Saturday, December 10, 2016

டிசம்பர் 11, 2016 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

டிசம்பர்  11, 2016  ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால 3ம் ஞாயிறு
Isaiah 35:1-6a, 10
Ps 146:6-10
James 5:7-10
Matthew 11:2-11
மத்தேயு நற்செய்தி
விண்ணரசின் பின்னணியில் திருமுழுக்கு யோவான்
(லூக் 7:18 - 35)
2யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.

3அவர்கள் மூலமாக, “வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்டார்.

4அதற்கு இயேசு மறுமொழியாக
நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.

5பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
6
என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்
 என்றார்.
7அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: 
நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?

8இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்.

9பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
10இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்
என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.

11மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(Thanks to www.arulvakku.com)
கிறிஸ்துவால் மீட்கப்பட்ட பின்பு வரும் சந்தோசம்
மூன்றாவது திருவருகை கால ஞாயிறின் கருத்தாக்கம் - சந்தோசம் - மகிழ்ச்சி - ஆகும். முதல் வாசகத்தில் திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்;இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.'' , இது தான் நம் மகிழ்ச்சிக்கு உரிய காரணம் ஆகும். பாவத்திலிருந்தும், அழிவிலிருந்தும் விடுவிக்கப்பட்டோம். இயேசு சிலுவை முலம் அவரது தியாகத்தால் நம்மை விடுவித்தார். இதற்காக தான் இயேசு இந்த பூமியில் நம்மை போல மனிதனாக பிறந்தார், அதன் முலம் கடவுளிடமிருந்தும் , அவரின் அளவு கடந்த அன்பிலுமிருந்தும் நம்மை பிரித்த வேதனையிலிருந்து நம்மை மீட்டார்.
நித்திய வாழ்வை நாம் ஒப்பிடும்  பொழுது, இவ்வுலக வாழ்வு, மற்றும் இங்கே உள்ள பிரச்சினைகள் எல்லாம் மிகவும் சிறியது ஆகும்.
நம் பாவங்கள், அழிக்கும் சக்திகள் நமக்கு நிரந்தர பாதிப்பை கொடுக்க முடியாது, ஏனெனில், இயேசு அதற்கான தண்டனை அவரே ஏற்று கொண்டதால், நம்மால், மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. மேலும் கடவுள் ஒவ்வொரு செயலையும் நமக்கு நல்லதாக மாற்றி கொடுக்கிறார். சாத்தானை விழ்த்தி அதன் முலம் நாம் ஆசிர்வாதமடைய செய்கிறார்.
மிகவும் மோசமான காலங்கள் கூட நமக்கு ஆசிர்வாதமாக முடியும், நம் பிரச்சினைகளை இயேசுவிடம் இணைத்து கொண்டால் அது மிக பெரிய ஆசிர்வாதமாக முடியும். கிறிஸ்துவோடு , அவரை போலவே, நாமும் மற்றவர்களுக்காக துன்பத்தை ஏற்று கொள்ளும் பொழுதும் நமக்கு ஆசிர்வாதமாக இருக்கும். நாம் மேற்கொள்ளும் கடின உழைப்புகள் இறைசேவை ஆகும். நமது வருத்தங்கள் மதிப்பு வாய்ந்ததாகும், அது நமக்கு பல மடங்காக மகிழ்ச்சி யாக மாறும்.
கிறிஸ்துவுக்குள், நமக்கு என்றும் நிலைத்த சந்தோசம் கொடுக்கபட்டிருக்கிறது. கிறிஸ்துவின் சந்தோசத்தை நாம் உணர்கிறோம் , ஏனெனில் ஏராளமான நன்மைகள் அதன் மூலம் நமக்கு வர இருக்கிறது. நமது வருத்தங்கள், துக்கங்கள் கண்டிப்பாக எல்லாம் பறந்து போகும், நமக்கு கிறிஸ்துவின் நிலையான சந்தோசம் அவரது இறைபணியில் இணைந்திருக்கும் போது நமக்கு வந்து கொண்டே இருக்கும். மேலும் கடவுளின் பேரிரக்கமும், நம்பிக்கையும் நம்மை மேலே கொண்டு செல்லும்.
இரன்டாவாது வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது போல, கடவுள் நமது சோதனைகளை வெற்றியாக மாற்றும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். சந்தோசத்தில் என்றும் நிலைத்திருக்க , நமது விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும், கடவுள் நம் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்ற எண்ணத்தில் இருக்க வேண்டும். கடவுள் இன்னும் நம்மை காக்கவில்லை , உதவி செய்யவில்லை என குற்றம் சாட்ட வேண்டாம், கடவுளுக்கு எது சரியான நேரம் என்று தெரியும், அப்பொழுது நம் பிரச்சினைகளை அகற்றுவார்.
கடவுள் கண்டிப்பாக என் மேல் அக்கறை கொண்டுள்ளளார், அவர் எனக்காக , என் பிரச்சினைகளுக்காக , என் நிலையான வாழ்விற்காக, எப்பொழுதும் பணி செய்து கொண்டிருக்கிறார் என்ற நினைப்பே நம்மை மகிழ்ச்சியில் வைத்திருக்கும். நமது சோதனைகள் , துன்பங்கள் அனைத்தும் ஆசிர்வாதம் ஆகா மாறும். இயேசு நற்செய்தியில் சொல்வது போல "என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்"

© 2016 by Terry A. Modica

Saturday, December 3, 2016

டிசம்பர் 4 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

டிசம்பர்   4 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால இரண்டாம் ஞாயிறு
Isaiah 11:1-10
Ps 72:1-2, 7-8, 12-13, 17
Romans 15:4-9
Matthew 3:1-12
மத்தேயு   நற்செய்தி

விண்ணரசு பறைசாற்றப்படல்
திருமுழுக்கு யோவான் விண்ணரசின் வருகையை அறிவித்தல்
(மாற் 1:1 - 8; லூக் 3:1 - 9, 15 - 17; யோவா 1:19 - 28)
1-2அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டதுஎன்று பறைசாற்றி வந்தார்.

3இவரைக் குறித்தே,
பாலைநிலத்தில் குரல் ஒன்று
முழங்குகிறது: ஆண்டவருக்காக
வழியை ஆயத்தமாக்குங்கள்;
அவருக்காகப் பாதையைச்
செம்மையாக்குங்கள்
என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார்.

4இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.

5எருசலேமிலும் யூதேயாமுழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள்.

6அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.
7பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?

8நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்.
9ஆபிரகாம் எங்களுக்குத் தந்தைஎன உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்.

10ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.
11நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

12அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்என்றார்.
(thanks to www.arulvakku.com)

பரிசுத்த ஆவியிடமிருந்து வரும் அமைதி
திருவருகை கால இரண்டாம் ஞாயிறின் முக்கிய நோக்கம் அமைதி. முதல் வாசகம் கிறிஸ்து மெசியா, ஜெஸ்சி மற்றும் தாவீது அரசரின் வழி வந்தவர் என்று சொல்கிறது. மேலும் எப்படி அமைதி பெறுவது என்று விளக்கி  சொல்கிறது -- நமது சோதனைகளுக்கு இடையில் நாம் அமைதியுடன் எதிர் நோக்கி , ஏற்று கொள்ள நம்மால் முடியும். " ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்" உங்களில் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருப்பதை நீங்கள் உணர்கிறீர்களா?
கடவுளோடு நாம் நல்ல உறவோடு இருந்தால், உண்மையான அமைதியை நாம் உணர்வோம். அதன் அர்த்தம் என்ன என்றால், கடவுளுக்கு எதிராக போராடாமலும், அவர் வழியில் செல்ல கஷ்டபடாமலும், அவர் திட்டத்தில் நாம் செல்ல எந்த அசௌகரிய நினைப்பில் இல்லாமல்  இருக்க வேண்டும். நம்  போராட்டங்கள் ஒரு முடிவுக்கு வருவதும், பண பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதும், உடல் நோயிலிருந்து சுகம் அடைவதும் அமைதி அல்ல, இந்த பிரச்சினைகளை எல்லாம் நாம் போராடி தீர்க்க முடியும், ஆனால், இருந்தும் நம்மால் அமைதி பெற முடியாது.

பரிசுத்த ஆவியிடமிருந்து நாம் பெரும் ஞாணம் , மெய்யறிவு மூலம் நாம் அமைதியை பெறுகிறோம். பரிசுத்த ஆவியின் மூலம் வரும் விளக்கம், ஆண்டவரின் ஆற்றலில் நம்பிக்கை கொள்ளும் பொழுது நாம் அமைதியை பெறுகிறோம். கடவுள் நமக்கு என்ன தெரிய வேண்டுமோ, அந்த உண்மையை அவர் நமக்கு கொடுக்கும் பொழுது, நம்மில் அமைதி ஏற்படுகிறது. கடவுளிடம் நாம் முழுதும் அர்ப்பணித்து உண்மைக்கு கிழ் படியும் பொழுது நாம் அமைதி அடைகிறோம்.

நற்செய்தி வாசகத்தில் யோவான், "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்;
அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் "  என்று சொல்கிறார், கடவுளின் ஆவியை , அமைதியை நாம் பெற, நாம் இயேசுவை சந்திக்க  நம்மை தயார் படுத்த வேண்டும். கிறிஸ்து திவ்ய நற்கருணை மூலமாகவும், அல்லது  வேறு வழியாகவும் வரும் பொழுது நாம் அவரை சந்திக்க தயார் படுத்த வேண்டும். எந்த மாதிரியான தயாரிப்புகள் உங்களுக்கு அமைதி தரும்? நம் பாவங்களை முழு மன சாட்சியுடன் ஆய்ந்து , கடவுள் இரக்கம் கொண்டவர் என்ற நினைப்போடு, நமது கோணலான பாதையை நேராக்கி  கடவுளின் வழியை எதிர் நோக்கி நாம் தயார் படுத்த வேண்டும்.

கடவுளின் அமைதியிலிருந்து நம்மை எது தள்ளி வைக்கிறதோ ? அதனை நாம் புரம் தள்ள வேண்டும், இதனை செய்வதற்கு, பாவ சங்கிர்த்தனம், திருப்பலியில் ஆரம்பத்தில் பாவ மன்னிப்பு பெறுவது என்று பல வழிகள் உள்ளன. கிறிஸ்து நமக்கு அமைதியில் செல்வதற்கு பல வழிகளை உருவாக்கி வைத்துள்ளார்.

 © 2016 by Terry A. Modica