Friday, June 17, 2016

ஜூன் 19 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூன் 19 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு
Zec 12:10-11; 13:1
Ps 63:2-6, 8-9
Gal 3:26-29
Luke 9:18-24

லூக்கா நற்செய்தி
இயேசுவைப்பற்றிய பேதுருவின் அறிக்கை
(
மத் 16:13 - 19; மாற் 8:27 - 29)

18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம்
நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?”
 என்று அவர் கேட்டார்.

19அவர்கள் மறுமொழியாக, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்என்றார்கள்.

20
ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?”
 என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியாஎன்று உரைத்தார்.

21இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
இயேசு தம் சாவை முதன் முறை முன்னறிவித்தல்
(
மத் 16:20 - 28; மாற் 8:30; 9:1)
22மேலும் இயேசு
மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்
 என்று சொன்னார்.

23பின்பு அவர் அனைவரையும் நோக்கி,
என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.

24ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

(Thanks to www.arulvakku.com)
உண்மையிலே இயேசு யார் ?
 நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?”  இந்த கேள்வியை தான் நம்மிடமும் இயேசு இன்றைய  நற்செய்தியில் கேட்கிறார். இயேசு தான் உண்மையான கடவுள், உங்கள் மெசியா , உண்மையாக உங்கள் அன்பும், போதகரும், வழிகாட்டுபவரும் இயேசு என்று உங்கள் வாழ்வு  காட்டுகிறதா ? உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் இயேசு தான் எல்லாம் என்று காட்டுகிறீர்களா?

நமக்கு நேரம் நன்றாக இருக்கும் பொழுது, நமக்கு கிடைத்த எல்லா நலன்களுக்கும், பலன்களுக்கும் இயேசு தான் காரணம் என்று நாம் சொல்கிறோமா?  உங்களை யாராவது கேலி செய்யும்போழுதோ அல்லது மற்றவர்களால் நீங்கள் காயமுரும்போழுது , இயேசு உங்கள் வலியெல்லாம்  எடுத்து கொண்டார், அவர்களின் பாவங்களை சிலுவைக்கு எடுத்து சென்றுவிட்டார்,  அதனால் மன்னித்து விடுவீர்களா? நீங்கள் கோபம் படும் பொழுது, அது நியாமான கோபமோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக கோபபட்டாலும், வெறுப்பான வார்த்தைகளை சொல்கிறீர்களா ? அல்லது இயேசுவிடம் வேண்டி உங்களுள் அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என கேட்பிர்களா ?
இயேசு தான் கடவுள் என நம் உதடுகள் சொன்னாலும், நமது வாழ்வோ அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஒரு செய்தியை வெளி உலகிற்கு . சொல்லுகிறது, அதனால் நாம் மிகவும் கவனமாக செயல் பட வேண்டும். மன தெளிவோடும், நமது வார்த்தைகளும் செயல்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என கவனமாக செயல் பட வேண்டும். மேலும், எப்பொழுதெல்லாம் நாம் இதற்கு மாறாக செயல்படுகிறோம் என்பதனையும் கவனித்து மாற்றி கொள்ள வேண்டும்.

எப்பொழுதுமே, நம் உள்ளத்தில் உள்ள வலியினாலும் வேதனையினாலும் அல்லது ஏதாவது ஒரு செயலுக்கு எதிர் செயலாகவும் நாம் பாவம் செய்கிறோம். நமது அனுதின நடவடிக்கைகளை நாம் கூர்ந்து கவனித்து வந்தால், இயேசு யார் என்ற நம் புரிதலுக்கு எது தடையாக இறுக்கிறது என்பது நமக்கு தெரிய வரும். அதனை களைந்து இயேசு அன்பை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும் , அவரின் குனபடுத்துதலை நாம் பெற முடியும்.

"உண்மையான இயேசுவை என் வாழ்வு வெளிபடுத்துகிறதா? " இந்த கேள்வியை நாம் அனுதினமும் கேட்டு கொள்ள வேண்டும். இதற்கு பதில், நமக்கு எந்த விசயத்தில் எல்லாம் நாம் முயற்சி செய்து மாற வேண்டும் என்று கிடைக்கும். அதன் மூலம் இயேசு யார் என்பது இன்னும் நன்றாக நமக்கு தெரிய வரும். இந்த பதில்கள் நாம் ஏன் இன்னும் நல்ல முயற்சியுடன் மன மாற்றத்தை உருவாக்க முடியும், என்பதை காட்டும். நம் வாழ்வு , நம் பேச்சிற்கு எதிர் மறையாக இருக்கும் பொழுது மக்கள் நம்மை நம்ப மாட்டார்கள் . ஏனெனில் நமது வாழ்வே நாம் இயேசுவை நம்ப வில்லை என்று சொல்லிவிடும்.

இயேசு யார்? உங்களை இயேசுவிற்கு மிகவும் அதிகமாக தெரியும். உங்கள் மேல் முழுதும் அக்கறை கொள்கிறார். உங்களுக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ , அவர் உங்களை அன்பு செய்கிறார். மேலும் எபொழுதும் உதவி செய்கிறார். அந்த உதவியை நீங்கள் பார்க்காமல் கூட இருக்கலாம். எப்பொழும் இயேசு உங்களை கைவிடமாட்டார்.
இதனை ஓரளவிற்கு நாம் நம்பினால், நாம் எந்த பிரச்சினையாக இருந்தாலும், பாதுகாப்பாக உணர முடியும். மேலும் அவரின் அன்பில் என்றும் நிலைத்திருக்க எல்லா முயற்சிகளும் செய்வோம். நம் அனுதின சிலுவைகளை அவரிடம் எடுத்து சென்று , பிறரை அன்பு செய்வதில் நாம் கிறிஸ்துவை பின் பற்றுவோம்.

© 2016 by Terry A. Modica

Friday, June 10, 2016

12 ஜுன் 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

12  ஜுன்    2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 11ம் ஞாயிறு
2 Sam 12:7-10, 13
Ps 32:1-2, 5, 7, 11
Gal 2:16, 19-21
Luke 7:36--8:3

லூக்கா நற்செய்தி
இப்பெண் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 36-8: 3
அக்காலத்தில் பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.
அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு, அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ``இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே'' என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
இயேசு அவரைப் பார்த்து, ``சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்'' என்றார். அதற்கு அவர், ``போதகரே, சொல்லும்'' என்றார்.
அப்பொழுது அவர், ``கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன் பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?'' என்று கேட்டார்.
சீமோன் மறுமொழியாக, ``அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்'' என்றார். இயேசு அவரிடம், ``நீர் சொன்னது சரியே'' என்றார்.
பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், ``இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்'' என்றார்.
பின்பு அப்பெண்ணைப் பார்த்து, ``உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' என்றார்.
``பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?'' என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
இயேசு அப்பெண்ணை நோக்கி, ``உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க'' என்றார்.
அதற்குப் பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.
பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
நியாயமாக  இருப்பது என்பது எது ?
எப்படி பாவங்கள் மன்னிக்கபடுகிறது என்று நீங்கள் எப்பொழுதாவது நினைத்தது உண்டா ?
"நியாயமாக இருப்பது" என்றால், "நாணயத்துடனும், நல்ல குணத்துடனும் " இருப்பது ஆகும். ஏனெனில் சில நேரங்களில், நாமே நியாயமற்று நடந்து கொள்கிறோம். மிகவும் நல்லவரானா இயேசு (ஒரே பரிசுத்தமானவர்) நமது பாவங்களை சிலுவையில் எடுத்து சென்றார். எல்லா அநீதிகளும் அவரோடு இறந்து விட்டன.
நீதி  என்பது சட்ட துறையை சார்ந்த வார்த்தை, ஆனால் இன்றைய இரண்டாவது வாசகம், " சட்டம் சார்ந்த செயல்களால் எவருமே இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை", சட்டத்த்தினால் நாம் மன்னிக்கபடுவதில்லை என்று சொல்கிறது. (அப்படி என்றால் , நாம் இன்னும் நீதியுடனும் , அன்புடனும், நியாயமாகவும் முழுமையுடன் மாறவில்லை ) ஆனால் கிறிஸ்துவின் மேல் நாம் கொண்ட நம்பிக்கையினால் , நாம் வாழ்கிறோம், நம் பாவங்கள் மன்னிக்கபடுகின்றன. மேலும் " சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக் கூடுமானால் கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே! " என்றும் நமக்கு அறிவுறுத்த படுகிறது.

இயேசு இதனை இந்த ஞாயிறின் நற்செய்தியில் விளக்கி சொல்கிறார். பாவியான பெண் இயேசுவின் கால்களை கண்ணீரால் கழுவிய அந்த பெண் மன்னிக்கபட்டாள். அவளின் செயல்கள் அவளின் நீதியை நோக்கி செல்வ்வதாலும், இயேசுவின் மேல் அளவு கடந்த அன்பினாலும் மன்னிக்கபட்டாள். அன்பு தான் நம்மை பாவத்தின் பிடியிலிருந்து விலகி செல்ல வைக்கிறது. அன்பு தான் நம்மை நீதியுடன் நடந்து கொள்ள வைக்கிறது.
நம்மில் சிலர்  நியாயமாக நடந்து கொள்ளவே விருப்பம் கொண்டிருந்தாலும், சில நேரங்களில் நமக்கு தெரியாமலே பாவம் செய்து விடுகிறோம். சில நேரங்களில் மற்றவர்களை நமக்கு தேராமல்  காயபடுத்தி விடுகிறோம். வேண்டுமென்றே செய்வதில்லை. ஆனால், நாம் அநீதியாக நடந்து கொண்டோம்.
நாம் இயேசுவிடமிருந்து நம் கண்களை எடுத்து விடுவதால் நாம் பாவம் செய்கிறோம். நமது பழைய , தற்போதைய ஆசைகளினால் நாம் பாவம் செய்கிறோம். ஆனால், சிறிது நேரம் எடுத்து , இயேசுவிடம் ஜெபம் செய்து அவரோடு மீண்டும் நாம் இணைந்தால் , நம்மால் கட்டுபாட்டுடன் இருக்க முடியும். அன்போடு வாழ நாம் நம்மை ஆட்படுத்தி கொள்ளலாம்.
அன்பு தான் நம் வாழ்வின் முதல் செயலாக இருக்கும்பொழுது, சோதனைகள் அதன் ஆற்றலை இழக்கிறது. நமது சொந்த ஆசைகாளால் ஏற்படும் பாவ எண்ணங்கள், மற்றவர்கள் மேல் நாம் கொள்ளும் அக்கறை அகற்றிவிடுகிறது , நமது பாவத்தினால், சிலருக்கு காயத்தை ஏற்படுத்திவிட்டதை நாம் உணரும்போது , அன்பினால் தூண்டபட்டு, அந்த காய்த்த போக்க நம்மால் முடிந்ததை செய்கிறோம். அங்கே தான் நாம் கடவுளின் நீதீயோடு இணைகிறோம்.
இயேசு மற்றவர்களை அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்யும்பொழுது, நமது விசுவாசம் நமக்கு மீட்பை கொடுக்கிறது, இன்றைய நற்செய்தியில் இயேசு அந்த பெண்ணிடம் கூறுவது போல , ``உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க'' என்று நம்மிடமும் சொல்கிறார்.

© 2016 by Terry A. Modica