மே 18 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
பரிசுத்த தமத்திருத்துவ பெருவிழா
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 3
16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். 18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
(thanks to www.arulvakku.com)
பரிசுத்த ஆவியின் பெருவிழாவின் அடுத்த ஞாயிறாகிய இன்று நாம் பரிசுத்த தமத்திருத்துவ விழாவை கொண்டாடுகிறோம்.
முதல் வாசகத்தில், தந்தையாகிய கடவுள் எப்படி அவரது குழந்தையாக இஸ்ரேயல் நாட்டினை பார்த்து கொண்டார் என்று பார்க்கிறோம். "ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்: சினம் கொள்ளத் தயங்குபவர்: பேரன்பு மிக்கவர்: நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்: கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர். " இவ்வாறு நாமும் தந்தையை பார்க்கவேண்டும். நாம் இப்படி பார்க்கா முடியவில்லையெனில், நாம் பரிசுத்தமடையவேண்டும். நாம் இவ்வுலகின் தந்தையையும், பரிசுத்த தந்தையையும், வேறுபடுத்தி பார்க்க தெரியவேண்டும்.
இரண்டாவது வாசககம் முழு திரித்துவத்தையும் கான்பிக்கிறது: யேசுவின் கருணை, கடவுளின் அன்பு, மேலும், பரிசுத்த ஆவியோடு சேர்ந்து நாம் கொள்ளும் நட்பு. இதனால், இந்த காரணத்தினால், நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். நமது பாதையை திருத்தி, ஒருவர் மற்றவரோடு இணைந்து அன்புடனும் அமைதியுடனும் வாழவேண்டும்.
வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், இப்படி சொல்லலாம். யேசு நமது பாவங்களுக்காக சிலுவையில் மரணமடைந்து, நம்மையெல்லாம் பாவங்களிலிலுருந்து மீட்டார். அவருடைய அருட்கொடையால், நாம் பாவங்களிலிருந்து வெளியே வர முடியும். யேசு தந்தையின் அன்பையும் நமக்கு கொடுக்கிறார். அதன் மூலம், நாம் ஒருவருக்கொருவர் அன்பு செய்தல் வேண்டும். மேலும், யேசு பரிசுத்த ஆவியையும் கொடுத்து, அவரோடு சேர்ந்து, புனித கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்.
நற்செய்தி வாசகம் கடவுளின் அன்பின் ஆழத்தை எடுத்து சொல்கிறது. "அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். 18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர்." எனவே நாம் கிறிஸ்துவீன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். மூவதொரு கடவுள் மேல் விசுவாசம் கொண்டு அன்பின் மக்களாய் இந்த வாழ்வை தொடர்வோம்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, May 16, 2008
Friday, May 9, 2008
தூய ஆவி பெருவிழா மே 11 , 2008 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
மே 11 , 2008 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
தூய ஆவி பெருவிழா
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 20
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார். 22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
thanks to www.arulvakku.com
" உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன: மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்" இந்த வசனத்தை தான இன்றைய பதிலுரையில் நாம் பாடுகிறோம். இந்த பரிசுத்த ஆவியால், தான், நமது திருச்சபை இருக்கிறது இன்னும் தொடர்ந்து இருக்கும். நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். பரிசுத்த ஆவ்யின் ஆற்றலாலும், இவ்வுலகில் இருப்பதாலும் தான், இந்த உலகை மாற்ற முடிந்தது, இந்த திருச்சபை 2000 வருடமாக தொடர்ந்து இருக்கி முடிகிறது. கிறிஸ்துவின் ஆவி நம்மில் இல்லாமல், யேசு என்ன செய்தாரோ, அதனை நாம் செய்ய முடியாது. பரிசுத்த ஆவியின் விழா, திருச்சபையின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். நாமும், நமது பரிசுத்த ஆவயின் பிறந்த் நாள் விழாவை கொண்டாடுகிறோம். அது என்னவென்றால் நாம் திருச்சபையில் உறுப்பினர், அங்கத்தினர் ஆனதை குறிக்கிறது. இது அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டிய திருவிழா, மேலும், நமது உறுதிபூசுதலில், பிஷப், நாம் பரிசுத்த ஆவயை, நமது ஞானஸ்நானத்தில் பெற்றுகொண்டோம் என உறுதிபடுத்துகிறார்.
தூய ஆவியின் திருவிழா, அருட்சாதனங்களின் மூலம், நாம் கடவுளின் ஆற்றலை பெறுகிறோம் என்பதனை நினைவுபடுத்துகிறது. அந்த ஆற்றல் மூலம், நாம் பாவங்களிலிரிந்து விடுதலை அடைந்து, பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து, நாம் இந்த உலகை மாற்றவேண்டும். கடவுள் எவ்வாறு இந்த மண்ணகத்தின் முகத்தை நம் மூலமாக புதுபித்தார். முதலில் கடவுள் பரிசுத்த ஆவியை யேசுவுக்கு கொடுத்தார். அதன் மூலம் கடவுளின் திட்டத்தை யேசு கிறிஸ்து நிறைவேற்றினார். இப்போது, தந்தை, அந்த பரிச்த்த ஆவியை நமக்கு கொடுத்திருக்கிறார். அதன் முலம், யேசு செய்த புதுபித்தல் சேவையை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். உனக்கு அந்த தகுதிகள் இல்லை என்று நினைத்தால், நாம் செய்வது சரியா தப்பா? வெற்றி கிட்டுமா? என நினைத்தால், அது சரியானது தான், ஆனால், ஆவியின் கடவுள் உன்னுள் புது ஆற்றல்களோடு நீடித்து இருக்கிறார். உன்னுடைய குறைகள் எல்லாம், நிறைகளாகும். இந்த நம்பிக்கையோடு, முன்னேறி செல்.
© 2008 by Terry A. Modica
தூய ஆவி பெருவிழா
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 20
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார். 22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
thanks to www.arulvakku.com
" உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன: மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்" இந்த வசனத்தை தான இன்றைய பதிலுரையில் நாம் பாடுகிறோம். இந்த பரிசுத்த ஆவியால், தான், நமது திருச்சபை இருக்கிறது இன்னும் தொடர்ந்து இருக்கும். நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். பரிசுத்த ஆவ்யின் ஆற்றலாலும், இவ்வுலகில் இருப்பதாலும் தான், இந்த உலகை மாற்ற முடிந்தது, இந்த திருச்சபை 2000 வருடமாக தொடர்ந்து இருக்கி முடிகிறது. கிறிஸ்துவின் ஆவி நம்மில் இல்லாமல், யேசு என்ன செய்தாரோ, அதனை நாம் செய்ய முடியாது. பரிசுத்த ஆவியின் விழா, திருச்சபையின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். நாமும், நமது பரிசுத்த ஆவயின் பிறந்த் நாள் விழாவை கொண்டாடுகிறோம். அது என்னவென்றால் நாம் திருச்சபையில் உறுப்பினர், அங்கத்தினர் ஆனதை குறிக்கிறது. இது அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டிய திருவிழா, மேலும், நமது உறுதிபூசுதலில், பிஷப், நாம் பரிசுத்த ஆவயை, நமது ஞானஸ்நானத்தில் பெற்றுகொண்டோம் என உறுதிபடுத்துகிறார்.
தூய ஆவியின் திருவிழா, அருட்சாதனங்களின் மூலம், நாம் கடவுளின் ஆற்றலை பெறுகிறோம் என்பதனை நினைவுபடுத்துகிறது. அந்த ஆற்றல் மூலம், நாம் பாவங்களிலிரிந்து விடுதலை அடைந்து, பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து, நாம் இந்த உலகை மாற்றவேண்டும். கடவுள் எவ்வாறு இந்த மண்ணகத்தின் முகத்தை நம் மூலமாக புதுபித்தார். முதலில் கடவுள் பரிசுத்த ஆவியை யேசுவுக்கு கொடுத்தார். அதன் மூலம் கடவுளின் திட்டத்தை யேசு கிறிஸ்து நிறைவேற்றினார். இப்போது, தந்தை, அந்த பரிச்த்த ஆவியை நமக்கு கொடுத்திருக்கிறார். அதன் முலம், யேசு செய்த புதுபித்தல் சேவையை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். உனக்கு அந்த தகுதிகள் இல்லை என்று நினைத்தால், நாம் செய்வது சரியா தப்பா? வெற்றி கிட்டுமா? என நினைத்தால், அது சரியானது தான், ஆனால், ஆவியின் கடவுள் உன்னுள் புது ஆற்றல்களோடு நீடித்து இருக்கிறார். உன்னுடைய குறைகள் எல்லாம், நிறைகளாகும். இந்த நம்பிக்கையோடு, முன்னேறி செல்.
© 2008 by Terry A. Modica
Friday, May 2, 2008
மே 4, 2008 , நற்செய்தி , மறையுரை
மே 4, 2008 , நற்செய்தி , மறையுரை
ஈஸ்டர் 7 வது ஞாயிறு
http://gnm.org/faithbuilders/Psalm27.htm
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 17
1 இவ்வாறு பேசியபின் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ' தந்தையே, நேரம் வந்து விட்டது. உம் மகன் உம்மை மாட்சிப் படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும். 2 ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர் மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர். 3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. 4 நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். 5 தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும். 6 நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள். 7 நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும். 8 ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள். 9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள். 10 ' என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய். நான் மாட்சி பெற்றிருக்கிறேன். 11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.
thanks to www.arulvakku.com
இன்றைய நற்செய்தியின் எல்லா வாசகங்களுமே, நமக்கு சந்தோசத்தையும், நன்கு புரிந்து கொள்ளும்ப்படியும், இன்றைய பதிலுரையில், "வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்" என்று நாம் கூறுவது போல உள்ளது. இந்த வசனத்தை, நமக்கு பிடித்தமான வசனமாக நமது வீடுகளில் அல்லது, நமது மேஜையில் எழுதி வைத்து கொள்ள கூடியது. ஏனெனில், நாம் குறையுள்ள வாழ்வின் சமயங்களில், இந்த வசனம நம்மை தூக்கி நிறுத்தும், நம்மை உற்சாகபடுத்தும். இந்த வசனத்தின் முழு படத்தினை, இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அப்பப்பொழுது, எனக்கு இதனை நிணைவுபடுத்திகொள்ள, நான் இந்த வசனைத்தை உபயோகித்துகொள்வேன். கடவுள் நமக்கு கொடுத்த உறுதிமொழிகளை, மீண்டும் உறுதியளிக்கிறார். நாம் நிச்சயம் கடவுள் மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும். நமக்கு தேவையானவை கிடைக்க வலி மிகுந்த நாட்கள் அல்லது நேரங்கள் ஆகலாம், கடைசியாக நமக்கு கிடைக்க வேண்டியது, கிடைக்கும். அது முழுமையாக கிடைக்கும் வரைக்கும், இந்த வசனம், எனது விசுவாசத்தை நிலை நிறுத்தியிருக்கிறது.
நற்செய்தி வாசகம், இந்த உலகில் யேசு தந்தையின், நல்ல விசயங்களை அறிந்து கொண்டார் என்று கூறுகிறது. யேசுவை எப்படி நம்பினார்கள் என்று அந்த விசயத்திற்கு மதிப்பளித்தார் என்பதை கவனத்தில் கொள்வோம். நம்மை நம்புகிறவர்கள் மேல் , நாம் அக்கறை கொள்ளும்போது, அவர்கள் அதை ஏற்றுகொள்ளும்போது, நாம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்.
எப்போது அவர்கள நம்மை ஏற்றுகொள்ளவில்லையோ?, அப்போதுதான், நாம் யேசுவிடம் திரும்பி, அவர்கள் நிராகரித்த அன்பை அவரிடம் காட்ட வேன்டும். யேசுவின் வார்த்தையை ஏற்றுகொள்கிறோம். அவர் தந்தையிடமிருந்து வந்தவர் என்று நற்செய்தி கூறியிருப்பதை நாம் ஏற்றுகொள்கிறோம். மேலும் தந்தையின் திட்டத்தில், நாம் நம்பிக்கை வைக்கிறோம். யேசு உனக்காக வேண்டிகொண்டிருக்கிறார். அதனால், கண்டிப்பாக உனக்கு தேவையானது, நல்ல விசயங்கள் இந்த உலகில் உனக்கு கிடைக்கும். நீ அதனை கான்பாய்!
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
ஈஸ்டர் 7 வது ஞாயிறு
http://gnm.org/faithbuilders/Psalm27.htm
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 17
1 இவ்வாறு பேசியபின் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ' தந்தையே, நேரம் வந்து விட்டது. உம் மகன் உம்மை மாட்சிப் படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும். 2 ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர் மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர். 3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. 4 நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். 5 தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும். 6 நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள். 7 நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும். 8 ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள். 9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள். 10 ' என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய். நான் மாட்சி பெற்றிருக்கிறேன். 11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.
thanks to www.arulvakku.com
இன்றைய நற்செய்தியின் எல்லா வாசகங்களுமே, நமக்கு சந்தோசத்தையும், நன்கு புரிந்து கொள்ளும்ப்படியும், இன்றைய பதிலுரையில், "வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்" என்று நாம் கூறுவது போல உள்ளது. இந்த வசனத்தை, நமக்கு பிடித்தமான வசனமாக நமது வீடுகளில் அல்லது, நமது மேஜையில் எழுதி வைத்து கொள்ள கூடியது. ஏனெனில், நாம் குறையுள்ள வாழ்வின் சமயங்களில், இந்த வசனம நம்மை தூக்கி நிறுத்தும், நம்மை உற்சாகபடுத்தும். இந்த வசனத்தின் முழு படத்தினை, இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அப்பப்பொழுது, எனக்கு இதனை நிணைவுபடுத்திகொள்ள, நான் இந்த வசனைத்தை உபயோகித்துகொள்வேன். கடவுள் நமக்கு கொடுத்த உறுதிமொழிகளை, மீண்டும் உறுதியளிக்கிறார். நாம் நிச்சயம் கடவுள் மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும். நமக்கு தேவையானவை கிடைக்க வலி மிகுந்த நாட்கள் அல்லது நேரங்கள் ஆகலாம், கடைசியாக நமக்கு கிடைக்க வேண்டியது, கிடைக்கும். அது முழுமையாக கிடைக்கும் வரைக்கும், இந்த வசனம், எனது விசுவாசத்தை நிலை நிறுத்தியிருக்கிறது.
நற்செய்தி வாசகம், இந்த உலகில் யேசு தந்தையின், நல்ல விசயங்களை அறிந்து கொண்டார் என்று கூறுகிறது. யேசுவை எப்படி நம்பினார்கள் என்று அந்த விசயத்திற்கு மதிப்பளித்தார் என்பதை கவனத்தில் கொள்வோம். நம்மை நம்புகிறவர்கள் மேல் , நாம் அக்கறை கொள்ளும்போது, அவர்கள் அதை ஏற்றுகொள்ளும்போது, நாம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்.
எப்போது அவர்கள நம்மை ஏற்றுகொள்ளவில்லையோ?, அப்போதுதான், நாம் யேசுவிடம் திரும்பி, அவர்கள் நிராகரித்த அன்பை அவரிடம் காட்ட வேன்டும். யேசுவின் வார்த்தையை ஏற்றுகொள்கிறோம். அவர் தந்தையிடமிருந்து வந்தவர் என்று நற்செய்தி கூறியிருப்பதை நாம் ஏற்றுகொள்கிறோம். மேலும் தந்தையின் திட்டத்தில், நாம் நம்பிக்கை வைக்கிறோம். யேசு உனக்காக வேண்டிகொண்டிருக்கிறார். அதனால், கண்டிப்பாக உனக்கு தேவையானது, நல்ல விசயங்கள் இந்த உலகில் உனக்கு கிடைக்கும். நீ அதனை கான்பாய்!
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, April 25, 2008
ஏப்ரல் 27, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஏப்ரல் 27, 2008
6வது ஈஸ்டர் ஞாயிறு
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 14
15 நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். 16 ″ உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். 17 அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார். 18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். 19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள். 20 நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 21 என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன். ″
thanks to www.arulvakku.com
இன்றைய நற்செய்தியில், யேசு, "பரிசுத்த ஆவி" தான் நமக்கு துணையாளர் என்று கூறுகிறார். சில அறிஞர்கள் இந்த வார்த்தைக்கு "ஆலோசனை" வழங்குபவர்கள் என்று கூறுகின்றனர். கிரேக்க மொழியில், இதற்கு அர்த்தம் என்ன வெனில், "கூடவே இருப்பவர்". அந்த கால கிரேக்க சமூகத்தில், இதற்கு சட்ட வல்லுனர் அல்லது சட்ட சம்பந்தமான உதவியாளர் என்று பொருள். பரிசுத்த ஆவிதான நமக்கு சட்ட உதவியாளர் என்று யேசு கூறுகிறார். பரிசுத்த ஆவிதான், நாம் தவறாக குற்றம் சாட்டபடும்போது, நமக்காக பேசுபவர்.
பரிசுத்த ஆவியே உண்மையை வெளிப்படுத்தும் ஆவியார் என்று யேசு குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மை பற்றிய உண்மையை கடவுளுக்கு எப்போதுமே தெரியும். மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைத்தாலும், தவறான செய்திகள் என்ன சொன்னாலும், கடவுளுக்கு உண்மை தெரியும். கவனத்தில் கொள்ளுங்கள்: கடவுள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார் என்பதே நமக்கு முக்கியம். மேலும் நம்மை பற்றிய அவருடைய கருத்து நாம் நிணைப்பதைவிட நல்லதாகவே இருக்கும்.
நாம் நம்மையே மிகவும் தவறாக , அதிகபடியாகவே தீர்ப்பளித்து கொள்கிறோம். அதனால் தான், மற்றவர்கள் நம்மை பற்றி எவ்வளவு தவறாக நினைப்பார்கள் என்று கவலைபடுகிறோம். நாம் நமது மனசாட்சியுடன் நேர்மையாக நமது பாவங்களை நினைத்து பாவமன்னிப்பு கேட்டு, உண்மையாகவே நாம் நமது பாவ வழியிலிருந்து மீண்டு மேலே வர விரும்பினால். யேசு, "நான் உன்னை தண்டிக்கமாட்டேன், இனிமேல் பாவம் செய்யாதே" என்று கூறுகிறார்.
நீ சோதனையில், அல்லது ஆபத்தில் இருக்கும்போது, யேசு அங்கே வந்து, உங்களை காப்பாற்றவேண்டும் சில நேரங்களில் ஆசைபடுவது உண்டா? அவர் நம்மை என்றும் அனாதையாக விட்டது இல்லை. அவர் பரிசுத்த ஆவியின் மூலம், நம்மிடையே இருக்கின்றார். நம்மை காக்க வேண்டிய நேரத்தில் நம்மை காக்கின்றார்.
கடவுளை அன்பு செய்ய, நாம் அவருடைய கட்டளைகளை ஏற்று கடைபிடிக்க வேண்டும். நாம் அதில் தவறும்போது, உண்மையின் ஆவியானவர் தந்தையிடம்: "இந்த குழந்தை உண்மையாகவே பரிசுத்தமாக இருக்க வேண்டும் என ஆசைபடுகிறது" மற்றும், நம்மிடம் " நாம் உனக்கு எப்படி பரிசுத்த வாழ்வில் வாழ வேண்டும் என கற்றுகொடுக்கிறேன் மற்றும் எப்படி பாவங்களை தவிர்ப்பது " என்று கூறுகிறார். மற்றவர்களிடம்: "நீ என்னை அன்பு செய்தால், எனது பெரு மதிப்புள்ள இந்த நன்பனையும் அன்பு செய்வாக" என்று கூறுகிறார்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
ஏப்ரல் 27, 2008
6வது ஈஸ்டர் ஞாயிறு
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 14
15 நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். 16 ″ உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். 17 அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார். 18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். 19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள். 20 நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 21 என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன். ″
thanks to www.arulvakku.com
இன்றைய நற்செய்தியில், யேசு, "பரிசுத்த ஆவி" தான் நமக்கு துணையாளர் என்று கூறுகிறார். சில அறிஞர்கள் இந்த வார்த்தைக்கு "ஆலோசனை" வழங்குபவர்கள் என்று கூறுகின்றனர். கிரேக்க மொழியில், இதற்கு அர்த்தம் என்ன வெனில், "கூடவே இருப்பவர்". அந்த கால கிரேக்க சமூகத்தில், இதற்கு சட்ட வல்லுனர் அல்லது சட்ட சம்பந்தமான உதவியாளர் என்று பொருள். பரிசுத்த ஆவிதான நமக்கு சட்ட உதவியாளர் என்று யேசு கூறுகிறார். பரிசுத்த ஆவிதான், நாம் தவறாக குற்றம் சாட்டபடும்போது, நமக்காக பேசுபவர்.
பரிசுத்த ஆவியே உண்மையை வெளிப்படுத்தும் ஆவியார் என்று யேசு குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மை பற்றிய உண்மையை கடவுளுக்கு எப்போதுமே தெரியும். மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைத்தாலும், தவறான செய்திகள் என்ன சொன்னாலும், கடவுளுக்கு உண்மை தெரியும். கவனத்தில் கொள்ளுங்கள்: கடவுள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார் என்பதே நமக்கு முக்கியம். மேலும் நம்மை பற்றிய அவருடைய கருத்து நாம் நிணைப்பதைவிட நல்லதாகவே இருக்கும்.
நாம் நம்மையே மிகவும் தவறாக , அதிகபடியாகவே தீர்ப்பளித்து கொள்கிறோம். அதனால் தான், மற்றவர்கள் நம்மை பற்றி எவ்வளவு தவறாக நினைப்பார்கள் என்று கவலைபடுகிறோம். நாம் நமது மனசாட்சியுடன் நேர்மையாக நமது பாவங்களை நினைத்து பாவமன்னிப்பு கேட்டு, உண்மையாகவே நாம் நமது பாவ வழியிலிருந்து மீண்டு மேலே வர விரும்பினால். யேசு, "நான் உன்னை தண்டிக்கமாட்டேன், இனிமேல் பாவம் செய்யாதே" என்று கூறுகிறார்.
நீ சோதனையில், அல்லது ஆபத்தில் இருக்கும்போது, யேசு அங்கே வந்து, உங்களை காப்பாற்றவேண்டும் சில நேரங்களில் ஆசைபடுவது உண்டா? அவர் நம்மை என்றும் அனாதையாக விட்டது இல்லை. அவர் பரிசுத்த ஆவியின் மூலம், நம்மிடையே இருக்கின்றார். நம்மை காக்க வேண்டிய நேரத்தில் நம்மை காக்கின்றார்.
கடவுளை அன்பு செய்ய, நாம் அவருடைய கட்டளைகளை ஏற்று கடைபிடிக்க வேண்டும். நாம் அதில் தவறும்போது, உண்மையின் ஆவியானவர் தந்தையிடம்: "இந்த குழந்தை உண்மையாகவே பரிசுத்தமாக இருக்க வேண்டும் என ஆசைபடுகிறது" மற்றும், நம்மிடம் " நாம் உனக்கு எப்படி பரிசுத்த வாழ்வில் வாழ வேண்டும் என கற்றுகொடுக்கிறேன் மற்றும் எப்படி பாவங்களை தவிர்ப்பது " என்று கூறுகிறார். மற்றவர்களிடம்: "நீ என்னை அன்பு செய்தால், எனது பெரு மதிப்புள்ள இந்த நன்பனையும் அன்பு செய்வாக" என்று கூறுகிறார்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, April 18, 2008
ஏப்ரல் 20 , 2008 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஏப்ரல் 20 , 2008 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஈஸ்டர் 5வது ஞாயிறு
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 14
1 மீண்டும் இயேசு, ' நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். 2 தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ' உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் ' என்று சொல்லியிருப்பேனா? 3 நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். 4 நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும் ' என்றார். 5 தோமா அவரிடம், ' ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்? ' என்றார். 6 இயேசு அவரிடம், ' வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. 7 ' நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள் ' என்றார். 8 அப்போது பிலிப்பு, அவரிடம், ' ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும் ' என்றார். 9 இயேசு அவரிடம் கூறியது: ' பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ' தந்தையை எங்களுக்குக் காட்டும் ' என்று நீ எப்படிக் கேட்கலாம்? 10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. 11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். 12 நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(thanks to www.arulvakku.com)
"நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்" என்று இன்றைய நற்செய்தி முடிகிறது. யேசு எந்த அர்த்தத்தில் இதனை சொல்கிறார். நாம் எப்படி யேசுவைவிட, அவர் செய்ததைவிட அதிசயங்களையும், தெய்வீக காரியங்களையும் செய்ய முடியும். இதற்கான பதில் இந்த நற்செய்தியின் அதிகாரத்தில் முழுதுமாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. யேசு கடவுளோடு உள்ள நெரூங்கிய உறவையும், அவரோடு சேர்ந்து செய்யும் செயல்களையும் கூறுகிறார். யேசு எல்லா செயல்களையும், கடவுளோடு சேர்ந்து செய்கிறார். யேசு மனிதனாகவும் தெய்வமாகவும் இருந்தார். இந்த வசனங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
"நான செய்யும் செயல்கள்" என்று கூறுவது, அவர் மனிதனாக இருந்து கடவுளுக்காக செய்த செயல்களை குறிக்கிறது. அதே செயல்களை, கடவுள் நம் மேல் வைத்த அன்பின் பொருட்டு, நாமும் கடவுளுக்காக செய்யலாம்.
கடவுளின் அன்பினை பெற்ற, அவரின் குழந்தகளாகிய நாம், கடவுள் மற்றவர்களை அன்பு செய்வது போல, நாமும் அன்பு செய்கிறோம். நாம் என்ன கற்றுகொண்டோமோ, அதனை மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்கிறோம். நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். மற்றவர்கள் நம்முடன் அவர்களின் கவலைகளை பகிர்ந்து கொள்ளும்போதே, நாம் அவர்களுக்கு காது கொடுத்து, கேட்டு, அவர்களின் உணர்வுகளை , கவலைகள புரிந்து கொள்கிறோம். மேலும், நமது தின வேலையை முழுதுமாக செய்து, மற்றும், அருகில் இருப்பவர்களுக்கு அவர்களின் தேவையை உணர்ந்து, அவர்களுக்கு உதவி செய்வது. இன்னும் பல. இந்த செயலகள் எல்லாம் தெய்வீக செயல்கள் அல்ல. இவையெல்லாம், அன்பு தந்தையின், மனித குழந்தைகளாக நாம் செய்வது.
மிக பெரிய, அதிசய செயல்கள் எல்லாம், யேசு தெய்வீக நிலையில், கடவுளோடு சேர்ந்து செய்தவை. அவையெல்லாம் கடவுள் யேசுவின் மூலமாக செய்த அற்புதங்கள். ஏனெனில், கடவுளின் அன்பும், யேசுவின் அன்பும், ஒரே அன்பு ஆகும்.
யேசு, அவரையே, நம் பாவங்களுக்காக, சிலுவை தன்டனையில் அர்ப்பனித்து, கடவுள் அந்த மரணத்திலிருந்து யேசு எழுந்தருள செய்த பின், யேசு அவருடைய தெய்வீகத்தை , நமக்கு கொடுத்தார். அதனை கொண்டு நாம் யேசுவின் பணியை தொடர வேண்டும் என்று நமக்கு அருளினார். கடவுளின் தெய்வீகத்தை நாம் ஞானஸ்நானத்தின் போது பெற்றோம். கடவுள் நம் மூலமாக, அவரை இந்த உலகுக்கு எடுத்து செல்கிறார்.கடவுளோடு, நாம் அன்பிற்கு ஏங்குபவர்களுக்கு அன்பு செலுத்தலாம். புனித அதசயங்கள் நிகழ நாம் கருவிகளாக இருக்கலாம். கடவுள் என்ன பேசுகிறார் என்று நாம் கேட்டு, அவரின் ஞானத்தையும், அனுசரனையையும், நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். நமக்கு என்ன குறைகள் இருந்தாலும், கடவுள் எதனை செய்ய சொன்னாலும், நாம் செய்யலாம்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
ஈஸ்டர் 5வது ஞாயிறு
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 14
1 மீண்டும் இயேசு, ' நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். 2 தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ' உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் ' என்று சொல்லியிருப்பேனா? 3 நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். 4 நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும் ' என்றார். 5 தோமா அவரிடம், ' ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்? ' என்றார். 6 இயேசு அவரிடம், ' வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. 7 ' நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள் ' என்றார். 8 அப்போது பிலிப்பு, அவரிடம், ' ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும் ' என்றார். 9 இயேசு அவரிடம் கூறியது: ' பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ' தந்தையை எங்களுக்குக் காட்டும் ' என்று நீ எப்படிக் கேட்கலாம்? 10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. 11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். 12 நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(thanks to www.arulvakku.com)
"நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்" என்று இன்றைய நற்செய்தி முடிகிறது. யேசு எந்த அர்த்தத்தில் இதனை சொல்கிறார். நாம் எப்படி யேசுவைவிட, அவர் செய்ததைவிட அதிசயங்களையும், தெய்வீக காரியங்களையும் செய்ய முடியும். இதற்கான பதில் இந்த நற்செய்தியின் அதிகாரத்தில் முழுதுமாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. யேசு கடவுளோடு உள்ள நெரூங்கிய உறவையும், அவரோடு சேர்ந்து செய்யும் செயல்களையும் கூறுகிறார். யேசு எல்லா செயல்களையும், கடவுளோடு சேர்ந்து செய்கிறார். யேசு மனிதனாகவும் தெய்வமாகவும் இருந்தார். இந்த வசனங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
"நான செய்யும் செயல்கள்" என்று கூறுவது, அவர் மனிதனாக இருந்து கடவுளுக்காக செய்த செயல்களை குறிக்கிறது. அதே செயல்களை, கடவுள் நம் மேல் வைத்த அன்பின் பொருட்டு, நாமும் கடவுளுக்காக செய்யலாம்.
கடவுளின் அன்பினை பெற்ற, அவரின் குழந்தகளாகிய நாம், கடவுள் மற்றவர்களை அன்பு செய்வது போல, நாமும் அன்பு செய்கிறோம். நாம் என்ன கற்றுகொண்டோமோ, அதனை மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்கிறோம். நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். மற்றவர்கள் நம்முடன் அவர்களின் கவலைகளை பகிர்ந்து கொள்ளும்போதே, நாம் அவர்களுக்கு காது கொடுத்து, கேட்டு, அவர்களின் உணர்வுகளை , கவலைகள புரிந்து கொள்கிறோம். மேலும், நமது தின வேலையை முழுதுமாக செய்து, மற்றும், அருகில் இருப்பவர்களுக்கு அவர்களின் தேவையை உணர்ந்து, அவர்களுக்கு உதவி செய்வது. இன்னும் பல. இந்த செயலகள் எல்லாம் தெய்வீக செயல்கள் அல்ல. இவையெல்லாம், அன்பு தந்தையின், மனித குழந்தைகளாக நாம் செய்வது.
மிக பெரிய, அதிசய செயல்கள் எல்லாம், யேசு தெய்வீக நிலையில், கடவுளோடு சேர்ந்து செய்தவை. அவையெல்லாம் கடவுள் யேசுவின் மூலமாக செய்த அற்புதங்கள். ஏனெனில், கடவுளின் அன்பும், யேசுவின் அன்பும், ஒரே அன்பு ஆகும்.
யேசு, அவரையே, நம் பாவங்களுக்காக, சிலுவை தன்டனையில் அர்ப்பனித்து, கடவுள் அந்த மரணத்திலிருந்து யேசு எழுந்தருள செய்த பின், யேசு அவருடைய தெய்வீகத்தை , நமக்கு கொடுத்தார். அதனை கொண்டு நாம் யேசுவின் பணியை தொடர வேண்டும் என்று நமக்கு அருளினார். கடவுளின் தெய்வீகத்தை நாம் ஞானஸ்நானத்தின் போது பெற்றோம். கடவுள் நம் மூலமாக, அவரை இந்த உலகுக்கு எடுத்து செல்கிறார்.கடவுளோடு, நாம் அன்பிற்கு ஏங்குபவர்களுக்கு அன்பு செலுத்தலாம். புனித அதசயங்கள் நிகழ நாம் கருவிகளாக இருக்கலாம். கடவுள் என்ன பேசுகிறார் என்று நாம் கேட்டு, அவரின் ஞானத்தையும், அனுசரனையையும், நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். நமக்கு என்ன குறைகள் இருந்தாலும், கடவுள் எதனை செய்ய சொன்னாலும், நாம் செய்யலாம்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Saturday, April 12, 2008
ஏப்ரல் 13, ஈஸ்டர் 4வது ஞாயிறு
ஏப்ரல் 13, ஈஸ்டர் 4வது ஞாயிறு
நற்செய்தி - மறையுரை
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 10
1 ' நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். 2 வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். 3 அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். 4 தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். 5 அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது. ' 6 இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 7 மீண்டும் இயேசு கூறியது: ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆடுகளுக்கு வாயில் நானே. 8 எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. 9 நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். 10 திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.
(thanks to www.arulvakku.com)
உனது புனித வாழ்வின் வளர்ச்சி, அல்லது, மிகவும் கடினமான உறவை வளர்ப்பதில் அப்படியே தடை பட்டு இருக்கிறதா? அந்த தடையை உடைத்து வெளியே வரவேண்டுமா? ஒரு கூண்டுக்குள் அடைபட்டு கிடப்பது போல், நீ உணர்கிறாயா? அந்த வேலி அல்லது கூண்டு, உன்னுடைய அமைதியையும், சந்தோசத்தையும், திருப்திபடுதலையும், சுத்தமாக அண்ட விடுவதில்லையா? இன்றைய நற்செய்தியில், யேசுதான அந்த கூண்டின் அல்லது கொட்டடியின் கதவாக இருக்கிறார் என்று கூறுகிறது. யேசு நாம் மோட்சத்தின் கதவுகளை அடைவதற்கு உதவு செய்கிறார். இந்த பூமியின் வாழ்வில் ஏற்படும் தடைகளுக்கும் அவர் திறவுகோலாக இருக்கிறார். இதன் மூலம் இவ்வுலக வாழ்விலும், நித்திய மோட்ச வாழ்விலும், நிறைவாக பெரும் பொருட்டே அவர் நமக்கு உதவுகிறார்.
நமது பாதை தடை பட்டு இருந்தால், நாம் யேசுவை வழிகாட்ட சொன்னால் தான், நம்மால் மேலே செல்லமுடியும், மற்றும் தடைகளை தாண்டி நம்மை அழைத்து செல்வார். மற்றவர்கள் நமக்கு கதவை சாத்தினால், கடவுள் நம்மை அங்கே போகசொன்னால், யேசு நமக்கு கதவாக இருந்து நமக்கு வழி விடுவார். யாரும் அவருடைய வாயிலை மூட முடியாது. கடவுளின் திட்டத்தை நாம் நிறைவேற்றுவதற்கு யேசு நம்மை வழி நடத்தி செல்வார். மிகவும் பயப்படும்படியான திட்டத்தை கடவுள் நமக்கு கொடுத்தாரானால், அதனை கண்டு நாம் ஒதுங்கி விடாமல், யேசுவை நோக்கி பார்த்து, அவரே வாயிலாக கொண்டு நாம் அந்த இலக்கை அடையவேண்டும்.
மேலும் முழுமையாக அந்த இலக்கை அடையும் வரை, வாயில்லா ஆடாக நாம் யேசுவோடு செல்ல வேண்டும். அந்த பயனத்தின் மறு பக்கத்தை அடைய, இடையில் நாம் பயனம் செய்ய வேண்டியிருக்கிறது. திருடர்கள் நம்மை தாக்க வருவார்களேயானால், நாம் யேசுவோடு இருந்தால், அவர்களை மிகவும் எளிதாக வெல்லலாம். கவலையும், நம்பிக்கையின்மையும், நமக்கு முக்கியமான திருடர்கள் ஆவர். அவைகள் தான், நமது அமைதியையும், திருப்தியையும், சந்தொச்த்தையும், குணப்படுத்தலையும், நம்மிடமிருந்து எடுத்து சென்று விடுகின்றன. ஆனால் அவைகல் எல்லாம் அப்படி ஒன்ரும் சக்தி வாய்ந்தது அல்ல. நாம் பயப்படும் அளவிற்கு ஒன்றும் உண்மையை பேசுவதில்லை. அவைகள் நாம் யேசுவை மறக்க செய்வதற்கு எல்லா வேலைகளையும் செய்கின்றது. அவர் தான் உண்மையான மேய்ப்பன் மற்றும் நல்ல வழிகாட்டி, வெகுமதியுடன் கூடிய வெற்றியை பெற்று தருபவர்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
நற்செய்தி - மறையுரை
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 10
1 ' நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். 2 வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். 3 அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். 4 தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். 5 அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது. ' 6 இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 7 மீண்டும் இயேசு கூறியது: ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆடுகளுக்கு வாயில் நானே. 8 எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. 9 நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். 10 திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.
(thanks to www.arulvakku.com)
உனது புனித வாழ்வின் வளர்ச்சி, அல்லது, மிகவும் கடினமான உறவை வளர்ப்பதில் அப்படியே தடை பட்டு இருக்கிறதா? அந்த தடையை உடைத்து வெளியே வரவேண்டுமா? ஒரு கூண்டுக்குள் அடைபட்டு கிடப்பது போல், நீ உணர்கிறாயா? அந்த வேலி அல்லது கூண்டு, உன்னுடைய அமைதியையும், சந்தோசத்தையும், திருப்திபடுதலையும், சுத்தமாக அண்ட விடுவதில்லையா? இன்றைய நற்செய்தியில், யேசுதான அந்த கூண்டின் அல்லது கொட்டடியின் கதவாக இருக்கிறார் என்று கூறுகிறது. யேசு நாம் மோட்சத்தின் கதவுகளை அடைவதற்கு உதவு செய்கிறார். இந்த பூமியின் வாழ்வில் ஏற்படும் தடைகளுக்கும் அவர் திறவுகோலாக இருக்கிறார். இதன் மூலம் இவ்வுலக வாழ்விலும், நித்திய மோட்ச வாழ்விலும், நிறைவாக பெரும் பொருட்டே அவர் நமக்கு உதவுகிறார்.
நமது பாதை தடை பட்டு இருந்தால், நாம் யேசுவை வழிகாட்ட சொன்னால் தான், நம்மால் மேலே செல்லமுடியும், மற்றும் தடைகளை தாண்டி நம்மை அழைத்து செல்வார். மற்றவர்கள் நமக்கு கதவை சாத்தினால், கடவுள் நம்மை அங்கே போகசொன்னால், யேசு நமக்கு கதவாக இருந்து நமக்கு வழி விடுவார். யாரும் அவருடைய வாயிலை மூட முடியாது. கடவுளின் திட்டத்தை நாம் நிறைவேற்றுவதற்கு யேசு நம்மை வழி நடத்தி செல்வார். மிகவும் பயப்படும்படியான திட்டத்தை கடவுள் நமக்கு கொடுத்தாரானால், அதனை கண்டு நாம் ஒதுங்கி விடாமல், யேசுவை நோக்கி பார்த்து, அவரே வாயிலாக கொண்டு நாம் அந்த இலக்கை அடையவேண்டும்.
மேலும் முழுமையாக அந்த இலக்கை அடையும் வரை, வாயில்லா ஆடாக நாம் யேசுவோடு செல்ல வேண்டும். அந்த பயனத்தின் மறு பக்கத்தை அடைய, இடையில் நாம் பயனம் செய்ய வேண்டியிருக்கிறது. திருடர்கள் நம்மை தாக்க வருவார்களேயானால், நாம் யேசுவோடு இருந்தால், அவர்களை மிகவும் எளிதாக வெல்லலாம். கவலையும், நம்பிக்கையின்மையும், நமக்கு முக்கியமான திருடர்கள் ஆவர். அவைகள் தான், நமது அமைதியையும், திருப்தியையும், சந்தொச்த்தையும், குணப்படுத்தலையும், நம்மிடமிருந்து எடுத்து சென்று விடுகின்றன. ஆனால் அவைகல் எல்லாம் அப்படி ஒன்ரும் சக்தி வாய்ந்தது அல்ல. நாம் பயப்படும் அளவிற்கு ஒன்றும் உண்மையை பேசுவதில்லை. அவைகள் நாம் யேசுவை மறக்க செய்வதற்கு எல்லா வேலைகளையும் செய்கின்றது. அவர் தான் உண்மையான மேய்ப்பன் மற்றும் நல்ல வழிகாட்டி, வெகுமதியுடன் கூடிய வெற்றியை பெற்று தருபவர்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, April 4, 2008
ஏப்ரல் 6 2008 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஏப்ரல் 6 2008 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஈஸ்டர் 3 வது ஞாயிறு
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 24
13 அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வ+ரின் பெயர் எம்மாவு. 14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். 15 இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். 16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. 17 அவர் அவர்களை நோக்கி, ' வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? ' என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள். 18 அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ' எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ! ' என்றார். 19 அதற்கு அவர் அவர்களிடம், ' என்ன நிகழ்ந்தது? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' நாசரேத்து இயேசுவைப் பற்றியே தான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். 20 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். 21 இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. 22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; 23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். 24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை ' என்றார்கள். 25 இயேசு அவர்களை நோக்கி, ' அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! 26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! ' என்றார். 27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். 28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். 29 அவர்கள் அவரிடம், ' எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று ' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். 30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். 31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். 32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ' வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ' என்று பேசிக் கொண்டார்கள். 33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். 34 அங்கிருந்தவர்கள், ' ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார் ' என்று சொன்னார்கள். 35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில் வரும் இரு சீடர்களும், யேசுவை அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. யேசு இறைவாக்கினரின் நூல்களில் உள்ள வசனத்தை சொல்லியதும், பிறகு, அப்பத்தை எடுத்து கடவுளை போற்றி பிட்டு கொடுத்ததும் தான், அவ்விரு சீடர்களின் கண்களும் திறந்தது. இது இரண்டு பகுதிகளாக நடந்த செயல்முறையாகும். முதலில் இறைவாக்கினரின் வசனத்தை கேட்ட பின்பு, அவர்கள் இதயம், யேசுவை அறிந்து கொண்டது, ஆனால், கண்களால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. (அவர்கள் இதயம் பற்றி ஏறிந்தது). இரண்டாவது பகுதி, யேசு அப்பத்தை எடுத்து, கடவுளை போற்றி, அதை பிட்டு கொடுத்தபோது தான் அவர்களின் கண்கள் திறந்து கொண்டது.
இப்போது, நாம் திருப்பலியில் பங்கு கொள்ளும்போது, நாம் யேசுவோடு இதேபோல ஒரு பயணம் செல்கிறோம். முதலில் நாம் இறைவார்த்தை கேட்கும் பகுதியில் செல்கிறோம்.அதன் பிறகு ப்ரசங்கம் நடக்கிறது, அதில் நற்செய்தி விளக்கமளிக்கபடுகிறது. இப்போது, நாம் நமது முழு இதயத்தோடு, நற்செய்தியையும், ப்ரசங்கத்தையும் கேட்க வேண்டும்.
நன்கு பயிற்சி பெற்ற சகோதரர், சகோதரிகள் வாசகத்தை, அதற்குரிய அர்த்தத்துடன், வாசிக்கும்போது, நமது இதயம் யேசுவை அறிந்து கொள்ளமுடியும். நன்கு பயிற்சி பெற்ற பாதிரியாரோ அல்லது டீகண் நமக்கு அந்த நற்செய்தியை பற்றி விளக்கமளிப்பார்கள். ஒருவேளை அவர்கள் நல்ல ப்ரசங்கம் செய்யாவிட்டால் கூட, நமது இதயம் யேசு என்ன சொல்கிறார் என்பதை கேட்க முடியும்.
அதன் பிறகு, நாம் நற்கருணை வழிபாட்டிற்கு செல்கிறோம். திருப்பலியில், குருவானவர், அப்பத்தையும், திராட்சை இரசத்தையும், புனிதமாக்கும்போதும், யேசுவேதான் அதனை செய்கிறார். குருவானவரின் கைகளையும், குரலையும் உபயோகித்து யேசுவே தான் அந்த அப்பத்தையும் இரசத்தையும் புனிதப்படுத்துகிறார். யேசு எப்படி அந்த இரண்டு சீடர்களுக்கும் செய்தாரோ அதையேதான் நமக்காக செய்கிறார்.
நாம் நமது இதயத்தை திருப்பலியின் முதல் பகுதியில் திறந்தோமானால், மேலும் தொடர்ந்து அவரையே நோக்கினால், நாம் அப்பத்தையும், இரசத்தையும் அதற்குரிய சுயமான அர்த்ததை விட , அதை விட மேலே நாம் பார்க்க முடியும். நாம் யேசுவை பார்ப்போம். அவரை நம் இதயத்தில் அறிந்து கொள்வோம். எவ்வித சந்தேகமுமின்றி,உயிர்த்த யேசுவை நாம் நற்கருணையில் காண்போம். அவரை அடைவோம்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
www.gnm.org
ஈஸ்டர் 3 வது ஞாயிறு
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 24
13 அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வ+ரின் பெயர் எம்மாவு. 14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். 15 இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். 16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. 17 அவர் அவர்களை நோக்கி, ' வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? ' என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள். 18 அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ' எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ! ' என்றார். 19 அதற்கு அவர் அவர்களிடம், ' என்ன நிகழ்ந்தது? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' நாசரேத்து இயேசுவைப் பற்றியே தான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். 20 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். 21 இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. 22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; 23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். 24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை ' என்றார்கள். 25 இயேசு அவர்களை நோக்கி, ' அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! 26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! ' என்றார். 27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். 28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். 29 அவர்கள் அவரிடம், ' எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று ' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். 30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். 31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். 32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ' வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ' என்று பேசிக் கொண்டார்கள். 33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். 34 அங்கிருந்தவர்கள், ' ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார் ' என்று சொன்னார்கள். 35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில் வரும் இரு சீடர்களும், யேசுவை அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. யேசு இறைவாக்கினரின் நூல்களில் உள்ள வசனத்தை சொல்லியதும், பிறகு, அப்பத்தை எடுத்து கடவுளை போற்றி பிட்டு கொடுத்ததும் தான், அவ்விரு சீடர்களின் கண்களும் திறந்தது. இது இரண்டு பகுதிகளாக நடந்த செயல்முறையாகும். முதலில் இறைவாக்கினரின் வசனத்தை கேட்ட பின்பு, அவர்கள் இதயம், யேசுவை அறிந்து கொண்டது, ஆனால், கண்களால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. (அவர்கள் இதயம் பற்றி ஏறிந்தது). இரண்டாவது பகுதி, யேசு அப்பத்தை எடுத்து, கடவுளை போற்றி, அதை பிட்டு கொடுத்தபோது தான் அவர்களின் கண்கள் திறந்து கொண்டது.
இப்போது, நாம் திருப்பலியில் பங்கு கொள்ளும்போது, நாம் யேசுவோடு இதேபோல ஒரு பயணம் செல்கிறோம். முதலில் நாம் இறைவார்த்தை கேட்கும் பகுதியில் செல்கிறோம்.அதன் பிறகு ப்ரசங்கம் நடக்கிறது, அதில் நற்செய்தி விளக்கமளிக்கபடுகிறது. இப்போது, நாம் நமது முழு இதயத்தோடு, நற்செய்தியையும், ப்ரசங்கத்தையும் கேட்க வேண்டும்.
நன்கு பயிற்சி பெற்ற சகோதரர், சகோதரிகள் வாசகத்தை, அதற்குரிய அர்த்தத்துடன், வாசிக்கும்போது, நமது இதயம் யேசுவை அறிந்து கொள்ளமுடியும். நன்கு பயிற்சி பெற்ற பாதிரியாரோ அல்லது டீகண் நமக்கு அந்த நற்செய்தியை பற்றி விளக்கமளிப்பார்கள். ஒருவேளை அவர்கள் நல்ல ப்ரசங்கம் செய்யாவிட்டால் கூட, நமது இதயம் யேசு என்ன சொல்கிறார் என்பதை கேட்க முடியும்.
அதன் பிறகு, நாம் நற்கருணை வழிபாட்டிற்கு செல்கிறோம். திருப்பலியில், குருவானவர், அப்பத்தையும், திராட்சை இரசத்தையும், புனிதமாக்கும்போதும், யேசுவேதான் அதனை செய்கிறார். குருவானவரின் கைகளையும், குரலையும் உபயோகித்து யேசுவே தான் அந்த அப்பத்தையும் இரசத்தையும் புனிதப்படுத்துகிறார். யேசு எப்படி அந்த இரண்டு சீடர்களுக்கும் செய்தாரோ அதையேதான் நமக்காக செய்கிறார்.
நாம் நமது இதயத்தை திருப்பலியின் முதல் பகுதியில் திறந்தோமானால், மேலும் தொடர்ந்து அவரையே நோக்கினால், நாம் அப்பத்தையும், இரசத்தையும் அதற்குரிய சுயமான அர்த்ததை விட , அதை விட மேலே நாம் பார்க்க முடியும். நாம் யேசுவை பார்ப்போம். அவரை நம் இதயத்தில் அறிந்து கொள்வோம். எவ்வித சந்தேகமுமின்றி,உயிர்த்த யேசுவை நாம் நற்கருணையில் காண்போம். அவரை அடைவோம்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
www.gnm.org
Subscribe to:
Posts (Atom)