Friday, March 25, 2011

மார்ச் 27, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 27, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு

Exodus 17:3-7
Ps 95:1-2, 6-9
Romans 5:1-2, 5-8
John 4:5-42


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 4


சமாரியப் பெண் ஒருவரும் இயேசுவும்

.5 அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது.6 அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். 7அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார்.8 இயேசு அவரிடம், ' குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும் ' என்று கேட்டார்.9அச்சமாரியப் பெண் அவரிடம், 'நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?' என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. 10 இயேசு அவரைப் பார்த்து, ' கடவுளுடைய கொடை எது என்பதையும் ' குடிக்கத் தண்ணீர் கொடும் ' எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார் ' என்றார்.11 அவர் இயேசுவிடம், ' ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?12 எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம் ' என்றார்.13 இயேசு அவரைப் பாhத்து, ' இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும்.14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும் ' என்றார்.15 அப்பெண் அவரை நோக்கி, ' ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது ' என்றார்.16 இயேசு அவரிடம், ' நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும் 'என்று கூறினார்.17 அப்பெண் அவரைப் பார்த்து, ' எனக்குக் கணவர் இல்லையே ' என்றார். இயேசு அவரிடம், ' எனக்குக் கணவர் இல்லை ' என நீர் சொல்வது சரியே.18 உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே ' என்றார்.19 அப்பெண் அவரிடம், ' ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.20 எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே ' என்றார்.21 இயேசு அவரிடம், ' அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.22 யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.23 காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். 24கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும் ' என்றார்.25 அப்பெண் அவரிடம், ' கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார் ' என்றார்.26 இயேசு அவரிடம், ' உம்மோடு பேசும் நானே அவர் ' என்றார்.27 அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் ' என்ன வேண்டும்? ' என்றோ, ' அவரோடு என்ன பேசுகிறீர்? ' என்றோ எவரும் கேட்கவில்லை.28 அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்,29 ' நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ! ' என்றார்.30 அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.31 அதற்கிடையில் சீடர், ' ரபி, உண்ணும் ' என்று வேண்டினர்.32 இயேசு அவர்களிடம், ' நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது ' என்றார்.33 ' யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ ' என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.34 இயேசு அவர்களிடம், ' என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.35 ″ நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை ″ என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது.36 அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். 37 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.38 இவ்வாறு ' விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர் ' என்னும் கூற்று உண்மையாயிற்று ' என்றார்.39 \'நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்\' என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வவூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். 40 சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.41 அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர்.42 அவர்கள் அப்பெண்ணிடம், ' இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம் ' என்றார்கள்.

(thanks to www.arulvakku.com)


நீங்கள் எதற்கு தாகமாக இருக்கிறீர்கள்? நம்மில் எது குறையாக இருக்கிறதோ அப்பொழுது தான் நமக்கு தாகம் ஏற்படும். நமது உடலுக்கு தண்ணீர் தேவை. நமது உடலுக்கு தண்ணீர் தேவைபடும்போது, நமக்கு தாகம் ஏற்படுகிறது, அப்போது தான் நமது உடல் முழு சக்தியுடனும் நலமாகவும் இருக்கும்.


எப்படி நம் உடலுக்கு தண்ணீர் தேவையோ, அதே போல நமது பரிசுத்த வாழ்விற்கும், நீர் தேவைபடுகிறது. ஆனால், இது வேறு மாதிரியான நீர், வாழும் தண்ணீர், ஞானஸ்நாண தண்ணீர், அது நம் நித்திய வாழ்விற்கு நம்மை சுத்தப்படுத்த்தும் தண்ணீர். இந்த தீர்த்தத்தால் தான், நமக்கு கிறிஸ்துவின் அபரிதமான அன்பும், செல்வமும் நம் வாழ்வில் இருக்கும்.


பரிசுத்த ஆவி நமக்கு வாழ்வை தருபவர். கடவுளின் ஆவியின் ப்ரசன்னத்தை பைபிளில் குறியீடு காட்டும்பொழுது, அந்த குறியீடுகளில் வாழ்வு தரும் நீரும் ஒன்று. இதிலிருந்து, இயேசு அந்த சமாரிய பெண்ணிற்கு, பரிசுத்த ஆவியை தான் கொடுப்பதாக கூறினார் என்பதை நாம் அனுமானிக்க முடியும். ஏன்? இன்னும் சில நாட்களில், பரிசுத்த ஆவியானவர் எல்லோருக்கும், பெந்தகோஸ்தே நாளில் இறங்கி வர இருக்கிறார்.


அந்த பெண் உண்மையை அறிய விரும்பினாள்; பரிசுத்த ஆவியானவர் உண்மை. இயேசு அந்த பெண் விரும்பியதை கொடுக்க விரும்பினார். அந்த பெண் அதன் முலம் மனந்திருந்தி, மீட்பை அவள் பெற்று , அந்த புதிய வாழ்வை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என் இயேசு விரும்பினார்.



போதிய அளவிற்கு நாம் தண்ணீர் குடிக்கவில்லையென்றால் தான், நமக்கு தாகும் எடுக்கும். அதே பரிசுத்த வாழ்வின் தாகம், நமக்கு வேறு வடிவங்களில் ஏற்படும்: மனசஞ்சலம், பயம், நாமே பாவத்திற்கு இடமளித்தல், அல்லது ஏதாவது ஒரு உணர்வு எதையோ நாம் இழந்து விட்டதை போல இருக்கும்.


ஏன், நாம் பரிசுத்த வாழ்வில் , நமக்கு பலதும் இல்லாமல் இருக்கிறது? ஏனெனில், அந்த கிணற்றடியில் இருந்த பெண்ணை போல, நாமும் பாவியாய் இருக்கிறோம், கடவுள் நம்மை குணப்படுத்தவேண்டும். கடவுள் நம்மை குணப்படுத்துகிறார்? போதுமான அளவிற்கு கடவுள் நமது அன்பை கொடுத்து, நம்மை குணப்படுத்துகிறார். ஆனால், அதனை முழுமையாய் நாம் பெறுவதற்கு, நாம் அவர் வார்த்தைகளை முழுமையாக கேட்டு, உண்மையுடன் மாறவேண்டும்.

© 2011 by Terry A. Modica

Friday, March 18, 2011

மார்ச் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 2ம் ஞாயிறு
Genesis 12:1-4a
Ps 33:4-5, 18-20, 22
2 Timothy 1:8b-10
Matthew 17:1-9



மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 17


இயேசு தோற்றம் மாறுதல்
(மாற் 9:2 - 13; லூக் 9:28 - 36)
1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.4 பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? ' என்றார்.5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் ' என்று ஒரு குரல் ஒலித்தது.6 அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.7 இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ' எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள் ' என்றார்.8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.9 அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, ' மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது ' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்

(thanks www.arulvakku.com)


அந்த உயர்ந்த மலையில், இயேசுவின் முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது, உண்மையான இயேசுவின் ஒளி எல்லோருக்கும் தெரிந்தது. கடவுள் தந்தை " என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் " என்று சொன்னார்.


நாம் இயேசுவின் வார்த்தைகளை, ஒவ்வொரு முறை கேட்கும்போதும், நமது விசுவாசத்தை இன்னும் தெளிவும், ஞாணமும் தெரிய இயேசுவிடம் நம்மை அளிக்கும்போது , இந்த தோற்ற மாறுதல் நடக்கிறது. எனினும், இப்போது, நமது தோற்றமும் மாறுகின்றது.



இந்த தவக்காலத்தில், நாம் கிறிஸ்துவை போல இருக்கிறோமோ என்று பார்த்து, நமது பாவ வாழ்வை விட்டு, மனந்திரும்பொழுது, நம்மில் இருக்கும் இருளை இயேசுவின் ஒளியால் நிரப்ப அனுமதிக்கிறோம். அதனால், மற்றவர்கள் நம் மூலம் இயேசுவை பார்க்கிறார்கள். இயேசுவும், நம்மில் அவரது ஒளியை ஒளிரச்செய்கிறார்.
இயேசுவின் தோற்றம் மாற்றத்தினால், நாமும் நமது அடையாளத்தை காட்டுகிறது. நமது உண்மையான அடையாளம் என்ன? கடவுளின் உருவத்தினால் நாம் உருவாக்கபட்ட்டிருப்பதும், நம்மில் கடவுள் இருப்பதும் ஆகும்.

இயேசு இந்த மலையில் நடந்த தோற்றம் மாறுதல் அனுபவத்திற்கு பிறகு, சிலுவையின் வேதனைகளை ஏற்று கொள்ள தயாரானார். நாமும், கிறிஸ்துவின் ஒளியால், மாற்றபட்ட பிறகு, , நாமும்,மலையை விட்டு இறங்கி, இயேசுவை இவ்வுலகிற்கு காட்ட வேண்டும். எனினும், திமோத்தியின் வாசகத்தில் கூறியுள்ளது போல, நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும்பொழுது, நிச்சயம், கடினமாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு கல்வாரி சிலுவைக்கு பிறகு, ஒரு ஈஸ்டர் இருக்கும் என்பது நமக்கு ஆறுதலை தரும்.



முதலில், நாம் மலையில், நமது நேரத்தை செலவிட வேண்டும். நிறைய நேரம் அங்கே இருந்து, கடவுளின் ஆற்றல் நம்மில் வரும் வரை ஜெபம் செய்திடல் வேண்டும். பிறகு, நாம் தயாராகிவிட்டோம், உற்சாகபடுத்த படுவோம், நாம் மீட்கப்பட்டுவிட்டோம். அதன் மூலம், நமது பாதையில் ஏற்படும் கஷ்டங்களை நம்மால் தாங்கி கொள்ள முடியும்.


நன்றாக கேளுங்கள். கடவுள் உங்களை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? அந்த தபோர் மலையில் கடவுள் இயேசுவை பற்றி என்ன சொன்னாரோ, அதையே தான் உங்களை பற்றியும் சொல்கிறார். : "இவர் என் அன்பார்ந்த மகன், இவருக்கு செவி சாயுங்கள்" சிலர் உங்க்ளிடம் கேட்பர், சிலர் கேட்க மாட்டார்கள். ஆனால் நாம் எப்படி கடவுளின் ஒளியுடன் ஒளிர்கிறோம் என்பது, எத்தனை பேர் நம்மிடம் கேட்கிறார்கள் என்பது பொறுத்து அல்ல. நமது தோற்ற மாற்றம், இயேசு நம் மேல் அன்பு கொண்டு , நம்மை பரிசுத்த வாழ்விற்கு வாழ அழைப்பதல் ஏற்படுகிறது.


© 2011 by Terry A. Modica

Friday, March 11, 2011

மார்ச் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு

Genesis 2:7-9; 3:1-7
Ps 51:3-6, 12-13, 17
Romans 5:12-19
Matthew 4:1-11

________________________________________
மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 4


இயேசு சோதிக்கப்படுதல்
(மாற் 1:12 - 13; லூக் 4:1 - 13)
1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.3 சோதிக்கிறவன் அவரை அணுகி, ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும் ' என்றான்.4 அவர் மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.5 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,6 ' நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ' கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்று அலகை அவரிடம் சொன்னது.7 இயேசு அதனிடம், ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் ″ எனவும் எழுதியுள்ளதே ' என்று சொன்னார்.8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,9 அவரிடம், ' நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் ' என்றது.10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ' அகன்று போ, சாத்தானே, ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

(thanks to www.arulvakku.com)

சோதனைகளை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள்? தவக்காலத்தின் முதல் ஞாயிறு நற்செய்தியில், நமக்கு தனியாக சவால் விடப்படுகிறது. அதன் மூலம், நாம் நமது பயனத்தை இயேசுவோடு சேர்ந்து துவக்குகிறோம். இவ்வுலக வாழ்வில், அவரோடு இனைந்து பரிசுத்த இடத்திற்கு செல்வோம்.


இந்த தவக்காலம் மற்ற தவக்காலத்தை போல அல்ல. போன வருடம், உங்களுடைய தேவைகள் வேறாக இருந்தது, வேறு வளர்ச்சியை , முன்னேற்றத்தையும் எதிர்பார்த்தோம்., நமது புரிதலும், உள்நோக்கமும் வேறாக இருந்தது. கடந்த வருடத்திற்கு பிறகு, நிறைய மாற்றங்கள் நடந்து விட்டது. இதுவெல்லாம் , கடவுள் இப்பொழுது நம் வாழ்வில் என்ன செய்ய போகிறார் என்பதற்கு தயார் படுத்துவது ஆகும்.


உங்களுக்கு எந்த வெற்றியை இந்த வருடம் எதிர்பார்க்கிறீர்கள்? எதிலெல்லாம் மீண்டு எழ விழைகிறீர்கள்? அதனை பெற இயேசு உங்களை சிலுவையின் மூலம் அழைத்து செல்வார், அவருடைய கல்லறைக்கும், அதன் பிறகு கடவுளின் ஒளியில் உங்களை அழைத்து சென்று, புதிய வாழ்விற்கு கடவுளின் அன்பை கொடுத்து உங்கள் குறைகளை போக்குவார்.



தவக்காலத்தில் - மெலும் ஒவொரு முறையும், நாம் தியாகம் செய்து நமது துன்பத்தை யேசுவின் பாடுகளோடு இனைக்கும்பொழுது, நாம் இயேசுவை பின் சென்Dரு , அவரின் மீட்போடும் நாமும் சேருகிறோம். இதற்கு நமது சிலுவைகளை நாம் ஏற்று கொண்டு, அந்த துன்பத்தை தழுவிகொள்ள வேண்டும் , கலவாரிமலை பாதையில்தான், நமது வெற்றி வாழ்வையும், புதிய அனுபவத்தையும் நாம் அடைய முடியும்.


இந்த ஈஸ்டர் நமக்கு சாதாரண விடுமுறையாக இல்லாமல், இந்த 40 நாட்களையும், எரிச்சலை கட்டுபடுத்துவதும், தியாகங்களும், புலால் உணவு கட்டுபாடும், அடிக்கடி கோவிலுக்கு சென்றும், ஜெபங்களில் ஈடுபடுவதும், இப்படி, நமது தின வாழ்வில் ஈடுபட்டு நமது தவ நாட்களை கழித்தோமானால் நாம் மீட்பின் வெற்றியை , அதனுடைய ஆற்றலை நாம் அனுபவிக்க முடியும். நமது பாவ வாழ்க்கையை நினைத்து, மனம் வருந்தை, நாம் மணம் திரும்பும்போது, அதன் ஆற்றலை நாம் அனுபவிக்க முடியும். மாற்றாக சொல்வதானால், மரணத்தின் மீது உள்ள வெறும் பயத்தை நாம் அனுபவிக்க வேண்டும். - நமது சுய ஆசைகளை சாகடிக்க வேண்டும், இவ்வுலக வாழ்வின் மேல் உள்ள ஆசைகளை சாகடிக்க வேண்டும். கிறிஸ்துவிற்கு எதிரான நமது தின நடவடிக்கைகளை நாம் சாகடிக்க வேண்டும்.


© 2011 by Terry A. Modica

Friday, March 4, 2011

மார்ச் 6, 2011 ஞாயிறு நற்செய்தி

மார்ச் 6, 2011 ஞாயிறு நற்செய்தி
ஆண்டின் 9ம் ஞாயிறு

Deut 11:18, 26-28, 32
Ps 31:2-4, 17, 25
Rom 3:21-25, 28
Matt 7:21-27


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 7


சொல்லும் செயலும்
(லூக் 13:25 - 27)
21 ' என்னை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ″ ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? ″ என்பர்.23 அதற்கு நான் அவர்களிடம், ' உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள் ' என வெளிப்படையாக அறிவிப்பேன்.
இருவகை அடித்தளங்கள்
(லூக் 6:47 - 49)
24 ' ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.27மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசுவின் உண்மையான சீடராக எப்படி இருக்க வேண்டும் என்று விளக்குகிரார்: தந்தையின் திருவுளப்படி நடக்க வேண்டும். இயேசுவிடமிருந்து கற்று கொண்டததை உங்கள் தினசரி நடவடிக்கையாக கொள்ளுங்கள்.


இயேசு கிறிஸ்து நற்செய்தி மூலமாகவும், திருச்சபையின் போதனைகள் மூலமும் நம்மிடம் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் அந்த வார்த்தைகளை கேட்பது மட்டும் செய்கிறோம் என்பதோடு இருந்து விட கூடாது. நமது மீட்பு, எப்படி அந்த வார்த்தையை நாம் கடைபிடிக்கிறோம் என்பதில் தான் நமது மீட்பு இருக்கிறது. நாம் இயெசுவின் மேல் விசுவாசம் வைத்துள்ளோம் என்று சொல்லி கொண்டு, அவரின் போதனைகளை நாம் செய்யாமல் இருந்தால், நாம் வெறுமனே "கடவுளே, கடவுளே" என்று சொல்பவர்களாக மட்டும் தான் இருப்போம். நாம் கடவுளை பின் தொடர்ந்து மோட்சத்திற்கு செல்வதில்லை.


இயேசு குறிப்பிட்டு சொல்வதை போல, இறையரசோடு நமது தின வாழ்வில் ஒன்றித்து, இவ்வுலக வாழ்வில் இறையரசின் தூதுவராய் இருப்போம், மேலும், நாமும் நமக்கு வரும் சோதனைகளையும், கேளியையும், இம்சையையும் நம்மால் தாங்க்கொள்ள முடியும். நமது நடவடிக்கைகளினால், பெரிய ப்ரச்னை உண்டானால் கூட நம்மால் அதனை எதிர்கொள்ள முடியும். ஏனெனில், நாம் கிறிஸ்துவின் மரணத்திற்கும், மீட்பிற்கும் இடையிலான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் கடவுளின் அருளாலும், அவரது ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அவரது பலம், இவ்வுலக வாழ்வை வெற்றி கொள்ளும்.


இயேசுவின் போதனைகள் நமது வாழ்வை மாற்ற நாம் அனுமதிக்காமல் இருக்கும்பொழுது, நமக்கு சோதனைகள், ப்ரச்னைகள் வந்தால், அவைகள் நம்மை அழித்து விடும், நம் அமைதி குலைந்து விடும். நமது சந்தோசம் போய்விடும். கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதையும் நாம் மறந்து விடுவோம். கிறிஸ்துவோடு நாம் ஒன்றித்து இந்த சோதனைகளை எதிர் கொண்டோமானால், நம்மால் இந்த சோதனைகளை எதிர்கொள்ள முடியும். இந்த ப்ரசனைகள் முடிய , கிறிஸ்துவின் ஆற்றலை நாம் அனுமதிக்க வில்லையென்றால், இந்த ப்ரச்னைகள் முடிய இன்னும் கால் தாமதம் ஆகும்.

கிறிஸ்துவின் போதனைகளை இவ்வுலகிற்கு எடுத்து செல்ல வில்லையென்றால், அநியாயங்களும், அநீதியும் மற்றவர்களை அழித்து விடும். அவர்களின் அழிவிற்கு நாம் உடந்தையாகிவிடுகிறோம். அக்கறையின்மை ஒரு பாவமாகும், இது மோட்சத்திற்கு செல்லும் வழியில்லை.


நமது இறப்பிற்கு பிறகு, மோட்சத்திற்கு செல்வதற்கு, நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து, அவரது சிலுவையோடு நம்மையும் இனைத்து,மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு, சாத்தானிற்கு எதிராக இருந்தோமானால், நாம் கடவுளின் சாட்சியாக இருப்போம்.
நாம் கிறிஸ்துவோடு இருப்பதால், பல ப்ரச்னைகள் நம்மை வந்து சேரும், ஆனால் நாம் வீழ்ந்து விடமாட்டொம். ஆனால், இன்னும் நாம் உறுதியாகவும், பரிசுத்தமாகவும் ஆவோம்.



© 2011 by Terry A. Modica