9படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.

10இயேசு அவர்களிடம்
நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்
 என்றார்.

11சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

12இயேசு அவர்களிடம்
உணவருந்த வாருங்கள்
 என்றார். சீடர்களுள் எவரும், ‘நீர் யார்?’ என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.

13இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

14இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.
இயேசுவும் பேதுருவும்
15அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம்
யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிடமிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?”
 என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!என்றார். இயேசு அவரிடம்
என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்
 என்றார்.
16இரண்டாம் முறையாக இயேசு அவரிடம்
யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?”
என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!என்றார். இயேசு அவரிடம்
என் ஆடுகளை மேய்
 என்றார்.
17மூன்றாம் முறையாக இயேசு அவரிடம்
யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?”
என்று கேட்டார். உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். இயேசு அவரிடம்
என் ஆடுகளைப் பேணிவளர்.
18
நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்
 என்றார்.

19பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம்
என்னைப் பின்தொடர்
 என்றார்.

 (thanks to www.arulvakku.com)
நமது அழைப்பின் இயல்புகள்
எப்பொழுதெல்லாம் இன்றைய ஞாயிறின் நற்செய்தியை நான் படிக்கிறேனோ , அப்பொழுதெல்லாம், இயேசு, அவர் சுட்டு கொண்டிருந்த மீனை எங்கிருந்து பிடித்தார் ? என்ற ஆர்ர்சரிய கேள்வி என்னுள் எழும். அவரிடம் மீன் வலை இருந்ததா? அல்லது ரொட்டி வாங்கும் பொழுது மீனையும் சேர்த்து வாங்கினாரா? அப்படி இருந்தால், இயேசுவை யாரும் அந்த கடை வீதியில் கண்டு பிடிக்கவில்லையா? அல்லது, மீன் தானே துள்ளி குதித்து கரைக்கு வந்ததா? மேலும், சாத்தான் அவரை சோதித்தது போல, கல்லை ரொட்டி துண்டுகளாக இயேசு மாற்றினாரா  ?
ரொட்டிகளையு, மீன்களையும் பல மடங்காக மாற்றிய அதிசயத்தை மீண்டும் நினைத்து பார்த்தோமானால்,  இப்பொழுதும் அதே உணவு தான், மீனும் ரொட்டி துண்டுகளும். இங்கேயும் அதே அதிசயம். எவ்வளவு சிறியதாக இருந்தாலும், கடவுள் இந்த உலகை உருவாக்கியவர், பல மடங்காக ஆக்க கூடியவர் கடவுள். எல்லாவற்றையும் பல மடங்காக செய்ய கூடியவர். நம்மில் என்ன இருக்கிறது என்பது பெரிய விசயமில்லை, கடவுள் நம் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதே முக்கியம்.
கடவுள் நமக்கு கொடுத்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நாம் விருப்பமாய் இருக்கிறோம் என்பதை தான் கடவுள் கேட்கிறார். ரொட்டி துண்டுகளை பல மடங்காக பெருக்கிய அதிசயத்தில் சீடர்கள் அதனை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க சொன்னார். அதே போல , இங்கே மீன் பிடிக்க சொல்லி நிறைய மீன்கள் பெற்ற அதிசயத்தில், "பிடித்த மீன்களில் சிலவற்றை இங்கே கொண்டு வாருங்கள்" எண்று சொல்லப்பட்டு, இயேசு ஏற்கனவே சமைத்து கொண்டிருந்த உணவோடு அதனையும் சேர்த்தனர்.
அதன் பிறகு, இயேசுவின் மேல் இராயப்பர் கொண்ட அன்பினை, "ஆடுகளுடன்" பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்லபடுகிறது. இந்த அன்பு எங்கிருந்து வந்தது? ராயப்பர், அவராகவே , சொந்த முயற்சியினால், யாரிடமும் அன்பு செலுத்தவில்லை. நாமும் அதே போல் தான்.  கடவுளால், அவரின் அன்பினை வைத்து தான் ராயப்பார் படைக்கபட்டார். நாமும், கடவுளின் உருவத்தை போல, அவரின் அன்போடு தான் படைக்கப்பட்டோம்.
கடவுளின் எல்லையில்லா அன்பை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள இராயப்பர் அழைக்கபட்டார். அதனால், கடவுளின் இறையரசை இந்த உலகிற்கு தொடர்ந்து பரவலாக்கப்பட வேண்டும். கடவுள் உங்களிடம் என்ன கேட்கிறார்? இதற்கு பதில், உங்களிடம் என்ன பகரிந்து கொள்ள இருக்கிறது என்பது அல்ல, மாறாக, எந்த அளவிற்கு பகிர்ந்து கொள்ள தயாராய் ஆவலாய் இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். கடவுளின் அழைப்பிற்கு, "ஆமாம்" என்ற உங்கள் பதில் தான் முக்கியம்.

© 2019 by Terry A. Modica