Friday, July 24, 2015

ஜூலை 26 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூலை 26 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு
2 Kings 4:42-44
Ps 145:10-11, 15-18
Ephesians 4:1-6
John 6:1-15

யோவான் நற்செய்தி


அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறு கரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.
இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.
இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ``இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?''என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.
பிலிப்பு மறு மொழியாக, ``இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே''என்றார்.
அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, ``இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?''என்றார்.
இயேசு, ``மக்களை அமரச் செய்யுங்கள்''என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந் தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், ``ஒன்றும் வீணாகாதபடி,எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்''என்று தம் சீடரிடம் கூறினார்.
மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ``உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே''என்றார்கள்.
அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.





பல மடங்காக பெருக செய்த அற்புத நிகழ்வின் உண்மை

இன்றைய நற்செய்தியை , நான் வேறு விதமாக கேட்டிருக்கிறேன் , “இயேசு அங்கு உள்ள எல்லா மக்களையும் , அவர்கள் கொண்டு வந்த உணவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள செய்தார், அது தான் அந்த அற்புதம் ஆனா நிகழ்வு என்றும், “ மேலும் "அங்கு எல்லோருக்கும் போதுமான அளவு உணவு இல்லை , ஆனால் இயேசுவின் போதனையால், ஒவ்வொருவரும் குறைந்த உணவு எடுத்து கொண்டு, மற்றவர்களுக்கு கொடுத்தார்கள் அதனால், அங்கே உணவு மீதம் இருந்தது , அங்கிருந்த மக்கள், தனக்கு தாகம் செய்து , மற்றவர்களுக்கு கொடுத்தார்கள். “ என்றும் நாம் கேட்டிருக்கிறோம்.

கண்டிப்பாக இது உண்மை போல தோன்றும், ஏனெனில், கடவுள் உணவை பல மடங்காக ஆக்க முடியாது என்று நாம் நினைக்கலாம்.

நாம் இப்போது கொண்டாடி கொண்டிருக்கும் திவ்ய நற்கருணையின் முன்னோடி யாக இந்த அற்புத நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அங்கு , ரொட்டி துண்டுகளும், மீன்களும், கடவுளின் அற்புதத்தால், பல மடங்காக பெருக்கப்பட்டு, எல்லோரும் போதுமான அளவு உண்டு, இன்னும் மீதம் இருந்தது. திருப்பலியில், நடக்கும் நிகழ்வை நாம் கூர்ந்து கவனித்தோமானால், அதனை நம் இதயத்திற்கு எடுத்து செல்லும் பொழுது, இயேசு நமது பசியை போக்கி, நமக்கு தேவையானதை விட அதிகம் கொடுக்கிறார். திருப்பலிக்கு செல்லும் முன்பு, இயேசுவிடம் இருந்து உங்களுக்கு என்ன வேண்டும் ? உங்களுக்கு என்ன தேவையோ அதனை கொடுக்க இயேசு முயல்வார். அல்லது அதனை அடையும் வழியை காண்பிப்பார், - நிறைவாக உங்களுக்கு தருகிறார்.

இயேசு நமக்கு அற்புத செயல்களால், நமக்கு கொடுக்கும் அனைத்திற்கும், , நமக்கு கிடைப்பது அனைத்தும் அவரால் தான் என்று. நாம் அவரை விசுவசிக்க வேண்டும். எதிர்பாராத ஒன்றை நாம் எதிர்பார்க்க வேண்டும். கடவுளின் சரியான தருணத்திற்கு நாம் காத்திருக்க வேண்டும். ஆனால், கண்டிப்பாக, கடவுள் நமக்கு தேவையானதை விட அதிகமாகவே தருகிறார் என்பதை நாம் புரிந்து இருக்க வேண்டும்.

அந்த மலையில் உள்ளவர்கள் , மீனுக்கு பதில், வேறு ஒரு அசைவ உணவை எதிர் பார்த்து இருக்கலாம், ஆனால், அவர்களுக்கு கிடைத்ததோ , இயேசுவும், அவரின் போதனைகள், அவர்களின் ஆன்மாவை விசுவாசத்தில் நிறைத்தது. சோதனைகளில் இருந்து வெளி வரும் அளவிற்கு அவர்களுக்கு ஆற்றல் கிடைத்தது. எல்லோருக்கும் கிறிஸ்துவின் அன்பை , கிறிஸ்துவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளளும் அளவிற்கு கிடைக்க பெற்றார்கள்.


திவ்ய நற்கருணை வழிபாட்டில், நமக்கு போதும் போதும் என்கிற அளவிற்கு தேவையான அனைத்தும் இருக்கிறது. அந்த ரொட்டி துண்டும் திராட்சை ரச , கிறிஸ்துவின் இரத்தமும் நமக்கு கொடுக்க தயாராக இருக்கின்றன. உங்களுக்கு இயேசுவிடமிருந்து என்ன வேண்டும். ? இன்னும் அதிக விசுவாசம்? அதீத நம்பிக்கை? அதிக அன்பு ? திருப்பலிக்கு செல்லும் வழியில் நமக்கு என்ன வேண்டும் என்று யோசித்து செல்வோம், அப்பொழுது, திருப்பலியில் நாம் அதனை அதிகம் எதிர்பார்த்து கொண்டு இருக்கலாம். கண்டிப்பாக இயேசு கொடுப்பார்.
© 2015 by Terry A. Modica




Friday, July 17, 2015

ஜூலை 19 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூலை 19 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 16 ம் ஞாயிறு
Jeremiah 23:1-6
Ps 23:1-6
Ephesians 2:13-18
Mark 6:30-34


மாற்கு நற்செய்தி

அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை,கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், ``நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்''என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால்,உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலை நிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.
அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு,எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி,அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர்.
அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு,அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.



ஆற்றலை தேடி, நமது அழைப்பிற்கான இறைபணி செய்ய

இந்த தேவ அழைப்பில் , ஒவ்வொருவரும் உற்சாகமாகவும் , சில நேரங்களில் அதித உற்சாகத்துடனும், இருக்கிறோம். சிறுவர்களை பக்தியுடன் வளர்ப்பதோ? அல்லது வயதானவர்களுக்கான இறைபணி செய்வதோ, அல்லது இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துவதோ அல்லது, கோவிலில் இறைபணி செய்வதோ அல்லது குருவானவருக்கு உதவி செய்வதோ எதுவாக இருந்தாலும் - நமக்காக ஒரு ஓய்வை நாம் எடுத்து கொள்ள வேண்டும். நமது ஆற்றலை, சக்தியை நாம் புதுபித்து கொள்ள வேண்டும். அதனை தான் இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.

இந்த கட்டளையை நாம் கடை பிடிக்காவிட்டால், நாம் சோர்ந்து போய்விடுவோம். நாம் சுய நலத்துடன் அல்லது தவறான முடிவு எடுத்து விடுகிறோம். முதல் வாசகத்தில் கூறி உள்ளது போல, தவறான மேய்ப்பாளனாக ஆகி விடுவோம். தவறான பாதையில் அழைத்து செல்பவர் போல ஆகி விடும். ஏன் ? இப்படி போனால், சோதனைகளால் நாம் தாக்கப்பட்டு அதற்கு அடிமை ஆகி விடுவோம். நம்மிடம் இல்லாததை நாம் கொடுக்க முயற்சி செய்யும் போது இன்னும் பலமிழந்து விடுவோம்.

கடவுளின் அன்பை வெளிப்படுத்த, நமக்கு ஆற்றலும், சக்தியும் தேவைபடுகிறது. மற்றவர்களுக்கு இறைபணி செய்ய, நாம் ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் இருக்க வேண்டும். நாம் ஒய்வு எடுக்காமல் இருந்தால், எப்படி நாம் எப்பொழுதும் ஆற்றலுடன் இருக்க முடியும், எப்படி ஜெபம் செய்ய முடியும். நம்மை காத்து கொள்ளா விட்டால், நாம் எப்படி மற்றவர்களுக்கு பணி செய்ய முடியும்? இயேசு நம்மில் வாழ்கிறார். நாம் அவரை மற்றவர்களுக்கு கொடுக்கும் முன்பு, நம்மிடம் அவர் முழுமையாக நம்மில் வர அனுமதிக்க வேண்டும்.


தினமும், நாம் மேய்ப்பன் இல்லாத ஆடுகளை போல உள்ள மக்களை நாம் சந்திக்கிறோம். அறிந்தோ அறியாமலோ , அவர்களுக்கு இயேசு தேவை ஆக இருக்கிறது. இயேசுவிடம் இருக்கும் எல்லையில்லா அன்பு அவர்களுக்கு தேவை ஆகா இருக்கிறது , நிபந்தனையில்லா அன்பு அவரிடமிருந்து இவர்களுக்கு தேவை ஆக . இருக்கிறது . இயேசு கொடுக்கும் அமைதியையும் , குனமக்குதலும், அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. இயேசு அவர்களுக்கு உதவ விரும்பிகிறார். இயேசுவின் கைகளாகவும், கால்களாகவும், குரலாகவும் இருக்கும் நாம், பலமின்றி இருந்தால், எப்படி நாம் சேவை செய்ய முடியும். ?

தனிமையான இடத்திற்கு சென்று இயேசுவோடு அவரின் ஊட்டமான அன்பினை பெற்று ஒய்வு எடுத்தல் வேண்டும். நாம் தியானத்திற்கோ அல்லது சிறு கால விடுப்பிற்கோ நாம் சென்று வந்து நாம் இன்னும் சோர்வாக காணப்பட்டால், நமக்கு இன்னும் ஒய்வு தேவை என்று அர்த்தம். புதுபித்தல் முறையை நாம் குறைத்து விட்டோம் என்று அர்த்தம். அதிக வேலை சுமையை பற்றி கவலை படாமல், இயேசு நம்மை அழைக்கிறார் " என்னோடு ஒய்வு எடுங்கள், என்னை போல மாறும் வரை என்னோடு இருந்து விட்டு செல்லுங்கள்" என்று இயேசு சொல்கிறார்.

© 2015 by Terry A. Modica


Saturday, July 11, 2015

ஜூலை 12 2015 ஞாயிறு நற்செய்தி

ஜூலை 12 2015 ஞாயிறு நற்செய்தி
ஆண்டின் 15ம் ஞாயிறு
Amos 7:12-15
Ps 85:9-14
Ephesians 1:3-14
Mark 6:7-13


மாற்கு நற்செய்தி

அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து,அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள்மீது அதிகாரமும் அளித்தார். மேலும், ``பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு,பை,இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்;அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்''என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
மேலும் அவர், ``நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால்,அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது,உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்''என்று அவர்களுக்குக் கூறினார்.
அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;பல பேய்களை ஓட்டினார்கள்;உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில் , இயேசு நம்பிக்கையை பற்றி நமக்கு போதனை செய்கிறார். கடவுளின் அழைப்பை ஏற்று இந்த உலகில் கடவுளின் அன்பை பரப்பவும், அவரின் நற்செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்லவும் நாம் அவரை முழுமையாக நம்ப வேண்டும். நமக்கு தேவையான அனைத்தையும் அவர் கொடுப்பார் என விசுவசிக்க வேண்டும்.
மேலும், நமக்கு தேவையான நேரத்தில் , என்ன தேவையோ அதனை நமக்கு கொடுப்பார் என நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்., நமக்கு அது போதுமானதகா இல்லாமல் கூட இருக்கலாம் . அவர் இன்னும் கொடுக்க வில்லை என அவர் மேல் அவ நம்பிக்க கொள்ள கூடாது .

ஒவ்வொரு திருப்பலி முடியும் தறுவாயில் , நமது அழைத்தலை நாம் ஒப்பு கொள்ளும் நிகழ்வு நடக்கிறது. கடைசி ஆசிர்வாதம் நம்மை அனுப்பி, இயேசுவோடு நமது தொடர்பு புதுபிக்க படுகிறது. நற்செய்தியிலும், திவ்ய நற்கருணை யிலும் , ஆலய குழுக்களிலும், இயேசுவின் பிரசன்னம் இருந்து கொண்டு, (நாம் அதனை விசுவசித்தால் ) , நம்மை தைரியமாக இந்த உலகிற்கு அனுப்பி, என்ன செய்ய சொன்னாரோ அதனை செய்வோம்.
குருவானவரின் மூலமாக , இயேசு நம்மை இந்த உலகிற்கு அனுப்பி, இயேசு உண்மையான கடவுள், நம்மை காப்பவர் , நம்மில் இருப்பவர் என்பதை நம் சாட்சியத்தின் மூலம் , நாமே சாட்சியாக இருக்க வேண்டும் என இயேசு அனுப்புகிறார். இயேசுவோடு, இயேசுவின் மூலம் , நாமெல்லாம், மனம் மாற்றுபவராக, இந்த உலகில் ஒரு மாறுதல் கொண்டு வருபவராக நாம் இருப்போம்.

எல்லோரு ம் திவ்ய நற்கருணை யில் கலந்து கொண்ட அனைவரும், அதன் உண்மையான அர்த்தத்தோடு , நாம், ஜெபம் சொல்வதிலும், நற்கருணை பெற்று கொள்வதிலும், திருப்பலியில் நாம் கவனம் செலுத்தும் போது , நம்பிக்கையுடன் நாம் செல்லலாம் , இயேசு உங்களை அவரின் ஆவியோடும், போதுமான தேவைகள் அனைத்தும் கொடுத்து திருப்பலியிலிருந்து அனுப்புகிறார்.

எனினும், இந்த இறைபணிக்காக நாம் ஆயத்தம் ஆகும் பொழுது , நமக்கு தேவையானதை விட அதிகமாக எடுத்து செல்கிறோம். இதன் மூலம் கடவுள் மேல் நாம் கொண்ட நம்பிக்கையை , அவ நம்பிக்கையாக நாம் காட்டுகிறோம் .

ஒரு நல்ல மனமாறுதல் இறைபணி ஆற்றிட, நாம் முழுமையாக கடவுளிடம் சரணடந்த்திட வேண்டும். மேலும், இன்னும் கடவுளிடமிருந்து வேண்டும் என்ற ஆசையோடு இருந்தால், , நம்மை நமது வாழ்வின் அர்த்தம் உள்ள வாழ்வாக இருக்காது.

© 2015 by Terry A. Modica

Saturday, July 4, 2015

ஜூலை 5 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூலை 5 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 14ம் ஞாயிறு

Ezekiel 2:2-5
Ps 123:1-4
2 Corinthians 12:7-10
Mark 6:1-6



மாற்கு நற்செய்தி

சொந்த ஊரில் இயேசு புறக்கணிக்கப்படுதல்
(
மத் 13:53 - 58; லூக் 4:16 - 30)
1அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.2ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ' இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!3இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.4இயேசு அவர்களிடம்,' சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் 'என்றார்.5அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.6அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.
(thanks to www.arulvakku.com)



நிராகரிப்பும், புரிந்து கொள்ளாமையும் , அவநம்பிக்கையும்

நாம் விசுவாசத்திற்கு வரும் முன்பு நம்மை பார்த்தவர்களிடம் , நாம் விசுவாசத்தை பகிர்ந்து கொள்ளும்பொழுது , அவர்கள் நம்மை பார்க்கும் விதத்தை , நாம் கண்டறியும் பொழுது நம்மில் ஒரு வலி ஏற்படுவதை நமக்கு , இன்றைய நற்செய்தி காட்டுகிறது.

இயேசுவிற்கு நடந்தது போல , நம்மையும் சிலர் நிராகரிப்பார்கள், சிலர் நம் மேல் அவநம்பிக்கையோடு இருப்பார்கள், மேலும் , நாம் ஏன் மாறினோம்? என்று அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். நம்மை பார்த்து அவர்கள் பயப்படலாம், அவர்கள் பார்வையில், ஒரு பொறாமை இருக்கும். நாமெல்லாம் ஏதோ ஒரு விசயத்தில், நாம் ஆர்வத்துடன் இருக்கிறோம் என்றும், அதனால், நம் சாட்சியத்தை ஒதுக்கி விட்டு விலகியே நிற்கின்றனர்.


சாதாரண டவுனிலிரிந்து வாழ்ந்து வந்த இயேசு, அதை முடித்து இறைபணி வாழ்வ்விற்கு வந்த பின்பு, முற்றிலுமாக இயேசு மாறினார். ஏனெனில், அனைவரையும் , அவர் சொல்கிறபடி வாழச் சொன்னார், அதனால், அவரை எல்லோரும் எதிர்ப்பார்கள், மற்றும் கிண்டலுக்கு கேலிக்கும் ஆளானார். இது பைத்திய கார தனமா தெரிய வில்லையா ?


இன்னும் இந்த நிலை மோசமாக இருக்க , இயேசு அவரின் எல்லா நேரத்தையும், அவர் பின் வரூபவர்களுக்கும் , அவரை இட்டு ஒதுங்கி இருப்பவர்களுக்கும் , விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்று கூறி , எல்லா காலத்திலும், அவரின் ஓய்வு நேரத்திலும் எல்லோரையும் மாற்ற முயற்சி செய்தார்.


நமக்கு யாராவது சவால் விட்டால், அதனை யாரும் விரும்புவதில்லை. என்ன மாதிரியான சவால் என்றால், நமக்கு எது மிகவும் இலகுவ்வாகவும் , பிடித்தமாகவும் இருப்பதை நாம் விட்டு விட வேண்டும் என்ற சவால் என்றால் நமக்கு பிடிப்பதில்லை. , எனினும் , நாம் அமைதியாக இருப்பதற்கு இது மட்டும் காரணமில்லை, கிறிஸ்து நம்மை நற்செய்தியை உலகிற்கு சொல்ல அழைப்பு விடுக்கிறார். மனம்மாற்றம் முக்கியமானது என, எல்லோருக்கும் தெரிவித்தல் வேண்டும். , அப்படி தெரிவிக்கவில்லை என்றால், நாம் இயேசுவிற்கு எதிராக பாவம் செய்கிறோம். மேலும், இயேசுவை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு எதிராகவும் நாம் பாவம் செய்கிறோம்.

நம் சொந்த மனம் மாற்ற நிகழ்வை பகிர்ந்து கொண்டு, பரிசுத்த வாழ்வின் உள்கருத்தை மற்றவர்களுக்கு விளக்கி சொல்லி, மற்றவர்களையும் மனம் மாற அழைப்பு விட வேண்டும், ஆனால், கண்டிப்பாக மாற வேண்டும் என்று அவர்களை கேட்க கூடாது .

இதனால் நீங்கள் நிராகரிக்கபட்டால், , இயேசுவிற்கு உங்கள் மனம் புரியும். உங்கள் வலி அவருக்கு தெரியும். அவர்களின் புறக்கணிப்பு இயேசு உங்கள் மேல் அபரிதமான பெருமிதத்துடன் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அதனை கருத்தில் கொண்டால், அந்த புறக்கணிப்பு மறைந்து விடும்.

© 2015 by Terry A. Modica