Friday, August 14, 2009

ஆகஸ்டு 16,2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 16,2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 20ம் ஞாயிறு

Prov 9:1-6
Ps 34:2-7
Eph 5:15-20
John 6:51-58

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '

(thanks to www.arulvakku.com)

"வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்" என்று இன்றைய நற்செய்தியில், திவ்ய நற்கருணையின் கட்டளையை , யேசு நமக்கு சொல்வதை நாம் காண்கிறோம். இது எந்த மாதிரியான வாழ்வு? யேசு கொடுக்கும் வாழ்விற்கும், நீங்கள் பிறந்த வளரும் இந்த வாழ்விற்கும் என்ன வேறுபாடு?

யேசு அவருடைய உடலையும் இரத்தத்தையும் ஒவ்வொரு திருப்பலியிலும், நமக்கு கொடுக்கிறார், அதனை முழுதும், நாம் வாங்கிகொள்ளலாம், தெய்வீகமாகவும், மனிதனாகவும் நாம் பெறலாம். அவரது அன்பினால், நாம் முழு ஊட்டமுடன் நனைய விரும்புகிறார். அவருடைய ஆற்றலை பெற்று , நமது சோதனையில் தாண்டி வர அந்த ஆற்றல் உதவும். நம் காயங்களை குணப்படுத்த அந்த ஆற்றல் உதவும். மேலும் அவரது வாழ்வு, மோட்சத்திலும் மட்டுமல்ல , இந்த பூமி வாழ்விலும், நமக்கு கிடைக்கின்றது.

யேசுவை நாம் வாங்குவது, அவரை போல நாம் மாற வேண்டும். திவ்ய நற்கருணையில், உண்மையாக யேசுவின் உடலும், இரத்தமும் தான் என்று நாம் நம்பினால், திருப்பலிக்கு பிறகு ஏன் நாம் மாறி வருவதில்லை?

திருப்பலியின் முதலில் நடைபெறும் பாவமன்னிப்பில் முழுமையாக, ஆர்வத்தோடு பங்கேற்று, கவனமாக எல்லா நற்செய்தி வாசகங்களையும் கேட்டு, குருவோடு எல்லா ஜெபங்களையும் சொல்லி, கடவுளின் ஆற்றல் மேல் நம்பிக்கை கொண்டு, "ஆண்டவரே நான் உன்னை பெற தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆண்மா குணமடையும்" என்று சொல்லி, அவரது உடலை வாங்கினால், அவரது உடலோடும், இரத்ததோடும் ஒன்றாவோம்.

இப்போது, நாமும் அவரின் உடலாகவும், இரத்தமாகவும், இந்த பூமியில் உள்ளோம், அதன் அர்த்தம் என்னவெனில், யேசுவின் பிரசன்னமாக இந்த உலகத்தில் இருக்கிறோம். மற்றவர்கள் நம்மை பெற்று கொள்ள அனுமதிக்க வேண்டும், அல்லது வேறு விதமாக சொல்வதனால், யேசுவின் ஆற்றல், மற்றவர்களுக்கும் கிடைக்க நாம் உதவியாக இருக்க வேண்டும்.

நாம் மற்றவர்கள் மேல் அன்பாக இருக்கும் போது, கடவுளின் அன்பை அவர்கள் பெறுகிறார்கள் , அவர்கள் அந்த அன்பை திரும்பி கொடுக்காவிடில், நமது அன்பை, நம்மை முழுதுமாக அவர்கள் பெற்றுகொள்கிறார்கள். நாம் பெறுவதை விட அதிகமாக கொடுக்கிறோம்.அதே போல, கடவுளரசிற்காக, நமது நேரத்தையும், திறமையையும் கொடுத்தோமானால், நாம் திவ்ய நன்மையாகிறோம். யேசுவின் உடலோடும், இரத்தத்தோடும், ஒன்றாகிறோம்.
மற்றவர்கள், நமக்கு கொடுக்க வேண்டியதை, கொடுக்காத போது, நாம் அழியாமல், முழுமையாக மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டுமானால், நாம் யேசுவிடமிருந்து அவர் ஆற்றலையும் , அனைத்தையும் வாங்கியிருக்க வேண்டும். அதனால் தான், ஒவ்வொரு திருப்பலியிலும், திவ்ய நற்கருணை வழிபாட்டில் ஈடுபட்டு, அவரின் ஊட்டசத்துகளை நாம் பெற வேண்டும். அது தான், நமது வாழ்விற்கு தேவையான சக்தியாக இருக்கிறது.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

(thanks to www.azhagi.com)

Friday, August 7, 2009

ஆகஸ்டு 9 , 2009 ஞாயிறு நற்செய்தி & மறையுரை

ஆகஸ்டு 9 , 2009 ஞாயிறு நற்செய்தி & மறையுரை
ஆண்டின் 19வது ஞாயிறு

1 Kings 19:4-8
Ps 34:2-9
Eph 4:30--5:2
John 6:41-51


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
41 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே ' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.42 ' இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ″ நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன் ″ என இவர் எப்படி சொல்லலாம்? ' என்று பேசிக்கொண்டார்கள்.43 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: ' உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம்.44 என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.45 ″ கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார் ″ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்.46 கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.47 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். '


(thanks to www.arulvakku.com)


"என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே" நித்திய வாழ்வை நம்புவோர் அனைவருக்கும் நானே உயிர் தரும் உணவு " என்று இன்றைய நற்செய்தியில் யேசு கூறுகிறார்.
திவ்ய நற்கருணையை ஏன் "வாழ்வு தரும் உணவு" என்று கூறினார். ?
இதற்கு பதிலாக அவரே "' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' " என்று கூறுகிறார். இதையே வேறு விதமாக சொல்வதானால், அவரது வாழ்வை நமக்காக கொடுத்தார் - சிலுவையில் - . நமது பாவங்கள் நம்மை இறப்பின் பாதைக்கு நம்மை அழைத்து சென்றது, ஆனால், யேசு எந்த பாவமும் இல்லாதவர், முழு இறைவன் , நமக்காக அவர் இறந்த்தார். அதனால், நாம் நித்திய வாழ்வை அடைய முடியும்.

உயிர்த்தெழுந்த அவரின் உடல், மரணத்தை வென்றது. அதனால், அவரது உடல், சிலுவையில் அறையப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்த்தது, நமது வாழ்விற்கு உணவாக கிடைக்கிறது. இதனை தான் நாம் திருப்பலியில் கொண்டாடுகிறோம். அவரது மரணத்தை நாம் திருப்பலியில் மீண்டும் காட்சியாக கொண்டு வருவதில்லை, மாறாக, அவரது வாழ்வோடு நம்மை இணைத்து கொள்கிறோம்.

"திருப்பலி பீடத்தில் நடக்கும் தியாக" செயல்கள், நாம் கிறிஸ்துவின் முழுமையோடு , அவரின் வாழ்வோடு, அவரது நற்செயல்களோடு, அவரது சிலுவை துன்பங்களுடன், உயிர்த்தெழுதலிலும், மேலும், மோட்சத்திற்கு எழுந்தருளியதோடும், நாம் பங்கு கொள்கிறோம். நமது வாழ்வை அவருக்கு அர்ப்பணித்து, அவரோடு நாம் இணைகிறோம், அதன் மூலம், நாம் இந்த உலகிற்கு அவரின் இறைசேவையை தொடர முடியும். நமது விருப்பங்களை தியாகம் செய்து , அவரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும். இது நம்மை கிறிஸ்துவின் பின் சென்று, மோட்சத்திற்கு அழைத்து செல்லும்.
ஒவ்வொரு திருப்பலியிலும் யேசுவின் உடலையும் அவரது இரத்தத்தையும் நமக்கு அருளப்பட்டு, நமது வாழ்விற்கு தேவையான உணவு வழங்க்கப்படுகிறது. எப்பொழுதுமே சாப்பிடத்தகுந்த உணவை பெறுகிறூம். போப் ஜான் பால் குறிப்பிட்டுள்ளதை நாம் நினைவு கூறலாம், இரண்டாம் வாத்திகான் சங்கம் திவிய நற்கருணை தான், கிறிஸ்துவ வாழ்விற்கு ஊற்றாகவும் , ஆதாரமாகவும் உள்ளது என்று கூறுகிறது.


கிறிஸ்துவின் கடைசி இரா உணவிலிருந்து , நமக்கு திவ்ய நற்கருணை தொடர்ந்த்து கிடைத்து வருகிறது. முதல் அப்போஸ்தலர்களிலிருந்து தொடங்கிய திருப்பனி , இன்றும் குருவானவர்கள் மூலம் தொடர்ந்த்து நடைபெற்று வருகிறது. நாம் அனைவரும், இந்த திருப்பலியில் பங்கு கொள்ளும்பொழுது, கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை நாம் கொண்டாட வேண்டும். அந்த திவ்ய நன்மையை பெற உள்ள தடைகளை தூர எறிந்து அவரை பெற வேண்டும்.

அப்போஸ்தலர்களுடன் எப்படி யேசு இரா உணவின் போது இருந்தாரோ, அப்படியே உண்மையாக ஒவ்வொரு திருப்பலியிலும் இருக்கிறார், அங்கே கூறியது போல, "இது என் உடல், என் இரத்தம்" என்று கூறுகிறார். பக்தியுடன், மரியாதையுடனும், அன்புடனும் திவ்ய நற்கருனையில் யேசுவை வழிபட்டால், அவர் தான் நம் மீட்பர் என்று நம்பி அவரை பெற்றால், அது தான், நமது நித்திய வாழ்வின் ஊற்றாகவும், தொடக்கமாகவும் இருக்கும்.


http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm


special thanks to WWW.azhagi.com (tamil editor)

Friday, July 31, 2009

ஆகஸ்டு 2, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 2, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 18வது ஞாயிறு


Ex 16:2-4, 12-15
Ps 78:3-4, 23-25, 54
Eph 4:17, 20-24
John 6:24-35


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர்.25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ' ரபி, எப்போது இங்கு வந்தீர்? ' என்ற கேட்டார்கள்.26 இயேசு மறுமொழியாக, ' நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார் ' என்றார்.28 அவர்கள் அவரை நோக்கி, ' எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார்கள்.29 இயேசு அவர்களைப் பார்த்து, ' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் ' என்றார்.30 அவர்கள், ' நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ' என்றனர்.32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார்.34 அவர்கள், ' ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் ' என்று கேட்டுக்கொண்டார்கள்.35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு "அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்" என்று கூறுகிறார். இதையே வேறு விதமாக சொல்வதாக இருந்தால்: உங்களுடைய ஒவ்வொரு தினத்திலும், உங்கள் ஆன்மாவை நல்ல விதமாக பாதுகாத்து, உங்கள் மரண முடிந்து நித்திய வாழ்வை அடையும் வரை அதை பாதுகாத்து செல்ல கடுமையாக உழையுங்கள்.
யேசு "கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் " என்று கூறுகிறார். ஏன் யேசு அதனை "செயல்" என கூறுகிறார்?
முழுமையாக அவரை நம்புவதற்கு, யேசுவின் மேல் உள்ள சந்தேகங்கள் மற்றும் அவநம்பிக்கைகள் நம்மிடம் அப்பப்பொழுது இடையே தோன்றி, நம்மை அவர் மேல் அவநம்பிக்கை உன்டாக்கும், அதனையெல்லாம், முழுவதுமாக துடைத்தெறிய வேண்டும். அவர் கூறிய வார்த்தை மேல் நம்பிக்கை கொன்டு (திருச்சபையின் போதனைகளைய்ம் சேர்த்து) , கிறிஸ்துவின் வழியில் நாம் செல்ல நமது முழு விருப்பத்தையும் உறுதி படுத்த வேண்டும்.

சந்தேகத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்த கூடிய தடைகளை நாம் கண்டறிய வேண்டும் , அதனால் ஏற்படும் பயத்தை போக்கி, உண்மையை இன்னும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு பயமும், நமது பரிசுத்த வாழ்வில் இடையூறாக இருந்தால், அது பொய்யினால் பிறந்த பயமாகும்.
இயேசு அவர்களிடம், ' வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார். கிறிஸ்து, ஒவ்வொரு திருப்பலியிலும் அவரே உணவாக நமக்கு கொடுப்பதை இங்கே நமக்கு தெரியப்படுத்துகிறார். திவ்ய நற்கருணையால் உங்களை எப்படி இன்னும் நன்றாக வளர்க்க இன்னும் என்ன என்ன செயல்கள் நீங்கள் செய்ய வேண்டும்.? யேசு தான் திவ்ய நற்கருணையில் இருக்கிறார், உங்களுக்காக காத்திருக்கிறார் என்பதை நம்ப வேறு எதுவும் தடையாக உள்ளதா ?

திவ்ய நற்கருணையை பெறுவதற்கு எதுவும் உங்களை தடுத்து நிறுத்துகிறதா? அந்த தடுப்பிற்கு உடனே பரிகாரம் செய்யுங்கள். உங்கள் நித்திய ஆன்மாவிற்கு நிச்சயம் ஒரு வேறுபாட்டை உணர்வீர்கள். யேசுவோடு இனைவதற்கு உண்மையாக நீங்கள் ஆக்கபூர்வமாக உங்கள் செயல்களை காட்டினால், யேசூ உங்களுக்குள்ள வழியை சீராக்குவார்.



© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 24, 2009

ஜூலை 26, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 26, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 17வது ஞாயிறு

2 Kings 4:42-44
Ps 145:10-11, 15-18
Eph 4:1-6
John 6:1-15
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
1 இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு.2 உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.3 இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார்.4 யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.5 இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ' இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? ' என்று பிலிப்பிடம் கேட்டார்.6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.7 பிலிப்பு மறுமொழியாக, ' இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே ' என்றார்.8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,9 ' இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்? ' என்றார்.10 இயேசு, ' மக்களை அமரச் செய்யுங்கள் ' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.12 அவர்கள் வயிறார உண்டபின், ' ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள் ' என்று தம் சீடரிடம் கூறினார்.13 மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.14 இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ' உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே ' என்றார்கள்.15 அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

(thanks www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் நடந்தது எவையும், தெய்வீகமானது இல்லை என்று பலர் கூற நானே கேள்விபட்டிருக்கிறேன், அது என்னவெனில், "உண்மையான அற்புதம் என்னவென்றால், யேசு, எல்லாரும் கொண்டு வந்த உணவை, ஒன்றாக உட்காரவைத்து, அவர்களை பகிர்ந்து உண்ண வைத்தார் " என்று கூறுவது உண்டு. அதோடு,"அவர்கள் கொண்டு வந்த உணவு எல்லோருக்கும் பத்தவில்லை என்றும், எல்லோரு அதனை பகிர்ந்து கொள்ளவும், மக்கள் அவரவர்கள் தியாகம் செய்து தங்கள் உணவை மற்றவர்களுக்கு கொடுத்தனர். அதனால் தான், நிறைய உணவு மிஞ்சியது" என்று கூறுபவர்களும் உண்டு.

இது மிக சரியாகத்தான் இருக்குமோ?! கடவுளால் உணவை பல மடங்காக பெருக்க முடியாதது போல.

ரொட்டி துண்டுகளையும், மீன்களையும் பல மடங்காக ஆக்கியதற்காக எல்லோரும் திருப்தி அடைந்துவிடவில்லை, அவர்களுக்கு என்ன தேவையாக இருந்தது என்றால், திவ்ய நற்கருணை விருந்தை முன் கூட்டியே ஒத்திகை பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். திருப்பலியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நன்றாக கவனித்து, அதனை நம் இதயத்தில் ஏற்றுகொண்டால், யேசு நமது பசியை போக்குவார், மேலும், நமக்கு தேவையானதைவிட அதிகமாகவே கொடுப்பார். கோவிலுக்கு செல்வதற்கு முன்பே, உங்களுக்கு என்ன தேவையாக இருக்கிறது? அதனை அதிகமாகவே கொடுக்க முயற்சி செய்கிறார்.


யேசு அற்புதமாக , பல மடங்காக கொடுக்கும் அனைத்தையும் நாம் பெற, நாம் அவரை விசுவசிக்க வேண்டும். எதிர்பாராததை எதிர்பார்க்க வேண்டும். அவர் தேர்ந்தெடுக்கும் சரியான நேரத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும். ஆனால் நிச்சயமாக, நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே அவர் கொடுக்க விரும்புகிறார் என்பது நிச்சயம்.

அந்த மலையில் இருந்த சிலருக்கு, மீனை விட ஸிடீக்கை விரும்பியிருக்கலாம், ஆனால், அவர்கள் பெற்றது என்ன என்றால் அவர்களுடைய இதயத்தை, முழு விசுவாசத்தாலும், பரிசுத்த ஆவியில் அவர்கள் வளர தேவையானவற்றை கொடுக்கும் மெசியாவை பெற்றார்கள். அவர்களுடைய சோதனையில் இன்னும் சக்தியுடன் அதனை ஏற்று கொள்ள ஆற்றல் பெற்றார்கள். மேலும், கிறிஸ்துவை இன்னும் பலருக்கு வெளிப்படுத்த செல்லும்போது, அவர்களின் அன்பை பகிர்ந்து கொள்ளும் அன்பை பெற்றார்கள்.

நமது திவ்ய நற்கருணை சடங்குகளில், சின்ன நன்மையும், திராட்சை இரசத்தையும் விட, நாம் பெறுவதற்கு அதிகமான் பொருட்கள், விசயங்கள், அன்பளிப்புகள் உள்ளது. , யேசுவிடமிருந்து உங்களுக்கு என்ன தேவை? அதிக விசுவாசம்? அதிக நம்பிக்கை? அதிக அன்பு? நீங்கள் திருப்பலிக்கு செல்லும்போது உங்களுக்கு என்ன தேவை என்று யோசித்து செல்லுங்கள், அப்போது, திருப்பலியில் அதனை எதிர்பார்த்து முழுவதுமாக நாம் பங்கு கொள்ளலாம்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 17, 2009

ஜுலை 19, 2009 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஜுலை 19, 2009 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 16வது ஞாயிறு

Jer 23:1-6
Ps 23:1-6
Eph 2:13-18
Mark 6:30-34

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 6
30 திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.31 அவர் அவர்களிடம், ' நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் ' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.32 அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.33 அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.34 அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

(thanks to www.arulvakku.com)

இறைசேவையில் உள்ள ஒவ்வொருவரும், அவர்கள் அழைப்பினால், பல நேரங்களில், களைப்படைந்து விடுகின்றனர். எல்லா நேரங்களும், அவர்களின் சேவையை தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. அது குழந்தைகளின் பராமரிப்பாக இருக்கட்டும், வயதானவர்களை பராமரிப்பதாக இருக்கட்டும், நோயுற்ற கணவனோ அல்லது மனைவியை பார்த்து கொள்வதாகட்டும், அல்லது, கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்தும் இறைசேவையாக இருக்கட்டும், அல்லது கோவிலில் ஒரு பொருப்பாளராக இருப்பது, அல்லது குருவாக இருப்பது, இப்படி எந்த சேவையில் இருந்தாலும், ஒவ்வொருவரும், அவர்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி கொள்வது , ஓய்வெடுப்பது முக்கியம். விடுமுறை, அல்லது வெளியிடங்களுக்கு செல்வது என்று இருக்க வேன்டும். அது தான் நீங்கள் இழந்த ஆற்றலை, சக்தியை மீன்டும் பெற்று கொடுக்கும். என்று யேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்.
இந்த கட்டளையை நாம் ஒழுங்காக கடைபிடிக்காவிட்டால், நாம் ஒரு தனி மனிதனாக, எல்லோரையும் போல் இல்லாமல் ஆகிவிடுவோம். நமது சுய ஆசைகளுக்காகவும், சரியானபடியும் இல்லாமல் முடிவெடுப்பவர் ஆகிவிடுவோம். முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல தவறான செயல்களை செய்யும், ஆயனாக இருப்போம். இறைசேவைக்கு அழைக்கப்பட்டவர்களை, தவறான வழியில் வழி நடத்தி சென்று பல பிரிவாக அவர்கள் ப்ரிய காரணமாயிருப்போம்.
தொடர்ந்து சேவை செய்யும்போது, நாம் கிறிஸ்துவை போல இல்லாமால், இருப்பதற்கு காரணம், நாம் நம்மிடம் இல்லாததை கொடுக்க முடிவதில்லை.கடவுளின் அன்பை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த, நிறைய சகதி தேவைபடுகிறது. இறையரசிற்கு உற்சாகமாக சேவை செய்வதற்கு நமக்கு நிறைய ஆற்றல் தேவைபடுகிறது. ஆனால், மீன்டும் , நாம் இழந்த ஆற்றலை திரும்ப பெற, ஓய்வெடுத்து, யேசுவிடம் வேண்டி ஜெபம் செய்தால் தான், மீண்டும் நாம் உற்சாகத்துடனும், ஆற்றலுடனும், இறையரசை வெளிப்படுத்த முடியும்.
நாம் நம் மேல் அக்கறை கொள்ளாமல், நம்மை ஒழுங்காக வைத்து கொள்ளாமல், மற்றவர்கள் மேல் எப்படி அக்கறை கொள்ள முடியும்? யேசு நம்மில் வாழ்கிறார். ஆனால், அவர் நம்மை மாற்ற நாம் அனுமதித்தால் தான், அவரை நாம் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்.

ஒவ்வொரு நாளும், நாம் ஆயனில்லா ஆடுகள் போல் உள்ள மனிதர்களை சந்திக்கிறோம்.அவர்கள் யேசுவை தேடுகின்றனார்,அவர்கள் அதனை புரிந்து கொள்ளாமலேயே. அவர்களுக்கு நிபந்தனையற்ற அன்பு தேவைபடுகிறது. யேசுவிடமிருந்து, குணப்படுத்தலையும், அமைதியும் வரவேன்டும் என ஆசைபடுகின்றனர். யேசு அவர்கள் மேல் இரக்கப்படுகிறார் மேலும் அவர்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கின்றார். ஆனால், நாம் யேசுவின் கைகளாகவும், கால்களாகவும் , அவரின் குரலாகவும் இருக்க வேண்டிய நாம், கடினமான வேலைகளால், சோர்வுற்று இருந்தால், பிறகு எப்படி சேவை செய்ய போகிறோம்.?

நமது காயங்கள் கொஞ்சமாக குணப்படுத்தப்பட்டால், மேலும், கிறிஸ்துவின் அமைதியை நாம் பெறாமலும், மற்றவர்களை குனப்படுத்தும், ஆயனாக, அவர்களுக்கு அமைதியை கொடுக்கும் கிறிஸ்துவின் கருவியாக இருக்க முடியும்?

நாம், தனியான இடத்திற்கு சென்று யேசுவின் ப்ரசன்னத்துடன், நாம் ஓய்வெடுத்தால் , அவரின் சக்தியூட்டும் அன்போடு திளைத்திருந்து ஓய்வெடுக்க வேன்டும். நாம் தியானத்திற்கோ, அல்லது விடுமுறைக்கோ சென்று விட்டு வந்து, நமது சேவையை தொடரும்போது, மக்கள் நம்மை இன்னும் சாதாரனமாக பார்க்க வில்லை என்றால், நாம் இன்னும் அதிகம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அர்த்தம். நம்மை மீன்டும் புதுப்பிக்கிம், ஆற்றல் பெறும் நேரத்தை குறைத்து விட்டொம். அதிக வேலை சுமையை பற்றி கவலை படாதீர்கள். யேசு நம்மை அழைக்கிறார், "நீங்கள் கொஞசம் என்னோடு ஓய்வெடுங்கள், என்னை போல மாறுவது வரை என்னோடு இருங்கள்" என்று கூறுகிறார்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 10, 2009

ஜூலை 12, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 12, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15வது ஞாயிறு

Amos 7:12-15
Ps 85:9-14
Eph 1:3-14
Mark 6:7-13

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 6
7 அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.8 மேலும், ' பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்.9 ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் ' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.10 மேலும் அவர், ' நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள்.11 உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் ' என்று அவர்களுக்குக் கூறினார்;12 அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;13 பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு விசுவாசத்தை பற்றி நமக்கு போதிக்கிறார். கடவுளின் அன்பின் கருவியாக இவ்வுலகில் நாம் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்த அழைப்பிற்கு நாம் முழு முயற்சி எடுத்து, அதனை நிறைவேற்ற வேண்டுமானால், கடவுளின் நற்செய்தியை அறிவிப்பவராக நாம் இருக்க வேண்டுமானால், நாம் கடவுளை நம்ப வேண்டும், மேலும் அவர் நமக்கு கொடுத்த ஞானத்தையும்,பல ஆற்றல்களையும் நாம் நம்ப வேண்டும்.


மேலும், நமக்கு என்ன தேவையோ அதனை எல்லாம், கடவுள் எப்பொழுதுமே கொடுத்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் நம்ப வேண்டும். அவர் கொடுப்பதெல்லாம் நமக்கு போதுமானதாக இல்லாதது போலவே நமக்கு தோன்றுகிறது. ஆனால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அவர் கொடுப்பதெல்லாம், நம்முடைய சுய ஆசைகளுக்காக அதிகம் அவரிடம் எதிர்பார்க்க கூடாது.

இந்த அழைப்பு ஒவ்வொரு திருப்பலியின் முடிவில் மீன்டும் மீன்டும் புதுப்பிக்கபடுகிறது. யேசுவுடன் நமக்கு உள்ள தொடர்பானது, கடவுளின் வார்த்தையாலும், திவ்ய நற்கருணையிலும், கோவில் குழுக்களோடும் சேர்ந்து , மீன்டும் புதுப்பிக்கப்படுகிறோம். அவர் நம்மோடு இருப்பது, நமக்கு அதிக ஆற்றல் தந்து, வெளியே சென்று நம்ம என்ன செய்ய சொல்கிறாரோ, அதனை செய்ய முடியும். குருக்களின் மூலம், யேசு, நம்மை இந்த உலகிற்கு அனுப்புவது, யேசு நம்முடனே இருக்கிறார், நம் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு கானத்தகுந்த சாட்சியாகும். திவிய நற்கருணையின் மூலமும், திருப்பலியில் கடைசியில் கொடுக்கப்படும் ஆசிர்வாதத்தின் மூலம், யேசு நமக்கு அதிகாரம் கொடுத்து, கடவுளின் நற்செய்தியை நாம் சந்திக்கும் அனைவரிடமும் அறிவிக்க ஆனையிடுகிறார். அதனால், நாமெல்லாம், மனமாற்றம் செய்பவர்களாக , இந்த உலகத்தில் ஒரு வித்தியாசத்தை கொண்டுவருபவர்களாக இருக்க வேண்டும்.

ஆம் , நாம் எல்லாருமே - திவ்ய நற்கருணை கொண்டாட்டத்தில் பங்கு கொண்டு, முழுமையாக ஒவ்வொரு செபத்தையும், புரிந்து விழிப்புணர்வுடன், அந்த இறையேசுவை வாங்கும் அனைவரும், ஆண்டவரின் அழைப்பிற்கு உள்ளாகிறோம். அதனால், நம்பிக்கையுடன் செல்லுங்கள், யேசு உங்களை கோவிலிலுருந்து வெளியே சென்று பரிசுத்த ஆவியுடன் துனையுடன் அவரது இறையரசை பரப்ப செய்கிறார்.


எனினும், நாம் நமது பைகளை கட்டும்பொழுது, நமது இறைசேவக்காக என்ன எடுத்து செல்ல வேண்டுமோ , அதனை விட அதிகமாக எடுக்கிறோம். இதன் மூலம் கடவுள் நம்பிக்கையை நாம் வெளியே சொல்ல முடிவதில்லை. அதில் தோற்றுவிடுகிறோம்.

ஆக்கப்பூர்வமான மணமாற்றம் செய்ய கூடிய மத போதகராக இருக்க வேண்டுமானால், நாம் கடவுளிடம் நம் சுய ஆசைகளை துறந்கு அதனை ஆண்டவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த சமர்ப்பிப்பு, இனிமேலும், நமது சேவையில் இடர் கொடுக்காமல் இருக்க வேண்டுவோம். அப்போதுதான், அது உண்மையான அர்ப்பணிப்பாகும். இனிமேலும், அதனை நாடாமல் இருக்க வேண்டும். அதுவே உண்மையான சரனடைதல் ஆகும். இன்னும், நாம் அவைகள் மேல் சின்ன ஆசையுடன் இருந்தால், ஒரு கயிறால் கட்டப்பட்டு, நாம் இன்னும் அதன் மேல் இழுக்கப்படுவதற்கு ஒப்பாகும். நம் வாழ்வின் உண்மையான நோக்கத்திலிருந்து வெளியே இருக்கிறோம்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 3, 2009

ஜூலை 5, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 5, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 14வது ஞாயிறு
Ezek 2:2-5
Ps 123:1-4
2 Cor 12:7-10
Mark 6:1-6


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 6
1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.2 ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ' இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.4 இயேசு அவர்களிடம், ' சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் ' என்றார்.5 அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.6 அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில் சொல்வது போல, நமக்கு முன்பே தெரிந்தவர்களிடம், நமது விசுவாசத்தை பகிர்ந்து கொண்டால், நாம் இன்னும் அதிக விசுவாசம் கொள்வோம் , ஆனால் , அவர்களிடம் நாம் பகிர்ந்து கொண்ட பிறகு, நமக்கு அது ஒரு திருப்தியற்ற அனுபவம் ஆகவே இருக்கும்.
யேசுவை போல, நாம் நிராகரிக்கபடுகிறோம், தவறாக புரிந்து கொள்ளப்படுகிறோம், நம்பிக்கையின்மையுடன், நாம் ஏன் மாறினோம் என்று அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நம்மை முன்மாதிரியாக எடுத்து கொள்ள அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்களின் சொந்த தேவைகளுக்காக அவர்கள் மாற வேண்டும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. நாம் அளவு கடந்த சமய வெறி பற்றோடு இருப்பது போல் அவர்களுக்கு தெரியும். இதனையே அவர்கள் சாக்காக எடுத்து கொண்டு, நமது சாட்சியை ஒதுக்கி வாழ முற்படுகிறார்கள்.


யேசு கிறிஸ்து, சாதாரன வாழ்வை விட்டு, சாதாரன நகரிலிருந்து மாறி, அவர் மக்கள் சேவையை ஆரம்பித்த பொழுது, அவருக்கு கொடுமை செய்ய பலர் தூன்டுவர் என தெரிந்திருந்தும், அனைவரும், அவரை போல வாழ வேண்டும், அவர் பின் செல்ல வேன்டும் என விரும்பினார். இது எப்படி பைத்திய தனமாக இருக்கிறது?

இன்னும் நிலைமையை மோசமாக்க, யேசுவுடைய எல்லா நேரங்களையும் செலவிட்டு, ஒவ்வொருத்தரின் சாதாரண வாழ்வையு, மற்றவர்களோடு சாதாரனமாக மற்றவர்களோடு தொடர்பில் இருப்பதையும் , அவர்களின் சாதாரன குணத்தையும், மாற்ற வேண்டும் என உழைக்கிறார், மேலும் அவர் பின செல்லாதவர்களும், அவரை போல மாறவேன்டாம் என விரும்புகிறவர்கள், அவரவரின் சாதாரன வாழ்வை விட்டு மாற வேண்டும் என விரும்புகிறார்.

மனிதர்கள் சவால்களுக்கு இடம் கொடுக்க விரும்புவதில்லை. மேலும், தற்போது எப்படி இருக்கிறார்களோ, அப்படியே இருக்க விரும்புகிறார்கள், அவர்களுக்கு தெரிந்த இடம், பழகிய முகங்கள், தெரிந்த வாழ்வு, அப்படியே இருக்க விரும்புகிறார்கள். எனினும், இந்த காரனங்களுக்காக் நாம் அமைதியாக இருந்து விட கூடாது. கிறிஸ்துவின் நற்செய்தியை உலகிறிகு அறிவிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். மணமாற்றம், மிக முக்கியமானது என்பதனை அனைவருக்கும் தெரியப்படுத்த வேன்டும். அப்படிய் செய்ய வில்லை என்றால், நாம் கிறிஸ்துவிற்கு எதிராக பாவம் செய்கிறோம். மேலும், யேசுவை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு எதிராகவும் பாவம் செய்கிறோம்.
இந்த இறைசேவையை நாம், நம்முடைய சொந்த மாற்றத்தையும், நம் ஆன்ம வழிகாட்டுதலையும் கொண்டு அவர்களுக்கு சொல்லி நாம் தொடரவேண்டும். இந்த சேவை அவர்கள் விரும்பி கேட்டு, நாம் செய்வது உகந்தது. அவர்களை கட்டாயப்படுத்தி மாற்ற கூடாது.

நீங்கள் நிராகரிக்கபட்டால், , யேசு உங்களை புரிந்து கொள்வார், உங்கள் துயர எண்ணங்கள் அவருக்கு புரியும். இந்த நிராகரிப்பு எல்லாம், கடவுள் உங்களால் சந்தோசமடைந்துள்ளார் என்று நினைத்தாலே நம் துயரமெல்லாம் பரந்து போகும்.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm