Saturday, May 19, 2007

மறையுரை May 20th

May 20th Seventh Sunday of Easter

Good News Reflection
FOR NEXT SUNDAY: May 20, 2007
Seventh Sunday of Easter
Next Sunday's Readings:
Acts 7:55-60
Ps 97:1-2, 6-7, 9
Rev 22:12-14, 16-17, 20
John 17:20-26

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 17

20 ' அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். 21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும். 22 நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். 23 இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும். ' 24 ' தந்தையே, உலகம் தோன்று முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். 25 நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள். 26 நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள் மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன். '


மறையுரை:



இன்றைய நற்செய்தி ஒன்றிப்பின் நற்செய்தி. யேசு இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் மோட்சத்திற்கு எழுந்து சென்றார். இது திருச்சபைக்கு ஒரு ஜெபமாகும். இந்த எழுந்தேற்றத்தில் தான் அவர் 'சேக்ரமன்ட்' எனப்படும், அற்புத சடங்கை இந்த உறவின் மூலம் ஏற்படுத்தினார். யேசுவும், தந்தையும் ஒன்றாய் இருப்பது போல, நாமும் ஒன்றாய் இணைந்து இருக்க வேண்டும், இதன் மூலம் நாம் ஒன்றாய் இருப்பதற்கு சாட்சியாக இருக்கலாம். இந்த ஒற்றுமை நிரந்தரமாகவும், உறுதியாகவும், தியாகம் செய்தும், நிபந்தனையற்ற அன்பு செய்தும், இவ்வுலகிற்கு கடவுளின் அன்பினை நாம் காட்டவேண்டும். நாம் எவ்வளவு பாவம் செய்தாலும், கடவுளின் அன்பு உண்மையானது என்பதை நாம் இவ்வுலகிற்கு நிரூபிக்கவேண்டும். அவரின் அன்பு நிரந்தரமானது, உறுதியானது, நிபந்தனையற்றது, மேலும் சுய தியாகம் உடையது.



கடவுள் நம்மை எந்த அளவிற்கு நிபந்தனையின்றி அன்பு செய்கிறார் என்பதை புனித திருமணத்தில், நமக்கு காட்டுகிறார். அந்த அன்பு, நாம் நன்றாக இருந்தாலும், மோசமான் நிலையில் இருந்தாலும், நோய் வாய் பட்டிருந்தாலும், நல்ல சுகமாக இருந்தாலும், பனக்காரனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், எல்லா நேரங்களிலும் நமக்கு கிடைக்கும். புனித திருமனத்தில், கணவன் அவருடைய வாழ்க்கையை மனைவிக்கும், மனைவி அவருடைய வாழ்க்கையை கணவனுக்கும் அர்ப்பனிக்கின்றனர். கிறிஸ்து எப்படி அவர் வாழ்வை நமக்கு இந்த திருச்சபைக்கு சேவை செய்ய அர்ப்பனித்தாரோ, அதே போல் நாமும் மனப்பென்னாக நம் வாழ்வை அவருக்கு அர்ப்பனிக்க வேண்டும்.



கத்தோலிக்க பாதிரியார், விவாகரத்து பெற்றவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். (அல்லது, முதல் திருமணம், உணமையான இணைதல் இல்லாமல் இருந்தால் மட்டும் அனுமதிப்பார்கள்). ஏனெனில், திருமணம் மிகவும் புனிதமானது. அந்த ஒன்றிப்பு, எப்படி கிறிஸ்துவிற்கும் தந்தைக்கும் உள்ள இணைப்பு போல் புனிதமானது. கடவுளின் அன்பு சேவையாக நாமும் இந்த ஒன்றிப்பை எடுத்து காட்டாக செய்ய வேண்டும்.



இதே ஒன்றிப்பு, எல்லா விதமான உறவிலும் புனிதமானது, மற்றும் உண்மையானது. இரண்டு அல்லது அதற்கு மேலும் யாராவது சேரும்போது, அது நட்பாக இருந்தாலும், பங்கு குழுவாக இருந்தாலும், அல்லது மத குழுவாக இருந்தாலும், இந்த ஒன்றிப்பு புனிதமாக இருக்க வேண்டும். ஆனால், நாம் எந்த அள்விற்கு இந்த ஒன்றிப்பினை காக்க முயற்சி செய்கிறோம். எவ்வளவு மோசமாகவும், மத மாற்றத்திற்கு எதிராகவும், நமது கிறிஸ்துவின் உடல் பிரிந்து இருக்கிறது!



கடவுளால் உண்டாக்கபட்ட எல்லா இணைப்புகளும் புனிதமானது. (கிறிஸ்து நம்மோடு உலகில் இருப்பதும், அவரின் சக்தியும் இந்த இணைப்பில் உள்ளது.) ஒவ்வொரு உறவும், உலகிற்கு யேசுவின் உன்மையான அடையாளத்தையும், அவரின் தியாகத்தையும் காட்டும் படிப்பினையாகும். ஆனால், எல்லோரும் கடவுளுக்கு சேவை செய்து கொண்டு, எவ்விதமான ஒன்றிப்பும் இல்லாமலும், நிபந்தனை அற்ற அன்பு இல்லாமலும், எவ்வித குழுவோடும் இனையாமலும் இருப்பது வெட்க கேடானது.

2 comments:

TBR. JOSPEH said...

யேசு இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் மோட்சத்திற்கு எழுந்து சென்றார். இது திருச்சபைக்கு ஒரு ஜெபமாகும். இந்த எழுந்தேற்றத்தில் தான் அவர் 'சேக்ரமன்ட்' எனப்படும், அற்புத சடங்கை இந்த உறவின் மூலம் ஏற்படுத்தினார். //

இறப்பதற்கு முன்பு என்றால்? இதை கொஞ்சம் விளக்குங்களேன்..

arulosai said...

சார்,
தாமததிற்கு மன்னிக்கவும். யேசு கிறிஸ்து சிலுவையில் இறப்பதற்கு முன் மோட்சத்திற்கு எழுந்தருளினார். அதாவது மனித யேசு இறப்பதற்கு முன்னால் என்று எடுத்து கொள்ளவும்.

நன்றி,
அருள்