Friday, October 16, 2009

18 அக்டோபர் 2009 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Is 53:10-11
Ps 33:4-5, 18-20, 22
Heb 4:14-16
Mark 10:35-45
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
35 செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், ' போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம் ' என்றார்கள்.36 அவர் அவர்களிடம், ' நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ' என்று கேட்டார்.37 அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் ' என்று வேண்டினர்.38 இயேசுவோ அவர்களிடம், ' நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா? ' என்று கேட்டார்.39 அவர்கள் அவரிடம், ' இயலும் ' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ' நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்.40 ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும் ' என்று கூறினார்.41 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.42 இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், ' பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.43 ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.45 ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்' என்று கூறினார்.


(thanks to www.arulvakku.com)

இறையரசில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். என்று யேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். இறையரசின் நண்மைக்காக, நாம் மற்றவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்.

நம்முடைய சுய விருப்பங்கள், நம் கனவுகள், நமது தேவைகள் எல்லாம் ஒதுக்கிவிட வேண்டும் என்று அர்த்தமில்லை. கடவுளின் தொண்டனாக இருப்பது ஒன்றும் அவரின் அடிமை என்று அர்த்தமில்லை. இது ஒரு மிகப்பெரும் மரியாதை மற்றும் ஆசிர்வாதம் ஆகும். ஏனெனில், கிறிஸ்து செய்த மீட்பின் பணியாளராக நாம் யேசுவோடு சேருகிறோம்.


கிறிஸ்துவை போல நாமும் கடவுளின் பணியாளராக இருப்பதினால், கடவுள் எப்படி கிறிஸ்துவை நடத்தினாரோ, அதே போல நம்மையும் நடத்துகிறார். நமது கடவுள் நம்மை மரியாதை குறைவாக நடத்த மாட்டார், நமக்காக அதிகம் வேலையும் அல்லது அதிகமாக நமக்கு எதையும் தரப்போவதுமில்லை.

இதற்கு மாற்றாக, நாம் இந்த உலக வாழ்வில், இங்கு உள்ள சொத்துகள், செல்வங்கள் மேல் அதிகம் ஆசை கொண்டு, அதற்கு அடிமையாக இருப்பது ஆகும். இந்த உலகத்தில் அடிமையாக இருப்பது, நம்மை சின்னவனாக காமிக்க போவதில்லை, ஆனால், கடவுள் எப்படி நம்மை அதிக மதிப்புடன் படைத்தாரோ, அதிலிருந்து நாம் குறைந்து விடுகிறோம்.


கிறிஸ்து நமக்கு கொடுக்கும் அதிகாரம், கிறிஸ்துவிற்கு உள்ளது போலவே நமக்கும் கொடுத்திருக்கிறார்: இறையரசின் எல்லா பலன் அனைத்தையும் நாமும் அனுபவிக்கலாம், பரிசுத்த வாழ்வை நமது விருப்பத்துடன் வாழலாம், அதனால் கடவுளின் பார்வையில் மிக பெரியவர்களாக, அவரின் அன்பானவராக இருப்போம்.

இந்த சுதந்திரத்தில், மிக பெரிய சந்தோசம் உள்ளது. எனினும், கிறிஸ்துவின் வழி ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. சில நேரங்களில் நம்மை சிலுவைக்கு அழைத்து செல்லும், ஆனால் இந்த துயரங்கள் நமது பரிசுத்த வாழ்வை இன்னும் அதிகரிக்கும், மேலும் மோட்சத்தில் இன்னும் பெரியவனாக ஆவோம். நமது தியாகங்கள் , மற்றவர்களுக்கு பலனளிப்பதாக இருக்கும் என்று அறிந்து, அந்த தியாகத்தினால் நமது பரிசுத்த வாழ்வு வளர்கிறது என்றும் நாம் அறிந்தால், அந்த துயரங்களை நாம் தாங்கி கொள்ள இயலும். அது தான் நமக்கு ஆசிர்வாதம் ஆகும்.

சிலருடைய ஜெபங்கள், வேண்டுதல்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போனவர்களை உங்களுக்கு தெரியுமா? கடவுள் நம் மேல் அக்கறை கொள்ளவில்லை என்று அர்த்தமில்லை. அவரால் நமக்கு உதவ முடியாது என்று அர்த்தமில்லை. நம்மை அவரின் பணியாளராக கொண்டு, அவர்களுக்கு உதவி செய்கிறார். யேசு நம் மூலம், பலருக்கு உதவுகிறார்.

நம் முதல் இலக்கு கடவுளோடு உள்ள உறவாகும், அதன் மூலம், அளப்பதற்கரிய பல அன்பளிப்புகளை, நாம் வாங்கி மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு, அவர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். நம்மிடம் இல்லாததை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது. யேசு நமக்கு பணியாளராய் இல்லையென்றால், நாம் கிறிஸ்துவின் ப்ரசன்னமாய் இருந்து , மற்றவர்களுக்கு நாம் உதவ முடியாது.


(thanks to www.azhagi.com)
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, October 10, 2009

11 அக்டோபர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை

11 அக்டோபர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 28வது ஞாயிறு

Wis 7:7-11
Ps 90:12-17
Heb 4:12-13
Mark 10:17-30


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ' நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று அவரைக் கேட்டார்.18 அதற்கு இயேசு அவரிடம், ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.19 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ″ கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட ″ ' என்றார்.20 அவர் இயேசுவிடம், ' போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் ' என்று கூறினார்.21 அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ' உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் ' என்று அவரிடம் கூறினார்.22 இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.23 இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ' செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம் ' என்றார்.24 சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ' பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.25 அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது ' என்றார்.26 சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், \' பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்? \' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 27 இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, \' மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் \' என்றார். 28 அப்போது பேதுரு அவரிடம், \'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே\' என்று சொன்னார். 29 அதற்கு இயேசு, ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் 30 இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு அந்த பணக்கார வாலிபனை கேட்கிறார். "' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே" என்று அவன் பதில் கூறுகிறார். அதில் இரண்டு விதமான செய்தி உள்ளது.

முதலாவதாக, அந்த இளம் வாலிபன், உண்மையாக யேசு நல்லவர் மற்றும் நல்ல குரு என்று நம்புவனாக இருந்தால் (யேசுவை, அவரை புகழ்ந்து அவரோடு சேர்ந்து இருக்க நினைத்திருந்தால்) , மேலும் அவருடைய அற்புத காரியங்கள் மற்றும், பாவமில்லா அவரின் வாழ்வை நம்புவனாக இருந்தால், இவையெல்லாம் யேசு கடவுள் தான் என்று அவன் சொல்வது சரியாக இருக்கும். இரண்டாவது, கிறிஸ்துவின் கேள்வி, அந்த இளைஞனை, இன்னும் தாழ்மையுள்ளவனாக மாற்ற உதவியது. யேசு சொன்னதை, அவன் உண்மையாக நம்பினால், கடவுள் நல்லவர், அவனையும் சேர்த்து, மற்றவர்கள் யாரும் கடவுளை விட நல்லவர்கள் யாரும் இல்லை என்று அறிந்தவனாக இருந்தால், அவருடைய கட்டளைகள் மிக சரியாக கடைபிடிப்பான். இது மாதிரியான ஒரு புரிதல் அவனுக்கு இருத்திருந்தால், அவனுடைய இதயத்தை திறந்து, அவன் யேசுவை நோக்கி திரும்பியிருக்க வேண்டும்.


உங்களுடைய இதயத்தை, இந்த உண்மை எப்படி பாதிக்கிறது? யேசு இவ்வாறு சொல்கிறார், "கடவுளை போல் பரிசுத்தமாக இருப்பதற்கு, இந்த பூமியில் உள்ள உங்கள் செல்வங்கள், நிலபுலங்கள், அபிலாசைகள் இவை அனைத்தையும் விட்டு விட்டு, கடவுளின் இறையரசின் விசயங்களோடு ஒன்றினால் தான் முடியும்"

கடவுள் நம்மை அனாதையாகவோ அல்லது ஏழையாகவோ ஆக சொல்லவில்லை. எல்லாவற்றையும் "விட்டுவிட" வேண்டும் என்பதற்கு அர்த்தம், எல்லாவற்றையும் கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதாகும். நாம் நம்முடைய வருமானங்களையும், சொத்தையும் வைத்து கொள்வது என்பது நமக்கு நல்லதுதான், அதுவும் கடவுள் கொடுத்தது தான். (எடுத்து காட்டாக, கடவுள் நமக்கு கொடுத்த திறமைகளால், அதன் மூலம் கிடைத்த வருவாய் மூலம், வாங்க்கும் சொத்துகள்), மேலும், அதனை வைத்து, நாம் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். ஆனால், உண்மையான சந்தோசம், கடவுளின் தோழனாக, அவரின் மகனாக, மகளாக இருந்து கடவுளின் செல்வங்களை மற்றவர்களுக்கு கொடுக்கும் கருவியாக இருந்தால் தான் நமக்கு சந்தோசம்.

கடவுள் நமக்கு கொடுத்த திறமைகள், செல்வங்களை மற்றவர்களோடு பகிரிந்து கொள்வது, நமக்கு மிக பெரிய சந்தோசமான விசயம் தான். அப்படி செய்தால் தான், நாம் நம் செல்வங்களை ஆள்பவனாக இருப்போம், இல்லையென்றால், அந்த செல்வங்கள் நம்மை ஆள ஆரம்பித்து விடும்.

நம்மால் மட்டுமே, நாம் சேர்ந்து இருக்கும், நம்மோடு ஒட்டிகொண்டிருக்கும் செல்வங்களை விட்டு வெளியே வரமுடியாது. இது மிகவும் கடினமாகும், நம்மோடு இருக்கும் செல்வங்களை விட்டு வெளியே வர, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டமாகும். அதிலும் எல்லாவற்றையும் , மற்றவர்களின் நலங்களுக்காக கொடுப்பது என்பது அறவே கஷ்டமாகும். ஆனால் இப்படி வாழ்வது தான், முழுமையான வாழ்வாகும்.! இப்படி வாழத்தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த பூமியின் செல்வங்களோடு நாம் சேர்ந்தே இருப்பது, பாவமாகும், அது நம்மை கடவுளிமிருந்து அதிக தூரத்திற்கு இட்டு செல்லும், மேலும் பலரை புன்படவைக்கும்.

நல்ல செய்தி என்ன என்றால், யேசு நம் பாவங்களை ஏற்று, சிலுவையில் மரணமடைந்து வெற்றி பெற்றார், அதன் மூலம் நமக்கு பரிசுத்த ஆவியை பகிர்ந்து கொண்டார். மோட்சத்திற்கு தேவையில்லாத, எந்த ஒரு பொருளோடும், நாம் சேராமல், நமது இந்த பூமி வாழ்வு இருக்க வேண்டும். இப்படி செய்தால், நாம் மோட்சத்தின் செல்வங்களை பெறுவோம்.
(thanks to www.azhagi.com)
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 2, 2009

அக்டோபர் 4, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 4, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 27ம் ஞாயிறு

Gen 2:18-24
Ps 128:1-6
Heb 2:9-11
Mark 10:2-16
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
2 பரிசேயர் அவரை அணுகி, ' கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? ' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.3 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ' என்று கேட்டார்.4 அவர்கள், ' மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ' என்று கூறினார்கள்.5 அதற்கு இயேசு அவர்களிடம், ' உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.6 படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ' ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.7 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.8 இருவரும் ஒரே உடலாய் இருப்பர். ' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.9 எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் ' என்றார்.10 பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.11 இயேசு அவர்களை நோக்கி, ' தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.12 தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள் ' என்றார்.13 சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.14 இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ' சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.15 இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.16 பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

(thanks to www.arulvakku.com)


யாராவது உங்களை விரும்பாமலும், அன்பு காட்டாமலும் உள்ளவரை, நீங்கள் அன்பு காட்டியதுண்டா? கடவுளின் அதீத அன்பை நீங்கள் அனுபவித்து, அதன் மூலம், நீங்கள் மற்றவர்களிடம் அந்த அன்பை கொடுத்ததுண்டா? அவர்கள் கரடுமுரடான ஆளாக இருந்தாலும், கடவுளின் அன்பை அவர்களுக்கு அளித்ததுண்டா?

திருமணம் ஆனவர்கள் அனைவரும்,அவரவர் துணைவரை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு அன்பு செய்ய வேண்டும். இப்படி அன்பு செய்வது, இருவருக்கும் பொருந்தும் என நாம் நினைக்கிறோம். நாம் எந்தளவிற்கு ஆர்வத்தோடு அன்பு செய்கிறோமோ அதே ஆர்வத்தோடு, நமது துணைவரும் நம்மை அன்பு செய்வார்கள்.

இருந்தாலும், அதிக திருமணங்களில் ப்ரச்சினைகளை நாம் பார்க்கிறோம், அந்த ப்ரச்சினைகள் களையப்பட , இறைவனின் அன்பும், நமது வாழ்வில் அவரின் பங்களிப்பும் இறுதி வரை தேவைப்படுகிறது. அதனால் தான் நமக்கு திருமண அருட்சாதனம் தேவைப்படுகிறது. சாதாரண அரசாங்க திருமண சடங்குகளை விட, கோவிலில் நாம் திருமணம் செய்கிறோம். தெய்வீக அருள் இருந்தால் தான், நம் திருமணம் நீண்ட காலம் நீடித்து இருக்க கடவுள் விரும்புவது போல், நாம் தொடர்ந்து ஒருமைபாட்டுடன் இருக்க முடியும்.

இன்றைய நற்செய்தியில், மோசேயின் சட்டத்தில், விவாகரத்து அனுமதிக்கப்பட்டது, ஏனெனில், மக்கள் கடின மனதுடையவர்களாக இருந்தார்கள், அதனால் தான் விவாகரத்து அனுமதிக்கப்பட்டது என்று யேசு விளக்குகிறார். இது விவாகரத்திற்கு அனுமதி வழங்குவது அல்ல. யேசு நம்மையெல்லாம் அவர் இதயத்தை போல நாம் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.


மோசேயின் காலத்தில், திருமணங்கள் பிரச்சினையாகிறபொழுது, அல்லது திருப்தியற்ற நிலையில் உள்ளபோது, அதிக கணவர்கள், அவர்கள் மனைவியை விட்டு விலகி ஒதுக்கி வைத்திருந்தனர். திருமணம் - ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒன்றாகவே இருக்க வேண்டும் என்ற நியதி இருந்தாலும், விவாகரத்து ஆன ஒரு பெண், மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் , அதற்கான அனுமதி சட்டத்தில் உள்ளது. அந்த சட்டம் அவர்களை காத்து கொள்வதற்கு இப்படி அனுமதி அளித்தது. ஆனால் அதனால், விவாகரத்து என்பதை ஒருபோதும் ஒப்புகொள்ள முடியாது.

இறுதிவரை ஒன்றாக இருப்பது என்பது தெய்வத்தின் அருள், அவரின் அன்பளிப்பு, இது தான் கடவுளோடு நமக்குள்ள தொடர்பிற்கு, நம்மிடம் உள்ள ஆதாரமான விசயமாக உள்ளது. நாம் இதனை நம்பவில்லையென்றால், கடவுள் நம் மேல் எப்பொழுது அன்பு கொண்டிருக்கிறார் என்று நாம் எப்படி நம்ப முடியும்? - நாம் அவரின் அன்பிற்கு தகுதியற்றவர்களாக இருந்தாலும்? மேலும், நம்மை பார்க்கிறவர்கள் என்ன நம்பிக்கையில் இருப்பார்கள்.


நினைவில் வைத்து கொள்ளுங்கள்: சில நேரங்களில், உங்கள் காதலரோ , காதலியோ கிறிஸ்துவின் சிலுவைக்கு சென்று அன்பிற்காக ஜெபிக்கலாம். திருமண அருட்சாதனமே, கிறிஸ்துவின் கருணையுள்ள அன்பின் வெளிப்பாடுதான்.

கடவுள் நம்மை, அவரோடு எப்பொழுது இணைந்தே இருக்க வேண்டும் என நம்மை கட்டாயபடுத்தவில்லை. நாம் அவரை விட்டு ஒதுங்கி சென்றாலும், அவர் நம்மை அன்பு செய்து கொண்டுதான் இருக்கிறார். அதே போல், அன்பு கிடைக்காத மனைவியோ அல்லது கணவரோ தொடர்ந்து அவர் துணை மேல் அன்பு கொண்டு தான் இருக்கிறார். வெகு தூரத்தில் இருந்தால் கூட. அன்புடன் தான் இருக்கிறார். இந்த குணம் (அன்புடன் இருப்பது) எல்லா நிலையில் உள்ளவர்க்கும் பொருந்தும். (நண்பர்கள், குருவானவர்கள், பொது நிலையினர், தந்தையர்கள்) .


(thanks to www.azhagi.com)

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, September 26, 2009

27 செப்டம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை

27 செப்டம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Num 11:25-29
Ps 19:8, 10, 12-14
James 5:1-6
Mark 9:38-43, 45, 47-48


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 9
38 அப்பொழுது யோவான் இயேசுவிடம், ' போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர் ' என்றார்.39 அதற்கு இயேசு கூறியது: ' தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.40 ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.41 நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ' 42 ' என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.43 உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது..45 நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது..47 நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.48 நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.


(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு, 'நமக்கு எதிராக யார் யாரெல்லாம் இல்லையோ அவர்களெல்லாம், நம்மை சார்ந்தவர்கள் " என்று கூறுகிறார். இறையரசில் நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. மக்களோடு பழகுவதில், அவர்கள் எண்ணங்கள் , நம்மிடம் அனுகுவது பற்றி பல் ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.

சில நேரங்களில், ஒரு சிலர் நமக்கு எதிராக இருக்கின்றனர் என்று நாம் நினைப்போம், ஆனால், உண்மையில் அவர்கள் அது மாதிரியான எண்ணத்தில் இல்லாமல் இருப்பார்கள். எடுத்து காட்டாக , சிலர் ஒரு சில உண்மைகளை ,நம்மிடம் சொல்லும்போது, நமக்கு பிடிக்காத விசயமாக இருந்தால், அவர்களை நம் எதிரி போல் பார்க்கிறோம், ஆனால், அவர்கள் கடவுளின் தூதர்கள் மற்றும் தீர்க்கதரிசி ஆவர்.

வேறு சில நேரங்களில், பலர் அவர்களின் தேவைகளுக்காக, நம்மோடு சேர்ந்து இருப்பது போல் இருப்பார்கள், கடவுள் நம்மை எதற்காக தேர்ந்தெடுத்தாரோ, நம்மை என்ன செய்ய சொல்கிறாரோ , அதனை செய்ய அவர்கள் நமக்கு உதவுவதில்லை.

சில சமயம் இறைபணி செய்பவர்கள், நாம் எதிர்பார்ப்பது போல் அவர்கள் இறைபணி செய்வதில்லை. அதனால், கடவுள் என்ன செய்ய சொல்கிறாரோ, அதனை அவர்கள் செய்யவில்லை என நாமாக அனுமானித்து கொள்கிறோம். நீங்கள் யாரையாவது உங்கள் கருத்துகளுக்காக ஆண்டவரிடம் வேண்டிகொள்ள சொல்லி, அவர்கள் அந்த கருத்துக்கு எதிராக வேண்டி கொண்டார்களா? இது மாதிரியான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டது உண்டா?

பல வருடங்களுக்கு முன், எனது கணவர் கம்பெனியில் ஆள்குறைப்பு நடந்தது, நிறைய பேர் வேலையிழந்தனர். எனது நண்பர் ஒருவரிடம், எனது கணவருக்கு வேலை போகக்கூடாது என்று இறைவனிடம் எங்களுக்காக வேண்டி கொள்ளஸ் சொன்னேன், ஆனால், அவளோ அந்த கம்பெனி நல்ல நிலைமைக்கு வரவேண்டும், அதனால், எனது கணவர் வேலை நிரந்தரமாக இருக்கும் என வேண்டிகொண்டாள். ஆனால் எனது எதிர்பார்ப்போ, எனது கணவருக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அவளுடைய ஜெபம் எனக்கு பிடிக்கவில்லை. இறுதியில், அந்த நண்பர் மட்டும் தான் கடவுள் என்ன நினைத்தாரோ, அதையே வேண்டிகொண்டாள்.

நம் நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ நமக்கு நல்லது செய்கிறார்களோ அல்லது நமக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுகிறார்களா? அல்லது கடவுளின் தூதர்களா? என்று தெரிந்து கொள்வதற்கு, நம்முடைய ப்ரச்சினைகளை ஒதுக்கி , நமது கோப தாபங்களை தள்ளி, யேசுவோடு தனிமையில் அமர்ந்து அவரிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். நமது பயத்தை , கோபத்தை கடவுளிடம் கொடுத்து விட்டு, நமக்கு எதிரானவர்களை மன்னித்து, இறைபணிக்காக நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும், உண்மையாகவே சிலர் உங்களுக்கு எதிராக இருந்தால், ஜெபத்தில், நாம் தனியாக உட்கார்ந்து, ஞானத்தையும், அறிவையும், பரிசுத்த ஆவியிடம் கேட்டு, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் முதன்மைபடுத்த வேண்டும். அவர் நமக்கு உற்சாகத்தையும், சக்தியையும் கொடுத்து நமது ப்ரச்சினைகளை தாண்டி வர உதவி செய்வார்.

(thanks to www.azhagi.com)

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 18, 2009

செப்டம்பர் 20, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 20, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு


Wis 2:12, 17-20
Ps 54:3-6, 8
James 3:16--4:3
Mark 9:30-37


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 9
30 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார்.31 ஏனெனில், ' மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் ' என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.32 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.33 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, ' வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்? ' என்று அவர்களிடம் கேட்டார்.34 அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.35 அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், ' ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் ' என்றார்.36 பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,37 ' இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார் ' என்றார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், நாம் பல தீமைகளை பார்க்கிறோம்: பொறாமை நல்லதை அழிப்பதையும், சுய நலம் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதையும், தற்பெருமை, வழியில் வருவபவர்களை அழிப்பதையும் பார்க்கிறோம்.

முதல் வாசகம், வெளியாட்களின் தீய நடவடிக்கைகளால், இஸ்ரேல் நாடு எப்படி அமுக்கப்பட்டது. என்று விளக்குகிறது. நற்செய்தியில், தெய்வத்தை விட்டு விலகி நிற்பவர்களின் தீய எண்ணங்களை யேசு கண்டறிகிறார். இதை அனைத்தையும்விட பெரிய இழிவான தீமையை, ஜேம்ஸ் சொல்கிறார். பங்கு திருச்சபையில், கிறிஸ்தவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையை குறிப்பிடுகிறார்.

பொறாமையும், சுய நலத்தின் விருப்பங்களும் தான் ஒவ்வொரு பங்கிலும் நடக்கும் ப்ரச்சினைகளுக்கு மூல காரணம் ஆகும். பங்கு கோவிலின் உள்ள ஊழியர்களிடையே ஏற்படும் பிரிவு, கோவில் சேவை செய்பவர்களிடம் ஏற்படும் ஒற்றுமையின்மை, தான் வெளியே தள்ளப்படுகிறோமோ என்று நினைக்கும் ஒவ்வொரு தொண்டரிடமும், கிறிஸ்துவ குடும்பங்களிடையே ஏற்படும் பிளவுகள், குறைவான விசுவாசம் உள்ளோரை வெளியே தள்ளும் குணங்கள் எல்லாமே பொறாமையாலும், சுய நலத்தாலுமே ஏற்படுகிறது. -- இவையெல்லாமே தீயவை.

எந்த ஒரு பிரச்சினையின் மூலக்கூற்றை அறிய வேண்டுமானால், நமது சுய நலத்துடன் கூடிய விருப்பங்களை பார்த்தோமானல் தெரியும். நேர்மையாகவும், உள்ளார்ந்த நோக்கத்துடனும், பிரச்சினையின் உள்ள நயவஞ்சக நோக்கங்க்களை பாருங்கள். மற்றவர்களிடம் இதனை பார்க்கும்போது,நீங்கள் வருத்தபட்டது உண்டா? அப்படி வருத்தபடவில்லை என்றால்? ஏன்? நீங்கள் இன்னும் உங்கள் சுய நலத்தினால் உள்ள கொளவரத்தினாலும், தற்பெருமையினாலும் இருக்கிறீர்கள் என்று தானே அர்த்தம்.

இதற்கெல்லாம், யேசு நிவாரண மருந்து தருகிறார்: "யாராவது முதலாவதாக இருக்க நினைத்தால்( இந்த ஆசை நமது சுய நலத்தினால் தோன்றியது) அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் " என்று கூறுகிறார்.
சுய நலத்தினால் நம்மில் உண்டாகும் நோக்கம், பாவமாகும், ஏனெனில், மற்றவர்களிடமிருந்து வெற்றியை தட்டி பறிக்க முயற்சி செய்யும். ஜேம்ஸ் , நமது நோக்கம் என்னவாக இருந்தாலும், அது நல்ல நோக்கமாக இருந்தாலும், கடவுளிடம் வேண்டி, பரிசுத்த ஆவியுடன் இனைந்து , அந்த நோக்கத்திற்காக பாடுபட வேண்டும்- ஆனால், நாம் நமது சுய நலத்தினால், அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என நினைக்க கூடாது.

கடவுள் நமது வேண்டுதலுக்கு செவிசாய்த்து, நாம் கேட்பவற்றை கொடுக்க தயாராய் உள்ளார், ஆனால் அந்த வேண்டுதல், நமது பங்கு திருச்சபைக்கு பயனுள்ளதாகவோ, நமது குடும்பம் முழுதுக்கும் பயனுள்ளதாகவோ, இறைசேவையில் பங்கு கொள்வோருக்கு பயனுள்ளதாகவோ இருந்தால் கடவுள் நமது வேண்டுதலுக்கு செவி சாய்க்கிறார். மற்றவர்களுக்கு எப்படி உதவமுடியும் என்று நமது வேண்டுதல்கள் நினைத்து நாம் இறைவனிடம் வேண்டினால், அந்த ஜெபம் தூய்மையானது, அமைதிக்குரியது, முழு இரக்கத்துடன் உள்ளது, நிச்சயம் அதற்குண்டான கனியை தரும்.


(thanks to www.azhagi.com)

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 11, 2009

செப்டம்பர் 13, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 13, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 24ம் ஞாயிறு

Is 50:5-9a
Ps 116:1-6, 8-9
James 2:14-18
Mark 8:27-35

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 8
27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.28 அதற்கு அவர்கள் அவரிடம், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.29 ' ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா ' என்று உரைத்தார்.30 தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.31 ' மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் ' என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.32 இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். 33 ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், ' என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ' என்று கடிந்துகொண்டார்.34 பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.35 ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியின், இரண்டாவது வாசகம், கத்தோலிக்க மதத்தின் கோட்பாடுகளையும், சிந்தனைகளையும், அதன் தொடர்புகளையும் விளக்கி சொல்கிறது.

விசுவாசமில்லாத எந்த ஒரு சேவையும், எவ்வளவு நல்ல சேவையாக இருந்தாலும், நம்மை அது மோட்சத்திற்கு இட்டு செல்லாது. நம்மில் சிலர், கோவில் வேலைகளில் ஈடுபட்டு செய்து, இறைவனின் இதயத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறோம், எல்லா ஜெபங்களையும், மிக சரியாக சொல்வதும், அதில் ஒரு அங்கமாகும். இந்த மாதிரியான எண்ணங்கள், நமது குழந்தை பருவத்திலே இருந்து வருகிறது. நாம் நல்ல மாதிரியாக இருந்தால், நமது அம்மா அப்பா, நமக்கு பரிசு தருவார்கள் என நினைக்கிறோம். பள்ளியில் ஒழுங்காக படித்தால், ஆசிரியர் நமக்கு பரிசு தருவார் என்ற எண்ணத்தோடு உள்ளோம்.
பிரச்சினை என்னவெனில், நாம் மோட்சம் செல்லக்கூடிய தகுதியை என்ன செய்தாலும் பெற முடியாத நிலையில் தான் உள்ளோம். அதனால் தான் யேசு இந்த பூமிக்கு வந்து, நமது பாவங்களை சிலுவையில் எடுத்து கொண்டார்.

விசுவாசமற்ற எந்த ஒரு வேலையும், நம்மை மோட்சத்திற்கு எடுத்து செல்லாது. ஏனெனில்:
யேசுவின் மேல் விசுவாசம் கொண்டவர்களாக நாம் இருந்தால், "யேசு நம் மேல் அளவு கடந்த அன்பு கொண்டு, நமக்காக சிலுவை மரணமடைந்து, உயிர்த்தெழுந்தார், அதனால் நாம் நித்திய வாழ்வை அடைவோம்" என்ற நம்பிக்கை கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். இது தான் நமக்கு மோட்சத்தின் கதவை திறக்கும். எனினும், அந்த கதவுக்குள் நாம் நடக்க வேண்டுமானால், நாம் யேசுவை பின் செல்ல வேண்டும். அவரை பின் செல்வதற்கு, அவர் நமக்காக இறந்தார், உயிர்த்தெழுந்தார் என்று நம்புவதை விட இன்னும் அதிகம் நாம் செய்ய வேண்டியிருக்கிறது, அது என்னவெனில், அவரது வாழ்வையும், எப்படி வாழ்ந்தார் என்பதையும் நாம் நம்ப வேண்டும். யேசுவை பின் செல்வது, நமது சொந்த வாழ்வை பாதிக்கும், நாம் நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், கிறிஸ்துவை போல நாம் மாறவேண்டும்.
நாம் யேசுவின் மேல் விசுவாசம் கொண்டுள்ளோம் என்பதை நாம் செய்யும் நல்ல காரியங்களே நிருபிக்கிறது. யேசுவின் மேல் விசுவாசம் கொண்டுள்ளோம் என்பது, அவர் மேல் அதிக அளவு அன்பு செய்து, அவர் யாரையெல்லாம் அன்பு செய்கிறாரோ, அவர்களையெல்லாம் நாமும் அன்பு செய்வதில் உள்ளது. மற்றவர்கள் அனைவருமே அவர்களுக்கு நமது அன்பை பெற அந்த தகுதி இருந்தாலும், இல்லையென்றாலும், நாம் அவர்களை அன்பு செய்ய வேண்டும்.

யேசுவின் மேல் உள்ள விசுவாசம் என்பது, நாம் அவர் என்ன சொன்னாலும், அதனை செய்ய தயாராக உள்ளோம் என்பதை காட்டுகிறது. அவரை போலவே நமது எல்லா செயல்களிலும் நடந்து கொள்வது, அவரது குண நலன்களை நாமும் பின் பற்றுவது, அவரது அழைப்பை ஏற்று கொள்வது. (குருவாக, இறைசேவையாளராக).
யேசு இன்றைய நற்செய்தியில் கேட்பது போல் "நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" நம்மை கேட்டால், நமது பதில், நீங்கள் எங்களது மெசியா, எங்களை மோட்சத்திற்கு அழைத்து செல்பவர், நீங்கள் தான் கடவுள், எப்படி வாழ்வேண்டும் என, எங்களுக்கு சொல்லி கொடுப்பவர், நம் மேல் அதிக அன்பு கொண்டவர், மற்றவர்கள் மேல் நாம் அன்பு கொள்ள நமக்கு அதிகாரம் அளிப்பவர், அதனால், நமக்கு சிலுவை துன்பம் வந்தாலும், நம்மை காப்பவர். என்று சொல்பவர்களாக நாம் இருப்போம்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 4, 2009

செப் 6, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப் 6, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு

Is 35:4-7a
Ps 146:7-10 (with 1b)
James 2:1-5
Mark 7:31-37

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 7
31 மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார்.32 காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.33 இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.34 பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ' எப்பத்தா ' அதாவது ' திறக்கப்படு ' என்றார்.35 உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.36 இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.37 அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ' இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே! ' என்று பேசிக்கொண்டார்கள்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், கடவுள் உடல் ஊணமுற்றவர்கள் மேல் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை நமக்கு கான்பிக்கிறது.
நாம் எல்லோருமே ஒரு வகையில், ஊணமுற்றவர்களாக தான் இருக்கிறோம், நமக்கு கண்ணிருந்தும், குருடர்களாக இருக்கிறோம், புனித ஜேம்ஸ் வாசகத்தில் நாம் எவ்வளவு குருடாக இருக்க முடியும் என்பதை நமக்கு எடுத்து காட்டுகிறது

ஒரு மனிதன் எந்த மாதிரியான உடை உடுத்துகிறான் என்பதை தான் நாம் பார்க்கிறோம், எடுத்து காட்டாக, அவர்கள் இதயத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்காமல், அவர்களுடைய ஆற்றல்கள், திறமைகள் அனைத்தும், கடவுளின் பிரதிபலிப்பு ஆகும் என்பதை நம்மால் எப்படி அறிய முடியும்?. நாம் தீர்ப்பளிப்பவராக இருக்கிறோம். ஒருவருடைய கல்வியறிவு, சொத்து, சமூகத்தில் அவரின் மதிப்பு ஆகியவற்றால், நாம் கவர்ந்திழுக்கபடுகிறோம், அவர்களின் புனிதத் தன்மையை நாம் பார்ப்பதில்லை, மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைக்கும் அவர்களது ஆர்வம், மற்றும், அவர்கள் உள்ளத்டதில் என்ன உள்ளது என்பதை நாம் பார்ப்பதில்லை. நாம் தீர்ப்பளிப்பவராக இருக்கிறோம்.

கடவுளுக்கு மட்டும் தான் ஒவ்வொருவரின் புனித தன்மை மற்றும் அவர்களிடத்தில் உள்ள நல்ல விசயங்கள் தெரியும். ஆனால், நாமும் கடவுள் போல, அவருக்கு சரிசமமாக, மற்றவர்களை நாம் அனுமானிக்கிறோம். கடவுளுக்கு மட்டும்தான் ஒவ்வொருவரின், மனதுக்குள்ளும், வார்த்தைகளிலும், உள்ள நோக்கங்களும் தெரியும். இருந்தாலும், நாம் ஒவ்வொருவரையும் , மற்றவர்கள் சொல்வதை வைத்து , அவர்களை மதிப்பிடுகிறோம்.

தீர்ப்பளிப்பது, நம்மை எவ்வளவு குருடாக இருக்கிறோம் என்பதை தான் காட்டுகிறது.
யேசு நம்மையெல்லாம், கடவுளை நோக்கி, "எப்பத்தா!, உனது கண்களும், காதுகளும், மேலும் மன எண்ணங்களும் திறந்து உண்மை நமக்கு கிடைக்கட்டும்" என்று வேண்டவேண்டும் என ஆசைபடுகிறார். இதன் மூலம் நாம் குணமடையலாம், நமக்கு தெரிந்தவைகளிடமும், கேட்ட விசயங்களிலும், ,கொஞ்சம் மெதுவாக செயல்பட வேண்டும். நாம் பார்ப்பதிலும், கேட்பவற்றையும், நம்ப கூடாது. மெதுவாக, நிறைய நேரம் எடுத்து கொண்டு, ஞானத்திற்காகவும், உள் குணங்களை அறிவதற்கும், தீர்ப்பளிப்பதற்கும், கடவுளிடம் வேண்டி , அதன் பிறகு தான் நாம் அடுத்த முயற்சிக்கு செல்லவேண்டும்.

யேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தற்கு, இதுவும் ஒரு காரணமாகும். நாம் கடவுளின் ஆவியை ஒவ்வொரு விசயத்திற்கும், முடிவெடுக்க , அனுமானிக்க அனுமதித்தால், நாமும் கடவுளை போல் செயல்படுவோம். கொஞ்சம் கொஞ்சம் விசயங்களை வைத்து கொண்டு, நாம் எந்த ஒரு முடிவுக்கும் வந்து விட கூடாது. விசுவாசத்துடனும், இரக்கத்துடனும், நாம் செயல்படவேண்டும்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm