Friday, November 9, 2007

ஞாயிறு நற்செய்தி , மறையுரை: நவம்பர் 11 2007

ஞாயிறு நற்செய்தி , மறையுரை: நவம்பர் 11 2007

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 20

27 உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, 28 ' போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். 29 இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். 30 இரண்டாம், 31 மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; 32 கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். 33 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே? ' என்று கேட்டனர். 34 அதற்கு இயேசு அவர்களிடம், ' இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். 35 ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. 36 இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. 37 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ' ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் ' என்று கூறியிருக்கிறார். 38 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே ' என்றார்.
thanks to www.arulvakku.com

மறையுரை
உயிர்த்தெழுதலில் உங்களுக்கு நம்பிக்கையுன்டா? இந்த கேள்வியைதான் இன்றைய நற்செய்தியில் யேசு சுற்றி வளைத்து கேட்கிறார். இதனை சதுசேயர்களின் கேள்விக்கு பதிலாக கூறுகிறார்.

கிறிஸ்தவர்களாகிய நாம், ஒரு நாள், நாமும் யேசுவை போல, இன்றைய உலக வாழ்விலிருந்து மறைந்து, உயிர்த்தெழுந்த வாழ்வில் நிலைத்திருப்போம் என்று நம்புகிறோம். யேசுவை பின் செல்லும் எல்லா விசுவாசிகளும் வான தூதர்கள் போல் வாழ்வர். அதனால் தான், கத்தோலிக்க கடைசி திருப்பலியில் (மரணம்), உயிர்த்தெழும் திருப்பலியாக நிறைவேற்றப்படுகிறது. திருப்பலி உடைகளும் வெள்ளை உடைகளாகும்,(கருப்பு அல்ல)

ஆனால் நீ அன்பின் உயிர்த்தெழுதலை நம்புகிறாயா? யேசு திருமணத்தின் மூலம் நடைபெறும் உயிர்த்தெழுதலை விளக்குகிறார். திருமணம் என்பது கடவுளின் அன்பை பிரதிபலிக்கும் சாதனமாகும். திருமணத்தின் மூலம், ஆனும் பெண்ணும், இனைந்து, நீடித்த அன்போடு இருப்பது ஆகும். அந்த அன்பு கடவுளிடமிருந்து வரும் அன்பு ஆகும். திருமணம் கடவுளின் அன்பை காட்டும் சாட்சியாக இருக்கிறது. இதன் மூலம் கடவுளின் நம்பிக்கையையும், பொறுப்பையும் காட்டுகிறது.

யேசு எதனால் திருமணம் உயிர்த்தெழுதலில் இல்லை என்று கூறுகிறார்? , ஏன் இவ்வுலகில் நடைபெற்ற திருமணம், தொடர்ந்து விண்ணுலகிலும் இருப்பதில்லை? மன்னுலகில், அன்பு முழுமையாக கொடுக்கபடுவதுமில்லை, முழுமையாக ஏற்றுகொள்ளப்படுவதுமில்லை. அதனால், அன்பான தொடர்ந்து மடிந்து மீண்டும் உயிர்த்தெழுகிறது. ஒவ்வொரு நாளும், கணவனும் மனைவியும், மற்றவர்கள் மேல் பச்சாதாபம் கொண்டு மனம் திரும்பி, மன்னிக்கின்றனர்.

கடவுள் தான் முழுமையான அன்பானவர். நாம் அவரின் உன்மையான சந்ததியாக இருந்துகொன்டு, நமது சகோதர சகோதரிகளை கடவுள் அன்பு செய்வது போல அன்பு செய்கிறோம். இன்று நாம் குறையுள்ள குழந்தகளாக இருக்கிறோம். உத்தரிக்கிற ஸ்தலத்தில், நமது குறைகள் களையபடுகின்றன. அதற்கு பிறகு, மோட்சத்தில், நாம் கடவுளை போல, குறைகளற்றவர்களாக இருப்போம்.
திருமனம் மோட்சத்தில் இருப்பதில்லை ஏனெனில், இது, கடவுளின் அன்பை குறைகளோடு பிரதி பலிக்கிறது. நாம் நமது துனையை, மற்றவர்களை விட அதிகமாக நேசிக்கிரோம். மோட்சத்தில், நமது முன்னால் மனைவி உட்பட அனைவரையும் முழுமையாகவும், ஒரே மாதிரியாகவும் அன்புசெய்வோம். நம்மை குறைவாக அன்பு செய்தவர்கள், நமது துனை அன்பு செய்வதை விட அதிகமாக அன்பு செய்வர்.

திருமனம் என்பது, மோட்சத்தில் ஒவ்வொருவரும் எப்படி அன்பு செய்வார்களோ, அதனை கணவனும் மனைவியும் இவ்வுலகில் காட்டுவதாகும்.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 2, 2007

ஞாயிறு நவம்பர் 4 2007 , நற்செய்தி மறையுரை:

ஞாயிறு நவம்பர் 4 2007 , நற்செய்தி மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 19

1 இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். 2 அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். 3 இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். 4 அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். 5 இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ' சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் ' என்றார். 6 அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். 7 இதைக் கண்ட யாவரும், ' பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர் ' என்று முணுமுணுத்தனர். 8 சக்கேயு எழுந்து நின்று, ' ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் ' என்று அவரிடம் கூறினார். 9 இயேசு அவரை நோக்கி, ' இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! 10 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார் ' என்று சொன்னார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், சக்கேயுவின் மன உறுதியை பாருங்கள். யேசுவை பார்க்க பல வழிகளில் அவருக்கு தடுப்பு உண்டாக்கபட்டது. யேசுவை சுற்றியிருந்த கூட்டம், அவர் அருகில் நுழைய வழி விடவில்லை. மேலும், அவர் குள்ளமானதால், அவரால் தொலைவில் இருந்து பார்க்க முடியவில்லை. இருந்தும் அவர் யேசுவை பார்ப்பதை விடவில்லை. எந்த ஒரு தடையையும், ஏற்று, அவர் விலகவில்லை. மரத்தின் மேல் ஏறி முழுமையாக யேசுவை கண்டார்.

மேலும், யேசுவை காணவேண்டும் என, கடுமையான ஒரு செயலை செய்தார். பயம் ஏதுமின்றி, ஒரு மரத்தின் மேல் ஏறினார். பல தடைகள் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்: மரக்கிளை தொங்கி விழலாம், மற்றவர்கள் அவரை கேலியாக பார்க்கலாம், சிலர் அவரை இறங்கசொல்லலாம். மரத்தின் மேல் அவர் தோள்பட்டை தேய்ந்திருக்கலாம். இந்த் தடைகள் எல்லாம், அவரை நிறுத்தவில்லை.

கிறிஸ்துவ வாழ்க்கை, சுலபமானது இல்லை. நாம் எல்லாருமே ஒரு வகையில், ஊனமுற்றவர்கள் தான். - தவறான எண்ணங்கள், தீங்கு உண்டு பன்னுதல், தவறான பயிற்சி அளித்தல், ஆன்மிக விசயத்தில் சோம்பலாய் இருப்பது, பயம் மற்றும் சந்தேக எண்ணங்கள், இன்னும் பல. இவைகளெல்லம், நாம் யேசுவை காண தடையாக இருக்கின்றன. நாம் இறைவனின் உதவிக்காக, ஜெபம் செய்வோம். நமது ஜெபத்தை (அ) வேண்டுதலை இறைவன் பதில் அளிக்க வில்லையெனில், கடவுள் நம்மை நிராகரித்து விட்டார் என எண்ணிகொள்கிறோம். மேலும், எவ்வித நிபந்தனையுமின்றி, மற்றவர்களை அன்பு செய்வதில்லை. சிலர் மீண்டும், மீண்டும், நம்மை தொந்தரவு செய்தால், அவர்களை மன்னிக்க நமது மனம் இடம் கொடுப்பதில்லை. அதனால் யேசுவும், நம்மை மன்னிப்பதில்லை என எண்ணுகிறோம்.


யேசுவை பின் செல்வது என்பது, கஷ்டங்களிடையே நடந்து செல்வது போன்றது, மற்றும், மற்றவர்களின் நிராகரிப்பால், தவறான குற்றசாட்டுகளால், பல கடின சிலுவைகளை நாம் சுமக்கும் போது, யேசு நம்மிடம் வரவில்லை என நினைக்கிறோம். யேசு நம்மை இந்த சோதனைகளிலிருந்து நமக்கு வழி காட்டவில்லை என நினைக்கிறோம். அதற்கு பதிலாக, சக்கேய்உவை போல நாம் இருக்க வேண்டும். யேசுவை முழுமையாக பார்க்க வேண்டும் என்று எண்ணவேண்டும். அவர் செய்தது போல், எல்லா வகையான வழிகளிலும், தடைகளை தான்டி சென்று அவரை பார்க்க வேண்டும். அவர் நிஜமாகவே நமக்கு செய்வதை புரிந்து கொள்ள வேண்டும்.

சக்கேயு மரத்தில் மேல் ஏறியவுடன், யேசு என்ன செய்தார், அவரை பேர் கூப்பிட்டு, அவர் மேல் தனி கவனம் செலுத்தினார். சக்கேயு அவர் அழைத்தலை எவ்வாறு ஏற்றுகொண்டார்? மரத்திலிருந்து கீழே இறங்கி மிகவும் சந்தோசத்துடன் யேசுவை வரவேற்றார். அவர் எவ்வளவு சந்தோசப்பட்டார் என்றால், அவரின் பாவங்களுக்கு சன்மானமாக மூன்று மடங்கு தருகிறேன் என்று வாக்கு கொடுத்தார்.

நாம் யேசுவை கண்டவுடன் இதுமாதிரியான, பதிலுரைகள தராவிட்டால், நாம் மேலு உயர சென்று யேசுவைக் காண வேண்டும். ஏனெனில், நமக்குள் இன்னும் பல தடைகள் உள்ளன.

thanks to www.gnm.org coypright by Terry Modica

Saturday, October 27, 2007

ஞாயிறு 28 அக்டோபர் 2007 : நற்செய்தி மறையுரை:

ஞாயிறு 28 அக்டோபர் 2007 : நற்செய்தி மறையுரை:


Sirach 35:12-14,16-18
Ps 34:2-3, 17-19, 23 (with 7a)
2 Tim 4:6-8, 16-18
Luke 18:9-14


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18

9 தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: 10 ' இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். 11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ' கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; 12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். ' 13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ' கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் ' என்றார். ' 14 இயேசு, ' பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.


thanks to www.arulvakku.com

இன்றைய நற்செய்தியில், நம்முடைய எல்லா செயல்களுமே, நம்து சுய லாபத்திற்காகவும், சுய நலத்தினால் தான் நடக்கின்றன, அன்பினால் அல்ல என்பதையும் பார்க்கிறோம். "தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் ". இதனை எல்லோரும் புரிந்து கொள்கிறார்களோ, சீக்கிரமோ அல்லாது மெதுவாகவோ, தன்னை தானே உயர்த்தி கொள்பவர்கள், கண்டிப்பாக தாழ்த்தப்பெறுவர். இது மாதிரி தன்னை தானே உயர்த்தி கொள்பவர்களை, தினமும் பார்க்கும் மக்கள், அவர்களை மிகவும் உயர்வாக நினைக்க மாட்டார்கள். மேலும் உறுதியாக கடவுளும் அவர்களை உயர்வாக நினைப்பதில்லை.

மாற்றாக, மற்றவர்கள் மேல் நாம் அன்பு செலுத்தினால், நாம் தாழ்த்தபடுவோம். அன்பில்லாத, நமது நோக்கங்களில், நாம் செய்வது தான் சரியென்று, நமக்கு தோனும், நமக்கு நாமெ கடவுள் என்று சாத்தான் போல் நினைத்து, கடவுள் போல் இல்லாமல் இருக்கிறோம். நாம் மற்றவர்களுக்கு நல்லதை செய்யும் போது, நாம் உண்மையாகவே அவர்கள் மேல் அக்கறை கொள்கிறோம். தாம் செய்வது தான் சரியென்று நினைக்கும், நமது சுய கொளரவம், உங்கள் தாழ்ச்சியினால் சரி செய்யப்படும்.
நாம் மற்றவர்கள மேல் கொண்டுள்ள அன்பினால், நாம் சரியாக்கப்படுவோம். சுய கட்டுப்பாடும், நாம் சுயமாகவும், சரியாகவும் இருந்தால், மற்றவர்களுக்கு நல்லது செய்ய நம்மை தூண்டி விடும். நாம் யாரையாவது நிந்தனை செய்தால், இழிவு படுத்தினால், யாரையாவது, நம்மை விட தாழ்ந்தவர்கள், என்று நினைத்தீர்கள் ஆனால், இன்றைய நற்செய்தில் வரும் பரிசேயரும் நாமும் ஒன்றானவர்கள்.

இதற்கெல்லாம், தீர்வு என்னவென்றால், கடவுளின் அக்கறையுடன், நாம் அன்பு செய்ய கஷ்டப்படும் அன்பர்கள் மீது நாம் தொடர்பு கொன்டு அவர்களோடு, கடவுள் அவர்கள் மேல் வைத்த அன்போடு இணைய வேண்டும். இதனால். நாம் அவர்கள் மேல் அக்கறை கொள்ள ஆரம்பிப்ப்போம். இதனை செயல்படுத்துவதற்கு சரியான மற்றும் வெற்றி வழி, நற்கருணை வழிபாடுதான். அதுதான் நமது தீமைகளை முழுதும், எடுத்து கொண்டு, கடவுளின் சிறந்த அருளை கொடுத்து, தெய்வீக அன்பை நமக்கு கொடுக்கும்.



© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 19, 2007

ஞாயிறு நற்செய்தி மறையுரை: அக்டோபர் 21 2007 (sunday reflection)

Exodus 17:8-13
Psalm 121:1-8
2 Tim 3:14 -- 4:2
Luke 18:1-8


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18

1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். 2 ' ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. 3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ' என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். 4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. 5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். ' 6 பின் ஆண்டவர் அவர்களிடம், ' நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், 7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? 8 விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ' என்றார்.

(http://www.arulvakku.com) thanks.


இன்றைய நற்செய்தியில், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்குவார் என்று யேசு உறுதி கூறுகிறார். நாம் மற்றவர்களால், நிந்திக்கபடும்போது, நிராகரிக்கப்படும்போது, அலட்சியபடுத்தபடும் போது, துஷ்பிரயோகம் நடத்தப்படும் போது, கடவுள் உங்களை காப்பாற்ற வருகிறார். மிகவும் விரைவாக உன்னிடம் கேட்கிறார். "எப்படி?" என்று. உனக்கு தொந்தரவு செய்பவர்களை எதிர்த்து நிற்கவில்லையா? அவர் உனக்கு கொடுத்த உறுதியை காப்பாற்றவில்லையா?

கடவுள் மிகவும் மெதுவாக நமக்கு உதவுவது போல் தெரிந்தாலும், அது மாதங்களானாலும், ஒரு வருடமானாலும்(பல நேரங்களில்), அந்த ப்ரச்னைகள், தீர்க்கப்படுவதற்கு முன், யேசு உனது அருகில் தான் இருக்கிறார், நீ அவரிடம் வேண்டிய உடன், சாத்தானிடமிருந்து உன்னை மீட்டு, உனக்காக காத்திருக்கிறார்.

உன்மையான கேள்வி என்னவென்றால்: "யேசு எங்கே?", "ஏன் அவர், என்னை சீக்கிரமே உதவி செய்யவில்லை?", அதற்கான பதில், இன்றைய நற்செய்தியின், கடைசி வரிகளில் உள்ளது: யேசு நமக்கு உதவ வரும்போது, நாம் நம்பிக்கையோடு அவரை எதிர்கொள்கிறோமோ? அல்லது பயத்தோடு , அசுவிசுவாசத்தோடு இருக்கிறோமோ?

உனது ப்ரச்னைகளை மேலும் இழுக்க பல வழிகள் உள்ளன. நீ கடவுளிடம் வேண்டி, இன்னும் உனது ப்ரச்னை இன்னும் போக வில்லையென்றால், சுற்றிபார், யேசு உனக்கு அருகில் தான் நிற்கிறார். உன்னை , நீ நினைக்கும் பாதையில் செல்லாமல், வேறு பாதையில் செல், உனது ப்ரச்னை சுலபமாக விலகும் என்று வேண்டி கூறுகிறார்.நமது கண்கள், யேசுவின் மேல் இல்லாமல், நமக்கு ப்ரச்னை செய்பவர்கள் மேல் இருந்தால், அவர் செய்யும் உதவியை நாம் இழந்து விடுவோம்.

யேசு உணமையின் கூர்முனையால், உனக்கு எதிராக சதி செய்யும் தீய ஆவியினை எதிர்த்து வாள் வீசுகிறார். யேசு தீய ஆவிகளை ஓட ஓட விரட்டுகிறார். ஆனால், அவர் கூறும் உண்மைகள நமக்கு பிடிக்காமல் போகும்போது, நாம் சாத்தானின் சோதனையில் விழுந்து விடுகிறோம்.

யேசு நம்மிடம் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டுகிரார். நமது எதிரியின் மேல் உள்ள அன்பினால், கடவுளின் கருணையும், அவரின் காத்திருக்கும் நேரமும், அவர்களுக்கு கொடுத்தால், அதன் மூலம், யேசு, அவர்கள் வீழ்ந்து கிடக்கும் தீய செயலகளிலிருந்து அவர்களை காப்பாற்ற உதவும். இந்த காத்திருக்கும் வேளையில், கடவுளின் அமைதியையும், பொருமையையும், தாங்கும் ஆற்றலையும், நாம் அனுபவிக்கிறோம்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
எந்த மாதிரியான அநீதிகள், உங்களை இன்று பயமுறுத்துகிறது. என்ன தீமை உங்களுக்கு எதிராக நடந்தது? உண்மையான விசுவாசத்துடன், யேசுவை பின் செல்ல இன்று நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். கடவுள் மேல் உங்கள் நம்பிக்கையை வைக்க என்ன மாதிரியான செயலை செய்ய போகிறீர்கள்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, October 13, 2007

ஞாயிறு அக்டோபர் 14, 2007 , நற்செய்தி , மறையுரை

ஞாயிறு அக்டோபர் 14, 2007 , நற்செய்தி , மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 17

11 இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். 12 ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, 13 ' ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் ' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். 14 அவர் அவர்களைப் பார்த்து, ' நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள் ' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. 15 அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; 16 அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். 17 இயேசு, அவரைப் பார்த்து, ' பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? 18 கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே! ' என்றார். 19 பின்பு அவரிடம், ' எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது ' என்றார்.

thanks www.arulvakku.com

இன்றைய நற்செய்தியில், பத்து பேரில், ஒன்பது பேர் நன்றி கூற ஏன் வரவில்லை? அவர்கள் ஒன்பது பேரும், அவர்களின் குடும்பத்தினரிடமும், நன்பர்களிடமும் அவர்களுக்கு நிகழ்ந்த அதிசயத்தை கூற சென்றிருக்கலாம். இன்னும் கூட, அவர்கள் குடும்பத்தினரிடம், நாங்கள் முழுமையாக குணமாகிவிட்டோம், உங்களோடு கூட நாங்களும் சேர்ந்து வாழலாம் என்று நிரூபிக்க கூட சென்றிருக்கலாம். அல்லது, அவர்களின் வாழ்வின் தேவைக்கு அவர்கள் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள பட்டிருக்கலாம், இனிமேல், அவர்களுக்கு தொழுநோயாளிகளுக்கு கிடைக்கும் இலவச பொருட்கள் கிடைக்காமல் போகலாம்.
இவையெல்லாம், மிகவும் சரியான மற்றும் செல்லுபடியாகும் காரனங்கள் ஆகும்.

யேசுவிடம் திரும்பி வந்த சமாரிய தொழு நோயாளிக்கு உள்ள வேற்றுமை என்ன? அது என்ன வென்றால், அவனது ஆவியில் தான் வேற்றுமை உள்ளது. அவன் யேசுவின் மீது வைத்த விசுவாசம் அவனது உடலையும், ஆவியையும் காப்பாற்றியது. அவனது குறைகள் குணப்படுத்தப்பட்டது. யார் குணப்படுத்தினாரோ அவரை பாராட்டினார், நன்றி கூறினார். அவருக்காக கடவுளிடம் வேண்டவில்லை. கடவுளுக்காக சென்றார். அவரிடமிருந்த சில்வற்றை யேசுவிடம் காண்பித்தார். அவருடைய பாராட்டுதல், போற்றுதல், மேலும் கடவுளுக்கு வணக்கம். இதயெல்லாம், அந்த சமாரியார் கடவுளுக்கு கொடுக்க விரும்பினார்.
நாம் திருப்பலிக்கு செல்லும்போது, நமக்காக செல்கிறோமோ? அல்லது கடவுளுக்காகவும் செல்கிறோமோ? நம் தேவைகளுக்காக இறைவனிடம் வேண்டும்போது, கடவுளுக்காக செய்கிறோமோ? நாம் நமது ஆன்ம வாழ்வில் முன்னேறினாலோ அல்லது ஓர் நல்ல விசயத்தை முடித்தாலோ, கடவுளுக்காக செய்கிறோமோ? கடவுளுக்கு அவராலே அவருக்கு கொடுக்க முடியாத ஒன்று நம் எல்லாரிடமும் இருக்கிறது: அவருக்கு வாழ்த்துக்களும், போற்றுதலும், வேண்டுதலும் நம்மிடமிருந்து வரவேன்டும். இந்த புகழையும், போற்றுதலையும் குறைந்து மதிப்பிடவேண்டாம்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:

அன்மையில் கடவுள் உங்கள் வேண்டுதலுக்கு கொடுத்த ப்ரேயர் என்ன? இன்று அவர் உங்களுக்கு என்ன செய்கிறார் என்று பார், உற்று கவனி. கடவுளின் காலடியில், முழந்தாளிட்டு, அவருக்கு நன்றி கூறியிருக்கிறாயா? அவர் உனக்கு உதவுவதற்கு முன்பே அவருக்கு போற்றுதலையும் நன்றியையும் கூறியிருக்கிறாயா?

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 28, 2007

செப்டம்பர் 30 , 2007 - ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டம்பர் 30 , 2007
ஞாயிறு நற்செய்தி மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 16

19 ' செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். 20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். 21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். 22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். 23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். 24 அவர், ' தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன் ' என்று உரக்கக் கூறினார். 25 அதற்கு ஆபிரகாம், ' மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். 26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது ' என்றார். 27 ' அவர், ' அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். 28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே ' என்றார். 29 அதற்கு ஆபிரகாம், ' மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் ' என்றார். 30 அவர், ' அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள் ' என்றார். 31 ஆபிரகாம், ' அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள் ' என்றார். '

thanks to www.arulvakku.com


இன்றைய நற்செய்தியில், செல்வந்தரின் பாவம் என்ன? அவர் இறந்த பிறகு, ஏன் கடுமையான சித்திரவதைக்கானார்.? செல்வந்தராக இருந்தது தான் பாவமாம்? அவர் செய்த பாவம் என்னவென்றால், அவரின் செல்வத்தை, உணவை லாசரோடு, பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இருந்தும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.

மரணம் வாழ்க்கையின் முடிவல்ல; அது முழு உணர்வுடன், மனத்துடனும், முழுமையாக உண்மையில் வாழ்வது ஆகும். மரணம் தான் கடவுளின் முழு உண்மையில் நம்மை எழுப்புகிறது. இதன் மூலம் தான் கடவுள் யார், நமக்கு கிடைத்த அவருடைய அன்பளிப்புகள், மேலும், நாம் எப்படி அவரின் அன்பளிப்பை, எப்படி வீணக்கினோம் என்பது தெரியும்.

நாம், கடவுளின் அன்பளிப்பை, நமக்கு கிடைத்த திறனை, மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், நாம் கடவுளரசில் முதலீடு செய்கிறோம். கடவுளின், பொருளாதாரத்தில், நம் முதலீடுக்கு பல மடங்காக திரும்ப வரும். நாம் கொடுப்பதை விட அதிகமாகவே திரும்ப கிடைக்கும், அதை கொண்டும் மேலும், நாம் பகிர்ந்து கொள்ளலாம்.

மாறாக, நமக்கு உள்ளதை, நம்மிடையே வைத்து கொண்டால், பெட்டிக்குள் அடைக்கப்பட்டு, கசங்கிய மலர் போல், அந்த திறமைகள், செல்வங்கள் அழிந்து போகும். பெட்டிக்குள் உள்ள பூக்கள் மங்கி போகும், அது போல், நம்மில் அடைத்து வைக்கபட்டிருக்கும் நம் பொருட்களும், செல்வங்களும், உபயோகமில்லாமல் போகும். ஆன்மிகத்திலும், நமது சுய உணர்வுகளுடனும் தேங்கி நிற்போம். அவரின் அன்பளிப்பு அழுகிபோகும். தாராள மனசின் தலைவராய் உள்ள, கடவுளோடு சேரும் இணைப்பை, நமது சுய நலம் அழித்து விடும்.

ஒவ்வொரு நாளும், நாம் பகிர்ந்து கொள்ள நமக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். கடவுளின் ஆசிர்வாதங்களும் நாம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு உண்டு. நற்செய்தியில் வரும் செல்வந்தர், ஏன் லாசரை ஒதுக்கினார். ஏனெனில், லாசருக்கு தொழு நோய் இருந்தது, அருவருக்கதக்க உருவில் இருந்தான்.

இது ஒர் கேள்வியை எழுப்புகிறது: நாம் மிகவும் குறைவாக பகிர்ந்து கொள்கிறோமோ? நாம் மற்றவர்கள் மேல் குறைவான மதிப்பையே வைத்திருக்கிறோமோ? அவர்களை கண்டு நாம் ஒதுங்குகிறோமோ? நமது கோபத்தால், நாம் ஒதுங்கியே இருக்கிறோமோ? இப்படி ஒர் நிலையில் இருந்தால், நாம் கடவுளோடு இணைய முடியாது. நமது அன்பு நம்மை உற்சாகபடுத்தி, இன்னும் தாராளமாக இருக்க உதவ வேண்டும்.

இன்றைய இரண்டாவது வாசகத்தில், "விசுவாசத்திற்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும்" என்று கூறுகிறது. யாரோடு போட்டி போடுகிறோம்? நம்மோடு நம் விசுவாசத்திற்காக. நீ நேற்றைய விட, இன்று பரிசுத்தமாகவும், அதிகம் தாராளமாகவும் இருக்கிறாயா? நீ தேங்கிய நிலையில், அழுகிய நிலையில் இருக்கிறாயா? அல்லது, பரிசுத்த வாழ்வில், வலிமையோடு உங்கள் பாவங்களிலிருந்து மாற முயற்சி செய்கிறீர்கள?


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 21, 2007

ஞாயிறு 23 செப்டெம்பர் 2007 , நற்செய்தி , மறையுரை:

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 16

1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: ' செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. 2 தலைவர் அவரைக் கூப்பிட்டு, ' உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது ' என்று அவரிடம் கூறினார். 3 அந்த வீட்டுப் பொறுப்பாளர், ' நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. 4 வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் ' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். 5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ' நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார். 6 அதற்கு அவர், ' நூறு குடம் எண்ணெய் ' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ' இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும் ' என்றார். 7 பின்பு அடுத்தவரிடம், ' நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார். அதற்கு அவர், ' நூறு மூடை கோதுமை ' என்றார். அவர், ' இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும் ' என்றார். 8 நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள். 9 ' ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள். 10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். 11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? 12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? 13 ' எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது. '


thanks to www.arulvakku.com


ஞாயிறு 23 செப்டெம்பர் 2007 , நற்செய்தி , மறையுரை:

இன்றைய நற்செய்தியில் எப்படி ஒருவர், ஒரே நேரத்தில் செல்வந்தராகவும், பரிசுத்தமாகவும் இருக்க முடியும் என்பதை விளக்குகிறது. பணமும் , சொத்துக்களும் தான் நமது கடவுளாக இருந்தால், நாம் பரிசுத்தமானவர்கள் இல்லை. நாம் கடவுளிடம் இருந்து பிரக்கப்பட்டிருக்கிறோம். ஏனெனில், நம்மிடம் உள்ள சொத்துக்களையும், பணத்தையும், மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை கடவுளின் வார்த்தைகள் முக்கியபபடுத்துகிறது.

நம்மிடம் உள்ளதை பகிர்ந்து கொள்வதை விட, சொத்துக்கள சேர்ப்பது, நம்முடைய குறிக்கோளாக இருந்தால், கடவுள் நமது தலைவர் அல்ல. இந்த உண்மை, நம்மிடம் உள்ள சொத்துக்களுக்கும் மட்டுமல்ல, நம்மிடம் உள்ள மற்ற திறமைகளையும் சேர்த்து தான் குறிப்பிடபடுகிறது.

நாம் எல்லாரும், ஏதாவது ஓர் திறமையோடு, ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்த திறமைகளை எப்படி மற்றவர்களுக்காக உபயோகிக்க போகிறோம்?

"நேர்மையற்ற செல்வங்கள்" என்று யேசு குறிப்பிடுவது யாதெனில், "மற்றவர்களுக்கு உரியதையும்" சேர்ந்தே ஆகும். எடுத்து காட்டாக மற்றவர்கள் பணத்தை உபயோகிக்கும்போது (வங்கி கடன்), நம்முடைய பயன்களுக்காக மட்டும் உபயோகித்தல், அது நேர்மையற்ற செல்வங்களாகிவிடும். கடவுளரசிற்கு உபயோகமில்லாமல், நாம் ஊழியம் செய்தால், நாம் நம்பிக்கயுள்ள ஊழியனாக இருக்க முடியாது.

அதே போல, மற்றவர்களுக்காக ஒதுக்க வேண்டிய நேரத்தை, தவறாக உபயோகப்படுத்தினால், நாம் கடவுளரசிற்காக அவர் கொடுத்த அந்த நேரத்தை உபயோகிக்கவில்லை. இதன் மூலம் நாம் கடவுளரசிற்கு வேலை செய்யாமல் இருக்கிறோம். நமது பணியில் நமக்கு கொடுக்கபட்ட பணிகளை செய்யாமல் இருந்தால், நாம் நமது முதலாளியின் பணத்தை திருடுகிறோம் என்று அர்க்தம். நமது சுய தேவைகளுக்காக, நம குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையோ, நன்பர்களின் தேவைகளையோ, ஏழைகளின் தேவைகளையோ புறக்கனித்தால், ஒதுக்கினால், "உனக்கு தேவையானதை யார் கொடுப்பார்கள்" என்று யேசு கேட்கிறார்.

நம்முடையது எது? நாம் நம்பிக்கையான உன்மையான ஊழியனாய் இருந்தால், அது தான் உண்மையான சொத்தா? அது என்ன வென்றால், பணக்காரர்கள், நம்முடனே நித்தியத்திற்கும் இருப்பார்கள். நம்மோடு எப்போதும் இருப்பது, ஆவ்யின் செல்வங்கள், கடவுள் நம்மை புகழ்வதும், அவர் நாம் ஊழியத்தை ஏற்பதும், முழு அன்புமாகும். இவையாவும் நமக்கு கிடைக்கும் சொத்துக்கள்.

பரிசுத்தத்துடனும், செல்வங்களுடனும் எப்படி இருப்பது? , முதலில், நாம் மற்றவர்களுக்கு உரிய அன்பை நம்பிக்கையோடு அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அந்த அன்பு கடவுள் மற்றவர்கள் மேல் வைத்துள்ளது. நிரந்தரமற்ற இவ்வுலக பொருள்களையும், நித்திய மோட்சத்திற்குரிய விசுவாசம், ,ஞானம், நம்பிக்கை அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, நமது நம்பகத்தன்மை உறுதிபடுத்த படுகிறது.

சுய பரிசோதனைக்கான் கேள்வி:
நீ எதை பகிர்ந்து கொள்ள விருப்பமில்லாமல் இருக்கிறாய்? அந்த பொருளை கடவுளுக்கு அர்ப்பனித்தால் அதை அவர் பனிக்காக உபயோகித்தால், என்ன ஆகும் என்று எதனால் பயப்படுகிறாய்? இந்த் பயத்தை போக்க நீ என்ன செய்ய்வேண்டும் என நினைக்கிறாய், அது போன பின், நீ உன்மையான கடவுளின் மதிப்பிற்கு உரிய ஊழிய்னாய் இருப்பாய்.

thanks to www.gnm.org


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm