Friday, March 11, 2011

மார்ச் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு

Genesis 2:7-9; 3:1-7
Ps 51:3-6, 12-13, 17
Romans 5:12-19
Matthew 4:1-11

________________________________________
மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 4


இயேசு சோதிக்கப்படுதல்
(மாற் 1:12 - 13; லூக் 4:1 - 13)
1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.3 சோதிக்கிறவன் அவரை அணுகி, ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும் ' என்றான்.4 அவர் மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.5 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,6 ' நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ' கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்று அலகை அவரிடம் சொன்னது.7 இயேசு அதனிடம், ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் ″ எனவும் எழுதியுள்ளதே ' என்று சொன்னார்.8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,9 அவரிடம், ' நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் ' என்றது.10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ' அகன்று போ, சாத்தானே, ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

(thanks to www.arulvakku.com)

சோதனைகளை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள்? தவக்காலத்தின் முதல் ஞாயிறு நற்செய்தியில், நமக்கு தனியாக சவால் விடப்படுகிறது. அதன் மூலம், நாம் நமது பயனத்தை இயேசுவோடு சேர்ந்து துவக்குகிறோம். இவ்வுலக வாழ்வில், அவரோடு இனைந்து பரிசுத்த இடத்திற்கு செல்வோம்.


இந்த தவக்காலம் மற்ற தவக்காலத்தை போல அல்ல. போன வருடம், உங்களுடைய தேவைகள் வேறாக இருந்தது, வேறு வளர்ச்சியை , முன்னேற்றத்தையும் எதிர்பார்த்தோம்., நமது புரிதலும், உள்நோக்கமும் வேறாக இருந்தது. கடந்த வருடத்திற்கு பிறகு, நிறைய மாற்றங்கள் நடந்து விட்டது. இதுவெல்லாம் , கடவுள் இப்பொழுது நம் வாழ்வில் என்ன செய்ய போகிறார் என்பதற்கு தயார் படுத்துவது ஆகும்.


உங்களுக்கு எந்த வெற்றியை இந்த வருடம் எதிர்பார்க்கிறீர்கள்? எதிலெல்லாம் மீண்டு எழ விழைகிறீர்கள்? அதனை பெற இயேசு உங்களை சிலுவையின் மூலம் அழைத்து செல்வார், அவருடைய கல்லறைக்கும், அதன் பிறகு கடவுளின் ஒளியில் உங்களை அழைத்து சென்று, புதிய வாழ்விற்கு கடவுளின் அன்பை கொடுத்து உங்கள் குறைகளை போக்குவார்.



தவக்காலத்தில் - மெலும் ஒவொரு முறையும், நாம் தியாகம் செய்து நமது துன்பத்தை யேசுவின் பாடுகளோடு இனைக்கும்பொழுது, நாம் இயேசுவை பின் சென்Dரு , அவரின் மீட்போடும் நாமும் சேருகிறோம். இதற்கு நமது சிலுவைகளை நாம் ஏற்று கொண்டு, அந்த துன்பத்தை தழுவிகொள்ள வேண்டும் , கலவாரிமலை பாதையில்தான், நமது வெற்றி வாழ்வையும், புதிய அனுபவத்தையும் நாம் அடைய முடியும்.


இந்த ஈஸ்டர் நமக்கு சாதாரண விடுமுறையாக இல்லாமல், இந்த 40 நாட்களையும், எரிச்சலை கட்டுபடுத்துவதும், தியாகங்களும், புலால் உணவு கட்டுபாடும், அடிக்கடி கோவிலுக்கு சென்றும், ஜெபங்களில் ஈடுபடுவதும், இப்படி, நமது தின வாழ்வில் ஈடுபட்டு நமது தவ நாட்களை கழித்தோமானால் நாம் மீட்பின் வெற்றியை , அதனுடைய ஆற்றலை நாம் அனுபவிக்க முடியும். நமது பாவ வாழ்க்கையை நினைத்து, மனம் வருந்தை, நாம் மணம் திரும்பும்போது, அதன் ஆற்றலை நாம் அனுபவிக்க முடியும். மாற்றாக சொல்வதானால், மரணத்தின் மீது உள்ள வெறும் பயத்தை நாம் அனுபவிக்க வேண்டும். - நமது சுய ஆசைகளை சாகடிக்க வேண்டும், இவ்வுலக வாழ்வின் மேல் உள்ள ஆசைகளை சாகடிக்க வேண்டும். கிறிஸ்துவிற்கு எதிரான நமது தின நடவடிக்கைகளை நாம் சாகடிக்க வேண்டும்.


© 2011 by Terry A. Modica

No comments: